Tag: வட்டி
அமெரிக்காவில் வட்டி வீதம் எகிறியது
அமெரிக்காவில் வட்டி வீதம் எகிறியது
அமெரிக்காவில் 30 வருடம் வீட்டு கடன் வட்டி வீதம் ஏழு சதவீதமாக அதிகரித்துள்ளது .அமெரிக்காவில் புதிய ஆட்சி மாற்றத்தின் பின்னர் கூட இந்த வீட்டு வட்டி கடன் வீதம் அதிகரித்துள்ளது .
வீடுகள் விலையில் வீழ்ச்சி அடைய கூடும் என்கின்ற கருத்துக்கள் காண படுகின்றன .
அமெரிக்கா பொருளாதாரத்தில் வீடுகள் மற்றும் தங்கம் என்பனவே அதன் பொருளாதாரத்தை காப்பாற்றி வைத்துள்ளது .
ஆனால் தற்போது வீட்டு விலையில் மாற்றத்தையும் ,சரிவையும் இந்த வட்டி வீதம் ஏற்படுத்த கூடும் என தெரிவிக்க படுகிறது .
இதனால் வரும் காலங்களில் வீடு வாங்குபவர்கள் விலையில் வீழ்ச்சி ஏற்படலாம் என்ற நிலை காணப்படலாம் என அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர் .
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்

- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது

- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’

- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்

- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

வட்டி வீதத்தை குறைக்க தீர்மானம்
வட்டி வீதத்தை குறைக்க தீர்மானம்
மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதத்தை 2.5 வீதத்தால் குறைக்கும் தீர்மானத்தின் பிரகாரம், உரிமம் பெற்ற வங்கிகள் வட்டி வீதங்களை குறைக்கும் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
மத்திய வங்கியின் நாணய சபை நேற்று முன்தினம் கூடிய போது, கொள்கை வட்டி வீதத்தை 2.5 வீதத்தால் குறைக்க தீர்மானித்துள்ளது.
இதற்கிணங்க, மத்திய வங்கியின் நிலையான வைப்பு வட்டி வீதம் 15 வீதத்திலிருந்து 13 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
வட்டி வீதத்தை குறைக்க தீர்மானம்
துணை நிலை கடன் வழங்கலுக்கான வட்டி வீதத்தை 14 வீதத்திற்கும் 250 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கும் மத்திய வங்கியின் நாணயசபை தீர்மானித்துள்ளது.
அத்துடன், தற்போது மிகவும் வேகமாக பணவீக்கம் குறைவடைந்து வருவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்
Featured
இலங்கை மத்திய வங்கியில் வட்டி எவ்வளவு தெரியுமா
இலங்கை மத்திய வங்கியில் வட்டி எவ்வளவு தெரியுமா
இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2022 ஒத்தோபர் 05ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும்
முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.
இத்தீர்மானத்தினை மேற்கொள்கையில் சபையானது அண்மைய பேரண்டப்பொருளாதார நிலைமைகள், எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள் மற்றும் பேரண்டப்பொருளாதார எறிவுகள் என்பவற்றினைக் பரிசீலனையில்
கொண்டது. தற்போது நிலவுகின்ற இறுக்கமான நாணய நிலைமைகள், குறைவடைந்து செல்கின்ற பணவீக்கத்தின் வேகம் மற்றும் உள்நாட்டு மற்றும்
உலகளாவிய காரணிகள் இரண்டினாலும் ஆதரவளிக்கப்பட்டு குறுகிய காலத்தில் எதிர்பார்க்கப்படும் பணவீக்க வீழ்ச்சிப் பாதை என்பவற்றினை சபை குறித்துக்காட்டியது.
இலங்கை மத்திய வங்கியில் வட்டி எவ்வளவு தெரியுமா
எதிர்வரும் காலப்பகுதியில் எதிர்பார்க்கப்டும் பணவீக்க வீழ்ச்சிப் பாதையினையடைவதற்கு நாணய நிலைமைகள் போதியளவில் இறுக்கமாகக் காணப்படுவதாக சபை அபிப்பிராயப்பட்டுள்ளது.
இறுக்கமான இறை வழிமுறைகள் ஏற்கனவே நடைமுறையிலுள்ள இறுக்கமான நாணயக்கொள்கை வழிமுறைகளின் தாக்கங்களை
முழுமையடையச்செய்து கூட்டுக்கேள்வி அழுத்தங்களின் ஏதேனும் கட்டியெழுப்புதலினை தணித்து அதன்மூலம் பணவீக்க எதிர்பார்க்கைகளை நிலைநிறுத்தி முதன்மைப்
பணவீக்கத்தினை நடுத்தர காலத்தில் இலக்கிடப்பட்ட 4-6 சதவீத மட்டத்திற்குக் கொண்டுவருவதில் துணைபுரியும்.
- எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்தார்

- சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்புக் கோரி ஹட்டன் இளைஞர்கள் மௌனப் போராட்டம்

- மகாவலி ஆற்றங்கரையோரம் மக்களுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

- 2026-ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலா வருவாய் சரிவு

- கனமழைக்கு மத்தியில் ஹட்டன்–போகவந்தலாவ சாலையில் நிலச்சரிவு

- தித்வா புயலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ரூ. 2.27 பில்லியனுக்கும் அதிகமான சேதம்

- விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் 48 கடவுச்சீட்டுகளுடன் முன்னாள் குடிவரவுத் திணைக்கள ஊழியர் கைது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடலுக்காக ஆரஞ்சு எச்சரிக்கை

- ரியாத் மீது ஹூதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம்

- கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியாவில் உள்ள பல பகுதிகளுக்கு சிவப்பு நிலச்சரிவு எச்சரிக்கை

வங்கி வட்டி வீதம் அதிகரிப்பு – மக்களை குஷிப்படுத்த நடவடிக்கை
வங்கி வட்டி வீதம் அதிகரிப்பு – மக்களை குஷிப்படுத்த நடவடிக்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து தற்போது வங்கியில்
பணம் நீண்ட நாள்கணக்கில் வைப்பு புரிந்தால் அதற்கு 13,50 வீதம் வட்டி வழங்க படுகிறது
அதே போல அரசு வழங்கும் வட்டிக்கு வீதம் 14.50 ஆக அதிகரித்துள்ளது ,இதன்
மூலம் வீழ்ந்த பொருளாதாரத்தை நிலை நிமிர்த்த அரசு முயன்று வருகின்றமை குறிப்பிட தக்கது
மத்திய வங்கி வங்கியில் அடகு வைத்தலுக்கு- அதிக வட்டி -அதிர்ச்சியில் மக்கள்
மத்திய வங்கி வங்கியில் அடகு வைத்தலுக்கு- அதிக வட்டி -அதிர்ச்சியில் மக்கள்
வங்கிகளால் அடகு முற்பணங்களின் மீது தற்போது அறவிடப்படும் வட்டி வீதம் 12 மாக குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளதாவது:
உரிமம்பெற்ற வங்கிகளால் அடகு முற்பணங்களின் மீது தற்போது அறவிடப்படும்
வட்டி வீதம் ஆண்டுக்கு 12 சதவீதத்திலிருந்து 17.5 சதவீதம் வரை இருப்பதை இலங்கை வங்கி அவதானித்துள்ளது.
கொவிட் – 19 பரவலாக்கலின் விளைவாக ஏற்பட்ட பாதகமான பொருளாதார நிலைமை காரணமாக தமது குறுங்கால நிதித் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்காக தங்க நகைகளை
அடகுவைக்கும் குறைந்த வருமானமீட்டும் தனிநபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய தேவைப்பாட்டைக்
கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை உரிமம்பெற்ற வங்கிகளின் அடகு முற்பணங்களின் மீது உயர்ந்தபட்ச வட்டி வீதங்களை விதித்துள்ளது.
இதன்படி, 2020.04.27 முதல் அடகு பிடிப்பதற்காக அடமானம் வைக்கப்படும் தங்கத்தினால் செய்யப்பட்ட தனிநபர்
உடைமைகளின் பிணை மீது வழங்கப்பட்ட கடன் பணத்தின் மீது விதிக்கப்படக்கூடிய உச்சபட்ச வட்டி வீதமானது வருடாந்த வட்டி 12
சதவீதமாகவும் அல்லது அடகுக் கடன் காலம் ஒரு வருடத்திற்குக் குறைவானதெனின் மாதாந்த வட்டி 1 சதவீதமாக நிர்ணயிக்க கோரி
உரிமம்பெற்ற வங்கிகளுக்கு நாணயவிதிச் சட்டக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்ந்தபட்ச வட்டி வீதம், அனைத்து
புதிய அடகு முற்பணங்களுக்கும் மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்டு இக்கட்டளையின் திகதியிலிருந்து புதுப்பிக்கப்படக்கூடிய அடகு முற்பணங்களுக்கும் உரியதாகும்.
மேலும், அடகுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் ஏனைய நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான
விலையில் அவசர நிதி வசதியைப் பெறுவதற்கு ஏதுவாக குறைந்த வட்டி விகிதத்தை வழங்கும் என எதிர்பார்ப்பதுடன், இதன்மூலம்
பின்னர் அவர்கள் தங்களுடைய அடகுவைக்கப்பட்ட தங்க நகைகளை மீட்டெடுக்க முடியும்.

இலங்கை மத்திய வாங்கி அதிரடி – வட்டி வீதம் குறைப்பு
இலங்கை மத்திய வாங்கி அதிரடி – வட்டி வீதம் குறைப்பு
இலங்கை மத்திய வங்கியானது மக்கள் நலன் கருதி தற்பொழுது வட்டி வீதத்தை பத்து வீதமாக குறைத்துள்ளது
இதனால் பயனாளர்கள் குஷியில் உறைந்துள்ளனர் ,கொரனோ நோயின்
காரணமாக அவசர கால நிகழ்வின் ஊடாக இந்த அதிரடி குறைப்பு இடம்பெற்றுள்ளது


















