கண்டியிலும் பஸ்விபத்து 20பேர் காயம்

கண்டியிலும் பஸ் விபத்து 20 பேர் காயம்
Spread the love

கண்டியிலும் பஸ்விபத்து 20பேர் காயம்

கண்டியிலும் பஸ்விபத்து 20பேர் காயம் கண்டி, அலதெனிய, யட்டியானகலவில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளார்கள். இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் , கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகலை நோக்கி பயணித்த போக்குவரத்து சபைக்கு சொந்தமான ,

பேரூந்து ஒன்று விபத்தில் சிக்கி தலைகீழாக கவிழ்ந்ததில் பச்சிளம் குழந்தைகள் உட்பட 21க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

அதேபோன்று, ஹட்டன் வீதியில் 20 அடி பள்ளத்தில் கார் ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் கரோலினா தோட்டம் பகுதியில் நேற்று (11) காலை குடும்பமொன்று பயணித்த காரொன்று வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வெல்லம்பிட்டியவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்த தாய், தந்தை, மகள் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

ஒரே பிரதேசத்தில் தொடர்ந்து ஒரே நாளில் அடுத்தடுத்து

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் தொடர் விபத்துகளினால் மக்கள் சொல்லானென்னா துயரை சந்தித்து வருகின்றனர்.

இவ்வாறு வீதி விபத்திலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள என்ன வழிவகை உள்ளது என்பதே கேள்வியாக உள்ளது.

நாள்தோறும் இலங்கையில் இடம்பெறுகின்ற விபத்தில் ,நால்வர் பலியாகி எட்டுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.