Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பாடசாலை முன்னால் துப்பாக்கிச் சூடு
பாடசாலை முன்னால் துப்பாக்கிச் சூடு
பாடசாலை முன்னால் துப்பாக்கிச் சூடு ,அஹுங்கல்லவில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
லக்ஷான் மதுஷங்க என்ற 28 வயதான இளைஞர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் அவரின் இடுப்புப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு பிஸ்டல் ரக துப்பாக்கியால் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
வரணியில் நீரில்மூழ்கி ஒருவர் பலி
வரணியில் நீரில்மூழ்கி ஒருவர் பலி
வரணியில் நீரில்மூழ்கி ஒருவர் பலி ,யாழ். வரணி சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தவசிக்குளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவராசு சிலுசன் (வயது 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை (17) புதுவருட கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சுமார் எட்டுப் பேர் அடங்கிய நண்பர்கள் சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராடிய போது குறித்த இளைஞர் தாமரைக் கொடியில் சிக்குண்ட நிலையில்
மீட்கப்பட்டு வரணி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் மரண விசாரணைக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
மோட்டார் சைக்கிள் எரிப்பு
மோட்டார் சைக்கிள் எரிப்பு
மோட்டார் சைக்கிள் எரிப்பு ,இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக 7 லட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் தீக்கிரையாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று (17) மாலை 6 மணிக்கு ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை பகுதியில் உள்ள சுரங்கத்தை அன்டிய பகுதியில் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸார் கருத்து தெரிவிக்கையில், இருவருக்கு இடையே ஏற்பட்ட வாய் தர்க்கம் சண்டையில் முடிந்து இருவரும் படுகாயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றனர்
ஆயுதங்கள் மீட்பு நபர் கைது
ஆயுதங்கள் மீட்பு நபர் கைது
ஆயுதங்கள் மீட்பு நபர் கைது ,பொலிஸ் காவலில் உள்ள சந்தேகநபர் தெரிவித்த தகவலின்படி, T56 துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 50 தோட்டாக்களையும், ஒரு கூர்மையான ஆயுதத்தையும் அதுருகிரிய பொலிஸார் மீட்டுள்ளனர்.
கடந்த 12 ஆம் திகதி அதுருகிரிய பொலிஸ் அதிகாரிகள் குழுவால் குறித்த சந்தேகநபர் 11 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
பின்னர் சந்தேகநபர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கப்பட்ட போது இந்த வெடிமருந்துகள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் நேற்று (17) மீட்கப்பட்டன.
சந்தேக நபர் அதுருகிரிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அதுருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பணம் நகைகளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
பணம் நகைகளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
பணம் நகைகளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது ,தெவுந்தர – ஹும்மன வீதியில் மூன்றரை கோடி ரூபாய் பணம் மற்றும் தங்க வளையல்கள், காதணிகள் உட்பட 150 கிராம் தங்கம் என்பவற்றுடன் மேல் மாகாண பொலிஸ்
புலனாய்வுத் தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மேலும் ஐவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்கிடமான வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யும் போது வாகனத்தின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
தெவுந்தர பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள், ஹும்மான வீதியில் வேகமாகச் சென்ற வாகனத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இந்த சோதனையின் போது, சந்தேகத்திற்குரிய ஐந்து பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் பணம் மற்றும் தங்க ஆபரணங்களுடன் கைது செய்யப்பட்டனர்.
மேல் மாகாண புலனாய்வுத் தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே காரை ஓட்டிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விசாரணையின் போது பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கிய வாக்குமூலங்களில் முரண்பாடுகள் காணப்படுவதாக விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த பணத்தை பகிர இவர்கள் எடுத்துச் சென்றார்களா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
அர்ச்சுனா செய்த மோசடி அடித்து விட்ட பெண் வேட்பாளர்
அர்ச்சுனா செய்த மோசடி அடித்து விட்ட பெண் வேட்பாளர்
அர்ச்சுனா செய்த மோசடி அடித்து விட்ட பெண் வேட்பாளர் ,பல விடயங்களை வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் வருகை தந்து தெரிவித்தார் .
அர்ச்சுனா இராமநாதன் வழிநடத்தும் ஊசி கட்சியில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்ட வனேஸ்வரி தம்மிடம் பணம் வணங்கி விட்டு அர்ச்சுனா ஏமாற்றிய விடயங்கள் தொடர்பாக பகிரங்க படுத்தினார் .
தங்களை நம்ப வைத்து அர்ச்சுனா ஏமாற்றி விட்டார் என வனேஸ்வரி தெரிவித்தார் .
தேர்தலில் போட்டியிடும் நோக்கமே அர்ச்சுனா இராமநாதனுக்கு இல்லை எனவும் ,அவர் திட்டமிட்டு மக்களை அவதூறு செய்து ஏமாற்றி வருவதாக அவர் குற்றம் சுமத்தினார் .
தேர்தல் சட்டங்களை மீறும் அறிக்கைகள் வேண்டாம்
தேர்தல் சட்டங்களை மீறும் அறிக்கைகள் வேண்டாம்
தேர்தல் சட்டங்களை மீறும் அறிக்கைகள் வேண்டாம் ,தேர்தல் சட்டங்களை மீறும் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு, ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அளித்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து ஆணைக்குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அரசு அதிகாரங்கள் இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்க மாட்டேன் என்று அரசியல் மேடைகளில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியதாக இந்த அமைப்புகள் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளன.
வாகன விபத்தில் தாய் பலி
வாகன விபத்தில் தாய் பலி
வாகன விபத்தில் தாய் பலி ,ஒரு பாறையில் இருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் வாகனம் விழுந்ததில், ஒரு குழந்தையின் தாயான, 28 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், காலி, யக்கலமுல்ல, கராகொட பகுதியில் புதன்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யக்கலமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
ஓர் அங்கவீனமான சிப்பாய் காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார், அது ஒரு பாறையிலிருந்து சுமார் 100 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
காயமடைந்தவர்களில் ஓட்டுநர், கொல்லப்பட்ட பெண்ணின் தாயும், பாலர் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளையும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கலமுல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
400 000 குடும்பங்களுக்கு அஸ்வெசும ஜனாதிபதி
400 000 குடும்பங்களுக்கு அஸ்வெசும ஜனாதிபதி
400 000 குடும்பங்களுக்கு அஸ்வெசும ஜனாதிபதி எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மையை வழங்க
அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கில் நடந்த போர் காரணமாக, மக்களின் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டியிருந்தது என்றும், சில வீதிகள் மூடப்பட வேண்டியிருந்தது என்றும் கூறிய ஜனாதிபதி, தேசிய மக்கள் சக்தி இந்தப்
பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து, மக்கள் தங்கள் பணிகளைச் சுதந்திரமாகச் செய்யக்கூடிய ஒரு நாட்டை உருவாக்கும் என்றும் கூறினார்
புத்தாண்டு 3 நாட்களில் 18 பேர் பலி
புத்தாண்டு 3 நாட்களில் 18 பேர் பலி
புத்தாண்டு 3 நாட்களில் 18 பேர் பலி ,2025 புத்தாண்டு கொண்டாட்டத்தின் மூன்று நாட்களில் (13, 14 மற்றும் 15) ஆம் திகதிகளில் வீதி விபத்துகள், கொலைகள் மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தெஹியத்தகண்டிய, ஹல்தும்முல்ல, பதவிய, குச்சவெளி, காத்தான்குடி, பானம, மன்னம்பிட்டிய, பலாங்கொடை, சிலாவத்துறை, ஈச்சலம்பற்று,
கொஸ்கம, அஹங்கம, தம்புள்ளை, நாரம்மல, அத்துருகிரிய, ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்தச் சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிடுகிறது.
தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரகஸ்வெவவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், கிராந்துருகோட்டையில் வசிக்கும், மாநில புலனாய்வு சேவை தலைமையகத்தில் இணைக்கப்பட்ட 29 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.
இறந்த கான்ஸ்டபிள் பல நண்பர்களுடன் நீந்திக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி இறந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரணவராவ சந்தியில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் கடந்த 14 ஆம் தேதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
உயிரிழந்தவர் வெல்லவாய, ரன்தெனிய பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் ஆவார்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், இறந்தவருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே இருந்த பழைய தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
மனம்பிட்டிய, திம்புலாகல பகுதியில் வீதியோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் இறந்தவர் மஹௌல்பதாவின் காஷ்யபபுராவைச் சேர்ந்த 81 வயது பெண்மணி ஆவார்.
பலாங்கொடை, ருக்மல்கந்துர பகுதியில், வீட்டை விட்டு வெளியேற பின்னோக்கிச் செல்லும் போது, வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த
லொறியின் இடது பின்புற சக்கரத்தின் கீழ் நசுங்கி 1 வயது மற்றும் 7 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. இறந்த குழந்தை லாரி ஓட்டுநரின் மகன் ஆவார்.
ஹல்துமுல்ல களுபஹன பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புஸ்ஸெல்ல, களுபஹான பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஆவார்.
பதவிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிஹிந்து மாவத்தை கால்வாயில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பராக்கிரம புரத்தைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவர் (15 ஆம் திகதி) காலை உயிரிழந்தார் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது
பெண்கள் அழுகை என்ன செய்யலாம்
பெண்கள் அழுகை என்ன செய்யலாம்
பெண்கள் அழுகை என்ன செய்யலாம் ,சமீப சில நாட்களாக தங்களால் சமையலில் உப்பு, புளி ருசி பார்க்க முடியவில்லை என்று இல்லத்தரசிகள் முகம் சுழிக்கின்றனர். உப்புப் புளி தட்டுப்பாட்டால் அடுக்களைச் சமையல் கசந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் தற்போது உப்பு, புளியம்பழம் ஆகிய சுவையூட்டிகளுக்கு கடும் தட்டுப்பாடும் கிராக்கியும் காணப்படுவதால் இல்லத்தரசிகளால் சமையலில்
உப்பு, புளி ருசி பார்க்க முடியவில்லை. இவ்விரண்டு சுவையூட்டிகக்கான விலையும் எகிறியுள்ளது.
50 கிராம் புளியம்பழம் 100 ரூபாவுக்கு இரகசியமாக விற்கப்படுகிறது. அதேபோல கடைகளில் கல் உப்பு பெற முடியாத நிலை உள்ளது. கைவசம்
இருக்கும் தூள் உப்பை கடைக்காரர்கள் அதன் வழமையான வாடிக்கையாளர்களுக்கு மாத்திரம் இரகசியமாக விற்பனை செய்கிறார்கள்.
தூள் உப்பை இரகசியமாக வழங்கும்போது இந்த உப்பை மருந்து போல பயன்படுத்துங்கள் என்று கடைக்கார்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை
வழங்குவதையும் காணக்கூடியதாகவுள்ளது. சதோச விற்பனை நிலையங்களிலும் உப்பு, புளியம்பழம் என்பன விற்பனைக்கு இல்லை.
இதேவேளை, சித்திரைப் புத்தாண்டு காலத்தில் சுமார் ஏழு இலட்சத்திற்கு மேற்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கு சதோச விற்பனை நிலையங்களினூடாக 5000 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதியை
சலுகை விலையில் 2500 ரூபாவுக்குப் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் அத்தகைய பொதிகள் எதுவும் இதுவரை விற்பனை செய்யப்படவில்லை.
கடந்த ஏழாம் திகதி தொடக்கம் நாட்டிலுள்ள அனைத்து சதோச நிலையங்களிலும் இந்த 5000 ரூபாய் பெறுமதியான சலுகை உலருணவுப்
பொதிகளை 2500 ரூபாவுக்குப் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. அரச ஊடகங்களும் இந்தச் செய்தியை திரும்பத் திரும்ப அறிவித்து வந்தன.
ஆனால், உள்ளுரதிகாரசபை தேர்தல் தொடர்பான பிரகடனத்தால் இத்தகைய புத்தாண்டு சலுகை உலருணவுப் பொதி விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே, விநியோகிப்பதற்காக நாடெங்கிலுமுள்ள சதோச விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதிகள் மீளப் பெறப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணை
துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணை
துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணை ,கம்பஹா நகரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள், சிறிய லொரி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் சிறிய லொரியில் பயணித்த 2 பேர் வாகனத்தில் இருந்து இறங்கி அருகிலுள்ள கடைக்குள் ஓடியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் அவர்களுக்கு காயம் ஏற்படவில்லை என்றும், லொரிக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்க வரிகள் புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளன
அமெரிக்க வரிகள் புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளன
அமெரிக்க வரிகள் புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளன ,2028 ஆம் ஆண்டுக்குள் இலங்கை தனது கடன்களைத் தீர்க்க வழிகளைக் கண்டறிய வேண்டியிருக்கும் என்பதால், அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் புதிய
பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளன என்பதை எடுத்துக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள அரசாங்கம் ஒரு திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்றார்.
“இலங்கையின் ஏற்றுமதிகள், பரஸ்பர வரி 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டாலும் குறைவடையும்.
கடன் மறுசீரமைப்பு திட்டத்தின்படி, 2028 ஆம் ஆண்டுக்குள் அதன் கடன்களை நிர்ணயிக்கத் தொடங்க நிதி திரட்ட வேண்டும்.
அரசாங்கம் இதை ஒரு அவசரகால சூழ்நிலையாகக் கருதி, நிலைமையை எதிர்கொள்ள ஒரு திட்டத்தை முன்வைக்க வேண்டும்,” என்று விக்ரமசிங்க ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி
நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி
நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி ,பனாமா கழி முகத்திற்கு அருகில் கடலில் நீந்தச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்கள் பனாமாவின் மத்திய பகுதியைச் சேர்ந்த தனசிறி இதுவர மற்றும் சூரஜ் ஆகிய 18 வயதுடைய இளைஞர்கள் ஆவர்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பனாமா கழிமுகப் பகுதிக்கு அருகே நீந்திக் கொண்டிருந்த போது, அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக பனாமா பொலிஸார் தெரிவித்துள்ளது.
உலக உச்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி
உலக உச்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி
உலக உச்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி ,தென் கொரியாவில் ஏப்ரல் 10-14 ஆம் திகதி வரை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய அமைதி கூட்டமைப்பின் உலக உச்சி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
உலக அமைதி மாநாட்டின் சர்வதேச அமைதி உச்சி மாநாடு கவுன்சிலின் ஆசிய-பசிபிக் பிராந்தியத் தலைவர் மைத்ரிபால சிறிசேன, உலகளாவிய உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் சிறப்பு உரை நிகழ்த்தினார்.
உலகளாவிய அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியைப் பேணுவதற்கும், காலநிலை மாற்றத்தை நிர்வகிப்பதற்கும், மோதல்களை நிர்வகிப்பதற்கும்
மதத்தையும் அரசியலையும் ஒருங்கிணைக்கும் இரு சபை உலகளாவிய அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை மைத்ரிபால சிறிசேன தனது உரையின் போது வலியுறுத்தினார்.
2025 உலகளாவிய உச்சி மாநாட்டில் முன்னாள் அரச தலைவர்கள், தற்போதைய பேச்சாளர்கள், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள்
மற்றும் சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த பிற இராஜதந்திரிகள், அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம் ,உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அஞ்சல் மூல வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் ஏற்கனவே அஞ்சல் திணைக்களங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், சுமார் 250 உள்ளூராட்சி நிறுவனங்களில் திட்டமிட்டபடி மே மாதம் ஆறாம் திகதி தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மூன்று நாட்களில் ரூ 134 மில்லியன் வருவாய்
மூன்று நாட்களில் ரூ 134 மில்லியன் வருவாய்
மூன்று நாட்களில் ரூ 134 மில்லியன் வருவாய் ,புத்தாண்டு பருவ காலத்துடன் இணைந்து, கடந்த மூன்று நாட்களில் அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பு ரூ. 134 மில்லியன் வருவாயை ஈட்டியுள்ளது என்று அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 11, 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் மொத்தம் 387,000 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்தியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தத் தொகையில், முதல் இரண்டு நாட்களில் (ஏப்ரல் 11 மற்றும் 12) 297,736 வாகனங்களிலிருந்து ரூ. 100 மில்லியனுக்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
மட்டக்களப்பில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி
மட்டக்களப்பில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி
மட்டக்களப்பில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி ,மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமத்தில் சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை, காட்டு யானையின் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று அதிகாலை ஒரு மணியளவில், வீட்டு முற்றத்தில் நண்பர்களுடன் புத்தாண்டைக் கொண்டாடி விளையாடிக் கொண்டிருந்த 31 வயதுடைய இராசதுரை சசிகரன் என்பவர், சத்தம் கேட்டு வீட்டு வாசலுக்கு வந்தபோது, எதிர்பாராதவிதமாக யானையின் தாக்குதலுக்கு உள்ளானார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
தாக்குதலில் படுகாயமடைந்த சசிகரனை, உறவினர்கள் உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் அதிகாலை அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆட்டோ வான் மோதல் சிசு பலி
ஆட்டோ வான் மோதல் சிசு பலி
ஆட்டோ வான் மோதல் சிசு பலி ,எல்பிட்டிய, குருந்துகஹ நகரில் இன்று அதிகாலை முச்சக்கர வண்டி மற்றும் வேன் மோதிய விபத்தில் 06 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பலாங்கொடையிலிருந்து எல்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி எதிர் திசையில் பயணித்த வேன் ஒன்றின் மீது நேருக்கு நேர் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர், ஒரு ஆண் பயணி, இரண்டு பெண் பயணிகள் மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று பெண் குழந்தைகள் காயமடைந்தனர்.
இந்தக் குழு எல்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, இதில் ஒரு பெண் குழந்தை காயமடைந்து உயிரிழந்தது, மீதமுள்ளவர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த 06 வயது சிறுமி பிடிகல பகுதியைச் சேர்ந்தவர்.
விபத்து தொடர்பாக வேனின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிள்ளையானுடன் உரையாட அனுமதி கோரிய ரணில்
பிள்ளையானுடன் உரையாட அனுமதி கோரிய ரணில்
பிள்ளையானுடன் உரையாட அனுமதி கோரிய ரணில் ,பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
பிள்ளையானுடன் தொலைபேசிமூலம் உரையாட அனுமதிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 9ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், குறித்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனவும், தடுப்பு காவலில் உள்ள சந்தேகநபருடன் தொலைபேசியில் உரையாடுவது
சட்டவிரோதமானது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்


























