யாழ் சிறைச்சாலையில் 20கைதிகள் விடுதலை
யாழ் சிறைச்சாலையில் 20கைதிகள் விடுதலை ,செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண சிறைச்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்று வெசாக் தினத்தை முன்னிட்டு ,இலங்கை அரசினால் விடுக்கப்பட்ட பொது மன்னிப்பின் அடிப்படையில் ,இந்த கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்.
இலங்கையில் இடம்பெற்று வருகின்ற வெசாக் தினத்தை முன்னிட்டு ,இலங்கை ஜனாதிபதியினால் பொது மன்னிப்பின் கீழ் பலர் விடுதலை செய்யப்படுவது வழமை.
இந்த ஆண்டும் குற்றங்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டு .திருந்தியுள்ளதாக கருதப்படுகின்ற, 20 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ,சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குற்றங்கள் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ,நல்லெண்ண சமிக்கையின் அடிப்படையில் ,அவர்கள் அங்கு ,பராமரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் விடுதலை செய்யப்படுகின்றனர்.
இலங்கைச் சிறைச்சாலைகள் தற்போது குற்றங்கள் அதிகரித்துக் காணப்படுவதால் நிரம்பி வழிகின்றன .
20 பேர் விடுதலை செய்யப்படுகின்ற பொழுதும் , 40 பேர் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதான குற்றச்சாட்டுகளும் உள்ளமை ,இங்கே குறிப்பிடத்தக்கது.
கைதிகள் உறவினர்கள் தற்பொழுது மகிழ்ச்சியில் உறைந்திருக்கின்றனர் . ஆளுகின்ற ஜனாதிபதிக்கு எமது நன்றிகளை தெரிவித்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன .
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

- பல்லன்சேன சிறைச்சாலையில் கலவரம் தீவிரமடைந்ததால் கண்ணீர்ப் புகைக் குண்டு

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து அவசரகாலக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்









