Tag: விசாரணை
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்
முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் மிகவும் பாரதூரமான விடயமாகும் என்றும், இது நீதித்துறை சுதந்திரம் சார் பிரச்சினை என்றும், அவருக்கு கொலை மிரட்டல்களும், அழுத்தங்களும் வந்ததாக கூறப்பட்டுள்ளதாகவும்,
இது ஒரு பாரதூரமான அறிவிப்பு என்பதால், சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டு, இதன் பின்னனியில் உள்ள உண்மை குறித்து இந்த சபைக்கு
அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கம் சகல பக்கங்களிலிருந்தும் மக்களின் பேச்சுச் சுதந்திரத்தை இல்லாதொழிக்கவும், ஜனநாயகத்தை இல்லாதொழிக்கவும்
தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (3) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில்,அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தால், சிறையில் அடைக்க வாய்ப்பு உள்ளதாகவும்,நிகழ் நிலை காப்பு சட்டத்தின்
ஊடாக இவ்வாறான தண்டனைகளை விதிக்கவும் வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்
அப்பிள், அமேசான், கூகுள், மொட்டா, எக்ஸ், புக்கிங்.காம் போன்றவற்றை உள்ளடக்கிய Asia Internet Coalition கடுமையான எதிர்ப்பை
வெளியிட்டுள்ளதாகவும், இவர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் வெளிநாட்டு முதலீடுகள் வீழ்ச்சியடையும் என்றும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நிகழ் நிலை காப்பு சட்டமூலத்தை கொண்டு வந்து இன்று என்ன நடந்துள்ளது என்று சிந்தித்து பார்க்குமாறும்,ஆசிய இன்டர்நெட் கூட்டமைப்பானது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும், இவற்றை விரட்டியடுத்து
விட்டால் சர்வதேச முதலீட்டை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும் என்றும், நிகழ் நிலையில் எவ்வித பாதுகாப்பும் இல்லை என்றும்,அரசாங்கத்தின்
பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் எடுக்கும் முயற்சியே இதுவாகும் என்றும்,இது
சர்வாதிகாரமான தவறானதோர் திட்டமாகும் என்பதனால் இதை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு
- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை
- குற்றவாளிக்கு மரண தண்டனை
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்
- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு
- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு
- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
- நாய்களை எரிக்க சுடலை
ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஸ்தல விசாரணை
ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஸ்தல விசாரணை
இலங்கை ; ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஸ்தல விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் விஞ்ஞான ரீதியான சாட்சியங்களைப் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு
அதிகாரிகள் ((SOCO)) மற்றும் கைரேகை அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகம், பிரதான நுழைவாயில் மற்றும் அண்மித்த பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதற்காக
முப்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து இன்று (22)அதிகாலை விசேட நடவடிக்கையொன்றை மேற்கொண்டதாக பொலிஸ்
ஊடக பேச்சாளர் அலுவலகம வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் களனி, எம்பிலிபிட்டிய, ஜா-எல, இரத்தினபுரி, செவனகல, வெல்லம்பிட்டிய, பிடிகல, வாதுவ மற்றும் நுகேகொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.
26 முதல் 58 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..
எரிந்த மருத்துவமனை மருந்துகள் – விசாரணை ஆரம்பம்
எரிந்த மருத்துவமனை மருந்துகள் – விசாரணை ஆரம்பம்
இலங்கை ஹிரிபிட்டிய பிராந்திய வைத்தியசாலையில் உள்ள மருந்துகள் வைக்க படும்
சேமிப்பு அறையில் திடீரென தீ பற்றி கொண்டதில்
அந்த மருந்துகள் எரிந்து அழிந்துள்ளன
மின்சார கசிவினால் ஏற்பட்ட மின் ஒழுக்கே இந்த தீ பரவலுக்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
மூன்று எம்பிக்களிடம் விசாரணை – தயாராகும் சிறை
மூன்று எம்பிக்களிடம் விசாரணை – தயாராகும் சிறை
இலங்கையில் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த மக்கள் மீது மகிந்த ஆதரவாளர்கள் போத்தல் ,பணம் கொடுத்து வன்முறை தாக்குதலை நடத்தினர்
இந்த தாக்குதலுக்கு பின்புலத்தில் இருந்து செயல் பட்டனர் என்ற குற்ற சாட்டில் மூன்று
எம்பிக்கள் கைது செய்ய பட்டு குற்றப் புலனாய்வு துறையினரால் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
ரோஹித அபேகுணவர்தன, சி.பி ரத்நாயக்க மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகிய மூவரது குற்றம் நிரூபிக்க பட்டால்
கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது
இலங்கைக்கு ஐநா இட்ட கட்டளை
இலங்கைக்கு ஐநா இட்ட கட்டளை
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (unchr) இலங்கை தொடர்பில் மையப்படுத்தப்பட்ட அணியால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான இந்த பிரேரணை, பிரித்தானியாவினால் சமர்ப்பிக்கப்பட்டது கனடா,. ஜேர்மனி, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் சார்பாகவே அந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
46/1 என அடையாளம் காணப்பட்ட அந்த வரைவு பிரேரணை, நேற்றையதினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தனது தரப்பின் சார்பில் கருத்துகளை முன்வைத்த சீனா, பிரேரணை வாக்கெடுப்புக்கு விடுமாறு கோரிநின்றது.
அதனடிப்படையில், பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகள் வாக்களித்தன, எதிராக 11 நாடுகள் வாக்களித்தன, இந்தியா, ஜப்பான உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களிப்பதை தவிர்த்துகொண்டன.
அவர்களின் பிரேரணையில், 2012 ஆம் ஆண்டுமுதல் இலங்கையில் எடுக்கப்பட்ட நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை நடவடிக்கைகள் குறித்து வெகுவாக கவனம் செலுத்தப்பட்டது.
பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க இலங்கை விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரித்து பகுப்பாய்வு செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் அந்தப் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துதல் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளில் மாகாண சபை முறையைத் தொடர்வது குறித்தும்,
கொரோனா தொற்றை அடுத்து மத சுதந்திரத்துக்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்டமை தொடர்பிலும் அந்தப் பிரேரணையின் சுட்டிக்காட்டப்பட்டள்ளது.
நண்பியின் விரலை கடித்த பெண் -போதையில் நடந்த ரகளை
நண்பியின் விரலை கடித்த பெண் -போதையில் நடந்த ரகளை
அவுஸ்ரேலிய தலைநகர் மெல்போர்ன் பகுதியில் பாட்டி ஒன்றில் கலந்து கொண்ட
பெண்மணி ஒருவர் அதிக போதையில் அங்கு கலந்து கொண்ட நண்பியின் விரலை கடித்துள்ளார்
பலத்த காயமடைந்த பெண் மருத்துவனையில் அனுமதிக்க பட்டார் ,மேற்படி
சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் இடம்பெற்று வந்த
விசாரணைகளில் இவர் சிறை தண்டனை இன்றி விடுவிக்க பட்டுள்ளார்
மிரட்டி அடக்க நினைக்கும் கோட்டா – அடங்க அடம் பிடிக்கும் தமிழர் அமைச்சர்
மிரட்டி அடக்க நினைக்கும் கோட்டா – அடங்க அடம் பிடிக்கும் தமிழர் அமைச்சர் – ஐந்தாண்டு ஆட்சிக்கு பின்னர் கோட்டாவுக்கு சிறை
இலங்கையில் இடம்பெற்ற இறுதி போரின் பின்னர் பொத்துவில் முதல் பொலி கண்டி வரையிலான போராட்டத்தில் கலந்து
கொண்டவர்கள் மீது சிங்கள அரச பயங்கரவாத காவல்துறை விசாரணைகளை அடுக்கி விட்டுள்ளது
ஆளும் கோட்டாவை மகிழ்விக்க தனது இரும்புக்கரம் கொண்ட அடக்குமுறையை சிங்கள அரச பயங்கரவாத அடிச்சி பீடம் கட்டவிழ்த்து விட்டுள்ளது
இவ்வேளை முன்னாள் அமைச்சர் மனோகணேசனிடமும் விசாரணைகளை மேக்கொள்ள உள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்
யாழில் மூன்று தீவுகளை வாங்கிய சீனா
அவரை செருப்பால அடிக்கணும் சீமான்
வீட்டுக்கு வந்து வாக்குமூலத்தை வாங்கி செல்லுங்கள் என மனோ அதிரடியாக தெரிவித்துள்ளார் ,
இது கோட்டா அரசின் மிரட்டல் நடவடிக்கை போக்கில் ஒன்று என்பதை நோக்கிட முடிகிறது
முஸ்லீம் தீவிரவாதி சகரான் மனைவி தொடர்ந்து தடுத்து வைப்பு
இலங்கையில் பல இடங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்களை கொன்று குவித்த சகரான் என்ற மத போதகரின் மனைவி பாத்திமா
படுகாயமடைந்த நிலையில் உயிருடன் மீட்க பட்டார் ,இவர்
தற்போது நீதி விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகிறார்
இலங்கை நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில், அவரை
தொடந்து தடுப்பு காவலில் வைக்குமாறு நீதிமன்ற நீதவானால் அதிரடி உத்தரவிட பட்டுள்ளது
சீனாவுக்கு ஆயுத ரகசியங்களை விற்ற 200 லண்டன் அக்கடாமிகள் – விசாரணைகள் ஆரம்பம்
சீனாவுக்கு ஆயுத ரகசியங்களை விற்ற 200 லண்டன் அக்கடாமிகள் – விசாரணைகள் ஆரம்பம்
பிரிட்டனில் இருந்து இயங்கும் இருநூறுக்கு மேற்பட்ட ரீ சேர்ச் அக்கடாமிகள்
பிரிட்டனில் கண்டுபிடிக்க பட்ட புதியவகை , ஆயுத இரகசியங்களை சீனாவுக்கு விற்றுள்ளதும் ,
அதன் வழியாகசீனா அதே மாதிரியான ஆயுதங்களை தயாரித்துள்ளதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்வாறு வழங்க பட்ட தகவல்களின் அடிப்படையில் விமானங்கள் ,ஏவுகணைகள் ,கப்பல்கள்
உள்ளிட்ட முக்கிய தரவுகளை இந்த இருநூறு அக்கடாமிகளினால் வழங்க
பட்டுள்ளன என்ற சதேகத்தில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
பிரிட்டன் வெளியக உளவுத்துறையிடம் சிக்கிய தகவல் ஒன்றின்
அடிப் படையில் இந்த விசாரணைகள் தீவிர படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
குற்றங்கள் நிரூபிக்க பட்டால்,தகவல் வழங்கியவர்களுக்கு பல்லாண்டுகள் சிறை வசம் அனுபவிக்க
படுவார்கள் என்பதும் ,குறித்த நிறுவனங்கள் மீள இயங்காத நிலை ஏற்படும் வாய்ப்பும் உள்ளது
இந்த தகவல் கசிவினால பிரிட்டனில் இயங்கு பல அக்கடாமிகள் நெருக்கடியில் சிக்கியுள்ளன ,
அமெரிக்காவில் உள்ளக முக்கிய ஆராய்ச்சியாளர்களை விலைக்கு வாங்கி கொரனோ கிருமிகளை
உலக நாடுகளில் பரப்பியது போன்று ,சீனா பிரிட்டனுக்குள்ளும் நுழைந்து தனது உளவு விளையாட்டை காண்பித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து
பூட்டிய அறையில் மங்கள ஐந்து மணி நேரம் விசாரணை
பூட்டிய அறையில் மங்கள ஐந்து மணி நேரம் விசாரணை
இலங்கையில் ஆளும் கோட்டபாய அரசு ஆட்சியில் அமர்ந்த நிலையில்
தற்பொழுது பழி வாங்கும் அரசியல் தீவிரம் பெற்றுள்ளது,
இவ்வேளை முன்னாள் நிதி அமைச்ச மங்கள சமரவீர ஐந்து மணித்தியாலங்கள்
குற்றப்புலானய்வு துறையினரின் விசாரணைக்கு உட்படுத்த பட்டார்
தேர்தல் நெருங்கும் வேளையில் ஆளும் அரசின் இந்த செயல் பாடுகள்
பெரும் அரசியல் எதிரொலியை ஏற்படுத்த கூடும் என எதிர்பார்க்க படுகிறது
வடகொரியா இராணுவத்துக்குள் பெரும் ஊழல் – தயாராகும் மரண தண்டனை
வடகொரியா இராணுவத்துக்குள் பெரும் ஊழல் – தயாராகும் மரண தண்டனை
வட கொரியா அதிபர் கிங் யோங் உன் மிகவும் கொடியவர் என்கின்ற பரப்புரை உலக அரங்கில் மேற்கொள்ள பட்டு வருகிறது
அவர் மரணமானார் என்ற செய்தி பரவிய நிலையில் தற்பொழுது ,அதிரடி வேட்டையை ஆரம்பித்துள்ளார்
இராணுவத்திற்கு உரிய முறையில் உணவுகள் வழங்குவதில்லை எனவும் ,
அதற்கு ஒதுக்க பட்ட நிதிகளில் முக்கிய மேல் நிலை அதிகாரிகள் ஊழல் புரிந்துள்ளனர்
என்ற குற்ற சாட்டு எழுந்துள்ள நிலையில் ,தற்போது இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
புலனாய்வு துறை தலைவராக அவரது நெருங்கிய மெய்ப் பாதுகாவலர்
ஒருவரை நியமித்த இரண்டு நாட்களுக்குள் இந்த அதிரடி முடிவு அறிவிக்க பட்டுள்ளது
அப்படி என்றால் மிக முக்கிய இராணுவ தளபதிகள் இலக்கு வைக்க படுகின்றனர் ,
லஞ்ச ஊழல் மோசடி உறுதி படுத்த பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை உறுதி என அடித்து கூறலாம்
யார் அந்த தளபதிகள் என்பதை அறிந்திட உலகம் எதிர்பார்த்தது காத்துள்ளது

குண்டு தாக்குதல் நடத்திய 39 பேரிடம் விசாரணை .
குண்டு தாக்குதல் நடத்திய 39 பேரிடம் விசாரணை .
இலங்கையில் தொடராக இடம்பெற்ற எட்டு குண்டு தாக்குதலுடன் தொடர்பு பட்ட சுமார் 39 பேரிடம் இலங்கை
குற்ற தடுப்பு பிரிவினர் தீவிர தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மேலும் விசாரணைகள் தொடர்ந்த வண்னம் உள்ளன ,ஆனால் குற்ற சட்ட பட்ட முக்கிய முஸ்லீம் முன்னாள்
அமைச்சர்கள் இதுவரை விசாரணைகளுக்கு உட்படுத்த படவில்லை என்பது குறிப்பிட தக்கது

















