Tag: இலங்கை
21 பொலிசாருக்கு கொரனோ தொற்று – தனிமை படுத்தல்
21 பொலிசாருக்கு கொரனோ தொற்று – தனிமை படுத்தல்
இலங்கை Keselwatta பகுதியை சேர்ந்த காவல்துறையினர் 21 பேர் கொரனோ
நோயின் தொற்றுக்கு உள்ளாகி இருக்க கூடும் என்ற சந்தேகத்தில் 21 நாட்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர் .
கொரனோ தொற்றுக்கு உள்ளான ஒருவருடன் நெருங்கி பழகினார்கள்
என்ற நிலையில் இவர்கள் இவ்விதம் அவசரமாக தனிமை படுத்த பட்டுள்ளனர்
காவல்துறையினர் யாரவது பாதிக்க பட்டால் அவர்களுக்கு சிறப்பு முகாம்கள்
மூன்று அமைக்க பட்டிருந்தமை இங்கே நினைவு கூற தக்கது

வங்கியில் கடன் மீளச் செலுத்தலை பிற்போடுதல்- அரசு நடவடிக்கை
வங்கியில் கடன் மீளச் செலுத்தலை பிற்போடுதல்- அரசு நடவடிக்கை
வங்கிகளில் கடன் பெற்றவர்கள் தற்கால நிகழ்வை அடுத்து அதனை செலுத்துவது பிற் போடுதல் காலம் வழங்க பட்டுள்ளது
இதற்குரிய வரையறையுடன் இந்த கால அவகாசம் வழங்க படுகிறது
இவ்வாறு கடன் பெற்றவர்கள் கீழ் வரும் உங்கள் பகுதியை தொடர்பு கொண்டு உரையாடி பணத்தினை பிற்போடலாம் என அரசு தெரிவித்துள்ளது
கொவிட் – 19 நோய்த்தொற்று காரணமாக கடன் மீளச்செலுத்தலை பிற்போடுதல் தொடர்பாக தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள்
வங்கி மேற்பார்வைத் திணைக்களம்
0112 477133
0112 477134
0112 477360
0112 477659
0112 398743
0112 398746
0112 398790
0112 398815
0112 398820
0112 398824
வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம்
0112 477500
0112 477504
0112 477258
0112 477562
0112 477573
0112 398786
0112 398806
0112 477380
0112 477340
0112 477495
0112 398774
0112 477026

இலங்கை கடல் எல்லைகள் விமானம் மூலம் தீவிர கண்காணிப்பு
இலங்கை கடல் எல்லைகள் விமானம் மூலம் தீவிர கண்காணிப்பு
இலங்கையின் கடல் பகுதி எங்கும் விமானங்கள் ,உலங்கு வானூர்திகள் மூலம் சிறப்பு கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளது
கடல் வழியாக சட்டவிரோத குடியேற்ற வாசிகள் நுழைந்து விடுவார்கள்
என்ற அச்சமும் ,அதன் ஊடாக வைரஸ் நோயானது இலங்கைக்குள் பரப்ப பட்டு
விடும் என அஞ்சும் இலங்கை இந்த கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது
சீனாவில் இருந்தே ரசியாவுக்கு இந்த நோயானது தரைவழியாக கடத்த பட்டது
என்ற கருத்து பரவும் நிலையில் இலங்கை அரசும் அதன் முன்னோடி தடுப்பு நகர்வை மேற்கொண்டுள்ளது .

கொழும்பு வீதிகளில் குவிக்க பட்டுள்ள இராணுவம் – படங்கள் உள்ளே
கொழும்பு வீதிகளில் குவிக்க பட்டுள்ள இராணுவம் – படங்கள் உள்ளே
இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து ஊரடங்கு
பிறப்பிக்க பட்டுள்ளது ,இவ்வேளை மக்கள் நட மாட்டங்கள் மற்றும்
திருடர்கள் கைவரிசையை தடுப்பதற்கு இராணுவத்தின் பீல்ட் பைக் படை பிரிவினர்
சுற்று காவல் ரோந்தில் ஈடுபட்டுள்ளனர் ,இவர்களுடன் இராணுவம் ,மற்றும் ;
போலீசாரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர
இன்று பத்து மணி நேரம் ஊரடங்கு தளர்த்த பட்ட பொழுதும் அவை மீள நீடிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது


அத்து மீறி உலாவிய 1,599 பேர்- அதிரடி கைது
அத்து மீறி உலாவிய 1,599 பேர்- அதிரடி கைது
இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் விடுக்க பட்ட ஊரடங்கு
சட்டத்தின் பொழுது அத்து மீறி வெளியில் உலாவிய 1,599 பேரை தாம் கைது செய்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இவ்வாறு கைதானவர்களுக்கு ஐநூறு ரூபா முதலான தண்டமும் அறவிட
பட்டுள்ளதுடன் அவர்கள் போக்குவரத்திற்கு பயன் படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்ய பட்டுள்ளன .
மேலும் 14 நாட்களுக்குள் குற்ற பணம் செலுத்த பட வேண்டும், தவறின்
நீதிமன்றில் முன்னிலை படுத்த படுவார்கள் என குறிப்பிட பட்டுள்ளது

இலங்கை மத்திய வாங்கி அதிரடி – வட்டி வீதம் குறைப்பு
இலங்கை மத்திய வாங்கி அதிரடி – வட்டி வீதம் குறைப்பு
இலங்கை மத்திய வங்கியானது மக்கள் நலன் கருதி தற்பொழுது வட்டி வீதத்தை பத்து வீதமாக குறைத்துள்ளது
இதனால் பயனாளர்கள் குஷியில் உறைந்துள்ளனர் ,கொரனோ நோயின்
காரணமாக அவசர கால நிகழ்வின் ஊடாக இந்த அதிரடி குறைப்பு இடம்பெற்றுள்ளது

இலங்கையில் 19 மாவட்டங்களில் -10 மணித்தியாலம் தாற்காலிகமாக ஊரடங்கு அகற்றல்
இலங்கையில் 19 மாவட்டங்களில் -10 மணித்தியாலம் தாற்காலிகமாக ஊரடங்கு அகற்றல்
இலங்கையில் பத்தொன்பது மாவட்டங்களில் தற்காலிகமாக பத்து மணித்தியாலங்கள்
வரை ஊரடங்கு அகற்ற பட்டு இருக்கும் என இராணுவம் அறிவித்துள்ளது
கண்டி ,யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது ,
இவ்வேளை மக்கள் சென்று தமக்கு வேண்டிய பொருட்களை மற்றும் அத்தியாவசிய
முதன்மை விடயங்களை செய்திடவே இந்த அறிவிப்பு நடைமுறை படுத்த பட்டுள்ளது
மக்கள் முண்டியடித்த படி வீதிகள் செல்வதை காண முடிகிறது ,வீதி போக்குவரத்து
கண்காணிப்பில் போலீசார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்

இந்தியாவில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு கொரனோ
இந்தியாவில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு கொரனோ
இந்தியாவுக்கு உல்லாச பயணம் மேற்கொண்டு விட்டு மீள் இலங்கை
திரும்பிய பெண் ஒருவருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய போதே இந்த விடயம் தெரிய வந்துள்ளது
கொழும்பு கொட்டென பகுதியில் வசிக்கும் இந்த பெண்ணோடு பழகியவர்கள் இந்த சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
மனைவியை அடித்து வெட்டி கொன்ற கணவன் தற்கொலை -தவிக்கும் பிள்ளைகள்
மனைவியை அடித்து வெட்டி கொன்ற கணவன் தற்கொலை -தவிக்கும் பிள்ளைகள்
இலங்கை கல்பிட்டி பகுதியில் கணவன் மனைவிக்குள் இடம்பெற்ற குடும்ப சண்டை காரணமாக மனைவியை அடித்து கணவன் வெட்டி கொன்றுள்ளார்
இவர்களுக்கு 17 வயதுடைய மகன் மேலும் அதன் கீழாக இருவர் உள்ளனர்
மனைவியை கொன்ற கணவன் தானும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார் ,
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் ,பிள்ளைகள் பெற்றவர்களை இழந்து கண்ணீரில் தவிக்கின்றனர்
கோபம் செய்த பாவம் , ஒரு குடும்பம் சீரழிந்து போனது ,விட்டு கொடுப்பும்
சகிப்பு தன்மை இழந்து போவதால் இந்த விடயங்கள் ஏற்படுகின்றன என்பதே யதார்த்தமாக உள்ளது

இலங்கையில் 238 பேர் கொரனோவால் பாதிப்பு
இலங்கையில் 238 பேர் கொரனோவால் பாதிப்பு
நேற்றைய தினம் (2020.04.15) கொரோனா வைரசு நோயாளிகளில் உறுதி செய்யப்பட்ட 5 நோயாளர்கள் பதிவானதாக சுகாதார
சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இதற்கமைவாக இதுவரையில் இலங்கையில் பதிவான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 238 ஆகும்.
நேற்றைய தினம் பதிவான 5 நோயாளர்களில் 4 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர்கள் ஆவதுடன் இவர்களில்
இருவர் யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் அடையாளங் காணப்பட்டார்கள்.
மற்ற நோயாளி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவராவார்
என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

ஊரடங்கு அகற்ற பட்ட பகுதியில் புதிய நடைமுறை
ஊரடங்கு அகற்ற பட்ட பகுதியில் புதிய நடைமுறை
இடர் வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களைத் தவிர, ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்குச் சட்டம் தற்சமயம் தளர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும்
யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்டுள்ள நிலையில்,
பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வரும். அமுலுக் வரும் ஊரடங்கு சட்டம் மீண்டும் இந்த மாவட்டங்களில் ஏப்ரல் 20
திங்கட்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் மாலை 4 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்படும்.
ஏப்ரல் 20 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் மீள அமுல்படுத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.
இதேவேளை முக கவசத்தை அணியாமல் வருவோர் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய செனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டள்ள காலப்பகுதியில் வீதிகளில் அநாவசியமாக நடமாடும் பாதசாரிகளுக்கெதிராக கடும்
நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஊடக பேச்சாளர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள்
மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதனால் ஏற்படும்
கஷ்டங்களை புரிந்துணர்வுடனும் பொறுப்புடனும் பொறுத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
பொருட்களை கொள்வனவு செய்வது அத்தியாவசிய பொருட்களுடன் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும், தேவையற்ற
பயணங்களை தவிர்க்குமாறும் அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம்
செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை
வீடுகளில் இருந்தவாறே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்களை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு மாவட்டத்திலும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும்
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும். எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு
அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மோதி சிதறிய கடற்படை பேரூந்து -ஒருவர் பலி -28 பேர் காயம்
மோதி சிதறிய கடற்படை பேரூந்து -ஒருவர் பலி -28 பேர் காயம்
இலங்கை வரக்காப்பொலை பகுதியில் இரண்டு கடற்படை பேரூந்துகள் மரக்கறி ஏற்றி சென்ற லொறி ஒன்றுடன் மோதியதில்
அதில் பயணித்த ஒருவர் பலியானார் ,மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்
சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது
சம்பவ இடத்தில பேரூந்து மற்றும் லொறி என்பன பலத்த சேதமடைந்த நிலையில் மீட்க பட்டுள்ளது
தொடர்ந்து நாட்டில் இராணுவ வாகனகள் மூலம் பலர் கொலை செய்யப்பட்டும் ,காயப்படுத்த பட்டும் வருகின்றன
இவ்வாறான சம்பவங்கள் விபத்து என்ற போர்வையில் முடிக்க பட்டு விடுகிறது ,இவை ஓசை படமால் இடம்பெறும் திட்டமிட்ட பாடுகொலைகள் என தெரிய வருகிறது .

கொரனோவால் அடித்து பூட்ட பட்ட மருத்துவமனை மீள திறப்பு
கொரனோவால் அடித்து பூட்ட பட்ட மருத்துவமனை மீள திறப்பு
இலங்கை கலுபோவாவில மருத்துவ மனையின் அவசர சிகிச்சை பிரிவு
கோரனோ நோயாளி ஒருவர் அடையாளம் கண்டு பிடிக்க பட்ட நிலையில் அடித்து பூட்ட பட்டது
அவ்வாறு ,மூடப்பட்ட அந்த மருத்துவ மனையின் விசேட சிகிச்சை பிரிவு
இரண்டு வாரங்கள் கழித்து தற்போது மீளவும் திறக்க பட்டுள்ளது
இதனால்மீளவும் அவசர நோயாளர்களா இந்த பகுதியில் சிகிச்சைக்கு
உட்படுத்த பட்டு வருகின்றனர்
என அந்த மருத்துவமனை குரல்தரவல்ல அதிகாரி தெரிவித்துளளார்

இலங்கை பயணிகள் விமானங்கள் வெளி நாடுகளுக்கு பறக்காது
இலங்கை பயணிகள் விமானங்கள் வெளி நாடுகளுக்கு பறக்காது
இலங்கை அரசிக்கு சொந்தமான எயார் லங்கா விமான சேவைகள் எதிர்வரும்
சித்திரை முப்பதாம் திகதி வரை பறப்பில் ஈடுபடாது எனவும் ,திட்டமிட்ட
படி தொடர்ந்து சரக்கு விமானங்கள் மட்டும் சேவையில் இருக்கும் என குறித்த விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது
இதனடிப் படையில் இவைகள் இடம் பெறும் எனவும் ,முப்பதாம் திகதி
தமது மறு அறிவித்தலில் இது தொடர்பான விடயங்கள் தெரிய படுத்த படும் என மேலும் கூறப்பட்டுள்ளது
வெளிநாடுகள் சென்ற இலங்கையர்கள் விமானிகள் இன்றி பெரிதும் சிக்கி தவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

மன்னார் தாராபுரத்தில் விதிக்க பட்ட தடை அகற்றல்
மன்னார் தாராபுரத்தில் விதிக்க பட்ட தடை அகற்றல்
இலங்கை மன்னார் தாராபுரம் பகுதியில் கொரனோ நோயின் தாக்குதலுக்கு
உள்ளானார்கள் என கூறி அந்த பகுதி முற்றாக மக்கள் நட மாட தடை
விதிக்க பட்டது ,தற்பொழுது அவை அங்கிருந்து அகற்ற பட்டுள்ளது
அங்கு தனிமை படுத்த பட்ட மக்களுக்கு நோயானது இல்லை என்ற நிலையில்
இந்த தடை விலக்கல் விடுக்க பட்டுள்ளது என இராணுவ தளபதி ஷவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்
இருவாரங்களுக்கு மக்களை எச்சரிக்கையாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
கொரனோ தொற்றை மறைத்தால் இருவருடம் சிறை -மக்களுக்கு எச்சரிக்கை
கொரனோ தொற்றை மறைத்தால் இருவருடம் சிறை -மக்களுக்கு எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக இணையத்தளங்களில் உண்மைக்கு புறம்பான விடயங்களை முன்னெடுத்த இருவர் கைது
செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் கேட்போர் கூடத்தில் இன்று ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த (COVID 19) செய்தியாளர் சந்திப்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான காலாநிதி பந்துல குணவர்த்தன, அரச நிர்வாகம் உள்நாட்டலுவல்கள்
அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி, அரசாங்க தகவல் திணக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
கொரோனா தொற்றை தடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தில் சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான விடயங்களை சிலர் முன்னெடுத்து வருகின்றனர்.
சர்வதேச ரீதியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக
திட்டமிட்ட நடவடிக்கைகள் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டிக்கு அமைவாக அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
இவற்றை சீர்குலைக்கும் வகையில் சிலர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த முயற்சிக்கின்றனர். இது தடுப்பு நடவடிக்கைக்கு
பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதனால் இவ்வாறு செயற்பட்ட 23 பேர் தொடர்பாக விசாரனை நடத்தப்பட்டு இருவர்
கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் நிமித்த பிரியதர்ஷன, மற்றுமொருவர் துஷ்மந்த என்பராவர். இவர்கள் தற்பொழுது கைது
செய்யப்பட்டு இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
40 பேர் தொடர்பில் விசாரனைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். இதே வேளை இந்த
நோய்த்தாக்கத்திற்கு உள்ளானவர்கள் உரிய தனிமைப்படுத்தலுக்கு உள்வாங்கப்படாமல் இருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இது தொடர்பாக நாடு முழுவதிலும் இவ்வாறனவர்களுக்கு எதிராக சட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து
பொலிஸ் திணைக்களம் நாடு முழுவதிலும் பொது மக்களை தெளிவுப்படுத்தும் முகமாக சுவரொட்டிகளை ஒட்ட உள்ளது.
இது தொடர்பாக முழுமையான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பிடிவிறாந்தின்றி சிறைக்கு உட்படுத்த முடியும். குற்றமிழைத்தமை உறுதி செய்யப்பட்டால் இரண்டு வருட சிறைத் தண்டனையும் 1000
ரூபா தண்ட பணமும் விதிக்கப்படும். இந்த தவறுகளுக்கு ஒத்தாசை வழங்குவோரும் குற்றவாளிகளாகவே கணிக்கப்படுவார்கள்.
இவர்களுக்கு எதிராகவும் குறிப்பிடப்பட்ட தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் ஜேர்மன் நாட்டு பெண் மரணம்
இலங்கையில் ஜேர்மன் நாட்டு பெண் மரணம்
இலங்கையில் வெளிநாட்டு கப்பலில் வருகை தந்த ஜெர்மன் நாட்டு பெண்
ஒருவர் தற்பொழுது பலியாகியுள்ளார் என இலங்கை அறிவித்துள்ளது
வைரஸ் நோயினால் அடையாளம் காணப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்திய
பொழுதும் இவர் மரணமாகியுள்ளார் என இலங்கை தெரிவித்துள்ளது
இலங்கையில் இதுவரை 214 பேர் பாதிக்க பட்டும் ஏழுபேர்
மரணமடைந்துள்ளது குறிப்பிட தக்கது

வெளிநாட்டு கப்பலில் வந்த மாலுமிக்கு கொரனோ
வெளிநாட்டு கப்பலில் வந்த மாலுமிக்கு கொரனோ
சர்வதேச கொள்கலன் கப்பலான MSC TARANTO கப்பலில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பதாக
ஏற்பட்ட சந்தேகத்தில் அவரை மேலதிக மருத்துவ பரிசோதனைக்கு மற்றும் சிகிச்சைக்காக இன்று (2020 ஏப்ரல் 13) காலை கொழும்பு
துறைமுகத்திற்கு கொண்டு வர இலங்கை கடற்படை நடவடிக்கையை மேற்கொண்டது.
லைபீரியாவைச் சேர்ந்த கொள்கலன் கப்பலான MSC TARANTO என்ற கப்பலுக்கு சேவைகளை வழங்கும் உள்ளூர் நிறுவனமான MSC
லங்காவால் சந்தேகத்திற்குரிய ஊழுஏஐனு-19 நோயாளி ஒருவர் குறித்த கப்பலில் இருப்பதாகவும் அவரை இலங்கையில்
இறக்கிவிடுமாறும் கோவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்திடம் கோரியுள்ளது. அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ்
அட்மிரல் பியால் டி சில்வாவின் மேற்பார்வையின் கீழ்இ பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதலுடன்இ 36 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டைச்
சேர்ந்த சோலிஸ் ரியான் என்ற நபரை இன்று கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வர இலங்கை கடற்படை உடனடி நடவடிக்கை எடுத்தது.
கடற்படையின் வேதியியல்இ உயிரியல்இ கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) அவசரநிலை
பதிலளிப்பு பிரிவு கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 05 கடல் மைல் தொலைவில் உள்ள கப்பலை அணுகி, சுகாதார
நிபுணர்களால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நோய்வாய்ப்பட்ட நபரை கரைக்கு கொண்டு வந்தது.
இதனையடுத்துஇ ‘சுவாசரிய’ ஆம்புலன்ஸ் சேவையால் நோயாளியை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு
செல்வதற்கு முன்பு அவர் துறைமுக வளாகத்திலேயே கிருமி நீக்கம் செய்யப்பட்டார்.

காவல்துறைக்கு மூன்று கொரனோ தடுப்பு முகாம்கள் அமைப்பு
காவல்துறைக்கு மூன்று கொரனோ தடுப்பு முகாம்கள் அமைப்பு
இலங்கையில் கொரனோ நோயானது காவல்துறையினருக்கு ஏற்படும்
பட்சத்தில் அவர்களை தனிமை படுத்த மூன்று தனிமை படுத்தல் முகாம்கள் அமைக்க பட்டுள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது
எதிர் வரும் நாட்களில் இந்த நோயானது வேகமாக பரவும் அபாயம் உள்ளது
என கருதும் இலங்கை சுகாதர அமைப்பு இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையில் தம்மை ஈடுபடுத்தியுள்ளது குறிப்பிட தக்கது

இலங்கையில் 214 பேர் கொரனோவால் பாதிப்பு
இலங்கையில் 214 பேர் கொரனோவால் பாதிப்பு
இலங்கையில் இதுவரை கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி
214 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் இன்று நான்கு பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இதுவரை ஏழுபேர் இறந்துள்ளனர் ,தொடர்ந்து பதின் மூவாயிரத்து மேற்பட்டவர்கள்
தனிமை படுத்த பட்டுள்ளனர் ,எதிர்வரும் நாட்களில் இந்த
நோயானது வேகமாக பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
தமிழர் கடல் பகுதி எங்கும் இராணுவம் குவிக்க பாட்டு இறுக்கமான கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளது







