Tag: ஸ்ரீதரன்
டக்ளஸ் படுகொலை ஸ்ரீதரன் கொதித்தார்
டக்ளஸ் படுகொலை ஸ்ரீதரன் கொதித்தார்
டக்ளஸ் படுகொலை ஸ்ரீதரன் கொதித்தார் .ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தாவுடன் 18 ஆண்டுகள் ஒன்றாக இருந்த சதா எனும் சுப்பையா Sreedharan enraged by Douglas murder
நிமலராஜன்,அற்புதன் Nimalarajan, wonderful
பொன்னையா என்பவர் ‘ நிமலராஜன்,அற்புதன் . நிக்கிலஸ் ஆகியோரை ஈ.பி.டி.பி தான் படுகொலை செய்வது என்று ஊடக சந்திப்பு நடத்தி அறிவித்துள்ளார் .
எனவே இது தொடர்பான விசாரணைகளை அரசு ஆரம்பிக்குமா எனக்கேள்வி எழுப்பிய தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி.யுமான சிவஞானம்
சிறீதரன்,அரசாங்கம் இராணுவத்தை பாதுகாக்கவே முயற்சிக்கிறது. .இலங்கை நீதியின் வழியில் செயற்பட்டிருந்தால் ஏன் வெளியக விசாரணைக்கு மறுக்க வேண்டும் எனவும் கேட்டார்
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம் பெற்ற தேசிய கணக்காய்வு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்விகளை எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,
சதா எனும் சுப்பையா பொன்னையா Oh, my dear, the one who is always happy.
ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தாவுடன் 18 ஆண்டுகாலமாக ஒன்றாக இருந்த சதா எனும் சுப்பையா பொன்னையா என்பவர் 2025.09.09 ஆம் திகதியன்று யாழ்ப்பாணம்
.ஊடக மையத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
அத்துடன் ஈ.பி.டி.பி தான் பல கொலைகளை செய்ததாகவும் சதா என்பவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பான விசாரணைகளை அரசு ஆரம்பிக்குமா?
நிமலராஜனின் கொலை முறையாக விசாரிக்கப்படவில்லை என்று சர்வதேச நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. உண்மைகள் மூடி மறைக்கப்பட்டன.
இசைப்பிரியா இலங்கை இராணுவத்தால் மிக மோசமாக கொலை செய்யப்பட்டார்.
இதேபோல் பல பெண்கள் கொலை செய்யப்பட்டார்கள். நீங்கள் இராணுவத்தை பாதுகாக்கவே முயற்சிக்கின்றீர்கள்.
இலங்கை நீதியின் வழியில் செயற்பட்டிருந்தால் ஏன் வெளியக விசாரணைக்கு மறுக்க வேண்டும்?.
வெளியக பொறிமுறைக்குள் வராவின் இந்த நாட்டில் நீதி ,சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஒருபோதும் உறுதிப்படுத்தப்படாது என்றார்.
கனடா தூதர் ஸ்ரீதரன் சந்திப்பு
கனடா தூதர் ஸ்ரீதரன் சந்திப்பு
கனடா தூதர் ஸ்ரீதரன் சந்திப்பு நிகழ்வு ஒன்று இலங்கையில் அவசர அவசரமாக இடம்பெற்றுள்ளது.
கடந்த தினம் இலங்கைக்கான கனடா தூதுவருடன் தவசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறுதொன் அவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
கனடாவின் பிரம்டன் நகரில் தமிழின் அழிப்பு தூபி
இதன் போது கனடாவின் பிரம்டன் நகரில் தமிழின் அழிப்பு நினைத்து அமைப்பதை முன்னிட்டு பெறுமதி மிக்க செயல் பாட்டை செய்ததற்கு ஸ்ரீதரன் கனடா அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார் .
அத்துடன் கனடிய தூதுவருக்கு கடிதம் ஒன்றையும் .வழங்கியுள்ளார் .
இலங்கையில் இடம் பெற்றது இனப்படுகொலை என்பதை கனடா பலமுறை வலியுறுத்தி வந்தது.
பிராம்டன் நகரில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி
அவ்வாறான காலப்பகுதியில் தமிழருக்காக, பிராம்டன் நகரில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அமைத்து ,
தமிழ் மக்களின் என்ன குமுறல்களை விளங்கிக் கொண்டு செயல்பட்ட ,கனடா அரசுக்கு தமிழர்கள் தமது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
சர்வதேச அளவில் உள்ள தமிழர் ஊடகங்களையும் ,இந்த விடயம் தொடர்பாக கனடிய கண்காணிப்பாளர்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த விடயம் மகிழ்ச்சிகரமான விடயம் என்பதை ,அண்ணன் ஸ்ரீதரன் தமிழரின் பிரதிநிதியாக,கனடா அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது பாராட்டை பெறுகிறது.
தமிழருடைய தேசியம், தன்னாட்சி, விடுதலை, உரிமை, சுதந்திரம், பாதுகாப்பு ,தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்கள் தமிழர்களுக்காக உரத்துக் குரல் கொடுத்து வருகிறார் .
பல்வேறுபட்ட நாடுகளின் தூதர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜதந்திரிகள் என்பவரின் சந்தித்தும் பேசி வருகின்றார்.
அதன் ஒரு தொடர்ச்சியாகவே இந்த பாராட்டும் இந்த பரஸ்பர உறவின் புதிய சந்திப்பாகவும் இதனை பார்க்க முடிகிறது.
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது

- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

அனுரா வெல்கிறார் ஸ்ரீதரன் கொதிப்பு
அனுரா வெல்கிறார் ஸ்ரீதரன் கொதிப்பு
அனுரா வெல்கிறார் ஸ்ரீதரன் கொதிப்பு,இலங்கை ஊடகத்துக்கு அளித்த போட்டியில் மனம் திறந்து பேச்சு.
இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினராகவும் ,அதனுடைய கட்சியினுடைய தலைவராகவும் விளங்கக்கூடிய அண்ணன் ஸ்ரீதரன் அவர்கள், ஊடகம்
ஒன்றுக்கு செவி அளிக்கின்ற பொழுது, உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் தமிழர் கட்சிகளுக்கு ஒரு சிறந்த பாடமாக உள்ளதாக எச்சரித்துள்ளார்.
இந்த தேர்தல் முடிவுகளில் இலங்கை தமிழர் கட்சி அதிகம் வெற்றி பெற்றிருந்தாலும் .இரண்டாம் நிலையில் 81 ஆசனங்களை பெற்று அனுராவை வென்று உள்ளதை மறந்துவிடக்கூடாது என்கிறார்.
இது தமிழர் தரப்பிற்கு விடுக்கப்படும் சாவு மணியாகவும் கடும் எச்சரிக்கை என அவர் தெரிவிக்கிறார்.
எனவே தமிழர்கள் கட்சிகள் மமதையோடு செயல்படுவதை விடுத்து. அவர்கள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்பதாக மறைமுக அழைப்பை விடுத்தார்.
கடந்தும் மமதையோடு செயல்பட்டால் அடுத்து வரும் தேர்தலில். உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இந்தக் கணக்கு என்பது சரியான கணக்கு என்பதாகவே நமது பார்வையும் சொல்கிறது.
எழுந்து நடந்த எங்கள் தமிழினம் .விழுந்து கிடக்கிறது .வலிகளோடு தவிக்கிறது. ஆனால் தங்கள் சுயநல லாபங்களுக்காக தமிழர் கட்சிகள் பிளவு பட்டு கிடக்கிறது.
இதிலிருந்து மீண்டெழுந்து தமிழரை காக்க வேண்டுமாக இருந்தால். தமிழர் கட்சிகள் தலை நிமிர்ந்து சிந்திக்க வேண்டும் என்கிறார் இலங்கைத் தமிழர் கட்சி தலைவர் ஸ்ரீதரன் அவர்கள் .
அவரது கொதிப்பும் கோபமும் நியாயமானது தான் என்பதாக படுகிறது.
ஆகவேதான் அடுத்த வரும் தேர்தலில் தமிழர் கட்சியினருக்கு சாவு மணி அடிக்கப்பட உள்ளதை இலங்கை தமிழரசு கட்சியினுடைய தலைவரே இப்பொழுதே இரக்கப்படமால் இடித்துக் கூறி இருக்கிறார் .
கதவுகள் திறக்கப்படுமா கட்சிகள் ஒருங்கிணைக்கப்படுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது

- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

மன்னிக்க முடியாது ஸ்ரீதரன் முழக்கம்
மன்னிக்க முடியாது ஸ்ரீதரன் முழக்கம்
மன்னிக்க முடியாது ஸ்ரீதரன் முழக்கம் ,தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜூலை படுகொலைகள் நடந்து 41 வருடங்களின் பின்னர் அமைச்சர் ஒருவரால் தற்போது சொல்லப்பட்ட மன்னிப்பு என்ற வார்த்தை எந்த வகையிலும் தமிழருக்கு தீர்வாக
அமைந்துவிடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 70களின் பிற்பகுதியில் 1980 களின் ஆரம்பத்தில் பல்வேறுபட்ட விடுதலை இயக்கங்கள் உருவாகியிருந்தன.
அவ்வாறான இயக்கங்களின் வரலாற்றில் தமிழீழ இராணுவம் எனும் கட்டமைப்பை உருவாக்கி ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியாக
இருந்த ஒருவரான தம்பாபிள்ளை மகேஸ்வரனை இந்த சபையில் நினைவில் கொள்கின்றேன்.
இவர் வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இந்த மண்ணில் தமிழருக்கு எதிரான கொடுமைகளை கண்டு தன்னை போராளியாக மாற்றிக்கொண்டிருந்தார்.
லண்டனில் பொறியியல்துறையில் கற்ற இவர், தனது கற்கையை துறந்து தன்னை ஈழ விடுதலை போராளியாக இணைத்துக்கொண்ட இவரின் மரணத்தை நாங்கள் ஆழ்மன அஞ்சலியுடன் பதிவு செய்கின்றேன்.
இதேவேளை 41 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் நடந்த மிகப்பெரிய இனப்படுகொலையாக கறுப்பு ஜூலை உள்ளது.
தமிழர்கள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அப்போதைய ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆசீர்வாதத்துடன் சிங்கள இளைஞர்களும், சிங்கள காடையர்களும் இந்த கொலைகளில் ஈடுபட்டனர்.
வெலிக்கடை சிறைச்சாலையில் இரண்டு நாட்கள் தொடர்ந்து மனித பேரவலம் நடந்தது. அங்கு தம்பாபிள்ளையும் இருந்தார்.
நடந்த படுகொலைகளுக்கு மன்னிப்பு கோருவதாக ஓர் அமைச்சரால் இந்த சபையில் 41 ஆண்டுகளின் பின்னர் எழுந்தமானமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கொழும்பில் ஐயாயிரம் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
அவர்களின் கோடிக்கணக்கான பெறுமதியான சொத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச குற்றங்களை விசாரணை செய்யும் அமைப்புகளும் இதனை இனப்படுகொலை, மனித படுகொலையாக கூறின.
இதனால் மிகப்பெரிய கொலைகள் நடந்த மாதமாக இருக்கின்றது.
ஏன் தமிழர்கள் ஆயுதம் ஏந்தினர் என்று பலரும் கேட்கின்றனர். ஆனால் 1983ஆம் ஆண்டில் தமிழர்கள் மீது இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது, அரச படைகள் பார்த்துக்கொண்டிருந்தாலும் எவரும் தடுக்கவில்லை.
ஏதும் அறியாத மலையக தமிழர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 1954இல் இருந்து இதுபோன்ற திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
தொடர்ந்தும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு நடைபெறுகின்றது. 1983இல் நடந்தவற்றுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்றார்
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது

- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது இருக்கிறோம் ஸ்ரீதரன்
சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது இருக்கிறோம் ஸ்ரீதரன்
தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் இணைந்து ஒருமிக்க வேண்டிய காலகட்டம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கடந்த 21 ந் திகதி தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களினால் வியாழக்கிழமை(24) மாலை வரவேற்பு நிகழ்வு மன்னார் அலுவலகத்தில் நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது இருக்கிறோம் ஸ்ரீதரன்
மனிதர்களுடைய வாழ்விலே பிறப்பிலிருந்து இறப்பு வரை எவ்வளவோ நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறே தமிழர்களுடைய வாழ்வில் பல அடையாளங்களோடும் எதிர் பார்ப்புகளோடும் கடந்து சென்று கொண்டிருக்கின்றன.இந்த நேரத்தில் மன்னார் மக்களுடன் நான் உரையாடுவது எனது வரலாற்றில் ஒரு பதிவாகின்றது.என்னுடைய தெரிவுக்கு மன்னார் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு நன்றியுடன் அத்துடன் உங்களுடன் நம்பிக்கையுடன் பயணிக்க இருக்கிறேன்.
இந்த மண்ணிலே நாம் பல உயிர்களை தியாகம் செய்திருந்தும் நாம் இன்னொரு சுதந்திரமான காற்றை சுவாசிக்க முடியாத கட்டத்தில் இருக்கிறோம். நாம் இன்னும் அந்நியப்படுத்த பட்டிருக்கின்றோம்.
நாம் 75 ஆண்டுகளுக்கு மேலாக போராடி போராடி வரும் ஓர் இனமாக இருக்கின்றோம். 1949 ஆம் ஆண்டு தந்தை செல்வா கூறியது தமிழர் ஒரு தேசிய இனம். இழந்துபோன இறைமையை மீட்டு எடுத்து எமது தேசிய அடையாளத்தோடு வாழ வேண்டும் என செயல்பட ஆரம்பித்தார்.
தந்தை செல்வா மன்னார் மண்ணுக்கும் வந்து சென்றுள்ளார். அவருடைய காலத்தில் பலர் இந்த மண்ணில் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்துள்ளனர்.அவருடைய தேசிய சின்னத்துடன் இந்த மண்ணில் தேசிய மாநாடு இங்கு நடந்துள்ளது.
இவ்வாறு வரலாறு இப்பொழுதும் எமக்கு புதிய பணியை தந்துள்ளது. இது ஒரு தனி மனிதன் ஆற்றும் பணியல்ல. மாறாக நாம் யாவரும் ஒன்றிணைந்து ஒரு சக்தியாக தமிழர் என்று திரள்கின்ற பொழுது இந்த சமூகம் உலகம் எம்மை அங்கிகரிக்கின்ற நாள் நெருங்கிக் கொண்டு இருக்கின்றது என்ற நம்பிக்கை எம்மிடம் இருக்க வேண்டும்.
எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் உலகம் முழுவதும் பாரிய மாற்றங்கள் இடம்பெற இருக்கின்றன. இன்று உலகத்தில் நிகழ்கின்ற சண்டைகள் அரசியல் நிகழ்வில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இலங்கை நாடும் இங்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறார்கள். இலங்கை உலகத்தை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றது என உலகம் தெளிவாக புரிந்து கொண்டு இருக்கின்றது.
தமிழர்களின் தேசிய அபிலாசைகளை உலகம் புதிய பரிமாணத்துடன் சிந்திக்க முற்பட்டுள்ளது. நாம் இழந்த ஆத்மாக்கள் இப்பொழுது எமக்கு உத்வேகத்தை தருகிறது.நாம் எந்த நோக்கத்துக்காக எமது உறவுகளின் உயிர்களை இழந்தோ மோ அந்த நோக்கங்கள் இன்னும் அழிந்து போகவில்லை.சிங்கள மக்களுக்கு முன்பே நமது தமிழினம் இங்கு வாழ்ந்துள்ளது. நாம் இங்கு பல அடையாளங்களுடன் வாழ்ந்திருக்கிறோம்.
ஆகவேதான் இழந்த இறைமையை தான் நாம் மீண்டும் பெற போராடுகின்றோம். எமது மொழி , இடம் , கலை பண்பாட்டு இவைகள் எமது தமிழ் தேசிய அடையாளத்தை பற்றியுள்ளது.நாம் பல சவால்களை சந்தித்து இன்னும் மனிதர்களாக இருக்கிறோம் என்றால் நாம் அறத்தின் மீதும் தர்மத்தின் மீது பற்றுக் கொண்டவர்களாக இருக்கின்றோம்.இலங்கை அரசுக்கு ஒரு செய்தியை கூறுகின்றோம்.
தமிழர்களுக்கு வெளிச்சமான பாதை தொடங்கியுள்ளது. ஆகவே நாம் ஒருமித்த கரங்களாக இணைந்து கொள்வோம்.
நமக்கு இந்த நாடு நிம்மதியான அமைதியை தருமா? என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டு நிற்கின்றோம். இலங்கை அரசு தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்காவிடில் இந்த நாடு பெரும் பாதாளத்துக்குள் விழும் என்பது ஐயம் இல்லை.
நாம் பெற்ற துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு பயத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் இணைந்து ஒருமிக்க வேண்டிய காலகட்டம் என தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன்|தடுக்கும் சுமந்திரன்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன்|தடுக்கும் சுமந்திரன்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன் நியமிக்க படவேண்டும் என பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர் ,ஆனால் அதனை தடுக்கும் நகர்வில் சுமந்திரன் ஈடுபட்டுள்ளார் .
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த இரா சம்பந்தன் மூப்பாகி விட்ட காரணத்தால் , தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டிய நெருக்கடியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சிக்கி உள்ளது .
தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ,உலக தமிழ் மக்கள் மத்தியில் அதனால் நன்மதிப்பை பெற்றுள்ளது .
ஆனால் இடையில் நுழைந்த எம் ஏ சுமந்திரன் செயல் பாட்டினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உடைந்து காணப்படுகிறது .
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன்|தடுக்கும் சுமந்திரன்
இதே தமிழ் தேசிய கூட்டமைப்பில் சுமந்திரன் தொடர்ந்து நீடித்தால் கட்சி காணாமல் போகும் நிலை ஏற்படும் என மக்கள் தமது கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர் .
இவ்வாறான கால பகுதியில் கல்விமானாகவும் ,புத்தியீவியாகவும் விளங்கி வரும் பாராளுமன்ற உறுப்பினர் ,சிவஞானம் சிறிதரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக பொறுப்பேற்கும் தகமை கொண்டவர் என மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கொழும்பின் முகவராக செயல் பட்டு தமிழ் தேசிய இலக்கை சிதைத்து ,ஒன்று பட்டு பணியாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைத்தலை குழப்பிய நபர்களில் சுமந்திரன் முதன்மை வைக்கிறார் .
அதனால் சுமந்திரனுக்கு எதிராக சகா உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர் .
சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக அமர்த்த பட்டால் கூட்டமைப்பு என்கின்ற கட்சி காணாமல் போகும் என யோகேஸ்வரன் திறந்த மனதோடு தனது கருத்தை வெளியிட்டு ,ஸ்ரீதரனுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார் .
கொழுக்கட்டை மோதகம் என்கிறார் ஸ்ரீதரன்
கொழுக்கட்டை மோதகம் என்கிறார் ஸ்ரீதரன்
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், கொழுக்கட்டை, மோதகம்
போன்றது என்று வியாக்கியானம் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், வடிவங்கள் மாறியுள்ளன எனத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கும் அவர்,பயங்கரவாத தடைச்சட்டத்தால், ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
கொழுக்கட்டை மோதகம் என்கிறார் ஸ்ரீதரன்
ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். சரணடைந்த பல போராளிகள் காணாமல் போயுள்ளனர். ஒப்படைக்கப்பட்ட கணவன்,மனைவி மற்றும் பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வடகிழக்கு நீதிமன்றத்தின் ஊடாக பிரிக்கப்பட்டது. அதனூடாக நீங்கள் அடைந்த நன்மைகள் என்ன? சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதால் மட்டுமே போதாது என்றார்.
நாடு எப்படி உருப்படும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி எஸ்.ஸ்ரீதரன்
நாடு எப்படி உருப்படும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி எஸ்.ஸ்ரீதரன்
ஒரு பிரமாண்டமான இராணுவ வலயகமாவே வடக்கு, கிழக்கை இப்போதும் வைத்துக்கொண்டு பாதுகாப்புக்கு வரவு-செலவுத்திட்டத்தில் 15.2 வீதம் நிதியை ஒதுக்கினால் இந்த நாடு எப்படி உருப்படும்? பொருளாதாரத்தில் எப்படி நிமிரும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி எஸ்.ஸ்ரீதரன் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக்கொள்கைகள் அமைச்சுக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
இம் முறை கொண்டுவரப்பட்ட வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக பலவிடயங்கள் மறைக்கப்பட்டுள்ளன.
சென்ற வருடமும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக தேர்தல்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. எம்.பி.க்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டது.
செயல்பாடுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அவையெல்லாம் இப்போதும் அறிக்கையாக வேபாராளுமன்றத்தில் உள்ளன. இம் முறையும் பல புதிய ,புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாடு எப்படி உருப்படும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி எஸ்.ஸ்ரீதரன்
இந் நிலையில் செவ்வாய்க்கிழமை அமைச்சர் பவித்திரா தேவி வன்னியாராச்சியுடன் பேசும் போது யாழ்ப்பாணத்திற்கு நதி ஒன்றைக்கொண்டு வரப்போவதாக கூறினார்.
யாழ்ப்பாண நதி என்பது புதிய சொற்றோடர். ஆனால் இங்கே சொல்கின்றவை எல்லாம் நடை பெறுமா அல்லது இந்த வரவு-செலவுத்திட்டம் அதனை நடைமுறைப்படுத்துமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இம் முறை வரவு-செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 423.7 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்தமான வரவு செலவுத்திட்டத்த்தில் 11.6 சதவீதம்.
பொது பாதுகாப்புக்கு 140.7 பில்லியன் ரூபா .இது மொத்த வரவு-செலவுத்திட்டத்தில் 3.6 வீதம். எனவே வரவு செலவுத்திட்டத்தில் 15.2 சதவீதமான நிதி பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நாடு எப்படி உருப்படும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி எஸ்.ஸ்ரீதரன்
இந்த நாட்டில் தற்போது யுத்தம் இல்லை. எங்கேயும் குண்டு சத்தங்கள் இல்லை. யாரும் துப்பாக்கி தூக்கியதாக தெரியவில்லை.
ஆனால் இந்த நாட்டில் உள்ள 2 இலட்சம் வரையிலான படைகளை வடக்கு, கிழக்கில் தான் வைத்துள்ளீர்கள்.
ஒரு பிரமாண்டமான இராணுவ வலயகமாவே வடக்கு, கிழக்கு இப்போதும் உள்ளது. இவர்களுக்கு இவ்வளவு நிதியை ஒதுக்குவதென்றால் நாட்டின் பொருளாதாரம் எப்படி வளர முடியும் எனக்கேள்வி யெழுப்பினார்.
- ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை
- ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி
- தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு
- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது
- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது
- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு
- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது
- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி
- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்
- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்
சட்டக் கல்வியை தமிழில் தொடர வேண்டும் ஸ்ரீதரன்
சட்டக் கல்வியை தமிழில் தொடர வேண்டும் ஸ்ரீதரன்
யாழ்.பல்கலைக்கழக சட்ட பீட மாணவர்கள் தமிழ் மொழியில் சட்டக் கல்லூரியை தொடர்வதற்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்
என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ்.ஸ்ரீதரன் கல்வி அமைச்சரிடம் வலியுறுத்தினார்
அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆசிரியர்களின் நலன்களுக்காக தேசிய கல்வி நிறுவனத்தின் கிளை நிறுவனத்தை முல்லைத்தீவு மாங்குளத்தில் ஸ்தாபிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் கல்வியமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சட்டக் கல்வியை தமிழில் தொடர வேண்டும் ஸ்ரீதரன்
பேராதனை பல்கலைக்கழகத்தில் சட்ட பீட மாணவர்கள் தமிழ்,ஆங்கிலம் மற்றும் சிங்களம் மொழியில் கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சட்ட பீட மாணவர்கள் தமிழ் மொழியில் சட்ட கல்வியை தொடர வாய்ப்பில்லை.
தமது தாய்மொழியில் சட்ட கல்வியை கற்க எதிர்பார்க்கிறார்கள்.ஆகவே அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
1988 ஆம் ஆண்டு நான் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பீடத்துக்கு தெரிவானேன்.அப்போதைய சூழ்நிலையால் என்னால் சட்ட கல்வியை தொடர முடியவில்லை.
சட்டக்கல்வி வாய்ப்பு யாழ்.பல்கலைக்கழத்தில் இருந்திருந்தால் நானும் ஒரு சட்டத்தரணியாகியிருப்பேன்.
ஆகவே தமிழ் மாணவர்கள் தமது தாய்மொழியில் சட்டத்தை கற்கும் வாய்ப்பை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மிக முக்கிய பல்கலைக்கழகமாக உள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வியற் துறையை ‘பீடமாக ‘ உருவாக்குமாறு கடந்த ஆண்டும் வலியுறுத்தினேன்.ஆனால் இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
சட்டக் கல்வியை தமிழில் தொடர வேண்டும் ஸ்ரீதரன்
தேசிய கல்வி நிறுவகத்தின் கிளையை முல்லைத்தீவு மாங்குளத்தில் நிறுவுமாறு பலமுறை வலியுறுத்தியுள்ளேன்.
தற்போதைய பொருளாதார சுமைகளுக்கு மத்தியில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளவர்கள் தமது துறைசார் நடவடிக்கைகளுக்காக தலைநகருக்கு வருவதால் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.
ஆகவே இந்த கோரிக்கை தொடர்பில் கரிசனை கொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.
யாழ்.தீவக பாடசாலைகளில் சேவையாற்றும் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கடினமான முறையில் தான் சேவையில் ஈடுபடுகிறார்கள்.ஆகவே அவர்களுக்கு விசேட கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் என்றார்.
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு
- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது
- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது
- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு
- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது
- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு
- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை
- குற்றவாளிக்கு மரண தண்டனை
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்
- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு
- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு
நாங்கள் இனவாதிகள் இல்லை ஸ்ரீதரன்
நாங்கள் இனவாதிகள் இல்லை ஸ்ரீதரன்
தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன் போது இன்றைய தினம் (23) இடம்பெற்ற நீதிமன்ற வழக்கு தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்கள் சார்பாக போராட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டமை சார்பாக தவறாக குற்றம் சாட்டப்பட்டு இன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு பிற்போடப்பட்டுள்ளது.
மேலும் குருந்தூர் மலைக்கு உதய கம்பன்பில வருகை மற்றும் இனவாதம் பேசும் இனவாதிகள் யார் என்பது குறித்தும், தலைவர் பிரபாகரனின் மரபு அறிக்கை மற்றும் மருந்து தட்டுபாடு உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கருத்து தெரிவித்துள்ளார்.
மகிந்தா குடும்பம் விசாரிக்க படவேண்டும் ஸ்ரீதரன்
மகிந்தா குடும்பம் விசாரிக்க படவேண்டும் ஸ்ரீதரன்
இலங்கைத் தீவிலே ஒரு நீதியான ஆட்சி அமைய வேண்டுமாக இருந்தால் பல்வேறு பட்ட ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ச குடும்பம் விசாரிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகமான அறிவகத்தில் சனிக்கிழமை (03) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடந்து கருத்து தெரிவித்த அவர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், மருதங்கேணிப் பகுதியில், பொதுமக்கள் முன்னிலையில் அரச புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளமை இந்த நாட்டின் இனஅழிப்பு நடவடிக்கையின் புதிய வடிவத்தையே காட்டிநிற்கின்றது
மகிந்தா குடும்பம் விசாரிக்க படவேண்டும் ஸ்ரீதரன்
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களை கொன்றொழித்து படுகொலைகளை செய்ய ஜேர் ஆர் ஜெயவர்தனவின் மருமகனான ரணில் அரசின் இந்த செயற்பாடானது இந்த நாட்டிலே அதியுச்ச அடக்குமுறையையே
காட்டிநிற்கிறது என்று தெரிவித்த அவர் இந்த நாட்டிலேயே 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இலங்கை வருமானவரி திணைக்களத்திலே பதிவு செய்து தங்களுடைய உழைப்பு வருமானங்களுக்கு வருடாந்தம் வரி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது.
மகிந்தா குடும்பம் விசாரிக்க படவேண்டும் ஸ்ரீதரன்
ஒரு நாட்டிலே வரி அறவிடுவது என்பது மிக நல்ல விடயம். ஆனால், இலங்கையில் ஒரு நான்கு வயது தொடக்கம் 18 வயதுக்குட்பட்ட பிள்ளை சுயமாக பாடசாலைக்கு சென்று கல்வி கற்க முடியாத அதாவது பருவ காலச்
சீட்டை பெற்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணம் செய்து தமது கல்வியை தொடர முடியாத நிலை ஒரு மாணவனின் கல்வி நடவடிக்கைகளில் ஒரு வசதியை செய்து கொடுக்காத இந்த அரசாங்கம் 18
வயதிற்குப் பின்னர் அவர்களிடமிருந்து வரியை அறவிடுவது என்பது இந்த நாட்டின் ஒரு மிக மோசமான நிலைமையை காட்டி நிற்கின்றது.
இந்த அரசாங்கத்தில் பலர் பல்வேறு பட்ட மோசடிகளை செய்து போயிருக்கின்றார்கள் இந்த அரசாங்கத்தினுடைய மத்திய வங்கியின் பல மில்லியன் கணக்கிலே இதே ரணில் அரசு இருக்கின்ற போது கொள்ளையடித்து
சென்றவர்களை மத்திய வங்கி ஆளுநரைக் கூட இதுவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த முடியாத நிலையில் இந்த அரசாங்கம் இருக்கின்றது.
சீனியிலும் தேங்காய் எண்ணெயிலும் ஊழல் மோசடி செய்த ; கோத்தபாயவனுடைய குடும்பத்தை கைது செய்து விசாரணை செய்ய திராணியற்ற ரணில் அரசாங்கம் இங்கே பல ஊழல்களில் ஈடுபட்டு
விடுதலைப் புலிகளிடமிரந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து வெளிநாட்டு வங்கிகளிலே வைப்பிலிட்டு வைத்திருப்பவர்களுக்கு இதுவரையும் எந்த விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை என்றார்.
இருபது தலைமுறைகளுக்கு தேவையானவற்றை சேமித்து வைத்துவிட்டு இருக்கின்ற மஹிந்த ராஜபக்ச குடும்பத்தை விசாரிக்கவும் இந்த அரசாங்கம் இன்று தயாராக இல்லை ஆனால் இந்த இளைஞர்களில் மட்டும் அதிகரிச்சனை கொண்டிருக்கின்றது என்றார்.
கொள்ளையடித்தவர்கள் களவெடுத்தவர்களினுடைய பக்கத்தில் தான் இந்த நாடு எப்பொழுதும் நிற்கின்றது இந்த தீவிலே ஒரு நீதியான ஆட்சி அமைய வேண்டுமாக இருந்தால் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ச குடும்பம் விசாரிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
வவுனியாவில் சிங்கள குடியேற்றங்கள் முழங்கிய ஸ்ரீதரன் VIDEO
வவுனியாவில் சிங்கள குடியேற்றங்கள் முழங்கிய ஸ்ரீதரன் VIDEO
இலங்கையில் ஆளும் சிங்கள அரச படைகளின் கடத்தல் ,காணாமல் போதல் மற்றும் கொலைகள் என்பனவற்றை உடைத்து பேசிய சிறிதரன்
இதில் அழுத்தி காணொளி பாருங்கள்
மீனவர்களை காக்க போராட்டம் – அழைக்கிறார் ஸ்ரீதரன் எம்பி
மீனவர்களை காக்க போராட்டம் – அழைக்கிறார் ஸ்ரீதரன் எம்பி
நாளை எமது மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டத்திற்கு அனைவரையும் பங்கெடுக்குமாறு அன்புரிமையோடு அழைக்கின்றோம்.
ஆரம்ப நேரம் :- காலை 7.00 மணி
ஆரம்ப இடம் :- முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரை.
நிறைவு இடம் :- பருத்தித்துறை கடற்கரை
தமிழரை நீயே கொன்றாய் – பாராளுமன்றில் முழங்கிய சிறி mp video
இறுதி போரில் புலிகள்,தமிழர்களை நீயே கொன்றாய் என ஆளும் கோட்டபாய மீது அவர் ஆளும் பாரளுமன்றில் தமிழர்களினால் நியமிக்க பட்ட சிறிதரன் முழங்கியுள்ளார் .
கோட்டா அரசில் நீதான் அவரை கொன்றாய் என சிறிதரன் முழங்கியுள்ளது அவரது துணிச்சலை காண்பிக்கிறது ,இவ்வாறு சம்பந்தன்,சுமந்திரனால் பேச முடியாது போனது வெட்க கேடு
சிறிதரன் கேள்விக்கு இனவெறி ,இரத்த காட்டேறி கோத்தபாயாவின் பதில் என்ன ..?
இதே கோ ட்டாவினால் தான் சிறிதரன் மீது இரு கொலை வெறி தாக்குதல் மேற்கொள்ள பட்டது என்பது குறிப்பிட தக்கது
அந்த வீரம் செறிந்த பதிவை இங்கே காண்க



























