Tag: விசாரணை
எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ்
எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ்
எரிந்த ஆட்டோ விசாரணையில் பொலிஸ் ,மட்டக்களப்பு வவுணதீவிலிருந்து விளாவெட்டுவானுக்குச் செல்லும் வீதியில் ஆட்டோ ஒன்று எறிந்த நிலையில் காணப்பட்டுள்ளது .
இந்த ஆட்டோ எப்படி எரிந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இயந்திர கோளாறு காரணமாக தீ பற்றி எரிந்ததா அல்லது விஷமிகளினால் தீயிட்டு கொழுத்த பட்டதா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன
மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன
மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன ,நீதிக்கான கேள்வி .மன்னார் இளம்தாயின் உள்ளக விசாரணைகள் முடிந்துவிடடன.
விசாரணை குழுவினர் இவவிடயத்தில் மருத்துவ விதிமுறைக்கள் பல்வேறு தரப்பினரால் மீறப்பட்டுள்ளத்தையும் உறுதிப்படுத்தியுள்ளனர் என கூறப்படுகிறது .
இனி இதற்கான தண்டனை அளிக்கும் அதிக்காரம் சுகாதார அமைச்சிடம் மட்டுமே உள்ளது. .
இனி நாங்கள் என்ன செய்யலாம்
1.தகவல் அறியும் சடடத்தின் மூலம் விசாரணை அறிக்கையை வெளிக்கொனரலாம் (இதை வைத்தியாசலை தரப்பால் அமைச்சின் விசாரணைகள் முடியாமல் செய்யமுடியாது )
2.இத்தாயின் இறப்பில் உண்மையான அக்கறை உள்ளவர்கள் ஒரு சிவில் வழக்கை கணவரின் உதவியோடு தாக்கல் செய்யலாம். .
ஏன் இவை இன்னும். நடைபெறவில்லை.
இவவிடயத்தை சொந்த அரசியலுக்கு பயன்படுத்தாமல் அந்த தாயில் உண்மையான அக்கறை கொண்டோர் இதனை செய்தால் நீதி நோக்கி பயணிக்கலாம்.
இவ்வாறு மருத்துவர் அர்ச்சுனா முக நூலில் பகிரப்பட்டுள்ளது .
- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு

- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடை

- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குவைத்துக்கான விமான சேவை நிறுத்தம்

- கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு தொடர்பான மூன்று மரணங்கள்

- வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்

- உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, சேவையைப் பற்றியது என்று பிரதமர்

- தீவின் சில பகுதிகளில் இன்று பலமுறை மழை பெய்யும்

- முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள்

- பேருந்துகள் உட்பட அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களும் ஆய்வு

யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸார் மீது விசாரணை
யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸார் மீது விசாரணை
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றிற்கு ஆதரவாக செயற்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக பொலிஸ் உயர் அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரவு வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று நான்கு வீடுகளை அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு தப்பி சென்று இருந்தது.
அந்நிலையில் மறுநாளும் குறித்த வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட முனைந்தவேளை ஊரவர்கள் அவர்களை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை நால்வர் பிடிபட்டனர், ஏனையவர்கள் அங்கிருந்து தப்பி சென்று இருந்தனர்.
யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய பொலிஸார் மீது விசாரணை
பிடிபட்டவர்களிடம் ஊரவர்கள் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் எமக்கு ஆதரவாக செயற்படுபவர் என கூறியுள்ளனர்.
அதேவேளை பிடிபட்டவர்களின் கைபேசிகளை ஊரவர்கள் சோதனை செய்த போது , அவற்றில் வன்முறை கும்பலை சேர்ந்த சிலர் வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ள புகைப்படங்கள் காணப்பட்டன.
தம்மால் பிடிக்கப்பட்ட நால்வரையும் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஊரவர்கள் கையளித்ததை அடுத்து, பொலிஸார் அவர்களை கைது செய்து விசாரணைகளின் பின்னர் மன்றில் முற்படுத்தினர்.
அதேவேளை , தமக்கு பொலிஸ் உத்தியோகஸ்தர் ஆதரவு உண்டு என வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் ஊரவர்களுக்கு கூறியமை தொடர்பிலான வீடியோ பதிவு மற்றும் , ஆயுதங்களுடன் காணப்பட்ட புகைப்படங்கள் என்பன சட்டத்தரணி ஊடாக நீதவானின் கவனத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனை அடுத்து புகைப்படத்தில் உள்ள ஆயுதங்கள் அனைத்தும் , வன்முறை கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டு சான்று பொருட்களாக மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு உதவுவதாக கூறிய பொலிஸ் உத்தியோகஸ்தர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து மன்றில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மன்று உத்தரவிட்டுள்ளது
யாழ் பாடசாலை ஒன்றின் இல்ல அலங்கரிப்பு தொடர்பில் விசாரணை
யாழ் பாடசாலை ஒன்றின் இல்ல அலங்கரிப்பு தொடர்பில் விசாரணை
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போதான இல்ல அலங்கரிப்பு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யூனியன் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
அதன் போது, கார்த்திகைப் பூ வடிவிலும், போர் டெங்கி வடிவிலும், இல்ல அலங்கரிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அவை தொடர்பிலான புகைப்படங்கள் நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தன.
விடயம் தொடர்பில் நேற்றைய தினம் விளையாட்டு போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையே பொலிஸார் , இராணுவ புலனாய்வாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் பாடசாலைக்கு நேரில் சென்று இல்லங்களை பார்வையிட்டு, புகைப்படங்கள், காணொளிகள் என்வற்றை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ் பாடசாலை ஒன்றின் இல்ல அலங்கரிப்பு தொடர்பில் விசாரணை
அத்துடன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு பாடசாலை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் அதிபர் உள்ளிட்டவர்கள் பொலிஸ் நிலையம் சென்று இருந்த நிலையில், பொலிஸார் அவர்களிடம் வாக்கு மூலங்களை பெற்ற பின்னர் அவர்களை விடுவித்துள்ளனர்.
இதேவேளை அண்மையில் கிளிநொச்சி மாவடத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இடம்பெற்ற விளையாட்டு போட்டியில் இல்ல அலங்கரிப்பு மற்றும் விநோத உடை போட்டிகள் தொடர்பிலான படங்கள் சமூக வலைத்தளங்களில்
வெளியாகி சர்ச்சைகள் ஏற்பட்டதை அடுத்து, வடமாகாண கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு , இல்ல அலங்கரிப்பு மற்றும் விநோத உடை போட்டிகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவனை தாக்கிய மொட்டு கட்சி உறுப்பினரை தேடி விசாரணை
பாடசாலை மாணவனை தாக்கிய மொட்டு கட்சி உறுப்பினரை தேடி விசாரணை
பாடசாலை மாணவனை தாக்கிய திவுலபிட்டிய உள்ளுராட்சி சபையின் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான தனது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்களாகியும், சந்தேகத்திற்குரியவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என குறித்த மாணவனின் தாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த 11ஆம் திகதி, பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவனை, பந்துராகொட நகரில் வைத்து உள்ளுராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் தாக்கியுள்ளார்.
பந்துராகொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலின் பின்னர் சந்தேகத்திற்குரியவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில், எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக குறித்த முன்னாள் உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
மத்திய வங்கி சம்பள அதிகரிப்பு விசாரணைக்கு அழைப்பு
மத்திய வங்கி சம்பள அதிகரிப்பு விசாரணைக்கு அழைப்பு
எந்தவொரு தரப்பினருக்கும் தெரியப்படுத்தாமல் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் இன்று (04) அமைச்சரவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய வங்கி ஊழியர்கள் அண்மையில் தமது சம்பளத்தை 70 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் இது சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு மத்திய வங்கி அதிகாரிகள் இவ்வாறு சம்பளத்தை உயர்த்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மத்திய வங்கி சம்பள அதிகரிப்பு விசாரணைக்கு அழைப்பு
இந்த விடயம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இன்று பிற்பகல் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு மத்திய வங்கியின் பிரதானிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நாளை (05) நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கும் அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கும் மத்திய வங்கியின் பிரதானிகள் அழைக்கப்பட்டு இவ்விடயம் தொடர்பில் வினவப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கும், அரசாங்க நிதி பற்றிய குழு கூட்டம் நாளை முற்பகல் 11.30 மணிக்கும் நடைபெறவுள்ளது
புலிகளின் ஒத்த ஆடை அறுவரிடம் விசாரணை
புலிகளின் ஒத்த ஆடை அறுவரிடம் விசாரணை
மாவீரர் தின நிகழ்வில் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளின் ஆடைகளை ஒத்த ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து வந்தனர் எனும்
குற்றச்சாட்டில், கோப்பாய் பொலிஸார் ஆறு பேரிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக கடந்த திங்கட்கிழமை (27) நடைபெற மாவீரர் நாள் நிகழ்வின் போது, விடுதலைப்புலிகளின் போராளிகள்
புலிகளின் ஒத்த ஆடை அறுவரிடம் விசாரணை
போன்ற ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து இருந்தனர் என சில புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தன.
அவை தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , படங்களில் இனம் காணப்பட்ட சிறுவர்களின் பெற்றோரை
பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அவர்களின் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.
வாக்கு மூலங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுக்க உள்ளதாகவும் , எவரையும் இது வரையில் தாம் கைது செய்யவில்லை எனவும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது
- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு
- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடை
- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குவைத்துக்கான விமான சேவை நிறுத்தம்
- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்
- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி
- கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு தொடர்பான மூன்று மரணங்கள்
- வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்
- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது
வெல்லம்பிட்டி பாடசாலை அனர்த்தம் தொடர்பில் விசாரணை
வெல்லம்பிட்டி பாடசாலை அனர்த்தம் தொடர்பில் விசாரணை
வெல்லம்பிட்டி பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 மாணவர்கள்
காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சு கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலய கல்வி அலுவலக அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, குறித்த பாடசாலைக்குச் சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஜயவர்தனபுர வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெல்லம்பிட்டி பாடசாலை அனர்த்தம் தொடர்பில் விசாரணை
நேற்று முற்பகல் (15) கைகளை கழுவிக் கொண்டிருந்த முதலாம் தரத்தைச் சேர்ந்த 06 மாணவர்கள் மீது பாடசாலையில் தண்ணீர் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்த கொங்கிரீட் சுவர் இடிந்து விழுந்தது.
விபத்தில் காயமடைந்த மாணவி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் பின்னர் பிரதேசவாசிகள் குழுவொன்று பாடசாலையின் அதிபரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலையில் நிலவிய அமைதியின்மை காரணமாக பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு
- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடை
- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குவைத்துக்கான விமான சேவை நிறுத்தம்
- கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு தொடர்பான மூன்று மரணங்கள்
- வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்
- உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, சேவையைப் பற்றியது என்று பிரதமர்
- தீவின் சில பகுதிகளில் இன்று பலமுறை மழை பெய்யும்
- முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள்
- பேருந்துகள் உட்பட அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களும் ஆய்வு
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்
முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் மிகவும் பாரதூரமான விடயமாகும் என்றும், இது நீதித்துறை சுதந்திரம் சார் பிரச்சினை என்றும், அவருக்கு கொலை மிரட்டல்களும், அழுத்தங்களும் வந்ததாக கூறப்பட்டுள்ளதாகவும்,
இது ஒரு பாரதூரமான அறிவிப்பு என்பதால், சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டு, இதன் பின்னனியில் உள்ள உண்மை குறித்து இந்த சபைக்கு
அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கம் சகல பக்கங்களிலிருந்தும் மக்களின் பேச்சுச் சுதந்திரத்தை இல்லாதொழிக்கவும், ஜனநாயகத்தை இல்லாதொழிக்கவும்
தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (3) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில்,அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தால், சிறையில் அடைக்க வாய்ப்பு உள்ளதாகவும்,நிகழ் நிலை காப்பு சட்டத்தின்
ஊடாக இவ்வாறான தண்டனைகளை விதிக்கவும் வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்
அப்பிள், அமேசான், கூகுள், மொட்டா, எக்ஸ், புக்கிங்.காம் போன்றவற்றை உள்ளடக்கிய Asia Internet Coalition கடுமையான எதிர்ப்பை
வெளியிட்டுள்ளதாகவும், இவர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் வெளிநாட்டு முதலீடுகள் வீழ்ச்சியடையும் என்றும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நிகழ் நிலை காப்பு சட்டமூலத்தை கொண்டு வந்து இன்று என்ன நடந்துள்ளது என்று சிந்தித்து பார்க்குமாறும்,ஆசிய இன்டர்நெட் கூட்டமைப்பானது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும், இவற்றை விரட்டியடுத்து
விட்டால் சர்வதேச முதலீட்டை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும் என்றும், நிகழ் நிலையில் எவ்வித பாதுகாப்பும் இல்லை என்றும்,அரசாங்கத்தின்
பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் எடுக்கும் முயற்சியே இதுவாகும் என்றும்,இது
சர்வாதிகாரமான தவறானதோர் திட்டமாகும் என்பதனால் இதை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு
- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடை
- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குவைத்துக்கான விமான சேவை நிறுத்தம்
- கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு தொடர்பான மூன்று மரணங்கள்
- வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்
- உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, சேவையைப் பற்றியது என்று பிரதமர்
- தீவின் சில பகுதிகளில் இன்று பலமுறை மழை பெய்யும்
- முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள்
- பேருந்துகள் உட்பட அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களும் ஆய்வு
ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஸ்தல விசாரணை
ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஸ்தல விசாரணை
இலங்கை ; ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஸ்தல விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் விஞ்ஞான ரீதியான சாட்சியங்களைப் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு
அதிகாரிகள் ((SOCO)) மற்றும் கைரேகை அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகம், பிரதான நுழைவாயில் மற்றும் அண்மித்த பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதற்காக
முப்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து இன்று (22)அதிகாலை விசேட நடவடிக்கையொன்றை மேற்கொண்டதாக பொலிஸ்
ஊடக பேச்சாளர் அலுவலகம வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் களனி, எம்பிலிபிட்டிய, ஜா-எல, இரத்தினபுரி, செவனகல, வெல்லம்பிட்டிய, பிடிகல, வாதுவ மற்றும் நுகேகொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.
26 முதல் 58 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..
எரிந்த மருத்துவமனை மருந்துகள் – விசாரணை ஆரம்பம்
எரிந்த மருத்துவமனை மருந்துகள் – விசாரணை ஆரம்பம்
இலங்கை ஹிரிபிட்டிய பிராந்திய வைத்தியசாலையில் உள்ள மருந்துகள் வைக்க படும்
சேமிப்பு அறையில் திடீரென தீ பற்றி கொண்டதில்
அந்த மருந்துகள் எரிந்து அழிந்துள்ளன
மின்சார கசிவினால் ஏற்பட்ட மின் ஒழுக்கே இந்த தீ பரவலுக்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
மூன்று எம்பிக்களிடம் விசாரணை – தயாராகும் சிறை
மூன்று எம்பிக்களிடம் விசாரணை – தயாராகும் சிறை
இலங்கையில் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த மக்கள் மீது மகிந்த ஆதரவாளர்கள் போத்தல் ,பணம் கொடுத்து வன்முறை தாக்குதலை நடத்தினர்
இந்த தாக்குதலுக்கு பின்புலத்தில் இருந்து செயல் பட்டனர் என்ற குற்ற சாட்டில் மூன்று
எம்பிக்கள் கைது செய்ய பட்டு குற்றப் புலனாய்வு துறையினரால் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
ரோஹித அபேகுணவர்தன, சி.பி ரத்நாயக்க மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகிய மூவரது குற்றம் நிரூபிக்க பட்டால்
கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது
இலங்கைக்கு ஐநா இட்ட கட்டளை
இலங்கைக்கு ஐநா இட்ட கட்டளை
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (unchr) இலங்கை தொடர்பில் மையப்படுத்தப்பட்ட அணியால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான இந்த பிரேரணை, பிரித்தானியாவினால் சமர்ப்பிக்கப்பட்டது கனடா,. ஜேர்மனி, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் சார்பாகவே அந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
46/1 என அடையாளம் காணப்பட்ட அந்த வரைவு பிரேரணை, நேற்றையதினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தனது தரப்பின் சார்பில் கருத்துகளை முன்வைத்த சீனா, பிரேரணை வாக்கெடுப்புக்கு விடுமாறு கோரிநின்றது.
அதனடிப்படையில், பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகள் வாக்களித்தன, எதிராக 11 நாடுகள் வாக்களித்தன, இந்தியா, ஜப்பான உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களிப்பதை தவிர்த்துகொண்டன.
அவர்களின் பிரேரணையில், 2012 ஆம் ஆண்டுமுதல் இலங்கையில் எடுக்கப்பட்ட நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை நடவடிக்கைகள் குறித்து வெகுவாக கவனம் செலுத்தப்பட்டது.
பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க இலங்கை விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரித்து பகுப்பாய்வு செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் அந்தப் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துதல் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளில் மாகாண சபை முறையைத் தொடர்வது குறித்தும்,
கொரோனா தொற்றை அடுத்து மத சுதந்திரத்துக்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்டமை தொடர்பிலும் அந்தப் பிரேரணையின் சுட்டிக்காட்டப்பட்டள்ளது.
நண்பியின் விரலை கடித்த பெண் -போதையில் நடந்த ரகளை
நண்பியின் விரலை கடித்த பெண் -போதையில் நடந்த ரகளை
அவுஸ்ரேலிய தலைநகர் மெல்போர்ன் பகுதியில் பாட்டி ஒன்றில் கலந்து கொண்ட
பெண்மணி ஒருவர் அதிக போதையில் அங்கு கலந்து கொண்ட நண்பியின் விரலை கடித்துள்ளார்
பலத்த காயமடைந்த பெண் மருத்துவனையில் அனுமதிக்க பட்டார் ,மேற்படி
சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் இடம்பெற்று வந்த
விசாரணைகளில் இவர் சிறை தண்டனை இன்றி விடுவிக்க பட்டுள்ளார்
மிரட்டி அடக்க நினைக்கும் கோட்டா – அடங்க அடம் பிடிக்கும் தமிழர் அமைச்சர்
மிரட்டி அடக்க நினைக்கும் கோட்டா – அடங்க அடம் பிடிக்கும் தமிழர் அமைச்சர் – ஐந்தாண்டு ஆட்சிக்கு பின்னர் கோட்டாவுக்கு சிறை
இலங்கையில் இடம்பெற்ற இறுதி போரின் பின்னர் பொத்துவில் முதல் பொலி கண்டி வரையிலான போராட்டத்தில் கலந்து
கொண்டவர்கள் மீது சிங்கள அரச பயங்கரவாத காவல்துறை விசாரணைகளை அடுக்கி விட்டுள்ளது
ஆளும் கோட்டாவை மகிழ்விக்க தனது இரும்புக்கரம் கொண்ட அடக்குமுறையை சிங்கள அரச பயங்கரவாத அடிச்சி பீடம் கட்டவிழ்த்து விட்டுள்ளது
இவ்வேளை முன்னாள் அமைச்சர் மனோகணேசனிடமும் விசாரணைகளை மேக்கொள்ள உள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்
யாழில் மூன்று தீவுகளை வாங்கிய சீனா
அவரை செருப்பால அடிக்கணும் சீமான்
வீட்டுக்கு வந்து வாக்குமூலத்தை வாங்கி செல்லுங்கள் என மனோ அதிரடியாக தெரிவித்துள்ளார் ,
இது கோட்டா அரசின் மிரட்டல் நடவடிக்கை போக்கில் ஒன்று என்பதை நோக்கிட முடிகிறது
முஸ்லீம் தீவிரவாதி சகரான் மனைவி தொடர்ந்து தடுத்து வைப்பு
இலங்கையில் பல இடங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்களை கொன்று குவித்த சகரான் என்ற மத போதகரின் மனைவி பாத்திமா
படுகாயமடைந்த நிலையில் உயிருடன் மீட்க பட்டார் ,இவர்
தற்போது நீதி விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகிறார்
இலங்கை நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில், அவரை
தொடந்து தடுப்பு காவலில் வைக்குமாறு நீதிமன்ற நீதவானால் அதிரடி உத்தரவிட பட்டுள்ளது
சீனாவுக்கு ஆயுத ரகசியங்களை விற்ற 200 லண்டன் அக்கடாமிகள் – விசாரணைகள் ஆரம்பம்
சீனாவுக்கு ஆயுத ரகசியங்களை விற்ற 200 லண்டன் அக்கடாமிகள் – விசாரணைகள் ஆரம்பம்
பிரிட்டனில் இருந்து இயங்கும் இருநூறுக்கு மேற்பட்ட ரீ சேர்ச் அக்கடாமிகள்
பிரிட்டனில் கண்டுபிடிக்க பட்ட புதியவகை , ஆயுத இரகசியங்களை சீனாவுக்கு விற்றுள்ளதும் ,
அதன் வழியாகசீனா அதே மாதிரியான ஆயுதங்களை தயாரித்துள்ளதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்வாறு வழங்க பட்ட தகவல்களின் அடிப்படையில் விமானங்கள் ,ஏவுகணைகள் ,கப்பல்கள்
உள்ளிட்ட முக்கிய தரவுகளை இந்த இருநூறு அக்கடாமிகளினால் வழங்க
பட்டுள்ளன என்ற சதேகத்தில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
பிரிட்டன் வெளியக உளவுத்துறையிடம் சிக்கிய தகவல் ஒன்றின்
அடிப் படையில் இந்த விசாரணைகள் தீவிர படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
குற்றங்கள் நிரூபிக்க பட்டால்,தகவல் வழங்கியவர்களுக்கு பல்லாண்டுகள் சிறை வசம் அனுபவிக்க
படுவார்கள் என்பதும் ,குறித்த நிறுவனங்கள் மீள இயங்காத நிலை ஏற்படும் வாய்ப்பும் உள்ளது
இந்த தகவல் கசிவினால பிரிட்டனில் இயங்கு பல அக்கடாமிகள் நெருக்கடியில் சிக்கியுள்ளன ,
அமெரிக்காவில் உள்ளக முக்கிய ஆராய்ச்சியாளர்களை விலைக்கு வாங்கி கொரனோ கிருமிகளை
உலக நாடுகளில் பரப்பியது போன்று ,சீனா பிரிட்டனுக்குள்ளும் நுழைந்து தனது உளவு விளையாட்டை காண்பித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து
பூட்டிய அறையில் மங்கள ஐந்து மணி நேரம் விசாரணை
பூட்டிய அறையில் மங்கள ஐந்து மணி நேரம் விசாரணை
இலங்கையில் ஆளும் கோட்டபாய அரசு ஆட்சியில் அமர்ந்த நிலையில்
தற்பொழுது பழி வாங்கும் அரசியல் தீவிரம் பெற்றுள்ளது,
இவ்வேளை முன்னாள் நிதி அமைச்ச மங்கள சமரவீர ஐந்து மணித்தியாலங்கள்
குற்றப்புலானய்வு துறையினரின் விசாரணைக்கு உட்படுத்த பட்டார்
தேர்தல் நெருங்கும் வேளையில் ஆளும் அரசின் இந்த செயல் பாடுகள்
பெரும் அரசியல் எதிரொலியை ஏற்படுத்த கூடும் என எதிர்பார்க்க படுகிறது
வடகொரியா இராணுவத்துக்குள் பெரும் ஊழல் – தயாராகும் மரண தண்டனை
வடகொரியா இராணுவத்துக்குள் பெரும் ஊழல் – தயாராகும் மரண தண்டனை
வட கொரியா அதிபர் கிங் யோங் உன் மிகவும் கொடியவர் என்கின்ற பரப்புரை உலக அரங்கில் மேற்கொள்ள பட்டு வருகிறது
அவர் மரணமானார் என்ற செய்தி பரவிய நிலையில் தற்பொழுது ,அதிரடி வேட்டையை ஆரம்பித்துள்ளார்
இராணுவத்திற்கு உரிய முறையில் உணவுகள் வழங்குவதில்லை எனவும் ,
அதற்கு ஒதுக்க பட்ட நிதிகளில் முக்கிய மேல் நிலை அதிகாரிகள் ஊழல் புரிந்துள்ளனர்
என்ற குற்ற சாட்டு எழுந்துள்ள நிலையில் ,தற்போது இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
புலனாய்வு துறை தலைவராக அவரது நெருங்கிய மெய்ப் பாதுகாவலர்
ஒருவரை நியமித்த இரண்டு நாட்களுக்குள் இந்த அதிரடி முடிவு அறிவிக்க பட்டுள்ளது
அப்படி என்றால் மிக முக்கிய இராணுவ தளபதிகள் இலக்கு வைக்க படுகின்றனர் ,
லஞ்ச ஊழல் மோசடி உறுதி படுத்த பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை உறுதி என அடித்து கூறலாம்
யார் அந்த தளபதிகள் என்பதை அறிந்திட உலகம் எதிர்பார்த்தது காத்துள்ளது

குண்டு தாக்குதல் நடத்திய 39 பேரிடம் விசாரணை .
குண்டு தாக்குதல் நடத்திய 39 பேரிடம் விசாரணை .
இலங்கையில் தொடராக இடம்பெற்ற எட்டு குண்டு தாக்குதலுடன் தொடர்பு பட்ட சுமார் 39 பேரிடம் இலங்கை
குற்ற தடுப்பு பிரிவினர் தீவிர தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மேலும் விசாரணைகள் தொடர்ந்த வண்னம் உள்ளன ,ஆனால் குற்ற சட்ட பட்ட முக்கிய முஸ்லீம் முன்னாள்
அமைச்சர்கள் இதுவரை விசாரணைகளுக்கு உட்படுத்த படவில்லை என்பது குறிப்பிட தக்கது

























