நாவலப்பிட்டி-கண்டி சாலை மீண்டும் திறக்கப்பட்டது
Posted in இலங்கை செய்திகள்

நாவலப்பிட்டி-கண்டி சாலை மீண்டும் திறக்கப்பட்டது

நாவலப்பிட்டி-கண்டிசாலை மீண்டும் திறக்கப்பட்டது

நாவலப்பிட்டி-கண்டி சாலை மீண்டும் திறக்கப்பட்டது ,சூறாவளி சேதத்திற்குப் பிறகு நாவலப்பிட்டி-கண்டி சாலை மீண்டும் திறக்கப்பட்டது.

டிட்வா சூறாவளியால் சேதமடைந்த நாவலப்பிட்டி-கண்டி

டிட்வா சூறாவளியால் சேதமடைந்த நாவலப்பிட்டி-கண்டி பிரதான சாலை, 18 நாட்களுக்குப் பிறகு இன்று (15)

போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்பட்டதாக சாலை மேம்பாட்டு ஆணையம் (RDA) தெரிவித்துள்ளது.

மண்சரிவு காரணமாக சாலையில் விழுந்த மண் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டதாக RDA தெரிவித்துள்ளது. இருப்பினும், மேலே உள்ள சரிவுகளில்

இருந்து மேலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், நிரந்தர தீர்வு ஏற்படும் வரை போக்குவரத்தை அனுமதிக்க தற்காலிக பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்து பழுதுபார்க்கும் பணிகளும் முழுமையாக முடியும் வரை சாலையைப் பயன்படுத்தும் போது வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக

கனரக வாகனங்கள் செல்வதற்கு கட்டுப்பாடுகள்

இருக்குமாறு அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது, மேலும் இந்தப் பாதையில் கனரக வாகனங்கள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களுக்குப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜெயசிங்க, பஸ்பாகே கோரல பகுதியில்

சேதமடைந்த பெரும்பாலான சாலைகள் இப்போது பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

உலப்பேன்-கண்டி சாலை சுமார் ஒரு வாரத்திற்குள் முடிக்கப்பட்டு போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

ஆசிரியர்உள்ளிட்ட 15 மாணவர்களுக்கு கொரனோ – பாடசாலை அடித்து பூட்டு

ஆசிரியர்உள்ளிட்ட 15 மாணவர்களுக்கு கொரனோ – பாடசாலை அடித்து பூட்டு

இலங்கை நாவலப்பிட்டி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும்

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடத்த பட்ட கொரனோ சோதனையின்

ஒரு ஆசிரியர் உள்ளிட்ட பதின் ஐந்து மாணவர்கள் குறித்த நோயின் தாக்குதலினால் பாதிக்க பட்டுள்ளது கண்டறிய பட்டுள்ளது

இதனை அடுத்து அனைவரும் தனிமை படுத்த பட்டு சிகிச்சை

பெற்று வருகின்றனர் ,பாடசாலை மறு அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டுள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    மூடப்பட்டிருந்து சில பகுதிகள் மீள திறப்பு

    மூடப்பட்டிருந்து சில பகுதிகள் மீள திறப்பு

    கடந்த நான்கு நாட்களாக மூடப்பட்டிருந்து நாவலப்பிட்டி நகரம் இன்று திறக்கப்பட்டது.

    கடைகள் மற்றும் பொது இடங்கள் முழுமையாக கிருமி ஒழிப்புக்கு பின்னர் இன்று நகரம் திறக்கப்பட்டது

    நகரத்திற்குள் நுழையும் மக்களுக்கு நகரம் முழுவதும் ஒலிபெருக்கிகள் மூலம் பொது மக்களுக்கு போலிசார் கொரோனா குறித்து தெளிவுபடுத்தினர்.

      கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு கடற்படை வீரர்கள் மற்றும் அவரது உறவினர்கள் பலர் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாவலபிட்டிய நகரம் சமீபத்தில் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

      இதேவேளை கொரொனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்ட கண்டி

      மாவட்டத்தின் அக்குரணை பகுதியும் களுத்துறை மாவட்டத்தின் பேருவளை பகுதியும் நேற்று மீள திறக்கப்பட்டன.

      குறித்த பகுதிகளில் இறுதி நோயாளி அடையாளம் காணப்பட்ட நாள் முதல் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கை

      மேற்கொள்ளப்பட்டிருந்ததாக ,இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

      அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் குறித்த பகுதிகளை மீண்டும் திறந்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். .


      இதேவேளை கொரோனா தொற்று காரணமாகவும் ஒருவர் உயிரிழந்திருந்தமையாலும் மூடப்பட்டிருந்த மருதானை ,மாமுல் அருஸ் மாவத்தை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.

      .மாமுல் அரூஸ் மாவத்தை தொடர்மாடிக் குடியிருப்பைச் சேர்ந்த 302 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு புனானை கண்காணிப்பு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

      அதனைத் தொடர்ந்து கடந்த 17 ஆம் திகதி அவர்களின் தனிமைப்படுத்தல் காலப்பகுதியை நிறைவு செய்த பின்னர்

      வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.ன்று முதல் 14 நாட்களுக்கு அவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டனர்.

      சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டு 14 நாட்கள் நிறைவுற்ற நிலையில், குறித்த பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது

      நாவலப்பிட்டி
      நாவலப்பிட்டி
          Posted in இலங்கை செய்திகள்

          ஆட்டோ ,மோட்டார் சைக்கிள் மோதல் -ஒருவர் பலி

          ஆட்டோ ,மோட்டார் சைக்கிள் மோதல் -ஒருவர் பலி

          இலங்கை நாவல பிட்டிய பகுதியில் ஆட்டோ ,மோட்டார் சைக்கிள் நேரெதிர்

          மோதி விபத்தில் சிக்கியதில் ஆட்டோ சாரதி சம்பவ இடத்தில பலியானார் ,

          அவரது மகன் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

          குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,


          இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான வீதி விபத்துக்கள்

          அதிகரித்து செல்வது குறிப்பிட தக்கது

          ஆட்டோ மோட்டார் சைக்கிள் மோதல்
          ஆட்டோ மோட்டார் சைக்கிள் மோதல்