ஆண்களை மிரட்டி பணம் பறித்த பெண் கைது
Posted in உலக செய்திகள்

ஆண்களை மிரட்டி பணம் பறித்த பெண் கைது

ஆண்களை மிரட்டி பணம் பறித்த பெண் கைது

ஆண்களை மிரட்டி பணம் பறித்த பெண் கைது ,கர்நாடகாவின் மங்களூரில், இளைஞர்களை குறிவைத்து ஆபாச உள்ளடக்கங்களை அனுப்பி பணம் பறித்து வந்த 25 வயது இளம்பெண் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் பெண்ணின் செயலால் உடுப்பியைச் சேர்ந்த ஒரு இளைஞர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டதாகவும், அவரது சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸ் தகவல் தெரிவிக்கிறது.

சைபர் கிரைம்

இந்த சம்பவம், சமூக ஊடகங்கள் மூலம் நடக்கும் சைபர் கிரைம்களின் ஆபத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டியுள்ளது.

பொலிஸ் வழக்குப் பதிவு படி, கைது செய்யப்பட்ட பெண், சமூக ஊடகங்களில் இளைஞர்களை அணுகி அவர்களுடன் நெருக்கமான படங்கள் எடுத்து வைத்திருந்தார்.

அந்தப் படங்களை ஆபாச வலைத்தளங்களில் பதிவேற்றி, அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, ” நானும் உங்க பையனும் தனிமையில் இருக்கும் போது.. ஆணுறையில் ஓட்டை போட்டேன்.. உங்க பையனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்..

நான் கர்ப்பமாக இருக்கிறேன்” என்று போலியான கூற்றுகளைப் பயன்படுத்தி, இளைஞர்களின் குடும்பங்களை அச்சுறுத்தி பணம் வசூலித்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பெண்ணுடன் தங்கியிருந்த தோழிகளின் குளியலறை காட்சி

இந்தச் சதியில், பெண்ணுடன் தங்கியிருந்த தோழிகளின் குளியலறை காட்சிகளையும் அவர் வீடியோவாகப் பதிவு செய்திருந்ததாக பொலிஸ் கண்டுபிடித்துள்ளது.

இந்த வீடியோக்களும் அவரது பண வசூல் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பெண்ணின் கைப்பிடியில் இருந்து பல ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.உடுப்பியைச் சேர்ந்த 28 வயது இளைஞர்,

தனது சமூக ஊடக கணக்கில் பெண்ணால் பகிரப்பட்ட ஆபாச படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, கடந்த வாரம் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்ததன் அடிப்படையில், மங்களூர் சைபர் கிரைம் பொலிஸ் அணுகல் பொலிஸ் நிலையம் விசாரணைத் தொடங்கியது.

மங்களூர் சைபர் கிரைம் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார், “இளைஞர்கள் சமூக ஊடகங்களில் அந்நியர்களுடன் பழகும் போது

எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது போன்ற சதிகள் அதிகரித்து வருவதால், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக பொலிஸை அணுக வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

கைது செய்யப்பட்ட பெண், மங்களூரைச் சேர்ந்தவர் என்றும், அவர் மீது மேலும் வழக்குகள் பதிவாகலாம் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம், இளைஞர்களிடையே சமூக ஊடக பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸ், இதுபோன்ற கிரைம்களுக்கு எதிராக விரிவான விசாரணையைத் தொடர்ந்து நடத்தும் என அறிவித்துள்ளது.

களுவாஞ்சிகுடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

களுவாஞ்சிகுடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு ,மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி திருமுருகள் வீதியில்

களுவாஞ்சிகுடி பொலிஸார்

அமைந்துள்ள பற்றைக்குள் இருந்து வெள்ளிக்கிழமை(26) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தானர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து ஸ்த்தலத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

இந்நிலையில் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபனின் உத்தரவுக்கமைய சடலத்தைப் பார்வையிட்ட களுவாஞ்சிகுடி பிரதேச செயலக

திடீர்மரண விராணை அதிகாரி

பிரிவுக்கான திடீர்மரண விராணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு பேதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைப்புமாறு உத்தரவிட்டார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் களுவாஞ்சிகுடி திருமுருகன் கோயில் வீதியைச் சேரந்த 2 பிள்ளைகளின் தந்தையான 71 வயதுடைய

கணபதிப்பிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆண் கடத்திக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

ஆண் கடத்திக் கொலை

ஆண் கடத்திக் கொலை

ஆண் கடத்திக் கொலை ,ஆண் ஒருவர் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடத்தப்பட்ட நபர் படுகொலை

மர்ம நபர்களினால் கடத்தப்பட்ட நபர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக சடகமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு இறந்தவர் நான்கு மர்ம நபர்களால் ஆட்டோவில் வந்த குழுவினால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இரண்டு மாடி வீட்டில் இருந்த பொழுது அங்கு ஆட்டோவில் வந்த கும்பல் இவரை கடத்தி அவரை படுகொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கடத்தல் படுகொலை

இந்தக் கடத்தல் படுகொலை சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ,இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது .

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறு கடத்தி படுகொலை செய்யும் நடவடிக்கைகள் அதிகமாக இடம்பெற்று வருகின்ற சம்பவம் ,இதன் பின்புலத்தில் அரசியல் பாதாள உலக குழு உள்ளதான செய்திகள் வெளியாகி வருவதால் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை இது ஏற்படுத்தியுள்ளது .

எனினும் இந்த படுகொலைக்கான காரணம் அதை கடத்தியவர்கள் யார் என்பது தொடர்பாக தெரிய வரவில்லை என காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்

யாழ்ப்பாணத்தில் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஆண் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் ஆண் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் ஆண் சடலம் மீட்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யாழ்ப்பாணம் பரித்துறை பகுதியில் போதைத்து அதிகம் பாவித்த காரணமாக உயிரிழந்த நிலையில் ,31 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் வயதில் அதிக போதைக்கு அடிமையாகி, அதற்கு உள்ளான நிலையில் இவர் மரணமாகி உள்ளதாக தெரிய வருகிறது.

சடலம் மீட்கப்பட்டு தற்பொழுது உடல் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாணம் தமிழ் பகுதியில் அதிகரித்து வரும் போத வஸ்து கலாச்சரத்தினால் ,இவ்விதம் பல இளைஞர்கள் வழி தவறிய சென்று உயிரிழந்து வருவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இவ்விதம் அதிக போதைக்கு உள்ளான நிலையில் ,31 வயதில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட இந்த , இளம் வாலிபர் உடைய செயல் என்னவென்பது கூறுவதாக மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழகத்துக்குள் போதைகளை புகுத்தி அதை பயன்படுத்த உள்ளாக்கி அதனூடாக படுகொலை நடவடிக்கை ஆரம்பித்துள்ளது, வெளியில் தெரியாத ஒரு இனப்படுகொலை தான் என பார்க்கலாம்.

எவ்வாறு தொடரும் இந்த மொழியில் தெரிய முடியாத இந்த இனப்படுகொலைகளை தடுக்க வேண்டுமாக இருந்தால் ,தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பொருள் ஆகிறது.

ஆகவே எமது கலாச்சார பத்திரமான யாழ்ப்பாணத்தில் இவ்விதமான மரணங்கள் தொடர்வதையும் சடலம் மீட்கப்படுவதை தடுக்க வேண்டுமாக இருந்தால், மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்பதாகவே இதன் ஊடாக பார்க்க முடிகிறது.

காட்டுபகுதியில் இருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

காட்டுபகுதியில் இருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு

காட்டுபகுதியில் இருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு

காட்டுபகுதியில் இருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு ,மட்டக்களப்பு – சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மொறக்கொட்டான்சேனை காட்டை அண்டிய பகுதியில், வீசப்பட்ட நிலையில், ஆண் சிசுவின் சடலம் சனிக்கிழமை (15) காலையில் மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

ஆண் சிசுவை பெற்றெடுத்த பெண் ஒருவர் அந்த சிசுவை உரைப்பையில் கட்டிக் கொண்டு சென்று, அதனை சந்திவெளி பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரம் கொண்ட மொறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை 9 மணியளவில் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிஸார், நீதிமன்ற உத்தரவை பெற்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன், சிசுவை சம்பவதினமான இன்று பிறந்துள்ளதாகவும் சிசுவை பெற்றெடுத்து வீசிய பெண்ணை தேடிவருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய பெண்
Posted in இலங்கை செய்திகள்

ஆண் ஒருவர் சுட்டுக் கொலை

ஆண் ஒருவர் சுட்டுக் கொலை

ஆண் ஒருவர் சுட்டுக் கொலை ,உஸ்வெட்டகெய்யாவ மோகன்வத்த கடற்கரையில் கடந்த 20 ஆம் திகதி ஆண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் உட்பட ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தேக நபர்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தேக நபர்களில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய துப்பாக்கிதாரியும் அடங்குவதாகக் கூறப்படுகிறது

தொழிலுக்காக வௌிநாடு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தொழிலுக்காக வௌிநாடு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தொழிலுக்காக வௌிநாடு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தொழிலுக்காக வௌிநாடு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 2024ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காக புலம்பெயர்ந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைத் தாண்டியுள்ளதுடன், இந்த

வருடம் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி வரை 300,162 பேர் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களுக்காக புலம்பெயர்ந்துள்ளனர் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தையும் தாண்டியுள்ளது இது இரண்டாவது முறையாகும்,

இதற்குமுன்னர், 2022 ஆம் ஆண்டில் 310,948 தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக புலம்பெயர்ந்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டில், 177,804 ஆண்களும், 122,358 பெண்களும் வெளிநாட்டு வேலைகளுக்காக புலம்பெயர்ந்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் வெளிநாடு சென்றவர்களின் மொத்த எண்ணிக்கையில், 40.7 வீதமான பெண்களும், 60 வீதத்திற்கும் அதிகமான ஆண்களும் உள்ளடங்குவர்

ஆண்களின் நிர்வாண புகைப்படங்களை கொண்டு பண மோசடி
Posted in இலங்கை செய்திகள்

ஆண்களின் நிர்வாண புகைப்படங்களை கொண்டு பண மோசடி

ஆண்களின் நிர்வாண புகைப்படங்களை கொண்டு பண மோசடி

ஆண்களின் நிர்வாண புகைப்படங்களை கொண்டு பண மோசடி சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொண்டு நிர்வாண புகைப்படங்களை கொண்டு வந்து இணையத்தில் விளம்பரம் செய்வதாக கூறி,

வலுக்கட்டாயமாக பணம் பெற்றுக்கொண்ட சந்தேகநபர் ஒருவர் வடமேல் மாகாண கணினி குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆண் ஒருவரை தொடர்பு கொண்டு அவரது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பெற்றுக்கொண்டு, குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில்

வெளியிடுவதாக தெரிவித்து, 7 இலட்சம் ரூபா பணம் பெற்றுக்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று (05) தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள கவுன்சில் அவென்யூவில் வைத்து வடமேல் மாகாண கணினி குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் துல்ஹிரிய பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடையவர்.

சம்பவம் தொடர்பில் வடமேல் மாகாண கணினி குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு

ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு

ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு ,பாணந்துறை கல்கொட ஸ்ரீ மகா விகாரஸ்த வீதியிலுள்ள வீடொன்றில் ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பெண்ணின் சடலம் வீட்டின் தரையிலும் , ஆணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையிலும் காணப்பட்டதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரும் தகாத தொடர்பில் இருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் பெண்ணை கொலை செய்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

47 வயதுடைய ஆணும் 42 வயதுடைய பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பாணந்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

அடையாளம் தெரியாத 2 ஆண்களின் சடலங்கள் மீட்பு

அடையாளம் தெரியாத 2 ஆண்களின் சடலங்கள் மீட்பு

அடையாளம் தெரியாத 2 ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

எரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியூகுண விகாரைக்கு மேலே உள்ள ஏரிக்கு அருகில் நேற்று (27) காலை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், ஆனால் அவர் 45-50 வயது மதிக்கத்தக்க, 5 அடி 5 அங்குலம் உயரம் கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அடையாளம் தெரியாத 2 ஆண்களின் சடலங்கள் மீட்பு

மேலும் அவர் மேலே ஊதா நிற சட்டையும், ஆரஞ்சு மற்றும் ஊதா கலந்த சாரமும் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்மல்பொல புகையிரத கடவைக்கு அருகில் உள்ள மா ஓயாவில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிடைத்த தகவலின் அடிப்படையில் ரம்புக்கனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீடியோ

Posted in மருத்துவம்

ஆண், பெண் மூளையின் வித்தியாசம்

ஆண், பெண் மூளையின் வித்தியாசம்

மூளை வித்தியாசப்படுவதால் தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள்.

உலகம் முழுவதும் இருக்கும் ஒட்டு மொத்த ஆண்களும், பெண்களும் நினைப்பது என்னவென்றால் ஆண், பெண் இருவருக்கும் உடலமைப்புகள்தான் வித்தியாசம்.

மற்றபடி மனம், மூளை போன்றவை ஒன்றுதான் என்று நினைக்கிறார்கள். உண்மையில் இரு பாலினத்தவருக்கும் உடல் மட்டுமல்ல மூளையும் வித்தியாசப்படுகிறது.

இப்படி மூளை வித்தியாசப்படுவதால் தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள். ஆணின்

மூளையும், பெண்ணின் மூளையும் வெவ்வேறு விதமாக வேலை செய்கின்றன என்பதுதான் உளவியல் சொல்லும் காரணம்.

மருத்துவம்

பெண்ணின் மூளை அமைப்பு மூன்று மையங்களை கொண்டதாக இருக்கிறது. முதல் மையம் உணர்ச்சிகளை அப்படியே கிரகித்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இரண்டாவது மையம் மொழிவளத்துக்கானது. இது வார்த்தைகளையும்,

உரையாடல்களையும் ரசிக்கும் தன்மைக்கொண்டது. மூன்றாவது மையம் முகத்தின் சாயலை கொண்டு ஒருவரை துல்லியமாக எடைபோடும் தன்மை கொண்டது.

ஆண், பெண் மூளையின் வித்தியாசம்

ஆண் மூளையிலும் இந்த 3 மையங்கள் உள்ளன. ஆனால், அது வேறுவிதமாக செயல்படுகிறது. ஒரு விஷயத்தை பெண் பேசுவதை போல் ஆணால் விவரித்து

கொஞ்சம் ‘வளவள’ என்று இழுத்துக் கூறமுடியாது. தான் உணரும் அந்த உணர்வுகளை ஒரு பெண்ணைப்போல் ஆணால் மொழியால் விவரிக்க முடியாது. எதிராளியின் முக அமைப்பை கொண்டு அவர் மனதை புரிந்துகொள்ள முடியும் திறனும் குறைவு.

ஆணுக்கான மூளை அமைப்பு கண்ணில் காணும் காட்சிகளுக்கே முக்கியத்துவம் தருகிறது. அழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவதற்கு ஆணின் மூளை அமைப்பே காரணம். ஆனால், பெண்ணின் மூளை அப்படியல்ல.

பெண்ணுக்கு பார்வை இன்பம் என்று ஒன்று கிடையாது. அதனால்தான் பெண்ணுக்கு காட்சிகளால் மகிழ்ச்சி கிடைப்பதில்லை. பேச்சு மூலம்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது.

ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கிறது. ஆண் அழகாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.

இதுபோன்ற அடிப்படையான வேறுபாடுகள் ஆண், பெண் இருவருக்கும் உண்டு.