Tag: முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு
முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு
முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு
முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு இன்று எதிரி இணையம் ஊடாக வெளியீடு செய்து வைக்கப்படுகிறது.
ஈழ மண்ணின் விடுதலைக்காக தனது மதுரை குரல் ஊடாக பாடல்களை பாடி உணர்வுகளை ஊட்டி பலம் கொடுத்த பாசறைப்பாளர் தேனிசை செல்லப்பாவின் புதல்வன் இளங்கோ செல்லப்பா அவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .
இளங்களோ செல்லப்பா இசையில் ,அவரது மகன் பாவேந்தன் அவர்களுடைய மதுரை குரலில், இளம்பிறை (குமார் )அவர்கள் வரியில், இந்தப் பாடலை எதிரி இணையம் வெளியீடு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறது.
இலைமறை காய்களாக மறைந்திருக்கும் புதிய கவிஞர்களை இனம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் வன்னி மைந்தன் tiktok இடம் பெற்றுள்ளது.
அதனை ஏற்றுக் கொண்டு அந்த புதியவர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களையும் ஈழ மண் விடுதலை நோக்கி அழைத்துச் செல்வதற்கு, ஆதரவு தந்து அவர்களை பலப்படுத்தி கரங்களை நீட்டிய இளங்கோ செல்லப்பா
பாவேந்தன் மற்றும் ஐயா செல்லப்பா ஆகியோருக்கும், இந்த வேளையில் நாங்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில், எங்கள் மக்கள் பாட்ட பேரவலம் தொடர்பாக இந்த பாடல் வரி வலி சுமந்து கனக்கிறது .
கனத்த நெஞ்ச வலிகளோடு கால்கள் நடக்கின்ற பொழுது ,அதன் வலிகளை விழி நீர் சொரிய இந்த பாடல் கேட்க வைக்கிறது .
ஆகவே அழகான வரிகள் ஊடாக இந்த பாடல் மொழியாக்கப்பட்டுள்ளது. சிறந்த காட்சி அமைப்பை பாவேந்தன் அவர்கள் செய்திருக்கின்றார்.
சிறந்த ஒரு இசையை எங்களுடைய இசை மேதை இளங்கோ செல்லப்பா அவர்கள் கொடுத்திருக்கிறார் .
ஆகவே உயிரோட்டமாக இருக்கிறது பாடல் கேட்கும்போது .மீள மீள இந்த பாடல் கேட்கத் தோன்றுகிறது, எனவே இந்த பாடல்
ஊடாக பாடல் ஆசிரியராக பரிணாமம் பெற்றுள்ள இளம்பிறை அவர்களுக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுகளையும்
வன்னி மைந்தன் tiktok மற்றும் எதிரி இணையம் மக்கள் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி.
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல் வரிகள் – இளம்பிறை ( குமார் )
வெளியீடு – எதிரி இணையம்
வன்னி மைந்தன் டிக் டாக்கில் பயணித்த உறவை பாடல் ஆசிரியராக அறிமுக படுத்திய இளங்கோ செல்லப்பா அண்ணாவிற்கு மிக்க நன்றிகள்.
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி










