Author: நலன் விரும்பி
வீடுகளில் டெங்கு பரிசோதனைகள்
வீடுகளில் டெங்கு பரிசோதனைகள்
தற்போது நிலவும் மழையுடனான கால நிலையையடுத்து டெங்கு நோய் பரவக்கூடிய நிலை அதிகம் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்தள்ளது.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ் வீடுகளின் சுற்றாடல்பகுதியை பரிசோதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படவிருப்பதாக டெங்கு தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டாக்டர் அருனா ஜெயசேகர தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு வழங்கிய ஒத்துழைப்பை போன்று டெங்கு நோய் பரவுதை தடுப்பதற்கும்
ஒத்துழைப்பை மக்கள் வழங்க வேண்டும் என்று அவர் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் நாட்டில் 413 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் 18,977 டெங்கு
நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, நாட்டில் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 49 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
தேச துரோகி சுமந்திரன் – பிரான்சில் தொங்க விடப் பட்ட கொடும் பாவி
தேச துரோகி சுமந்திரன் – பிரான்சில் தொங்க விடப் பட்ட கொடும் பாவி
ஒட்டு குழுக்களின் ஒன்றிய தலைவர்கள் ஒன்றிணைக்க பட்டு ,அது தமிழ் தேசிய கூட்டமைப்பாக புலிகளினால் உருவாக்க பட்டது
,புரையோடி போயுள்ள தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்குடன் இந்த குழுக்கள் இணைக்க பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பாக உருவாக்கம் பெற்றது
அதன் பின்னர் அந்த ஒட்டு குழுக்கள் தமிழர்களினால் ஏற்று கொள்ள பட்டு வெள்ளை வேட்டி கட்டிய தமிழ் தேசிய அரசியலுக்குள் இணைக்க பட்டு ஒன்றித்து பயணித்தன
ஆனல் தற்போது ஐந்து வயதில் இருந்து சிங்கள பால் குடித்து கொழும்பில் வசித்து வந்த சுமந்திரன் ,அந்த கூட்டமைப்பு உடைத்து
அழிக்கும் வேளையிலே ஈடுபட்டுள்ளார் ,அத்துடன் அதே புலிகளை கேவல படுத்தி பேசியுள்ளார்
கடந்த பத்து ஆண்டுகளாக இதனை புரிந்து வந்த சுமந்திரனின் எட்டப்ப வேளை இப்பொழுது அம்பல பட்டுள்ளது
சுமந்திரன் செய்தது சரியே என சிங்கள அரசு வழங்கிய ஆடம்பர மாளிகையில் காலாட்டி ஏசி றூமில் வசித்து வரும் ,முன்னால் ஒட்டு
குழு தலைவரும் ,இந்நாள் கூட்டமைப்பு தலைவருமான சம்பந்தன் அதனை சரி எனவே ஆமோதித்து பேசியுள்ளார்
இவர்கள் இருவர் கருத்தும் தமிழ் மக்களிற்கு பெரும் கோபத்தை கிளறியுள்ளது ,இதனால் தமிழர்கள் பரந்து வாழும் நாடுகளில்
கொடும் பாவிகள் எரிக்க பட்டு செருப்பு மாலைகள் அணிவிக்க பட்டுள்ளன
தற்போது பிரான்ஸ் லாச்சப்பலில் இந்த சுமந்திரன் கொடும் பாவி தொங்க விட பட்டு தேச துரோகி என எழுத பட்டுள்ளது
அவுஸ்ரேலியாவில் செருப்படி கொடுத்து அனுபிய பொழுதும் வெட்கம் கெட்ட சிங்கள பால் குடி திருந்தவில்லை ,லண்டன் வந்து
தப்பி ஓடிய நிலையில் இப்பொழுது மீளவும் அதே திமிரில் பேசி அலைகிறார் .
இவ்வேளை தமிழர்கள் இம்முறை சம்பந்தன் ,சுமந்திரனை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் ,சிறந்த பாடம் ஒன்றை தமிழர்கள்
ஒன்றித்து கற்பிக்க வேண்டும் என்பதே உலக தமிழர்கள் வேண்டுதலாக உள்ளது
இலங்கை வாழ் தமிழர்களே சுமந்திரன் ,சம்பந்தரை தோற்கடியுங்கள், அதன் மூலமே நாம் எமது தேசிய நல்லாட்சியை வெல்ல முடியும் ,
இவர்களை பல்லு பிடுங்கிய பாம்பாக மாற்றம் பெற செய்திட வேண்டும் ,.
இறுதி யுத்தத்தை ,இன அழிப்பு என கூறும் விக்கினேஸ்வரன் கட்சியை பல படுத்தி அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்திட
இதனை தமிழர்கள் சாதகமாக பயன் படுத்த வேண்டும் .தமிழா ஒன்று சேர் ,உன் பலத்தை காட்டு – வன்னி மைந்தன் –

மலையக வீட்டுத்திட்டம், தேசிய இனப்பிரச்சினை ஆகியவற்றில் இந்திய கரிசனை தொடர வேண்டும்-மனோ கணேசன்
மலையக வீட்டுத்திட்டம், தேசிய இனப்பிரச்சினை ஆகியவற்றில் இந்திய கரிசனை தொடர வேண்டும்
புதிய தூதுவர் கோபால் பாகலேயை வாழ்த்தி மனோ கணேசன் தெரிவிப்பு
மலையக தோட்ட புறங்களில் முன்னெடுக்கப்படும், இந்திய உதவி வீடமைப்பு திட்டம் எந்தவித சிக்கலும் இல்லாமல் சீராக நடைபெற வேண்டும். பல வருடங்களாக நின்று போய் இருந்த அந்த திட்டத்தை
, 2015 க்கு பிறகு ஆரம்பித்து நடத்திய கட்சி என்ற முறையில், உங்களுக்கு இது தொடர்பான முழுமையான ஒத்துழைப்பை, தமிழ்
முற்போக்கு கூட்டணி எப்போதும் வழங்கும். அதேபோல், அதிகார பகிர்வின் ஒரே நடைமுறை ஊன்றுக்கோளாக இருக்கின்ற
மாகாணசபை மற்றும் 13ம் திருத்தம், உள்ளிட்ட தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலும் இந்திய கரிசனை தொடர வேண்டும்.
நீங்கள் இலங்கை வந்த உடனேயே உங்களை தொடர்பு கொண்டு நான் உரையாடினேன். இப்போது அதிகாரபூர்வாக, இலங்கை ஜனாதிபதியிடம் உங்கள் பதவி ஆவணங்களை
சமர்பித்ததையடுத்து, நீங்கள் பாரத நாட்டின் புதிய உயர் ஸ்தானிகராக பதவியேற்றுள்ளீர்கள். இந்நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாகவும் இந்நாட்டு மலையக மற்றும்
ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாகவும் உங்களை வாழ்த்தி வரவேற்கின்றேன் என புதிய இந்திய தூதுவர் கோபால் பாகலே
உடன் தொலைபேசியில் உரையாடிய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும
மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான, மனோ கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பல வருடங்களாக இந்திய வீடமைப்பு திட்டம் நின்று போயிருந்தது. எமது ஆட்சி அமைக்கப்பட்டவுடன், குடியிருப்பாளர்களுக்கு நில உரிமையை வழங்க நாம் அமைச்சரவை அனுமதியை பெற்றோம்.
இந்திய வீடமைப்பு திட்டம் தொடர்பில் முன்னாள் இந்திய தூதுவருடன், எமது கூட்டணியின் பிரதிதலைவர் ‘மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய
அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சர், பழனி திகாம்பரம் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டார். கடந்த காலங்களில் இருந்த முறையற்ற அரசியல் தலையீடுகளை தவிர்த்து, நாம்
மலையகத்தில் தோட்ட தொழிலாளர்களை கிராவாசிகளாக மாற்றும் புதிய கிராமங்களை இந்திய வீடமைப்பு திட்டம் மூலம்
ஆரம்பித்து நடத்தினோம். இது தொடர வேண்டும். இதற்கான எமது ஒத்துழைப்பு இந்திய அரசாங்கத்துக்கு எப்போதும் உண்டு.
அதேபோல் இந்நாட்டில் மாகாணசபை முறைகளையும், 13ம் திருத்தத்தையும் பாதுகாத்து மேலும் வலுப்படுத்தும் தார்மீக
பொறுப்பை இந்தியா எக்காலத்திலும் கைவிடக்கூடாது. இது தொடர்பிலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் முழுமையான
ஒத்துழைப்பு இந்திய அரசாங்கத்துக்கு எப்போதும் உண்டு என்பதையும் நான் தெரிவித்துகொள்ள விரும்புகிறேன்.
எமது ஆட்சியின் போது, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இலங்கை மலையகத்துக்கு வந்த போது வரலாற்றில் மிகப்பெரிய ஒரு வரவேற்பு கூட்டத்தை நாம் முன்னின்று நோர்வூட் நகரில்
நடத்தினோம். அக்கூட்டத்திலேயே மேலும் பத்தாயிரம் வீடுகளை அமைக்கும் புதிய அறிவிப்பை பிரதமர் மோடி அவர்கள் அறிவித்தார் என்பதையும், பாரத பிரதமரின் அன்றைய
தூதுக்குழுவில் சிறப்பு அதிகாரியாக நீங்கள் வருகை தந்ததையும் நான் நினவு கூற விரும்புகிறேன்.
இவற்றுக்கு பதிலளித்த இந்திய தூதர் கோபால் பாகலே, வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் முழுமையான ஒத்துழைப்பை தான்
வரவேற்பதாகவும், இவை பற்றிய சமகால வரலாறு மற்றும் நிலவரங்கள் பற்றி தான் அறிந்து வருவதாகவும், இயல்பு
நிலைமைகள் திரும்பிய பின் நேரடியாக சந்தித்து உரையாட விரும்புவதாகவும் தெரிவித்தார்.
கனடாவில் பொங்குதமிழ் நிகழ்வை ஒழுங்கமைத்த ஒட்டாவா சுரேஷ் விபத்தில் உயிரிழப்பு
கனடாவில் பொங்குதமிழ் நிகழ்வை ஒழுங்கமைத்த ஒட்டாவா சுரேஷ் விபத்தில் உயிரிழப்பு
கனடா ஒட்டாவா நகரில் ஏற்பட்ட வாகன விபத்தில் சுரேந்திரன் தம்பிராஜா (52) என்பவர் உயிரிழந்துள்ளார்.
கனடாவிலுள்ள ஈழத்தமிழ் சமூகத்தின் மத்தியில் ஒட்டாவா சுரேஷ் என்ற பெயரில் அவர் நன்கறியப்பட்டவர்.
நேற்று முன்தினம் (15) மாலை ஒட்டாவா மாநகருக்கு அருகில், ஸ்மித்ஸ் நீர்வீழ்ச்சிக்கு தெற்கே மின் கம்பம் ஒன்றுடன் மோதிய
மற்றொரு ஓட்டுநருக்கு உதவ தனது வாகனத்தை நிறுத்திய சுரேஷ், உதவி செய்துகொண்டிருந்த வேளை 3வது வாகனம் மின்
கம்பத்துடன் மோதியது. இதில் மின் கம்பியின் மீது ஏறி உயரழுத்த மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்தில் இறந்துவிட்டதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சுரேஷ் உதவிக்கு சென்ற -முதலாவதாக விபத்தில் சிக்கிய சாரதி ஒருவர் சிறு காயத்துடன் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒட்டாவா சுரேஷ் என எல்லோராலும் அறியப்பட்ட 5 பிள்ளைகளின் தந்தையான சுரேஷ், யாழ்ப்பாணம் புத்தூரை பிறப்பிடமாக
கொண்டவர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஒட்டாவாவில் வசித்தும் வருகிறார். ஓட்டவா நகரில் உள்ள மக்களின்
தொடர்புகளை பேணுதலும் பல அரசியல் வேலை திட்டங்களயும் தமிழ்த் தேசியத்திற்க்காக முன்னெடுத்தவர்.
கணனி துறையில் சிறந்து விளங்கிய இவர் பன்முக ஆளுமையை கொண்டிருந்தார்.
ஒட்டாவா தமிழர் ஒருங்கிணைப்பு குழு (TCC) பொறுப்பாளராகவும், தாயக செயட்பாடுகளில் 1980களில் இருந்து 2009 வரை தனது முழுப்பங்களிப்பினையும் வழங்கியவராவார்.
2004ம் ஆண்டு டொரோண்டோவில் பிரமாண்டமாக குயின்ஸ் பார்க் முன்றலில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வை முற்றுமுழுதாக இவரே ஒழுங்கமைத்திருந்தார்.
2000 ஆண்டு இறுதியில் கனடிய தமிழ் காங்கிரஸ் (Canadian Tamil Congress), மற்றும் டொரோண்டோவில் இயங்கிவரும் TVI, CMR வானொலி ஆகியவற்றின் ஆரம்ப உருவாக்கத்தில் சுரேஷின் பங்களிப்பு பெரியது.
ஈழ போராட்டத்தின் பதிவுகளை தனது கமரா ஒவியம் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். புகைப்படக்கலையில் சிறந்து விளங்கிய
இவர், 2002 – 2006 சமாதான காலப்பகுதியில் வன்னி சென்று புலிகளின் தலைவர், படையணிகளை புகைப்பட தொகுப்புகளாக உருவாக்கியிருந்தார்.
ஒட்டாவா, கால்ரன் பல்கலைக்கழகங்களில் கல்விபயின்ற மாணவர்களை தமிழ் தேசிய செயற்பாடுகளில் ஆர்வம் கொள்ள வைத்திருந்தார்.
கடந்த பலவருடங்களாக ஒட்டாவாவில் கட்டுமான துறையில் ஈடுபட்டு வருகின்றார்.

மனித வெடிகுண்டு தாக்குதலில் கவர்னர் படுகொலை
மனித வெடிகுண்டு தாக்குதலில் கவர்னர் படுகொலை
சோமாலியாவில் Mudug பகுதி கவர்னராக விளங்கிய Ahmed Muse Nur மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்ய பட்டுள்ளார் .
மேலும் இவரது மெய்ப் பாதுகாவலர் மூவரும் பலியாகியுள்ளனர் ,இந்த
வெற்றிகர தாக்குதலை தாமே நடத்தியதாக முஸ்லீம் கிளர்ச்சி குழு ஒன்று உரிமை கோரியுள்ளது
இவரது தலைமையில் பல படுகொலைகள் அந்த மண்ணில் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள கிளர்ச்சி படைகள்
இதன் மூலம் அவரது சர்வாதிகார வெறித்தனம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக சுட்டி காட்டியுள்ளனர்
தாக்குத்தல் இடம்பெற்ற பகுதியில் இராணுவத்தினர் குவிக்க பட்டு பாதுகாப்பு
பல படுத்த பட்டுள்ளது ,இந்த தாக்குதல் சோமாலிய அரசியல்வாதிகளிற்கு பெரும் பீதியை கிளப்பியுள்ளது
இதே [போல இலங்கையில் வெடிக்குமா ..?

வேக வீதியில் சிதறிய கார் – மூவர் பலி – மூவர் காயம் – video
வேக வீதியில்சிதறியகார் – மூவர் பலி – மூவர் காயம் – video
அவுஸ்திரேலியாவில் கொரனோ வைரஸ் லக் டவுன் காலத்தில் இடம்பெற்ற
வீதி விபத்துக்களில் சிக்கி மூவர் பலியாகினர் மேலும் மூவர் படு காயமடைந்துள்ளனர்
அவுஸ்ரேலியா தலைநகர் சிட்னி அருகில் உள்ள NSW roads இடம்பெற்ற
கோர விபத்தில் சிக்கி மூவர் பலியாகினர்,மேலும் மூவர் பலத்த காயமடைந்த
நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர்
மிக அபத்தான நிலையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு கரணம் என கண்டறிய பட்டுள்ளது


- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது

- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்

வீழ்ந்து நொறுங்கிய விமானம் – விமானி பலி – video
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – விமானி பலி – video
இன்று காலை 10,15 மணியளவில் அவுஸ்ரேலியா Maitland பகுதியில் ,தனியாருக்கு
சொந்தமான இலகு ரக விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது
இதன் பொழுது 44 வயதுடைய விமானி சம்பவ இடத்திலேயே பலியானார் .
இயந்திரத்தில் ஏற்பட்ட கோளறு காரணமாக இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது,எனினும் தொடர்ந்து குறித்த விபத்து
தொடர்பான விசாரணைக இடம்பெற்ற வண்ணம் உள்ளது

15 வயது சிறுமியுடன் கணவன் மனைவியாக வாழ்ந்த 23 வயது காதலன் கைது
15 வயது சிறுமியுடன் கணவன் மனைவியாக வாழ்ந்த 23 வயது காதலன் கைது
இலங்கை ஆட்டங்கால பகுதியில் பதின் ஐந்து வயது சிறுமியுடன் கணவன் மனைவி போல வசித்து வந்த
இருபத்தி மூன்று வயது காதலன் காவல்துறையினரால் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்
சிறுமியுடன் பாலியல் உறவை மேற்கொண்டார் என்ற குற்ற சாட்டில் இந்த கைது
இடம் பெற்றுள்ளது ,பெண் விட்டார் வழங்கிய முறைப்பாட்டினை அடுத்தே மேற்படி காதல் ஜோடிகள் கைது செய்ய பட்டுள்ளனர்
இதுபோல நாட்டில் பல்லாயிரம் பேர் சுத்துறாங்க ,இதில நம்ம மாட்டிக்கிட்டம் என இவர் புலம்பிய படி சிறை சென்றுள்ளனர்
மகள் தந்தையிடம் ஒப்படைக்க பட்டுள்ளார் ,காதல் செய்த அலங்கோலம்

அமெரிக்காவில் 90 ஆயிரம் பேர் பலி -15 லட்சம் பேர் பாதிப்பு
அமெரிக்காவில் 90 ஆயிரம் பேர் பலி -15 லட்சம் பேர் பாதிப்பு
அமெரிக்காவில் வேகமாக பரவி அவரும் கொரனோ வைரஸ் தகத்தலில் சிக்கி இதுவரை 90 ஆயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர்
மேலும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 15 லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன
இந்த
நோயின் தாக்குதலை அடுத்து 30 லட்சம் மக்கள் அரசிடம் உதவி பணம் கோரி விண்ணப்பித்துள்ளனர்
இவ்வாறான பெரும் நெருக்கடியில் அரசு சிக்கி தவித்து வருகிறது
பொருளாதரத்தில் பலத்தை இழப்பை அமெரிக்கா சந்தித்துள்ளது ,இந்த
நோயின் தாக்குதலுக்கு காரணம் சீனா என அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது
இதனால் அமெரிக்கா சீனாவுக்கு இடையில் முறுகல் உச்சம், பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள பகுதி – இருவர் உயிரிழப்பு
வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள பகுதி – இருவர் உயிரிழப்பு
நாட்டின் சில இடங்களில் பெய்த கடும் மழையை அடுத்து ஏற்பட்ட அனர்த்தத்தால் இருவர் உயிரிழந்துள்ளனர். 1805 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மா – ஓயாவின் நீர்மட்டம் கிரியுல்ல பகுதியில் உயர்வடைந்துள்ளது. ; கிரியுல்ல – மரதகொல்ல பகுதியில் சிறிதளவு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத்
திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்பிரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் வெள்ளத்தில்
சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கும் பணியில் கடற்படையின் பல பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
மழை தொடருமாயின் கிரியுல்ல – குருணாகல் வீதியின் கிரியுல்ல பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் நிலவுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
களனி கங்கையின் ஹொலொம்புவ பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குகுலே கங்கை மற்றும் தெதுறு ஓயா
நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. குறித்த நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும்
மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. கேகாலை மாவட்டமே மழையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கேகாலை – இம்புல்கஸ்தெனிய பகுதியில் வெள்ளத்தினால் 48 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். இதே பகுதியில் வல்தெனிய
பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 65 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கேகாலை மாவட்டத்தில்
இதுவரை 530 குடும்பங்களை சேர்ந்த 1830 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
மழையுடனான வானிலையை அடுத்து மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளை தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் மூன்று கட்டங்களாக வகைப்படுத்தியுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவான இடங்களை முதல் கட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மழை தொடருமாயின் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மண்சரிவு, மண்மேடு சரிந்து வீழ்தல், கற்பாறை சரிதல் மற்றும்
நிலம் தாழிறங்கல் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இரண்டாம் கட்டத்திற்குள் அவதானத்துடன் செயற்பட வேண்டிய பகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவான இடங்கள்
இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு, மண்மேடு சரிந்து வீழ்தல், கற்பாறை சரிதல் மற்றும் நிலம் தாழிறங்கல் தொடர்பில்
அபாயம் நிலவுமாயின் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் மூன்றாம் கட்டப் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற வேண்டியது கட்டாயமானதாகும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவான பகுதிக்கு உட்பட்ட மக்கயேள இவ்வாறு அறிவுறுத்தப்பட்டள்ளனர்.
மூன்றாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்படும் பகுதிகளில் மண்சரிவு, மண்மேடு சரிந்து வீழ்தல், கற்பாறை சரிதல் மற்றும் நிலம் தாழிறங்கல் அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கு மக்கள்
பாதுகாக்கான இடங்களை நாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தளை,
இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, கொழும்பு, கேகாலை, குருணாகல் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இதனால் நாட்டை சூழவுள்ள
கடற்பரப்பிற்கு செல்வதை மீனவர்கள் தவிர்க்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நேற்று (15) காலை 8.30 மணியில் இருந்து இன்று அதிகாலை 3 மணி வரையான காலப்பகுதியில் கேகாலை கலிகமுவ பகுதியில் அதிக
மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அங்கு 212 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
காலி – சிறிகந்துர பகுதியில் 20 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், காலி – ஹேகொடவில் 191 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
காலி நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் 163.3 மில்லிமீட்டரும், இரத்தினபுரி – கிரிஎல்லவில் 147.4 மில்லிமீட்டரும், இரத்தினபுரி –
பரகடுவ பகுதியில் 141.5 மில்லிமீட்டரும் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
களுத்துறை – மதுராவல பகுதியில் 133.5 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கொழும்பு – மட்டக்குளி பகுதியில் 112 மில்லிமீட்டர்
மழைவீழ்ச்சியும் களுத்துறை – மத்துகம பகுதியில் 105 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. மழையை அடுத்து களு, களனி மற்றும் கிங் கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.


யாழ்ப்பாணத்தில் ரவுடிகள் அட்டகாசம் – இளம் பெண்ணுக்கு கத்தி வெட்டு
யாழ்ப்பாணத்தில் ரவுடிகள் அட்டகாசம் – இளம் பெண்ணுக்கு கத்தி வெட்டு
யாழ்ப்பாணத்தில் சமீபகாலங்களாக வாள்வெட்டு தாக்குதல்கள் தாய்கறிதா
வண்ணம் உள்ளது,
கணவன் மனைவிக்குள் இடம்பெற்ற சண்டையை விலக்கு பிடிக்க
சென்றபி தங்கை மீது கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது
ஒரு குழுவாக சென்ற இவர்களே வீட்டின் கதவு மற்றும் ,கதிரைகள் உடைமைகள்
என்பனவற்றை அடித்து நொறுக்கியதுடன்
அங்கிருந்த பெண்கள் மீது சரமாரியாக தாக்கியுள்ளனர்
வெட்டு காயங்களுக்கு உள்ளான பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுளளார்
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

லண்டனில் மாட்டுக்கார மணியக்கா மீண்டும் மோசடி
லண்டனில் மாட்டுக்கார மணியக்கா மீண்டும் மோசடி
லண்டனில் தமிழ் தேசிய விடுதலைக்கு போராடி வெல்ல போவதாக நாடு கடத்த படும் சங்கம் ஒன்று ஆரம்பிக்க பட்டுள்ளது
இதில் எம்பிகளாக உள்ளவர்களும் ,அமைச்சர்களாக உள்ளவர்களில் முக்காவாசி பேர் மக்கள் வாக்கு இன்றி தெரிவு செய்ய பட்ட சாதனையாளர்கள்
இவர்கள் தமது சங்கத்தில் இணைகின்றபவர்களுக்கு தேசிய அடையாள அட்டை ஒன்று வழங்க படுகிறது ,இதனை பெறுவதற்கு முன்னூறு பவுண்டுகள் வரை பெறுகின்றனர் .
அது தவிர ஒரு கடிதம் வழங்குவதற்கு நூறு முதல் இருநூறு பவுண்டுகள் அறவிட படுகின்றன
மேலும் இவ்வாறு பெறுபவர்கள் ஆறு வரஙக்ளுக்கு இவர்களுடன் இனைந்து பணி செய்திட வேண்டும் என்ன பணி தெரியுமா ..?
துண்டு பிரசுரம் ஓட்டுதல் ,இவர்கள் அலுவலகங்கள் கூட்டி ,கழுவுதல் ,மேலும் இவர்கள் விற்பனை புரியும் டீ சேர்ட் ,புத்தகங்கள்,இறுவெட்டுக்கள் என்பனவற்றை விற்று கொடுக்க வேண்டும்
அத்துடன் இவர்கள் சந்தா பணமும் வழங்க வேண்டும் ,இதனை செய்பவர்கள் வேறு யாருமில்ல அந்த விசா இன்றி அலைகின்ற வாலிபர்கள் தான் ..
இதில் உலக புகழ் பெற்ற மாட்டு கார மணியாக்கா அமைச்சர் ,அவருடைய கணவர் கரும்புலி அமைச்சர் .ஒருவிடத்த்தில் சொல் தென்றால் குடும்ப ஆட்சி
வன்னியில் போரால் பாதிக்க பட்டவர்களுக்கு மாடு வாங்கி கொடுப்பதாக கூறி அமைச்சரவையில் கணக்கு காண்பித்து விட்டு மாடு வாங்கி கொடுக்காது ,பின்னர் ,அந்த பணத்தை சுருட்டி ஏப்பம் விட்டவர்கள்
இவ்வாறான சூத்து மாத்து பேர்வாழிகளை தன்னகத்தே வைத்து ,சங்கம் நடத்தி வரும் உருத்திரமானவர் அதன் அதிபதியாக உள்ளார் .
பெரும்பாலும் இவர்கள் சங்க கடை திறப்பு ,மக்கள் இன்றி கதிரைகளுடன் பேசும் நிலையே உள்ளது ,
பாதிக்க பட்டவர்கள் பல சான்றுகளை வைத்துள்ளனர் ,விரைவில் பழைய படி நாம் அணைத்து விடயங்களையும் கிளறி எடுத்து மக்கள் முன்பாக வைத்திட விழைகிறோம்
அரசியல் என்பது பாதிக்க ப்பட்ட மக்கள் வாழ்வியல் விடயங்களுக்கு தீர்வு காணப்படும் ஒன்றாக இருக்கப் பட வேண்டுமே தவிர ,அந்த மக்கள் பணத்தை கொள்ளையடித்து ஏப்பம் விடுவதல்ல
காத்திருங்கள் விரைவில் மேலும் பல விடயங்கள் உங்களை வாசல் வந்து தட்டும் . எதிரி எங்கும் இருப்பான் விழிப்பாயிரு

பேஸ்புக் மூலம் பணம் பறிக்கும் தமிழ் பெண்கள் -லண்டனில் ஏமாந்த வாலிபர்கள்
பேஸ்புக் மூலம் பணம் பறிக்கும் தமிழ் பெண்கள் -லண்டனில் ஏமாந்த வாலிபர்கள்
உலக மக்களை ஆட்டி படைத்தது வரும் பேஸ்புக் தமிழர்கள் வாழ்வில் ஒன்றாகி போனது .காரணம் நமது தமிழர்கள் அதிகம் பயன் பாட்டில் வைத்திருப்பது பேஸ்புக் ,மற்றும் டிக் டொக் ஆகும் .
இதே பேஸ்புக்கில் அழகிய படங்களை காண்பித்து மயக்கும் வார்த்தைகளில் பேசி வரும் பெண்களிடம் வெளி நாடுகளில் வசிக்கும் தமிழ் வாலிபர்கள் ஏமாற்றம் அடைந்து விடுகின்றனர்
பொய்யான செய்திகளை கூறி கண்ணீர் விட்டு கதறிய நிலையில் பணத்தை அனுப்பி வைக்கின்றனர் ,பின்னர் செக்ஸ் மோகம் கொடி கட்டி பறக்கிறது ,
ஆண் மகன்கள் வீடியோ காணொளிகளை தமது கைபேசியில் பதிவு செய்து வைத்திருக்கும் இந்த பெண்கள் அவர்களின் அந்தரங்க
விடயத்தை வெளியில் கூறி விடுவோம் என் மிரட்டி பணம் கறப்பதில் ஈடுபட்டுள்ளனர் .
துணிந்தவர்கள் கவல்துறையில் முறைப்பாடு செய்து அவர்கள் கணக்குகள் முடக்க பட்டுள்ள சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன
யாழ்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் சிங்க பூரில் வசித்து வந்துள்ளார் ,லண்டனில் கோழிக்கடை உணவகம் ஒன்றில் வேலை
பார்த்து வந்த வாலிபரிடம் இரண்டாயிரம் பவுண்டுகள் அதாவது ஐந்து லட்சம் ரூபாய்களை கறந்துள்ளார்
அதன் பின்னர் காதலித்து திருமணம் செய்ய போவதக கூறி வந்த அம்மணி இவரை கைவிட்டு இலங்கை சென்று அங்கு திருமணம் செய்து விட்டார்
இந்த வாலிபரோ விசர் பிடித்து உலவுகிறார் ,ஆசை படுவான் ஏன் ..|?அவஸ்தை படுவான் ஏன் .இவ்வாறான பெண்களை அஞ்சாதது
அவர்கள் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு பாதிக்க படும் நபர்களையும் காப்பாற்ற இந்த வாலிபர்கள் முன் வரவேண்டும் .
இவ்வாறு புரியாது ….போனது போகட்டும் என விட்டு வைப்பதால் தான் இவ்வாறான இழி செயல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது ,தாம் பத்தினிகள் என கூவியபடியே உலவுகின்றனர்
மக்களே எச்சரிக்கை ,பேஸ்புக்கில் சொந்த படம் ,நட்பு வட்டாரம் ,புரோபில் பகுதியில் வெறுமையாக உள்ளது என்றால் அவரக்ளை உங்கள் நண்பர்கள் ஆக்கி கொள்ளாதீர்கள் .
மேலும் முன் பின் தெரியாதவர்கள் முன்பாக உங்கள் கைபேசி கமரா திறந்து பேசாதீர்கள் ,இவ்விதம் செய்திட முனைந்தே
சிக்கலில் நீங்கள் மாட்டி கொள்கின்கிறீர்கள் .எச்சரிக்கை ,நம்ம பொண்ணுகளில் சிலர் பணம் புடுங்கிட உங்களை துரத்து கின்றனர் .தப்பித்து கொள்ளுங்கள்
புலிகள் கொலையாளிகள் என்றால் -அவர்கள் உருவாக்கிய கட்சியில் சம்பந்தர் ,சுமந்திரன் இருப்பது ஏன் …?
புலிகள் கொலையாளிகள் என்றால் -அவர்கள் உருவாக்கிய கட்சியில் சம்பந்தர் ,சுமந்திரன் இருப்பது ஏன் …?
இலங்கையில் சிங்கள பவுத்த இனவாதிகள் நடத்திய அடக்குமுறை காரணமாக புலிகள் ஆயுத வழிக்கு செல்ல நேரிட்டது ,அதனை வடிவமைத்து வழங்கியது சிங்கள அரசுகளே .
அதன் தோற்றத்தின் பின்னால் எழுந்து விரிந்த ஆயுத போராட்டத்தின் பயனாக ,உருவாக்க பெற்றதே தமிழ் தேசிய கூட்டமைப்பு .
அந்த கூட்டமைப்பை புலிகள் ஆயுதம் வைத்திருக்கும் பொழுதே அதே புலிகளினாலே ,சிங்கள அரசுகளுக்கு வால்பிடித்து சகோதர
படுகொலைகளை நடத்திய தமிழ் குழுக்கள் ஒன்று இணைக்க பட்டு உருவாக்க பட்டது .
புலிகளினால் அவர்கள் மன்னிக்க பட்டு ,ஒன்று பட்டு செயல் ஆற்ற அழைக்க பட்டனர்
அவ்விதம் உருவான கூட்டமைப்பு தலைவராக சம்பந்தன் நியமிக்க பட்டார் .
அவ்வேளை சுமந்திரன் சிங்கள பால்குடித்து திரிந்தார் .அப்போது புலிகள் தொடர்பாக இந்த சிங்கள பால்குடி சுமந்திரன் எதுவும் பேசவிலை
இப்பொழுது தமிழ் தேசிய பிரச்சனைக்கு தீர்வு காணப் போவதாகவும் ,அதனை இவர் வென்றிட போவதுமாக குறிப்பிடுகின்றார் .
இதே சில மாதங்களுக்கு முன்னர் புலிகளினால் ஆயுதம் மூலம் பெறமுடியாத தீர்வை நாம் எப்படி பெற முடியும் என இதே சூத்து மாத்து சுமந்திரன் தெரிவித்தார் .
அப்படி என்றால் தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் செயலுடனேயே சுமந்திரன் சம்பந்தர் அலைகின்றனர்
அரசு வழங்கிய முப்பது கோடிரூபா ஆடம்பர மாளிகையில் சுகம் அனுபவிக்கும் சம்பந்தர் ,அவருக்கு செல்ல பிள்ளையாக அவரை
சிங்களத்திடம் உதவிகள் பெற்று கொடுக்கும் சுமந்திரன் உள்ள போது
என்ன செய்திட முடியும் …?
இப்பொழுது மானமுள்ள தமிழர்கள் இந்த கூட்டமைப்பை ஒருமுறை தோற்கடியுங்கள் அதன் பின்னரே இவர்கள் செயல்பாடுகள் தெரிய வரும்
சுமந்திரன் ,சம்பந்தன் போட்டியிடும் பகுதிகளில் அவர்களை முற்றாக தோற்கடிக்க வேண்டு அப்பொழுதே தமிழர்கள் தமது
செயல் இலக்கு நோக்கி நகர முடியும், தவறின் இந்த சுமந்திரன் ,சம்பந்தர் தமிழர்களை முட்டாளாக்கி நகர்வதை எவராலும் தடுத்திட முடியாது
இவ்வேளை ஒன்று பட்டு தமிழர்கள் எழுந்து செயல் பட வேண்டும் ,சுமந்திரன் ,சம்பந்தர் ஆகியோரை தோற்கடிப்பதன் ஊடாகவே
எமது இறைமையை காப்பாற்றி கொள்ள முடியும் ..தமிழர்களே நீங்கள் தயாரா ..? தோற்கடிப்போம் இந்த கயவர்களை .
கொழும்பில் ஒருவர் சுட்டுக்கொலை – ஆயுத தாரிகள் அட்டூழியம்
கொழும்பில் ஒருவர் சுட்டுக்கொலை – ஆயுத தாரிகள் அட்டூழியம்
இலங்கை கொழும்பு கட்டுநாயக்க பகுதியில் ஊந்துருளியில் வீடு திரும்பி
கொண்டிருந்த நபர் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் 38 வயது வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்
கோட்டபாய ஆட்சியில் அமர்ந்ததன் பின்னர் நாடு தழுவிய ரீதியில் தொடர் படுகொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
கடந்த மூன்று வாரத்தில் இடம்பெற்ற இருபதாவது படு கொலை இதுவாக பதிய பெற்றுள்ளது
குறிப்பிட தக்கது
எவ்வாறு இந்த கொலைகள் இடம்பெறுகின்றன …? இதன் பின்புலத்தில் உள்ளது யார் ..?
கொலையாளிகள் எவ்வாறு தப்புகின்றனர் ,..?இந்தகேள்விகளுக்கும் எவரிடத்திலும் பதில் இல்லை
வாள்வெட்டு குழுக்களுக்குள் மோதல் – தகவல் கசிவால் நடக்கும் கொலைகள்
வாள்வெட்டு குழுக்களுக்குள் மோதல் – தகவல் கசிவால் நடக்கும் கொலைகள்
இலங்கை தமிழர் வடக்கு யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு குழுக்கள் அடாவடிகள் அதிகரித்து செல்கிறது ,
தம்மை ஒரு விடுதலைக்காக போராடும் நபர்கள் போல காட்டி கொள்ளும் இந்த காவாலி ரவுடிகள் பணம் பறித்தல் ,மற்றும் கடத்தல் என்பனவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்
இவ்வாறு தமது பங்கு பிறிப்பதில் ஏற் பட்ட தகராறு கரணமாக, தமது அணியினர் செய்த கடத்தல் ,
மற்றும் கொலைகள் என்பன தொடர்பான விடயங்களை எதிர் அணிக்கு காட்டி கொடுத்து விடுவதால் இந்த குழுவுக்குள் உள்ளக மோதல் சண்டை இடம்பெற்றுள்ளன
நெல்லியடியில் இடம்பெற்ற படுகொலையும் இவ்விதமே இடம்பெற்றுள்ளது .பொலிசாரின் ஆதரவுடன் குறித்த நபர் சுட்டு கொலை செய்யப்பட்டார் ,
சிலர் வெட்டியும் ,வீதி விபத்தில் கொலை செய்ய பட்ட நிலையிலும் கொலைகள் இடம்பெற்றுள்ளன
சிலர் கொன்று பின்னர் மரங்களில் தூக்கில் தொங்க விட பட்ட சம்பவங்களும் அதிகரித்துள்ளன
,இந்த கஞ்சா ரவுடி வாள் வெட்டு குழுக்கள் மோதல்கள் ,
அதிகரித்துள்ளதால் இயல்பு வாழ்விற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது ,.சிங்கள போலீசாரும் இவர்களுடன் இனைந்து செயல் படுவது தற்பொழுது அம்பலமாகியுள்ளது
இந்த குழுக்களை அழித்திட புலிகள் தான் வரவேண்டும் என மக்கள் மூணு முணுப்பது அங்காங்கே தொடர்கிறது .

சுமந்திரன் வரலாற்றினைத் திருத்தியெழுத முயல்வது ஆபத்தானது: பிரதமர் உருத்திரகுமாரன் எச்சரிக்கை !
சுமந்திரன் வரலாற்றினைத் திருத்தியெழுத முயல்வது ஆபத்தானது: பிரதமர் உருத்திரகுமாரன் எச்சரிக்கை !
எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் 2010 ஆண்டில் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் நுழைந்த காலத்தில் இருந்தே தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை வலுவிழந்துபோகச்
செய்யக்கூடிய பல்வேறு வகையிலான செயற்பாடுகளைச் மேற்கொண்டுவருவதோடு, இந்நேரத்தில் வரலாற்றினைத் திருத்தியெழுத முயல்வது ஆபத்தானது என நாடுகடந்த தமிழீழ
அரசாங்கத்தின் பிரதமரும், விடுதலைப்புலிகளின் சர்வதேச சட்ட ஆலோகராகவும் இருந்த வி.உருத்திரகுமாரன் அவர்கள் எச்சிரித்துள்ளார்;.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள கருத்துப்பதிவில்,
சிங்கள ஊடகவியலாளர் ஒருவருக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்ளாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்
அவர்கள் அண்மையில் வழங்கிய செவ்வி தொடர்பாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சட்ட ஆலோசகராக இயங்கியவன்
என்ற வகையிலும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்ற வகையிலும் எதிர்வினையாற்றுவது அவசியம் என உணர்கிறேன்.
திரு சுமந்திரன் அவர்கள் 2010 ஆண்டில் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் நுழைந்த காலத்தில் இருந்தே தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை வலுவிழந்துபோகச்
செய்யக்கூடிய பல்வேறு வகையிலான செயற்பாடுகளைச் மேற்கொண்டுவருகின்றதொரு பின்னணியிலேயே இவர் வழங்கிய செவ்வியினையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியவர்களாக
உள்ளோம். மேலும் இச் செவ்வியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் உட்பட பல்வேறு குளறுபடியான தகவல்கள்
உள்ளதனையும் கவனிக்க வேண்டியவர்களாக உள்ளோம். இது வரலாற்றினைத் திருத்தியெழுதும் ( Revisionism) ஓர் ஆபத்து மிக்க முயற்சியாகவே எமக்குத் தென்படுகிறது.
இச் செவ்வியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராட்டச் செயற்பாட்டை சுமந்திரன் நிராகரித்திருக்கிறார். தமிழ் மக்களின் தேசிய அரசியலைப் பிரிதிநிதித்துவப் படுத்துவதாகச்
சொல்லும் எந்தவொரு அரசியல் பிரதிநிதியும் தமிழீழ விடுதலைப்;புலிகள் அமைப்பின் தலைமையில் நடைபெற்ற தமிழ் மக்களது ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டமானது
சிறிலங்கா அரசின் இனஅழிப்பு நடவடிக்கைகளுக்கும், அரச பயங்கரவாதத்துக்கும் எதிராக தமிழ் மக்கள் சர்வதேச சட்டங்கள், தார்மீகக் கோட்பாடுகளின் அடிப்படையில் வழங்கிய எதிர்வினை
என்பதனைப் புரிந்து கொண்டும், ஏற்றுக் கொண்டும் செயற்படுவதுதான் அரசியல் அறமாக இருக்க முடியும். இங்கு தனிப்பட்ட கருத்து என்பதற்கு இடமேதுமில்லை. இதனை ஏற்றுக்
கொள்ள முடியாவிடின் அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டு தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஊறு விளைவிக்காமல் இருப்பதே சிறந்தது.
மேலும் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள், சுமந்திரன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராட்டச் செயற்பாட்டை நிராகரித்ததை அது தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு அல்ல
என்றும், அது அவரது தனிப்பட்ட நிலைப்பாடு எனவும் கூறியுள்ளதுடன் சுமந்திரனின் கூற்றுப்பற்றிக் கண்டனமும் தெரிவித்திருக்கின்றனர். கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக
உறுப்பினர் எவரும் செயற்படும்போது அதற்குரிய ஒழுங்கு நடவடிக்கையெடுக்கப்பட்டு அதன் விளைவுகளை அவ் உறுப்பினர் எதிர் கொள்ள வேண்டுமே தவிர, அவ்வாறு செய்யாது ‘கட்சிக்கும்
அதற்கும் தொடர்பில்லை’ என மட்டும் கூறுவது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே இருக்க முடியும். இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் இவ்வாறான சறுக்கல்களை
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும், இவற்றுக்கும் அப்பாற்பட்ட அரசியல் நாகரீகம் ஒன்றினை எம்மிடையே
வளர்த்துக்கொள்ள வேண்டியது காலத்தின் அவசியம் என்பதனையும் தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்கு இடித்துரைக்க விரும்புகிறேன்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் கலந்து கொள்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் சுமந்திரன் இப் பேட்டியில்
தெரிவித்துள்ளார். 2017 ஆண்டில் தாயகத் தமிழ் மக்களும், புலம் பெயர் தமிழ் மக்களும் எவ்வாறு இணைந்து செயற்படலாம் என்பதனை ஆராய்வதற்காக, தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை
அடித்தளமாகக் கொண்டு தாயகத்தில் இயங்கும் கட்சித் தலைவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாம் அழைப்பொன்றினை மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தோம்.
அவ் அழைப்பு சுமந்திரன் அவர்களுக்கும் அனுப்பப்பட்டது. அழைப்புக்கு நன்றி தெரிவித்த அவர், இது குறித்து இரண்டொரு நாட்களில் மீளத் தொடர்பு கொள்வதாகக் கூறி நாடுகடந்த தமிழீழ
அரசாங்கத்தின் அரசவை அமர்வு தொடர்பான ஒருங்கிணைப்பாளருக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். பினனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அவர்களது கருத்துக்கள்
உள்வாங்கப்பட்டு செய்தி ஒன்று அனுப்பவுள்ளதாக ஒருங்கிணைப்பாளருக்கு அறிவித்திருந்தார்கள். அப்படியே செய்தி கிடைக்கப்பெற்று அதனை அமர்வின்போது அவையில் நாம்
வாசித்திருந்தோம். மேற்கூறிய அழைப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுமந்திரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காரணத்தால்
அனுப்பியிருந்தார்களே தவிர அவ் அழைப்பு சுமந்திரனுக்கு மட்டும் தனித்து அனுப்பப்பட்ட அழைப்பல்ல என்பதையும் இவ் விடத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இன்று தமிழ் மக்கள் ஆயுதப்போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளாததிற்கான காரணம் சர்வதேச சட்டங்களுக்கோ அன்றி தார்மீகக் கோட்பாடுகளுக்கோ அது முரணானது என்பதால்
அல்ல. மாறாக இன்றைய உலக ஒழுங்கில் அதற்கான சாத்தியங்கள் குறைவு என்ற காரணத்தினால் தமிழ் மக்கள் பூகோள ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாகவும், சர்வதேச சட்டங்களை
உரியவகையில் கையாளுதல் மூலமாகவும், உலகத் தமிழ் மக்கள் பலத்தின் ஊடாகவும் தமது போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
இறுதியாக, தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையில் நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தினை நிராகரிப்போர் எவரதும் அரசியல்
குறித்து தமிழ்மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளதையும் இவ்விடத்தில் பதிவு செய்துகொள்ள
விரும்புகிறேன் என வி.உருத்திரகுமாரன் அவர்கள் கருத்தினை பதிவு செய்துள்ளார்.
இத்தாலியில் June 3 மக்கள் வெளியில் நடமாட அனுமதி – தடைகள் விலக்கல்
இத்தாலியில் June 3 மக்கள் வெளியில் நடமாட அனுமதி – தடைகள் விலக்கல்
இத்தாலியில் நிலவி வந்த கொரனோ நோய் காரணமாக இடம்பெற்று
வந்த அடித்து பூட்டும் நிகழ்வு எதிர்வரும் ஜூன் மாதம் மூன்றாம்
திகதி முற்றாக விலக்க படுவதாக அரசு அறிவித்துள்ளது
இதே போன்றே நிலைப்பாட்டை பிரிட்டனும் அறிவித்துள்ளது
அவ்வேளை காலநிலை மாற்றம் ஏற்படுவதால் இந்த விலக்கல் நிலைக்கு அரசு செல்கிறது ,
இதுவரை 31,600 மக்கள் பலியாகியுள்ளனர்
ஆனால் மக்கள் தொடர்ந்து பீதியில் உறைந்துள்ளனர்
இந்தியாவில் வீதியில் சிதறிய 23 மனித உடல்கள் – கண்ணீரில் குடும்பம்
இந்தியாவில் வீதியில் சிதறிய 23 மனித உடல்கள் – கண்ணீரில் குடும்பம்
இந்தியா உத்தர ரதேச பகுதியில் இரண்டு டிரக்குகள் நேரெதிர் மோதியதில்
அதில் பயணித்த 23 பேர் சம்பவ இடத்தில பலியாகினர் .மேலும் 35 பேர் படுக்கையாமடைந்துள்ளனர்
சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது ,
தொடர்ந்து குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன









