Tag: colombo
யாழ்ப்பாணம் கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்
யாழ்ப்பாணம் கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்
யாழ்ப்பாணம் கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் ,யாழ்ப்பாணம், கொழும்பு பொது போக்குவரத்து சேவைக்காக குளிரூட்டப்பட்ட இரு சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த பட்டுள்ளது .Jaffna Colombo Air-conditioned Luxury Bus
யாழ், கொழும்பு போக்குவரத்து
யாழ், கொழும்பு போக்குவரத்தில் இதுவரைகாலமும் தனியார் தரப்பினரே இவ்வாறான பஸ் சேவையை வழங்கி வந்த
நிலையில், இனி அரச தரப்பாலும் சிறப்பு சேவையை வழங்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த ஆடம்பர பேரூந்துகள் இலங்கை போக்குவரத்து யாழ் டிப்போவிடம் நேற்று கையளிக்கப்பட்டன.
பொதுநலவாய மாநாடு
இலங்கையில் நடந்த பொதுநலவாய மாநாட்டுக்காக கொண்டுவரப்பட்ட சொகுசு பஸ்கள், சில நாட்கள் பாவனையின் பின்னர் அப்படியே கைவிடப்பட்டன.
குறித்த பஸ்கள் திருத்தப்பட்டு – நவீனமயப்படுத்தப்பட்டு எமது ஆட்சியில் மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஓர் அங்கமாகவே இரு பஸ்கள் யாழ். டிப்போவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சிக்கும் பஸ்களை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார் .


லண்டனில் இருந்து சீனர்களை ஏற்றி சென்ற இலங்கை விமானம்
லண்டனில் இருந்து சீனர்களை ஏற்றி சென்ற இலங்கை விமானம்
லண்டனில் இலங்கையர்கள் தவித்து நிற்க ,அவர்களை கைவிட்டு
சீனா நாட்டவர்கள் 218 பேரை இலங்கை விமான சேவை நிறுவனம் ஏற்றி சென்று சீனாவில் இறக்கியுள்ளது
ஆனால் ,லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் தவிக்கும் சொந்த நாட்டு
மக்களை இதுவரை ஏற்றி செல்வதற்கு இலங்கை மறுத்து வருகிறது .
இது ஏன் என்ற கேள்வியை முக்கிய அரசியல் கட்சி தலைவர் ஒருவர் எழுப்பியுள்ளார்
வெளிநாடுகளில் உள்ள மக்களை விரைவில் தாம் அழைத்து வர தீவிர
நடவடிக்கை எடுத்து வருகிறோம் என ஆளும் அரசு தெரிவித்திருந்தது ,
ஆனால் அதனை முழுமையாக இதுவரை செயல் படுத்தவில்லை
சீனாவின் நெருங்கிய நண்பனாக விளங்கும் இலங்கை ,சீனாவுக்கு தனது விசுவாசத்தை காண்பித்துள்ளதாக இந்த சம்பவம் அமைந்துள்ளது









