எதிர்க்கட்சி எம்.பிக்களை இணைத்துக்கொள்ள மொட்டு கட்சி முயற்சி
Posted in இலங்கை செய்திகள்

எதிர்க்கட்சி எம்.பிக்களை இணைத்துக்கொள்ள மொட்டு கட்சி முயற்சி

எதிர்க்கட்சி எம்.பிக்களை இணைத்துக்கொள்ள மொட்டு கட்சி முயற்சி

எதிர்க்கட்சி எம்.பிக்களை இணைத்துக்கொள்ள மொட்டு கட்சி முயற்சி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பின்னர் பிரிந்து சென்ற பிரிவினரை மீண்டும் இணைப்பதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து தற்போது பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியில் இருந்து விலகி

ஏனைய கட்சிகளில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்றத்தில் ஒரே குழுவாக செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

மேலும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்களை இந்தக் குழுவில் சேர்ப்பது குறித்து,
மொட்டு கட்சி கவனம் செலுத்தி வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொட்டு கட்சியிலிருந்து 48பேர் ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மொட்டு கட்சியிலிருந்து 48பேர் ஓட்டம்

மொட்டு கட்சியிலிருந்து 48பேர் ஓட்டம்

மொட்டு கட்சியிலிருந்து 48பேர் ஓட்டம் ,மொட்டு கட்சியிலிருந்து 48 பேர் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றத்தின் பின்வரிசை அமைச்சர்கள் மற்றும் எம்பிகள் உள்ளிட்ட 48 பேர். தற்பொழுது ரணில் விக்ரம சிங்காவுக்கு ஆதரவை அளிக்கின்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 பேர் கொழும்பில் உள்ள முக்கிய இடத்தில் சந்தித்து கலந்துரையாடல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பெரமுனையின் தாமரை மொட்டு சின்னத்தில் வேட்பாளரை முன்வைத்ததால் ஏற்படும் நிலைமை குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தனது கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்.

இதன்படி ஜனாதிபதி ரயில் விக்ரம் சிங்காவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் வாக்களிப்பல் போன்ற விடயங்கள் இதில் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் போட்டி நிறைந்ததும் சவால் நிறைந்த தேர்தல் களமாக இவை படுகின்றது .

இந்த தேர்தலில் ரணில் விக்ரம் சிங்கா பாரிய வெற்றியை அடைய வேண்டிய நிலையில் அவர் தள்ளப்பட்டுள்ளார் .

அவ்வாறு வெற்றி பெறாது தோல்வி யை தழுவிக் கொண்டால் ஐக்கிய தேசிய கட்சி இலங்கையில் இருந்து அகற்றப்படுகின்ற ஒரு பாரிய வெற்றிடம் காணப்படும் .

அதனால் பல்வேறுப்பட்ட நடவடிக்கையை துணிந்தவர் மேற்கொண்டு வருகின்றார்.

தமிழ் மக்களுடைய ஆதரவை பெறவேண்டிய நிலையிலும் ரணில் விக்ரமசிங்கா தள்ளப்பட்டுள்ளார் .

ஆனால் தமிழர்கள் நம்புவதற்கு தயாராக இல்லை என்பதை தமிழ் மக்களுடைய வாத பிரதிவாதங்கள் சமூக ஊட தலங்களான பதிவுகளுடன் காண முடிகின்றது.

மொட்டு கட்சியின் எம்.பி நந்தசேன காலமானார்
Posted in இலங்கை செய்திகள்

மொட்டு கட்சியின் எம்.பி நந்தசேன காலமானார்

மொட்டு கட்சியின் எம்.பி நந்தசேன காலமானார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கே.எச்.நந்தசேன திடீர் சுகவீனம் காரணமாக காலமானார்.

தனது 69 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை மாணவனை தாக்கிய மொட்டு கட்சி உறுப்பினரை தேடி விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவனை தாக்கிய மொட்டு கட்சி உறுப்பினரை தேடி விசாரணை

பாடசாலை மாணவனை தாக்கிய மொட்டு கட்சி உறுப்பினரை தேடி விசாரணை

பாடசாலை மாணவனை தாக்கிய திவுலபிட்டிய உள்ளுராட்சி சபையின் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான தனது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்களாகியும், சந்தேகத்திற்குரியவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என குறித்த மாணவனின் தாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த 11ஆம் திகதி, பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவனை, பந்துராகொட நகரில் வைத்து உள்ளுராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் தாக்கியுள்ளார்.

பந்துராகொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலின் பின்னர் சந்தேகத்திற்குரியவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில், எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக குறித்த முன்னாள் உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.