இலங்கையில் குண்டு தாக்குதல் நடத்திய இருவர் கைது
கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல்
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு 7மணியளவி;ல் கைதுசெய்யபபட்ட சந்தேக நபர்களில் முன்னாள்
அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் இடம்பெற்றிருப்பதாக
பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
இவருடன், புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான சந்தேகநபர் ஒருவரும்
கைது செய்யப்பட்டுள்ளதாக தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.