19பேர் பலி பேருந்து விபத்து
19பேர் பலி பேருந்து விபத்து நுவரெலியா கண்டி பிரதான வீதியில் கொட்காலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து விபத்தில் .சிக்கியது .
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில், அதில் பயணித்த பத்தொன்பது பேர் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகலை நோக்கி பயணித்த போக்குவரத்து சபைக்கு சொந்தமான ,பேரூந்து இவ்வாறு விபத்தில் சிக்கி தலைகீழாக கவிழ்ந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பலியானவர்கள் சடலங்கள் மீட்கப்பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று காயம் அடைந்தவர்களும் தற்பொழுது மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை தற்பொழுது போலீசார் ஆரம்பித்து இருக்கின்றனர்.
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் தொடர் விபத்துகளினால் மக்கள் சொல்லானென்னா துயரை சந்தித்து வருகின்றனர்.
இந்த விபத்திலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள என்ன வழிவகை உள்ளது என்பதே கேள்வியாக உள்ளது.
நாள்தோறும் இலங்கையில் இடம்பெறுகின்ற விபத்தில் ,நால்வர் பலியாகி எட்டுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு









