முதலமைச்சர் கனவில் நீதிபதி இளஞ்செழியன்
Posted in இலங்கை செய்திகள்

முதலமைச்சர் கனவில் நீதிபதி இளஞ்செழியன்

முதலமைச்சர் கனவில் நீதிபதி இளஞ்செழியன்


முதலமைச்சர் கனவில் நீதிபதி இளஞ்செழியன் | நீதிபதி இளஞ்செழியன் வெல்வாரா |Srilanka News.

மாகாண சபை தேர்தலில்

இலங்கையில் இடம்பெற உள்ள மாகாண சபை தேர்தலில் முதல் அமைச்சர் போட்டிக்கு நீதிபதி இளஞ்செழியன் போட்டி இடுகிறாராம் .

நீதி பதி இளஞ்செழியன்

இவ்வாறு தேர்தலில் போட்டி இட்டால் நீதி பதி இளஞ்செழியன் மக்கள் ஆதரவோடு மகத்தான வெற்றியை பெறுவாரா அல்லது தோற்கடிக்க பட்டு வீட்டுக்கு அனுப்ப படுவாரா .

இன்றைய இலங்கை முக்கிய செய்திகளில் வன்னி மைந்தன் அரசியல் பார்வை இவ்வாறு அமைகிறது .

Click HERE VIDEO

நீதிபதிகளுக்கு பாதி சம்பளம்
Posted in இலங்கை செய்திகள்

நீதிபதிகளுக்கு பாதி சம்பளம்

நீதிபதிகளுக்கு பாதி சம்பளம்

நீதிபதிகளுக்கு பாதி சம்பளம் ,இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு அவர்களின் சம்பளத்தில் பாதியை வழங்க முடிவு செய்துள்ளது, அதே நேரத்தில் பல கொடுப்பனவுகளை நீதித்துறை சேவை ஆணைக்குழு (JSC), நிறுத்தி வைத்துள்ளது.

நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் செயலாளர்

இந்த முடிவை விவரிக்கும் ஒரு சுற்றறிக்கையை நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்னா அல்விஸ்

அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அனுப்பிவைத்துள்ளார்.

பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட நீதிபதிகள் சமீபத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் அவர்களின் சம்பளத்தில் 50% பெறுவார்கள் நீதித்துறை சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறைக்கப்பட்ட சம்பளத்துடன் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள்

குறைக்கப்பட்ட சம்பளத்துடன் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள் குறித்து நீதி அமைச்சகம் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பின் தணிக்கை மற்றும் மேலாண்மைக் குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தொழில்முறை, தனிப்பட்ட, வாழ்க்கைச் செலவுகள் மற்றும் மொழி கொடுப்பனவுகள் மட்டுமே அரைச் சம்பளக் கொடுப்பனவுகளில் சேர்க்கப்படும் என்று குழு முடிவு செய்தது.

தொலைபேசி, வாகனம், ஓட்டுநர், புத்தகங்கள், வீட்டு வாடகை, மேல்முறையீடு மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகள் உள்ளிட்ட பிற கொடுப்பனவுகள் வழங்கப்படாது.

இந்த முடிவுக்கு இணங்க, நீதித்துறை சேவை ஆணைக்குழு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது, இது அவர்களின் சம்பளத்தில் பாதியைப் பெறுவார்கள்.

மனிதப் புதைகுழிக்கு நீதிபதி விஜயம்
Posted in இலங்கை செய்திகள்

மனிதப் புதைகுழிக்கு நீதிபதி விஜயம்

மனிதப் புதைகுழிக்கு நீதிபதி விஜயம்

மனிதப் புதைகுழிக்கு நீதிபதி விஜயம் ,குருக்கள் மடத்தில் உள்ள மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தை நேரில் சென்று நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். Judge visits mass grave

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்க

பட்டு குருக்கள் மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தொடர்புடைய வழக்கு விசாரணை களுவாஞ்சிக்குடி நீதவான்

நீதிமன்றத்தில் வியாழக்கிழமை(11) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது உரிய நபர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தை நீதிபதி ஜே.பீ.ஏ.ரஞ்சித்குமார்

முன்னிலையில் தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டத்தரணிகள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர், பிரதேச சபைத்

தவிசாளர், பொலிஸார், காணாமல் ஆக்கப்பட்ட அலுவலக அதிகாரிகள், சட்ட வைத்திய நிபுணர்கள், தடயவியல் பொலிஸார், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், உள்ளிட்ட பலரும் பார்வையிட்டனர்.

இதன்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் உரிய இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

சம்பவ இடத்தில் புதைக்கப்பட்ட மனித எச்சங்களை தோண்டி எடுக்குமாறு ஏற்கனவே களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த

நிலையில் ம் நீதிபதி தலைமையிலான உயர் அதிகாரிகள் உரிய இடத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

குருக்கள்மடம் கடற்கரைப் பகுதியை அண்மித்ததாக உள்ள இடம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு பாதுகாப்பு வலயம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

நேபாளத்தில் நீதிபதி பிரதமராகிறார்
Posted in உலக செய்திகள்

நேபாளத்தில் நீதிபதி பிரதமராகிறார்

நேபாளத்தில் நீதிபதி பிரதமராகிறார்

நேபாளத்தில் நீதிபதி பிரதமராகிறார் .ஊழல் முறைகேடுகள், வேலையின்மை, கருத்துச் சுந்திரத்துக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை Judge becomes Prime Minister in Nepal

முன்வைத்து நேபாளத்தில் அரசுக்கு எதி​ராக வெடித்த இளைஞர்களின் போராட்டத்தால் பதற்றம் நீடித்து வருகிறது.

நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்​கள் நடத்​திய தீவிர போராட்​டங்​களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி​ (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது.

அவருடன் சேர்ந்​து, நாட்​டின் அதிப​ராக இருந்த ராம்​சந்​திர பவுடேலும் ராஜி​னாமா செய்​தார். இதனால் அந்​நாட்​டில் அரசி​யல் குழப்​பம் ஏற்பட்டுள்ளது.

நேபாளத்​தில் நிலவி வரும் அரசி​யல் பதற்​ற​மான சூழ்​நிலை காரண​மாக சட்​டம்​ – ஒழுங்கு சீர்​குலைந்​துள்​ளது.

மேலும், நாட்​டின் தலைநகர் காத்மாண்டு உட்பட பல்​வேறு பகு​தி​களில் வன்​முறைச் சம்​பவங்​கள் தொடர்​கின்​றன. ஊழல் அரசியல்வாதிகளின் வசிப்பிடங்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

நேபாளத்​தில் அமைதி திரும்​பாத நிலை​யில், பல்​வேறு நகரங்களில் ஊரடங்கு உத்​தரவு அமலில் உள்​ளது.

காத்​மாண்டு முழு​வதும் போலீ​ஸாரும், ராணுவத்​தினரும் குவிக்​கப்​பட்​டு, கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்​.

இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி? – நேபாளத்தில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் பிரதிநிதியினரை, உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் செயலர் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.

4 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, சுசீலா கார்கியை, இடைக்கால பிரதமராக நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்ததாக பார் அசோசியேஷன் செயலர் தெரிவித்தார்.

எனவே, நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான சுசீலா கார்கி, நேபாளத்தின் இடைக்கால பிரதமராக விரைவில் நியமிக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசியல் பின்புலம் ஏதுமில்லாதவர், நடுநிலையாகவும் நம்பகத்தன்மையுடன் செயல்படக் கூடியவர் என்ற அடிப்படையில் அவரை ‘டிக்’ செய்ததாக ‘ஜென் ஸீ’ போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டக்காரர்களில் விருப்பப்படி, இடைக்கால பிரதமர் பொறுப்பை ஏற்க முன்வந்துள்ள சுசீலா கார்கி, நேபாளத்திலுள்ள பிராட் நகரில் 1952-ல் பிறந்தார்.

இவர் தனது முதுநிலை படிப்பை இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார்.

அதன் பின்னர் நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை படித்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2017 வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சுசீலா கார்கி, தேர்தல் விவகாரம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கியவர்.

நீதித் துறை மூலம் ஜனநாயகத்தைக் காப்பவர் என்று போற்றப்பட்டவர். இவருக்கு எதிராக நேபாள பாராளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம்

கொண்டுவரப்பட்டு, மக்களின் அழுத்தத்தால் அது கைவிடப்பட்ட வரலாறும் உண்டு.

மகிந்தா மகன் வழக்கை விசாரித்த நீதிபதி விலகல்
Posted in இலங்கை செய்திகள்

மகிந்தா மகன் வழக்கை விசாரித்த நீதிபதி விலகல்

மகிந்தா மகன் வழக்கை விசாரித்த நீதிபதி விலகல்

மகிந்தா மகன் வழக்கை விசாரித்த நீதிபதி விலகல் ,கிரிஷ் வழக்கு தொடர்பாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதில் இருந்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன விலகினார்.

இந்த விடயம் தற்போது இலங்கை அரசியலில் பெரு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

போட்டி இளஞ்செழியன் நீதிபதி
Posted in இலங்கை செய்திகள்

போட்டி இளஞ்செழியன் நீதிபதி

போட்டி இளஞ்செழியன் நீதிபதி

போட்டி இளஞ்செழியன் நீதிபதி ,பொதுவேட்பாளராக நீதிபதியாக இளஞ்செழியன் பொது வேட்பாளராக போட்டி இடவுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றாக கூடி பொது வேட்பாளர் ஒருவரை போட்டியிட அனுமதி வழங்கியுள்ளனர் .

அதனை அடுத்தே தற்போது நீதிபதி இளம்செழியன் போட்டியிட உள்ளார் என்கின்ற விடயம் வெளியாகியுள்ளன .

ஜனாதிபதி தேர்தல் மிக தீவிரம் அடைந்து வரும் நிலையில் ,தற்போது பொது வேட்பாளராக மக்கள் நேசிக்கும் நீதிபதி இளம்செழியன் போட்டியிடுவது மக்கள் ,மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

நீதிபதி இளஞ்செழியன்மீது துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

நீதிபதி இளஞ்செழியன்மீது துப்பாக்கிச்சூடு

நீதிபதி இளஞ்செழியன்மீது துப்பாக்கிச்சூடு

மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவரது மெய்ப்பாதுகாவலாரான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தார் .

மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த சம்பவம் தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் புதன்கிழமை (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்

இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்திற்கு வருகைதந்தார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனும் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரும் சாட்சியமளித்தனர்.

சட்டமா அதிபர் திணைக்களம்

குறித்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் விசேட அரச சட்டவாதி நாகரத்தினம் நிசாந்தும் எதிராளிகள் சார்பில் சட்டத்தரணி பிரதீபன் சர்மினியும் ஆஜராகினர்.

குறித்த வழக்கு விசாரணை தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது
Posted in இலங்கை செய்திகள்

லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது

பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது

பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது ,நீதிபதி இவ்விதம் லஞ்சம் பெற்றுள்ள சம்பவம் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .

கைது இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால், புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர், ரூ. 5,000 லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிபதி கைது

புத்தளம் வெத்தளை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரின் முறைப்பாட்டையடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பான விவாகரத்துச் சான்றிதழை வழங்குவதற்காக, குறித்த நீதிபதி ஒரு பெண்ணிடம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் பெருகி வரும் குற்றங்கள் மற்றும் மக்கள் முன்பாக நீதியை நிலை கட்டவேண்டிய நீதிபதியே வ்வாறு லஞ்சம் பெற்று கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

காவல்துறை மற்றும் அரச அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் அதிகமாக காணப்படுகின்றன .

அனால் தற்போது நீதிகளும் லஞ்சம் பெற்று கொள்கிறார்கள் என்ற விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இந்த செயல்பாடானது இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை அற்ற நிலையை ஏற்படுத்தி விட்டுள்ளது .

நீதிபதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி அதிர்ச்சியில் மனைவி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

நீதிபதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி அதிர்ச்சியில் மனைவி மரணம்

நீதிபதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி அதிர்ச்சியில் மனைவி மரணம்

நீதிபதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி செயலினால் அதனை கண்ணுற்ற மனைவி அதிர்ச்சியில் மரணமாகியுளளார் .

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நீதிபதி தனது மைத்துனர் வீட்டுக்கு பயணம் செய்துள்ளார் .

அங்கு சென்ற நீதிபத்தி தன்னுடன் தான் வளர்த்த வளர்ப்பு பூனையை அழைத்து சென்றுள்ளார் .

அந்த பூனையால் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக நீதிபதி பொலிஸ் அதிகாரிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .

இதனை அடுத்து நீதிபதியை பொலிஸ் அதிகாரி தாக்கியுள்ளார் .மேற்படி சம்பவம் போலீசாருக்கு தெரிய படுத்தியதை அடுத்து பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் .

நீதிபதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி அதிர்ச்சியில் மனைவி மரணம்

இவ்வேளை மனைவி தனக்கு நெஞ்சு வலிக்கிறது என கூறியுள்ளார் .போலீசாருக்கு நீதிபதி வாக்குமூலம் வழங்கி கொண்டிருந்த நிலையில் மனைவியை கவனிக்கவில்லை .

அவர் நெஞ்சு வழியால் துடித்து கொண்டிருக்க மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார் .ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் .

இந்த சம்பவத்தல் அதிர்ச்சி உற்ற அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது .

புதுவருடத்தை கொண்டாட சென்ற நீதிபதி பொலிஸ் அதிகாரி மேற்கொண்ட அருவருப்பான செயலினால் மனைவியை இழந்து தவிக்கின்றார் .

நீதிபதி மீது குற்றவாளி பாய்ந்து தாக்கியதால் பரபரப்பு
Posted in உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

நீதிபதி மீது குற்றவாளி பாய்ந்து தாக்கியதால் பரபரப்பு

நீதிபதி மீது குற்றவாளி பாய்ந்து தாக்கியதால் பரபரப்பு

தனக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதியை, அவரது மேஜை மீது பாய்ந்து குற்றவாளி ஒருவர் தாக்கிய சம்பவம், அமெரிக்காவின் லாஸ் வேகாஸின் மாகாண நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீதிமன்ற வளாகத்தில் உள்ள கேமராவில் பதிவான இந்த வன்முறைத் தாக்குதல் காட்சிகள் வெளியாகியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான க்ளார்க் கவுன்ட்ரி மாகாண நீதிபதி மேரி கே.ஹோல்தஸ் தனது இருக்கையில் இருந்து பின்னால் சுவரில் விழுந்ததில் சிறு காயம் அடைந்தார்.

எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு காயங்கள் இல்லை. ஆனால், நீதிபதியின் உதவிக்கு வந்த காவலாளிக்கும் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்தக் குற்றவாளி, நீதிபதியின் மேஜையின் பின்னால் சிறை அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுடன் சண்டையிடுவதும் வீடியோவில் பதிவாகியிருந்தது.

நீதிபதி மீது குற்றவாளி பாய்ந்து தாக்கியதால் பரபரப்பு

லாஸ் வேகாஸில் உள்ள மாகாண நீதிமன்றத்தில், அமெரிக்க நேரப்படி புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து நீதிமன்ற அலுவலர்களும், நேரில் பார்த்தவர்களும் கூறுகையில்,

“குற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், திடீரென பாதுகாப்பு மேஜை மீது பாய்ந்து நீதிபதியின் மேஜை மீதேறி, அவரைக் கடுமையாக தாக்கினார்” என்றனர்.

இந்தத் தாக்குதல் குறித்து, மாகாண தலைமை வழக்கறிஞர் ரிச்சர்ட் ஸ்கோவ் கூறுகையில், “என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்வதற்குள் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது” என்றார்.

இந்தச் சம்பவத்துக்கு காரணமான குற்றவாளி 30 வயதான டேபோரா டெலோன் ரெட்டன்.

அவர் பல குற்ற வழக்குகளுக்காகவும், நீதிபதி முதலானோரை தாக்கியது உள்ளிட்ட சில புதிய குற்ற வழக்குகளுக்காகவும் கிளார்க் கவுண்ட்ரி தடுப்பு மையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

முன்னதாக, நீதிமன்றத்துக்கு வந்து தனது வழக்கறிஞர் அல்மாஸுக்கு அருகில் நின்று கொண்டிருந்த ரெட்டன், தன்னைப் பற்றி நீதிபதி கேட்டபோது, “நல்லதை செய்வதற்காக எதையும் செய்யத் தயங்காத நபர்.

நான் கலகக்காரன் இல்லை. நான் சிறைக்குச் செல்ல வேண்டியவன் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால், நீங்கள் அதுதான் சரியென்று நினைத்தால் நீங்கள் விரும்பிதைச் செய்யலாம்” என்றார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி, ரெட்டனை சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன் என்றுக் கூறியதும், குற்றவாளியின் கையில் நீதிமன்ற காவலாளி கைவிலங்கிட நகர்ந்தார்.

அப்போது ரெட்டன் உடனடியாக நீதிபதியின் மேஜை மீது பாய்ந்து தாக்குதலில் ஈடுபட்டார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து ரெட்டனின் வழக்கறிஞர் அல்மாஸ் எந்த பதிலும் சொல்லவில்லை. இந்த நிலையில் நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் மேரி ஆன் பிரைஸ் கூறுகையில், “அனைத்து நடைமுறைகளையும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறேன்.

எங்கள் நீதிபதிகள், பொதுமக்கள் மற்றும் ஊழியர்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

வீடியோ

இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ் பெண்
Posted in இலங்கை செய்திகள்

இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ் பெண்

இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ் பெண்

இலங்கை நீதித்துறை வரலாற்றில் இள வயதில் நீதிபதியாக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பதவியேற்கின்றார்.

வவுனியாவைச் சேர்ந்த மதுஞ்சளா அமிர்தலிங்கம் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். இவர் எதிர்வரும் முதலாம் திகதி நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான இவர் தனது 33வது வயதில் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ் பெண்

இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ் பெண்

மதுஞ்சளா அமிர்தலிங்கம் நாடளாவிய நீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டி பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத் தேர்விலும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வவுனியாவில் இருந்து தெரிவான இளம் தமிழ் நீதிபதி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து 31 வயது மாதுரி நிரோசன் தெரிவாகியுள்ள நிலையில் வவுனியாவில் இருந்து 33 வயது மதுஞ்சளா அமிர்தலிங்கம் தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தமிழ் நீதிபதிகள் உருவாகுவது எட்டாக் கனியாகவே உள்ள நிலையில்,
இளவயதில் தெரிவாகிய இருவருக்கும் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.

video

முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல் பதவியை துறந்தார்
Posted in இலங்கை செய்திகள்

நீதிபதி விவகாரம் நாளை முடிவு நீபதிக்கு தீர்வு தேவை என முழக்கம்

நீதிபதி விவகாரம் நாளை முடிவு நீபதிக்கு தீர்வு தேவை என முழக்கம்

முல்லைத்தீவு மாவடட நீதிபதி சற்குணராஜாவுக்குஅச்சுறுத்தல் விடுக்க பட்டு நாட்டை விட்டு துரதியடிக்க பட்டார் .இதனை அடுத்து அவருக்கு தீர்வு தேவை என் கோரி தமிழ்கடச்சிகள் போராடடம் நடத்தின .

மேலும் யாழ்ப்பாணத்தை முடக்கி கத்தால் அனுஷ்ட்டிக்க தமிழ் தேசிய கட்சிகள் கூடி ஆராய்ந்துள்ளனர் .

முல்லைதீவிவு நீதிபதி விவகாரம் சர்வதேச ரீதியில் கவனம் பெற்றுள்ள நிலையில் ,அவை இலங்கை அரசுக்கு மிக பெரும் அவமானத்தை ஈட்டி கொடுத்துள்ளது .

இவ்வாரண நிலையில் தப்பு அவரே புரிந்தார் என்ற நிலையில் சர்வதேச போலீஸ் ஆதரவுடன் அவரை கைது செய்திடும் நடவடிக்கையில் இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .

முல்லைத்தீவு நீதிபதிக்கு ஆதரவாக யாழில் மனித சங்கிலி போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு நீதிபதிக்கு ஆதரவாக யாழில் மனித சங்கிலி போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதிக்கு ஆதரவாக யாழில் மனித சங்கிலி போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம், கொக்குவில் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

போராட்டம் முன்னெடுக்கப்படும் பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று (04) காலை 9 மணியளவில் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில்

நீளுகின்ற வகையில் சில இடங்களில் குறித்த மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு நீதிபதிக்கு ஆதரவாக யாழில் மனித சங்கிலி போராட்டம்

இதன் போது மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

குறித்த போராட்டத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக்

கழகம், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி , தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவளிப்பதுடன் பல பொது அமைப்புகளும் இணைந்துள்ளன.

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் உரிய நடவடிக்கையெடுக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்

முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் மிகவும் பாரதூரமான விடயமாகும் என்றும், இது நீதித்துறை சுதந்திரம் சார் பிரச்சினை என்றும், அவருக்கு கொலை மிரட்டல்களும், அழுத்தங்களும் வந்ததாக கூறப்பட்டுள்ளதாகவும்,

இது ஒரு பாரதூரமான அறிவிப்பு என்பதால், சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டு, இதன் பின்னனியில் உள்ள உண்மை குறித்து இந்த சபைக்கு

அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, அரசாங்கம் சகல பக்கங்களிலிருந்தும் மக்களின் பேச்சுச் சுதந்திரத்தை இல்லாதொழிக்கவும், ஜனநாயகத்தை இல்லாதொழிக்கவும்

தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (3) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில்,அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தால், சிறையில் அடைக்க வாய்ப்பு உள்ளதாகவும்,நிகழ் நிலை காப்பு சட்டத்தின்

ஊடாக இவ்வாறான தண்டனைகளை விதிக்கவும் வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்

அப்பிள், அமேசான், கூகுள், மொட்டா, எக்ஸ், புக்கிங்.காம் போன்றவற்றை உள்ளடக்கிய Asia Internet Coalition கடுமையான எதிர்ப்பை

வெளியிட்டுள்ளதாகவும், இவர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் வெளிநாட்டு முதலீடுகள் வீழ்ச்சியடையும் என்றும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நிகழ் நிலை காப்பு சட்டமூலத்தை கொண்டு வந்து இன்று என்ன நடந்துள்ளது என்று சிந்தித்து பார்க்குமாறும்,ஆசிய இன்டர்நெட் கூட்டமைப்பானது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும், இவற்றை விரட்டியடுத்து

விட்டால் சர்வதேச முதலீட்டை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும் என்றும், நிகழ் நிலையில் எவ்வித பாதுகாப்பும் இல்லை என்றும்,அரசாங்கத்தின்

பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் எடுக்கும் முயற்சியே இதுவாகும் என்றும்,இது

சர்வாதிகாரமான தவறானதோர் திட்டமாகும் என்பதனால் இதை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இண்டர்போல் உதவியுடன் நீதிபதியை கைது செய்ய நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இண்டர்போல் உதவியுடன் நீதிபதியை கைது செய்ய நடவடிக்கை

இண்டர்போல் உதவியுடன் நீதிபதியை கைது செய்ய நடவடிக்கை

இலங்கை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக விளங்கிய சரவணராஜா,
நாட்டை விட்டு தப்பி சென்றார் .இவ்வாறு சென்றவரை இண்டர்போல் பிடியாணை மூலம் ,கைது செய்ய நடவடிக்கை .மேற்கொள்ள படுகிறது .

நீதி வழங்கிய நீதிபதி ஒருவரை கேவல படுத்தும் முகமாக ,இலங்கை நீதித்துறையின் கருத்துக்கள் காணப்படுகின்றன .

குற்றாவளி போன்று சித்தரிக்க பட்டு ,நீதிக்கு புறம்பாக ,துரோகம் செய்தார் ,
என்ற வகையில் ,சிங்கள பெரும்பான்மை இனம் கருத்துக்களை பகிர்ந்து வருகிறது .

சமாதான நாயகனாக தன்னை காண்பித்து வந்த,
குள்ள நரி ரணில் தந்திரம் இப்பொழுது அம்பலமாகியுள்ளது .

ராஜபக்ஸ குடும்பத்தின் வாரிசாக மற்றம் பெற்றுள்ள ரணில் ,
தமிழர்களினால் துரத்தியடிக்க படவேண்டியவர் தான் என்பதை ,
நீதிபதியின் நாடு விட்டு வெளிறிய செயல் எடுத்து காட்டுகிறது .

இண்டர்போல் உதவியுடன் நீதிபதியை கைது செய்ய நடவடிக்கை

மக்கள் ஆதரவை பெற்றுக்கொள்ள ரணில் நடத்த போகும் நாடகங்கள் ,
வரும் நாட்களில் அரங்கேறும்

அவை வாக்கு அரசியலாக மாற்றுவதற்கு ரணில் முயல்வார் என்பதை ,
இப்பொழுதே அடித்து கூறலாம் .

தமிழ் நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் உள்ளதும் ,அவர்கள் எமது அடிமைகள் தான் என்பதை ,சிங்கள தேசம் சொல்லி கொள்கிறது என்பதே ,நீதிபதி சராவணராஜா ,உயிர் அச்சுறுத்தல் ,விரட்டியடிப்பு கற்பிக்கிறது எனலாம் .

வீடியோ

நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்

மாணவன் மீது கை வைத்த அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறை

மாணவன் மீது கை வைத்த அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறை

பதின்ம வயது மாணவனை பாரதூரமான பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பாடசாலை அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பளித்துள்ளார்.

“தனது கட்டுகாவலில் உள்ள மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது பாரதூரமான குற்றமாகும். தற்போது அதிகரித்து வரும் இத்தகைய செயற்பாடுகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படுவது அவசியம்.” என்று மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பில் கோடிட்டு காட்டினார்.

2014ஆம் ஆண்டு செப்டெம்பர் 23ஆம் திகதி மன்னார் பாடசாலையில் கற்ற 10 வயது மாணவன் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மாணவன் கல்வி கற்ற பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டார்.

மன்னார் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற சுருக்க முறையற்ற விசாரணைகளின் பின் சட்ட மா அதிபரினால் மன்னார் மேல் நீதிமன்றில் பாடசாலை அதிபருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹால் முன்னிலையில் விளக்கம் இடம்பெற்ற நிலையில் நேற்று (11) வழக்கு தீர்ப்புக்காக நியமிக்கப்பட்டது.

எதிரி மீதான குற்றச்சாட்டுக்கள் நிகழ்வு – நிபுணத்துவ சாட்சியங்கள் ஊடாக நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்குத் தொடுநரினால் நிரூபிக்கப்பட்டுள்ளதால் குற்றவாளி எனக் கண்டு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி, நீதிபதி தனது தீர்ப்பில்,

குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்படுகிறது, செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும். பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். வழங்கத் தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்” என்றும் மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வழக்குத் தொடுநர் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி செஸான் மஹ்பூம் வழக்கை நெறிப்படுத்தினார்.

Posted in Uncategorized

இந்திய பெண் அமெரிக்காவில் நீதிபதி ஆகிறார்

இந்திய பெண் அமெரிக்காவில் நீதிபதி ஆகிறார்

இந்தியப்பெண்ணை அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் மாவட்ட நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.

இந்திய பெண் அமெரிக்காவில் நீதிபதி ஆகிறார் – ஜோ பைடன் பரிந்துரை

அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், ககெனக்டிகட் மாவட்ட நீதிபதி பதவியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண், சரளா வித்யா நாகலா என்பவரை நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். இந்தப் பெண் சிவில் உரிமை வக்கீல் ஆவார்.

இந்த பரிந்துரையை செனட் சபை ஏற்று அங்கீகரித்தால், கனெக்டிகட் மாகாணத்தில், கனெக்டிகட் மாவட்ட நீதிபதி பதவியில் தெற்காசியாவை சேர்ந்த ஒருவர் அமர்வது இதுவே முதல் முறை ஆகும்.

செனட் சபையில் ஜனநாயக கட்சிக்கும், குடியரசு கட்சிக்கும் தலா 50 இடங்கள் இருக்கின்றன. ஆனால் பெரும்பான்மையை தீர்மானிக்க துணை ஜனாதிபதி, ஓட்டு போட முடியும். எனவே 51

வாக்குகளுடன் சரளா வித்யா நாகலாவின் நியமனம் செனட் சபையால் அங்கீகரிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோ பைடன்

சரளா வித்யா நாகலா, 2017 முதல் அதே கனெக்டிகட் மாகாணத்தில், கனெக்டிகட் மாவட்ட அட்டார்னியின் அலுவலகத்தில் குற்றப்பிரிவில் துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார். முதலில் இவர் 2012-ல் அமெரிக்க அட்டார்னி அலுவலகத்தில் சேர்ந்து, வெறுக்கத்தக்க குற்றங்கள் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

2010-12 காலகட்டத்தில் சான்பிரான்சிஸ்கோவில் முங்கர் டோல்ஸ் அண்ட் ஓல்சனில் பணியாற்றி உள்ளார்.

இவர் 2008-09 கால கட்டத்தில் 9-வது அப்பீல் கோர்ட்டு நீதிபதி சூசன் கிராபரின் சட்ட எழுத்தாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.