Tag: ஆட்டோ
ஆட்டோ காவல் நிலையத்தில் பதிவு
ஆட்டோ காவல் நிலையத்தில் பதிவு
ஆட்டோ காவல் நிலையத்தில் பதிவு ,பகவந்தலாவவில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் அனைத்து வாடகை மற்றும் தனியார்.
பகவந்தலாவ காவல் நிலையத்தில்
முச்சக்கர வண்டிகளும் நவம்பர் 5 ஆம் தேதி பகவந்தலாவ காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு சிறப்பு அடையாள ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டன.
குற்றச் செயல்களில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளை எளிதில் அடையாளம் காணவும், பொதுப் பாதுகாப்பை மேம்படுத்தவும் காவல் தலைமையகம்
அறிமுகப்படுத்திய நாடு தழுவிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி உள்ளது.
ரூ. 200 மதிப்புள்ள ஒவ்வொரு ஸ்டிக்கரும், பதிவு மற்றும் டேக்கிங் செயல்முறையை ஒருங்கிணைத்த பகவந்தலாவ காவல் அதிகாரிகளால் சேகரிக்கப்பட்ட பங்களிப்புகள் மூலம் பெறப்பட்டது.
அனைத்து முச்சக்கர வண்டி
நகரத்திலும் அதைச் சுற்றியும் இயங்கும் அனைத்து முச்சக்கர வண்டிகளையும் உடனடியாகக் கண்டுபிடித்து சரிபார்க்க முடியும் என்பதை உறுதி செய்வதன்
மூலம், இந்தப் பகுதியில் அதிகரித்து வரும் குற்ற விகிதங்களைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.
மிளகாய் தூள்வீசி ஆட்டோ திருட்டு
மிளகாய் தூள்வீசி ஆட்டோ திருட்டு
மிளகாய் தூள்வீசி ஆட்டோ திருட்டு ,மிளகாய் தூள் வீசி ஆட்டோ திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ள செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டோவில் செல்லும் பெண்கள்
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஆட்டோவில் செல்லும் பெண்கள் அவர்கள் மீது மிளகாய் பொடிகளை வீசி அதன் பின்னர் அந்த ஆட்டோக்களை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விதம் 24 மற்றும் 27 வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
ஆண் பெண்கள் இருவரும் இணைந்து வாடகைக்கு ஆட்டோவில் செல்வது போல செல்கின்றனர் .
ஆட்டோ சாரதிகள் மீது தூளை வீசி ஆட்டோ திருட்டு
பின்னர் அந்த ஆட்டோ சாரதிகள் மீது தூளை வீசி அதன் பின்னர் அவர்கள் நிலைதடுமாற அந்த ஆட்டோ திருடி செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மேற்படி புதிய திருட்டு ஆட்டோ சாரதிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகரித்து வரும் இவ்விதமான குற்றச் செயல்களை தடுப்பது எவ்வாறு என்பது தொடர்பில் தற்பொழுது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மிளகாய் பொடி வீசி தற்பொழுது 4க்கு மேற்பட்ட ஆட்டோக்கள் அல்லது முச்சக்கர வண்டிகள் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டோ வான் மோதல் சிசு பலி
ஆட்டோ வான் மோதல் சிசு பலி
ஆட்டோ வான் மோதல் சிசு பலி ,எல்பிட்டிய, குருந்துகஹ நகரில் இன்று அதிகாலை முச்சக்கர வண்டி மற்றும் வேன் மோதிய விபத்தில் 06 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பலாங்கொடையிலிருந்து எல்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி எதிர் திசையில் பயணித்த வேன் ஒன்றின் மீது நேருக்கு நேர் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர், ஒரு ஆண் பயணி, இரண்டு பெண் பயணிகள் மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று பெண் குழந்தைகள் காயமடைந்தனர்.
இந்தக் குழு எல்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, இதில் ஒரு பெண் குழந்தை காயமடைந்து உயிரிழந்தது, மீதமுள்ளவர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த 06 வயது சிறுமி பிடிகல பகுதியைச் சேர்ந்தவர்.
விபத்து தொடர்பாக வேனின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொலிஸாரால் ஆட்டோ திருடியவர்கள் கைது
பொலிஸாரால் ஆட்டோ திருடியவர்கள் கைது
பொலிஸாரால் ஆட்டோ திருடியவர்கள் கைது , கொழும்பு மத்திய குற்றத்த தடுப்பு பிரிவினால் ஆட்டோ திருடர்கள் ஈடுபாட்டை ஐந்து பேரை கைது செய்துள்ளதாக கொழும்பு குற்ற திணைக்கள பிரிவினர் தெரிவித்து இருக்கின்றது .
இவர்கள் கடந்த காலங்களில் கொழும்பின் பல பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களை திருடி சென்ற சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து .
விசேட குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர் வீதியோர கேமராக்கள் கடைகளில் பொருத்தப்பட்ட கமராக்கள் என்பனவையும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வந்தன.
அவ்விதம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட வந்த கேமராக்கள் மற்றும் சிவில் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உளவுத்துறையினர் கூட்டத்தோடு பிரிவினர்களால் இந்த திருடர்கள் தற்பொழுது மடக்கி பிடிக்கப்பட்டனர் .
இந்த ஐந்து பேரும் பல ஆட்டோக்களை திருடி விற்றுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது .
ஆட்டோக்குள் திருடி அதன் உதிரி பாகங்கள் விற்பனை செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
அதனை அடுத்து தற்பொழுது தொடர்ந்து விசாரணைகள் பெற்று வருவதாகவும் ,எத்தனை ஆட்டோக்கள் இவர்கள் திருடினார்கள் என்பது தொடர்பாக முழுமையாக தெரிய வரவில்லை.
ஆட்டோ விபத்தில் 4 மாணவர்கள் படுகாயம்
ஆட்டோ விபத்தில் 4 மாணவர்கள் படுகாயம்
ஆட்டோ விபத்தில் 4 மாணவர்கள் படுகாயம் ,பாடசாலை மாணவன் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டி பிரதான வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மாணவர் உட்பட நான்கு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் உடனடியாக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (18) மாலை 5 மணியளவில் கினிகத்தேன நாவலப்பிட்டி பிரதான வீதியில் கினிகத்தேன நூலகத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
கினிகத்தேன கடவல தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 12 ஐ சேர்ந்த மாணவர்களே விபத்தில் காயமடைந்துள்ளனர்.
பாடசாலையில் இடம்பெற்ற வைபவம் முடிந்து நான்கு மாணவர்களும் முச்சக்கர வண்டியில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வளைவான பகுதியில் அதே திசையில் சென்ற வேனை முந்திச் செல்ல முற்பட்ட போது, எதிரே வந்த லங்கம பேருந்து ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் பயணித்த மாணவர்கள் வீதியில் வீழ்ந்ததையடுத்து அவர்களின் உயிரைக் காப்பாற்ற பேருந்து வீதிக்கு வௌியே செலுத்தப்பட்டுள்ளது.
அப்போது, அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடமொன்றின் மதில் மற்றும் வாயிலில் மோதி பேருந்து நின்றதாகவும், விபத்தில் பேருந்தில் பயணித்த
எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற பாடசாலை மாணவனிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், பாடசாலை மாணவன்
கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்கான காரணம் எனவும் இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் பேருந்தும் முச்சக்கரவண்டியும் கடுமையாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ்
எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ்
எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ் ,மட்டக்களப்பு வவுணதீவிலிருந்து விளாவெட்டுவானுக்குச் செல்லும் வீதியில் ஆட்டோ ஒன்று எறிந்த நிலையில் காணப்பட்டுள்ளது .
இந்த ஆட்டோ எப்படி எரிந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இயந்திர கோளாறு காரணமாக தீ பற்றி எரிந்ததா அல்லது விஷமிகளினால் தீயிட்டு கொழுத்த பட்டதா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
ஆட்டோவில் படுகொலை குற்றவாளிகளை தேடும் போலீஸ்
ஆட்டோவில் படுகொலை குற்றவாளிகளை தேடும் போலீஸ்
ஆட்டோவில் படுகொலை குற்றவாளிகளை தேடும் போலீஸ் ,கொழும்பு பகுதியில் ஆட்டோ ஒன்றுக்குள் இருந்த நபர் ஒருவரை ஆட்டோவில் வந்த இருவர் குத்தி படுகொலை செய்யப்பட்டு தப்பிச்சென்ற காட்சிகள் தற்பொழுது
வெளியாகி உள்ளதை அடுத்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோவில் அதனை செலுத்தி சென்ற ஆட்டி ஆட்டோ சாரதி அவர்களால் திடீரென குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
33 வயதுடைய இளம் வாலிபர் ஒருவரை இவ்வாறு மரணம் குத்தி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார் .
இவரது படுகொலைக்கு காரணம் என்ன தொடர்பாக தெரியவில்லை என போலீசார் தெரிவித்திருந்தனர்.
ஆனால் தற்பொழுது அவரது படுகொலை தொடர்பான சில காணொளி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் ஆட்டோவில் வந்த இதுவரை இவரை படுகொலை செய்து விட்டு தப்பிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து அந்த இரண்டு கொலையாளிகளையும் கைது செய்யும் நடவடிக்கையில் தற்பொழுது போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை வாழ் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு அச்சுறுத்தலான சூழல் காணப்படுவதனையும் ,இந்த படுகொலைகள் எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் நாள்தோறும் பல படுகொலைகள் இடம்பெற்று வருவதும் மனித சடலங்கள் ஆங்காங்கே ,குளங்கள் வீதிகளில் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இதை திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி நேரங்கள் இடம் பெறுகின்ற படுகொலை கள் காணப்படுவதாகவும்,
அவர் படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டுமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்கின்ற கேள்வியை மக்கள் மன்றம் எழுப்பி இருக்கின்றது.
வீரபாண்டிக்கு ஆட்டோ வாங்கி கொடுத்த ஜீ தமிழ் டிவி
வீரபாண்டிக்கு ஆட்டோ வாங்கி கொடுத்த ஜீ தமிழ் டிவி
வீரபாண்டிக்கு ஆட்டோ வாங்கி கொடுத்த ஜீ தமிழ் டிவி ,ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடத்திக் கொண்டிருக்கும் சரிகமப நிகழ்வில் கலந்துகொண்டு பாடல் பாடி மக்களின் மனங்களில் குடிகொண்டிருக்கின்றார் வீரபாண்டி .
அவர்களுக்கு ஆட்டோ ஒன்று வேண்டி கொடுத்த zeetamil தொலைக்காட்சி இந்த விடயம் தற்பொழுது பார்ப்பவர்களை கண்ணீரில் தங்களை அறியாத கதற வைத்துள்ள காட்சி இடம் பெற்றுள்ளது .
தாயானவர் மிகவும் வறுமை உள்ளாக்கப்பட்ட நிலையில், மலசல கூடம் கழுவி தனது குழந்தையை பார்வையிட்டு வந்தார்.
மிகவும் மோசமான நிலையில், காற்று அடித்தால் உடைந்து விடுகின்ற அந்த வீட்டுக்குள் அவர்கள் தங்கி வாழ்ந்து வருகின்றனர் .
சரிகமபா வீரபாண்டிக்கு ஆட்டோ பரிசு
ஒரு ஆட்டோ ஒன்றை அன்போடு ஒருவர் வாங்கி கொடுத்ததை அடுத்து ,அதனை வாடகைக்கு விட்டு நீங்கள் உழைத்துக் கொள்ளுங்கள் .
வெளிநாடுகளுக்கு சென்று பாட்டு பாடுங்கள் என வீரபாண்டிக்கு சீனிசார் அவர்கள் உத்தரவாதம் அளித்திருந்தார்.
அதனை அடுத்து இப்பொழுது புதிய ஆட்டோவை ,விழுப்புரம் v v r ஆட்டோ டீலர் வாங்கி கொடுத்திருக்கிறார்கள் .
அதனை பாடகி விட்டு அதில் வருகின்ற வருமானத்தின் ஊடாக குடும்பத்தை பார்க்கும் படியும் பாட்டு பாடுவதற்காக சர்வதேச நாடுகளுக்குச் சென்று வருவதற்கு அவரை அழைத்துச் செல்கிறார்கள் .
ஓட்டை குடிசையில் தாயார் மலசலம் கழுவிக் கொண்டிருந்த வேளையில் அவருக்கு யார் உதவுவார்கள் என்ற நிலையில் ,தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சி முதலாவது படியை எடுத்து வைத்து அவரது வாழ்வில் விளக்கேற்றி வைத்துள்ளது .
உதவி என்பது இதுதான் மக்களே. உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகள் சென்று சேர வேண்டும் .
அவ்வாறு புலம்பெயர் தேசத்தில் உள்ள பல மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் எத்தனை அரசியல்வாதிகள் எத்தனை கோடிஸ்வரர்கள் எத்தனையோ திரைப்பட நட்சத்திரங்கள் காணப்படுகின்ற பொழுதும்
அவர்களால் செய்ய முடியாத பல வேலைகளை இப்பொழுது சிலர் தனியார் இவ்வாறு செய்து கொண்டு வருவது கண்களை திறந்து பார்க்கின்ற பொழுது கண்ணீரில் எம்ஐ அறியாமல் தண்ணீர் கொட்டுகின்றன.
ஆம் சரிகமப நிகழ்வில் வாய்ப்பு எதிர்பார்த்து வந்த வீரபாண்டிக்கு, இன்று கிடைத்திருக்கின்ற ,இந்த மகிழ்ச்சியான விடயம் ,அவருக்கு மட்டுமில்லை எம்மையும் இன்று குளிர வைக்கின்றது.
சரிகமபா வீரபாண்டிக்கு v v r ஆட்டோ டீலர் வழங்கிய முச்சக்கரவண்டி
இந்த பேர் உதவி வழங்கிய அந்த நல்ல v v r ஆடோ டீலர் உள்ளங்களுக்கு இந்த வேளையில் எதிரி இணையத்தின் சார்பாக நாங்களும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .
மனிதன் எங்கும் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த மேடை ஒரு முன்னுதாரணமாக இருக்கின்றது .
அழுதவனின் கண்ணீரை துடைத்து ,அவனுக்கு ஒரு வழிகாட்டுகின்ற ,ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு இந்த வேளையில் எமது நன்றிகள்.
யாழ் விபத்தில் ஒருவர் காயம்
யாழ் விபத்தில் ஒருவர் காயம்
யாழ் விபத்தில் ஒருவர் காயம், யாழ்நகரை அண்மித்த நாலுகால் மட சந்தியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி பட்டாரக வாகனம் சேதத்திற்கு உள்ளாகியது .
வான் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ் பொலிசார் தெரிவித்துள்ளனர்
வான் மோதியதில் சிதறிய ஆட்டோ
யாழ் மானிப்பாய் காரைநகர் பிரதான வீதியில் நாலுகால்மடம் சந்தியில் அமைந்துள்ள அரைக்கும் ஆலை ஒன்றில் இருந்து பிரதான வீதியில் முச்சக்கர வண்டி பயணிக்க தொடங்கிய நிலையில் பின்புறமாக வந்த பட்டாரக வாகனம் மோதியுள்ளது.
மடசந்தி வான் ஆட்டோ விபத்தில் ஒருவர் காயம்
இதன் போது முச்சக்கர வண்டியினை செலுத்திய ஆறுகால்மடம் பகுதியினை சேர்ந்த 20 வயதான அஜிந்தன் எனும் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்.
இதேவேளை, பட்டாரக வாகனம் மின்கம்பத்துடன் மோதி பகுதியளவில் சேதமடைந்ததோடு வாகன சாரதி காயங்களின்றி மீட்கபட்டுள்ளார்
சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ் மாவட்ட போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Featured
ரயில் ஆட்டோ நேரடி மோதல் ரயிலால் சிதறிய ஆட்டோ
ரயில் ஆட்டோ நேரடி மோதல் ரயிலால் சிதறிய ஆட்டோ
ரயில் ஆட்டோ என்பன நேரடியா மோதியதில் ரயிலில் பயணித்த நால்வர் படு காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
அனுராதபுரத்தில் இருந்து பொலியத்த நோக்கி பயணித்த கொண்டிருந்த ,ஆட்டோ ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .
ரயில் ஆட்டோ நேரடி மோதல் ரயிலால் சிதறிய ஆட்டோ
இந்த ரயில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் மீட்க பட்டு ,
மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளனர் .
குறித்த ரயில் ஆட்டோ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கையில் இடம்பெற்று வரும் வாகன விபத்துக்களில் சிக்கி,
நாள்தோறும் ,நான்கிற்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளதாக,
செய்திகள் வெளியாகி இருந்தமை இங்கே குறிப்பிடதக்கது .
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்
- யாழில் சடலம் மீட்பு
- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்
- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா
- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்
25 அடி பள்ளத்தில் பாய்ந்த ஆட்டோ
25 அடி பள்ளத்தில் பாய்ந்த ஆட்டோ
ஹட்டன் – நுவரெலியா வீதியில் குடாகம பகுதியில் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுகேகொடையில் இருந்த வெலிமடைக்குச் செல்வதற்காக வந்த முச்சக்கர வண்டி இன்று அதிகாலை 3 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரியவருகிறது.
வேகக்கட்டுப்பாடின்மையே இவ்விபத்துக்கு காரணமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முச்சக்கர வண்டியில் மூவர் பயணித்துள்ள நிலையில் உயிர்சேதம் ஏற்படவில்லையென தெரிவிக்கும் ஹட்டன் பொலிஸார் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே
விபத்துக்கு காரணமென ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவருகிறது.
Featured
வீதியில் கவிழ்ந்த ஆட்டோ குதித்து ஓடிய பெண்
வீதியில் கவிழ்ந்த ஆட்டோ குதித்து ஓடிய பெண்
இலங்கை பன்னிபிட்டிய கலல்கொட பகுதியில் வேகமாக பயணித்த ஆட்டோ ஒன்று சாரதியின் கட்டு பாட்டை , இழந்தது கவிழ்ந்து நிமிர்ந்தது ,
அவ்வழியே அதில் பயணித்த பெண் ஒருவர் ,ஆட்டோவில் இருந்து குதித்து தப்பிக்கும் காட்சியும் ,அந்த ஆட்டோவை ஓடி சென்று மக்கள் தூக்கி நிமிர்த்தி காப்பாற்றும் காட்சிகளும் பார்ப்ப்வபர்களை வியக்க வைத்துள்ளது .
ஆட்டோ விபத்தின் பொழுது உதவிடும் நிலையில் ,மக்கள் மனம் உள்ளதை இந்த காட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன .
இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது.
இலங்கையில் மின்சாரா ஆட்டோ பயன்பாட்டுக்கு வந்தது
இலங்கையில் மின்சாரா ஆட்டோ பயன்பாட்டுக்கு வந்தது
இலங்கையில் மின்சாரா ஆட்டோ ,மக்கள் பயன் பாட்டுக்கு வந்துள்ளது .
இல்;இலங்கையில் ஏற்பட்டுள்ள ,எரிபொருள் நெருக்கடிக்கு, மாற்று திட்டமாக இந்த மின்சார ஆட்டோ தயாரிக்க பட்டுள்ளது .
அமெரிக்கா மாறறும் ,இலங்கை நிருவனங்கள், இணைந்து தயாரித்துள்ள, இந்த ஆட்டோ தற்போது ,மக்கள் பாவனைக்கு விட பட்டுள்ளது .
ஆட்டோ ,பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு -திணறும் மக்கள்
ஆட்டோ ,பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு -திணறும் மக்கள்
இலங்கையில் எரிபொருள் விலையில் ஏற்பட்ட விலை அதிகரிப்பை அடுத்து பேரூந்து ,மற்றும் ஆட்டோ
பயண செலவுகள் அதிகரிக்க பட்டுள்ளது ,ஆட்டோ ஒன்றின் முதலாவது கிலோ மீட்டருக்கு நூறு ரூபா
அறவிட தீர்மானிக்க பட்டுள்ளது
இந்த கடுகதி விலை உயர்வினால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
யாழில் வீடு புகுந்து ஆட்டோவை எரித்த ரவுடி கும்பல்
யாழில் வீடு புகுந்து ஆட்டோவை எரித்த ரவுடி கும்பல்
யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் ரவுடிகள் கும்பல் வீடு புகுந்த்து தரித்து நின்ற ஆட்டோ ஒன்றினை எரித்து
சென்றுள்ளனர்
இந்த தாக்குதலை நடத்திய ஆறுபேர் கொண்ட வன்முறை ரவுடி கும்பல் அங்கிருந்து
தப்பி சென்றுள்ளது
மானிப்பாய் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
கொதித்துள்ள மக்கள் இவ்வாறான ரவுடிகளை மடக்கி பிடித்து கட்டி வைத்து அடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
இலங்கையில் ஆட்டோக்களுக்கு மீட்டர்
இலங்கையில் ஆட்டோக்களுக்கு மீட்டர்
எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் கட்டண அறவிட்டுக்கான
மீட்டர் கட்டாயமாக்கப்படவுள்ளது.
இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின்படி,இதற்கான விதி முறை
அமுலாக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை ,எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதிக்குள், அனைத்து மாகாணங்களிலும் முச்சக்கர
வண்டிகளுக்கு கட்டணங்களை அறவிடுவதற்கான மீட்டரை பொருத்துதல் கட்டாயமாக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்
50 அடி பள்ளத்தில் பாய்ந்த ஆட்டோ
50 அடி பள்ளத்தில் பாய்ந்த ஆட்டோ
நோட்டன் – பம்பரகலை தோட்டத்தில் உள்ளக வீதியோரத்தில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து
முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளான சம்பவமொன்று இன்று (12) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சாரதி உட்பட்ட நால்வர் பயணித்த குறித்த முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து வீடொன்றின் வாசல் முன்றலில் வீழ்ந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த சாரதி உட்பட முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரும் காயமடைந்த
நிலையில் டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாவையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
ஆட்டோ ,மோட்டார் சைக்கிள் மோதல் -ஒருவர் பலி
ஆட்டோ ,மோட்டார் சைக்கிள் மோதல் -ஒருவர் பலி
இலங்கை நாவல பிட்டிய பகுதியில் ஆட்டோ ,மோட்டார் சைக்கிள் நேரெதிர்
மோதி விபத்தில் சிக்கியதில் ஆட்டோ சாரதி சம்பவ இடத்தில பலியானார் ,
அவரது மகன் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான வீதி விபத்துக்கள்
அதிகரித்து செல்வது குறிப்பிட தக்கது
















































