அனுரவுக்கு தற்துணிவு இல்லையாம்
Posted in இலங்கை செய்திகள்

அனுரவுக்கு தற்துணிவு இல்லையாம்

அனுரவுக்கு தற்துணிவு இல்லையாம்

அனுரவுக்கு தற்துணிவு இல்லையாம் ஜனாதிபது அனுரவுக்கு தற்துணிவு என்பது கடுகளவும் இல்லை என விமல் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அநுர அரசு பகிரங்கப்படுத்தும் என்ற நம்பிக்கை கிடையாது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா தொடர்பான ஒருசில விடயங்களில் தற்றுணிவுடன் செயற்பட்டார். அந்தத் தற்றுணிபு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கிடையாது.”

இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தேசிய மக்கள் சக்தி பொய் மற்றும் வெறுப்பை மாத்திரம் முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்தது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தவறான அரசியல் தீர்மானம் எடுத்ததை மக்கள் தற்போது விளங்கிக்கொண்டுள்ளார்கள்.

அதனையே நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளார்கள். பெரும்பான்மைப் பலம் உள்ளது என்ற ஆணவத்தில் அநுர அரசு தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றது.

2020ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோட்டபய ராஜபக்ஷ அரசுக்கும் பெரும்பான்மைப் பலம் இருந்ததையும், அந்தப் பலம் இரண்டாண்டுக்குள் பலவீனமடைந்ததையும் அநுர அரசு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்தியாவுடன் அரசு அண்மையில் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களின் விவரங்கள் இதுவரையில் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை.

இந்த விடயத்தில் அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை. பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிப்பதாயின்

அதற்கு இந்தியாவின் அனுமதியைப் பெற வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது.

கடந்த காலங்களில் இதனைக் காட்டிலும் இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட பல ஒப்பந்தங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்த அரசு பகிரங்கப்படுத்தும் என்ற நம்பிக்கை கிடையாது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா தொடர்பான ஒருசில விடயங்களில் தற்றுணிபுடன் செயற்பட்டார்.

அந்தத் தற்றுணிபு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கிடையாது. சர்வதேச நாணய நிதியத்தின் விவகாரத்தில் அநுர அரசு நாணய நிதியத்தின் சகல நிபந்தனைகளுக்கும் அடிபணிந்துள்ளது.

மின் கட்டண அதிகரிப்பு ஊடாக இதனை எதிர்வரும் மாதமளவில் விளங்கிக்கொள்ள முடியும்.” – என்றார்.

இனப்படுகொலை என்பது தொடர் நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

இனப்படுகொலை என்பது தொடர் நடவடிக்கை

இனப் படுகொலை என்பது தொடர் நடவடிக்கை

இனப்படுகொலை என்பது தொடர் நடவடிக்கை இனப்படுகொலை என்பது ஒரு தொடர் நடவடிக்கை என கனடாவில் இருந்து விஜய் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் இனப்படுகொலை கல்விவாரம் தொடரும் தமிழ் இனப்படுகொலை குறித்து சிந்திப்பதற்கும், அது பற்றி பொதுமக்களிற்கு போதிப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது என

ஒன்ராறியோவின் சுகாதார அமைச்சின் உளநலத்துறை இணை அமைச்சரும், ஸ்காபரோ றூஜ் பார்க் தொகுதிக்கான மாநில சட்டமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் இனப்படுகொலை வாரம் குறித்த தனது சமூக ஊடகபதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இந்த வாரம் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் , நான்கு வருடங்களிற்கு முன்னர் ஒன்டாறியோவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த வாரம் முழுவதும் தமிழ்சமூகத்தினரும் இளைஞர்களும் தமிழ் இனப்படுகொலையில் உயிர்பிழைத்தவர்களின் கதைகளை பகிர்ந்துகொள்வார்கள்.

மேலும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அனுபவிக்கும் தலைமுறைகளிற்கு இடையிலான மனஉளைச்சல் குறித்து அறிந்துகொள்வார்கள்.

இனப்படுகொலை என்பது ஒரு நிகழ்வால் குறிக்கப்படவில்லை. அது ஒரு செயல்முறை, ஒரு குழுவினரான மக்களை , ஒழித்து அழிக்க அரசு தொடர்ந்து செய்யும், தொடர்ச்சியான நடவடிக்கைகளின் வடிவம்.

மே2009ம் ஆண்டு தமிழர் இனப்படுகொலையின் உச்சமாக குறிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களிற்கு உணவும் மருந்தும் மறுக்கப்பட்டமை, பாலியல் வன்முறைகள் கொலைகள், கடத்தல்கள் கொத்துக் குண்டுகள் குறித்த தெளிவான நினைவுகளுடன் நாங்கள் விடப்பட்டுள்ளோம்.

தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலை இன்னமும் தொடர்க்கின்றது,167,796 பேருக்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலை தொடர்கின்றது.

தமிழ் இனப்படுகொலை கல்விவாரத்தை அங்கீகரிப்பது ,நீடிக்கும் தமிழ் இனப்படுகொலை குறித்து சிந்திப்பதற்கும், அது பற்றி பொதுமக்களிற்கு போதிப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்கும்.

33 பாலஸ்தீன மக்கள் மரணம்
Posted in உலக செய்திகள்

33 பாலஸ்தீன மக்கள் மரணம்

33 பாலஸ்தீன மக்கள் மரணம்

33 பாலஸ்தீன மக்கள் மரணம் என பாலஸ்தீனம் காசா சுகாதார அமைச்சு அதிரடியாக அறிவித்துள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சராக வன்னிமைந்தன்
வடக்கு மாகாண முதலமைச்சராக வன்னிமைந்தன்வடக்கு மாகாண முதலமைச்சராக வன்னிமைந்தன்

கடந்த 24 மணித்தியாலமாக யூத படைகள் நடத்திய இராணுவ தாக்குதலில் ,இந்த அப்பாவி மக்கள் பலியாகி உள்ளதாக, காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் 33 மக்கள் பலியாகியும் ,94 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இறந்தவர்களில் முதியவர்கள் ,சிறுவர்கள் ,பெண்கள் , உள்ளடங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு மேலாக நீடித்துச் செல்லும், இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தத்தினால் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட ,பாலஸ்தீன மக்கள் பலியாகி ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் காயமடைந்து வெறுக்கின்றனர்.

இந்த லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டு சுடுகாடக்கப்பட்டுள்ளன.

சமாதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ,யூத படைகள் வலிந்து தாக்குதலை நடத்தி காசா ,மக்கள் மீது கண்மூடித்தனமான ,இனப்படுகொலை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.

சிரியாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம்
Posted in உலக செய்திகள்

சிரியாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம்

சிரியாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம்

சிரியாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம் பர பரப்பாகிறது தெற்கு சிரியாவின் களமுனை பகுதிகள். மூன்றாம் உலக யுத்தம் வெடிக்கும் அபாயம் ஆரம்பிக்க பட்டுள்ளது .

யூத ராணுவம் தற்பொழுது தமது முன்னரங்க சண்டை டாங்கிகளுடன் , தற்பொழுது சிரியாவின் தெற்கு பகுதிக்குள் நுழைந்துள்ளதாக உலக செய்திகள் தெரிவிக்கின்றன .

ஈரானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமாக இருந்தால், நிச்சயமாக சிரியாவுக்கு யூத ராணுவம் நுழைய வேண்டிய நிலை இருக்கிறது.

அதனை அடுத்து தற்பொழுது சிரியாவுக்குள் இந்த இஸ்ரேல் படைகள் நுழைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமது நாடு பாதுகாப்பாக இருக்கப்பட வேண்டுமாக, இருந்தால் ஈரான் அச்சுறுத்தப்பட வேண்டும் ,அதன் முக்கிய நிலைகள் தாக்கி அழிக்கப்பட வேண்டும்.

அதனால் தற்பொழுது இஸ்ரேல் ராணுவம் இந்தப் படை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது .

இஸ்ரேல் இராணுவத்தின் இந்த திடீர் நுழைவு ஈரானை கோபத்தில் ஆழ்த்தி இருக்கும்.

அதனை அடுத்து தற்பொழுது இந்த இராணுவ வருகையும் ,ஈரான் மேற்கொள்ள போகும் அடுத்த அதிரடி ஆட்டமும் ,இஸ்ரேலை உடைக்குமா ,உலக யுத்தம் வெடிக்குமா என பர பரப்பாகிறது உலகப்போர் அரங்கு.

மூன்றாம் உலக யுத்தம் யூத படைகளில் ஆரம்பிக்கப்பட போவதற்கான முன்னேற்பாடாக இந்த நடவடிக்கை காணப்படுகிறது.

வரும் நாட்களில் ஈரானுக்குள் மிக முக்கியமான தலைகள் உருள போகிறது ,என்பதற்கான முன்னேற்பாடு அறிவிப்பாகவும் ,இதை எடுத்துக் கொள்ளலாம்.

வான வேடிக்கை இனி பார்க்கலாம் .

அமெரிக்காவில் 200அகதிகள் நாடு கடத்தல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 200அகதிகள் நாடு கடத்தல்

அமெரிக்காவில் 200அகதிகள் நாடு கடத்தல்

அமெரிக்காவில் 200அகதிகள் நாடு கடத்தல் நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது .

அமெரிக்காவின் ஆளும் ஜனாதிபதி டிரம்ப் அவர்களின், கடும் போக்கு நடவடிக்கை காரணமாக ,அமெரிக்காவில் நுழைந்த வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த 200 பேர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டிருக்கின்றனர் .

சிறப்பு அமெரிக்கா விமானத்தின் ஊடாக ,அவர்கள் அமெரிக்கா நாட்டிலிருந்து கைது செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாக அமெரிக்காவிலிருந்து வெனிசுவேலா நாட்டுக்கு கடத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஜுபைடன் ஆட்சி காலத்தில் ,பல வெளிநாட்டவர்களை அமெரிக்காவுக்கு உள்ளே நுழைய அனுமதி அளித்திருந்தது.

அதனை அடுத்து ,அதற்கு எதிராக தனது ஆட்சி அதிகாரம் இருக்கும் என்பதை காண்பிப்பதற்காக ,தற்போது ,பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ,வெனிசுவலா நாட்டைச் சேர்ந்த 200 பேர் அவசர அவசரமாக நாடு கடத்தப்பட்டு இருக்கின்றனர்.

ஆளும் அமெரிக்கா அரச நிர்வாக மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையால் , அமெரிக்காவில் வெளிநாட்டு மக்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

எவ்வளையும் தாங்கள் கைது செய்யப்பட்டு ,நாடு கடத்தப்படுவோம் என்கின்ற அச்சத்தில் அமெரிக்காவில் அகதி மக்கள் இருக்கிறார்கள்.

அதேபோன்ற நிலையில் தமிழர்களும் தமிழ் மாணவர்களும் சிக்கி தவித்து வருவதாக அங்குள்ள தமிழர்கள் இப்படி தெரிவிக்கின்றனர்.

வடக்கு மாகாண முதலமைச்சராக வன்னிமைந்தன்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண முதலமைச்சராக வன்னிமைந்தன்

வடக்கு மாகாண முதலமைச்சராக வன்னிமைந்தன்

வடக்கு மாகாண முதலமைச்சராக வன்னிமைந்தன் அர்ச்சுனா இராமநாதன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக ,வன்னிமைந்தன் அவர்கள் போட்டியிட உள்ளதாக ,மக்கள் வாக்கு அற்று உள்ளுராட்சி சபை தேர்தலில் தோல்வி அடைந்த அர்ச்சனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய அர்ச்சனா இராமநாதன் ,பல்வேறுப்பட்ட சர்ச்சைப் பேச்சுக்களை பேசி வருகின்றார்.

பாராளுமன்ற உறுப்பினராக விளங்க கூடிய அர்ச்சுனா இராமநாதன் ,வன்னி மைந்தன் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக, போட்டியிட உள்ளதாகவும் அவர் பாரிய வெற்றி வாய்ப்பை தட்டிச் செல்வார் என அடித்து விட்டுள்ளார்.

லண்டனில் வசிக்கும் வன்னி மைந்தன், எப்படி வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக வர முடியும் என்பதை கூட அறியாத அர்ச்சனா ராமநாதனுடைய ,உருட்டும் பிரட்டும் இது என்பதை மக்கள் புரிந்து கொள்ளுங்கள்.

நாள்தோறும் செய்திகளின் தலைப்புச் செய்திகளாக .தான் மட்டுமே இடம்பெற வேண்டும் என்பதற்காக. அவதூறுகளையும் சர்ச்சைப் பேச்சுகளையும் பேசி இடம் பிடித்து வருகிறார் .

அவ்வாறான மக்கள் நலனற்ற மக்கள் சேவை மறந்து ,மக்கள் பணத்தை கொள்ளை அடித்து ,மக்கள் பணத்தில் வாழ்வை ஓட்டி வருகின்ற அர்ஜுனா இராமநாதன் ,தமிழர் அரசியல் வரலாற்றில் தலைகுனிவை ஏற்படுத்தும் முதலாவது கதிர்காமராக பார்க்கப்படுகிறது.

நாள்தோறும் வெளிநாட்டு வாழ் மக்களிடம் ,பணக் கொள்ளையடிக்க முனையும் அர்ச்சனா, தங்கத்துடன் உல்லாசமாக வாழ்ந்து வருகிறார் ,என்கின்ற விடயமும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

இவருமே இப்பொழுது தனியாக வாழ்ந்து வருகின்றனராம் .

ஆடம்பரமான வாழ்வில் திளைத்திருக்கும் இவர்களுக்கு வெளிநாட்டு மக்கள் காசுகளை அனுப்பி வருகின்றனர் .

பாவப்பட்ட மக்கள் வறுமையில் உள்ள மக்கள் பசிபோக்க மறுக்கின்றவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ,வைத்தியர் அர்ச்சனா இராமநாதனுக்கு, எதற்காக பணத்தை அனுப்புகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றது .

ஆகமொத்தம் அர்ஜுனாவின் கணிப்பின்படி, வடக்கு முதலமைச்சராக வன்னி மைந்தன் வருகிறார் வருகிறார்.

இந்திய தூதர் ஜீவன் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

இந்திய தூதர் ஜீவன் சந்திப்பு

இந்திய தூதர் ஜீவன் சந்திப்பு

இந்திய தூதர் ஜீவன் சந்திப்பு நிகழ்வு என்று தற்போது இடம் பெற்றுள்ளது.

இலங்கைக்கான இந்திய தூதருக்கும் ,நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் ,சந்திப்போன்ற இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது பல்வேறுபட்ட ,உள்ளக எவ்விடயங்கள் தொடர்பில் இருதரப்பும் கலந்து உரையாடி இருக்கின்றனர்.

இந்திய இலங்கை உறவுகள் பலப்படுத்தும். மற்றும் மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களின் மேம்பாட்டிற்கும் , இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு குறித்தும் , இந்தியா தூதர் கேட்டறிந்து கொண்டார்.

200 வருடங்களுக்கு மேலாக ,மலையகத்தில் வாழும் இந்திய பூர்விக குடிமக்கள், தொடர்ந்தும் வறுமை நிலையில் காணப்படுகின்றனர்.

இவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாக இருந்தால். நிச்சயமாக இந்தியா உதவி செய்ய வேண்டும்.

ஆனால் அந்த மக்கள் இதுவரை இலங்கையினுடைய குடியுரிமையை கூட. பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

கொத்தடிமைகளாக மலையகத்தில் வாழும் ,மலைவாழ் தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டியது இந்தியாவின் கடமையாகும்.

ஆனால் தமது கடமையிலிருந்து இந்திய தவறி வருவதும், இலங்கை அரசுக்கு முண்டு கொடுத்து வருவதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குற விடயம்.

திடீரென ஜீவன் தொண்டமான சந்தித்து, இந்திய தூதர் பேசிய விடயம் ,உள்ளக விளையாட்டுகளின் ஒரு சதுரங்க ஆட்டமாக பார்க்கப்படுகிறது.

இலங்கை அரசியல்வாதிகளை இந்தியா தனது கையில் வைத்து விரலை ஆட்டுகிறதா என்பதுதான், இந்த பேச்சுக்களின் ஊடாக வெளி வருகின்ற விடயமாக உள்ளது .

போதை ஊசி வாலிபன் பலி
Posted in இலங்கை செய்திகள்

போதை ஊசி வாலிபன் பலி

போதை ஊசி வாலிபன் பலி

போதை ஊசி வாலிபன் பலி யாழ்ப்பாணம் சாவகச்சேரி நடந்த பரிதாப சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

யாழ்ப்பாணத்தில் ஹீரோயின் போதைப் பொருளை ஊசி மூலம் உட்செலுத்திய 27 வயதுடைய வாலிபன் ஒருவர், கடந்த தினம் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் 15ம் தேதி காணாமல் போன நிலையில் ,உறவினர்கள் அவரைத் தேடிய பொழுது ,அவர் ஊருக்கு அருகிலிருந்து சுடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்திய போது , போதை வஸ்து ஊசி மூலம் ஏற்படுத்தப்பட்டதை கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் வாலிபங்கள் மத்தியில் போதவஸ்து , அதிக பாவனையும் , அதனால் அவர்கள் வாழ்வைச் சீரழித்து, அவன் உயிரைப் பறிக்கின்ற இழிநிலை நடவடிக்கை தொடர்கிறது.

சிங்கள மேலாதிக்க பௌத்த அடக்குமுறை யாழர்களினால் ,தமிழர் சிந்தனை தடுக்கப்பட்டு ,அவர்கள் சிந்தனை திசை திருப்பப்படும் ,நடவடிக்கை ஒன்றாக இந்த போதை வஸ்து பாவனை காணப்படுகிறது.

பாடசாலைகள் முதல் வர்த்தகங்கள் அனைத்து பகுதிகளிலும். இந்த போதை வஸ்து திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்படுகிறது.

இதனை விற்பனை செய்பவர் .ஆளுகின்ற அரசியல்வாதிகள் தான் என்பது மக்கள் அறிந்ததே.

இவ்வாறு போதைகளை பயன்படுத்தி வாலிபங்களை .திசை திருப்பி படுகொலை செய்வது என்பதே , இதுவும் ஒரு இனப்படுகொலை தான் என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது.

போதை வஸ்துக்கு எதிராக மக்கள் விழித்து எழாத வரைக்கும் ,அதனை மக்கள் எதிர்கொள்ளாத வரைக்கும், இவ்வாறான இளம் இறப்புகளை தடுக்க முடியாது .மக்கள் சீரழிவுகளை தடுக்க முடியாது என்பதே நியமாகிறது .

பேருந்து விபத்தை மூடிமறைத்து அனுராஅரசு
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து விபத்தை மூடிமறைத்து அனுராஅரசு

பேருந்து விபத்தை மூடிமறைத்து அனுராஅரசு

பேருந்து விபத்தை மூடிமறைத்து அனுராஅரசு அரசின் சதி நடவடிக்கை தற்பொழுது மக்கள் மத்தியில் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இறங்கொடை பகுதியில் நடந்த பேருத்து விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்த விபத்தில் 22 மக்கள் பலியாகி 44 மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.

தொடர்ந்து இடம் பெற்ற விசாரணைகளில் ,பேருந்து இயந்திர கோளாறு காரணமாக சேதமாகவில்லை எனவும் ,ஆபத்தான நிலையில் அந்த பேருந்தை சாரதி ஓட்டி செல்லவில்லை எனவும், அங்கிருந்த கமரா மூலம் அவதானிக்க முடிந்ததாக இப்படி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இடத்தில் வேகமாக வாகனத்தை ஓட்டி செல்லவில்லை ,இயந்திர கோளாறு ஏற்படவில்லை. ,அப்படி என்றால் இந்த விபத்து எப்படி இடம்பெற்றது என்பதற்கு பதில் இல்லை.

ஆக இதனூடாக இறம்பொடை பேருந்து விபத்து பலிகளை மறைக்கவும் ,மக்கள் கொந்தளிப்பை தடுக்கவும், இவ்வாறு மூடி மறைப்பு நாடகத்தை அனுரா ஆட்சி கட்சிதமாக நடத்தி இருக்கிறது.

தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்ள ,தமது ஆட்சி அதிகாரத்தில் நிலவுகின்ற, இவ்வாறான விபத்துக்களை மூடி மறைக்க ,வேண்டிய நெருக்கத்தில் ஆளும் அனுரா அரசு உள்ளதை இவை காண்பிக்கிறது.

மக்களை திசை திருப்பவே ஆளும் பிரதமர் விசேட தளத்துக்கு விரைந்து சென்றதும் பின்னர் ,பத்து மில்லியன் என அறிவித்ததும் கண்துடைப்பு நாடகமாகிறது.

அப்பாவி மக்கள் உயிரோடு விளையாடு அனுரா அரசின் இந்த கபட நாடகம் ,மிக ஆபத்தான ஒன்று என மக்கள்குற்றம் சுமத்துகின்றனர் .

மாகாண சபையில் வென்று விட வேண்டுமாக இருந்தால் .மக்கள் மனங்களை குளிர்விக்க வேண்டும்.

அதற்காகவே இப்பொழுது 10 மில்லியன் நாடகமும் ,பேருந்து இயந்திரக் கோளாறு ஏற்படவில்லை எனவும், சாரதி ஆபத்தான நிலையில் ஓட்டி செல்லவில்லை என்பதையும் அரசு அறிவித்துள்ளது.

பேருந்துகளின் மானத்தை காப்பதற்காக ,இப்படி அடித்து விட்டு இருக்கிறது ,விசாரணை குழு .

எல்லாம் ஒரு நாடகம்தான் ,உருட்டு அனுரா ஆட்சி என்பது ,இந்த உருட்டில் இருந்து தெரிகிறது.

எரிந்த வீடு இளம்பெண் கருகிப்பலி
Posted in இலங்கை செய்திகள்

எரிந்த வீடு இளம்பெண் கருகிப்பலி

எரிந்த வீடு இளம்பெண் கருகிப்பலி

எரிந்த வீடு இளம்பெண் கருகிப்பலி, அதிர்ச்சிகரமான சம்பவம் கொட்டவா ரூட்மேல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

திடீரென வீட்டில் தீப்பற்றியதை அடுத்து அவ்வேளை அங்கிருந்த 19 வயது இளம்பொண் அந்த தீயில் கருகி பலியான பரிதாபச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீப்பற்றல் நடவடிக்கை எடுத்து விரைந்து சென்ற மீட்பு குழு மற்றும் அயலவர்கள் வீட்டு தீயை அணைத்த பொழுதும் பெண்ணை காப்பாற்ற முடியவில்லை.

இந்த வீட்டில் இந்த தீ பற்றல் சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பாக, தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எரிவாயு காரணமாக அல்லது மின்சார காசிவின் காரணமாக ,இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகம் நிலவுகிறது.

எனினும் குற்றப் புலனாய் பிரிவுகள், சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றனர்.

விசாரணையின் முடிவிலேயே இந்த தீப் பற்றல் சம்பவம் என்பது ,விபத்து சம்பவமா ,அல்லது திட்டமிடப்பட்ட படுகொலை சம்பவமா என்பது தெரியவரும் என தெரிவிக்க படுகிறது .

இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான தீ விபத்து சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.

எரிவாய்வு சிலிண்டர்கள் வெடித்தும், மின்சார காசிவின் காரணமாக பல உயிர்கள் பறிபோய் இருக்கின்றன.

இதுபோன்று இந்த அப்பாவி 19 வயது சிறுமியும் ,தீயில் கருகி பலியான சம்பவம் இடம்பெற்று இருக்கலாம், என்கின்ற சந்தேகம் மத்தியில் காணப்படுகிறது.

விசாரணையின் முடிவிலேயே ,காவல்துறை என்ன நடந்தது என்பதை அறியத் தருவார்கள் என்பதாக மக்கள் பேசுகிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் மகளுக்கு நஞ்சு கொடுத்த தந்தை
Posted in இலங்கை செய்திகள்

மகளுக்கு நஞ்சு கொடுத்த தந்தை

மகளுக்கு நஞ்சு கொடுத்த தந்தை

மகளுக்கு நஞ்சு கொடுத்த தந்தை யாழ்ப்பாணத்தில் தனது மகளுக்கு நஞ்சூட்டிய தந்தையை என்னவென சொல்வது.

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் தனது பிள்ளைக்கு

உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறதாகவும் இளவாலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

6 வயதான சிறுமி உணவு உட்கொண்ட பின் வாயிலிருந்து நுரை வெளியேறியுள்ளது.

குடும்பத்தினர் பிள்ளையை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

சிறுமிக்கு தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

உணவூட்டிய தந்தை வீட்டை விட்டு தலைமறைவாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தந்தையை கைது செய்ய இளவாலை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எத்தனையோ பெற்றோர் குழந்தைப் பேறு இன்றி தவிக்கும் இக் காலத்தில் இவ்வாறான தந்தையும் இவ்வுலகில் இருக்கின்றார்கள் என்பது ஆச்சரியம் தான். அதிலும் யாழ்ப்பாணத்தில் என நினைக்கையில் நெஞ்சே பதறுகின்றது.

பொலிஸ் விசாரணையின்போது என்ன நடந்தது என்பதை குடும்பத்தினர் இதுவரையில் தெரிவிக்கவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

என்னதான் இருந்தாலும் அந்த 6 வயது சிறுமிக்கு ஒரு தந்தை நஞ்சை ஊட்டிவிட எப்படி மனம் வந்தது? அந்த பிள்ளைக்கு என்ன தான் தெரியும் இந்த மழலை வயதில் என பிரதேச மக்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

ஆசிரியர் கைது மாணவி துஷ்பிரயோகம்
Posted in இலங்கை செய்திகள்

ஆசிரியர் கைது மாணவி துஷ்பிரயோகம்

ஆசிரியர் கைது மாணவி துஷ்பிரயோகம்

ஆசிரியர் கைது மாணவி துஷ்பிரயோகம் என மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன .

தெவி நிவார பகுதியில் உள்ள பாடசாலை ஆங்கில ஆசிரியர் ஒருவர், மாணவி ஒருவரை பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கினார் என்கின்றகுற்ற சாட்டின் அடிப்படையில் ,தற்போது சிறுவர் மற்றும் மகளிர் பணியாகத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய இந்த ஆசிரியர். அங்கு கல்வி கற்ற ஒரு மாணவியுடன் நெருங்கி பழகினார் என்கின்ற அடிப்படையில், இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சமீப காலங்களாக பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் ,தவறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதான குற்றச்சாட்டுக்கள் ,அதிகரித்து வரும் இடையில் இந்த கைது இடம் பெற்றுள்ளது.

இந்த கைதின் பின்புலத்தில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது ஆசிரியர்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட சதியா .அல்லது உண்மையில் இந்த குற்றச்சாட்டுக்கள் இடம்பெறுகின்றனவா .என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.

தொடர்ந்தும் அதிகரித்து வரும் ,இவ்வாறான குற்றச்சாட்டுகள் சம்பவங்களினால் பெற்றவர்கள் அச்ச நிலையில் காணப்படுகின்றனர் .

இதனை தடுப்பதற்கு கல்வி அமைச்சு சீரான ஒரு நடவடிக்கை மேற்கொண்டால் மட்டும்தான் ,இவ்வாறு நடவடிக்கையை தடுக்க முடியும்.

இலங்கையில் மாணவர்களை நெறிப்படுத்த வேண்டுமாக இருந்தால் ,சீரிய வழியில் செல்ல வேண்டுமாக இருந்தால் ,கல்வி அமைச்சு தகுந்த நெருக்கமான ,நடவடிக்கை மேற்கொண்டால் மட்டும்தான், இவ்விதமான சம்பவங்கள் தடுக்கப்படும்.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படுபவர்கள், ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டு ,அவர்கள் அரச உத்தியோகத்தில் ஈடுபட முடியாது என்ற சட்டம் ,அமல்படுத்தப்பட்டால் மட்டும்தான் இதனை தடுக்க முடியும்.

ஆனால் கல்வி அமைச்சு ஆளு அரசுகள் இதனை செய்யுமா என்பதுதான் இன்றைய கேள்வியாக உள்ளது .

வவுனியாவில் வீடு தோற்க காரணம் இதுதான்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் வீடுதோற்க காரணம் இதுதான்

வவுனியாவில் வீடுதோற்க காரணம் இதுதான்

வவுனியாவில் வீடுதோற்க காரணம் இதுதான் உள்ளூராட்சி சபைத் தேர்தல் வவுனியாவில் வீடு தோற்க காரணம் என்ன என இலங்கை தமிழரசு கட்சி முன்னாள் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாநகரசபையில் தமிழரசுக் கட்சி தோல்வியடைந்தமைக்கு சத்தியலிங்கத்தின் செயற்பாடே காரணம். அவர் அரசியலை நாகரிகமாக செய்யவில்லை

தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அவரது அலுவலகத்தில் நேற்று (12.05) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நெருங்கிக் கொணடிருக்கின்றோம். இறுதி யுத்ததில் சிறிலங்கா இராணுவத்தால் கொத்துக் கொத்தாக பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்பது பகிரங்கமான உண்மை.

விடுதலைப் புலிகளின் யுத்தம் மௌனிக்கப்படுவதற்கு முன்னர் எமது மக்களை முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்த்தியவர்கள் வெளிநாட்டு அரசுகள் தான். எனவே அவர்களுக்கு சகலதும் தெரியும்.

ஐ.நா அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள்

எனவே, ஐ.நா அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் இதற்கு பொறுப்புச் சொல்ல வேண்டும். நயவஞ்சக தனமாக எமது மக்களை நம்ப வைத்து, இனவழிப்பு நடந்தது.

இலங்கையில் தமிழருக்கு எதிராக இனவழிப்பு நடந்தது என்பதை பகிரங்கமாக வெளிபடுத்தி கனடாவில் நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பிரன்டன் நகர மேயர் அந்த நிகழ்சியை நடத்தியுள்ளார். இது எமது இனத்தின் முதலாவது மைல்கல் என்று கூறலாம். யுத்தம் மௌனிக்கப்பட்ட பின் கொல்லப்பட்டவர்கள் அதிகம்.

சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர். காணாமல் போகச் செய்யப்பட்டனர். அதேபோல் காயமடைந்து இருந்தவர்கள் முள்ளிவாய்காலில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டார்கள்.

முகாம்களில் இருந்தவர்களில் பலர் காணாமல் செய்யப்பட்டனர். கொல்லப்பட்டனர்.

இனவழிப்பு நடக்கவில்லை

இதற்கு சாட்சிகள் ஏராளம். இப்படி நடந்த இனவழிப்பை எமது தமிழர்களில் இருந்து இனவழிப்பு நடக்கவில்லை. போர்க்குற்றம் தான் நடந்தது என ஐ.நா வர எடுத்துச் சென்று மாற்று கதைகளை சொல்லியிருந்தார்கள்.

கனேடிய அரசு கூறுகிறது இனவழிப்பு நடந்தது இதை ஏற்றுக் கொள்ளாதாவர்கள் கனடாவில் இருந்து வெளியேறுங்கள் என.

நாம் கூறுகின்றேன் தமிழரசுக் கட்சியில் தலைமைப் பதவியில் இருப்பவர்கள் இனவழிப்பு நடக்கவில்லை என கடந்த காலங்களில் கூறியுள்ளார்கள்.

தமிழரசுக் கட்சியில் நிர்வாகப் பொறுப்பு

40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டும் எங்களுடன் இருந்த கோடரி காம்புகளால் நீதி கிடைக்கவில்லை. தமிழரசுக் கட்சியில் நிர்வாகப் பொறுப்புக்களில் இருந்து இனவழிப்பு நடக்கவில்லை எனக் கூறியவர்கள் வெளியேற வேண்டும்.

தமிழரசுக் கட்சி மட்டும் தான் எமது போராட்டத்தை கடந்த வேண்டியவர்கள். கனடா போன்று ஒவ்வொரு நாட்டிலும் நினைவுத் தூபி அமைப்பதற்கான சந்தர்ப்பங்கள் வந்துள்ள நிலையில்

இனவழிப்பு நடக்க வில்லை என்று கூறியவர்கள் தமிழர் தேசத்தில் அரசியல் செய்யாது வெளியேறுங்கள். எங்களை வெளியேற்றி விட்டு நீங்கள் குளிர் காய இடமளிக்க முடியாது.

சபைகளை கைப்பற்றி ஆட்சி செய்தால் எல்லாம் கிடைத்து விடும் என நினைகிறார்கள். அதுவல்ல. தேசிய மக்கள் சக்தி எமது பொது எதிரி. எதிரியை எப்பவும் வீழத்தலாம்.

அவர்கள் தானாகவே வெளியேறுவார்கள். தமிழரசுக் கட்சியில் ஒரு சிலர் எடுத்த தீர்மானஙகளால் தான் அவர்களுக்கு இடம் கிடைத்தது. சட்டத்தரணிகளால் வழக்கு போடப்பட்டு தான் தமிழரசுக் கட்சி சின்னாபின்னமாகியுளளது.

முன்னாள் வடமாகாண சபை

குடத்தனையில் சுமந்திரன் தான் வாக்களித்து விட்டதாக கை காட்டுவதைப் பார்த்தேன். முன்னாள் வடமாகாண சபை உறுப்பனர் சுகிர்தனுக்கும் அது தான் வட்டாரம்.

இருவரும் இருந்தும் கூட அந்த வட்டாரத்தில் அவர்களால் வெல்ல முடியவில்லை. அதேபோல் வவுனியாவில் கடந்த முறை 8 ஆசனங்களை நாங்கள் மாநகரசபையில் பெற்றிருந்தோம்.

இந்த முறை ஒன்று கூட இல்லாமல் போயுள்ளது. தமிழரசுக் கட்சியின் செயற்பாடே அதற்கு காரணம். சத்தியலிங்கத்தின் செயற்பாடு அதற்கு காரணமாக அமைந்தது. அரசியலை நாகரிகமாக அவா செய்யவில்லை.

அதனால் மக்கள் சரியான பாடத்தை கொடுத்துள்ளார்கள். உங்களது தொகுதிகளில் தோற்று விட்டு ஏனைய தொகுதிகைளை வைத்து நாம் வென்று விட்டோம் என மார்தட்ட வேண்டாம்.

அதேபோல் மட்டக்களப்பில் கோட்டைக்கல்லாறு தோற்கடிக்கப்பட்டுள்ளது. புளியந்தீவு தோல்வி. குலநாயகத்தில் வல்வெட்டித்துறை ஒட்டுமொத்த தொகுதியும் தோல்வி.

முல்லைத்தீவு நகரம் ரவிகரன், பீற்றர் இளஞ்செழியன் சேர்ந்து வேலை செய்தார்கள் தோல்வி. ரவிகரன் நெடுக நடந்து திரியும் கொக்கிளாய் பிரதேசம் தேசிய மக்கள் சக்தியின் சிங்கள உறுப்பினா வென்றுள்ளார்.

சிறிதரன் ஒட்டுமொத்தமமாக வென்றுள்ளார். மண்முனை சிறிநேசனின் வட்டாம் 10 இல் 8 ஐ வென்றுள்ளார். நேரடியக ஆட்சியமைக்க கூடியதாகவுள்ளது.

புதுக்குடியிருப்பு எனது தொகுதி அங்கு 12 இல் 11 வென்றுள்ளோம். அந்த 11 பேரும் நான் இருக்கும் போது தெரிவு செய்யப்பட்டவர்கள். நல்ல வேளை அவர்களை மாற்றவில்லை. ஒருவரை என்னுடைய வட்டாரத்தில் மாற்றி போட்டார்கள்.

அவர் தோல்வி. வெற்றிக்கு காரணமானவர்கள் தமிழ் தேசியத்துடன் பயணித்தவர்கள். மற்றவர்களுக்கு நலல விடயத்தை மக்கள் சொல்லியுளளார்கள். இதன்பின்னாவது அவர்கள் திருந்தி நடக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

கண்டியிலும் பஸ் விபத்து 20 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

கண்டியிலும் பஸ்விபத்து 20பேர் காயம்

கண்டியிலும் பஸ்விபத்து 20பேர் காயம்

கண்டியிலும் பஸ்விபத்து 20பேர் காயம் கண்டி, அலதெனிய, யட்டியானகலவில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளார்கள். இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் , கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகலை நோக்கி பயணித்த போக்குவரத்து சபைக்கு சொந்தமான ,

பேரூந்து ஒன்று விபத்தில் சிக்கி தலைகீழாக கவிழ்ந்ததில் பச்சிளம் குழந்தைகள் உட்பட 21க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

அதேபோன்று, ஹட்டன் வீதியில் 20 அடி பள்ளத்தில் கார் ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் கரோலினா தோட்டம் பகுதியில் நேற்று (11) காலை குடும்பமொன்று பயணித்த காரொன்று வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வெல்லம்பிட்டியவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்த தாய், தந்தை, மகள் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

ஒரே பிரதேசத்தில் தொடர்ந்து ஒரே நாளில் அடுத்தடுத்து

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் தொடர் விபத்துகளினால் மக்கள் சொல்லானென்னா துயரை சந்தித்து வருகின்றனர்.

இவ்வாறு வீதி விபத்திலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள என்ன வழிவகை உள்ளது என்பதே கேள்வியாக உள்ளது.

நாள்தோறும் இலங்கையில் இடம்பெறுகின்ற விபத்தில் ,நால்வர் பலியாகி எட்டுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் கடுமையாகும் விதிமுறைகள்
Posted in உலக செய்திகள்

பிரித்தானியாவில் கடுமையாகும் விதிமுறைகள்

பிரித்தானியாவில் கடுமையாகும் விதிமுறைகள்

பிரித்தானியாவில் கடுமையாகும் விதிமுறைகள் இங்கிலாந்தில் பிரித்தானியாவில் குடியேற்ற விதிமுறைகளை மிகவும் கடுமையாக்க திட்டமிடப்பட்டு வருகின்றது.

நிகர இடம்பெயர்வை குறைப்பதற்காக குடியேற்ற விதிமுறைகளை கடுமையாக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.

நிகர இடம்பெயர்வு என்பது பிரித்தானியாவுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கைக்கும், வெளியேறும் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.

குடியேற்ற விதிமுறைகளின் படி, பிரித்தானியாவில் குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்க 10 வருடங்கள் வசித்திருப்பது கட்டாயம் என குறிப்பிட்டப்பட்டுள்ளது.

அதன்படி, ஐந்து ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு விசாவுக்கும் புதிய ஆங்கில மொழி அறிவுக்கு மேலதிகமாக இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டவுள்ளது.

நிகர இடம்பெயர்வை குறைப்பதற்கான சீர்திருத்தங்களை பிரித்தானியா பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் இன்று அறிவிப்பார்.

2020 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியபோது, நிகர இடம்பெயர்வு அதிகரித்தது.

2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் 903,000 ஐ எட்டியது. அதன்பின்னர், 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 728,000 ஆகக் குறைந்தது.

ஆனால், 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான பிரெக்ஸிட்டு ஒப்பந்தத்துக்கு முந்தைய அதிகபட்சமான 329,000 ஐ விட அதிகமாக உள்ளது.

சட்டப்பூர்வ இடம்பெயர்வு மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை சமாளிக்க பிரித்தானியா அரசாங்கம் அழுத்தத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாவது மாவீரன் சங்கர் தந்தைமரணம்
Posted in இலங்கை செய்திகள்

முதலாவது மாவீரன் சங்கர் தந்தைமரணம்

முதலாவது மாவீரன் சங்கர் தந்தைமரணம்

முதலாவது மாவீரன் சங்கர் தந்தைமரணம் ,தமிழீழ விடுதலை புலிகளின் போராட்டவரலாற்றின் முதலாவது மாவீரன் சங்கர் அவர்களின் தந்தையார் லண்டனில் மரணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

லண்டனில் வசித்து வந்த முதலாவது மாவீரன் சங்கர் அவர்களின் தந்தையார் தற்பொழுது உடல் சுகவீன காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதலாவது வித்தாக சங்கர் அவர்கள் வீரமரணம் அடைந்திருந்தார்.

அவரை தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான விடுதலை மறவர்கள் தங்கள் மண்ணுக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்தார்கள்.

தற்பொழுது சங்கருடைய தந்தை மரணமானதை அடுத்து லண்டன் வாழ் தமிழ் மக்கள் ,அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு தயாராகி வருகிறார்கள்.

விடுதலை இன்று வீரம் இழந்து போயிருந்தாலும் ,ஆனால் அந்தக் காலத்தில் எங்களுக்காக நின்ற அரும் பெரும் தலைவர்களையும், தலைமைகளையும் மாமர வீரர்களையம் மக்கள் மறக்கவில்லை.

லண்டன் பகுதியில் இவரது இறுதி நிகழ்வு தொடர்பான விடயங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் ,அவ்வளை பல நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு திரண்டு தமது இறுதி நிகழ்வை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீரத்தின் விளைநிலமாகவும், விடுதலையின் கனவாகவும் ,அண்ணனுக்கு தம்பியாகவும் ,தமிழின போருக்கு துணையாக நின்று களமாடி, வீரமரணம் அடைந்த சங்கர் அவர்களின் ,தந்தையை நினைவு கூறுவோம் .

முதலாவது மாவீரன் சங்கர் தந்தைமரணம்

தமிழர்களை ஒன்று திரண்டு வருக விரைவில் மேலதிக விபரம் இணைக்கப்படும்.

இந்த மாமற வீரன் சங்கர், கடல் புலிகளின் தளபதி சூசை அவர்களுடைய உறவுக்காரர் என்பதை இங்கே குறிப்பிடத்தக்கது .

ஆயுதங்களைக் கைவிடும் குருதிஷ் போராளிகள்
Posted in உலக செய்திகள்

ஆயுதங்களைக் கைவிடும் குருதிஷ் போராளிகள்

ஆயுதங்களைக் கைவிடும் குருதிஷ் போராளிகள்

ஆயுதங்களைக் கைவிடும் குருதிஷ் போராளிகள் அதிரடி அரபிப்போ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கிக்கு எதிராக கட மோதல்களில் ஈடுபட்டு வந்திருந்த ஈராக் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் குருதிஸ்தான் போராளிகள் அமைப்பு ,தற்பொழுது ஆயுதங்களை கைவிடுவதாக அறிவித்துள்ளனர் .

துருக்கிய சிறையில் உள்ள குருதிஷ் போராளிகளின் தலைவர் அப்துல்லா உயலானை விடுதலை செய்ய துருக்கி தீர்மானித்துள்ளது.

அவரை விடுதலை செய்ய வேண்டுமாக இருந்தால் .நிச்சயமாக ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டுமென துருக்கி அழுத்தம் கொடுத்தது.

அதனை அடுத்து தற்பொழுது குருதிஷ் போராளிகள் ஆயுதத்தை கைவிட்டு ஜனநாயக அரசியலுக்கு திரும்புவதாக அறிவித்துள்ளனர்.

இதனை ஏற்றுக் கொள்கின்ற துருக்கி விரைவில். அதனுடைய தலைவரை கைவிடும் எனவும் .அதன் பின்னர் அவர்கள் அரசியல் கட்சியாக பரிணாமம் பெறுவார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது .

தமிழீழ விடுதலை புலிகளை போன்று பல போராட்டங்களையும் தியாகங்களையும் ,அர்ப்பணிப்புகளையும் செய்து ,தமது மக்களுக்காக போராடி வருகிறது கூர்திஸ் போராளிகள் அமைப்பு.

அவ்வாறான பி கே கே என அழைக்கப்படுகின்ற குறிஸ்தான் போராளிகள் ,ஆயுத ஒப்படைப்பு சர்வதேச பத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆயுத ஒப்படைப்பை நிகழ்த்த மறுத்தால் .அந்த அமைப்பானது முற்று முழுதாக அழியும் நிலை காணப்படுகிறது.

விடுதலைப் புலிகளுக்கும் இவ்வாறான சமிக்கை விடப்பட்டு ,இறுதி நேரத்தில் ஆயுத ஒப்படைப்புக்கு வந்த பொழுது யுத்தம் முடிந்திருந்தது.

உலக நாடுகளில் அந்த இயக்கங்கள் தங்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால் ,காலத்திற்கு ஏற்ப தம்மை உருமாற்றி பயணிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படுவது தவிர்க்க முடியாதது தான்.

காசாவில் 25 மக்கள் படுகொலை
Posted in உலக செய்திகள்

காசாவில் 25 மக்கள் படுகொலை

காசாவில் 25 மக்கள் படுகொலை

காசாவில் 25 மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்ச்சு இன்று தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் பாலஸ்தீனம் காசா பகுதியில் தங்கியுள்ள மக்கள் மீது ,இஸ்திரேலியா ராணுவத்தினர் ,நடத்திய மிலேச்ச தனமான தாக்குதலில் 25 அப்பாவிப் பொது மக்கள் பலியாகி உள்ளனர்.

மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளை இழந்து தற்காலிக கூடாரங்கள் வீதிகளில் தங்கி வாழும் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன் பொழுதே அங்கிருந்த மக்கள் 25 பேர் உடல் சிதறி பலியாகினர் .

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற ,நீண்ட யுத்தத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட மக்கள் ,இதுவரை பலியாகியம் , ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

5 லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள் அடித்து உடைத்து நாசமாக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது .

பாலஸ்தீனம் இன்று சுடுகாடாக காட்சியளிக்கிறது .

உலக நாடுகள் இஸ்ரேல் நடத்தும் இந்த இனப்படுகொலையை ,வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளது கவலையை தருகிறது.

ட்ரம்புக்கு கட்டார் வழங்கிய உல்லாசவிமானம்
Posted in உலக செய்திகள்

ட்ரம்புக்கு கட்டார் வழங்கிய உல்லாசவிமானம்

ட்ரம்புக்கு கட்டார் வழங்கிய உல்லாசவிமானம்

ட்ரம்புக்கு கட்டார் வழங்கிய உல்லாசவிமானம், தொடர்பாக தற்பொழுது சர்ச்சை எழுந்துள்ளது.

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு. கட்டார் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான ,சொகுசு ஆடம்பர சூப்பர் லக்சரி போஜிங் 747 -1ஒன்றை வழங்கி உள்ளது.

கட்டார் நாடு அமெரிக்கா ஜனாதிபதிக்கு க்கு இதனை அன்பளிப்பாக வழங்கி அவருடன் பல இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிய வருகிறது.

மிகப்பெரும் தொழிலதிபராக இருக்கக்கூடிய .டொனால்ட் ட்ரம்புக்கு. கட்டார் நாடு இந்த விமானத்தை வழங்குகிறது என்றால் ,ஏதோ உள்ளகத்தில் ஒரு டீல் இடம் பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த விடயம் தற்பொழுது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிக சொகுசு விமானத்தை இலவசமாக அன்பளிப்பாக .அமெரிக்காவிற்கு இந்த கட்டார் நாடு வழங்குகிறது என்றால், அது ஏன் என்ற கேள்விதான் இப்போது எழுப்பப்படுகிறது.

அரேபிய தேசத்தில் கட்டார் மிகப்பெரும் செல்வந்த நாடாக உள்ளது .

அவ்வாறான நிலையில் ஆளுகின்ற அமெரிக்கா ஜனாதிபதிக்கு ,இந்த விமானம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது, மிகப்பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் இந்த விமான விடயம் ,அமெரிக்கா அரசியலில் புயலை கிளப்பும் என நம்பப்படுகிறது.

வாழ்ந்தால் இப்படி வாழனும் இதுக்குத்தானே ஐயா ஆசைப்பட்டாய் ஆமாங்க சார்.

என்னவனே
Posted in கவிதைகள்

என்னவனே

என்னவனே.!!
உனக்காக நானும்
எனக்காக நீயும்
மடல் எழுதியது இல்லை
ஆனால் இன்று ..?

உனக்காக என் மனக்குமுறளை ..
அனுப்புவதில் எனக்கு உடன்பாடு இல்லை
இதுந்தும் இதோ…

என்னை நீ இதுவரை புரியாத
காரணம் நான் அறியேன்..
நீ இனி அறிய
எத்தனிக்கும் போது
உன்னருகிள் நான்
இருக்கப்போவதில்லை ..

உனக்காக நான் சிரித்ததும்
உண்டு ..
உனக்காக நான் அழுததும்
உண்டு ..
ஏன்
உனக்காக நான் என்னை
தந்ததும் உண்டு ..
ஆனால் எனக்காக
நீ …
இன்னொருத்தனோடு சேர்ந்து மட்டும் பார்த்தாய்
அன்றே இரண்டான
என் இதயம்
இன்னமும் ரண களமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது..

நீ என்னை இப்படி தான் நேசிப்பாய் என்று
தெரிந்து இருந்தால் ..
நம் காதலை
அன்றே கருவில்
கருக்கலைப்பு செய்திருப்பேன் .

உன்னை தேடும் என்
மனசுக்கு எதை நான் சொல்லி புரிய வைப்பேன்
நீ என்மேல் கொண்டது
காதல் அல்ல..
வெறும் ஆசை மட்டும் தான் என..
காத்து இருக்கிறேன் ..
உனக்காக அல்ல
காலம் உனக்கு
என்னை யார் என்று
உணர்த்தும் வரை ..
நீ தொலைத்த நான் ..
உன்னவள்
லண்டன் !