Tag: அனுமதி
இஸ்ரேலில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
இஸ்ரேலில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
இஸ்ரேலில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி ,கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கடந்த 24 மணி நேரத்தில் 108 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
சிறிய காயங்களுடன் மருத்துவமனையில்
இவர்களில் 96 பேர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவர் “மிதமான” நிலையில்
இருப்பதாகவும், ஒன்பது பேர் இன்னும் மருத்துவ மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படுவதாகவும் அது குறிப்பிட்டது.
மோதல் தொடங்கியதிலிருந்து, 3,195 பேர் காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை GMT 07:00 மணி நிலவரப்படி 81 பேர் மருத்துவமனையில் தங்கியுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சகம் பதிவு செய்யப்பட்ட இறப்பு எண்ணிக்கையை தெரிவிக்கவில்லை.
ஈரான் நேற்று இரவு இஸ்ரேலை நோக்கி ஏவுகணை
இதற்கிடையில், ஈரான் நேற்று இரவு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்தன.
அச்சுறுத்தலைத் தடுக்க தற்காப்பு அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மொபைல் போன்களுக்கு முன்னெச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.
பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களுக்குள் நுழைந்து மறு அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருக்குமாறும் அது எச்சரித்தது.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் இணைக்கப்பட்ட ஈரானிய ஃபார்ஸ் செய்தி நிறுவனம், ஈரானில் இருந்து ஒரு புதிய அலை ஏவுகணைகள்
ஏவப்பட்டுள்ளதாகவும், லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்பொல்லாவும் இஸ்ரேலின் வடக்குப் பகுதிகளை நோக்கி ஏவுகணைகள் அல்லது ட்ரோன்களை ஏவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஹோட்டல்களில் பெண்ககள் இரவு வேலை செய்ய அனுமதி
ஹோட்டல்களில் பெண்ககள் இரவு வேலை செய்ய அனுமதி
ஹோட்டல்களில் பெண்ககள் இரவு வேலை செய்ய அனுமதி ,ஹோட்டல்களில் பெண்களுக்கான இரவுப் பணிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வணிக ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில்
வணிக ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் உணவு மற்றும் பான பரிமாறுபவர்களாகப் பணிபுரியும் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களை இரவு
நேரங்களில், மாலை 6 மணிக்குப் பிறகும் காலை 6 மணிக்கு முன்பும் பணியமர்த்த அனுமதிக்கும் கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் (சேவை
மற்றும் ஊதிய ஒழுங்குமுறை) சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இரவுப் பணிகளில் பணிபுரியும் பெண்களுக்கு
இரவுப் பணிகளில் பணிபுரியும் பெண்களுக்கு முறையான பாதுகாப்பை உறுதி செய்வதோடு, விருந்தோம்பல் துறையின் செயல்பாட்டுத் தேவைகளை ஆதரிப்பதே இந்த முடிவின் நோக்கமாகும்.
சட்டத்தின் பிரிவு 66 இன் கீழ் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட உத்தரவை நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க தொழிலாளர் அமைச்சரின்
முன்மொழிவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நிறைவேற்றப்பட்டதும், அது அரசு விருந்தினரில் வெளியிடப்படும்.
பாடசாலை மாணவர்கள் 45 பேர் வைத்தியசாலையில் அனுமதி
பாடசாலை மாணவர்கள் 45 பேர் வைத்தியசாலையில் அனுமதி
பாடசாலை மாணவர்கள் 45 பேர் வைத்தியசாலையில் அனுமதி ,பொலன்னறுவை – ஹிங்குரக்கொட, பக்கமுன கல்வி வலையத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் சுமார் 45 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு
உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு அந்த பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் பக்கமுன பிராந்திய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று
வருவதுடன் சிலர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
பாடசாலையில் சுமார் 230 மாணவர்கள் கல்வி
குறித்த பாடசாலையில் சுமார் 230 மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பக்கமுன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தங்கஅனுமதி
இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தங்கஅனுமதி
இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தங்கஅனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. Sri Lankan Tamils allowed to stay in India legally .
அகதிகளாக தமிழகம் சென்ற இலங்கைத் தமிழர்கள் Sri Lankan Tamils who went to Tamil Nadu as refugees
இலங்கையில் யுத்தம் காரணமாக அகதிகளாக தமிழகம் சென்ற இலங்கைத் தமிழர்கள் பல வருடங்களாக அகதிகளாகவே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
இப்பொழுது அவர்கள் இந்தியாவின் குடியுரிமை பெற்று ,இந்தியாவில் தங்குவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக, பிரதி அமைச்சர் முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சட்டபூர்வமாக தங்குவதற்கான வாய்ப்பு Opportunity to stay legally
இனி இலங்கை தமிழ் சொந்தங்கள் தமது நாட்டில் எவ்வித பயமின்றி சட்டபூர்வமாக தங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அடித்து விட்டுள்ளார்.
உண்மையில் அனைவரும் அங்கு வாழ்வருக்கான உரிமையை கொடுத்துள்ளதா ..?அல்லது தேர்தல் கண்துடைப்பு நாடகத்தில் ஒன்றாக பார்க்கப்படுகிறது என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது

- முன்னாள் தேசியப் போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேரா இலஞ்சக் குற்றச்சாட்டு ஆணையத்தால் கைது

- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

- அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை

- இருவர் வெட்டி படுகொலை

- லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சபாநாயகர் மீது விசாரணை

சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடஅனுமதி
சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடஅனுமதி
சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடஅனுமதி , வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வெசாக் பண்டிகை நடவடிக்கையை அடுத்து ,தற்பொழுது இந்த நடவடிக்கை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கைதிகளின் உறவுகள் தொடந்தும் அந்த உறவுகளை நேரே சந்தித்து அவர்களுக்கு உரிய உணவுகளை, அளித்து கலந்துரையாட வாய்ப்பு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி வெளியிட்டு இருக்கின்றன.
ஆண்டுதோறும் வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை செய்வதும் அதற்கு உரிய வகையில் அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனை அடுத்து கைதிகளினுடைய உறவினர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.
தமிழரசியல் கட்சிகளையும் பார்வையிடக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் ,தமிழ் கைதிகளின் உறவினர்களும் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்து வரும் 12 மற்றும் 13 ஆம் நாட்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்ததை எடுத்து கைதிகளின் உறவுகள் மகிழ்ச்சியில் இணைந்திருக்கின்றன.
ஆண்டு தோறும் இந்த வெசாக் இவ்விதமான நிகழ்வினால் குற்றங்கள் செய்து சிறையில் வசிக்கும் கைதிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக மாற்றம் பெறுகிறது .
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது

- முன்னாள் தேசியப் போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேரா இலஞ்சக் குற்றச்சாட்டு ஆணையத்தால் கைது

- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

நெதன்யாகு விமானம் துருக்கியில் தரைஇறங்கும்
நெதன்யாகு விமானம் துருக்கியில் தரைஇறங்கும்
நெதன்யாகு விமானம் துருக்கியில் தரைஇறங்கும் ,துருக்கி விமான நிலையத்தை பயன்படுத்த இஸ்ரேல் அதிபர் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக துருக்கிய அரசு அறிவித்துள்ளது.
அசபசஸான் பகுதிக்கு நெதன்யாகு திடீர் பயணம் மேற்கொள்ள இருக்கின்றார் .
இந்த நிலையில் தற்பொழுது அந்த நாட்டுக்கு செல்வதற்கு ,துருக்கி விமான நிலையத்தில் இறங்கி அதன் ஊடாக அந்த நாட்டுக்கு ,நெதன்யாகு பயணிக்க துருக்கிய அரசு அனுமதி அளிப்பதாக அந்த நாடு அறிவித்துள்ளது .
ஈரான் அசபசஸான் உடன் தொடர்ந்தும் உறவு பேணி வருகின்ற நிலையிலும், அதனை அடுத்து தற்பொழுது அந்த நாட்டிற்கு இஸ்ரேல் அதிபர் திடீர் பயணத்தை மேற்கொள்வதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
நேரடியாக சென்று அந்த நாட்டு அதிபரை நெத்தன்யாகு மிரட்ட கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்தும் ஈரானிடம் இருந்து அந்த நாட்டை தூண்டிக்கவும் ,அவர்களுடைய இழப்புகளை தூண்டித்து ,தமக்கு அந்த நாட்டை ஆதரவாக திருப்பு நடவடிக்கையில் ,
தற்பொழுது அந்த நாட்டினுடைய அதிபரை மிரட்டு நடவடிக்கைக்கு இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திடீரென துருக்கி அவர்களுக்கு கொடுத்த இந்த அனுமதியை அடுத்து ஈரானுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, உலகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
- கூதி சவூதி கடும் மோதல்
- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்
- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்
- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
பிள்ளையானுடன் உரையாட அனுமதி கோரிய ரணில்
பிள்ளையானுடன் உரையாட அனுமதி கோரிய ரணில்
பிள்ளையானுடன் உரையாட அனுமதி கோரிய ரணில் ,பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
பிள்ளையானுடன் தொலைபேசிமூலம் உரையாட அனுமதிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 9ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், குறித்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனவும், தடுப்பு காவலில் உள்ள சந்தேகநபருடன் தொலைபேசியில் உரையாடுவது
சட்டவிரோதமானது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்
பிள்ளையானை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
பிள்ளையானை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
பிள்ளையானை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி ,முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாதன் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னாள் இராஜாங்க
அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கடந்த 08 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
மாவை சேனாதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
மாவை சேனாதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
மாவை சேனாதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி ,இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை
சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்று (28) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக எமது யாழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.
- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

3 புதிய நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி
3 புதிய நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி
3 புதிய நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி ,அரச சேவையில் மூன்று சிரேஷ்ட பதவிகளுக்கான புதிய நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.எச்.பி. பாலித பெர்னாண்டோவை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த நியமனம் ஒரு வருட காலத்திற்கு செல்லுபடியாகும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இதேவேளை, ஆர்.ஏ. சந்தன சமன் ரணவீர ஆராச்சி காணி ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை விவசாய சேவையின் விசேட தர அதிகாரியான கலாநிதி ஈ.ஆர்.எஸ்.பி. எதிரிமான்னவை விவசாய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

பஸ் விபத்து 14 பேர் மருத்துவமனையில் அனுமதி
பஸ் விபத்து 14 பேர் மருத்துவமனையில் அனுமதி
பஸ் விபத்து 14 பேர் மருத்துவமனையில் அனுமதி ,சேருநுவர பொலிஸ் பிரிவில் சேருநுவர-கந்தளாய் வீதியில் சேருநுவரவில் உள்ள கல்லாறு இராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள வளைவுக்கு அருகில் இன்று (20) காலை
காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பஸ் வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதி, கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம்பெறும் போது பஸ்ஸில் சுமார் 49 பயணிகள் இருந்தனர். மேலும் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 14 பயணிகள் விபத்தைத் தொடர்ந்து சிகிச்சைக்காக சேருநுவர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், சாரதி மற்றும் 9 பயணிகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தற்போதைய விசாரணையில், விபத்துக்கான காரணம் சாரதியின் கவனயீனமே என்பது தெரியவந்துள்ளது.
சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் அனுமதி
கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் அனுமதி
கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் அனுமதி ,கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விடுவிப்பில் ஏற்படும் தாமதங்களை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை சுங்கம் ஒரு விசேட திட்டத்தை தொடங்கியுள்ளது.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த திட்டம் தொடங்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்தார்.
நேற்றைய (13) நாளின் நிலவரப்படி, கொழும்பு துறைமுகத்திலிருந்து 459 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, RCT, கிரேலைன் 1 மற்றும் 2 பிரிவுகளில் இருந்து 242 கொள்கலன்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டன.
சுங்கத்துறை நாளொன்றுக்கு சுமார் 500 கொள்கலன்களை சோதனை செய்து விடுவிக்க முடியும் என்றாலும், அனுமதி வழங்கும் முகவர்கள் மற்றும் கொள்கலன் லொறி சாரதிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் விடுவிக்கக்கூடிய கொள்கலன்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக சுங்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
இன்று (14) காலை நிலவரப்படி, நுழைவாயில் அனுமதி வழங்கப்பட்ட போதிலும், 496 கொள்கலன்கள் துறைமுகத்தில் உள்ளன, ஆனால் இன்னும் சரக்கு சோதனை நிறைவடைந்து அவைகள் விடுவிக்கப்படவில்லை.
இன்று விடுமுறை நாளாக இருந்தாலும், சுங்கம் மற்றும் பிற தொடர்புடைய அரசு நிறுவனங்கள் கொள்கலன்களை விடுவிக்கும் பணியில் ஈடுபடும் என்று சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

துமிந்த சில்வா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி
துமிந்த சில்வா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி
துமிந்த சில்வா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி மரண தண்டனை கைதியான துமிந்த சில்வா மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சில்வா கடந்த ஜனவரி 10 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும் வெலிக்கடை பொது வார்டில் இருந்த போது ஏற்பட்ட திடீர் உபாதை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரின் பரிந்துரையின் அடிப்படையில் சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது சிகிச்சை தொடர்வது தொடர்பாக
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சுகாதார பணிப்பாளர் நாயகத்திடம் எழுத்துமூலம் வினவியதை அடுத்து, 18 விசேட வைத்தியர்கள் குழு நியமிக்கப்பட்டது.
சில்வாவுக்கு சிறைச்சாலை மருத்துவமனையிலோ அல்லது வேறு எந்த வசதியிலோ தொடர்ந்து சிகிச்சை தேவையில்லை என்று மருத்துவக் குழு முடிவு செய்ததுடன், அவசரச் சிக்கல்
ஏற்பட்டால் மட்டுமே உடனடி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.
சில்வா வெலிக்கடையில் இருந்தபோது எதிர்பாராத வகையில் ஏற்பட்ட உபாதை காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியரின்
பரிந்துரையின் பேரில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகளின் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்தார்.
சில்வா தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
சில்வாவை சிறைச்சாலை வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு சிறைச்சாலை வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி பரிந்துரைத்துள்ளார் என திஸாநாயக்க தெரிவித்தார்.
சில்வா தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் வசிப்பவராக சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை குறித்த மேலதிக தகவல்கள் ஜனவரி 15 ஆம் திகதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

சிறப்பு அனுமதி கைதிகளை பார்க்க
சிறப்பு அனுமதி கைதிகளை பார்க்க
சிறப்பு அனுமதி கைதிகளை பார்க்க , சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்வையிட நர்த்தார் பாண்டிகையும் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையகத்தை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன .
பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறைச்சாலைகளில் நீண்ட காலங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை மற்றும் புது வருட
பண்டிகையை முன்னிட்டு அவரது உறவினர்கள் பார்வை இடுவதற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை சென்று பார்வையிட்டு செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் பலர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர் .
அதேபோன்று புது வருட உள்ள நிலையில் இது சிறப்பு பார்வையிட அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்களவர்கள் தமிழர்கள் அனைவரும் இணைந்து புது வருட புத்தாண்டை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்ற நிலையை ,
இந்த சிறப்பு அதிபதி கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

உடல் அனுமதி தேர்தலில் போட்டியிடுவதற்கு
உடல் அனுமதி தேர்தலில் போட்டியிடுவதற்கு
உடல் அனுமதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ,இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது உடல் அனுமதிக்காத காரணத்தினால் தாம் போட்டியிடவில்லை என மூத்த அரசியல்வாதியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசியப் பட்டியலில் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுடன் லொகுகேவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
உடல் குறைபாடுகள் இருந்தபோதிலும் தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, லொகுகே, அமர்ந்திருந்தும் தன்னால் பணியாற்ற முடியும் என பதிலளித்தார்.
நாமல் ராஜபக்சவை தேசியப்பட்டியலில் சேர்ப்பதும் அவர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதும் கட்சியின் தீர்மானம் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
224 தொகுதிகளிலும் பணிகளை ஒழுங்கமைக்க ராஜபக்ச பொறுப்பு என்று லொகுகே குறிப்பிட்டார், மேலும் தான் போட்டியிடுவதற்குப் பதிலாக அந்தப் பொறுப்புகளில் கவனம் செலுத்துமாறு கட்சி உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர் என அவர் மேலும் கூறினார்.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

முட்டை இறக்குமதிக்கு அனுமதி
முட்டை இறக்குமதி அனுமதி
முட்டை இறக்குமதிக்கு அனுமதி ,இலங்கை அரச வர்த்தகம் வழங்கிய பணத்தில் இதுவரைக்கும் 224 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அதனை அடுத்து மேலதிகமான முட்டைகளை மீளவும் முறக்குமதி செய்வதற்கு தமது நாடுகள் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ரமளான் மற்றும் நத்தார் கொண்டாட்டங்களில் மக்கள் கலந்து கொண்டு சாந்தைகளில் முட்டை விலைகளை தட்டுப்பாடுகளை நீக்கு முகமாக ,
இந்த முட்டைகள் சர்வதேச நாடுகளில் இருந்து உடனடியாக இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முட்டையொன்றின் விலை 50 ரூபாய் காணப்படுகின்றது ,அவ்வாறான நிலையில் மக்கள் தமது தேவைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்,
இலங்கையில் அதிகமான பாவனைக்கு முட்டை உட்படுத்தப்பட்டு வருகின்றது.
அதனால் முட்டை உற்பத்தி வீழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது வேறு நாடுகளில் வழக்குமதி செய்யக்கூடிய அவலத்திற்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.
இலங்கை தமது பொருளாதாரத்தில் பலத்தை வீழ்ச்சிய தழுவிய நிலையிலும் தன்னிறைவு பொருளாதாரத்தில் பலவிதமான நாடக காணப்படுவது ,நாளும் முட்டைகளை ஒரு நாடு இறக்குமதி செய்ய வேண்டிய இக்கட்ட நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.
லஞ்ச ஊழல் பெருத்து தலை பிரித்து ஆடும் இந்த காலப்பகுதியில் முட்டை இறக்குமதிக்கு தற்பொழுது அனுமதி வழங்கி உள்ளதாக இலங்கை அரசு அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .
இலங்கை இவ்வாறு தொடர்ந்து மூன்று சென்றால் வரும் காலங்களில் பல்வேறுபட்ட நெருக்கடியை சந்திக்க போவதற்கான ஒரு முன்னுதாரணமாக இது காணப்படுகின்றது.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது

- முன்னாள் தேசியப் போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேரா இலஞ்சக் குற்றச்சாட்டு ஆணையத்தால் கைது

- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

பிரிட்டன் மகாராணி மரணம் – சோகத்தில் பிரிட்டன்
பிரிட்டன் மகாராணி மரணம் – சோகத்தில் பிரிட்டன்
இணைப்பு இரண்டு .
பிரிட்டன் மகாராணி எலிசபெத் அவர்கள் மருத்துவ மனையில் மரணமாகியுள்ளார் .
இவரது மரண செய்தியை அடுத்து பிரிட்டன் மக்கள் ,சோகத்தில் உறைந்துள்ளனர் .
70ஆண்டுக்கு மேலான ஆட்சி அதிகாரத்தை செலுத்தி ,அடக்கியாண்டு வந்த எலிசபெத் அவர்கள் 96 வது வயதில் மரணமடைந்துள்ளார் .
இவரது மரணத்தின் பின்னர் ,பிரிட்டனில் மாற்றங்கள் ஏற்படுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
கீழ் இணைப்பு ஒன்று
பிரிட்டன் முடிக்குரிய இளவரசி எலிசபெத் அவர்கள் ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
உடல்நிலை பாதிக்க பட்ட நிலையில் ,மகாராணி அவர்கள் தொடர்ந்து மருத்துவ மனையில் ,தொடர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
பிரிட்டன் மகாராணி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் ,மகாராணி தொடர்ந்து சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
பிரிட்டன் மகாராணி கணவர் உடன் நிலை பாதிக்க பட்ட நிலையில் ,மரணமாகியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.
காமெடி நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி
ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்த காமெடி நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல காமெடி நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி
போண்டா மணி
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரில் ஒருவர் போண்டாமணி. இவர் இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டவர். சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய
போராட்டத்துக்குப் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் ஒருவரான இவர் பல
படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். ரன், சுந்தரா டிராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ்
படத்தில் வடிவேலுவுடன் இடம்பெற்ற இவரின் காமெடி காட்சி இன்றளவும் ரசிகர்கள் விரும்பும் காட்சிகளில் ஒன்றாகவுள்ளது.
போண்டா மணி
இந்நிலையில், இதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.














































