துறைமுகத்தில் ஒருவர் சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

துறைமுகத்தில் ஒருவர் சடலமாக மீட்பு

துறைமுகத்தில் ஒருவர் சடலமாக மீட்பு

துறைமுகத்தில் ஒருவர் சடலமாக மீட்பு கொழும்பு துறைமுக நகரத்தில் இசை நிகழ்ச்சிக்கு சென்ற இளைஞர் இறந்து கிடந்தார்

கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகிலுள்ள கடலில்

கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகிலுள்ள கடலில் மிதந்தபோது ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துறைமுக காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, உடனடியாக விசாரணை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் வல்வெட்டித்துறை

இறந்தவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் பிப்ரவரி 28, 2026 அன்று கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய கொழும்பு துறைமுக காவல்துறையினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொழும்பு துறைமுகத்தில் சொகுசு கப்பல்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் சொகுசு கப்பல்

கொழும்பு துறைமுகத்தில் சொகுசு கப்பல்

கொழும்பு துறைமுகத்தில் சொகுசு கப்பல் ,ஒன்று வந்து அடைந்துள்ளதாக இலங்கை கப்பல் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

சுற்றி தெரியும் மிகப்பெரிய கப்பலாக விளங்கும் எடா இஸ்டல்லா சொகுசு கப்பலே இன்று இலங்கை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

மலேசியாவில் இருந்து 2022 சுற்றுலா பயணிகளை காவியபடி 682 பணியாளுடன் இந்த கப்பல் இலங்கை வந்துள்ளது.

2682 பேருடன் வருகை தந்துள்ள இந்தக் கப்பல் த,ற்பொழுது கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது.

இலங்கையில் தரித்திருக்கும் இந்தக் கப்பல் ,ஆஸ்திரேலியா பிரேசில் கனடா பெல்ஜியம் உள்ளிட்ட, 30 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளை காவியப்படி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலா பயணிகள் இன்று கொழும்பு , கண்டி மற்றும், நீர்குளம் ஆகிய பகுதிகளுக்கு செல்வார்கள் .

அதன் பின்னர் கப்பலில் ஊடாக தமது இடம் நோக்கி பயணிப்பவர்கள் என தெரிய வருகிறது.

பல மாதங்களாக கடலில் பயணிக்கும் இந்தக் கப்பல் பயணத்தில், அவர்கள் தமது நேரங்களை செலவு செய்து உலக நாடுகளை சுற்றி பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மிகப்பெரும் ராட்சத கப்பலாக காணப்படும் இந்தக் கப்பல், இலங்கை வந்தடைந்துள்ளது ,இலங்கைக்கு பெரும் வரவேற்பை பெற்றுக் கொள்ளக் கூடிய விடயம் என சொல்லப்படுகிறது.

நீச்சல் குளங்கள் ஜிம் உடற்பயிற்சி மையங்கள், மருத்துவ முகாம்கள் ,உணவகங்கள் ,கொட்டல் ,படுக்கையறை ,களியாட்டவிடுதி , திரை படம் என பல விடயங்கள் இந்தக் கப்பலில் காணப்படுகிறது.

அவ்விதமான கப்பலே ,இப்பொழுது இலங்கை வந்தடைந்துள்ளது..இலங்கையர்களுக்கு பெரும் மகிழ்வை ஏற்படுத்தி உள்ளது.

துறைமுகத்தில் தீ உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு
Posted in உலக செய்திகள்

துறைமுகத்தில் தீ உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு

துறைமுகத்தில் தீ உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு

துறைமுகத்தில் தீ உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு ,பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது

பந்தர் அப்பாஸ் நகரின் தெற்குப் பகுதியில் உள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் ஏற்பட்ட தீ திங்கள்கிழமை அணைக்கப்பட்டதாக ஈரானிய

அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர், மேலும் குண்டுவெடிப்பிலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்துகளிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

ஷாஹித் ராஜீ துறைமுகம் அமைந்துள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தைச் சேர்ந்த முகமது அஷோரி, திங்கள்கிழமை பிற்பகல் செய்தியாளர்களிடம்

கூறுகையில், குண்டுவெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை பிற்பகல் நிலவரப்படி 65 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், தீயை அணைக்கும் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதாக உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மோமெனியின்

அறிவிப்பை திங்கள்கிழமை பிற்பகல் தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

மேலும், தீயை அணைக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக ஈரானின் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் (NDMO) செய்தித் தொடர்பாளர் ஹொசைன் ஜஃபாரி தெரிவித்தார்.

சம்பவத்தில் காயமடைந்த 1,072 பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், காயமடைந்த 138 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகள் வரும் நாட்களில் தொடரும் என்று ஈரானிய அதிகாரிகள் தெரிவித்ததாக ஜஃபாரி மேலும் கூறினார்.

சனிக்கிழமை ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் ஒரு சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது, எரிபொருள் டேங்கர் வெடித்ததால், இன்னும் விசாரணையில் உள்ளது.

ஹார்மோஸ்கான் மாகாண நெருக்கடி இயக்குநர் பின்னர் இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்ததாக தெரிவித்தார்.

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான ASLAT கொழும்பு துறைமுகத்தில்
Posted in இலங்கை செய்திகள்

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான ASLAT கொழும்பு துறைமுகத்தில்

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான ASLAT கொழும்பு துறைமுகத்தில்

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான ASLAT கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.

இலங்கை கடற்படையால் கடற்படை மரபுகளுக்கு இணங்க இந்த கப்பல் வரவேற்கப்பட்டது. PNS ASLAT கப்பல், முகமது அசார் அக்ரம் தலைமையிலான 123 மீட்டர் நீளமுள்ள ஒரு போர்க்கப்பலாகும்.

பயணப் பயிற்சி இந்தக் கப்பலில் 243 பேர் கொண்ட குழுவினர் பணியாற்றுகின்றனர். கொழும்பில் கப்பல் தங்கியிருக்கும் போது, அதன் பணியாளர்கள் நாட்டின் சில சுற்றுலா தலங்களைப் பார்வையிடுவார்கள் என்று இலங்கையின் கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் பிஎன்எஸ் ASLAT 2025 பெப்ரவரி 4 ஆம் திகதியன்று இலங்கையை விட்டு புறப்படும் இதன்போது, கொழும்பு கடலில் இலங்கை கடற்படையின் ஒரு கப்பலுடன் ஒரு பயணப் பயிற்சியை பாகிஸ்தானிய கப்பல் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய படகு
Posted in இலங்கை செய்திகள்

காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய படகு

காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய படகு

காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய படகு காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த படகு ஒன்று இன்று (19) காலை நீர் கசிவு காரணமாக நீரில் மூழ்கியுள்ளது.

குறித்த படகு வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கடல் நடுவில் கைவிடப்பட்டுச் சென்றிருந்த நிலையில், பின்னர் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்க அமைவாக நடத்தப்பட்ட பொது ஏலத்தில் ஒரு நிறுவனத்தால் இந்தப் படகு வாங்கப்பட்டது, மேலும் அது பழுதுபார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும், படகு மூழ்கும் போது அதில் குறிப்பிட்ட அளவு எரிபொருள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகத்தில் தேங்கியுள்ள 1000 கொள்கலன்கள்
Posted in இலங்கை செய்திகள்

துறைமுகத்தில் தேங்கியுள்ள 1000 கொள்கலன்கள்

துறைமுகத்தில் தேங்கியுள்ள 1000 கொள்கலன்கள்

துறைமுகத்தில் தேங்கியுள்ள 1000 கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாக 800 முதல் 1000 வரை கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்படும் தாமதங்களுக்கு துறைமுக அதிகாரசபை மற்றும் சுங்கத் திணைக்களத்தின் நிர்வாக பலவீனங்களே காரணமாகும் என்று அந்த சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள நேற்று (9) ஊடக சந்திப்பொன்றை நடத்தி சுட்டிக்காட்டினார்.

கொள்கலன்களை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள நெரிசல் காரணமாக, சாரதிகள் சுமார் ஒரு வாரமாக துறைமுகத்திலேயே தங்க வேண்டியுள்ளதாக சனத் மஞ்சுள கூறினார்.

இதற்கிடையில், கொள்கலன் அனுமதியில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை சுமார் 20% அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்கலன்களின் தாமதங்கள் காரணமாக பல நிறுவனங்கள் தாமதக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியுள்ளமையே இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

துறைமுகத்தில் 5 மனித எச்சங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

துறைமுகத்தில் 5 மனித எச்சங்கள் மீட்பு

துறைமுகத்தில் 5 மனித எச்சங்கள் மீட்பு

துறைமுகத்தில் 5 மனித எச்சங்கள் மீட்பு ,கொழும்பு துறைமுக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக அகழ்வுப் பணிகளின் போது ஐந்து மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் ஜூலை 13 அன்று ஒரு தனியார் நிறுவனத்தால் போர்ட் சிட்டி அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கொழும்பு கோட்டையில் உள்ள பழைய செயலகக் கட்டிடத்திற்கு அருகில் நிலத்தடியில் 6 அடி தோண்டும் கட்டுமானப் பணியின் போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கொழும்பு துறைமுகத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் மீதான விசாரணை கொழும்பு பிரதான நீதவான் தலைமையில் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5 ஆம் திகதி அகழ்வு நடவடிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த கட்டத்தில் சட்ட வைத்திய அதிகாரிகள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் காணாமல் போன நபர்கள் தொடர்பான அலுவலகத்தின் (OMP) பிரதிநிதிகள் இருந்தனர்.

தேவையேற்படின் குறித்த மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணையை மேற்பார்வையிட OMP (காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம்) க்கு நீதவான் அங்கீகாரம் அளித்துள்ளார்.

முதற்கட்ட அகழ்வாராய்ச்சியின் பின்னர் இரண்டாம் கட்டம் செப்டெம்பர் 26, 27, 28 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு (வடக்கு) குற்றத்தடுப்புப் பிரிவின் ஆய்வகத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ அகழ்வாராய்ச்சியை மேற்பார்வையிடுகிறார்.

அந்த இடத்தில் மேலும் பல எலும்புக்கூடுகள் வெளிப்பட்டிருப்பதால், அடுத்த கட்ட அகழ்வாராய்ச்சி அவசியம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சங்களின் தோற்றம் மற்றும் பின்புலம் பற்றிய கூடுதல் விவரங்களைக் கண்டறிய விசாரணைகள் நடந்து வருவதாக மூத்த பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இஸ்ரேல் துறைமுகத்தில் எரியும் எண்ணெய் கூதம் பல மில்லியன் இழப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் துறைமுகத்தில் எரியும் எண்ணெய் கூதம் பல மில்லியன் இழப்பு


இஸ்ரேல் துறைமுகத்தில் எரியும் எண்ணெய் கூதம் பல மில்லியன் இழப்பு

இஸ்ரேல் துறைமுகத்தில் எரியும் எண்ணெய் கூதம் .


பல மில்லியன் இழப்பு ,காசா ஆதரவு போர் படை விமானங்கள் கடும் தாக்குதல் .


இஸ்ரேல் பாலஸ்தீன போர் இன்றைய களநிலவரம் ஆபத்தானதாக மாற்றம் ,

வீடியோ

இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிப்பு எரியும் ஒயில் சுத்திகரிப்பு நிலையம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிப்பு எரியும் ஒயில் சுத்திகரிப்பு நிலையம்


இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிப்பு எரியும் ஒயில் சுத்திகரிப்பு நிலையம்

இஸ்ரேல் தலைநகர் ஹைபா துறைமுக அண்மித்த பகுதியில் பாரிய
வெடிப்பு எரியும் ஒயில் சுத்திகரிப்பு நிலையம் .


இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அடித்து மூட பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

வீடியோ