Author: நலன் விரும்பி
தீவிரவாதிகள் அட்டூழியம் -கிராமங்களுக்குள் புகுந்து 47 பேரை சுட்டு கொன்று எரித்த கொடூரம்
தீவிரவாதிகள் அட்டூழியம் -கிராமங்களுக்குள் புகுந்து 47 பேரை சுட்டு கொன்று எரித்த கொடூரம்
வடமேற்கு நையீரியாவில் பல கிராமங்களுக்குள் புகுந்த தீவிரவாதிகள் அப்பாவி மக்களை சுட்டு கொன்றுள்ளனர் .
திடீரென மக்கள் கிராமங்களுக்குள் சென்று சுற்றிவளைத்த ஆயுத படைகள் அங்கிருந்த மக்களை தாக்கி கொடுமை படுத்தி அதன்
பின்னர் படுகோரமாக சுட்டு கொன்று கிராமத்தை எரித்து விட்டு தப்பி சென்றுள்ளனர்
இந்த தீவிரவாதிகளின் தொடர் வெறிச்செயலினாலே மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர் ,
பொக்கோ கராம் அமைப்பினர் மக்களை கடத்துவது ,கொலை ,செய்வது
பாலியல் வன்கொடுமை என தமது இனவாத ,இராணுவ அடக்குமுறையை கட்டவிழ்த்து வருவது தொடர்கிறது .

ரஞ்சன் ராமநாயக்க பணியில் விடுதலை
ரஞ்சன் ராமநாயக்க பணியில் விடுதலை
முன்னாள் எம்பி ரஞ்சன் ராமநாயக்க குற்ற தடுப்பு பிரிவினரால் கைது
செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டார் ,அவர் தற்பொழுது விடுதலை பிணையில் செய்யப் பட்டுளளார்
ஆளும் அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் தீவிரம் பெற்றுள்ளன
அதன் தொடர்ச்சியே இவ்வாறான மிரட்டி ,அடிபணிய வைக்கும் கைதுகள் என தெரிவிக்க படுகிறது

கொரோனா நோயால் 295 பேர் பாதிப்பு
இன்றைய தினம் (2020.04.20) இதுவரையில் கொரோனா வைரசு தொற்றுக்கு
உள்ளாகி உறுதி செய்யப்பட்ட பதிய நோயாளர்கள் 24 பேர் பதிவாகியிருப்பதாக
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதி செய்தார்.
இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 295 ஆகும்.
இன்றை தினத்தில் பதிவான அனைத்து நோயாளர்களும் கொழும்பு 12 பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் தனிமைப்படுத்தல்
நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் மத்தியில்
இருந்து அடையாளங்காணப்பட்டவர்கள் என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்
ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்
முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த சில மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் மற்றும் தளர்த்தப்படும் நேரங்கள் திருத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 திங்கள் காலை 5.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை வரை இரவு 8.00 மணி முதல் மறுநாள் காலை 5.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.
ஏப்ரல் 24 வெள்ளி இரவு 8.00 மணிக்கு இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 திங்கள் காலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும்.
அந்தவகையில் வார இறுதி நாட்களான 25 சனி மற்றும் 26 ஞாயிறு ஆகிய தினங்கள் இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு பிரவேசிப்பது மற்றும் அங்கிருந்து வெளியேறிச் செல்வது அனைவருக்கும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளுதல் மற்றும் விவசாய நடவடிக்கைகள்
போன்றவை தொடர்பில் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள், அறிவுறுத்தல்களில் மாற்றங்கள் இல்லை
இலங்கையில் வெடிக்க இருந்த குண்டு – தப்பிய மக்கள்
இலங்கையில் வெடிக்க இருந்த குண்டு – தப்பிய மக்கள்
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்குப் பின்னரும் மற்றுமொரு
பயங்கரவாத தாக்குதலை நடக்க திட்டமிடப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தனர்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதுதொடரபாக மேலும்
தெரிவிக்கையில் ,கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து மேற்கொள்ள
திட்டமிடப்பட்ட இரண்டாவது தாக்குதல் குறித்து தகவல்கள் புலனாய்வுப்பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகள் மூலம்
கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில் இந்த தாக்குதலைத் திட்டமிட்டமை தொடர்பில் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி தொடர்பாக ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு
பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அவரது தொழில் ரீதியான தொடரின் அடிப்படையில் இடம்பெற்ற தொடர்பு மற்றும்
தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படவில்லை. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சமிபத்தில்
மேற்கொண்ட விரிவான விசாரணையின் அடிப்படையிலேயே சட்டத்தரணி கைது இடம்பெற்றதாகவும் கூறினார்.
ஒரு சில அமைப்புகளை ஆரம்பித்து அதற்கு தலைமைத்துவம் வழங்கி, அதற்கு நிதியுதவி வழங்கிய நபர்கள் குறித்த விடயங்களும்
தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அவ்வாறானோரும் தற்போது
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர் . உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர்
பயங்கரவாத தலைவர் ஸஹ்ரான் ஹாசிமின் குழு இரண்டாக பிளவுபட்டதாகவும், அதில் ஒரு குழு பிரிந்து சென்றதோடு, மற்றைய
குழுவே இவ்வாறான தாக்குதலை மேற்கொண்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டிய பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன புலனாய்வுப் பிரிவினரை திசைதிருப்புவதற்காக பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சி இது என்றும் கூறினார்.
இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் முஸ்லிம் தீவிரவாதத்தை ஏற்படுத்துவதற்காக சில அமைப்புகளுடன்
இணைந்து பணியாற்றியுள்ளமை மற்றும் இஸ்லாத்தை தவறான விளக்கங்கள் மூலம் வெளிப்படுத்தி ஒரு சில இளைஞர்களை
பிழையாக வழி நடாத்திச் சென்றுள்ளனர். இதில் இக்குண்டுதாரிகள் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர்.
இவ்வாறான திட்டத்திற்கு உதவி ஒத்தாசை, அதனைத் தூண்டியமை உள்ளிட்ட விடயங்களை மேற்கொண்டவர்கள் தொடர்பிலும்
தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுகிறது. தெற்காசிய வலயத்திலுள்ள நாடொன்றில்
மேற்கொள்ளப்படும் தாக்குதலொன்றை அடுத்து, அதனை மேற்கொள்ளும் சில வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை, இரகசியமாக இலங்கைக்கு அழைத்து வந்து பாதுகாப்பாக வைத்திருக்க
உதவுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தமை தொடர்பில் தகல்வகள் வெளிவந்துள்ளன என்று தெரிவித்த அவர் உயிர்த்த ஞாயிறு
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் ஓரிரு மாதங்களில் இடம்பெற்ற விசாரணைகளின்போதும், குறித்த சட்டத்தரணி விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவித்த அவர்
சமிபத்திய விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் உயிர்த்த ஞாயிறு தொடர்பானவை அல்ல.
அவர் தனது கடமையில் தவறியமை தொடர்பில் வேறு குற்றத்தின் அடிப்படையிலானது எனவும் அவ்விசாரணை வேறாக
இடம்பெறுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன மேலும் தெரிவித்தனர்.

சுட்டியல் ,கத்தி,துப்பாக்கியுடன் நட மாடியவரை -சுட்டும் கொன்ற பொலிஸ்
சுட்டியல் ,கத்தி,துப்பாக்கியுடன் நட மாடியவரை -சுட்டும் கொன்ற பொலிஸ்
அவுஸ்ரேலியா Rockdale, தெற்கு சிட்னி பகுதியில் கத்தி ,சுத்தியல் ,துப்பாக்கியுடன்
நடமாடிய நபரை சுற்றிவளைத்த போலீசார் அவரை சுட்டு படுகொலை செய்தனர் .
ஆயுதங்களை கீழே போடுமாறு போலீசார் வேண்டிய பொழுதும் அதனை
செவி மடுக்காது எதிர் நிலை எடுத்த காரணத்தால் அவர் மீது சரமாரி துப்பாக்கி சூட்டை மேற்கொண்டனர் .
இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடி துடித்து இறந்தார் .இது தீவிரவாத
செயலா என்பது தொடர்பில் போலீசார் தெரிவிக்கவில்லை

லொறிகளை தூக்கி பிரட்டி வீடுகளை உடைத் தெறிந்த கோர புயல் – video
லொறிகளை தூக்கி பிரட்டி வீடுகளை உடைத் தெறிந்த கோர புயல் – video
அமெரிக்காவில் நேற்று முன்தினம், முன்னைய தினம் இடம்பெற்ற புயலின் கோர தாண்டவத்தில்
லொறிகளை தூக்கி பிரட்டியுள்ளதும் ,வீடுகளை அடித்து உடைத்துள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன
இந்த புயலின் தாக்குதலில் சிக்கி ஒரு லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வந்தனர்
இந்த காட்சிகள் புயலின் வேகத்தை தெளிவாகவே சொல்லி செல்கின்றன
கொரனோ ஒரு புறம் மக்களை வாட்ட மறு புறம் புயல் இவ்வாறு
கதற வைத்துள்ளது குறிப்பிட தக்கது

ஜப்பானில் பாரிய நில நடுக்கம் – சுனாமி அபாயம் – மக்கள் சிதறி ஓட்டம்
ஜப்பானில் பாரிய நில நடுக்கம் – சுனாமி அபாயம் – மக்கள் சிதறி ஓட்டம்
இன்று திங்கட்கிழமை அதி காலை கிழக்கு ஜப்பான் கடல் பகுதியை அண்மித்து
இடம் பெற்ற பாரிய நில நடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன ,இந்த நில அதிர்வு 6.4 ஆக பதிவாகியுள்ளது
சுனாமி அனர்த்தம் நிகழும் அபாயம் உளதாக எதிர் பார்க்க படுகிறது ,
மக்கள் பீதியில் சிதறி ஓடிய வண்ணம் உள்ளனர் ,வீடுகளை விட்டு வெளியில் உலாவுவதை அவதானிக்க முடிகிறது
இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவிலை ..சில
மணித்தியாலங்களில் இதே பகுதியில் முழுமையான விபரங்கள் இணைக்க படும்

கனடாவில் ஆயுததாரி வெறியாட்டம் -17 பேர் சுட்டு கொலை -போலீசார் குவிப்பு video
கனடாவில் ஆயுததாரி வெறியாட்டம் -17 பேர் சுட்டு கொலை -போலீசார் குவிப்பு
கனடாவின் வடக்கு Nova Scotia பகுதியில் 51 வயதுடைய ஆயுத தாரி மக்கள் மீது நடத்திய
துப்பாக்கி சூட்டில் பத்து பேர் பலியாகியுள்ளனர் .மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் மக்களை சுட்டு கொன்ற ஆயுத தாரி
தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் ,தற்போது ஆயுத போலீசார் குவிக்க பட்டு பாது காப்பு பல படுத்த பட்டுள்ளது
இந்த மக்கள் படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,இது தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில்
போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கான்ஸ்டபிள் தர அதிகாரி ஒருவரும் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார் ,மேலேயும் இரு காவல்துறை பெண்மணி காயமடைந்துள்ளார்

எயன்சியிடம் மனிசியை கூப்பிட பணம் கட்டி ஏமாந்து போனேன் -பாடல் video
எயன்சியிடம் மனிசியை கூப்பிட பணம் கட்டி ஏமாந்து போனேன் -பாடல் video
இன்னிசை பாடிவரும் பாடலை மாற்றிப் பாடும் இந்திரன் video
பாடகர் அவ்வப் போது எடுத்துக் கொள்வார் இவ்வாறான அவதாரங்கள்.
எயன்சியிடம் மனிசியை கூப்பிட பணம் கட்டி ஏமாந்து போனேன்

ஆட வைக்கும் -சாந்தன் மகன் பாடிய காதல் பாடல் -video
ஆட வைக்கும் -சாந்தன் மகன் பாடிய காதல் பாடல் -video
ஈழ விடுதலை பாடல்களை பாடிய தேனிசை குரலோன் சாந்தன் அவர்களை புதல்வன் ,மற்றும் அவர் தம் குழுவினர் பாடிய
காதல் பாடல் தற்பொழுது இணையத்தில் பட்டையை கிளப்புது ,அந்த பாடலை நீங்கேளே பாருஙகள் ,திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல்
கண்ணை காட்டியே,…கண்ணை காட்டியே ….உன் பக்கம் என்னை நீ முழுசாய் சாய்கிறாய்…..
வம்பாய் பேசியா …வம்பாய் பேசியே …..உன்னிடை முழுதாய் நினைக்க வைக்கிறாய்…..
இசை : இசை நவீனம் ஸ்ரீ நிர்மலன்
பாடியவர் : கோகுலன் சாந்தன் -பிரதா கந்தப்பு
பாடல் வரிகள் : கி.தீபன்
அருமை அட்டகாசம் ,வாழ்த்துக்கள் ,அசத்துங்க ,,,இதுபோல மேலும் பல பாடல்களை எதிர் பார்க்கிறோம் .

ஏன் எதற்கு என்னை மறந்தாய் -கலக்கும் காதல் பாட்டு video
ஏன் எதற்கு என்னை மறந்தாய் -கலக்கும் காதல் பாட்டு video
நம்மவர் படைப்பில் புதிதாக வெளிவந்துள்ள பாடல்கள் .
காதில் தென்னிந்தியா திரைப்பட பாடல் போல இவை கேட்கும் போதே கட்டி போடுகின்றன .
கொஞ்சம் வாங்க பாருங்க ,,வரிகளை ரசியுங்க
ஈர் கை தட்டி வாழ்த்துரைப்போம்
இசை : இசையூற்று ஜெயந்தன்
பாடியவர் : லக்சி
பாடல் வரிகள் : கி.தீபன்
தயாரிப்பு : சுபர்த்தனா படைப்பகம்

இணையத்தில் வைரலாகும் கொரனோ யுத்த பாடல் – வீடியோ
இணையத்தில் வைரால்கும் கொரனோ யுத்த பாடல் – வீடியோ
இலங்கையில் நீண்ட காலமாக முன்னணி இசைக்குழுவை நடாத்தி
சந்தவரான மூத்த இசையமைப்பாளர் கல்முனை சிவா அவர்கள்
இசையமைத்து வெளிவந்திருக்கும் புதிய கொரோனா பாடல் வெளிவந்துள்ளது.
பழமை என்பது எப்போதும் இனிமை. அதற்கமைய
இசையமைப்பாளர் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் பாடலுடன் தொடர்ந்து இசையமைப்பாளர் இசையமைத்த
பாடல்கள் பல வெளிவரவுள்ள.
உங்கள் அயராத உழைப்பிற்கும் ,தளராத துணிவிற்கும் ,ஓயாது இசைக்கும் படைப்பிற்கும், எமது மனமார்ந்த ,வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள்

இலங்கையில் 22, அரச நிறுவனங்களை திறக்க உத்தரவு – தடை நீக்கம்
இலங்கையில் 22, அரச நிறுவனங்களை திறக்க உத்தரவு – தடை நீக்கம்
ஏப்ரல், 22 புதன் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் அரச நிறுவனங்களின்
செயற்பாடுகள் குறித்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் தலைவர்கள் 22 புதன் முதல் ஒன்றுகூடி
தமது நிறுவனங்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து திட்டமிட வேண்டும்.
ஏப்ரல் 22,23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் தமது பிரதித் தலைவர்கள்
உட்பட ஏனைய முக்கிய அதிகாரிகளை ஒன்றுகூட்டி அந்தந்த நிறுவனங்களின் சேவைக்கு அழைக்கப்படவுள்ள ஊழியர்களின்
எண்ணிக்கை, அழைக்கப்பட வேண்டிய அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் பணிகள் ஆகியவற்றை
தீர்மானிக்குமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டங்களில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் செயற்திட்டமொன்றை தயாரித்து 27 திங்கள் முதல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
திட்டம் பற்றி ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவிக்குமாறும் நிறுவனத் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 269 ஆக உயர்வு
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 269 ஆக உயர்வு
இலங்கையில் இதுவரையில் பதிவான கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 269 ஆகும்.
இன்றைய தினம் (2020.04.19) இதுவரையில் கொரோனா வைரசு தொற்றினால் உறுதி செய்யப்பட்ட 15 நோயாளர்கள்
பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதி செய்தார்.
இந்த நோயாளர்கள் 15 பேரும் கொரோனா தொற்று நோயாளர்களுடன்
நெருக்கமாக தொடர்பை கொண்டிருந்ததினால் கொழும்பு பிரதேசத்தில்
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மெய்நிகர் தொழில்நுட்பத்தில் நினைவுகூரப்பட்ட முதன்நிகழ்வாக அன்னை பூபதி !!
மெய்நிகர் தொழில்நுட்பத்தில் நினைவுகூரப்பட்ட முதன்நிகழ்வாக அன்னை பூபதி !!
தமிழீழ விடுதலைப் போராட்டம் தனது மூலோபாயங்களை அடைய, காலத்தின் நிலைமைகளுக்கு அமைய தனது தந்திரோபாயங்களை
வகுத்துக் கொள்வது போல், தற்போதைய உலக நிலைமைகளுக்கு அமைய, நினைவேந்தல் நிகழ்வுகளையும், மக்கள்
சந்திப்புக்களையும் மெய்நிகர் தகவல்தொழில்நுட்ப பரிமாணத்தில் மாற்றியுள்ளதன் முதன்நிகழ்வாக தமிழீழத் தாய்மார்களது
தியாகத்தின் குறியீடாக இருக்கின்ற நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 32வது ஆண்டு தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் நினைவுகூரப்பட்டது.
1988ம் ஆண்டுகளில் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டு தமிழர் தரப்புக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இந்திய இராணுவம் யுத்தநிறுத்தத்தினை மேற்கொண்டு, தமிழீழ விடுதலைப்
புலிகளுடன் பேச்சுவார்தைகளில் ஈடுபடவேண்டும் என கோரிக்கையுடன் 1988ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி தனது
சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கிய அன்னை பூபதி, 31 நாட்களின் பின்னர், ஏப்ரல் 19ம் நாள் தனதுயிரை தமிழீழ தேசத்துக்கு காணிக்கையாக்கியிருந்தார்.
ஆயிரம் ஆயிரம் மாவீரர்களை தந்த தமிழீழத் தாய்மார்களது குறியீடாக அன்னை பூபதி ஆண்தோறும் நினைவுகூரப்பட்டு வரும்
நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகத்தை முடக்கியுள்ள நிலையிலும் அன்னை நினைகூரப்பட்டுள்ளார்.
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடும் தாய்மார்கள், தமிழர் தாயகத்தில் நினைவேந்தியிருக்க, மெய்நிகர்
தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் ஊடாக புலம்பெயர் தேசங்களையும், தமிழ்நாட்டையும் ஒருங்கிணைத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.
கவிதை, அன்னையின் நினைவுப் பகிர்வுகள், சிறப்புரை என அமைந்திருந்த இவ்மெய்நிகர் கூட்டத்தில் அமெரிக்கா, கனடா,
பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா உட்பட தமிழ்நாட்டில் இருந்து தமிழ்உறவுகள் பங்கெடுத்து நினைவேந்திக் கொண்டனர்.
தமிழீழ தாய்மார்களின் குறியீடாக அன்னை பூபதி இருப்பதற்கு சான்றாக இன்று தமிழர் தாயகத்தில் தொடர்சியாக நீதிக்கான
போராடிக் கொண்டிருக்கும் தாய்மார்களது ஓயாத போராட்டத்தினை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த உறுப்பினர் பாலா அண்ணா அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
தமிழீழ தேசத்துக்கான விடுதலைப் போராட்டத்தில் நாம் அனைவரும் நாட்டுப்பற்றாளர்களாக பங்காற்ற வேண்டுமென
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் குறிப்பிட்டிருந்தார்.

ரஷியாவில் வேகமாக பரவும் கொரனோ – ஒரே நாளில் 6060 பேர் பாதிப்பு
ரஷியாவில் வேகமாக பரவும் கொரனோ – ஒரே நாளில் 6060 பேர் பாதிப்பு
ரஷியாவில் அமெரிக்காவை முந்தி சென்று விடும் பாரிய அளவில் மிக வேகமாக கொரனோ வைரஸ் பரவி வருகிறது
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 6060 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் 48 பேர் பலியாகியுள்ளனர்
இதுவரை சுமார் 42,853 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இவ்வாறு பெரும் தொகையில்
மக்கள் பாதிக்க பட்டு வருவதால் வீதி எங்கும் இராணுவம் நிறுத்த பட்டுள்ளது ,
மக்கள் உயிர் பலிகளை தடுக்கும் முகமாக சில பகுதிகளில் லக்கடவுன்
செய்ய பட்டுள்ளது ,உலகம் தழுவிய நிலையில் 170 ஆயிரம் பேர் பலியாகியும் 23 லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

40,000 கொரொனா நோயாளிகள் உள்ளதாக நானா கூறவில்லை – மனோ மறுப்பு
40,000 கொரொனா நோயாளிகள் உள்ளதாக நானா கூறவில்லை – மனோ மறுப்பு
கொரொனா சோதனை பற்றிய என் கருத்தை எஸ்.பி. திசாநாயக்க திரிக்கிறார். இவரது தலையையும் சோதனை செய்ய வேண்டும்.
மனோ கணேசன்
கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்பில், நேற்று முதல் நாள் தெரிவித்த கருத்தை அமைச்சர் எஸ்.பி.
திசாநாயக்க திரித்து பேசுகிறார். அதை பிடித்துக்கொண்டு ஒரு தேரர் என்னை கைது செய்ய வேண்டும் சீஐடியில் சென்றுமுறையீடு செய்கிறார்.
இவர்களை பொறுத்தவரையில் தேசிய பிரச்சினைகள் தொடர்பாக் “நாங்கள்” எதுவும் பேசக்கூடாது என நினைக்கிறார்கள்.
இந்நாட்டில் 40,000 கொரொனா நோயாளிகள் (Corona Positive) இருப்பதாக நான் கூறவேயில்லை. 40,000 “முதல் தொடர்பாளர்கள்” (First Contact Persons) இருக்கின்றார்கள் என்ற நான் கூறினேன்.
“முதல் தொடர்பாளர்கள்” என அறியப்பட்டவர்கள், கொரொனா நோயாளிகளுடன், தம் நாளாந்த வாழ்வில் நேரடியாக
சம்பந்தப்பட்டு ஒன்றாக, வாழ்ந்து, இருந்து, உண்டு வாழ்ந்தவர்களாகும். “முதல் தொடர்பாளர்கள்” என்றுதான் இவர்களை மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இந்த, “முதல் தொடர்பாளர்கள்” பற்றி எங்களுக்கு யார் சொன்னது? மார்ச் 24ம் திகதியன்று அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில்
நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில், இராணுவ தளபதி சவேந்திர சில்வாதான் தனது உரையில், இதை கூறினார். இராணுவ,
பொலிஸ் புலனாய்வாளர்கள் வீடு வீடாக போய், தெருத்தெருவாக போய், கொரொனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாரென அடையாளம் கண்டுள்ளார்கள் என அவர் மேலும் கூறினார்.
இது முக்கியமான ஒரு பணி. இதையிட்டு நான் பாதுகாப்பு துறையை பாராட்டுகிறேன்.
சில அரசாங்க அரசியல்வாதிகள், மனோ கணேசனுக்கு எப்படி இந்த அரசாங்க இரகசிய தகவல்கள் கிடைக்கின்றன என கேட்கிறார்கள்.
கடவுளே, இவை இரகசிய தகவல்கள் இல்லை. கட்சி தலைவர் கூட்டத்தில் பகிரங்கமாக இராணுவ தளபதி கூறியதாகும்.
நான் கூட்டங்களுக்கு போனால், அங்கு தூங்குவதில்லை. கூட்டங்களில் பேசப்படுவது அனைத்தையும் காது கொடுத்து கேட்கிறேன்.
என்னிடம் கேள்வி கேட்கும், இந்த அரசாங்க அரசியல்வாதிகள், கட்சி தலைவர்கள் அல்ல. இதனால், இவர்கள் இந்த கூட்டங்களுக்கு வருவதில்லை. இதற்கு நான் என்ன செய்ய முடியும்?
சீன அரசு, 40,000 பரிசோதனை கருவிகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக அறிந்துள்ளேன். இந்த முதல்
தொடர்பாளர்களை, இந்த பரிசோதனை கருவிகளை பயன்படுத்தி பரிசோதிக்கும்படி நான் அரசாங்கத்தை கோருகிறேன்.
கொரொனா நோயாளர்கள் இருந்தால், அவர்கள் இந்த பிரிவிற்குள்தான் அதிகமாக இருக்க முடியும். ஆகவே அவர்களை
முதலில் சோதியுங்கள் என கூறுகிறேன். சோதனை வேகத்தை அதிகரியுங்கள் எனவும் கூறுகிறேன்.
இதை நான் மட்டும் கோரவில்லை. GMOA உட்பட முழு வைத்திய சமூகமே இதைதான் சொல்கிறது.
தொடர்ந்து இப்படி முகத்தை மூடிக்கொண்டு வீடுகளுக்குள் இருக்க முடியாது. நாட்டை திறந்து விட வேண்டும். ஆனால், அதற்கு முன்
மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். ஆகவே சோதனைகளை அதிகரியுங்கள்.
நான் சொல்வதை சரியாக புரிந்துக்கொள்ள முடியாத அமைச்சர் திசாநாயக்க, நான் சொல்லாததை சொன்னதாக கூறுகிறார். பொய்
சொல்கிறார். கொரொனா நோயாளர்கள் பரிசோதிக்கப்படுவதை போன்று, அமைச்சர் திசாநாயக்கவின் தலையையும் சோதனை செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன்.

பிரிட்டனில் 596 பேர் பலி -120,067 பேர் பாதிப்பு
பிரிட்டனில் 596 பேர் பலி -120,067 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 596 பேர் பலியாகியுள்ளனர்
,இதுவரை இங்கு இடம் பெற்ற உயிர் பலி எண்ணிக்கை 16,060 ஆக அதிகரித்துள்ளது
மேலும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 120,067 பேர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்
கடந்த சில தினங்களை விட இன்று இந்த நோயின் உயிர் பலி எண்ணிக்கை குறைவடைந்துள்ளது
ஸ்பெயின் மீளவும் உயிர் பலிகள் அதிகரித்துள்ளன ,410 ஆக பதிவாகியுள்ளது ,பாதிக்க பட்டவர்கள் 195,944 உயர்வடைந்துள்ளது
அதே போல பெல்ஜியம் 230 பலியாகியும் 38,496 பாதிக்க பட்டு உள்ளனர் இவை கடந்த இருபத்தி நான்கு மணித்தியால பதிவுகள் என்பதை கவனத்தில் கொள்க

கொரனோ பொலிஸ் வைரல்-சிரிச்சே வயிறு வலிக்கும் இந்த video
ஊரடங்கு வேலையில் கரன் போர்ட் விளையாடியவர்களை துரத்தும் போலீஸ் டிரோன் ,கொஞ்சம் நிண்டு பாருங்க ,,வயிறு நோகும்








