Tag: சிறுமி
பெண்களிடம் அடி வாங்கிய அர்ச்சுனா | சிறுமி கட்டி வைத்து தாக்குதல்
பெண்களிடம் அடி வாங்கிய அர்ச்சுனா | சிறுமி கட்டி வைத்து தாக்குதல்
பெண்களிடம் அடி வாங்கிய அர்ச்சுனா | சிறுமி கட்டி வைத்து தாக்குதல்
யாழில் சிறுமியை கட்டி வைத்து கொடூரம்
யாழில் சிறுமியை கட்டி வைத்து கொடூரம்
யாழில் சிறுமியை கட்டி வைத்து கொடூரம் ,வடமராட்சி கிழக்கு, குடத்தனை பொற்பதியில் 14 வயது சிறுமி ஒருவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பாக, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
பருத்தித்துறை சட்ட வைத்திய அதிகாரி, மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவர், நேற்று முன்தினம் (23) மாலை, அயலில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார்.
இதன்போது, இனிப்பு வகையை கையாடியதாகக் கூறி, கடையின் உரிமையாளரான ஒரு பெண், சிறுமியை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உடல் காயங்களுக்கு உள்ளான சிறுமி, அன்று இரவே பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை சட்ட வைத்திய அதிகாரி, சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டறிந்து, தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, வைத்தியசாலையில் உள்ள பருத்தித்துறை பொலிஸார் மூலம் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மருதங்கேணி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றபோது, அவர் மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தாக்கியதாகக் கூறப்படும் பெண்ணின் வீட்டிற்கு பொலிஸார் சென்றபோது, வீடு பூட்டியிருந்ததால், தொலைபேசி மூலம் அவருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பு ஒன்று, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் தொலைபேசி வழியாக முறையிட்டுள்ளது
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

ஈழ பாடல் பாடி அசத்திய 9வயது சிறுமி
ஈழ பாடல் பாடி அசத்திய 9வயது சிறுமி
ஈழ பாடல் பாடி அசத்திய 9வயது சிறுமி ,கடந்த தினம் இடம்பெற்ற மாவீரர்நாள் நிகழ்வுய் வன்னி மைந்தனின் ,vanni forex live எனும் டிக் டாக் ஊடக நேரலை செய்யப்பட்டது .
இதன் பொழுது முதலாவதாக கலந்து கொண்ட இந்த சிறுமி சத்திய சில்வியா நோர்வே – எங்கிருந்தாலும் ,,,எனும் தேச பாடல் ஒன்றை பாடி அசத்தி இருந்தார் .
குழுமி இருந்த மக்கள் பாராட்டை பெற்றதுடன் மீளவும் ஒருமுறை பாடும் படி கேட்க பட்டதை அடுத்து அந்த அந்த பாடலை சில்பியா மீளவும் துணிந்து அழகுற பாடினார் .
கடல் கடந்து வருகைதந்து ,இந்த வெளிநாட்டு மண்ணில் வாழ்ந்து வருகின்ற பொழுதும் எமது தேசிய கனவை சுமந்து இந்த சிறுவர்கள் பயணிப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது .
அந்த வகையில் நேரலைக்கு வந்து இந்த தேசிய பாடலை பாடி சென்ற அந்த அற்புக குரலுக்கு சொந்தமான சில்பியாவையம் அவரது தந்தாய் ,மாற்றும்
பாடல் பாடிய எஸ், செல்வன்,வாணி ,பிரகாஷ் ,பீகே ,எஸ்,ஜேகே தம்பதிகள் ,ஏனையவர்களுக்கும் கவிதைகள் பாடிய சுலோஜனா ,வாணி, வெற்றி மாறன், அருள்நிலா வாசன் ,முகுந்தன் ஆகிய அணைத்து உறவுகளையும் எதிரி இணையமும் வாழ்க வாழ்கவென வாழ்த்தி கொள்கிறது .
குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி
குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி
குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி ஒருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
கர்ப்பம் தரித்திருந்த 15 வயது சிறுமியொருவர் தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்று (10) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி துன்னாலை
இதன்போது, வடமராட்சி துன்னாலை பகுதியை அவர்கள் விலாசமாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பிரசவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ள நிலையில், குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு இன்று (11) காலை முதல் தாய், சிறுமி என இருவரும் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் செல்வதற்கு கரணம் என்ன அறிந்து .
பாதுகாப்பான பாலியல் கல்வி முறையை இலங்கையில் மாணவர்களுக்கு வாழங்குவதன் ஊடாகவே ஒரு சண்டஹ்தியின் துன்பியல் வாழ்வியலை தடுக்க முடியும்
Featured
சிறுமி கொலை மக்கள் போராட்டம்
சிறுமி கொலை மக்கள் போராட்டம்
சிறுமி கொலை மக்கள் போராட்டம்,வவுனியாவில் 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் நீதி கோரி வவுனியா மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
சிறுமியின் கொலையில் மர்மம்
இறந்த சிறுமியி கொலையில் மர்மம் காணப்படுவதாகவும் அதனால் அந்த மர்மத்தை கண்டறிந்து நீதியை நிலை நட்ட கோரி மக்கள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
இந்த சிறுமியின் கொலைக்கு அவரது சிறிய தந்தையே காரணம் எனவும் ,அதனால் அப்பாவி 17 வயது இளம் பெண் சாவுக்கு காரணமானவரை உடனே கைது செய்ய வேண்டும் என கோரியே, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
ஈச்சம் குளம் பொலிஸ் நிலையில் முற்றுகை
வவுனியா ஈச்சம் குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட தாரணி குள மக்கள் இறந்த அப்பாவி சிறுமிக்கு நீதி நிலை நாட்டை கோரியே இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இளம் பெண்ணின் படுகொலையின் பின்புலத்தில் அரசியல் சக்திகள் ஆதரவு உள்ளதாக அந்த மக்கள் தெரிவித்து வருகின்றனர் .
இலங்கையில் தொடரும் மர்ம படு கொலைகள்
இலங்கையில் நாள் தோறும் தொடரும் இடம்பெறும் இவ்வாறன மர்ம படுகொலைகளினால் மக்கள் மத்தியில் ஒருவித பீதி நிலை ஏற்பட்டுள்ளது .
காடுகள்,நீர் நிலைகள் ,குளங்கள்,ஏரிகள்,கிணறுகள் ,குப்பை மேடுகள் என்பனவற்றில் மனித சடலங்கள் கண்டு பிடிக்க பட்டு வருகின்றன .
இவ்வாறு தொடரும் இந்த கொலைகளின் பின்புலத்தில் உள்ளது யார் என்பதை கண்டு பிடிக்க முடியாது ,இலங்கை காவல்துறை உள்ளதாக மக்கள் மன்றம் குற்றம் சுமத்தி வருகிறது .
சிலரது வன்மத்திற்காக படுகொலை செய்ய படும் அப்பாவி உயிர்களுக்கு நீதி வேண்டும் என கோரிய, மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்துகின்றனர் .
இவ்வாறு போராட்டம் நடத்தும் மக்களின் கோரிக்கைகள் தட்டி கழிக்க பட்டு பல படுகொலைகள் சான்று இன்றி மவுனமாகவே மறக்கடிக்க பட்டு வருவதாக, பாதிக்க பட்ட மக்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர் .
அதுபோல இந்த சிறுமியின் மரணம் நிகழ கூடாது என்றே இந்த மக்கள் போராட்டம் நடத்துகின்றனர் .
Featured
பெரியப்பாவால் துஷ்பிரயோகம் சிறுமி சொல்ல மறுத்தது ஏன்
பெரியப்பாவால் துஷ்பிரயோகம் சிறுமி சொல்ல மறுத்தது ஏன்
11 வயதும் 10 மாதங்களுமான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், அவருடைய பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம், மொனராகலை, மெதகம பொலிஸ் பிரிவில் ரத்தனதெனிய ஹொகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
11 வயதும் 10 மாதங்களுமேயான இச்சிறுமி, 2019 ஆம் ஆண்டில் இருந்து பெரியப்பாவினால், அச்சிறுமியின் வீட்டில் வைத்தே, இரண்டு வருடங்களாக அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
அச்சிறுமியின் வீட்டில் ஒருவர் திருடுவதற்கு மறைந்துள்ளார் என்பது தொடர்பில் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வந்த அயலவர்கள், அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 15 வயதான சிறுமியுடன் காதல் உறவை கொண்டிருப்பதால் அந்த வீட்டுக்குச் சென்றதாகவும், அச்சிறுமியை எவ்விதமான தொந்தரவுக்கும் உட்படுத்த வில்லையென பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பெரியப்பாவால் துஷ்பிரயோகம் சிறுமி சொல்ல மறுத்தது ஏன்
எனினும், சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அச்சிறுமி, அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையின், தன்னுடைய பெரியப்பா, அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார். எனினும், வெளியில் சொன்னால், இரு வீட்டாருக்கும் இடையில், பிரச்சினை ஏற்படும் என்ற பயத்தால், வெளியில் சொல்லவில்லை என்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஹொகொல்ல ரத்தனதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ‘சமந்த” என்றழைக்கப்படும் பெரியப்பாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரை பிபில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த மெதகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
15 வயது சிறுமியை கடத்திய 17 வயது சிறுவன்
15 வயது சிறுமியை கடத்திய 17 வயது சிறுவன்
யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று, தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள தொல்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அப்பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவனின் வீட்டில் சிறுமி தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், வீட்டிற்கு விரைந்த பொலிஸார், சிறுமியை மீட்டதுடன் சிறுவனை கைது செய்தனர்.
மீட்கப்பட்ட சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார் கைது செய்யப்பட்ட சிறுவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மன்னார் சிறுமியின் மரணத்திற்கான காரணம் வெளியானது
மன்னார் சிறுமியின் மரணத்திற்கான காரணம் வெளியானது
தலைமன்னார் – வடக்கு பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட 10 வயது சிறுமியின் சடலம் மீதான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.
இதில் குறித்த சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானமைக்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன் முன்னிலையில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் சிறுமியின் மரணத்திற்கான காரணம் வெளியானது
இதேவேளை, சம்பவம் தொடர்பில் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட தென்னந்தோப்பில் பணியாற்றி வந்த திருகோணமலை – குச்சவெளி பகுதியைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்
அவர் மன்னார் நீதவான் முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்டார்.
இந்தநிலையில், சந்தேகநபரை 48 மணித்தியாலத்துக்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு மன்னார் நீதவான் அனுமதியளித்துள்ளார்
நேற்று முன்தினம் இரவு முதல் குறித்த சிறுமி காணாமல் போயிருந்ததாக அவரது பாட்டி காவல்துறையினரிடம் முறைப்பாடளித்திருந்தார்.
இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சிறுமியின் சடலம் நேற்று மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

தலைவர் பிறந்த நாளுக்கு லண்டன் சிறுமியின் அசத்தல் video
தலைவர் பிறந்த நாளுக்கு லண்டன் சிறுமியின் அசத்தல் video
தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 69 தாவது பிறந்த நாளை உலகம் மக்கள் கொண்டாடி வருகின்றனர்
லண்டன் மிச்சம் பகுதியில் உள்ள சிறுமி ஒருவர் தனது இல்லத்தில் உள்ள தலைவர் படத்தின் முன்பாக ,அவரை வணங்கி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன .
இந்த காட்சியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளது .
தலைவர் பிறந்த நாளுக்கு லண்டன் சிறுமியின் அசத்தல்
கடல் கடந்து வந்த பொழுதும் ,மண்ணில் பிறவாது இந்த நாடுகளில் பிறந்து ,வளர்த்த பொழுதும் எமது தேசியத்தையும் மண்ணையும் நேசிக்கும் இவ்வாறான குழந்தைகள் நினைவு திறனும் ,பற்றும் போற்றுதலுக்கும் உரியது
நய வஞ்சகத்தால் தலைவர் பிரபாகரன் வீழ்த்த பட்டு அந்த போர் மழுங்கடிக்க பட்ட பொழுதும் ,விழுதுகள் அவரது கனவை தாங்கி பயணிக்கும் இந்த விடயங்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது .
வாழ்த்துக்கள் அம்மாடி .
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG
- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG
- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG
- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death
- தேனிசை செல்லப்பா வீரமரணம்
மருத்துவ தவறால் இடது கையை இழந்த சிறுமி
மருத்துவ தவறால் இடது கையை இழந்த சிறுமி
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட எட்டு வயது சிறுமி ஒருவருக்கு ஊசி மருந்து ஏற்றியதில் ஏற்பட்ட தவறு காரணமாக இடது கை மணிக்கட்டுடன் துண்டிக்க வேண்டிய துப்பாக்கிய சூழல் ஏற்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், காய்ச்சல் காரணமாக குறித்த சிறுமி அனுமதிக்கப்பட்ட நிலையில் நோய் எதிர்ப்புக்காக ஊசி மூலம் மருந்து ஏற்றப்பட்டது.
ஊசி ஏற்றப்பட்ட மறுநாள் இரவு சிறுமி வலியினால் அவதிப்பட்ட நிலையில் குறித்த விடுதியில் கடமையில் இருந்த தாதியர்களிடம் சிறுமியின் நோய்நிலை தொடர்பில் தாயார் கூறிய போது ஊசி ஏற்றப்பட்டால் நோய் இருக்கும் என விடுதியின் தாதியர்கள் பொறுப்பற்ற விதத்தில் பதில் அளித்ததாக பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சிறுமியின் கை நரம்பு பாதிக்கப்பட்டமை உணர்ந்த வைத்தியர்கள் அதனை அகற்ற வேண்டும் எனத் தெரிவித்த நிலையில் சனிக்கிழமை (02) காலை சத்திர சிகிச்சை மூலம் குறித்த சிறுமியின் மணிக்கட்டுக்குட்பட்ட பகுதி அகற்றப்பட்டது.
சிறுமி அனுமதிக்கப்பட்ட விடுதியின் பொறுப்பு வைத்தியர் குறித்த தினத்தில் கடமையில் இருந்தாரா என்பது தொடர்பில் சந்தேகங்கள் எழும் நிலையில் விடுதியில் இருந்த தாதியர்களின் அலட்சியப் போக்கும் சிறுமியின் கை அகற்றப்படுவதற்கு காரணமாக இருந்துள்ளது என்ற குற்றச்சாட்டு வலுவாக முன்வைக்கப்படுகிறது.
மருத்துவ தவறால் இடது கையை இழந்த சிறுமி
குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தியை தொடர்பு கொண்டு கேட்டபோது, இடம்பெற்ற சம்பவம் மனவேதனையை உண்டு பண்ணும் ஒரு சம்பவமாக பார்க்கிறேன்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய மூவர் அடங்கிய விசாரணை குழுவை நியமித்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சுக்கும் குறித்த விடயம் தொடர்பாக அறிவித்துள்ளேன்.
விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பாரபட்சமின்றி எடுப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappaby நிருபர் காவலன்
- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappaby நிருபர் காவலன்
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்by நிருபர் காவலன்
- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONGby நிருபர் காவலன்
- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONGby நிருபர் காவலன்
யாழ்ப்பாணத்தில் 13 சிறுமியை கர்ப்மாக்கிய 73 வயது தத்தா
யாழ்ப்பாணத்தில் 13 சிறுமியை கர்ப்மாக்கிய 73 வயது தத்தா
இலங்கை யாழ்ப்பாணத்தில் 13 சிறுமியை 73 வயது தாத்தா ஒருவர் கர்பமாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது .
பாதிக்க பட்ட சிறுமி வழங்கிய தகவலின் அடைப்படையில் ,வயோதீப தாத்தா கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் .
பாதிக்க பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுளளார் .
குறித்த சிறுமி பாலியல் வன்புணர்வு தொடர்பில், கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .
மேற்படி தாத்தாவினால் நடத்த பட்ட பாலியல் சம்பவம் ,யாழ்ப்பாண மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
போதை பொருள் பாவனை அதிகரிப்பே ,இந்த சீரழிவுகளுக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது .
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death

- தேனிசை செல்லப்பா வீரமரணம்

சிறுமியை கடத்தி விற்க முனைந்த நபர் கைது
சிறுமியை கடத்தி விற்க முனைந்த நபர் கைது
இலங்கையில் அப்பாவி சிறுமியை கடத்தி விற்க முனைந்த நபர் கைது செய்ய பட்டுள்ளார் .
இலங்கை வெல்லவாய- பள்ளிவாசலுக்கு அருகில் காணாமல் போன, ஐந்து வயதுடைய சிறுமி ஒருத்தி, காவல்துறையால் கண்டு பிடிக்க பட்டுள்ளார் .
குறித்த சிறுமியை கடத்திய நபர் ,அதே சிறுமியின் வீட்டில் வேலைபார்த்து வந்த நபர் என, அடையாளம் காணப்பட்டுள்ள்ளார் .
திட்டமிட்டு சிறுமியை கடத்தி பேரூந்தில் பயணித்த இவர் ,பண்டாரவளை பேரூந்து சந்தை பகுதியில், இரவு தங்கி பொழுதை கழித்துளளார்.
அதன் பின்னர் சிறுமியைத் தன் வீட்டுக்கு அழைத்து செல்ல முற்பட்ட வேளையில் ,காவல் துறையால் மடக்கி பிடிக்க பட்டார் .
பணத்திற்காக சிறுவர்களை கடத்தும் , இவ்வாறான கும்பல்களிடம் இருந்து மக்கள் உசாராக இருக்க வேண்டும் என ,காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
அப்பாவி சிறுவர்களை கடத்தி ,கொலை செய்து ,வீதியில் வீசி வரும் சம்பவங்கள் அரங்கேறிய நிலையில் உள்ளது .
இவ்வாறு கடத்த படும் சிறுமிகள் ,கற்பழிக்க பட்டு ,கொலை செய்யப்பட்டு வருகின்ற செயல்களும் அரங்கேறி இருந்தது .
அவ்வாறான தொடர்ச்சியாக ,இந்த அப்பாவி ஐந்து வயது சிறுமியும் , கடத்தி விற்க முனைந்த செயல் ,பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறியாத நபர்களை வீட்டுக்கு அழைக்கும் குடும்பங்கள், இவ்வாறானவர்கள் மீது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பது இந்த செயல்கள் மூலம் மீளவும் நிரூபணமாகியுள்ளது.
பாதிக்க பட்ட குடும்பத்தினர் காவல்துறைக்கு வழங்கிய முறைப்பாட்டை அடுத்து இலங்கை காவல்துறையினர் , ஆதாரங்களுடன் குறித்த நபரை விசேடமாக தேடி வந்த நிலையில், இந்த சிறுமி பத்திரமாக மீட்க பட்டுளளார் .
இலங்கை காவல்துறையின் இந்த அளப்பரிய சேவை ,மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது .
காணமல் போன சிறுமியை தேடி கண்டு பிடிக்கும் பணியில், ஈடுபட்ட விசேட குற்ற தடுப்பு பிரிவினரின் ,வீரச் செயலாக இவை பார்க்க படுகிறது .
மக்கள் மத்தியில் லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் என அடையாளப்படுத்த பட்டிருந்த ,இலங்கை காவல்துறை ,காணாமல் போன ஐந்து வயது சிறுமியின் மீட்பு மூலம் ,பரிசுத்தமானவர்கள் உள்ளனர் என்பதையும் நிரூபித்துள்ளது .
காணாமல் போன சிறுமியை கண்டுபிடித்து, உயிருடன் மீட்ட காவல்துறையினருக்கு ,சமுக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது .
காணாமல் போன சிறுமி மீட்க பட்ட நிலையில் ,சிறுமியின் கிராமத்தவர்கள் ,சிறுமியை நேரில் சென்று பார்வை இட்டு செல்கின்றனர் .
12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம்
12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம்
முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியை சேர்ந்த பன்னிரண்டு வயது சிறுமி ஒருவர் தனது காதலனுடன் தப்பி ஓடியுள்ளார்
இவர் தமது வீட்டை விட்டு காதலனுடன் தப்பி போக முன்னர் ,அங்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தப்பி சென்றுள்ளார்
காதலனுடன் ஓட்டம்
அதில் என்னை தேட வேண்டாம் நான் வீடு வரமாட்டேன் என அதில் குறிப்பிட்ட பட்டிருந்தது
அந்த கடிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை கடிதத்துடன் காவல்துறை நிலையம் சென்று முறையிட்டுள்ளார்
அப்போது சிறுமியான மகள் தந்தையின் பணம் ,மற்றும் கைபேசி என்பனவற்றை திருடி கொண்டு தப்பி ஓடியுள்ளது தெரியவந்துள்ளது
சிறுமி கண்டு பிடிப்பு
போலீசார் சிறுமியின் கைபேசியில் தொடர்பு கொண்டு
வினவிய பொழுது அவர் கட்டனில் உள்ளது கண்டு
பிடிக்க பட்டுள்ளது ,சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்ற சாட்டில் காதலன் கைது செய்யப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
காதல் புரிந்த அலங்கோலம்
அறியா பருவத்தில் புரியா வந்த காதல் மோகத்தினால் தனது எதிர்கால வாழ்வினை குழி தோண்டி புதைத்துள்ளளார் இந்த சிறுமி ,பெற்றவர்களை மறந்து அவர்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை திருடி கொண்டு காதலனுடன் ஓடிய மகளின் செயல் மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது
12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம்
பட்டினி கிடந்தது பகலிரவாய் பிள்ளைகளுக்கு என உழைத்த தந்தை , தயார் இவருடன் கூடி பிறந்தவர்கள் வாழ்வில் மண்ணை தூவி இன பால் கவர்ச்சியில் சிக்கி சீரழிந்து போகும் இந்த சிறிசுகளை என்னவென்று சொல்ல
பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதல்
குறித்த காதலனுடன் பேஸ்புக் மூலம் தொடர்பை ஏற்படுத்தி சிறுமி காதல் வலையில் வீழ்ந்துள்ளார் ,அவரது இனிப்பான பேச்சும் அந்தரங்க உரையாடல்களும் இன்று சந்தி சிரிக்க வைத்துள்ளது
பிள்ளைகள் விரும்பும் கைபேசியை அவர்களுக்கு வழங்கியதன் ஊடாக அவர்கள் பேஸ்புக் மூலம் காதல் வலையில் சிக்கி குடும்ப மானத்தை ரோட்டில் விற்றுள்ளனர் ,
இந்த விடயங்கள் அனைத்திற்கும் பிள்ளைகள் மீது பெற்றவர்கள் வைக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கையும் , பாசமுமே காரணம் ,அதனை புரியாது பிள்ளைகள் பெற்றவர்களை ஏமாற்றியதாக கருதி தம்மை தாமே ஏமாற்றி கொள்ளும் இழி செயல்களே இவையாகும்
இளைய சமுதாயமே கொஞ்சம் சிந்தியுங்கள் ,அழகான வாழ்வை அறியா பருவத்தில் தொலைத்து விடாதீர்கள் ,வாழ்க்கை வாழ்வதற்கே ,இடையில் கண்ணீரில் அலைவதற்க்கு அல்ல ,ஒன்றை செய்திட முன்னர் கொஞ்சம் யோசியுங்கள் .
12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம் எங்கே செல்கிறது எமது தேசம் ..?
- வன்னி மைந்தன் –
லண்டன் லூசியம் பகுதியில் -12 வயது சிறுமியை காணவில்லை – தேடும் பொலிஸ்
லண்டன் லூசியம் பகுதியில் -12 வயது சிறுமியை காணவில்லை – தேடும் பொலிஸ்
லண்டன் லூசியம் பகுதியில் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இவர் லூசியம் பகுதியில் முப்பதாம் திகதி காணப்பட்டுள்ளார் ,அதன் பின்னர் எங்கு
சென்றார் என்பது தொடர்பாக தெரியவில்லை.
இவரை கண்ணுற்றால் தமக்கு தெரிய படுத்தும் படி போலீசார் வேண்டுதல் விடுத்துள்ளனர்.
ஆறுபேர் இணைந்து சிறுமியை அடித்து கொன்ற கொடூரம்
ஆறுபேர் இணைந்து சிறுமியை அடித்து கொன்ற கொடூரம்
இலங்கை பெரிய கல்லாறு பகுதியில் பன்னிரண்டு வயது சிறுமி ஒருத்தியை மூன்று பெண்கள்
உள்ளிட்ட ஆறுபேர் இணைந்து நாள்தோறும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்
இந்த அடி காயங்களினால் அவளது புண்களில் ஏற்பட்ட தொற்று கிருமி ஊடாக அவர் இறந்துள்ளார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
இதனால் ஆறு பேரும் கைது செய்ய பட்டு கொலை குற்றச்சாட்டில் நீதி விசாரணைகள் இடம்பெற்று வருகிறது,
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
பாட்டியை கட்டி வைத்து சிறுமியை கற்பழித்த காமுகன் தப்பி ஓட்டம்
பாட்டியை கட்டி வைத்து சிறுமியை கற்பழித்த காமுகன் தப்பி ஓட்டம்
இலங்கையில் 73 வயது பாட்டியுடன் வசித்து வந்த 12 வயது சிறுமி ஒருவர் காமுகனால் கற்பழிக்க பட்டுளளார்
சம்பவ தினம் அன்று பாட்டியை கட்டி போட்டு விட்டு சிறுமியை தனது இச்சை தீரும் வரை கற்பழித்ததுள்ளான் ,
தனது வேட்டை முடிந்ததும் அவர் தப்பி ஓடியுள்ளார்
மேற்படி சம்பவத்தில் பாதிக்க பட்டவர்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில் தப்பி ஓடிய நபரை தேடி கண்டு பிடிக்கும் பணியில்
போலீசார் ஈடுபட்டுள்ளனர் .குறித்த செயலை புரிந்தவர் திருமணமானவர் என்பது குறிப்பிட தக்கது
லண்டனில் – ஒன்பது வயது சிறுமியை காணவில்லை தேடும் பொலிஸ்
லண்டனில் – ஒன்பது வயது சிறுமியை காணவில்லை தேடும் பொலிஸ்
மேற்கு லண்டன் பகுதியில்கடந்த தினம் முதல் ஒன்பதுவயது ஆசிய நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார் ,
இவரை தெரிந்தால் தமக்கு உடனடியாக தெரிவிக்கும்படி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
இவர் கடத்த பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது
சிறுமி இறுதியாக நின்ற பகுதியில் உள்ள கமராக்கள் பகுப்பாய்வுக்கு உட்படுத்த பட்டு வருகின்றன
இவரை யாரவது கண்ணுற்ற்றால் தமக்கு உடனடியாக தெரிவிக்கும் படி போலீசார்
வேண்டியுள்ளதுடன் ,இந்த செய்தியினை அதிகமாக சேர் ,பகிர்ந்து உதவும் படி மன்றாடி
வேண்டியுள்ளனர் ,மக்களே முடிந்தவரை இதனை பகிருங்கள் ,சிறுமியை மீட்க இது உதவியாக அமையலாம்
மலாலாவை சுட்டு கொல்வோம் தாலிபான்கள் மிரட்டல்
சிறுமியை சுட்டு கொல்வோம் – தாலிபான்கள் மீள மிரட்டல் -பாதுகாப்பு இறுக்கம் -தொடரும் பதட்டம்
தாலிபான்கள் மிரட்டல்
பாகிஸ்தானில் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக பாகிஸ்தானில் உள்ள தாலிபான் அமைப்பினால் சிறுமி மலாலா சுடப் பட்டார் ,
ஆனால் அவர் அந்தசூட்டு காயத்தில் இருந்து காப்பாற்றப்பட்டார் ,உலக நோமல் பரிசையும் இவர் தட்டி சென்றார் ,
எதிர் பரப்புரை
அதன் பின்னர் அமெரிக்கா,மற்றும் அதன் நேச நாடுகளின் செல்ல பிள்ளையாக மாறியதுடன் ,மலாலா தாலிபான்களுக்கு எதிரான கடும் பரப்புரையை மேற்கொண்டு வந்தார்
சீற்றம் கொண்ட தலிபான்கள்
இதனால் சீற்றம் கொண்ட தலிபான்கள் நாம் மீளவும் இவரை சுட்டு கொல்வோம் ,எனவும் இம்முறை எமது தாக்குதலில் இருந்து இவர் தப்ப மாட்டார் என தெரிவித்துள்ளது
பாதுகாப்பு இறுக்கம்
இதனை அடுத்து சிறுமியின் பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது ,எவ்வகையான பாதுகாப்பு வழங்கினாலும் குறித்த அமைப்பில்
இருந்து இவர் பாதுகாக்க படுவாரா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்
மின்னல் தாக்கி பத்து வயது சிறுமி பலி – கண்ணீரில் குடும்பம்
மின்னல் தாக்கி பத்து வயது சிறுமி பலி – கண்ணீரில் குடும்பம்
இலங்கை மகவெலகம பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதில்
பத்து வயது சிறுமி ஒருத்தி பலியாகியுள்ளார்
வானிலை மையம் சீரற்ற காலநிலை இடம்பெறும் என தெரிவிக்க பட்டு
முன் எச்சரிக்கை விடுக்க பட்டிருந்த பொழுதும் இந்த மின்னல்
தாக்கி சிறுமி இவ்விதம் பலியாகியுள்ளார்
இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் ஆற துயரை ஏற்படுத்தியுள்ளது

வவுனியாவில் 15 வயது சிறுமியை கற்பமாக்கிய வாலிபர்
வவுனியாவில் 15 வயது சிறுமியை கற்பமாக்கிய வாலிபர்
இலங்கை – வவுனியா எ- ஓமந்தை பகுதியில் 15 வயது பாடசாலை மாணவி ஒருவர் வாலிபர் ஒருவர் தொடர்ந்து பல
மாதங்களாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார் .
இதில் அவர் தற்போது கற்பமாகிய நிலையில் ,மருத்துவ சோதனைக்கு உட்படுத்த பட்டுளளார் .
குறித்த குற்றத்திற்கான வாலிபர் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுளளார் .
இவ்வாறான குற்றங்கள் நாட்டில் தற்போது அதிகரித்து செல்கிறது .
இதற்கு மகிந்த ஆட்சியில் பாலியல் கல்வி ,விழிப்புணர்வு ஊட்டல் கற்கையை உருவாக்க முனைந்த பொழுதும் இறுதியில் எழுந்த எதிர்ப்பால் ,கைவிட பட்டது .
வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் இவை அடிப்படை கல்வியாக மாணவர்களுக்கு போதிக்க படுகிறது ,
குறிப்பாக பெண்களுக்கு இது தொடர்பான விளக்கங்கள் செய் முறை கட்சிகளுடன் கற்பிக்க படுகின்றமை குறிப்பிட தக்கது



































