Tag: அஜித்
அஜித்-ரஜினி சந்திப்பு உண்மையா
அஜித்-ரஜினி சந்திப்பு உண்மையா
ரஜினிகாந்த்-அஜித்தை சந்தித்தது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
2011-ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான “மங்காத்தா” திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் மங்காத்தா 2-ஆம் பாகம்
எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர்.
அஜித்-ரஜினி சந்திப்பு உண்மையா
இதைத்தொடர்ந்து, அண்மையில் அஜித்குமார் குடும்பமும், மங்காத்தா தயாரிப்பாளரான தயாநிதி அழகிரியின் குடும்பமும் சந்தித்துக் கொண்ட பொழுது
எடுத்த புகைப்படம் சமூக வளைதளத்தில் வைரலானது. இந்த சந்திப்பானது மங்காத்தாவின் 2-ஆம் பாகம் குறித்த சந்திப்பாக இருக்கலாம் என்று ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் ரஜினி, அஜித் சந்தித்தது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படம் குறித்து அவர்களின்
கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால், இந்த சந்திப்பானது உண்மையல்ல என்றும் ரஜினியை அஜித் சந்தித்தால் எப்படி
இருக்கும் என்று ரசிகர்களின் கற்பனையில் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏமாற்றிய அஜித், போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள்.
ஏமாற்றிய அஜித், போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள்.
ஏமாற்றம்., ஏமாற்றம்., ஏமாற்றம்., மனசு ரொம்ப வலி(மை)க்குது என்று அஜித் ரசிகர்கள் அவர்களுடைய ஆதங்கத்தை போஸ்டர் ஒட்டி தெரிவித்துள்ளனர்.
ஏமாற்றிய அஜித், போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள்
அஜித்
அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வலிமை. இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருந்தது. இந்நிலையில் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த நிலையில் ஓமிக்ரான் பரவல் தீவிரம்
காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் வெளியாகவில்லை என்ற வேதனையில் அதனை
வெளிப்படுத்தும் விதமாக அஜித் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் அதிவேகமாக பரவிவருகிறது.
கோவை ரயில் நிலையம் அருகே அஜித் புகைப்படங்களுடன் ஒட்டப்பட்ட அந்த போஸ்டரில்
குறிப்பிட்டிருப்பது, “ஏமாற்றம்! ஏமாற்றம்!! ஏமாற்றம்!!! மனசு ரொம்ப வலி(மை)க்குது it’s ok” என்று அச்சிட்டு அவர்களின் மனக்குமுறல்களை போஸ்டரின் வாயிலாக தெரிவித்துள்ளனர்.
நடிகர் அஜித்தின் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்
நடிகர் அஜித்தின் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்
வலிமை படத்தில் அஜித்தின் சகோதரராக நடித்துள்ள ராஜ் ஐயப்பா, நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வைரலாகும் நடிகர் அஜித்தின் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்
அஜித்
நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து
பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
வலிமை படத்தில் அஜித்தின் சகோதரராக நடித்துள்ள ராஜ் ஐயப்பா, நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப்
ஸ்டேட்டஸை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அஜித்திடம் அனுமதி பெற்ற பின்னரே இதனை பகிர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த ஸ்டேட்டஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “ஏழை, நடுத்தரவர்க்கம், பணக்காரர் என்பது ஒரு தனி நபரின் பொருளாதார நிலையை குறிக்கிறதே தவிர அவரது குணத்தை அல்ல. சமூகத்தின்
அனைத்து பிரிவுகளிலும் நல்ல மனிதர்களும், கெட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். அதனால் ஒரு
நபரின் பொருளாதார நிலையை வைத்து குணத்தை மதிப்பிடுவதை நாம் நிறுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்
அஜித்தின் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற பெண்
அஜித்தின் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற பெண்
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது ‘வலிமை’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில், ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டின் முன்பு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
போலீசார் கைது செய்த போது தனது சாவிற்கு அஜித் தான் காரணம் என சொல்லிக் கொண்டே சென்றார். இவர் நடிகர் அஜித் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருந்த போது வீடியோ
எடுத்து வெளியிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்ததால் தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அஜித்தின் அசத்தல் வசனங்கள்…. மிரள வைக்கும் பைக் சேஸிங்
அஜித்தின் அசத்தல் வசனங்கள்…. மிரள வைக்கும் பைக் சேஸிங்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் வலிமை. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளனர்.
போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்
இந்நிலையில், வலிமை படத்தின் முன்னோட்ட காட்சிகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியிடப்பட்டு உள்ளன. இந்த வீடியோவில் அஜித்தின் அசத்தல் வசனங்கள் மற்றும் மாஸான
பைக் ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இந்த முன்னோட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தாஜ்மஹாலுக்கு திடீர் விசிட் அடித்த அஜித்… வைரலாகும் புகைப்படங்கள்
தாஜ்மஹாலுக்கு திடீர் விசிட் அடித்த அஜித்… வைரலாகும் புகைப்படங்கள்
தாஜ்மஹாலில் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தாஜ்மஹாலுக்கு திடீர் விசிட் அடித்த அஜித்… வைரலாகும் புகைப்படங்கள்
தாஜ்மஹாலில் அஜித்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46-
வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு, 6 பதக்கங்களை வென்று அசத்தினார் அஜித்.
மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க உள்ளார் அஜித். இந்தப் போட்டி விரைவில் டெல்லியில்
தொடங்க உள்ளது. இதற்காக சமீபத்தில் டெல்லி சென்ற நடிகர் அஜித், அங்கு தீவிர பயிற்கு மேற்கொண்டு வருகிறார்.
அஜித்
இந்நிலையில், பயிற்சியின் இடையில் கிடைத்த ஓய்வு நேரத்தில் நடிகர் அஜித், தாஜ்மஹாலை சுற்றி பார்க்க சென்றுள்ளார். அவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள், அவருடன்
புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தாஜ்மஹாலில் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன
அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. ஊரடங்கு காரணமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
அஜித்
இந்நிலையில் சென்னையில் உள்ள நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசிய மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்
துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்
துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்
46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் கலந்துகொண்டு முதலிடத்தை பிடித்துள்ளார்.
துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்
பதக்கத்துடன் நடிகர் அஜித்
தமிழ்த் திரை உலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ்
போட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது போன்ற செயல்களில் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார்.
தற்போது வலிமை படப்பிடிப்பு இடைவெளியில் சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில்
பங்கேற்று முதலிடத்தை பிடித்துள்ளார். முதலிடம் பிடித்த அஜித்துக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அஜித்தை புகழும் பிரபல நடிகை
அஜித்தை புகழும் பிரபல நடிகை
அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி உள்ளது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
அஜித்
இந்த நிலையில், வலிமை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை ஹூமா குரேஷியிடம் சமீபத்தில் சில கேள்விகள் கேட்டகப்பட்டது.
அப்போது ஒருவர் வலிமை படத்தில் அஜித்திற்கு இணையாக பைக் ஓட்டினீர்களா என்று கேட்டதற்கு, “நான் படத்தில் நடிப்பதற்காக கற்றுக்கொண்டேன். “
அஜித் சார் பைக் ஓட்டுவதில் கில்லாடி. அவர் எனக்கு பைக் ஓட்டுவதற்கான சில டிப்ஸ்கள் சொல்லிக்கொடுத்தார் என்று கூறியுள்ளார்.
இணையத்தை கலக்கும் அஜித் – ஷாலினியின் செல்பி
இணையத்தை கலக்கும் அஜித் – ஷாலினியின் செல்பி
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஷாலினி. பின்னர் குறுகிய காலத்தில் அஜித், விஜய்
உள்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பெயர் பெற்றார். சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே
அஜித்தை காதலித்து திருமணம் செய்த ஷாலினி, பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டார்.
ஷாலினி, அஜித்
இந்நிலையில், நடிகை ஷாலினி, அஜித்துடன் எடுத்த செல்பி புகைப்படம்
சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்தப் புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
விரைவில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு வருகிற மே 1-ந் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
10 ஆயிரம் கி.மீ. பைக் பயணத்தை முடித்த அஜித்
10 ஆயிரம் கி.மீ. பைக் பயணத்தை முடித்த அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் 10 ஆயிரம்
கிலோ மீட்டர் பயணித்து முடித்து ஐதராபாத் திரும்பி இருக்கிறார்.
10 ஆயிரம் கி.மீ. பைக் பயணத்தை முடித்த அஜித்… உடன் பயணித்தவரின் நெகிழ்ச்சியான பதிவு
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு நீண்ட தூர பைக்
பயணத்தைத் அஜித் தொடங்கினார். தனக்கு மிக நெருங்கிய
நண்பர்களுடன் இந்த பயணத்தைத் திட்டமிட்டு இருந்தார். எந்த வழியாக
எங்குச் சென்றார் என்பது உள்ளிட்ட விவரங்கள் அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட்டது.
அஜித்
தற்போது பைக் பயணத்தை முடித்துவிட்டு, ஐதராபாத் திரும்பியுள்ளார்
அஜித். இதில் அஜித்துடன் பயணித்த தினேஷ் குமார் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுக் கூறியிருப்பதாவது:
“அஜித் அவர்கள், நம்ம தல, சென்னை – கோவை -சென்னை – ஹைதராபாத் –
வாரனாசி – காங்டாக் – லக்னோ – அயோத்யா – ஹைதராபாத் – சென்னை
என 10,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணத்தை வெற்றிகரமாக
முடித்துவிட்டார். என் வாழ்க்கையில் நான் சந்தித்ததிலேயே மிகவும் பணிவான நபர்
அஜித் அவர்கள்தான். சுத்தமான தங்கம்’
இவ்வாறு தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் அஜித்
துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் அஜித்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித்குமார், தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகிறாராம்.
துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் அஜித்
அஜித்
அஜித்குமார் இப்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ்
ஸ்டுடியோவில் நடந்தது. முதலில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. அஜித் ‘பைக்’கில் வேகமாக செல்வது போல் ஒரு காட்சி படமானது.
அப்போது, பைக் சறுக்கி அவருக்கு சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. அதற்காக அஜித் ஓய்வு எடுத்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து
சண்டை காட்சியில் 7 நாட்கள் நடித்து வந்தார். அதன் பிறகு சென்னை திரும்பினார்.
அஜித்
அஜித்குமார் இப்போது, துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுகிறார். துப்பாக்கி சுடுவதில் அவருக்கு நீண்ட கால ஆர்வம் இருந்து
வருகிறது. ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் அவர் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகிறார்.
வலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி… வைரலாகும் புகைப்படம்
வலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி… வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், வலிமை படத்திற்காக பைக் ஸ்டண்ட் செய்த புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
வலிமை படத்திற்காக அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி… வைரலாகும் புகைப்படம்
அஜித்
நடிகர் அஜித்தின் 59-வது படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே முடிவடைந்த
நிலையில், 2-ஆம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்றது. அஜித் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சியை படமாக்கினர்.
அஜித் பைக்கில் வேகமாக வந்து வில்லன்களுடன் மோதுவது போன்ற காட்சியை படமாக்கிய போது, எதிர்பாராத விதமாக
அஜித்தின் பைக் கவிழ்ந்தது. இதில் அஜித்துக்கு காலில் காயம் ஏற்பட்டது என்று செய்திகள் வெளியானது.
அஜித்
இந்நிலையில் அஜித் பைக் ஓட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதில் அஜித் முன்பக்க வீலை தூக்கி பைக் ஓட்டும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? – விசாரணையில் வெளியான திடுக் தகவல்
அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? – விசாரணையில் வெளியான திடுக் தகவல்
அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்த போலீசார், அவர் குறித்த திடுக் தகவலை வெளியிட்டுள்ளனர்.
அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? – விசாரணையில் வெளியான திடுக் தகவல்
அஜித்
சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம ஆசாமி,
நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், அது வெடிக்கும் என்றும் கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
உடனடியாக நடிகர் அஜித் வீடு உள்ள திருவான்மியூர் மற்றும் நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நடிகர் அஜித்
வீட்டுக்கு நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாயுடன் விரைந்தனர்.
அப்போது வீட்டில் நடிகர் அஜித், தனது குடும்பத்தினருடன் இருந்தார். வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை போலீசார் தெரிவித்ததும், நடிகர் அஜித் முழு ஒத்துழைப்பு வழங்கினார். போலீசாரை
முககவசத்துடன் ஒவ்வொரு அறையாக அழைத்துச்சென்று சோதனை செய்ய செய்தார். போலீசார் சுமார் 1 மணிநேரம்
சோதனை செய்தும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர்தான் தொலைபேசியில் வந்த மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
அஜித்
அதேபோல் திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டுக்கு திருவான்மியூர் போலீசார் சென்று சோதனை செய்தனர். ஆனால்
அங்கும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதுவும் புரளி என தெரியவந்தது.
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண் மரக்காணம், புதுச்சேரி பகுதியில் இருப்பதாக தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் மிரட்டல் விடுத்தது
மரக்காணத்தை சேர்ந்த புவனேஸ்வரன் எனத் தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட புவனேஸ்வரன், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டுக்கும் இதுபோல் வெடிகுண்டு மிரட்டல்
விடுத்து கைது செய்யப்படவர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
அஜித்
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் குமார் வீட்டுக்கு வெடிகுண்டு
மிரட்டல் விடுக்கப்பட்டது. காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன்
நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரை அடுத்து போலீசார் ஆய்வு
செய்தனர். விழுப்புரத்தை சேர்ந்த நபர் மிரட்டல் விடுத்ததாக தகவல் கிடைத்ததை
அடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித்
விஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித்
விஜய்யை பார்த்து அஜித் பொறாமைப்பட்டார் என்று பிரபல பாடகி
சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
விஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித் – பிரபல பாடகி
நடிகர்கள் அஜித், விஜய்
விஜய் மற்றும் அஜித் இருவரும் தமிழ் திரையுலகில் மாஸ் நடிகர்களாக,
வலம் வருகின்றனர். தங்களுக்குள் நல்ல நட்பைப் பகிர்ந்து
கொள்ளும் இருவரும் ‘ராஜாவின் பார்வையில்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
அதன் பின்னர் இரண்டு நடிகர்களும் தங்களது தனி பாதையில் பயணித்து,
தொழில்துறையில் புதிய உயரங்களை எட்டி வருகின்றனர்.பாடகி சுசித்ரா
தற்போது பிரபல பாடகி சுசித்ரா சமீபத்திய பேட்டியில் வெளிப்படுத்திய
ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்க்கு படங்கள்
மட்டும் அல்லாது படங்களில் இடம்பெறும் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை
பெறுவது வழக்கம். இதற்காக விஜய் மீது அஜித் பொறாமை கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
ஏழை ரசிகரின் குடிசையில் டீ குடித்த அஜித்
ஏழை ரசிகரின் குடிசையில் டீ குடித்த அஜித்
பைக் ரேஸரான அஜித், ஒரு டிரிப்பின் போது ஏழை ரசிகரின் வேண்டுகோளுக்கிணங்க அவரது குடிசை வீட்டில் தேநீர் அருந்தியுள்ளார்.
500 கி.மீ. பைக் டிரிப்…. ஏழை ரசிகரின் குடிசையில் டீ குடித்த அஜித்
ரசிகருடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம்
நடிகர் அஜித் மே 1-ந் தேதி பிறந்தநாள் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள்
என பலரும் வாழ்த்து கூறினர். அந்தவகையில் நடிகரும், அஜித்தின் நண்பரும், புரோ கபடி நிகழ்ச்சி தொகுப்பாளருமான சுஹேல்
சந்தோக், அஜித்துடனான சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு வீரம் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அஜித்தும், சுஹேலும் 500 கிலோமீட்டர் பைக் டிரிப் சென்றுள்ளனர்.
அப்போது டீ குடிப்பதற்காக ஓர் இடத்தில் நிறுத்தியுள்ளனர். அந்த சமயத்தில் அருகில் வசித்த குடும்பத்தினர் அஜித்தை தங்கள் குடிசை வீட்டுக்கு அழைத்து டீ போட்டு கொடுத்துள்ளனர்.
அவர்கள் அஜித்துடன் புகைப்படம் எடுப்பதற்காக கேட்க வெட்கப்பட்டு தயங்கி நின்றுள்ளனர். இதை அறிந்த அஜித்
அவர்களை அழைத்து புகைப்படம் எடுத்தது மட்டுமல்லாது. அந்த புகைப்படத்தை பிரிண்ட் போட்டு அனுப்பியும் வைத்ததாக சுஹேல்
தெரிவித்துள்ளார். சுஹேல் சந்தோக், வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் – விஜய் ரசிகர்கள் சண்டை
அஜித் – விஜய் ரசிகர்கள் சண்டை
சமூக வலைத்தளத்தில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டை போடுவதை பார்த்த நடிகை கோபப்பட்டு இருக்கிறார்.
அஜித் – விஜய் ரசிகர்கள் சண்டை – கோபப்பட்ட நடிகை
நடிகர்கள் விஜய், அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இடையே அடிக்கடி சமூக வலைத்தளங்களில் மோதல் நடந்து கொண்டிருக்கிறது.
தற்போது மாற்றி மாற்றி மோசமான டேக்குகளை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். #மே1அஜித்குபாடைகட்டு,
June22BlackdayForVijay, June22VijayDeathDay போன்ற டேக்குகளை அவர்கள் ட்ரெண்ட் செய்துள்ளனர்.
நடிகை கஸ்தூரியின் ட்விட்
இது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. மே 1 அஜித் பிறந்தநாள், ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் வருவதால் அதை
கொண்டாட அவர்களின் ரசிகர்கள் தயாராகி வரும் இந்த சூழலில் தான் இப்படி ஒரு மோதல் நடந்துள்ளது.
இந்த மோதல் பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, “அஜித்தும் விஜய்யும் எந்த குறையும் இல்லாம நல்லா இருக்கணும்.
இருப்பாங்க. வெட்டி பயலுங்க சாபத்துனால அவங்களுக்கு ஆபத்து இல்லை; ஆனா அவமானம். ஊரே பத்தி எரியும் போது கூட
இவிங்களுக்கு இதான் முக்கியமா? திருந்துங்க பிரதர்ஸ். Ignore negativity. வாழு வாழ விடு” என ட்விட் செய்துள்ளார்

சஞ்சய் எப்படி இருக்கான்? – விஜய்யிடம் நலம் விசாரித்த அஜித்
சஞ்சய் எப்படி இருக்கான்? – விஜய்யிடம் நலம் விசாரித்த அஜித்
கனடாவில் சிக்கி தவிக்கும் விஜய்யின் மகன் சஞ்சய் குறித்து நடிகர் அஜித் போனில் நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சஞ்சய் எப்படி இருக்கான்? – விஜய்யிடம் நலம் விசாரித்த அஜித்
அஜித், விஜய்
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், படிப்பை முடித்துவிட்டு, குறும்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில், பிலிம் மேக்கிங் படிக்க அவர் கனடாவுக்கு சென்றார். இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் கனடாவில் இருந்து சஞ்சய் நாடு திரும்ப முடியவில்லை. இதை நினைத்து விஜய் கவலை அடைந்ததாகவும். மகனிடம்
தினமும் போனில் பேசி அவரை வெளியே செல்லாமல் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும் செய்திகள் பரவின.
இதுபற்றி அறிந்த நடிகர் அஜித், உடனே விஜய்யிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
சஞ்சய், விஜய்
‘சஞ்சய் எப்படி இருக்கான்? கனடாவில் நிலைமை எப்படி இருக்கிறது’ என கேட்டுள்ளார். ‘பயப்படும்படியாக எதுவும் இல்லை.
சஞ்சய் பாதுகாப்பாக இருக்கிறான் ’ என்று விஜய் கூறியுள்ளார். விஜய்யும், அஜித்தும் இதுபோல் அவ்வப்போது போனில் பேசுவது
வழக்கமான ஒன்றுதான் என அவர்களுக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளன








