Author: நலன் விரும்பி
கணவனை அடித்து கொன்ற மனைவி – பிள்ளைகள் தவிப்பு
கணவனை அடித்து கொன்ற மனைவி – பிள்ளைகள் தவிப்பு
இலங்கை கண்டி பகுதியில் காதல் கணவனை அடித்து கொன்ற மனைவி பிள்ளைகளுடன் காவல்துறையில் சரண் அடைந்துளளர் .
தினம் தோறும் போதையில் வந்து மனைவியை அடித்து ,வதை செய்து
வந்த கணவனின் தொல்லை தாங்கிட முடியாது ஒரே அடியாக அடித்து
கொலை செய்து விட்டு தற்பொழுது இரு பிள்ளைகளுடன் காவல்துறையில் சரண் அடைந்துள்ளார்
தாயிடம் இருந்து பிள்ளைகளை பிரித்தெடுத்து காவல்துறையினர் மனைவியை நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்
பிள்ளைகள் சிறார் நலன் காப்பகத்தில் ஒப்படைக்க பட்டுள்ளனர்
அவசரம் செய்த அலங் கோலத்தால் பிள்ளைகள் பெற்றவர்கள் இன்றி அனாதைகளாக தவித்து வருகின்றனர்

அமெரிக்காவுக்கான விமான பயணங்கள் இரத்து – கனடா அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவுக்கான விமான பயணங்கள் இரத்து – கனடா அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை
அடுத்து தற்போது கனடா அரசுக்கு சொந்தமான Air Canada விமான நிறுவனம்
தனது பயணங்களை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விமானங்கள் பயணிக்க தடை விதித்தது .
இந்த சேவையானது வைகாசி 22 அம திகதி வரை மேலும் பிற்போட பட்டுள்ளது
மே மாதம் வரை இந்த விமான சேவைகள் அமெரிக்காவுக்கு இடம்பெறாது என தெரிவிக்க பட்டுள்ளது .
அமெரிக்காவுக்கு இவ்வாறு பல நாடுகள் விமான பயணங்கள் இரத்து செய்ய பட்டுள்ளதால் அமெரிக்காவின் பொருளாதரம் பாரிய சரிவை சந்தித்துள்ளது

கொரனோ கோர தாண்டவம் பிரிட்டனில் 873 பேர் பலி
கொரனோ கோர தாண்டவம் பிரிட்டனில் 873 பேர் பலி
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற உயிர்பலி
எண்ணிக்கை 873 ஆக அதிகரித்துள்ளது ,இதுவரை 17.337 பேர் இறந்துள்ளனர்
மேலும் இன்று புதிதாக 4,301 பேர் பாதிக்க பட்டுள்ளார் ,மேலும் 129,044 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,
மேலும் ஸ்பெயின் 430 ஆக உயிர்ந்துள்ளது ,21,282 பேர் இறந்துள்ளனர்
வழமைக்கு மாறாக இன்று பிரிட்டனில் இந்த உயிரிழப்பு அதிகரித்துள்ளது செயல்
மக்கள் மத்தியில் மீளவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் – உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் – உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
இலங்கையில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம
சாந்திக்காக இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் மௌன அஞ்சலி மற்றும் மத வழிபாடுகள் நடைபெற்றன.
திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் ஆளுனர் அனுராதா யஹம்பத் தலைமையில் உயிர்
இழந்தவர்களின் ஈத்ம சாந்திக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்று காலை 8.45 மணியளவில் இடம் பெற்று இந்த நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
மலையகத்திலும் இன்று (21.04.2020) வழிபாடுகள் நடைபெற்றன.
மலையகத்திலுள்ள தேவாலயங்களில் இன்று விசேட ஆராதனைகள் நடைபெற்றன.
கோவில்கள்இ விகாரைகள்இ பள்ளிவாசல்கள் ஆகியவற்றிலும் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி வழிபாடுகள் இடம்பெற்றன.


கொரனோவேளை கோட்டபாயா திமிர் பேச்சு
கொரனோவேளை கோட்டபாயா திமிர் பேச்சு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு ஒரு வருடம் நிறைவடைவதை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களின் செய்தி
கொடூர தீவிரவாத கருத்தினைக் கொண்ட ஒரு குழுவினர் 2019 ஏப்ரல் 21 ஞாயிறன்று முக்கிய கத்தோலிக்க தேவாலயங்களையும்
சுற்றுலா ஹோட்டல்கள் சிலதையும் இலக்குவைத்து மேற்கொண்ட பாரிய மனிதப் படுகொலைகள் இடம்பெற்று இன்று ஒரு வருடம் நிறைவடைகின்றது.
இந்த காட்டுமிராண்டித்தனமான குற்றத்தின் மூலம் உயிரிழந்தவர்களினதும் கடுமையாக காயப்பட்டவர்களினதும்
குடும்ப உறுப்பினர்களுக்கும், அதனால் பெரிதும் கவலைக்குள்ளான கத்தோலிக்க மக்களுக்கும் அனைத்து
இலங்கையர்களுக்கும் நான் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதலினால் சுமார் 270பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமுற்றனர்.
காயமடைந்தவர்களில் சிலர் பின்னர் உயிரிழந்தனர். இன்னும் சிலர் அங்கவீனமுற்றுள்ளனர்.
தாக்குதலில் உயிரிழந்த பெரும்பாலானவர்கள் கத்தோலிக்க சமயத்தவர்கள் என்ற போதும் அது அவர்களை மட்டுமன்றி முழு
இலங்கை மக்களையும் இலக்கு வைத்த பயங்கரவாத நடவடிக்கையாகும். எந்த சிந்தனையின் பெயரில் இந்த மனிதப்
படுகொலை இடம்பெற்றாலும் இது மனித இனத்திற்கே இழுக்கான ஒன்றாகும்.
தேசிய பாதுகாப்பை மறந்து பாதுகாப்பு திட்டங்களும் ஏற்பாடுகளும் கைவிடப்பட்டிருந்த காரணத்தினாலேயே உயிர்த்த
ஞாயிறு மனிதப் படுகொலைக்கு வசதியான பின்னணி உருவானது. அத்தகையதொரு கட்டற்ற சூழலில் தீவிரவாதமும் பயங்கரவாதமும் தலைதூக்குவது ஆச்சரியமான ஒன்றல்ல.
‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற எனது கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு எனது ஆட்சிக் காலத்தில் அனைத்து
இனங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், எந்தவகையிலும் தீவிரவாதத்திற்கும், தீவிரவாத வன்முறைக்கும்
இடமளிக்கப்போவதில்லை என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு வகைகூறவேண்டியவர்களை சரியாக இனம்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் நான் எனது மக்களுக்கு உறுதியளிக்கின்றேன்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியான, பாதிப்புக்கு உள்ளான கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட இலங்கை மக்களுக்கு நான் மீண்டும் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
வெளிநாடுகளில் தவிக்கும் மக்களை அழைத்து வர பறந்தன இலங்கை விமானங்கள்
வெளிநாடுகளில் தவிக்கும் மக்களை அழைத்து வர பறந்தன இலங்கை விமானங்கள்
கொரனோ வைரசால் வெளி நாடுகளில் சிக்கி தவித்து வரும் இலங்கையர்களை
அழைத்து வரும் நடவடிக்கையில் இலங்கை விமானங்கள் ஈடுபட்டுள்ளன
இவ்வாறு இந்த விசேட விமானங்கள் Amritsar, Coimbatore, Pakistan’s Karachi,
Lahore and Nepal’s Kathmandu
போன்ற விமான தளங்களுக்கு பறப்பில் ஈடுபட்டுள்ளன
நாடு திரும்ப முடியாது தவிக்கும் மக்களை நாம் இலங்கை அழைத்து வருவோம்
என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்த நிலையில் இந்த விமான சேவைகள் இடம் பெறுகின்றன

துருக்கி ஆயுத வாகனம் சிக்கியது – மீட்க பட்ட ஆயுதங்கள்
துருக்கி ஆயுத வாகனம் சிக்கியது – மீட்க பட்ட ஆயுதங்கள்
சிரியாவின் வடக்கு ,மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள நிலைகள் மீது தாக்குதலை நடத்தும் படி துருக்கிய புலனாய்வு
துறையால் ஆயுத குழுவுக்கு வழங்க பட்ட நவீன ரக புதிய ஆயுதங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளது
வாகனத்தில் ஏற்றி சிரியாவின் Raqqa பகுதிக்கு கொண்டு செல்ல பட்ட பொழுதே இவர்களை துரத்திய சிரியா உளவுத்துறையினர் மேற்படி ஆயுதங்களை மீட்டனர்
இந்த ஆயுத கடத்தல்களில் இவர்கள் தினம் தோறும் ஈடுபட்டு வந்துள்ளதும் அம்பலமாகியுள்ளது ,
தற்பொழுது இட்லி பகுதியை மீட்கும் நடவடிக்கையில் முப்பது ஆயிரம்
துருக்கிய படைகள் குவிக்க பட்டு தயார் நிலையில் உள்ளனர்எவ்வேளையும்
இங்கு பெரும் தாக்குதல்கள் இடம்பெறலாம் ,எனினும் சிறு சிறு சண்டைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

வெடித்து பறக்கும் ஏவுகணைகள் -30 ஆயிரம் இராணுவம் குவிப்பு
வெடித்து பறக்கும் ஏவுகணைகள் -30 ஆயிரம் இராணுவம் குவிப்பு
சிரியாவின் Al-Fterah and Kansafra in Jabal Al-Zawiyah. கிராமங்கள் மீது துருக்கிய ஆதரவு படைகள் கடும் பல் குழல் எறிகணை தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன
இதில் மக்கள் கிராமங்களில் வீழ்ந்து வெடித்த எறிகணைகளில் நாற்பதுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .சம அளவிலான மக்கள் படுகாயமடைந்துள்ளனர் .
தொடராக இடம்பெற்று வரும் எறிகணை தாக்குதலினால் மக்கள் வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர்
துருக்கிய உலங்கு வானூர்திகள் ,உளவு விமானங்கள் என்பன வடக்கு இட்லி பகுதி மேலாக பறந்த வண்ணம் உள்ளன
முப்பதாயிரம் துருக்கிய படைகள் குவிக்க பட்டு இராணுவ நடவடிக்கைக்கு தயார் நிலையில் வைக்க பட்டுள்ளனர்
தாம் இட்லி பகுதியை மீட்டே திருவோம் என துருக்கிய அதிபர் பாராளுமன்றில் முழங்கியுள்ளார்
,துருக்கியின் தாக்குதலை முறியடிக்கும் வகையில் சிரியா படைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து இரு பகுதியினரும் கடுமையான மோதலை தோற்று வித்த வண்ணம் உள்ளனர்
சுமார் ஐம்பதாயிரம் மக்கள் தற்பொழுது ,அகதிகளாகி வாழ்விடங்களை விட்டு ஓடிய வண்ணம் உள்ளனர்

ஆட்டோ ,மோட்டார் சைக்கிள் மோதல் -ஒருவர் பலி
ஆட்டோ ,மோட்டார் சைக்கிள் மோதல் -ஒருவர் பலி
இலங்கை நாவல பிட்டிய பகுதியில் ஆட்டோ ,மோட்டார் சைக்கிள் நேரெதிர்
மோதி விபத்தில் சிக்கியதில் ஆட்டோ சாரதி சம்பவ இடத்தில பலியானார் ,
அவரது மகன் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான வீதி விபத்துக்கள்
அதிகரித்து செல்வது குறிப்பிட தக்கது

கொரனோ சந்தேகம்-பண்டாராநாயக்க மாவத்தையில் 242 பேர் கைது
கொரனோ சந்தேகம்-பண்டாராநாயக்க மாவத்தையில் 242 பேர் தனிமை படுத்தல் முகாமிற்கு அனுப்பு
இலங்கை பண்டாரயாகக் மாவத்தை பகுதியில் கொரனோ நோயாளி
ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில்
அவர்
வசித்து வந்த பண்டாரநாயக்க மாவத்தை ,மற்றும் கொழும்பு 12 ஆகியவற்றில்
வசித்து வந்த 242 பேர் பொலிஸாரால் கைது செய்ய பட்டு தனிமை படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்
காவல்துறை ,மற்றும் இராணுவத்தினரின் திடீர் இந்த செயலினால்
அந்த மக்கள் பெரும் சீற்றத்தில் உறைந்துள்ளனர்

இலங்கையில் கொரனோவால் 309 பேர் பாதிப்பு
இலங்கையில் கொரனோவால் 309பேர் பாதிப்பு
இலங்கையில் பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி 309 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இதுவரை ஏழுபேர் உயிரிழந்துள்ளனர் .
மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்க கூடும் என தனிமை
படுத்தல் முகாம்களில் தடுத்து வைக்க பட்டுள்ளது பன்னி ரெண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இதுவரை விடுதலை செய்ய படவில்லை
அது தவிர சில கிகிராமங்கள் தொடர்ந்து இராணுவ கண்காணிப்பில் மக்கள் நடமாட தடை விதிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

சாராய கடைகளை மூடுமாறு உத்தரவு- கொதிக்கும் குடி மகன்கள்
சாராய கடைகளை மூடுமாறு உத்தரவு- கொதிக்கும் குடி மகன்கள்
இலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு இலங்கை அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
ஊரடங்கு தளர்த்த பட்ட நிலையில் குடிமகன்கள் முண்டியடித்து சாராய கடைகளில் நிரம்பி வழிந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து
இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

அமெரிக்காவில் 42,517 பேர் பலி – எங்கும் மரண ஓலங்கள்
அமெரிக்காவில் 42,517 பேர் பலி – எங்கும் மரண ஓலங்கள்
அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸின் தாக்குதலில் சிக்கி இதுவரை 42,517 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் இந்த நோயின் தாக்குதலில் பாதிக்க பட்டு 787,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
நாள் தோறும் அதிகரித்து செல்லும் இந்த நோயினை கட்டு படுத்த முடியாது அமெரிக்கா திணறி வருகிறது
மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 2500 க்கு மேற்பட்ட மக்கள் பாலியாகியுள்ளனர் .
மருத்துவமனை மற்றும் அதற்கு வெளியில் இறந்தவர்கள் தொடர்பிலான புள்ளி விபர கணக்குகள் இவையாக உள்ளன
எங்கும் மரண ஓலங்கள் ,மருத்துவ மனைகள் தொடர்ந்து நிரம்பி வழிகின்றன ,தாதிமார்கள் ,மருத்துவர்கள் முக கவசம் இன்றி பணி புரியும் நிலையில் தவித்து வருகின்றனர்

கொரனோ பணத்தை கொள்ளையடிக்கும் குழுக்கள்
கொரனோ மக்கள் உதவி என்ற போர்வையில் – பணத்தை கொள்ளையடிக்கும் குழுக்கள்
உலக நாடுகளை மிரள வைத்து வரும் கொரனோ நோயின் காரணமாக மக்கள் உயிர்பலிகள் அதிகரித்து செல்கின்றன ,மேலும்
பல நூறு குடும்பங்கள் உண்ண உணவுகள் இன்றி தவித்த வண்ணம் உள்ளன ,
நாளாந்த கூலிகள் தமது தொழிலை இழந்த நிலையால் அந்த மக்களினால் மீள் தமது குடும்பத்தை கொண்டு நடத்த முடியவில்லை
இவ்வேளை அதனை சாதகமாக பயன் படுத்திய சில தமிழர் குழுக்கள் ,உலகம் தழுவிய நிலையில் மக்களிடம் உதவி
கோரிக்கையை முன் வைத்தனர் ,இவர்கள் மக்களிடம் உதவிகளை பெற்று ,உலர் உணவு பொருட்கள் வழங்குவதாக உறுதி அளித்தனர் .
ஆனால் அங்கு செல்லும் பணத்தில் நாப்பது வீதமானவை மட்டுமே மக்களுக்கு செல்கின்றன ..
ஏனைய அறுபது வீதமானவை இவர்கள் சுருட்டி கொள்கின்றனர்
இவர்கள் அந்த உணவுகளை எடுத்து செல்லும் வாகனம்,எரிபொருள் இவர்கள் சாப்பாடு செலவுகள் ,என்பனவற்றை அதற்குள் அடக்கி கொள்கின்றனர்
இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த வண்டிகள் இவர்களுடையது ,அதற்கு மக்கள் வழங்கும் இந்த பண்ணத்தில் கூலி எடுக்க படுகிறது
பரிதவித்த மக்களுக்கு உதவிகள் சென்று சேர வேண்டும் என இந்த வெளி நாட்டு மக்கள் வழங்கிய பணத்தை இவ்வாறும் கணக்கு காட்டி இந்த கொள்ளை கூட்டம் கொள்ளையடித்து வருகிறது
எனவே உதவி வழங்க முற்படும் மக்கள் பாதிக்க பட்டவர்களுக்கு நேரடியாக பணத்தினை வழங்குங்கள்
இவ்வாறான இந்த முகவர்கள் ஊடாக வாங்காதீர்கள் என்பதே வலி பட்டார் கருத்தாக உள்ளது .

கொரனோ தாக்குதல் பிரிட்டனில் 450 பேர் பலி
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோவின் தாக்குதலில் சிக்கி
450 பலியாகியுள்ளனர் ,இது கடந்த சில தினங்களில் ஏற்பட்ட பலி எண்ணிக்கையை விட வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது
இதுவரை 16 ,510 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் ,மேலும்
140 ஆயிரம் பேர் இந்த நோயால் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேலும் உயிர் பலிகள் அதிகரிக்கலாம் என்பதால் தற்காலிக சுடலைகள் அமைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
இந்த இழப்பில் அதிகரிக்கும் சில மணித்தியாலங்களில் ,மருத்துவமனைக்கு வெளியில் இறந்தவர்கள் தொகை இதில் இணைக்க படவில்லை

பிரிட்டனில் வீட்டுக்குள் வெடி குண்டு – சுற்றிவளைத்த பொலிஸ்
பிரிட்டனில் வீட்டுக்குள் வெடி குண்டு – சுற்றிவளைத்த பொலிஸ்
பிரிட்டன் West Hill, Hastings. பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் இருந்து வெடிகுண்டுகள் மீட்க பட்டுள்ளன .
இங்கு குண்டுகள் உள்ளதாக Sussex காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து மேற்படி குண்டுகள் மீட்க பட்டுள்ளன
குண்டூ செயல் இழக்க வைக்கும்படையினர் வரவழைக்க பட்டு வெடிக்காத நிலையில் இருந்த குண்டு அகற்ற பட்டுள்ளது
இதனை அடுத்து அந்த பகுதி தீவிர சோதனைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளது .
மோப்ப நாய்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்த பட்டன ,எனினும் இது
தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை

சீனாவில் இருந்து விசேட விமானத்தில் Scotland க்கு வந்திறங்க்கிய 10 மில்லியன் முக கவசம்
சீனாவில் இருந்து விசேட விமானத்தில் Scotland க்கு வந்திறங்க்கிய 10 மில்லியன் முக கவசம்
பிரிட்டன் ஸ்கொட்லாந்து பகுதிக்கு சீனாவில் இருந்து விசேட விமானம் மூலம் கிளாஸ்க்கோ விமான நிலையத்தில் முக கவசங்கள் வந்திறங்கியுள்ளன .
பிரிட்டன் மருத்துவ மனைகளில் நிலவும் முக கவசங்கள் இதன் ஊடாக நிவர்த்தி செய்ய படும் நிலை ஏற்பட்டுள்ளது
பத்து மில்லியன் முக கவசங்கள் இவ்விதம் வந்திறங்கியுள்ளது ,நோயை
பரப்பிய சீனா இப்பொழுது அதற்குரிய தடுப்பு கவசங்களையும் அதுவே விநியோகம் செய்கிறது .
உலகம் இப்பொழுது இவ்வகையான கொரனோ தடுப்பு சோதனை கருவிகள்,மற்றும்
முக கவசங்கள் எனபனவற்றை சீனாவிடமே எதிர் பார்த்து காத்திருக்கிறது ,அப்படி என்றால் சீனா தான் இப்பொழுது வல்லரசு


79வது அகவை காணும் தேனிசை செல்லப்பா
79வது அகவை காணும் தேனிசை செல்லப்பா
தமிழீழ விடுதலை புலிகளது போராட்டத்திற்கு தனது தேனிசை குரலினால்
உரமேற்றி வீரம் செழிக்க வைத்த
தேனிசை செல்லப்பா அவர்கள்
21/04/2020 நாளை 79வது பிறந்த நாள் கொண்டாடுகிறார் , தடைகள் மத்தியில் பல நெருக்கடியான சூழலில் ,அயராது உழைத்த பெருமகன் ,
விடுதலைக்காய் தன்னையே அர்ப்பணித்து ,பிள்ளைகளிற்கு தமிழ் பெயர் சூட்டி வாழும் தமிழ் மைந்தன் .அவரை நாமும் இந்த இனிய நாளில் வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்
வாழ்த்துக்கள் ஐயா ,மேலும் நூறாண்டு வாழி வாழி என எதிரி இணையமும் நெஞ்சார வாழ்த்துகிறது

என்னை திட்டாமல், நான் வலியுறுத்தும் கொரொனா பரிசோதனையை அதிகரியுங்கள்-மனோ
என்னை திட்டாமல், நான் வலியுறுத்தும் கொரொனா பரிசோதனையை அதிகரியுங்கள்-மனோ
அரசுக்கு மனோ வலியுறுத்தல்
என்னை திட்டி தீர்க்காமல், எனது யோசனையை, கொரொனா நோயாளிகளுடன் நேரடி தொடர்பில், ஒன்றாக உறங்கி, வேலை
செய்து, பயணித்து வாழ்ந்த, ‘முதல் தொடர்பாளர்’களை (First Contact Persons) கண்டறிந்து அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து
சோதனை செய்யுங்கள் என்று சொன்னேன். ‘முதல் தொடர்பாளர்’என்றால், இன்று கொழும்பில் சோதனையின் பின்னர்
கண்டுபிடிக்கப்பட்ட, 24 பேர் போன்றோர். நாட்டை முழுமையாக திறந்து, இயல்பு நிலைமை திரும்பி விட்டது எனக்காட்ட முன், ‘முதல்
தொடர்பாளர்’களை கண்டறிந்து சோதனை செய்து முடியுங்கள் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக
மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் இது தொடர்பில் கூறியுள்ளதாவது,
இந்த ‘முதல் தொடர்பாளர்’ 40,000 பேரையும் பரிசோதியுங்கள் என்று ஊடக மாநாட்டில்நான் நான் கூறியதை பிடித்துக்கொண்டு, நான்
அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் போட “பொய் தகவல்” தந்ததாக, என் கருத்தை திரித்து கூறினார்கள்.
அமைச்சர்கள் எஸ்பி திசாநாயக்க, முன்னாள் எம்பி கம்மன்பில, இன்னும் பல அரசாங்க அமைச்சர்கள் உள்ளிட்டு, கடந்த
ஆட்சிகாலத்திலிருந்து முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாத கருத்துகளை வெளியிட்டுவரும் டேன் பிரியசாத் என்ற சிங்களே
தேசிய இயக்கத்தை நடத்துவரும் நபர் உட்பட பலர் என்னைப்பற்றி கேவலமாக பேசினார்கள். இவர்களது இணையம் முழுக்க என்னை
, “வெளிநாட்டுக்காரன், கள்ளத்தோணி, பறத்தமிழன், சக்கிலியன், புலி, பிசாசு” என்றெல்லாம் சுந்தர சிங்களத்தில் திட்டிதீர்த்தார்கள்.
அரசு ஆதரவு தமிழ் முகநூல் போலி கணக்குகளும் என்னை விமர்சனம் செய்தன.
இதற்கிடையில் பௌத்த தகவல் நிலைய இயக்குனர் ஜிநானந்த தேரர் என்னை கைது செய்யும்படி பொலிஸ் மாதிபரிடம் புகாரும்
செய்தார். பொலிஸ் வீட்டுக்கு வரும்வரை பார்த்துகொண்டு இருந்தேன். ஆனால், என்னை தேடி பொலிஸ் வரவில்லை.
தமிழரோ, முஸ்லிமோ, அரசியல்வாதிகள், தேசிய பிரச்சினைகள் பற்றி பேசக்கூடாது. வாயை மூடிக்கொண்டு வீசுவதை
பொறுக்கிக்கொண்டு இருக்க வேண்டும் என்பது இவர்களது எழுதப்படாத சட்டம். எல்லோரையும் போல் நான் “கப்சிப்” ஆள் இல்லை என இவர்களில் சிலருக்கு இன்னமும் தெரியவில்லை.
‘முதல் தொடர்பாளர்’ என்ற இப்படியானோர், சுமார் 40,000 பேர் இருப்பதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா கட்சி தலைவர்
கூட்டத்தில் சொன்னதைதான் நான் சொன்னேன் என்று நேற்று விசேட ஊடக மாநாட்டில் நான் சிங்களத்தில் உரக்க சொன்னதும்,
இவர்கள் “கப்சிப்” ஆகி விட்டார்கள். பெரிய இடத்தில், இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோ,
என்னவோ! போதாதற்கு அவர் பாடசாலை, பல்கலைக்கழக திறப்புகளுக்கு எதிராகவும் பேசியுள்ளார்.
இந்நிலையில், இன்று கொழும்பில் சோதனையின் போது ஒரே நாளில், ஒரே இடத்தில் 24 பேர் அகப்பட்டவுடன், என்னை திட்டிய
நபர்கள் இப்போது “இஞ்சி தின்ற குரங்குகளை” போல முழிசிக்கொண்டு இருக்கிறார்கள். மீண்டும் ஊரடங்கை நீடித்துள்ளார்கள்.
இவற்றையிட்டு நான் மகிழ்ச்சியடையவில்லை. தேர்தல் நடத்த வேண்டும் என்ற அசிங்க அவசரத்தை கைவிட்டு, அரசாங்கம்
எங்கள் கருத்துகளையும் உள்வாங்கி, சுகாதார நிவாரண, வாழ்வாதார நிவாரண நடவடிக்கைகளையும் முன்னெடுக்க
கூறுகிறேன். முதற்கட்டமாக, ‘முதல் தொடர்பாளர்’ களை தேடிப்பிடித்து, “சோதனை, சோதனை, சோதனை” செய்யுங்களப்பா…. அவ்வளவுதான்!
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தனது அதிகாரபூர்வ முகநூலில் எழுதியுள்ளார்.








