பிலியந்தலையில் பற்றி எரிந்த வீடு
Posted in இலங்கை செய்திகள்

பிலியந்தலையில் பற்றி எரிந்த வீடு

பிலியந்தலையில் பற்றி எரிந்த வீடு

பிலியந்தலையில் பற்றி எரிந்த வீடு ,கட்டடம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் அந்த வீடு முற்று முழுதாக செய்த மருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தக நிலையத்தில் உள்ள கட்டடம் வர்த்தக நிலையமாக இயங்கி வந்தது அதிலேயே தீப்பிடித்து குறித்த வர்த்தக நிலையம் நாசமாகி உள்ளது.

தீயணைப்பதற்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள்

தீயணைப்பதற்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்ட பொழுதும் அதற்குள்ளாக அந்த கடையில் முற்று முழுதாக எரிந்து நாசமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

இவை மின்சார ஒழுக்க காரணமாக இடம் பெற்றதா ,அல்லது வேறு ஏதாவது காரணங்களால் தீ பரவிக் கொண்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பல் பொருள் அங்காடி

மிகப்பெரும் பல் பொருள் அங்காடியாக விளங்கி வந்த இந்த வர்த்தக நிலையத்தில் தீ பிடித்தது எப்படி என்பது தொடர்பிலையே அங்கு பணியாற்றிய ஊழியர்கள்,

மற்றும் வாடிக்கையாளர்கள் அச்சத்தையும் கேள்வியையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது .

இது திட்டமிடப்பட்ட ரீதியில் தீ வைக்கப்பட்டதா அல்லது ,மின்சார ஒழுக்கின் காரணமாக மற்றும் ஏனைய காரணங்களினால் இந்த தீப்பற்றி கொண்டதா என்பது தொடர்பில் தீவிர விசாரணைகளை குற்ற புலனாய்வுத்துறை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ அணைத்ததினால் பல மில்லியன் ரூபாய் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிந்த வீடு இளம்பெண் கருகிப்பலி
Posted in இலங்கை செய்திகள்

எரிந்த வீடு இளம்பெண் கருகிப்பலி

எரிந்த வீடு இளம்பெண் கருகிப்பலி

எரிந்த வீடு இளம்பெண் கருகிப்பலி, அதிர்ச்சிகரமான சம்பவம் கொட்டவா ரூட்மேல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

திடீரென வீட்டில் தீப்பற்றியதை அடுத்து அவ்வேளை அங்கிருந்த 19 வயது இளம்பொண் அந்த தீயில் கருகி பலியான பரிதாபச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீப்பற்றல் நடவடிக்கை எடுத்து விரைந்து சென்ற மீட்பு குழு மற்றும் அயலவர்கள் வீட்டு தீயை அணைத்த பொழுதும் பெண்ணை காப்பாற்ற முடியவில்லை.

இந்த வீட்டில் இந்த தீ பற்றல் சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பாக, தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எரிவாயு காரணமாக அல்லது மின்சார காசிவின் காரணமாக ,இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகம் நிலவுகிறது.

எனினும் குற்றப் புலனாய் பிரிவுகள், சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றனர்.

விசாரணையின் முடிவிலேயே இந்த தீப் பற்றல் சம்பவம் என்பது ,விபத்து சம்பவமா ,அல்லது திட்டமிடப்பட்ட படுகொலை சம்பவமா என்பது தெரியவரும் என தெரிவிக்க படுகிறது .

இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான தீ விபத்து சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.

எரிவாய்வு சிலிண்டர்கள் வெடித்தும், மின்சார காசிவின் காரணமாக பல உயிர்கள் பறிபோய் இருக்கின்றன.

இதுபோன்று இந்த அப்பாவி 19 வயது சிறுமியும் ,தீயில் கருகி பலியான சம்பவம் இடம்பெற்று இருக்கலாம், என்கின்ற சந்தேகம் மத்தியில் காணப்படுகிறது.

விசாரணையின் முடிவிலேயே ,காவல்துறை என்ன நடந்தது என்பதை அறியத் தருவார்கள் என்பதாக மக்கள் பேசுகிறார்கள்.

முற்றாக பற்றி எரிந்த வீடு
Posted in இலங்கை செய்திகள்

முற்றாக பற்றி எரிந்த வீடு

முற்றாக பற்றி எரிந்த வீடு

முற்றாக பற்றி எரிந்த வீடு வாத்துவ, பொதுப்பிட்டியவில் வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீயினால் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ மளமளவென பரவியதையடுத்து, பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் சேர்ந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.

எனினும் இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டின் பெண் ஒருவர் விளக்கை ஏற்றி விட்டுச் சென்றதால், அது கீழே விழுந்து தீப்பிடித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எரிந்த வீடு கண்ணீரில் குடும்பம்
Posted in இலங்கை செய்திகள்

எரிந்த வீடு கண்ணீரில் குடும்பம்

எரிந்த வீடு கண்ணீரில் குடும்பம்

எரிந்த வீடு கண்ணீரில் குடும்பம் ,கண்டவளையில் வீடு ஒன்று திடீரென தீப்பற்றி கொண்டது ,இதனால் வீட்டை இழந்து குடும்பம் கண்ணீரில் தத்தளிக்கின்றது .

கண்டாவளை பிரதேச பகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடு ,திடீரென தீபிடித்து எரிந்துள்ளது .

அந்த வீடு முற்றாக தீயில் எரிந்து சாம்பலான நிலையில் ,அங்கு தூங்கிக் கொண்டிருந்த குழந்தை தப்பித்துள்ளது.

தாயார் மீனை வெட்டுவதற்கு வெளியில் சென்ற பொழுது ,திடீரென வீடு தீப்பற்றி கொண்டது .

அப்பொழுது ஏனைக்குள் குழந்தை ஒன்று உறக்கத்தில் இருந்துள்ளது .

கண்டாவளையில் தீயில் எரிந்த வீடு

ஓடி சென்று தாயார் குழந்தையை தூக்கிய நிலையில் , குழந்தை தெய்வாதீனமாக தப்பியுள்ளது .

எனினும் வீடு முற்று முழுதாக எரிந்து சாம்பலாகி உள்ளது ,இதன் பொழுது வீட்டிலிருந்து மீன்வலைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்ட பொருட்கள் எரிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் .

தயார் அவல குரல் எழுப்பியதை அடுத்து அயலவர்கள் ஓடிவந்து தீயினை அணைக்க முற்பட்ட பொழுதும், அந்த ஓலை குடிசையில் முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ளது .

இந்த தீ விபத்துக்கான காரணத்திற்காக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.

தாயார் தனது சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த பொழுது ,அங்கிருந்த தீ பக்கத்தில் உள்ள ஓலையில் பற்றி கொண்டதன் அங்கு தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிய வருகிறது .

வீடு எரிந்தது எப்படி ..?

தற்பொழுது போலீசார் இந்த தீ சம்பந்தம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

தீயில் வீடு எரிந்த நிலையில் ,தற்பொழுது அவர்கள் தமது வீட்டை பறிகொடுத்து கண்ணீருடன் தத்தளித்து வருகின்றனர்.

அயலவர்கள் தற்பொழுது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடு எரிந்து தீயில் அழிந்த இந்த செய்தியானது காட்டுதியாக பரவிய நிலையில், அதனை கண்ணுற பல மக்கள் அந்த பகுதியில் குவிந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனஎன்பது குறிப்பிடத்தக்கது .

Posted in உலக செய்திகள்

பற்றி எரிந்த வீடு – கருகி இறந்த 5 உயிர்கள்

பற்றி எரிந்த வீடு – கருகி இறந்த 5 உயிர்கள்

அமெரிக்கா northern Ohio பகுதியில் திடீரென வீடு ஒன்று தீ பற்றி எரிந்துள்ளது ,
இதன் பொழுது அந்த வீட்டுக்குள் இருந்த ஐவர் உடல் கருகி பலியாகினர் ,

மேலும் நான்கு
சிறுவர்கள் அதி தீ காயங்களுக்கு உள்ளான நிலையியல் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

மேற்படி தீ சம்பவம் தொடரப்பிலான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன