Tag: கோட்டபாயா
கோட்டபாயாவுக்கு இந்தியா ராணுவம் காவல்
கோட்டபாயாவுக்கு இந்தியா ராணுவம் காவல்
கோட்டபாயாவுக்கு இந்தியா ராணுவம் காவல் ,முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்சவுக்கு இந்தியாவின் 600 கொமாண்டோ பணிகள் சிறப்பு காவல் அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச குடும்பங்களுக்கு இடையில் முதல் இடம்பெற்று வருகின்ற நிலையில் அவரை தமது சகாக்களே படுகொலை செய்யக் கூடும் என்ற அச்சம் காணப்படுகின்றது.
நாட்டை கொள்ளையடித்து ஏப்பமிட்ட கோத்தபாய ராஜபக்ச ராஜபக்ச குடும்பத்தினுடைய அரசியல் ஆசைகளுக்கு ,
முற்றுப்புள்ளி வைத்தார் அவரது நடவடிக்கை காரணமாகவே தற்பொழுது இலங்கை சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்ச குடும்பம் கடும் எதிர்ப்புகளை சந்தித்தது,
அதனை அடுத்து கோத்தபாய ராஜபக்சபை அதனை அடுத்து கோத்தபாய ராஜபக்சவை படுகொலை தமது அனுதாபா அலைகள் ஊடாக வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியும் என்கின்ற நிலையில் ராஜபக்சபை படுகொலை செய்யக் கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையுடைய வரலாற்றில் தனிப்பெரும் சிங்கள மக்களுடைய வாக்களியினால் வெற்றி பெற்றவரும் அதே வழியில் இரண்டு இரண்டரை வருடங்களுக்குள்ளாக மக்களினால் துரத்தி அடிக்கப்பட்ட ஒருவராகவும் கோத்தபாயர் ஐயப்ப காணப்படுகின்றார்.
அவ்வாறான வரலாற்று சாதனைகளுக்கு உரியவராக காணப்படும் இவர் தற்பொழுது மிகப்பெரும் உயிர் அச்சுறுத்தல் நெருக்கடியில் சிக்கி உள்ளதாக கொழும்பு செய்திகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கத்தி குத்து

- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்

- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி

- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி

- எரிசக்தி அமைச்சர் செயலாளரின் ராஜினாமா ஒரு கண் துடைப்பு

- ஒரு பேரல் டீசல் 286 அமெரிக்க டாலர்

- இன்று பல மாகாணங்களில் பிற்பகல் மழை

- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன்
தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன்
தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன் ,அனுபவம் வாய்ந்த முதிர்ந்த தலைவரால் மட்டுமே நாடு இன்று எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து மீள முடியும் என்பதால், அனுபவமற்ற புதியவர்களிடம் நாட்டை ஒப்படைக்க
நினைக்க வேண்டாம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிறுத்துவதற்கு கட்சி தயாராக இருந்த போது, அதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அதனை மொட்டுக் கட்சி கேட்கவில்லை என ரணதுங்க சுட்டிக்காட்டினார்.
ரணிலை ஜனாதிபதியாக்கியது மொட்டுக் கட்சி
ரணிலை ஜனாதிபதியாக்கியது மொட்டுக் கட்சியின் தலைவர்களே அன்றி தானும் மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அல்ல என சுட்டிக்காட்டிய அமைச்சர், அதற்கு ஆதரவளிப்பதே தானும் மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் செய்ததாகவும் தெரிவித்தார்.
தாம் ரணிலின் தேவைக்காக கடைக்குப் போகவில்லை என்றும், இந்த நாட்டு மக்களுக்காகத் தான் கடைக்குப் போவதாகவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
உடுகம்பல பிரதேசத்தில் இன்று (30) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விளக்கமளிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
இடதுசாரி அரசியல்
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“71 இடதுசாரி அரசியல் கட்சியான திருமதி சிறிமாவோ அரசாங்கத்தைப் பெற்ற பிறகு, மக்கள் விடுதலை முன்னணி கலவரங்கள் செய்து அன்றைய அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்றது.
அன்று அவர்கள் ஜே.ஆர். ஜெயவர்தனவுடன் சேர்ந்து கொண்டார்கள். சேர்ந்து ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தை முன்னுக்கு கொண்டுவர உழைத்தார்கள். ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் இந்திய
இராணுவம் கொண்டுவரப்பட்டபோது ஜே.ஆரை எதிர்த்து அதை சுதந்திரப் பிரச்சினையாக்கி பிரேமதாசவை வெற்றிபெற உதவினார்கள். பிரேமதாசவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
பின்னர். 88/89 தேர்தல் நேரத்தில் இந்த நாட்டில் நடந்த பயங்கரம் பற்றி இந்த நாட்டு மக்களுக்கு தெரியும். அதன் பின்னர் தேர்தலில் வெற்றிபெற திருமதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு உழைத்தார்கள். அவர்கள் அந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளையும் வகித்தனர். அதன் பின்னர் மகிந்த வெற்றிக்காக உழைத்தார்கள்.
அதைச் செய்தவர்களின் வரலாற்றைப் பார்க்கும் போது, நாட்டில் 71 கிளர்ச்சி, 83 கறுப்பு ஜூலை, 88/89 பயங்கரவாதம் போன்ற காலங்களில் அரச சொத்துக்களை அழித்து மக்களைக் கொன்றனர், அவர்களின் நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்தன.
அதன் பிறகு, சுனாமி மற்றும் கோவிட் தொற்றுநோயால் நம் நாட்டின் பொருளாதாரம் இந்த நிலைக்குச் சென்றது. கோவிட் தொற்றுநோய்களின் போது தடுப்பூசி போடப் போகும் போது என்ன சொன்னார்கள்? ஆண்களுக்கு தடுப்பூசி போட்டால் ஆண்மை குறையும் என்றும் குழந்தை பிறக்காது என்றும் வெறும் வதந்தியைக் கதைத்தார்கள் .
மக்கள் இறப்பதை அவர்கள் பார்க்க விரும்பினர்
இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பதை அவர்கள் பார்க்க விரும்பினர்.
உள்ளுராட்சி உறுப்பினர்களுடன் இணைந்து தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி நாடு மீண்டும் திறக்கப்பட்டபோது, சில தொழிற்சங்கங்கள் நாடு இன்னும் பாதுகாப்பாக இல்லை என்றும், நாட்டை திறக்க அனுமதிக்கக்கூடாது என்றும் கூறின.
நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடையும் போது இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்கக்கூடிய ஒருவர் வந்து இந்த நாட்டை பொறுப்பேற்க வேண்டும் என்றோம். அப்போது, வெறும் வாய்ப் பேச்சு பேசும் அனைவரும் இதை ஏற்க அஞ்சினார்கள்.
அதற்குள், கிளர்ச்சியாளர்கள் ஜனாதிபதி மாளிகையையும், பிரதமர் அலுவலகத்தையும் கைப்பற்றினர். நாடாளுமன்றத்தைச் சுற்றி வளைத்து மக்களைக் கொன்று இந்த நாட்டைக் கைப்பற்ற ஒரு குழு முயற்சித்தது.
மொட்டுக் கட்சியின் ஆதரவு
அப்போது ரணில் விக்கிரமசிங்க மட்டும் தான் இந்த நாட்டை நான் பொறுப்பேற்பேன், மொட்டுக் கட்சியின் ஆதரவு எனக்கு வேண்டும் என்றார். நான் அரசியல் முடிவுகளை எடுப்பதில்லை, நாட்டுக்கு உதவும் முடிவுகளை மட்டுமே எடுப்பேன் என்றார்.
அதற்கு நாங்கள் சம்மதித்தோம். ஒன்றரை வருட காலப்பகுதியில் நாம் எடுத்த முடிவுகள் மக்கள் தீர்மானங்கள் அல்ல. பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எடுக்கப்பட்ட சில தீர்மானங்களை சிலர் விமர்சித்தாலும் எவராலும் மாற்று வழிகளை முன்வைக்க முடியாது.
இதைச் செய்ய முடியாவிட்டால், இதைச் செய்ய வேண்டும் என்று அரசியல் தலைவர்களுக்கு அனுபவம் இல்லை.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக கொண்டு வரப்பட்டதை நான் எதிர்த்தேன். அனுபவமில்லாதவர்களை நம்பி நாட்டை ஒப்படைக்க வேண்டாம் என்றேன். அதுபற்றி எங்கள் கட்சி கேட்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அனுபவமிக்க தலைவராக பொறுப்பேற்ற போது நாங்கள் உதவி செய்தோம்.
ரணில் விக்கிரமசிங்கவை கொண்டு வந்தது எங்கள் கட்சியின் தலைவர்கள்தான் நாங்கள் அல்ல. அவருக்கு உதவ நாங்கள் குழுவாக வழிநடத்துகிறோம்.
2022 மே மாதத்தின் நாட்டின் நிலைமையைப் பற்றி யோசித்துப் பாருங்கள். நாட்டின் இன்றைய நிலையைப் பாருங்கள். நமக்கு முன் பொருளாதாரத்தில் சரிந்த கிரீஸ் போன்ற நாடுகள் இன்றும் மீள முடியாத நிலையை அடைந்துள்ளன.
ரணில் விக்கிரமசிங்க
நாங்கள் குழுவாகச் செயற்பட்டதால் நாட்டை இந்த இடத்திற்கு கொண்டு வர முடிந்தது. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனேயே, அரசியலை இரண்டாவதாக வைத்து நாட்டை ஒன்றாகக் கட்டியெழுப்புவோம் என்று அனைவரையும் அழைத்தார். யாரும் சேரவில்லை, விமர்சனம் மட்டும் செய்தார்கள்.
ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு விரும்பினார். சிலருக்கு அது பிடிக்கவில்லை. அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அவர் தனி ஒருவராகவே இருந்தார்.
எங்களிடம் பெரும்பான்மை உள்ளது. அனுபவமுள்ள முதிர்ந்த தலைவர் என்பதாலேயே எங்களின் ஆதரவை பெற்று நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபட்டார். ரணில் விக்கிரமசிங்கவின் தேவைக்காக நான் கடைக்கு போகமாட்டேன்.
இந்த நாட்டு மக்களுக்காகத் தான் நான் போகிறேன். ரணில் விக்கிரமசிங்கவை விமர்சித்தவர்களில் என்னைப் போல யாரும் இருக்க மாட்டார்கள். நான் நல்லாட்சி அரசாங்கத்தின் போது அவருக்கு எதிராக செயற்பட்ட ஒருவர்.
நாட்டு மக்கள் கஷ்டப்பட்ட போது நாட்டை மீட்டெடுத்த தலைவர் ஒருவர் இருந்தால் அந்த நபருக்கு நாம் எந்த அரசியல் கருத்துக்களையும் பொருட்படுத்தாமல் உதவ வேண்டும். அதனால்தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவ நாங்கள் குழுவாக ஒன்று சேர்ந்தோம்.
மக்கள் வாதிகளாகிய நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவி செய்கிறோம். மகிந்த போரில் வெற்றி பெற்றார். இன்று மகிந்தவை கிழவன், கிழட்டு மைனா என்று அழைக்கிறார்கள்.
பெண்ணால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது
அடுத்ததாக, இந்தப் பெண்ணால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது என்று திருமதி சந்திரிகா குமாரதுங்கவை முகநூலில் தாக்கி வருகின்றனர். கோவிட் தொற்றுநோயிலிருந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவரின் புகைப்படத்தை அவர்கள் போட்டு அடிக்கிறார்கள்.
கிழவனிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றி, நாட்டை இளைஞர்களிடம் ஒப்படைக்கவும் என்று கூறுகிறார்கள். அனுபவமற்ற இளைஞர்கள் 88/89 காலப் பகுதியில் என்ன செய்தார்கள் என்பதை நாம் அறிவோம்.
கிழவர்கள் என்று சொல்லும் போது இந்த நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களும் உரித்தாகிறார்கள். புத்தாண்டு தினத்தில் கூட பெற்றோரை பார்க்கச் சென்று வெற்றிலையுடன் வணங்கி வருகிறோம். அந்த கலாசாரத்தை அழிக்க முயல்கிறார்கள்” என்றார்.
Featured
கோட்டபாயா அமெரிக்கா சென்றால் கைதாவார்
கோட்டபாயா அமெரிக்கா சென்றால் கைதாவார்
அமெரிக்காவில் ஆளும் ஜனாதிபதி போர்க்குற்றத்தால் பாதிக்க பட்டவர்கள் ,அதனை புரிந்தவர்கள் அமெரிக்காவால் வசித்தால் வழக்கு தொடர முடியும் என்ற சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார் .
இதனால் இலங்கையில் போர்க் குற்ற இனப் படு கொலை புரிந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவில் தங்கி வாழ முடியா நிலை ஏற்பட்டுளள்து .
அவ்வாறு அமெரிக்காவில் தங்கினால் தமிழர்களினால் வழக்கு தொடுக்க பட்டு அதில் கைது செய்யப்படும் பேராபத்து காணப்படுவதால் ,அமெரிக்காவை கோட்டபாய மறந்து இலங்கையில் முடங்க வேண்டிய பரிதாபத்தில் சிக்கியுள்ளார் .
கோட்டபாயவுக்கு பல மில்லியன் மக்கள் பணம் செலவு நெருக்கடியில் இலங்கை
கோட்டபாயவுக்கு பல மில்லியன் மக்கள் பணம் செலவு நெருக்கடியில் இலங்கை
இலங்கையில் மக்களினால் துரத்தியடிக்க பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயாவுக்கு , பல மில்லியன் மக்கள் பணம் செலவு செய்திட பட்டுள்ளது .
இலங்கை வரவுள்ள கோட்டாவுக்கு ,மேலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு மற்றும் விசேட உலங்குவானூர்தி என்பன கோர பட்டுள்ளன .
தேவை ஏற்படும் பொழுது அவர் உலங்குவானூர்தி மூலம் ,தப்பி செல்ல இந்த விசேட ஏற்பாடுகள் கோரப்பட்டுள்ளன .
நாடு எதிர் நோக்கியுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியில் ,கோட்டபாயவுக்கு ,இதுவரை நூறு மில்லியன் டொலர்கள் வரை, செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.
இலங்கை வரும் கோட்டாவுக்கு ,மேலும் மக்கள் எதிர்ப்பு வலுக்கும் எனவும் ,ராஜபக்ச குடும்பங்கள் மீளவும், இலங்கையில்
மக்களினால் ஒட்டுமொத்தமாக துரத்தியடிக்க ,படும் நெருக்கடி ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது.
கொட்டல் அறையை விட்டு வெளியேற வேண்டாம் கோட்டபாயாவுக்கு எச்சரிக்கை
கொட்டல் அறையை விட்டு வெளியேற வேண்டாம் கோட்டபாயாவுக்கு எச்சரிக்கை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தங்கியுள்ள ஹோட்டல் அறையை விட்டு வெளியேற வேண்டாம் என தாய்லாந்து பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.
தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சிங்கப்பூரில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஷ மேலும் மூன்று பேருடன் சிங்கப்பூர் விமானம் மூலம் தாய்லாந்து வந்தடைந்தார்.
குறித்த விமானம் தாய்லாந்தின் ஃபூகெட் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி
கொட்டல் அறையை விட்டு வெளியேற வேண்டாம் கோட்டபாயாவுக்கு எச்சரிக்கை
அங்கு சென்றமை பற்றிய தகவல் வெளியானதையடுத்து விமானம் பெங்கொக்கில் உள்ள இராணுவ விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
கோட்டாபய ராஜபக்ஷ தங்கியிருக்கும் ஹோட்டலின் பெயர் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை எனவும், அவரது பாதுகாப்பிற்காக சிவில் உடையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஹோட்டலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கியிருந்து
பின்னர் எதிர்வரும் நவம்பர் மாதம் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது.
சிங்கப்பூருக்கு பறந்த கோட்டபாயா
சிங்கப்பூருக்கு பறந்த கோட்டபாயா
இலங்கை ஆளும் தமிழ் இனக்கொலையாளி கோட்டபாய ராஜபக்ஸ்சா
தனிப்பட்ட விடயம் ஒன்றை மேற்கொண்டு சிங்கப்பூருக்கு பயணித்துள்ளார் என ஜனாதிபதி
ஊடாக பேச்சாளர் தெரிவித்துள்ளார்
கொரனோவேளை கோட்டபாயா திமிர் பேச்சு
கொரனோவேளை கோட்டபாயா திமிர் பேச்சு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு ஒரு வருடம் நிறைவடைவதை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களின் செய்தி
கொடூர தீவிரவாத கருத்தினைக் கொண்ட ஒரு குழுவினர் 2019 ஏப்ரல் 21 ஞாயிறன்று முக்கிய கத்தோலிக்க தேவாலயங்களையும்
சுற்றுலா ஹோட்டல்கள் சிலதையும் இலக்குவைத்து மேற்கொண்ட பாரிய மனிதப் படுகொலைகள் இடம்பெற்று இன்று ஒரு வருடம் நிறைவடைகின்றது.
இந்த காட்டுமிராண்டித்தனமான குற்றத்தின் மூலம் உயிரிழந்தவர்களினதும் கடுமையாக காயப்பட்டவர்களினதும்
குடும்ப உறுப்பினர்களுக்கும், அதனால் பெரிதும் கவலைக்குள்ளான கத்தோலிக்க மக்களுக்கும் அனைத்து
இலங்கையர்களுக்கும் நான் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதலினால் சுமார் 270பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமுற்றனர்.
காயமடைந்தவர்களில் சிலர் பின்னர் உயிரிழந்தனர். இன்னும் சிலர் அங்கவீனமுற்றுள்ளனர்.
தாக்குதலில் உயிரிழந்த பெரும்பாலானவர்கள் கத்தோலிக்க சமயத்தவர்கள் என்ற போதும் அது அவர்களை மட்டுமன்றி முழு
இலங்கை மக்களையும் இலக்கு வைத்த பயங்கரவாத நடவடிக்கையாகும். எந்த சிந்தனையின் பெயரில் இந்த மனிதப்
படுகொலை இடம்பெற்றாலும் இது மனித இனத்திற்கே இழுக்கான ஒன்றாகும்.
தேசிய பாதுகாப்பை மறந்து பாதுகாப்பு திட்டங்களும் ஏற்பாடுகளும் கைவிடப்பட்டிருந்த காரணத்தினாலேயே உயிர்த்த
ஞாயிறு மனிதப் படுகொலைக்கு வசதியான பின்னணி உருவானது. அத்தகையதொரு கட்டற்ற சூழலில் தீவிரவாதமும் பயங்கரவாதமும் தலைதூக்குவது ஆச்சரியமான ஒன்றல்ல.
‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற எனது கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு எனது ஆட்சிக் காலத்தில் அனைத்து
இனங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், எந்தவகையிலும் தீவிரவாதத்திற்கும், தீவிரவாத வன்முறைக்கும்
இடமளிக்கப்போவதில்லை என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு வகைகூறவேண்டியவர்களை சரியாக இனம்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் நான் எனது மக்களுக்கு உறுதியளிக்கின்றேன்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியான, பாதிப்புக்கு உள்ளான கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட இலங்கை மக்களுக்கு நான் மீண்டும் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

















