Tag: அரசியல்வாதி
மணல் மோசடியில் சிக்கிய அரசியல்வாதிகள்
மணல் மோசடியில் சிக்கிய அரசியல்வாதிகள்
மணல் மோசடியில் சிக்கிய அரசியல்வாதிகள் ,மணல் அகழ்வு மோசடி சம்பவத்தின் பின்னணியில் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் இருக்கின்றமை தெரியவந்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (21) எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
“சிலாபம் மணல் நிறுவனத்திற்குச் சொந்தமான பளை என்றப் பகுதியில், ஒதுக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு பாரிய மோசடி என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெறுகின்றன. சுமார் 400 மில்லியன் ரூபா ஊழல் பரிவர்த்தனை மற்றும் மோசடி நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது, இருப்பினும் இந்த மோசடிக்கு
இறுதியில் யார் பொறுப்பு என்று சொல்ல முடியாது, ஆனால் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் இதில் ஈடுபட்டுள்ளனர்.
பல ஒப்பந்ததாரர்கள் பற்றிய தகவல்களும் எமக்கு கிடைத்துள்ளன.
பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்துவர தடை
பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்துவர தடை
பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்துவர தடை ,பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாக நிறுத்துமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது முறையான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பணியிடங்களை வெளிப்படைத்தன்மையுடன் நிரப்ப வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் அனைத்து திணைக்கள அதிகாரிகளுடனும் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சையில் வினாக்கள் கசிவு தொடர்பான சர்ச்சைகள் குறித்து மதிப்பீடு செய்ய பேராசிரியர்கள் அடங்கிய நிபுணர் குழுவை நியமிக்குமாறும் ஹரிணி அமரசூரிய, கல்வி அமைச்சின் செயலாளர் திலக ஜயசுந்தரவிடம் நேற்று (26) பணிப்புரை விடுத்துள்ளார்.
சர்ச்சைக்குரிய மூன்று கேள்விகளை நீக்கிவிட்டு, மீதமுள்ள கேள்விகளுடன் அந்த மதிப்பெண்களைச் சேர்ப்பதா அல்லது வேறு ஏதாவது நடவடிக்கை எடுப்பதா என்பதை நிபுணர் குழுவின் பரிந்துரைகளின்படி முடிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மூன்று கேள்விகளை நீக்கிவிட்டு, மீதமுள்ள வினாக்களுடன் அந்த மதிப்பெண்களைச் சேர்க்கத் துறை முன்பு முடிவு செய்தது.
இதன்படி, சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் இடைக்கால அறிக்கை கிடைத்த பின்னர் மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்த நிபுணர் குழுவின் பரிந்துரைகள் முன்வைக்கப்படும் வரை தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அர்ச்சுனா நல்லவர் மன்னார் அரசியல்வாதி
அர்ச்சுனா நல்லவர் மன்னார் அரசியல்வாதி
அர்ச்சுனா நல்லவர் மன்னார் அரசியல்வாதி ,அதிரடி அறிவிப்பு ஒன்றை பாராளுமன்றில் தெரிவித்துள்ளார் .
ஆள் இல்லாத பாரளுமன்றில் அதிரடியாக பேசுவதாக வீரம் காட்டும் நம்ம வெள்ளை வேட்டிகள் கோவணத்தை கழற்றி ஏறிய வந்திருக்கும் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் கண்டு அஞ்சிய கூட்டமைப்பின் மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இப்படி புலம்பியுள்ளார் .
அர்ச்சுனாவை கடுமையாக விமர்சித்த ஐயா சாமி ,இப்பொழுது பாராளுமன்றில் இப்படி சடைந்துள்ளார் .
தமது பதவி பறிபோய் விடும் என்ற நிலையிலும் ,மன்னார் மக்கள் எழுச்சி கண்டு ,தற்போது கூட்டமைப்பு வெள்ளை வேட்டிகள் பீதியில் உறைந்துள்ளனர் .
தமிழ் தேசிய விடுதலையை பேசி மணல் ,கொள்ளை சாராய பார்களை திறந்து ,ஏப்பம் விட்டு வரும் இந்த் சல்ஸ நிர்மலநாதன் போன்ற அரசியல் கூலி வியாபாரிகள் இப்போது அலற ஆரம்பித்துள்ளனர் .
பாராளுமன்றில் பேசிய இவரது பேச்சுக்களில் அந்த குழப்பம் தெரிகிறது .
தமது இருப்பு தொலைந்து விடுமோ என்ற அந்த பயம் இருக்கனும் .இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகள் ,மற்றும் தமிழ் அரசியல்வாதிகளிற்கு வாக்கு இல்லா மக்கள் தோற்கடிக்கனும் .
எங்கள் அர்ச்சுனா வீரமானவன் , தீரமானவன் ,நேர்மையானவன் ,தமிழர்கள் அவர் பின்னால் ஒன்றாய் இணைந்து ,புதிய அரசியலை கட்டி அமைப்போம் .
இந்த வயோதிப அரசியல்வாதிகளை துர்த்தியடிப்போம் சபதம் எடு தமிழா .
இந்த சாள்ஸ் நிர்மலநாதனை போல எல்லோரையும் அலறவிடு .இது உங்கள் நேரம் எழுந்து வா தமிழா .
இந்த ஊழல் பெருச்சாளிகள் ஓடட்டும் ,சாட்டை எடுத்து சுழட்டு .
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

அரசியல்வாதிகள் மருத்துவர் அர்ச்சுனாவால் அலறல்
அரசியல்வாதிகள் மருத்துவர் அர்ச்சுனாவால் அலறல்
அரசியல்வாதிகள் மருத்துவர் அர்ச்சுனாவால் அலறல் ,சாவகச்சேரியில் முன்னாள் பொறுப்பதிகாரிய விளங்கிய அர்ச்சனா ராமநாதன் தற்பொழுது அரசியலுக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளார்.
மிக முக்கியமான கட்சி ஒன்றுக்கு தான் ஆதரவு அளிக்க உள்ளதாக நேற்று தெரிவித்திருந்தார் .
அதனை அடுத்து இவரது அரசியல் வருகையை அடுத்து தற்பொழுது தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையில் மிகப் பெரும் வீதி நிலவுகின்றது.
இவர் எந்த கட்சிக்கு தனது ஆதரவை வழங்குவார் என்கின்ற விடயம் தற்பொழுது பேசிப் பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.
தமிழ் தேசியவாதிகள் தாங்களே தவறுகளை மிகுந்தவர்களாக தெரிவித்து மக்களை ஏமாற்றி வந்த நிலையில் ,அர்ச்சனா ராமநாதன் அவர்கள் முன்னெடுத்த சில விடயங்கள் தற்பொழுது பேசுபொருளாக மாற்றப்பட்டது .
அடுத்து வடக்கு பகுதியில் உள்ள தமிழ் தேசியக் கட்சிகள் காணாமல் போகின்ற நிலை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகள் மருத்துவ மாபியாக்கள் உள்ளதான பரப்புரையில் இவர் ஈடுபட்டு வருகின்றார் ,
அந்த விடயம் தற்பொழுது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று அர்ச்சனாவை தமது தலைவராக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
உலகளாவிய ரீதியில் அர்ச்சுனா ராமநாதனுக்கு மக்கள் வழங்கி வரும் பெரும் ஆதரவு காரணமாக, தற்பொழுது வடக்கில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் தமது வெள்ளை வேட்டிகள் ,
அவிழ்த்து விழும் நிலை காணப்படுவதான புதிய தகவல்களும் மக்களது கருத்துக்களும் காணப்படுகின்றன.
அதனால் அர்ச்சனா ராமநாதன் இந்த வேளையில் கை காண்பிக்கும் காட்சி பலத்தை வெற்றியை பெற்று விடும் என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது .
இதனாலயே தமிழ் அரசியல் கடசிகளுக்கு இந்த பதட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.
புலிகளைப் புகழ்ந்த அரசியல்வாதி
புலிகளைப் புகழ்ந்த அரசியல்வாதி
புலிகளைப் புகழ்ந்த அரசியல்வாதி ,தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் அவர்கள் பாடசாலையை மூடுவதற்கு இடம் அளிக்கவில்லை என ,வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
மிகக் கொடிய யுத்த இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் புலிகள் பற்றி பாடசாலைகளுக்கு பதுங்கு குழிவெட்டி , மாணவர்களை அதுக்கு நிறுத்தி அப்படியே அவர்கள் கல்வி புகட்டி வந்தார்கள் .
ஆனால் அவர்கள் யுத்தத்தை காரணம் காட்டி பாடசாலைகளை ஒருபோதும் மூடவில்லை என மனுஷன் நாணயக்கார குற்றம் சுமத்தி இருந்தார்.
ஆளும் ரணில் அரசு
இன்று ஆளும் ரணில் அரசுக்கு எதிராக மாணவர் ஆசிரியர்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் , அதற்காக பத்தாயிரம் பாடசாலங்களை மூடுவதற்கு அவர்கள் தயாராகி வருகின்றனர்.
பாடசாலையை மூடி அதனால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற இவரது செயல்கள் கண்டிக்கப்பட வேண்டியது.
விடுதலைப் புலிகளை முன் உதாரணமாக இவர்கள் எடுத்து பார்க்க வேண்டும் என மனுஷன் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கல்வி கற்ற ஒரு சமூகமே நாட்டினை வழிநடத்த முடியும் என்கின்ற கொள்கை தத்துவ கோட்பாட்டில் இயங்கி வந்த விடுதலை புலிகள் அதனை நன்கறிந்த வகையிலாலேயே அவர்கள் ஆசிரியர்களை தெய்வமாக மதித்து பாடசாலைகளை மூடவிடாது நடத்தினார்கள் .
எனவும் அவர்கள் தலைசிறந்த நிர்வாக ஆட்சியையும் கட்டமைப்பையும் புலிகள் வழி நடத்தினார்கள் என இதன் ஊடாக மனுஷன் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னரும் என்றும் விடுதலை புலிகள் தலைசிறந்த அமைப்பும் நிர்வாக கட்டமைப்பை நடத்தினார்கள் என்பதை இப்பொழுது சிங்கள அரசியல்வாதிகள் உணர்ந்துள்ளனர் .
இப்படி பேசுகிறது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியை வரவேற்பையும் பெற்றுள்ளது.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

அரசியல்வாதிகளை வச்சு செய்த அர்ச்சுனா
அரசியல்வாதிகளை வச்சு செய்த அர்ச்சுனா
அரசியல்வாதிகளை வச்சு செய்த அர்ச்சுனா ,அரசியல்வாதிகளை நன்றாகவே வைத்து செய்துள்ளார் .
அர்ச்சனா இராமநாதன் என்கின்ற மருத்துவர் சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் அத்தியசாராக பதவியேற்று பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்திருந்தார் .
அதன் ஊடாக லஞ்ச ஊழல் மோசடி மருத்துவ மாபியாக்களை இனங்காட்டி வைத்தார் .
அதனை அடுத்து தற்பொழுது அவர் மேற்கொண்ட பல்வேறு பட்ட நடவடிக்கை காரணமாக ,மருத்துவமனைகள் பலர் தற்பொழுது பதறிக் கொண்டிருக்கின்றன .
இந்த வகையில் அரசியல்வாதிகளான சாணக்கியன் சுமந்திரன் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் தன்னோடு பேசியதாக அல்லது அது தொடர்பான சில விடயங்களை வெளியிட்டு இருக்கின்றார்.
நீங்கள் என்னுடன் பேசுவதற்கு முன்பாகவோ அல்லது என்னுடன் என் சம்பந்தபடியாக பார்ப்பதற்கு முன்னதாக, சாவகச்சேரி மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள நிலவரங்களை பார்வையிடுங்கள் ,
அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என சாட்டையடி வழங்கி உள்ளார் .
அது தவிர நான் இப்பொழுது கையை காட்டுகின்ற அந்த அரசியல்வாதிகளுக்கு மக்கள் வாக்கிடுவார்கள்.
அதனூடாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதை போன்று ஒரு கருத்தையும் வெளியிட்டு இருக்கின்றார் .
அதிரடியாக பல கருத்துக்களை துடிப்புடனும் அச்சம் இன்றி யார் வெளியிட்டு வருகின்றார் .
இவரது செயல் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது .எனது வீட்டுக்கு மின்சாரத்தை நீங்கள் தூண்டிக்கலாம் நீரினை தூண்டிக்கலாம்.
அனால் திலீபன் நீரினின்றி மின்சாரம் இன்றி வாழ்ந்தார் ,அதுபோல நான் வாழ்ந்து விட்டு போவேன் என அவர் துணிந்து சொல்லி இருக்கக் கூடிய இந்த விடயமே தற்பொழுது மக்கள் மத்தியில் கண்ணீரையும் அவர் மீதான மதிப்பையும் அதிகரித்துள்ளது .
மக்களுக்காக இருக்கின்ற ஒரே ஒருவன் நாங்கள் ஆயுதம் தூக்கவில்லை இனி அறவழியில் ஒன்றிணைந்து போராடி வெற்றியை பெற வேண்டுமென்று அகிம்சை தத்துவத்தை எடுத்து பேசியுள்ளார் .
ஆயுத வழியில் போராடிய பல நாடுகள் இறுதியில் சென்று தனது தேசிய உரிமையை பெற்றுக்கொண்ட வரலாறுகள் காணப்படுகின்றன.
அதனை புரிந்து கொள்ளாத மக்கள் இவர் பேசுகிறார் இந்த காலகட்டத்தில் எப்படி செயல்பட்டால் எதனை வெல்ல முடியும் என்கின்ற விடயத்தை முன் வைத்துள்ளார் .
இவ்வாறு நகருகின்ற அந்த விடயம் சரியானதே சுமந்திரன் ஈழம் பெற்று தருவதாக அல்லது தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தருவதாக பல ஆண்டுகளாக கூவித்ரிகின்றனர் .
சாணக்கியன் சுமந்திரன் விக்னேஸ்வரன் யார் என்பதையும் இதோ இப்பொழுது அம்பலப்படுத்தி இருக்கின்றார்.
வாழ்த்துக்கள் மருத்துவர் ஐயா அர்ச்சுனா .
வீடியோ பார்க்க இதில் அழுத்துங்கள்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

வீதிக்கு வந்த அனந்தி
வீதிக்கு வந்த அனந்தி
வீதிக்கு வந்த அனந்தி ,பொது வேட்பாளராக களமிறங்க தயார் ஆனந்தி தெரிவித்துள்ளார் .
இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகள் பொது வாக்காளர் ஒருவரை களமிறக்க தயாராகி வருகின்றனர் .
அந்த வழியில் இதுவரை அமைதியாக இருந்த அனந்தி அவர்கள் தற்பொழுது பொது வேட்பாளராக தான் வருவதற்கு தயார் என்று அறிவிப்பை கொடுத்திருக்கின்றார் .
ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலர் நாயகம் அனந்தி
ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலர் நாயகம் ஆனந்தி இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் .
வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த கருத்தினை அவர்தெரிவித்துள்ளார் .
2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் துணை பொறுப்பாளராக விளங்கிய எழிலன் மனைவியே ,ஆனந்தி அவர்கள் விளங்கி வருகின்றார் .
பொது வேட்பாளராக
அவரை இப்பொழுது பொது வேட்பாளராக தான் களமிறங்க உள்ளதாக தெரிவித்து இருக்கின்றார் .
மக்கள் மத்தியில் பொது சேவைகள் விடையத்தில் அதிக அக்கறை காட்டாத ஆனந்தி திடீரென இப்பொழுது வேட்பாளராகத் தான் வருவதற்கு தயார் என்ற இந்த விடயம் பேசுபொருளாகவே மாற்றப்பட்டிருக்கின்றது.
மக்களுடைய விடயங்கள் மற்றும் மக்களை நேரடியா சந்தித்து பேசுவதற்கு மறுத்தவர்கள் அரசியல் கட்சிகள் தேர்தல் வருகின்ற பொழுது மட்டும் கரையான் புத்துக்குள் இருந்து எழுந்து வந்தவர்கள் போல திடீரென தோண்டி கருத்துக்களை வெளியிடுவது வளமையாக காணப்படுகின்றது.
இலங்கையில் தமிழ் அரசியல் கட்சிகளும் சிங்கள அரசியல் கட்சியினரும் இவ்வாறான விடயத்தில் அவர்கள் ஊறிப்போனவர்கள் ஒரே மட்டையில் ஊறிய குட்டைகளாக காண படுகின்றனர் .
தேர்தல் வருகின்ற பொழுது வீதிக்கு வரும் இவர்களை நேரடியாக சென்று சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்காதது ஏன் என்ற கேள்வி எழுப்ப படுகிறது .
இதுவே பல்வேறுபட்ட சந்தேகங்களை எழுப்பி நிற்கிறது .
இதுவரை எங்கே இருந்தீர்கள் என்ற கேள்விக்கு ஆனந்தி என்ன பதில் சொல்லப் போகின்றார் .
பலமுறை நாங்கள் இவரை போட்டி காண அழைத்த பொழுதும் ,அவர் எமது அழைப்புக்கு வரவில்லை என்பதை ,இங்கே தெளிவாகவே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அரசியல்வாதிகளை வாயில் அடியுங்கள் ஆனந்தசங்கரி முழக்கம்
அரசியல்வாதிகளை வாயில் அடியுங்கள் ஆனந்தசங்கரி முழக்கம்
அரசியல்வாதிகளை வாயில் அடியுங்கள் ஆனந்தசங்கரி முழக்கம் பொது வேட்பாளரை யார் நிறுத்த சொல்கிறார்களோ அவர்கள் வாயில் அடியுங்கள் என ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார் .
தேர்தல் வந்தால் தெருவிறங்கும் அரசியல்
ஆனந்தசங்கரி ஐயா இலங்கையில் இருக்காரு என்பதை இப்பதான் தெரிய வந்திருக்கு .
தேர்தல் வந்தால் தெருவிறங்கும் அரசியல் கட்சிகளில் நானும் ஒருவர் என்பதை ஆனந்த சங்கரி ஐயாவும் எடுத்து விளக்கினார் .
ஐம்பது கோடியை யாருக்கோ கொடுத்து தேர்தலை சந்திக்க உள்ளார்கள் என ஆனந்த சங்கரி தனது வழமையான பாணியிலேயே விளாசி இருக்கார் .
முன்னொரு காலத்தில் ஆந்த சங்கரி வாரார் எனறால் இலங்கை அரசியல் ஆடியதுண்டு .ஆனால் இப்போ ஐயாவுக்கு வயதும் ஆகிடுச்சு என்பதை போல அரசியலும் தேய்ந்து நொந்து போயிருச்சு .
ஆனாலும் அவர் முயற்சி செய்கின்றார் .இந்த வயதிலும் இப்படி அரசியல் செய்வது செம மாஸ் .
வயதான அரசியல்
மேற்கு நாடுகளில் அரைசியல்வாதிகள் இப்படி வயதாகும் வரை தொடர்ந்து இருப்பதில்லை .
இலங்கை இந்தியாவில் மட்டும் தான் இப்படி உள்ளது ,அதுதான் அரசியல் இவ்வாறு கவலைக்கிடமாக உள்ளதை காண்பிக்கிறது .
ஆனந்த சங்கரி ஐயா வாயில சுண்ட போறார் ஓடி தப்புங்கோ குஞ்சுகளே .
வயதானலும் ஐயாக்கு தமாசு விட்டு போகல போங்க .
Featured
அரசியல்வாதிகளின் ஆதரவுடன் அழிக்கப்பட்ட 7 ஏக்கர் சிங்கராஜா வனப்பகுதி
அரசியல்வாதிகளின் ஆதரவுடன் அழிக்கப்பட்ட 7 ஏக்கர் சிங்கராஜா வனப்பகுதி
ஒரு பெரிய தொழிற்சாலையின் தலைவர் ஒரு ஹோட்டல் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிங்கராஜா வனப்பகுதியில் உள்ள கொங்கலா மலையின் அடிவாரத்தில் உள்ள மிகவும்
உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்பை ழிப்பதாகவும், இதற்கு அரசாங்கத்தின் சக்திவாய்ந்த இரண்டு அரசியல்வாதிகள்
ஆதரவளிக்கின்றனர் எனவும் நிலம் மற்றும் விவசாய சீர்திருத்த இயக்கத்தின் சுற்றுச்சூழல் ஆர்வலர் சஜீவ சாமிகர கூறுகிறார்.
கொலொன்ன பிரதேச செயலகத்திற்குட்பட்ட உள்ளிடுவ கிராம அதிகாரியின் எல்லைக்குட்பட்ட ஹெஸ்வத்த, கொங்கல பிரிவில் அமைந்துள்ள இந்த
பிரதேசத்தில்தான் கிங் கங்கையின் நீரோடைகள் ஆரம்பிக்கும் எனவும், இப்பிரதேசத்தில் அமைந்துள்ள புல்வெளி அமைப்பு மற்றும் ஈரநில அமைப்பு
அரசியல்வாதிகளின் ஆதரவுடன் அழிக்கப்பட்ட 7 ஏக்கர் சிங்கராஜா வனப்பகுதி
யானைகள் மற்றும் புலிகள் போன்ற விலங்கு இனங்களின் பிரதான வாழ்விடமாகும் எனவும் சஜீவ சாமிகர தெரிவித்துள்ளார்.
இந்த நிலம் நிலச் சீர்திருத்த ஆணையத்துக்குச் சொந்தமானது என்றும் அவர் கூறுகிறார்.
இந்த இடத்தில் ஐந்து ஏக்கர் புல்வெளிகளும், இரண்டு ஏக்கர் காடுகளும் அழிக்கப்பட்டுள்ளதாகவும், இது தவிர, இந்த தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்
ஆசிரியரை போட்டு தாக்கிய அரசியல்வாதி
ஆசிரியரை போட்டு தாக்கிய அரசியல்வாதி
பூனாகலை பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதேசசபை தவிசாளர் ஒருவர் உள்ளிட்ட
குழுவினரால் தாக்குதலுக்கு இலக்காகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சீரற்ற வானிலை காரணமாக, குறித்த பாடசாலை பாதிப்புக்குள்ளாகியிருந்த நிலையில், அதனை பார்வையிடுவதற்காக இலங்கை தொழிலாளர்
காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட தரப்பினர் அங்கு சென்றிருந்தனர்.
ஆசிரியரை போட்டு தாக்கிய அரசியல்வாதி
இதன்போது, பாடசாலை நிர்வாகத்திற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஹல்துமுல்ல பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட தரப்பினர் தம்மீது தாக்குதல் நடத்தியதாக, தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
எனினும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளதுடன்,
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை
ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல்வாதிகளிற்கு எதிராக மக்கள் போராட்டம்
தமிழ் அரசியல்வாதிகளையும் ‘கர்மா விடாது’ என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான போராட்டம், நேற்றையதினத்தோடு 1919 நாளை எட்டியுளளது.
இதனையொட்டி, நேற்று (23) இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்கள், வடக்கு- கிழக்கில் இராணுவத்தை அகற்றுமாறுஇ சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை விதித்ததால் , இலங்கை பொருளாதாரத்தின் 15 சதவீத செலவீனம் இதுவாகும்.
இது தமிழ் மக்களின் பிரதான கோரிக்கையாகும். இதனைத்தெடர்நது மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள் இந்த கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும்.
‘ஐ நா கூட்டத்தொடருக்கு முன்பு இலங்கைக்கு உதவிகள் வழங்கும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிடம் வலுவான கோரிக்கைகளை தமிழ் அரசியல்வாதிகள்,
சிவில்அமைப்புக்கள் முன்வைக்கவேண்டும். இல்லாவிடில், கர்மா அனைவரையும் பாதிக்கும்.
‘சிங்கள அரசியல் வாதிகள் பதவிக்கு வந்ததும் இனவாதிகளாக பேசுவார்கள். இதுதான்
74 வருட தமிழர்களின் வரலாறு. நல்லிணக்கம் மற்றும் தெற்கு அரசியல் பற்றிபேசும் தமிழ் அரசியல்வாதிகள் இனப் படுகொலைக்கான
நீதியை பெறமுடியாது’ என்றனர்.
மோடி கட்சி இலங்கை வந்தால் அடி விழும் – மனோ எச்சரிக்கை
இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் திரிபுராவின் பீஜேபி முதல்வர் பிப்லப் டெப் நேபாளத்திலும், இலங்கையிலும், பீஜேபி கிளைகள் உருவாக்குவோம் என்ற மாதிரி சொன்னாராம் என இங்கே சிலர்,
அடி விழும்
மிகப்பெரிய தேசபக்தர்களை போன்று வேடம் புனைந்து சும்மா கூச்சல் போட்டு குழப்பி கொள்கிறார்கள். நம் நாட்டின் உண்மை பிரச்சினைகளால் மக்கள் துவண்டு போய் இருப்பதை திசை திருப்ப
இது இன்று பயன்படுத்தப்படுகிறது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,
இது ஒரு சிறு நிகழ்வு. நம் நாட்டிலும் இந்தியாவை பற்றி, வேறு நாடுகளை பற்றி, அந்நாட்டு அரசுகளை பற்றி, இந்நாட்டு
அரசியல்வாதிகள் பேசுவதில்லையா? இதை மறந்து, சாதாரண பாமரருக்கும் தெரிந்த விடயம் பற்றி, அரசியல் சட்ட விற்பன்னர்கள்
, ஊடகங்களில் வந்து, ஏதோ பெரிய அரசியல் சட்ட வியாக்கியானம் வேறு கொடுக்கின்றார்கள். இவை என்ன என எங்களுக்கு தெரியாதா?
இந்திய பிரதமர் மோடி ஆசை
இந்திய பிரதமர் மோடியின் தலைமையில் இந்நாட்டில் கட்சி அமைக்க முடியாது. இந்திய பீஜேபியின் நேரடி கிளையை இங்கே அமைக்க சட்டத்தில் இடமில்லை.
ஆனால் இங்கே ஒரு கட்சியை வேண்டுமானால், சட்டப்படி “பாரதீய ஜனதா கட்சி” (பீஜேபி) என பதிவு செய்ய விண்ணபிக்கலாம்.
அல்லது உள்ள ஒரு கட்சியின் பெயரைக்கூட பீஜேபி என மாற்றிக்கொள்ளலாம். இதற்கு சட்டம், கட்டம் போட முடியுமா, என்ன?
இங்கே ஹெல உறுமய, ருஹுனு ஜனதா, தமிழ் முற்போக்கு, தமிழ் தேசிய, முஸ்லிம் காங்கிரஸ் என பல கட்சிகள் உள. இவை போன்று இதுவும் அவசியமானால் அமையலாம்.
உலகம் முழுக்க, இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல ஆசிய, ஆபிரிக்க, இலத்தின் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட்… என்ற பெயரில் கட்சிகள் இல்லையா?
பல நாடுகளில் கிறிஸ்தவ ஜனநாயக கட்சி…. என்றும், கிரீன் பார்ட்டி…. என்றும் கட்சிகள் இருக்கின்றன. அதேபோல், இஸ்லாமிய… என்ற பெயர் கொண்ட கட்சிகளும் உள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிறகு இலங்கையின் ஆர்சி ஆண்டகை பேராயர் ரஞ்சித் மெல்கம் அவர்கள் “இலங்கை
கிறிஸ்தவ ஜனநாயக கட்சி” என்று ஒரு கட்சி அமைக்க போகின்றாரோ என்ற கதை அடிப்பட்டது. அந்தளவுக்கு அவரது உரைகளில் அரசியல் இருந்தது.
இன்னமும் சில கட்சிகள் பெயரளவில் ஒரு அடிப்படையில் இல்லாவிட்டாலும் கூட, கொள்கை அடிப்படையில், உலகமட்ட
ஒருமைபாடுகளை கொண்டுள்ளன. நம்ம ஜேவீபீ, பல உலக புரட்சி இயக்கங்களுடன் ஒருமைபாடு கொண்டிருந்தது. இப்போது கூட
அவர்களது மாநாடுகளுக்கு வேறு நாடுகளின் பல கட்சி பிரதிநிதிகள் வருகிறார்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, சுதந்திர கட்சி மாநாடுகளுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் வருகின்றார்கள். நம்ம ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் நிகழ்வுகளில் இந்திய முஸ்லிம் லீக் பிரதிநிதிகளை கண்டுள்ளேன். ஆக இதெல்லாம், சின்ன, சின்ன அரசியல் நகர்வுகள்தான்…!
பிப்லப் டெப், ஒரு துடிப்பான இளம் பீஜேபி அரசியலர். எதிர்கால இந்தியாவின் ஒரு முன்னணி தலைவராக வரக்கூடியவர். இன்று
கொஞ்சம் அதிகமாக பேசி விட்டார், அவ்வளவுதான். இப்போ அவரை அழைத்து பிரதமர் மோடி விளக்கம் கேட்டுள்ளார்.
இதை பிடித்துக்கொண்டு இங்கே சிலர் பெரிய யோக்கியர்கள், உலக மகா உத்தமர்கள் போன்று பெரிய கட்டு கட்டுகிறார்கள். இவர்களை பற்றி எனக்கு தெரியாதா ?
போர்த்துகீசியர், ஒல்லாந்தரால் கைப்பற்ற முடியாமல் போன கண்டி ராஜ்யத்தை, ஆங்கிலேயர் எப்படி கைப்பற்றினார்கள்? கண்டியின் கடைசி வீர தமிழ் மன்னன் கண்ணுசாமி நாயக்கர் என்ற
ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனை காட்டிக்கொடுத்து, போட்டுக்கொடுத்து தேசத்துரோகம் செய்த, பிலிமத்தலாவை, எகலபொல நிலமே ஆகியோர் யார் என்பதை தேடி பார்த்தாலே விடை கிடைக்கும்.
மேடையில் ஏறி தேசப்பற்றும், தமிழ், முஸ்லிம் இலங்கையருக்கு எதிராக இனவாதமும் பேசிவிட்டு, கீழே இறங்கி வந்து இரகசியமாக
சீனாவுக்கோ, வெளிநாடுகளுக்கோ நாட்டை விற்று பிழைப்பு நடத்தும் பிலிமத்தலாவை, எகலபொல போன்ற நபர்கள் இந்நாட்டில் இன்றும் இருக்கிறார்கள்.
இதை மனதில் கொண்டு நாம் இலங்கையர்களாக உள்நாட்டில் ஒற்றுமையாக இருந்தால், எவரும் எம்மை ஆக்கிரமிக்க முடியாது, இல்லாவிட்டால் அதோகதிதான் என்பதை உணர்வோம்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் திரிபுராவின் பீஜேபி முதல்வர் பிப்லப் டெப் நேபாளத்திலும், இலங்கையிலும், பீஜேபி கிளைகள் உருவாக்குவோம் என்ற மாதிரி சொன்னாராம் என இங்கே சிலர்,
மிகப்பெரிய தேசபக்தர்களை போன்று வேடம் புனைந்து சும்மா கூச்சல் போட்டு குழப்பி கொள்கிறார்கள். நம் நாட்டின் உண்மை பிரச்சினைகளால் மக்கள் துவண்டு போய் இருப்பதை திசை திருப்ப இது இன்று பயன்படுத்தப்படுகிறது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,
இது ஒரு சிறு நிகழ்வு. நம் நாட்டிலும் இந்தியாவை பற்றி, வேறு நாடுகளை பற்றி, அந்நாட்டு அரசுகளை பற்றி, இந்நாட்டு அரசியல்வாதிகள் பேசுவதில்லையா? இதை மறந்து, சாதாரண
பாமரருக்கும் தெரிந்த விடயம் பற்றி, அரசியல் சட்ட விற்பன்னர்கள், ஊடகங்களில் வந்து, ஏதோ பெரிய அரசியல் சட்ட வியாக்கியானம்
வேறு கொடுக்கின்றார்கள். இவை என்ன என எங்களுக்கு தெரியாதா?
இந்திய பிரதமர் மோடியின் தலைமையில் இந்நாட்டில் கட்சி அமைக்க முடியாது. இந்திய பீஜேபியின் நேரடி கிளையை இங்கே அமைக்க சட்டத்தில் இடமில்லை.
ஆனால் இங்கே ஒரு கட்சியை வேண்டுமானால், சட்டப்படி “பாரதீய ஜனதா கட்சி” (பீஜேபி) என பதிவு செய்ய விண்ணபிக்கலாம்.
அல்லது உள்ள ஒரு கட்சியின் பெயரைக்கூட பீஜேபி என மாற்றிக்கொள்ளலாம். இதற்கு சட்டம், கட்டம் போட முடியுமா, என்ன?
இங்கே ஹெல உறுமய, ருஹுனு ஜனதா, தமிழ் முற்போக்கு, தமிழ் தேசிய, முஸ்லிம் காங்கிரஸ் என பல கட்சிகள் உள. இவை போன்று இதுவும் அவசியமானால் அமையலாம்.
உலகம் முழுக்க, இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல ஆசிய, ஆபிரிக்க, இலத்தின் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட்… என்ற பெயரில் கட்சிகள் இல்லையா?
பல நாடுகளில் கிறிஸ்தவ ஜனநாயக கட்சி…. என்றும், கிரீன் பார்ட்டி…. என்றும் கட்சிகள் இருக்கின்றன. அதேபோல், இஸ்லாமிய… என்ற பெயர் கொண்ட கட்சிகளும் உள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிறகு இலங்கையின் ஆர்சி ஆண்டகை பேராயர் ரஞ்சித் மெல்கம் அவர்கள் “இலங்கை
கிறிஸ்தவ ஜனநாயக கட்சி” என்று ஒரு கட்சி அமைக்க போகின்றாரோ என்ற கதை அடிப்பட்டது. அந்தளவுக்கு அவரது உரைகளில் அரசியல் இருந்தது.
இன்னமும் சில கட்சிகள் பெயரளவில் ஒரு அடிப்படையில் இல்லாவிட்டாலும் கூட, கொள்கை அடிப்படையில், உலகமட்ட
ஒருமைபாடுகளை கொண்டுள்ளன. நம்ம ஜேவீபீ, பல உலக புரட்சி இயக்கங்களுடன் ஒருமைபாடு கொண்டிருந்தது. இப்போது கூட
அவர்களது மாநாடுகளுக்கு வேறு நாடுகளின் பல கட்சி பிரதிநிதிகள் வருகிறார்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, சுதந்திர கட்சி மாநாடுகளுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் வருகின்றார்கள். நம்ம ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் நிகழ்வுகளில் இந்திய முஸ்லிம் லீக் பிரதிநிதிகளை கண்டுள்ளேன். ஆக இதெல்லாம், சின்ன, சின்ன அரசியல் நகர்வுகள்தான்…!
பிப்லப் டெப், ஒரு துடிப்பான இளம் பீஜேபி அரசியலர். எதிர்கால இந்தியாவின் ஒரு முன்னணி தலைவராக வரக்கூடியவர். இன்று
கொஞ்சம் அதிகமாக பேசி விட்டார், அவ்வளவுதான். இப்போ அவரை அழைத்து பிரதமர் மோடி விளக்கம் கேட்டுள்ளார்.
இதை பிடித்துக்கொண்டு இங்கே சிலர் பெரிய யோக்கியர்கள், உலக மகா உத்தமர்கள் போன்று பெரிய கட்டு கட்டுகிறார்கள். இவர்களை பற்றி எனக்கு தெரியாதா ?
போர்த்துகீசியர், ஒல்லாந்தரால் கைப்பற்ற முடியாமல் போன கண்டி ராஜ்யத்தை, ஆங்கிலேயர் எப்படி கைப்பற்றினார்கள்?
கண்டியின் கடைசி வீர தமிழ் மன்னன் கண்ணுசாமி நாயக்கர் என்ற ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனை காட்டிக்கொடுத்து, போட்டுக்கொடுத்து
தேசத்துரோகம் செய்த, பிலிமத்தலாவை, எகலபொல நிலமே ஆகியோர் யார் என்பதை தேடி பார்த்தாலே விடை கிடைக்கும்.
மேடையில் ஏறி தேசப்பற்றும், தமிழ், முஸ்லிம் இலங்கையருக்கு எதிராக இனவாதமும் பேசிவிட்டு, கீழே இறங்கி வந்து இரகசியமாக
சீனாவுக்கோ, வெளிநாடுகளுக்கோ நாட்டை விற்று பிழைப்பு நடத்தும் பிலிமத்தலாவை, எகலபொல போன்ற நபர்கள் இந்நாட்டில் இன்றும் இருக்கிறார்கள்.
இதை மனதில் கொண்டு நாம் இலங்கையர்களாக உள்நாட்டில் ஒற்றுமையாக இருந்தால், எவரும் எம்மை ஆக்கிரமிக்க முடியாது, இல்லாவிட்டால் அதோகதிதான் என்பதை உணர்வோம்.
மிரட்டி அடக்க நினைக்கும் கோட்டா – அடங்க அடம் பிடிக்கும் தமிழர் அமைச்சர்
மிரட்டி அடக்க நினைக்கும் கோட்டா – அடங்க அடம் பிடிக்கும் தமிழர் அமைச்சர் – ஐந்தாண்டு ஆட்சிக்கு பின்னர் கோட்டாவுக்கு சிறை
இலங்கையில் இடம்பெற்ற இறுதி போரின் பின்னர் பொத்துவில் முதல் பொலி கண்டி வரையிலான போராட்டத்தில் கலந்து
கொண்டவர்கள் மீது சிங்கள அரச பயங்கரவாத காவல்துறை விசாரணைகளை அடுக்கி விட்டுள்ளது
ஆளும் கோட்டாவை மகிழ்விக்க தனது இரும்புக்கரம் கொண்ட அடக்குமுறையை சிங்கள அரச பயங்கரவாத அடிச்சி பீடம் கட்டவிழ்த்து விட்டுள்ளது
இவ்வேளை முன்னாள் அமைச்சர் மனோகணேசனிடமும் விசாரணைகளை மேக்கொள்ள உள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்
யாழில் மூன்று தீவுகளை வாங்கிய சீனா
அவரை செருப்பால அடிக்கணும் சீமான்
வீட்டுக்கு வந்து வாக்குமூலத்தை வாங்கி செல்லுங்கள் என மனோ அதிரடியாக தெரிவித்துள்ளார் ,
இது கோட்டா அரசின் மிரட்டல் நடவடிக்கை போக்கில் ஒன்று என்பதை நோக்கிட முடிகிறது
தமிழர் பகுதிகளில் புதிய இராணுவ சோதனை சாவடிகள் – தாக்கிட முயற்சி – சிறிதரன்
தமிழர் பகுதிகளில் புதிய இராணுவ சோதனை சாவடிகள் – தாக்கிட முயற்சி – சிறிதரன்
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள பேரினவாத அரசு
வீதிகளில் இராணுவ காவலரண்கள் அமைத்து இராணுவம் குவிக்க பட்டுள்ளது
போர் வெறியுடன் தமிழர்களை அடக்கியாளும் நிலையில் சிங்கள பவுத்த
இனவெறி இராணுவம் வீதியில் குவிக்க பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கவுரவ ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்
போர் குணங்களுடன் ,போர்கால பகுதியில் எவ்விதம் நாட மாடினார்களோ
அதே போன்ற செயலுடன் இராணுவம் வீதிகளில் இறக்கிவிட பட்டுள்ளது ,
அனைவரும் புது முகங்கள் ,எனவும் தமது வாகனங்களை சோதனை செய்திட
இராணுவத்தினர் தம்மை தாக்காத குறையாக அவர்கள் பார்வை மற்றும் உடல் அசைவுகள் இருந்ததாக தெரிவித்துள்ளார்
மக்களினால் தெரிவு செய்ய பட்ட ஒரு பாரளுமன்ற உறுப்பினருக்கே இவ்வாறான
நிலை என்றால் சாதாரண மக்களுக்கு எவ்விதம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள முடியும் ,இது தான் இன்றைய இலங்கை
மலையகத்தில் கொரனோவால் எவரும் பாதிக்க படவில்லை – முழங்கிய அரசியல்வாதி
பெருந்தோட்டப் பகுதிகளில் கொரோனா நோயாளி எவரும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. எனவே சுகாதார அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி அவர்களுக்கு
ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் ‘கொரோனா’ பிரச்சினையிலிருந்து விடுபடலாம் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
‘கொரோனா’ வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் முன்னேற்பாடு நடவடிக்கையாக நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவ, பத்தனை, நுவரெலியா ஆகிய
பகுதிகளில் மூன்று தனிமைப்படுத்தல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், சிகிச்சைகளுக்காக மஸ்கெலியா வைத்தியசாலையும் தயார் நிலையிலேயே இருக்கின்றது.
இந்நிலையில் ‘கொரோனா’ வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் நோயாளியொருவர் அடையாளம் காணப்படும் பட்சத்தில் செயற்பட வேண்டிய விதம் குறித்து நோய் காவுவண்டி சாரதிகள்,
தோட்ட நலன்புரி அதிகாரிகளுக்கு விழிப்புணர்வும், விளக்கமும் வழங்கும் நிகழ்வு அமைச்சர் தொண்டமான் தலைமையில் இன்று (10.05.2020) நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்றது.
பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார பரிசோதகர்களால் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் தொண்டமான் மேலும் கூறுகையில்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்து மக்களை பாதுகாப்பதற்காக சுகாதார அதிகாரிகள் இரவு, பகல் பாராது சேவையாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
பெருந்தோட்டத்துறையில் இன்றும் எந்தவொரு நபரும் வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் அடையாளம் காணப்படவில்லை.
ஏற்கனவே 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலையகத்துக்கு வந்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் மேலும் ஆயிரத்து 500 பேர் வரை வரவுள்ளனர்.
அரசாங்கத்தின் ஏற்பாட்டுக்கமையவே இவர்கள் வருகின்றனர். குறித்த ஆயிரத்து 500 பேரும் ஏற்கனவே 14 நாட்களுக்கு மேலாக
கொழும்பில் தனிமையில் இருந்த நிலையிலேயே வருகின்றனர். ஆகவே எமக்கு எந்த பாதிப்பும் ஏற்பாடாது என நம்புகின்றேன்.
தோட்டங்களைப் பொறுத்தவரையில் சுகாதார அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு தோட்டமாக செல்வது கடினம். எனவே தான் அவர்கள் உங்கள் உதவியை நாடியுள்ளனர்.
அவர்கள் வழங்கும் ஆலோசனையின்படி செயற்பட்டால் நாம் மக்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.
இப்பணியை முன்னெடுக்க பயப்படதேவையில்லை. அதற்கு என்னென்ன வசதிகள் தேவையோ, அவை அனைத்தையும் நாம் செய்துகொடுப்போம்.
தோட்ட மக்களை பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக நிற்கின்றது. எதிர்வரும் 12 ஆம் திகதி சுகாதார அமைச்சர் இங்கு வருகிறார். சுகாதார அதிகாரிகளால் வழங்கப்படும்
ஆலோசனைகளை, அறிவுறுத்தல்களை உரியவகையில் பின்பற்றினாலேயே எம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
எனவே, தயவு செய்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். தேவையான அனைத்து வசதிகளையும் எனது அமைச்சு மூலம் வழங்குவேன் என்று அமைச்சர் தெரிவித்தார்.
தமிழரை நீயே கொன்றாய் – பாராளுமன்றில் முழங்கிய சிறி mp video
இறுதி போரில் புலிகள்,தமிழர்களை நீயே கொன்றாய் என ஆளும் கோட்டபாய மீது அவர் ஆளும் பாரளுமன்றில் தமிழர்களினால் நியமிக்க பட்ட சிறிதரன் முழங்கியுள்ளார் .
கோட்டா அரசில் நீதான் அவரை கொன்றாய் என சிறிதரன் முழங்கியுள்ளது அவரது துணிச்சலை காண்பிக்கிறது ,இவ்வாறு சம்பந்தன்,சுமந்திரனால் பேச முடியாது போனது வெட்க கேடு
சிறிதரன் கேள்விக்கு இனவெறி ,இரத்த காட்டேறி கோத்தபாயாவின் பதில் என்ன ..?
இதே கோ ட்டாவினால் தான் சிறிதரன் மீது இரு கொலை வெறி தாக்குதல் மேற்கொள்ள பட்டது என்பது குறிப்பிட தக்கது
அந்த வீரம் செறிந்த பதிவை இங்கே காண்க






























