Author: நலன் விரும்பி
ஆட்டோ,பள்ளி,வான் ,சாரதிகள் ஆகியோருக்கும் ஐந்தாயிரம் வழங்கும் அரசு
ஆட்டோ,பள்ளி,வான் ,சாரதிகள் ஆகியோருக்கும் ஐந்தாயிரம் வழங்கும் அரசு
இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து தற்பொழுது
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது
இதனால் மக்கள் வெளியில் நாடமாடும் தடைகள் விதிக்க பட்டுள்ளன
இவ்வாறான காலப்பகுதியில் தொழில் அற்று வாடும் மக்களுக்கும் அரசு உதவி வருகிறது
வான் ,பள்ளி,ஆட்டோ சாரதிக்கு தலா ஐந்தாயிரம் ரூபா விகிதம் உதவி
தொகைகள் வழங்க படும் என அரசு அறிவித்துள்ளது
இதனால் சாரதிகள் பெரும் குஷியில் உறைந்துள்ளனர்

கொரனோ தொற்றை மறைத்தால் இருவருடம் சிறை -மக்களுக்கு எச்சரிக்கை
கொரனோ தொற்றை மறைத்தால் இருவருடம் சிறை -மக்களுக்கு எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக இணையத்தளங்களில் உண்மைக்கு புறம்பான விடயங்களை முன்னெடுத்த இருவர் கைது
செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் கேட்போர் கூடத்தில் இன்று ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த (COVID 19) செய்தியாளர் சந்திப்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான காலாநிதி பந்துல குணவர்த்தன, அரச நிர்வாகம் உள்நாட்டலுவல்கள்
அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி, அரசாங்க தகவல் திணக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
கொரோனா தொற்றை தடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தில் சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான விடயங்களை சிலர் முன்னெடுத்து வருகின்றனர்.
சர்வதேச ரீதியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக
திட்டமிட்ட நடவடிக்கைகள் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டிக்கு அமைவாக அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
இவற்றை சீர்குலைக்கும் வகையில் சிலர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த முயற்சிக்கின்றனர். இது தடுப்பு நடவடிக்கைக்கு
பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதனால் இவ்வாறு செயற்பட்ட 23 பேர் தொடர்பாக விசாரனை நடத்தப்பட்டு இருவர்
கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் நிமித்த பிரியதர்ஷன, மற்றுமொருவர் துஷ்மந்த என்பராவர். இவர்கள் தற்பொழுது கைது
செய்யப்பட்டு இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
40 பேர் தொடர்பில் விசாரனைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். இதே வேளை இந்த
நோய்த்தாக்கத்திற்கு உள்ளானவர்கள் உரிய தனிமைப்படுத்தலுக்கு உள்வாங்கப்படாமல் இருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இது தொடர்பாக நாடு முழுவதிலும் இவ்வாறனவர்களுக்கு எதிராக சட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து
பொலிஸ் திணைக்களம் நாடு முழுவதிலும் பொது மக்களை தெளிவுப்படுத்தும் முகமாக சுவரொட்டிகளை ஒட்ட உள்ளது.
இது தொடர்பாக முழுமையான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பிடிவிறாந்தின்றி சிறைக்கு உட்படுத்த முடியும். குற்றமிழைத்தமை உறுதி செய்யப்பட்டால் இரண்டு வருட சிறைத் தண்டனையும் 1000
ரூபா தண்ட பணமும் விதிக்கப்படும். இந்த தவறுகளுக்கு ஒத்தாசை வழங்குவோரும் குற்றவாளிகளாகவே கணிக்கப்படுவார்கள்.
இவர்களுக்கு எதிராகவும் குறிப்பிடப்பட்ட தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் குண்டு தாக்குதல் நடத்திய இருவர் கைது
இலங்கையில் குண்டு தாக்குதல் நடத்திய இருவர் கைது
கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல்
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு 7மணியளவி;ல் கைதுசெய்யபபட்ட சந்தேக நபர்களில் முன்னாள்
அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் இடம்பெற்றிருப்பதாக
பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
இவருடன், புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான சந்தேகநபர் ஒருவரும்
கைது செய்யப்பட்டுள்ளதாக தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் அதிகரித்த கொரனோ எண்னிக்கை 233 பேர் பாதிப்பு
இலங்கையில் அதிகரித்த கொரனோ எண்னிக்கை 233 பேர் பாதிப்பு
இலங்கையில் தற்பொழுது வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
233 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் ஏழுபேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்
எதிர் வரும் இரு வாரங்கல் இந்த நோயானது அதிகம் மக்களை வாட்டும்
எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும் படி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
இன்று மட்டும் ஆறு பேர் இந்த நோயினால் பாதிக்க பட்ட நிலையில்
இனம் காணப்பட்டுள்ளனர்

யாழில் பலருக்கு கொரனோ – உண்மை உடைத்த மருத்துவர்
யாழில் பலருக்கு கொரனோ – உண்மை உடைத்த மருத்துவர்
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சோதனைக்கு உட்படுத்த
பட்ட 24 பேரில் 12 பேருக்கு கொரனோ தொற்று உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர்கள் தனிமை படுத்தி வைத்திருந்த
நபர்கள் எனவும் ,அவ்வாறு இருந்தவர்களுக்கே இந்த நோயானது உள்ளமை கண்டு பிடிக்க பட்டுள்ளது
எதிர்வரும் இரு வாரங்களுக்கு மக்களை மிக அவதானமாக இருக்கும்
படி அரசு எச்சரிக்கை விடுத்தது சில நாட்களில் பெரும் தொகையில் இவர்கள் பாத்திக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

தோப்புக்கரணம் போட வைத்த இரு பொலிசார் பணிநீக்கம்
தோப்புக்கரணம் போட வைத்த இரு பொலிசார் பணிநீக்கம்
இலங்கையில் ஊரடங்கு வேளை வீதியில் உலாவினார்கள் என்ற குற்றச்சாட்டில்
அந்த இரு வாலிபர்களை தோப்பு கரணம் பட வைத்த இரு காவல்துறை
சிப்பாய்கள் பொலிஸ்மா அதிபரினால் பணிநீக்கம் செய்ய பட்டுளளார்
மேலும் கான்ஸடபிள்,மற்றும் ஓ ஐ சி ஆகியோர் மன்னாருக்கு உடனடி இடமாற்றம் செய்ய பட்டுள்ளனர் .
மக்களை தவறான முறையில் நடத்தினாலோ ,லஞ்சம் வாங்கினாலோ இது தான் நிலை என கோட்டா உத்தரவு பிறப்பித்துள்ளார்
நாட்டையும் மக்களையும் திறம்பட காப்பாற்ற வேண்டியது நமது பொறுப்பு என
அவர் பறை சாற்றி ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில் இந்த விடயங்கள் முன்னெடுக்க படுகின்றன

பிரிட்டனில் தமிழர்கள் உள்ளிட்ட 778 பேர் பலி
பிரிட்டனில் தமிழர்கள் உள்ளிட்ட 778 பேர் பலி
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த
இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 778 பேர் பலியாகியுள்ளனர் .
இதுவரை
12,107 பேர் பலியாகியுள்ளனர் ,93873 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இறந்தவர்களில் மூன்று யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர்களும் உள்ளடக்க படுகின்றனர்
பெல்ஜியம் 254 பேர் பலியாகியுள்ளனர், அதேபோல 300 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் தொடர்ந்து மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது

லண்டனில் யாழ்ப்பாண தமிழர்கள் கொரனோவால் பலி
லண்டனில் யாழ்ப்பாண தமிழர்கள் கொரனோவால் பலி
இன்று லண்டனில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி யாழ் கச்சாய்
வீதி சாகவச்சேரியை பிறப்பிடமாக கொண்ட தமிழர் ஒருவர் பலியாகியுளளார் .
நோயின் தாக்குதலு உள்ளாகி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று
வந்த நபரே சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்
இதே நோயின் தாக்குலுக்கு உள்ளாகி மேலும் இருவர் இறந்துள்ளனர் ,இறந்தவர்கள்
அனைவரும் யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது

கொரனோ செய்த வேலையால் -பிரிட்டனில் 151 மைல் வேகத்தில் கார் ஓடிய நபர் video
கொரனோ செய்த வேலையால் -பிரிட்டனில் 151 மைல் வேகத்தில் கார் ஓடிய நபர் video
பிரிட்டனில் கொரனோ நோயின் காரணமாக மக்களை வீதியில் செல்ல
தடை செய்ய பட்டுள்ளது ,தேவையற்று வீதியில் உலவிட இந்த தடை தொடர்ந்து நீடிக்க பட்டுள்ளது
ஆனால் பிரிட்டன் எம் ஒன்று வேக சாலையில் நபர் ஒருவர் 151 மைல் வேகத்தில் கார் ஓடி சென்றுள்ளார் ,
இவரது இந்த வேகமான கார் ஓட்டத்தை அங்கு பொருத்த பட்டிருந்த கமராவில் கண்காணித்த வீதி போக்குவது போலீசார் ,அவரை துரத்தி சென்றனர்
சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் ,அவரது சாரதி அனுமதி பாத்திரம் முடக்க படும் அபாயம் எழுந்துள்ளது
90 மைல் வேகத்தில் பயணிக்க வேண்டிய சாலையில் இவ்விதம் இவர் பயணித்தது தண்டனை குற்றமாகும்

Extreme speeds this wkend in #London. Many enforced including 97mph (40) on #A10. This driver reached 151mph on #M1 before decamping car & evading 👮♂️ on foot. We will do upmost to identify & take action. Anyhow no doubt will come to our attention again🤞 before he hurts somebody! pic.twitter.com/SyGV1aS3l5
— Andy Cox (@AndyCoxDCS) April 13, 2020
சவூதி,அபூதபி,டுபாய் இலங்கையர்களுக்கு அரசு அவசர உதவி
சவூதி,அபூதபி,டுபாய் இலங்கையர்களுக்கு அரசு அவசர உதவி
அரேபிய நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களை காப்பாற்றும்
நகர்வில் இலங்கை தூதராலயம் கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது
அதன் பிரகாரம் ,சவூதி ,அபுதாபி ,மற்றும் டுபாயில் உள்ள மக்கள் அனைவரும்
அரசு கூறும் இந்த நடைமுறையிற் பின்பற்றவும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
உங்களுக்கு இலவச அழைப்புகள் வழங்க பட்டுள்ளன


அமெரிக்காவில் 23,649 பேர் பலி – 582,000 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் 23,649 பேர் பலி – 582,000 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் கோரனோ வைரஸ் நோயினால் சிக்கி இதுவரை 23,649 பேர் பலியாகியுள்ளனர் .
இன்று மட்டும் ஆயிரத்து ஐநூறு பேருக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்
இதுவரை 582,000 பேர் நோயின் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் .
மேலும் சடலங்களை வைப்பதற்கு இடமின்றி அரசு தவித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

கொரனோவால் பிரிட்டனில் முதியோர் மடங்களில் 500 பேர் பலி
கொரனோவால் பிரிட்டனில் முதியோர் மடங்களில் 500 பேர் பலி
பிரிட்டனில் அதி வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி எண்பதாயிரம் பேர் வரை பாத்திக்க பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்க பட்டவர்களில் முதியோர் மடங்களில் வசித்து வந்த முதியவர்கள் ஐநூறு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் கிட்ட தட்ட மூவாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்250 க்கு மேற்பட்ட
முதியோர் பராமரிப்பு மையங்களில் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ள நிலையில் கண்டறிய பட்டுள்ளனர்
மேலும் பலர் நாள்தோறும் பாதிக்க பட்டு வருவதாக தெரிவிக்க படுகிறது , நான்கு வாரஙக்ளுக்கு பிரிட்டன் தொடர்ந்து
லக்கடவுன் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது,
இறந்தவர்களில்
பல்லாயிரம் பேர் வயதானவர்கள் என்பது கண்ணீர் தரும் செய்திகளாக உள்ளன

கொழும்பில் பற்றி எரியும் அரச கட்டிடம்
சற்று முன்னர் கொழும்பு பொரளை பகுதியில் அமைந்துள்ள அரச அச்சு
கூடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அந்த கட்டடம் முற்றாக எறிந்த வண்ணம் உள்ளது
தீயணைப்பபு படையினர் குவிக்க பட்டுள்ளனர் ,இந்த தீ விபத்து எவ்வாறு
ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,
இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை
போலீசார் மற்றும் இராணுவமும் இந்த களத்தில் குவிக்க பட்டுள்ளனர்

யாழில் கொரனோ திருடர்களை துரத்தி பிடித்த பொலிஸ்
யாழில் கொரனோ திருடர்களை துரத்தி பிடித்த பொலிஸ்
யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் ஊரடங்கை பயன் படுத்தி திருடர்கள்
தமது கைவரிசையை காட்டி வந்தனர் ,தமது பொருட்கள் இவ்வேளை
காணமல் போவதாக காவல்துறையில் மக்கள் முறைப்பாடு செய்த நிலையில்,பொலிசார் நடத்திய சுற்று காவால் தேடுதல் வேட்டையில்
தற்பொழுது நாவற்குழியை சேர்ந்த ஏழு திருடர்கள் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்
இவர்களிடம் இருந்து நீர் இறைக்கும் இயந்திரம் ,கமராக்கள் ,மற்றும் ஏனைய விலை உயர்ந்த பொருட்கள் மீட்க பட்டுள்ளன .
கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

லண்டனில் இருந்து சீனர்களை ஏற்றி சென்ற இலங்கை விமானம்
லண்டனில் இருந்து சீனர்களை ஏற்றி சென்ற இலங்கை விமானம்
லண்டனில் இலங்கையர்கள் தவித்து நிற்க ,அவர்களை கைவிட்டு
சீனா நாட்டவர்கள் 218 பேரை இலங்கை விமான சேவை நிறுவனம் ஏற்றி சென்று சீனாவில் இறக்கியுள்ளது
ஆனால் ,லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் தவிக்கும் சொந்த நாட்டு
மக்களை இதுவரை ஏற்றி செல்வதற்கு இலங்கை மறுத்து வருகிறது .
இது ஏன் என்ற கேள்வியை முக்கிய அரசியல் கட்சி தலைவர் ஒருவர் எழுப்பியுள்ளார்
வெளிநாடுகளில் உள்ள மக்களை விரைவில் தாம் அழைத்து வர தீவிர
நடவடிக்கை எடுத்து வருகிறோம் என ஆளும் அரசு தெரிவித்திருந்தது ,
ஆனால் அதனை முழுமையாக இதுவரை செயல் படுத்தவில்லை
சீனாவின் நெருங்கிய நண்பனாக விளங்கும் இலங்கை ,சீனாவுக்கு தனது விசுவாசத்தை காண்பித்துள்ளதாக இந்த சம்பவம் அமைந்துள்ளது

இலங்கையில் ஜேர்மன் நாட்டு பெண் மரணம்
இலங்கையில் ஜேர்மன் நாட்டு பெண் மரணம்
இலங்கையில் வெளிநாட்டு கப்பலில் வருகை தந்த ஜெர்மன் நாட்டு பெண்
ஒருவர் தற்பொழுது பலியாகியுள்ளார் என இலங்கை அறிவித்துள்ளது
வைரஸ் நோயினால் அடையாளம் காணப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்திய
பொழுதும் இவர் மரணமாகியுள்ளார் என இலங்கை தெரிவித்துள்ளது
இலங்கையில் இதுவரை 214 பேர் பாதிக்க பட்டும் ஏழுபேர்
மரணமடைந்துள்ளது குறிப்பிட தக்கது

மருத்துவ ஊழியர்களை ஏற்றி சென்ற பேரூந்து விபத்து
மருத்துவ ஊழியர்களை ஏற்றிசென்ற பேரூந்து விபத்து
இலங்கையில் மருத்துவ ஊழியர்களை காவியபடி படி பயணித்த, பயணிகள்
பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் ,பேரூந்து பலத்த சேதமடைந்துள்ளது
எனினும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இலங்கை சீனா தூதரக டிவிட்டர் கணக்கு முடக்கம் – அதிர்ச்சியில் சீனா
இலங்கை சீனா தூதரக டிவிட்டர் கணக்கு முடக்கம் – அதிர்ச்சியில் சீனா
இலங்கையில் உள்ள சீனா தூதரகத்தின் டுவிட்டர் கணக்கு அதிரடியாக
முடக்கம் செய்யப் பட்டுள்ளது ,சீனாவில் இருந்து இலங்கைக்கு வழங்க
பட்ட கொரனோ சோதனை கருவிகள் போலியானவை எனசீனா தூதரகத்திடம் இலங்கை அறிவித்ததது .
அதற்கு டுவிட்டரில் பதிவேற்ற பட்ட பதில் ஒன்றின் காரணமாக இந்த
திடீர் முடக்கம் ஏற்பட்டுள்ளது ,சீனா மீது இலங்கையை போல
அமெரிக்காவும் கடும் கோபத்தில் உள்ளமை குறிப்பிட தக்கது

வெளிநாட்டு கப்பலில் வந்த மாலுமிக்கு கொரனோ
வெளிநாட்டு கப்பலில் வந்த மாலுமிக்கு கொரனோ
சர்வதேச கொள்கலன் கப்பலான MSC TARANTO கப்பலில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பதாக
ஏற்பட்ட சந்தேகத்தில் அவரை மேலதிக மருத்துவ பரிசோதனைக்கு மற்றும் சிகிச்சைக்காக இன்று (2020 ஏப்ரல் 13) காலை கொழும்பு
துறைமுகத்திற்கு கொண்டு வர இலங்கை கடற்படை நடவடிக்கையை மேற்கொண்டது.
லைபீரியாவைச் சேர்ந்த கொள்கலன் கப்பலான MSC TARANTO என்ற கப்பலுக்கு சேவைகளை வழங்கும் உள்ளூர் நிறுவனமான MSC
லங்காவால் சந்தேகத்திற்குரிய ஊழுஏஐனு-19 நோயாளி ஒருவர் குறித்த கப்பலில் இருப்பதாகவும் அவரை இலங்கையில்
இறக்கிவிடுமாறும் கோவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்திடம் கோரியுள்ளது. அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ்
அட்மிரல் பியால் டி சில்வாவின் மேற்பார்வையின் கீழ்இ பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதலுடன்இ 36 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டைச்
சேர்ந்த சோலிஸ் ரியான் என்ற நபரை இன்று கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வர இலங்கை கடற்படை உடனடி நடவடிக்கை எடுத்தது.
கடற்படையின் வேதியியல்இ உயிரியல்இ கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) அவசரநிலை
பதிலளிப்பு பிரிவு கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 05 கடல் மைல் தொலைவில் உள்ள கப்பலை அணுகி, சுகாதார
நிபுணர்களால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நோய்வாய்ப்பட்ட நபரை கரைக்கு கொண்டு வந்தது.
இதனையடுத்துஇ ‘சுவாசரிய’ ஆம்புலன்ஸ் சேவையால் நோயாளியை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு
செல்வதற்கு முன்பு அவர் துறைமுக வளாகத்திலேயே கிருமி நீக்கம் செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் விரைந்த இராணுவ தளபதி – நடந்தது என்ன ..?
யாழ்ப்பாணம் விரைந்த இராணுவ தளபதி – நடந்தது என்ன ..?
இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சிலாவ் திடீரென யாழ்ப்பாண
கடல் படை கட்டளை தலைமையகத்திற்கு பயணம் செய்தார்
இவரது இந்த திடீர் பயணம் ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது
வடக்கு
கடற்படை கட்டளை தலைமையகம் சென்ற இவர் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்
கொரனோ நோயின் தாக்குதல் எதிர் காலத்தில் அதிகரிக்கலாம் என்ற
நிலையில் இவரது இந்த திடீர் பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது








