Tag: மின்னல்
பல மாகாணங்களுக்குக் கடுமையான மின்னல் எச்சரிக்கை
பல மாகாணங்களுக்குக் கடுமையான மின்னல் எச்சரிக்கை
பல மாகாணங்களுக்குக் கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவுறுத்தலின்படி, மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவ மாவட்டங்களும் பாதிக்கப்படும் பகுதிகளில் அடங்கும்.
இந்த இடியுடன் கூடிய மழையின் போது, குறிப்பிட்ட பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இதனால் சேத அபாயம் அதிகரிக்கக்கூடும் என்றும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கத்தால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழையின் போது மக்கள் வீட்டிற்குள் தஞ்சம் புகவும், மரங்களின் கீழ் தங்குவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளைத் தவிர்க்க வேண்டும்.
இடியுடன் கூடிய மழையின் போது கம்பிவழித் தொலைபேசிகள் மற்றும் மின்சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
மிதிவண்டிகள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், விழுந்த மரங்கள்
மற்றும் மின்கம்பிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு மேலும் அறிவுறுத்தப்படுகிறது.
அவசர காலங்களில், உள்ளூர் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு குடியிருப்பாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

நான்கு மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை
நான்கு மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை
நான்கு மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை கொழும்பு மற்றும் நான்கு மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை
கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை
கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளில் இடியுடன்
கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.
இந்த இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இதனால் உயிர் மற்றும்
சொத்துக்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள்
இடியுடன் கூடிய மழை
வலியுறுத்தப்பட்டுள்ளனர். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள
திறந்தவெளிப் பகுதிகளில், மரங்களுக்கு அடியில் தங்குவதைத் தவிர்க்கவும், வீட்டிற்குள் தஞ்சம் அடையவும் மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
புயல் காலங்களில் கம்பி தொலைபேசிகள் மற்றும் மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், மிதிவண்டிகள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்க்கவும் திணைக்களம் எச்சரித்தது.
மரங்கள் மற்றும் மின் இணைப்புகள் விழுவது குறித்து குடியிருப்பாளர்கள் மேலும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவசரநிலை ஏற்பட்டால், உள்ளூர் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மின்னல் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
மின்னல் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
மின்னல் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை ,பலத்த மின்னல் தாக்கம் குறித்து இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும்,
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும், இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல்
ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
இன்று (04) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் அபாயத்தை குறைக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது
மின்னல் தாக்கி ஒருவர் பலி
மின்னல் தாக்கி ஒருவர் பலி
மின்னல் தாக்கி ஒருவர் பலி ,அரலகங்வில பொலிஸ் பிரிவின் கெக்குளுவெல பகுதியில் நேற்று வயல்வெளியில் வேலை செய்துக் கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
மின்னல் தாக்கியதில் காயமடைந்த நபர் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர் அரலகங்வில, கெக்குலுவெல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இதில் மற்றொரு நபரும் காயமடைந்து அரலகங்வில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
மின்னல் தாக்கத்தினால் அவசரசிகிச்சைப் பிரிவுநாசம்
மின்னல் தாக்கத்தினால் அவசரசிகிச்சைப் பிரிவுநாசம்
மின்னல் தாக்கத்தினால் அவசரசிகிச்சைப் பிரிவுநாசம் ,வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு (ETU) கடும் மழையுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் முற்றாக சேதமடைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற மின்னல் தாக்கத்தினால் வைத்தியசாலையில் இருந்த அனைத்து மின் உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளதுடன், மின்னல் தாக்கத்தினால் கட்டிடமும் சேதமடைந்துள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (11) வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்தியசாலைக்கு ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார்.
மின்னல் தாக்கத்தால் ETU க்கு ஏற்பட்ட சேதங்கள் சுமார் ரூ. 50 மில்லியன் ஆகுமென அவர் தெரிவித்தார்.
தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா
இச்சம்பவம் தொடர்பில் நேற்று (11) தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய அமைச்சர், இந்த அவசர சிகிச்சைப் பிரிவை புனரமைப்பதற்கு பணம் ஒதுக்கப்படும் எனவும், ஆளுநர் இன்று வைத்தியசாலையை பார்வையிடுவார் எனவும் தெரிவித்தார்.
இந்த மின்னல் தாக்கத்தின் போது பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூன்று நோயாளர்கள் காயமடையவில்லை. எவ்வாறாயினும், மின்னல் தாக்கத்தின்
பின்னர் தீ பரவியமையினால் நோயாளிகளை வெளியேற்ற பெரும் முயற்சிகளில் ஈடுபட வேண்டியிருந்ததாக வைத்தியசாலை ஊழியர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
Featured
அண்ணன் தங்கை மின்னல் தாக்கி பலி
அண்ணன் தங்கை மின்னல் தாக்கி பலி
அண்ணன் தங்கை மின்னல் தாக்கி பலி ,இரத்தோட்டை வெல்காலயாய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த சகோதரனும் சகோதரியும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
மழையுடன் மின்னல்
நேற்று மாலை பெய்த மழையுடன் மின்னல் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெல்காலயாய , இரத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனுமே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மேலதிக விசாரணை
சடலங்கள் இரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இரத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மின்னல் தாக்குதல் காரணமாக அண்ணன் தங்கை பலியான சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .
கோடைகாலத்தில் ஏற்பட்ட கலாநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட இயற்கையின் தாக்குதலில் சிக்கி அண்ணன் .தங்கை .பலியான சம்பவம் நாடளாவிய ரீதியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .
கடந்த தினம் முல்லைத்தீவு பகுதியிலும் இடி தாக்குத்தலில் சிக்கி முன்னாள் போராளி ஒருவர் பலியாகி இருந்தார் .
அதனை அடுத்து தற்போது மின்னல் தாக்கி அண்ணன் தங்கை பலியாகியுள்ளனர் .
Featured
மின்னல் தாக்கத்தில் இருவர் பலி
மின்னல் தாக்கத்தில் இருவர் பலி
மின்னல் தாக்கத்தினால் இருவர் பலியாகியுள்ளனர். அதிலொருவர் 1990 அம்புலன்ஸ் சாரதியாவார்.
மொனராகலை, கொணகங்கார பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரத்தரங்கன்ன பிரதேசத்தில் வயல்வெளியில் வேலைச்செய்துக்கொண்டிருந்த இருவரே பலியாகியுள்ளனர்.
அம்புலன்ஸ் சாரதி (வயது 32), திருமணம் முடிக்காத இளைஞன் (வயது 31) ஆகியோரே கடந்த 27ஆம் திகதியன்று பலியாகியுள்ளனர்.
மின்னல் தாக்கத்தில் இருவர் பலி
வயல்வெளியில் வேலைச் செய்துக்கொண்டிருந்த போது கடுமையான மழை பெய்தமையால், அங்குள்ள வாடியில் இருவரும் அமர்ந்திருந்துள்ளனர். அதில் ஒருவரின் அலைபேசிக்கு அழைப்பு வந்துள்ளது. அதற்கு பதிலளிக்கும் போதே கடுமையான மின்னல் வெட்டியுள்ளது. அதன் பின்னரே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
அவ்விருவரும் இருந்த வாடி தீப்பற்றி எறிவதை கண்ட, சாரதியின் தாய், கூக்குரல் எழுப்பியுள்ளார். அதன்பின்னர், கிராமவாசிகள் இணைந்து வாடிக்குச் சென்றுள்ளனர். எனினும், அவ்விருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. சுமணசிறி குணதிலக்க
Featured
மின்னல் தாக்கி ஒருவர் மரணம் கைபேசி சேதம்
மின்னல் தாக்கி ஒருவர் மரணம் கைபேசி சேதம்
மின்னல் தாக்கி ஒருவர் மரணம் ஒருவர் அவரது கைபேசி பலத்த ,
சேதமடைந்த நிலையில் காணப்படும் காட்சிகள் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
இலங்கை பதுளை மொரான பகுதியில் நீர் அருவி அருகில் நின்று கொண்டிருந்த,நபரையே மின்னல் திடீரென தாக்கியது ,இந்த மின்னல் தாக்குதலில் அவர் சம்பவ இடத்தில பலியானார் .
அவர் பயன் படுத்திய கையடக்க தொலைபேசியை மின்னலை தாக்கி ,
அதன் ஊடக இவர் இறந்திருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இலங்கையில் ஆண்டு தோறும் மின்னல் தாக்குதலில் சிக்கி, நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மரணமாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
மின்னல் தாக்கி 27 கால் நடைகள் மரணம்
மின்னல் தாக்கி 27 கால் நடைகள் மரணம்
இலங்கை ஏறாவூர் பகுதியில் மின்னல் தாக்கி 27 கால்நடைகள் பலியாகியுள்ளன .
கடந்த இரவு இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் சிக்கியே 9 ஆடுகள், 11 கோழிகள், 4 சேவல்கள், 3 வாத்துக்கள் என்பன பலியாகியுள்ளன .
இந்த விலங்குகள் முஸ்லீம் பண்ணை வளர்ப்பு நபராது வீட்டில் இடம்பெற்றுள்ளது .
தனது வளர்ப்பு பிராணிகள் இறந்த நிலையில் ,உரிமையாளர் பெரும் சோகத்தில் உறைந்துள்ளார் .
ஒயில் கூதம் மீது மின்னல் தாக்குதல் 17 பேர் மரணம் 80 பேர் காயம்
ஒயில் கூதம் மீது மின்னல் தாக்குதல் 17 பேர் மரணம் 80 பேர் காயம்
கியூபா நாட்டின் Matanzas பகுதியில் உள்ள எரிபொருள் களஞ்சிய கூதம் மீது மின்னல் தாக்கியதில் அங்கு பணியாற்றிய 17 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர் மேலும் 80 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுவரை இந்த மின்னல் தாக்குதலில் சிக்கி 17 பேர் காணாமல் போயுள்ளளனர் .இவ்வாறு காணாமல் போனவர்கள் இறந்திருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இந்த எரிபொருள் களஞ்சிய மின்னல் தாக்குதல் தீ பல மைல்களுக்கு அப்பாலும் தென்பட்டது .
இங்கு இடம் இடம்பெற்ற மின்னல் தாக்குதல் உயிர் இழப்புக்கள் மேலும் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது.
வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்குதல் 2 பேர் மரணம் 2 பேர் காயம்
வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்குதல் 2 பேர் மரணம் 2 பேர் காயம்
அமெரிக்கா வெள்ளை மாளிகை அருகில் மின்னல் தாக்கியதில் இருவர் சம்பவ இடத்தியத்தில் பலியாகினர் .
மேலும் இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.
இந்த மின்னல் தாக்குதல் சம்பவம் வெள்ளை மாளிகை ஊழியர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுளளது.
மின்னல் தாக்குதல் தடுப்புக்கள் அமைக்க பட்டுள்ள பொழுதும் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது.
மின்னல் தாக்குதலில் சிக்கிக் 25 பேர் காயம்
மாவனெல்ல − பெமினிவந்த பகுதியிலுள்ள மயானமொன்றில் பெண்ணின் சடலத்தை புதைக்கும் போதே மின்னல் தாக்கியுள்ளது
இவ்வாறு காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்
மாவனெல்ல பகுதியில் மின்னல் தாக்கியதில் சிறுவர்கள் உள்ளிட்ட 25 பேர் காயமடைந்துள்ளனர்.
மாவனெல்ல − பெமினிவந்த பகுதியிலுள்ள மயானமொன்றில் பெண்ணின் சடலத்தை புதைக்கும் போதே மின்னல் தாக்கியுள்ளது
இவ்வாறு காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்
மின்னல் தாக்கி விவசாயி பலி
மின்னல் தாக்கி விவசாயி பலி
திருக்கோயில், சாகாமம் பகுதியில் நேற்று (04) மாலை மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாகாமத்தை சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து மோகனராசா (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர், தனது மகனின் வயலில் வரம்பு கட்டிக் கொண்டிருந்தபோதே மின்னல் தாக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மின்னல் தாக்குதலில் 6 பேர் பரிதாப மரணம்
மின்னல் தாக்குதலில் 6 பேர் பரிதாப மரணம்
இந்திய மத்திய பிரதேச பகுதியில் கடும் மழை பொலிந்து வருகிறது ,இவ்வேளை இடி மின்னல்
தாக்குதல். அதிகரித்து காணப்படுகிறது
இவ்வேளை மின்னல் தாக்குதலில் சிக்கி ஆறு அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர் ,இத்த
சம்பவத்தால் அந்த கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
மின்னல் தாக்கி ஒரே நாளில் 60 பேர் மரணம்
மின்னல் தாக்கி ஒரே நாளில் 60 பேர் மரணம்
இந்திய உத்தர பிரதேசத்த்தில் மின்னல் தாக்கி ஒரே நாளில் அறுபது பேர் மரணமாகியுள்ளனர்
இந்த திடீர் இயற்கையின் சீற்ற மரணம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்த மின்னல் தாக்குதலில் இருந்து எப்படி தப்பித்து கொள்வது என்பது தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டு வருகிறது
வேக சாலையில் கார் மேலே வீழ்ந்த மின்னல்
வேக சாலையில் கார் மேலே வீழ்ந்த மின்னல்
Waverly, Kansas. அதிக வேக சாலை ஒன்றில் பயணித்து கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மின்னல் திடீரென தாக்கியது ,இதன் பொழுது அந்த கார் பலத்த சேதமடைந்துள்ளது
குறித்த கார் மீது மின்னல் தாக்கும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது ,மேற்படி சம்பவ நிகழ்வு பார்ப்பவர்களை மிரள வைக்கிறது
மின்னல் தாக்கி 17 பேர் காயம் – அதிர்ச்சியில் மக்கள்
மின்னல் தாக்கி 17 பேர் காயம் – அதிர்ச்சியில் மக்கள்
இலங்கை கொட்டகால பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த 17
தொழிலார்கள் மீது மின்னல் தாக்கியது இதில் 17 பேர் பலத்த மின்னல் தாக்குதலுக்கு உள்ளன
நிலையில் மருத்துவம மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மின்னல் தாக்கி 16 பேர் மரணம் – கண்ணீரில் உறவுகள்
மின்னல் தாக்கி 16 பேர் மரணம் – கண்ணீரில் உறவுகள்
பங்களாதேஸ் நாட்டில் கடந்த தினம் ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் சிக்கி சுமார் 16 பேர் மரணமாகியுள்ளனர்
மேற்படி இயற்கையின் தாக்குதல் சம்பவம் அந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இறந்தவர்கள் உடல்கள் தீ காயங்களுடன் காணப்படுவதே மக்கள் அதிர்ச்சியில் உறைய காரணமாக அமைந்துள்ளது
வடக்கு லண்டனில் மின்னல் தாக்கி சிறுவன் பலி
வடக்கு லண்டனில் மின்னல் தாக்கி சிறுவன் பலி
வடக்கு லண்டன் பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதில் ஒன்பது வயது சிறுவன் பலியாகியுள்ளான்
மேற்படி சம்பவம் மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
இலங்கையை போல பிரிட்டனில் மின்னல் தாக்கி மக்கள் பலியாகுவதில்லை ,அதனை தடுக்கும்
கருவிகள் பொருத்த பட்டியிருப்பதால் மக்கள் ,பாதிப்பின்றி தப்பித்து கொள்கின்றனர்
ஆனால் அவை கடந்து இந்த உயிர் பலி இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
சிறுமிகள் இல்லாம மீது மின்னல் தாக்குதல் – தப்பிய பிள்ளைகள்
சிறுமிகள் இல்லாம மீது மின்னல் தாக்குதல் – தப்பிய பிள்ளைகள்
மன்னார் பெற்றா பகுதியில் அமைந்துள்ள ´வெற்றியின் நல் நம்பிக்கை´ இல்லத்தின் மீது நேற்று
(07) மாலை இடி, மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது குறித்த இல்லத்தின் மின் இணைப்புக்கள் முழுமையாக இடி, மின்னல் தாக்கத்தினால் எரிந்து சேதமாகி உள்ளது.
இதன்போது குறித்த இல்லத்தில் சிறுமிகள், பாடசாலை மாணவிகள் என 15 பேர் இருந்துள்ளனர்.
எனினும் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.





























