Tag: மாரடைப்பால்
மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு ,இலங்கையில் வெளியான மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை புள்ளி விபரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மாரடைப்பால் இறப்பு ஏன் ஏற்படுகிறது ..?
மனிதர்கள் உண்ணும் உணவு பழக்கத்தின் வாயிலாக இந்த மாரடைப்பு அதிகம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் 2010 முதல் 2020 ஆண்டு வரையிலான கால பகுதியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தவர்கள் உயிர் எண்ணிக்கை, அதிகம் என வெளியான புள்ளி விபரம் காண்பிக்கிறது .
திடீர் மாரடைப்பு மரணத்தை தடுப்பது எப்படி ..?
திடீரென ஏற்படும் மாரடைப்பை தடுப்பதற்கு சில உணவு முறைகளை உட்கொள்வதை தவிர்த்து வந்தால் ,மாரடைப்பு மரணத்தை தடுக்க முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் .
உலகளாவிய நிலையில் மாரடைப்பு நோயினால் பல ஆயிரம் மக்கள் ஆண்டு தோறும் பலியாகி வருகின்றனர் .
உண்ணும் உணவால் ஏற்படும் மரணம்
அதனால் மக்கள் நாளாந்தம் உண்ணும் உணவில் கொழுப்பு மற்றும் எண்ணெய் தன்மையிலான் உணவுகளை தவிர்த்து வந்தால் மாரடைப்பு நோயில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள முடியும் .
மரணத்தை தடுக்க இதோ வழி
மேலும் மாரடைப்பு நோயானது ஏற்படாது இருக்க வழிசமைக்கும் ,அதிர்ச்சியான சம்பவங்கள் காரணமாகவே அதிகம் மக்கள் இறந்துள்ளார்கள் என்ற விடயத்தை இறந்தவர்கள் உறவுகள் சொல்லி கேள்வி பட்டு இருப்போம் .
உலகில் அதிகரித்து வரும் இந்த மின்னல் வேக மரணமாக காணப்படும் விளங்கி வரும் ,மாரடைப்பு நோயில் இருந்து மனித சமுதயத்தை காப்பாற்ற வேண்டிய தேவை யாவருக்கும் உண்டு .
தற்காலத்தில் சிறுவர்களும் இந்த மாரடைப்பு நோயினால் பாதிக்க பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சமீப கால ஆண்டுகளில் இறந்தவர்களில் இந்த மாரடைப்பு நோயில் சிக்கி சிறுவர்களும் இறந்து வருவது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
ஆதாலால் மாரடைப்பு வராது தடுக்க மேலே கூற பட்ட விடயங்களை கடை பிடியுங்கள் மக்களே .
Featured
இசை நிகழ்ச்சியில் மாரடைப்பால் இறந்த பாடகர்
இசை நிகழ்ச்சியில் மாரடைப்பால் இறந்த பாடகர்
பாடகர் கேகே மறைவுக்கு பிரதமர், குடியரசு துணைத் தலைவர், மத்திய மந்திரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தா இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் மாரடைப்பு- பிரபல பின்னணி பாடகர் கேகே மரணம்
இந்தியத் திரையுலகின் பல்மொழி பாடகர்களில் ஒருவரான கேகே என்று அழைக்கப்படுபவர் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்.
ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களை அவர் பாடியுள்ளார்.
கேரளாவை சேர்ந்த 53 வயதான பாடகர் கேகே, தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னர் 3,500 விளம்பரங்களுக்கு பாடல் பாடியுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 1997 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு படத்தில் இடம் பெற்ற ஸ்ட்ராபெர்ரி கண்ணே பாடல் மூலம் தமிழில் கேகே அறிமுகமானார். அந்த பாடலை அவர் பெபிமணியுடன் இணைந்து பாடியிருப்பார்.
மேலும் யுவன் சங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர், மணி சர்மா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோர் இசையிலும் தமிழில் அவர் பாடியுள்ளார்.
காதல் வளர்த்தேன் (மன்மதன்), அப்படி போடு (கில்லி), காதலிக்கும் ஆசை (செல்லமே), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), உயிரின் உயிரே (காக்க காக்க),) உள்ளிட்ட அவர் பாடிய பாடல்கள் தமிழக ரசிகர்கள் இடையே பிரபலமானவை…
இசை நிகழ்ச்சியில் மாரடைப்பால் இறந்த பாடகர்
இந்நிலையில், கொல்கத்தா மாநகரின் நஸ்ருல் மஞ்சா பகுதியில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கேகே ரசிகர்கள் முன்னிலையில் பாடல்களை பாடினார்.
அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கச்சேரி முடிந்ததும் மயங்கி விழுந்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
முன்னாக அவர் கடைசியாக பங்கேற்றிருந்த மேடை இசை நிகழ்ச்சி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனாது.
பாடகர் கேகே திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரபல பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத்தின் அகால மறைவு வருத்தமளிக்கிறது.
அனைத்து வயதினரையும் கவர்ந்த அவரது பாடல்கள் பலவிதமான உணர்ச்சிகளை பிரதிபலித்தன. அவரது பாடல்கள் மூலம் நாம் எப்போதும் அவரை நினைவில்
கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய மந்திரிகள் அமித்ஷா, அனுராக் தாக்கூர்,
கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
















