புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுபணி
Posted in இலங்கை செய்திகள்

புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுபணி

புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுபணி

புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுபணி ,விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அந்த அமைப்பின் பிற தலைவர்களால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு

ஆயுதங்களைத் தேடி அகழ்வு பணி

மந்துவில் பகுதியில் உள்ள நிலத்தடி பதுங்கு குழியில் ஆயுதங்களைத் தேடி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட உத்தரவின் பேரில், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவால் நேற்று (10) இந்த அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை முன்வைத்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த போரின் போது பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களால் சுமார் 20 அடி ஆழம் கொண்ட இந்த நிலத்தடி பதுங்கு குழியின் நுழைவாயில்கள் அழிக்கப்பட்டன.

2009ஆம் ஆண்டில், விடுதலை புலிகள் அமைப்பின் பிரதான முகாமாக இந்த இடம் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், முகாமின் அளவு இரண்டு ஏக்கருக்கும் அதிகமாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொது மக்களுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இந்த முகாம் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பிறகு, கண்ணி

வெடிகள் அகற்றப்பட்டு அசல் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், வெளியாட்கள் உள்ளே நுழைய முடியாதபடி பாதுகாப்புப் படையினர் நிலத்தடி பதுங்கு குழியை மண்ணால் மூடிவிட்டனர்.

அந்த நேரத்தில், விடுதலை புலிகள் அமைப்பால் பொதுமக்களிடமிருந்து பறிக்கப்பட்ட தங்கத்தை மறைத்து வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில்

பல்வேறு குழுக்களும் நிலத்தடி பதுங்கு குழியை தோண்ட முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசேட அதிரடிப் படையின் வெடிகுண்டு செயலிழப்புப் வழிகாட்டுதலின் கீழ் பெக்கோ இயந்திரங்களைப் பயன்படுத்தி அகழ்வு பணிகள்

முன்னெடுக்கப்படும் அதே நேரத்தில் தொல்பொருள் அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் பணிகளை கண்காணித்து வருகின்றனர்

புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது
Posted in இலங்கை செய்திகள்

புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது

புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது

புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது ,இலங்கை இரத்தினபுரம் பகுதியில் விடுதலைப் புலிகளின் தங்கப் புதையல்களை தேடி ஐவர் கைது .

தங்க புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஐவரை கைது செய்துள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

கிளிநொச்சி இரத்தினபுரம் அன்பு முகாம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதையல் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ளது .

ஐந்து பேர் கைது

அந்த தகவலை அடுத்து அதனை தோண்டி எடுப்பதற்காக ,அங்கு அகழ்வு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் போலீஸ் அதிகாரி ,ஆசிரியர் உள்ளிட்ட ஐவர் உள்ளடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு இலத்திரனியல் இயந்திரங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சமீப காலமாக தமிழிழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் ,அவர்களது தங்கம் பணம் மற்றும் இதர பொருட்களை மீட்பதற்காக இவ்வாறு புதையல் தோண்டும் நடவடிக்கையில் சிங்கள போலீஸ் அதிகாரிகள் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது .

விடுதலை புலிகள்

தமிழீழ விடுதலை புலிகள் அந்த தாய் மண்ணில் முற்றாக அழிக்கப்பட்டு, 14 வருடங்கள் கழிவுற்ற நிலையிலும் தமிழிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கம் பணம் என்பதுவற்றை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் சிங்கள பெரும்பான்மை வாதிகள் ஈடுபட்டு வருகின்றநர் .

இவ்வாறான தங்க புதையல் தேடும் செயல் தொடர்கிறது .

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பல தங்கங்கள் ,ஆயுதங்கள் என்பனவவற்றை மீட்ட மாற்று குழுக்களும் ,அவற்றை வைத்து கோடீஸ்வரராக இலங்கையில் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

புலிகளின் ஒத்த ஆடை அறுவரிடம் விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

புலிகளின் ஒத்த ஆடை அறுவரிடம் விசாரணை

புலிகளின் ஒத்த ஆடை அறுவரிடம் விசாரணை

மாவீரர் தின நிகழ்வில் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளின் ஆடைகளை ஒத்த ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து வந்தனர் எனும்

குற்றச்சாட்டில், கோப்பாய் பொலிஸார் ஆறு பேரிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக கடந்த திங்கட்கிழமை (27) நடைபெற மாவீரர் நாள் நிகழ்வின் போது, விடுதலைப்புலிகளின் போராளிகள்

புலிகளின் ஒத்த ஆடை அறுவரிடம் விசாரணை

போன்ற ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து இருந்தனர் என சில புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தன.

அவை தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , படங்களில் இனம் காணப்பட்ட சிறுவர்களின் பெற்றோரை

பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அவர்களின் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.

வாக்கு மூலங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுக்க உள்ளதாகவும் , எவரையும் இது வரையில் தாம் கைது செய்யவில்லை எனவும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

video

புலிகளின் சின்னத்துடன் வந்த இளைஞனுக்கு விளக்கமறியல்
Posted in இலங்கை செய்திகள்

புலிகளின் சின்னத்துடன் வந்த இளைஞனுக்கு விளக்கமறியல்

புலிகளின் சின்னத்துடன் வந்த இளைஞனுக்கு விளக்கமறியல்

மாவீரர் நாள் நினைவேந்தலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆகியோரது படங்கள்

பொறித்த ஆடை அணிந்து பங்கேற்ற இளைஞரை டிசம்பர் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புலிகளின் சின்னத்துடன் வந்த இளைஞனுக்கு விளக்கமறியல்

நாட்டில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் ஆகியோரது படங்கள் பொறித்த

ஆடை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்றார் என்ற

சந்தேகத்தின் அடிப்படையில் கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் நேற்று கொடிகாமம் பொலிஸாரால் கைது

செய்யப்பட்டு இன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் பயங்கரவாத தடுப்பு விதிகளின் கீழும் குறித்த இளைஞன் மீது பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

video

விடுதலைப் புலிகளின் உபகரணங்களை தேடும் நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

விடுதலைப் புலிகளின் உபகரணங்களை தேடும் நடவடிக்கை

விடுதலைப் புலிகளின் உபகரணங்களை தேடும் நடவடிக்கை

போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கை இன்று (23) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு கடந்த 19 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பொலிஸின் விசேட புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களை புதைத்து வைத்துள்ளதாக நம்பப்படும் இடத்தில்

விடுதலைப் புலிகளின் உபகரணங்களை தேடும் நடவடிக்கை

தோண்டுவதற்கு நீதிமன்றத்தில் கடந்த 19 ஆம் திகதி வழக்கு தொடரப்பட்டு நீதிபதியின் அனுமதியுடன் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் பொலிஸார், விஷேட அதிரடி

படையினர், இராணுவத்தினர், கிராம சேவையாளர், தொல்லியல் திணைக்களத்தினர், சுகாதார பிரிவினர், தடயவியல் பொலிஸார் ஆகியோரின் பிரசன்னத்துடன் இன்று (23) காலை 9 மணிக்கு குறித்த அகழ்வு பணி இடம்பெற்று வருகின்றது.

கனரக இயந்திரம் கொண்டு தோண்டப்பட்ட போது நிலத்திலிருந்து நீர் வருவதை அவதானிக்க முடிந்துள்ளது இருந்தும் தொடர்ச்சியாக குறித்த

இடத்தினை அகழ்வு பணி செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

மேலும் மற்றுமொரு கனரக இயந்திரம் கொண்டு தோண்டும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

குறித்த பகுதிக்கு அண்மையில் கடந்த பங்குனி மாதமளவில் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில்
எதுவும் மீட்கப்படாத நிலையில் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.