Tag: பிரித்தானியா
உயிர் தப்பிய பயணி கூறியது என்ன
உயிர் தப்பிய பயணி கூறியது என்ன
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரே பிரிட்டன் பிரஜையான விஷ்வாஸ் குமார் ரமேஷ், “நான் எப்படி உயிரோட இருக்கிறேன் எனக்கே தெரியவில்லை” என
விமானம் தரையிறங்கிய சில வினாடிகள் பின்னர் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் கூறினார் என அவரது சகோதரர் ஸ்கை நியூஸிற்கு தெரிவித்துள்ளார்.
விஷ்வாஸ் குமார் ரமேஷ், வியாழக்கிழமை பிற்பகலில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புறப்பட்ட உடனேயே கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளான
ஏர் இந்தியா விமானம் 171-இல் உயிர்தப்பிய ஒரே பயணியாகக் கருதப்படுகிறார்.
விபத்துக்குப் பிறகு விஷ்வாஸுடன் பேச முடிந்ததாக உறவினர்கள் உறுதிப்படுத்தினார்கள். ஆனால் அதே விமானத்தில் இருந்திருக்கக் கூடிய அவரது சகோதரருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.
லெஸ்டரில் இருந்து பேசும் அவரது சகோதரர் நயன், ஸ்கை நியூஸின் ஷமான் ஃப்ரீமன்-பவலிடம் கூறியதாவது:
விமானம் எயார்வேயில் இருந்தபோது அவர்களது தந்தை விஷ்வாஸுடன் பேசிக்கொண்டிருந்ததாக தெரிவித்தார்.
“அப்பா அவரை அழைத்தார்,” என்று 27 வயதான நயன் கூறினார்.
“விஷ்வாஸ், ‘மீண்டும் சீக்கிரமே புறப்பட போகிறோம்’ என்றார்.”
இரு நிமிடங்களுக்குப் பிறகு, விபத்து நிகழ்ந்ததும், விமானம் விழுந்து விட்டதாகவும், அவர் உயிரோடு இருப்பதாகவும் வீடியோ அழைப்பு மூலம் அவர்களது தந்தைக்கு தெரிவித்தார்.
“விமானம் விழுந்தது… எனக்கு என் தம்பி எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை. வேறு பயணிகள் எவரையும் பார்க்க முடியவில்லை. நான் எப்படி உயிரோட இருக்கிறேன்,
எப்படி விமானத்திலிருந்து வெளியே வந்தேன் எனக்கே தெரியவில்லை” என அவர் கூறியதாக நயன் தெரிவித்தார்.
அகமதாபாத் காவல்துறை அதிகாரி விதி சவுதரி கூறியதாவது, விஷ்வாஸ் 11A என்ற இருக்கையில் இருந்தார்.
அது அவசர வெளிச்செலுத்தும் கதவின் அருகில் இருந்தது. அவர் அந்த கதவின் வழியாக வெளியே குதித்து தப்பியுள்ளதாகவும் கூறினார்.
“தொடங்கிய 30 வினாடிகளுக்குப் பிறகு ஒரு பெரிய சத்தம் கேட்டது,” என விஷ்வாஸ் Hindustan Times செய்திதழுக்கு தெரிவித்தார்.
“அது அனைத்தும் நொடிகளில் நடந்தது. என் மார்பிலும், கண்களிலும், கால்களிலும் காயங்கள் ஏற்பட்டன,” என்றும் கூறினார்.
“நான் எழுந்தபோது, என் சுற்றிலும் சடலங்கள் இருந்தன. நான் பயந்து விட்டேன். எழுந்து ஓடினேன். விமானத்தின் துண்டுகள் எனக்கு எல்லாம் சுற்றிலும் இருந்தன. யாரோ என்னை பிடித்து ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.”
Sky News இந்தியா செய்தியாளர் நெவிலே லசரஸ், மருத்துவமனையில் விஷ்வாஸை நேரில் சந்தித்து பேசினார். அப்போது விஷ்வாஸ், “நான் நன்றாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் கடுமையாகும் விதிமுறைகள்
பிரித்தானியாவில் கடுமையாகும் விதிமுறைகள்
பிரித்தானியாவில் கடுமையாகும் விதிமுறைகள் இங்கிலாந்தில் பிரித்தானியாவில் குடியேற்ற விதிமுறைகளை மிகவும் கடுமையாக்க திட்டமிடப்பட்டு வருகின்றது.
நிகர இடம்பெயர்வை குறைப்பதற்காக குடியேற்ற விதிமுறைகளை கடுமையாக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.
நிகர இடம்பெயர்வு என்பது பிரித்தானியாவுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கைக்கும், வெளியேறும் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.
குடியேற்ற விதிமுறைகளின் படி, பிரித்தானியாவில் குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்க 10 வருடங்கள் வசித்திருப்பது கட்டாயம் என குறிப்பிட்டப்பட்டுள்ளது.
அதன்படி, ஐந்து ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விசாவுக்கும் புதிய ஆங்கில மொழி அறிவுக்கு மேலதிகமாக இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டவுள்ளது.
நிகர இடம்பெயர்வை குறைப்பதற்கான சீர்திருத்தங்களை பிரித்தானியா பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் இன்று அறிவிப்பார்.
2020 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியபோது, நிகர இடம்பெயர்வு அதிகரித்தது.
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் 903,000 ஐ எட்டியது. அதன்பின்னர், 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 728,000 ஆகக் குறைந்தது.
ஆனால், 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான பிரெக்ஸிட்டு ஒப்பந்தத்துக்கு முந்தைய அதிகபட்சமான 329,000 ஐ விட அதிகமாக உள்ளது.
சட்டப்பூர்வ இடம்பெயர்வு மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை சமாளிக்க பிரித்தானியா அரசாங்கம் அழுத்தத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவுக்கு சென்றால் நெதன்யாகு கைதாவார்
பிரித்தானியாவுக்கு சென்றால் நெதன்யாகு கைதாவார்
பிரித்தானியாவுக்கு சென்றால் நெதன்யாகு கைதாவார் ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இங்கிலாந்துக்கு வந்தால் அவர் கைது செய்யப்படலாம் என்று, அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது,
“இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இங்கு வந்தால் அவரை இங்கிலாந்து பொலிஸார் தடுத்து வைப்பார்களா என்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது.
“ஆனால், உள்நாட்டுச் சட்டம் மற்றும் உண்மையில் சர்வதேச சட்டத்தால் அமைக்கப்பட்டுள்ள அதன் சட்டப்பூர்வ கடமைகளுக்கு இங்கிலாந்து எப்போதும் இணங்கும். நாங்கள் சட்டத்தின் கீழ் எங்கள் கடமைகளை வெளிப்படையாக நிறைவேற்றுவோம்” என்றார்.
இதன்மூலம் நெதன்யாகு இங்கிலாந்து வந்தால் அவர் கைது செய்யப்படுவார் என்று இங்கிலாந்து மறைமுகமாக தெரிவித்துள்ளது.
அதேபோல் கனடா, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், நார்வே, சுவீடன், பெல்ஜியம், துருக்கி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு இணங்கப் போவதாக தெரிவித்துள்ளன.
விடுதலைப் புலிகள் மீதான தடை பிரித்தானியாவில் நீடிப்பு
விடுதலைப் புலிகள் மீதான தடை பிரித்தானியாவில் நீடிப்பு
விடுதலைப் புலிகள் மீதான தடை பிரித்தானியாவில் நீடிப்பு ,; ஈழ ஆதரவு குழுவின் மேல்முறையீடு தோல்வி
பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி TGTE (தமிழீழ இடைக்கால அரசாங்கம்) விடுத்த வேண்டுகோளை UK தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
ஆறுமுகம் மற்றும் பலர் மற்றும் உள்துறைச் செயலர் ஆகியோரின் மேல்முறையீட்டில் ஆணையம் வெள்ளிக்கிழமை தனது தீர்ப்பை வழங்கியது.
அகிம்சை வழிகளில் அதன் அரசியல் மற்றும் கருத்தியல் நோக்கங்களைத் தொடர விரும்புவதால், ஐக்கிய இராச்சியத்தில் இது தடைசெய்யப்படவில்லை என்று TGTE வாதிட்டது.
சுதந்திர தமிழ் அரசை உருவாக்குவதற்கு TGTE ஆதரவளிக்கிறது.
இலங்கையின் வடக்கு கிழக்கில் ஒரு சுதந்திர தமிழ் அரசை உருவாக்குவதற்கு TGTE ஆதரவளிக்கிறது.
எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் (“GoSL”) TGTE இன் வழிமுறைகள், ஆளும் குறிப்புகள் பற்றி வேறுபட்ட பார்வையை எடுத்தது.
மார்ச் 29, 2001 அன்று, UK இராஜாங்கச் செயலர் எல்.ரீ.ரீ.ஈயை பயங்கரவாதச் சட்டம் 2000 (தடைசெய்யப்பட்ட அமைப்புகள்) (திருத்தம்) ஆணை 2001 இன்
அட்டவணை 2 இல் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தார்.
விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்குவதற்கு முன்னரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
டிசம்பர் 7, 2018 அன்று, பயங்கரவாதச் சட்டம் 2000 இன் பிரிவு 4 இன் படி, அட்டவணை 2 ல் இருந்து விடுதலைப் புலிகள் அகற்றப்பட வேண்டும் என்று TGTE உள்துறை அமைச்சகத்திற்கு விண்ணப்பித்தது.
கூட்டு பயங்கரவாத பகுப்பாய்வு மையம், உள்நாட்டு மற்றும் சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்களின் பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டிற்கான UK
மையம் ஆகியவற்றின் மதிப்பாய்வு செயல்முறையைத் தொடர்ந்து, வெளியுறவுத்துறை செயலர் மார்ச் 8, 2019 அன்று விண்ணப்பத்தை நிராகரித்தார்.
அக்டோபர் 21, 2020 அன்று, மேல்முறையீட்டு ஆணையம் மேல்முறையீட்டாளர்களின் மேல்முறையீட்டை அனுமதித்தது. இதைத் தொடர்ந்து, மே 13, 2021 தேதியிட்ட உத்தரவின்படி, TGTE ஆனது ஜூன் 3,
2021க்குள் தடை நீக்கம் செய்வதற்கான விண்ணப்பத்தில் கூடுதல் பிரதிநிதித்துவங்களை வழங்க வேண்டும், மேலும் மாநிலச் செயலர் தனது
தடையை நீக்குவதற்கான முடிவு
விண்ணப்பத்தின் மீதான தடையை நீக்குவதற்கான முடிவை எடுக்க வேண்டும். ஆகஸ்ட் 31, 2021க்குப் பிறகு இல்லை.
நிவாரணம் தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகள் மீதான தடை யைத் தக்கவைக்க மாநிலச் செயலாளர் ஒரு புதிய
முடிவை எடுத்தார், மேலும் முடிவு ஆகஸ்ட் 31, 2021 அன்று TGTE க்கு அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் இடம்பெற்ற நீதிமன்ற நிகழ்வுகளை அடுத்து இந்த தீர்ப்பு வழங்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
பிரித்தானியாவில் பல விமான சேவைகள் திடீரென ரத்து
பிரித்தானியாவில் பல விமான சேவைகள் திடீரென ரத்து
மோசமான வானிலை காரணமாக பிரித்தானியாவில் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
“கெத்லீன்” புயலுடன் கூடிய பலத்த காற்று மற்றும் வெப்பமான வானிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அறிவிப்புகளுக்கு அமைய விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, பிரித்தானியாவில் சுமார் 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மோசமான வானிலையால் ஸ்கொட்லாந்திலும் ரயில் மற்றும் படகு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காற்றின் நிலை காரணமாக, இங்கிலாந்தின் வடமேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகள் மற்றும் வடக்கு அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
Featured
பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை
பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை
பிரித்தானியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை ,கைத்தொலைபேசியை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்களைப் பிடிக்கும் நோக்கத்தில் புதிய கேமராக்கள் காவல்துறையினரால் பல இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
மற்றும் ஓட்டுனர்கள் இருக்கை வார் (சீட் பெல்ட்) அணிந்துள்ளார்களா என்பதை கண்டறியும் கேமராவும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
கைத்தொலைபேசியை தொட்டாலே அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கிக்கொள்ளும் சாரதிகளுக்கு 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் நிலையில் சாரதி அனுமதி பத்திரத்தில் 6 புள்ளிகள் குறைக்கப்படும். மிகவும் அவதானம் உறவுகளே.
பிரித்தானியாவில் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
பிரித்தானியாவில் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
பிரித்தானியாவில் சம்பள உயர்வு கோரி ஆசிரியர்கள்
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
இதனால் இன்று பிரிட்டன் தழுவிய நிலையில் பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன .
இவ்வாறான போராட்டங்கள் ,
ஆளும் பிரதமர் சுனெக் ஆட்சிக்கு
பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
ஜனாதிபதியை சந்தித்த பிரித்தானியா முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன்
ஜனாதிபதியை சந்தித்த பிரித்தானியா முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன்
தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்ட கெமரன், ஜனாதிபதிக்கு புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க
மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இலங்கையிடம் பிரித்தானியா முக்கிய வேண்டுதல்
இலங்கையிடம் பிரித்தானியா முக்கிய வேண்டுதல்
பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் விதம் குறித்து தாம் கவலையடைவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது மனித உரிமைகளுக்கு முரணானது எனவும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்த சட்டத்தை பயன்படுத்தப்படுவதை நிறுத்துவதற்கான உறுதிமொழிகளை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் கோரியுள்ளது.
அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்லும் இலங்கை இனவாத அரசு photo
அப்பாவி மக்களை குண்டு வைத்து கொல்லும் இலங்கை இனவாத அரசு photo
இன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்னால், மதியம் 12 :30 மணியளவில்
,தமிழருக்கான சுதந்திர வேட்டைகாரர்களால் போராட்டம் ஒன்று நடத்த பட்டது
இவை நிகழ்கால கொரனோ விதிகளுக்கமையவும் , பிரித்தானிய சட்ட திட்டங்களை பின்பற்றியும் அமைதியான முறையில் அர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்த போராட்டத்தின் பொழுது மறைந்து இருந்து குண்டு வெடிப்பு தாக்குதல்களை
மேற்கொள்ளும் இலங்கை இனவாத அரசின் முகதிரையை ஆர்ப்பாட்ட காரர்கள் கோஷமிட்டு கிழித்தெறிந்தனர்
.அதனை உயர்ஸ்தாணிகத்திற்குள் உள்ளே இருந்த வண்ணம் சிங்கள கூலிகள் அவதானித்துக்கொண்டிருத்தனர் ,
மறைந்திருந்து முழு ஆர்ப் பாட்ட நிகழ்வையும் காணொளி ,மற்றும் புகைப்படங்கள்
பிடித்து கொண்டிருந்ததை பங்கு பற்றியவர்கள் கண்கொண்டு பார்க்க கூடியதாக இருந்தது .
மேலும் இவ் ஆர்ப்பாட்ட பேரணியில்
ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்களில் குண்டுவைத்து தீவிரவாத தாக்குதல் என்ற
போர்வைக்குள் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் கொலைக்கு இன்னும் ஏன் நீதி வழங்கப்படவில்லை என இலங்கை இனவாத அரசை பொங்கியெழுந்து கேட்டனர் .
இந்த பேரணியில் கீழே வரும் கோஷங்கள் முழங்கின ,
“போர்க்குற்றவாளி இலங்கஅதிபர்”
“ஈஸ்ரர் குண்டு தாக்குதலுக்கு விசாரணை முடிவு என்ன”
“அப்பாவி மக்களை மறந்து இருந்து குண்டு வைத்து கொல்லாதே”
“இலங்கையை விட்டு ஏன் சிங்களவர் வெளியேறுகிறார்கள் “
என்ற கேள்வி கோஷங்களை எழுப்பினர் …
இணையில் தொடபாற் மனித உரிமை மீறல் மற்றும் தமிழர் அடக்குமுறை என்பன தலைவிரித்தாடி வரும் நிலையில், மர்ம படுகொலைகள் ,கடத்தல்கள் ,அச்சறுத்தல்கள் ,என்பன
தொடர்ந்த வண்ணம் உள்ளது ஐநா மனித உரிமை மையம் சுட்டி காட்டி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது








சிவப்பு பட்டியலில் இலங்கை-பிரித்தானியா அறிவிப்பு
சிவப்பு பட்டியலில் இலங்கை-பிரித்தானியா அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து காணப்படும் நாடுகள் தொடர்பான சிவப்பு பட்டியலில் இலங்கையின் பெயரையும், பிரித்தானியா உள்ளடக்கியுள்ளது.
ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கொஸ்டாரிகா, எகிப்து, இலங்கை, சூடான் மற்றும் டிரினிடாட் – டொபாகோ ஆகிய 07 நாடுகளே இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 8ம் திகதி முதல் இலங்கையின் பெயர் இந்த பட்டியலில் உள்ளடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள எந்தவொரு நாட்டுக்கும் பிரித்தானிய பிரஜைகள் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.





































