Tag: சங்கர்
முதலாவது மாவீரன் சங்கர் தந்தைமரணம்
முதலாவது மாவீரன் சங்கர் தந்தைமரணம்
முதலாவது மாவீரன் சங்கர் தந்தைமரணம் ,தமிழீழ விடுதலை புலிகளின் போராட்டவரலாற்றின் முதலாவது மாவீரன் சங்கர் அவர்களின் தந்தையார் லண்டனில் மரணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
லண்டனில் வசித்து வந்த முதலாவது மாவீரன் சங்கர் அவர்களின் தந்தையார் தற்பொழுது உடல் சுகவீன காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதலாவது வித்தாக சங்கர் அவர்கள் வீரமரணம் அடைந்திருந்தார்.
அவரை தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான விடுதலை மறவர்கள் தங்கள் மண்ணுக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்தார்கள்.
தற்பொழுது சங்கருடைய தந்தை மரணமானதை அடுத்து லண்டன் வாழ் தமிழ் மக்கள் ,அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு தயாராகி வருகிறார்கள்.

விடுதலை இன்று வீரம் இழந்து போயிருந்தாலும் ,ஆனால் அந்தக் காலத்தில் எங்களுக்காக நின்ற அரும் பெரும் தலைவர்களையும், தலைமைகளையும் மாமர வீரர்களையம் மக்கள் மறக்கவில்லை.
லண்டன் பகுதியில் இவரது இறுதி நிகழ்வு தொடர்பான விடயங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் ,அவ்வளை பல நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு திரண்டு தமது இறுதி நிகழ்வை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீரத்தின் விளைநிலமாகவும், விடுதலையின் கனவாகவும் ,அண்ணனுக்கு தம்பியாகவும் ,தமிழின போருக்கு துணையாக நின்று களமாடி, வீரமரணம் அடைந்த சங்கர் அவர்களின் ,தந்தையை நினைவு கூறுவோம் .

தமிழர்களை ஒன்று திரண்டு வருக விரைவில் மேலதிக விபரம் இணைக்கப்படும்.
இந்த மாமற வீரன் சங்கர், கடல் புலிகளின் தளபதி சூசை அவர்களுடைய உறவுக்காரர் என்பதை இங்கே குறிப்பிடத்தக்கது .
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்

- பெட்டா மத்திய பேருந்து நிலையத்தில்அனுரா கொள்ளையர்கள்

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்தியன் 2 படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் பிற படங்களை இயக்க, இயக்குனர் சங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இயக்குனர் சங்கர்
சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் திரைப்படம் இந்தியன் 2. லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வந்தது.
இப்படத்தின் படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.
இதனிடையே, இயக்குனர் சங்கர், தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடிக்கும் ஒரு படத்தையும், ‘அந்நியன்’ படத்தின் இந்தி ரீமேக்கையும் இயக்க ஒப்பந்தம் ஆனார்.
இதனால் ‘இந்தியன் 2’ படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் பிற படங்களை இயக்க, இயக்குனர் சங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சார்பில் வழக்குத்
தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் சங்கர்
ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதி எடுக்கும் முடிவை அறிக்கையாக தாக்கல் செய்த பிறகு, வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனக்கூறி நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது. இந்நிலையில் ‘இந்தியன் 2’
பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் சங்கருக்கு எதிராக லைகா தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.









