Tag: மரணம்
மண்சரிவில் சிக்கி மூவர் மரணம் பலரை காணவில்லை
மண்சரிவில் சிக்கி மூவர் மரணம் பலரை காணவில்லை
இலங்கை மலையகம் நோட்டன்-பிரிட்ஜ் டெப்லோ பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இதுவரை மூவர் பலியாகியுள்ளனர்.
மேலும் சிலரை காணவில்லை என தெரிவிக்க படுகிறது .
காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
மழை அதனால் ஏற்பட்ட மண்சரிவு வெள்ளத்தில் சிக்கிய இந்தஅனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்ப்புக்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது.
அமெரிக்காவில் கோர விபத்து 7 பேர் உடல் சிதறி மரணம்
அமெரிக்காவில் கோர விபத்து 7 பேர் உடல் சிதறி மரணம்
அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர்
கார் மாற்றும் வான் என்பன நேரெதிர் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .
இரண்டு வாகனங்களும் மோதிய வேளையில் கார் வெடித்து தீ பற்றி கொண்டது .
ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட ஏழுபேர் பலியாகியுள்ளனர்.
சிறுவரக்ளை ஏற்றிய வண்ணம் காரை ஓட்டி சென்ற பெண் தவறான வழியூடாக காரினை செலுத்தி சென்ற நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஏன் இவ்வாறு தவறான வழியின் ஊடாக சிறுவர்களுடன் காரினை செலுத்தி சென்றார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
காயமடைந்த இருவர் உலங்குவானூர்தி மூலம் மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
அமெரிக்காவில் இடம்பெற்ற இந்த கோர விபத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
ரயிலுடன் மோதி இராணுவ சிப்பாய் மரணம்
ரயிலுடன் மோதி இராணுவ சிப்பாய் மரணம்
இலங்கை,கொழும்பு ,. வீரவில விமானப்படை தளத்தில் பணியாற்றும் விமான படையை சேர்ந்த இராணுவ சிப்பாய் ரயிலுடன் மோதி பலியாகியுள்ளார் .
இவர்கள் பயணித்த வான் ரயிலுடன் மோதியதில் சிப்பாய் ஒருவர் சம்பவ இடத்தில பலியானார் .மேலும் ஒருவர் படுக்கையாமடைந்துள்ளார் .
காயமடைந்தவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்.
.பாதுகாப்பற்ற ரயில்வே கடவையை கடக்கும் பொழுதே ரயிலுடன் வான் மோதி இந்த விபத்து சம்பவம் இடமேற்றுள்ளது என தெரிவிக்க படுகிறது .
துப்பாக்கி சூடு ஏழு பேர் மரணம்
துப்பாக்கி சூடு ஏழு பேர் மரணம்
இலங்கை ,கொழும்பு ;நாடளாவிய ரீதியில் கடந்த 27ஆம் திகதி முதல் இன்று (31) வரை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை மற்றும் ரத்கம பகுதிகளில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டாஞ்சேனை விவேகானந்தா வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், சனிக்கிழமை (30) இரவு நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 51 வயதான நபரொருவர் பலியாகினார்.
காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்கம, கம்மத்தேகொட பிரதேசத்தில் இன்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், இருவர் காயமடைந்தனர்.
துப்பாக்கி சூடு ஏழு பேர் மரணம்
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ரி-56 துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்ற நிலையில், படுகாயமடைந்து வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ரத்கம, தெவெனிகொட பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர்கள் 47 மற்றும் 29 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கம்பஹா, அம்பலாங்கொடை மற்றும் ரத்மலானை ஆகிய பகுதிகளில் கடந்த 27 மற்றும் 28ஆம் திகதிகளில் நடத்தப்பட வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஐவர் உயிரிழந்திருந்தனர்.
கம்பஹா நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக 27ஆம் திகதி மதியம் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த பாதாள உலகக்
குழு உறுப்பினரான ‘பஸ் பொட்டா’ என்று அழைக்கப்படும் சமன் ரோஹித்த, அன்று மாலையும் இன்னொருவர் இரண்டு தினங்களிலும் மரணமடைந்திருந்தார்.
அம்பலாங்கொடை கலகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில், 27ஆம் திகதி மாலை நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் பலியாகினர்.
இந்நிலையில், இரத்மலானை, சில்வா மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் 28ஆம் திகதி அதிகாலை நுழைந்த இருவர் நடத்திய
துப்பாக்கிப் பிரயோகத்தில்
30 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அமெரிக்கா வெள்ளத்தில் 25 பேர் மரணம்
அமெரிக்கா வெள்ளத்தில் 25 பேர் மரணம்
அமெரிக்கா கென்டிக்கி பகுதியி ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை இருபத்தி ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.
வெள்ள நீர் தொடர்ந்து வடியா நிலையில் காணப்படுவதால் மக்கள் வீடுகளில் இருந்து அகற்ற பட்டுள்ளனர்.
நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.மின்சாரம் முற்றாக துண்டிக்க பட்டுள்ளது .
வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

குறித்த பகுதி எங்கும் அவசரகால பிரகடன படுத்த பட்டு உதவி சேவைகள் வழங்க பட்ட வண்ணம் உள்ளது.
மின்சாரம் தொலைத் தொடர்புகள் என்பன துண்டிக்க பட்டுள்ளன .
அமெரிக்காவில் இடம்பெற்ற இந்த வெள்ள பெருக்கில் உயிர் இழப்புக்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
அமெரிக்கா அதிபர் பாதிக்க பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குபடி பணித்துள்ளார்.
மக்களை மிரட்ட கொரனோ மரணங்களை அதிகரிக்கும் இலங்கை
மக்களை மிரட்ட கொரனோ மரணங்களை அதிகரிக்கும் இலங்கை
இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் மக்களை மிரட்ட தற்போது கொரனோ நோயினது மரண எண்ணிக்கையை சுகாதார அமைச்சு அதிகரித்து கூறி வருகிறது.
மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து செல்லும் நிலையில் இந்த நோயின் தாக்குதல் அதிகம் என தெரிவிக்கிறது .
மக்களை வீடுகளுக்குள் முடக்கும் நகர்வில் ரணில் விக்கிரமசிங்க தந்திர நகர்வை மேற்கொண்டு வருகிறார் .
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்ட பொழுதும் அதற்கு அடங்காத மக்கள் வெள்ளம் போல மீளவும் எழுந்து போரடி வரும் நிலையில் இந்த கொரனோ அறிவிப்பை ரணில் அரசு பிறப்பித்துள்ளது.
முக கவசம் கட்டாயம் என அறிவித்த அரசு தற்போது மக்கள் கொரனோ மரணங்களை திடீர் என அதிகரித்து கூறி வருவதன் பின்புலத்தில் ரணிலின் நரி மூளை செயல்பாடு அப்பட்டமாக தெரிகிறது என்கிறது மக்கள் சமுகம்.
ஆற்றில் வீழ்ந்த பேரூந்து 30 பேர் மரணம்
ஆற்றில் வீழ்ந்த பேரூந்து 30 பேர் மரணம்
கென்யா ; கென்யா நிதி ஆற்றின் மேலாக பாலத்தில் பயணித்து கொண்டிருந்த ஆடம்பர பயணிகள் பேரூந்து ஆற்றின் பள்ளத்தாக்கில் வீழ்ந்தது சிதறியதில் சுமாரா 30 பேர் மரணமாகியுள்ளனர்.
இந்த பேருந்து நிதி ஆற்றின் மேலால் உள்ள பாலத்தில் வேகமாக பயணித்த பொழுதே இந்த விபத்து சமபவித்துள்ளது.
ஆற்றின் பள்ளதாக்கில் வீழ்ந்து நொறுங்கிய பேரூந்தில் பயணித்தஅணைத்து பயணிகளும் மரணித்த துயரம் இடம்பெற்றுள்ளது.
சாரதியின் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் சடலங்களை மீட்டு மருத்துவ மனையில் வைத்துள்ளனர் .
கென்யாவில் ஆற்றின் பள்ளதாக்கில் வீழ்ந்து சிதறிய பேரூந்து செய்திகள் உலக ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக இடம்பிடித்துள்ளன .
இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் சிதறிய சிரியா இராணுவ முகாம்
இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் சிதறிய சிரியா இராணுவ முகாம்
இஸ்ரேல் இராணுவத்தினர் சிரியா தலைநகர் டமக்காஸ் பகுதியில் உள்ள சிரியா இராணுவத்தின் முக்கிய முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர் .
இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிரியா இராணுவத்தின் முக்கிய முகாம் சிதறடிக்க பட்டது .
ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்த பகுதியில் நிலை கொண்டிருந்த சிரியா இராணுவத்தினர் மூவர் பலியாகியும் ஏழுபேர் காயமடைந்துள்ளனர் என சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது .
எனினும் சிரியா இராணுவம் கூறுவதை விட சிரியா இராணுவத்தினருக்கு இழப்புக்கள் அதிகம் என நம்ப படுகிறது.
சிரியா இராணுவத்தினரை இலக்கு வைத்து தொடர்ந்து இஸ்ரேல் இராணுவம் வலிந்து தாக்குதல் நடத்தி வருகிறது .
இவ்வாறு வலிந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரல்
இராணுவம் மீது சிரியா இராணுவம் தாக்குதல் நடத்துவதில்லை என்பது குறிப்பிட தக்கது.
எனினும் இதுவரை இந்த சிரியா இராணுவ முகாமில் ஏற்பட்ட சேத விபரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை .
துருக்கி இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்
துருக்கி இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்
துருக்கி இராணுவத்தின் அதிமுக்கிய விமான தளம் அடங்கிய இராணுவ முகாமாக விளங்கி வரும் Zelikan இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ரொக்கட் தாக்குதலில் சிக்கி துருக்கிய இராணுவ முகாம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .
குறித்த துருக்கி இராணுவம் முகாம் மீது குருதீஸ் போராளிகள் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்.
வடக்கு ஈராக்கில் உள்ள குருதிஸ் பகுதிகள் மீது துருக்கிய இராணுவம் நடத்திய எறிகணை தாக்குதல்களில் சிக்கி பல டசின் மக்கள் பலியாகிய நிலையில் இந்த பதிலடி தாக்குதலாக ரொக்கட் தாக்குதல் நிகழ்த்த பட்டுள்ளது.
குருதிஸ் போராளிகள் தாயாக பகுதிகளை துருக்கிய இராணுவம் ஆக்கிரமித்து அந்த மக்களை மிரட்டி அடிமைகளாக்கி வருகிறது.
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் போன்ற போராளிகள் அமைப்பாக தமது தேசிய விடுதலைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடி
வருகின்ற அமைப்புகளில் குருதீஸ் போராளிகள் அமைப்பும் ஒன்று என்பது இங்கே குறிப்பிட தக்கது.
இலங்கையில் கொரனோ தொற்றுக்கு இலக்காகி ஒருவர் மரணம்
இலங்கையில் கொரனோ தொற்றுக்கு இலக்காகி ஒருவர் மரணம்
இலங்கையில் மீள பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இலங்கையில் குறைவடைந்து காணப்பட்ட கொரனோ நோயானது மீளவும் அதிகரித்து வருகிறது.
இலங்கையில் மீள பரவும் இந்த கொரனோ நோயில் இருந்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வேண்ட படுகிறது.
இதே போல பிரேசில் நாட்டில் மிக வேகமாக இந்த நோயானது பரவி வருகின்றது .
இந்த கொரனோ தாக்குதலில் 300 க்கு மேற்பட்டவர்கள் சமீப நாட்களில் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது.
பிரிட்டனில் அதிக வெப்பத்தினால் 13 பேர் மரணம்
பிரிட்டனில் அதிக வெப்பத்தினால் 13 பேர் மரணம்
பிரிட்டனில் கடந்த தினம் நிலவிய அதிக வெப்பத்தின் காரணமாக நாடு தழுவிய ரீதியில் 13 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் இந்த அதிக வெப்பத்தினால் பலர் மூச்சுத்திணறலுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
சம்பவ தினம் பிரிட்டனில் 40 செல்சியஸ் வெப்ப நிலை காணப்பட்டது.
இந்த அதிக வெப்பநிலை காரணமாக ரயில்வே தண்டவாளங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது .
மேலும் பல வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன .இதே போல வாகனங்களும் எரிந்துள்ளன .
போர் கோலமாக பிரிட்டனில் அதிக வெப்பநிலை காணப்பட்டது .அன்றைய தினம் மக்கள் பெரும் இடர்களை சந்தித்தனர் என்பது வரலாறாக பதிவாகியுளளது .
பிரேசிலில் கொரனோவுக்கு சிக்கி 352 பேர் பலி
பிரேசிலில் கொரனோவுக்கு சிக்கி 352 பேர் பலி
பிரேசில் நாட்டில் மீள அதிகரித்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் 352 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் இந்த கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 64,771 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இந்த கொரனோ நோயானது உலகம் எங்கும் மிக வேகமாக மீள பரவிய வண்ணம் உள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரேசிலில் கொரனோவுக்கு சிக்கி 352 பேர் பலி
இப்போது உலகம எங்கும் முப்பது வீதத்தினால் இந்த கொரனோ நோயானது அதிகரித்துள்ளது எனவும் ,இதனால் மீளவும் நாடுகள் முடக்க நிலைக்கு செல்லும் என எதிர் பார்க்க படுகிறது .
மக்களை மிக விழிப்பாக இருக்கும் படியும் மாஸ்க் அணிந்து செல்லும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
மக்களே மீள உங்களை தேடி கொரனோ வருகிறத.உங்களை நீங்களே காப்பாற்றி கொள்ளுங்கள் .
மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்
இந்தியா ;மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு காலமானார்.
வயது 48 வயதாகும் இவருக்கு சில தினங்களுக்கு முன் திடீரென நுரையீரலில்
தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்து தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில்,
ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்து சிகிச்சை பலனின்றி நடிகை மீனா கணவர் வித்யாசாகர் நேற்று (28.06.2022) உயிரிழந்தார்.
அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்
இன்று காலை நடிகர்கள் ரஜினி, சரத்குமார், பிரபுதேவா, சுந்தர்.சி, நாசர், மன்சூர் அலிகான், நடிகைகள் சினேகா,
சங்கீதா, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பல திரையுலகினர் நேரில் சென்று வித்யாசாகர்
உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் வித்யாசாகரின் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு
எடுத்துச்செல்லப்பட்டது. ஊர்வலம் மின்மயானத்தை அடைந்ததும் அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.
அவருடைய மனைவி மீனா இறுதி சடங்குகளை செய்தார். அதன்பின்னர் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
நோர்வேயில் துப்பாக்கி சூடு 2 பேர் மரணம் 14 பேர் காயம்
நோர்வேயில் துப்பாக்கி சூடு 2 பேர் மரணம் 14 பேர் காயம்
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் மக்கள் மீது நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி சம்பவ இடத்தில இருவர் பலியாகினர் மேலும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் அவசர காவுவண்டிகள் மூலம் மருத்துவ மனைக்குஎடுத்து செல்ல பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான காரணம் தெரியவரவில்லை .துப்பாக்கி கி சூடு நடத்தியதில் ஒருவர் மட்டுமே சம்பந்த பட்டுள்ளதாக
தெரிவிக்கும் நோர்வே பொலிஸார் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .
பாதகமான காலநிலைக்கு மத்தியில் இந்த சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எரிபொருள் பெற்றுக்கொள்ள காத்திருந்தவர் லொறிக்குள் மரணம்
எரிபொருள் பெற்றுக்கொள்ள காத்திருந்தவர் லொறிக்குள் மரணம்
பட்ட கொடை; இலங்கை பட்ட கொடை பகுதியில் உள்ள எரிபொருள் நிலையமொன்றில் எரிபொருள் கொள்வனவு செய்திட லொறியில் காத்திருந்த ஒருவர் அந்த லொறிக்குள் மரணம் அடைந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார்.
இவ்வாறு லொறிக்குள் சடலமாக மீட்க பட்ட நபர் அறுபத்து மூன்றுவயதுடைய ரப்பர் தோட்டத்தை சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவரோடு உரையாடி விட்டு இரவு 11 மணியளவில் நாம் உறங்க சென்றோம் எனவும் அதன் பின்னர் இருமல் சத்தம் ஒன்று கேட்டது ,வந்து பார்த்த பொழுது அவர் லொறிக்குள் இறந்த நிலையில் காணப்பட்டார் என அவரது சகா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பெற்றுக்கொள்ள காத்திருந்தவர் லொறிக்குள் மரணம்
இலங்கையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள நிரையில் காத்திருந்தவர்களில் பதினொரு பேர் இதுவரை இறந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர்.
நாட்டையும் நட்டு மக்களையும் பிச்சை எடுக்க வைத்து சாதனை படைத்துள்ளார் ஆளும் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே.
லொறிக்குள் இருந்து மீட்க பட்ட சடலம் மரண பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டுள்ளது .
தொடரும் இவ்வாறான மரணங்கள் நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
வெடித்து சிதறிய ஆயுத கூடம்
வெடித்து சிதறிய ஆயுத கூடம் -பலர் மரணம்
சிரியா துருக்கி எல்லையோரம் அமைய பெற்றுள்ள இட்லி பகுதியில் உள்ள சிரியா
இராணுவத்தின் ஆயுத கூடம் ஒன்று வெடித்து சிதறியதில் ஒருவர் பலியாகியும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
மேலும் இதன் அருகில் அமைய பெற்றிருந்த இடைத்தங்கல் அகதி முகாம்கள் 45 தீயில் எரிந்த வண்ணம் உள்ளன
மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து, துருக்கி இராணுவத்தினர் தொடர் தாக்குதலை தொடுத்தவண்ணம் உள்ளனர்
வெடித்து சிதறிய ஆயுத கூடம்
இவ்வாறான தாக்குதல் ஒன்றை தாம் நடத்த உள்ளதாக துருக்கி அறிவித்த நிலையில் நாடுகளுக்கு இடையில்பெரும் பதட்டம் நிலவியது
குருதீஸ் தலைவர் துருக்கிய சிறையில் தடுத்து வைக்க பட்டுள்ள நிலையிலும் அந்த போராளிகள் தமது போராட்டத்தை வீரியமாக நடத்திய வண்ணம் உள்ளனர்
சர்வஜன வாக்கெடுப்பிற்கு உள்ளாக்க பட்டு அவர்கள் தமது தாய் நாட்டு பிரகடனத்தை முன் வைத்த நிலையில்
ஈரான் இராணுவம் திடீர் தாக்குதலை நடத்தி அவர்கள் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்ட முக்கிய விமான நிலையங்களை ஆக்கிரமித்தது
அதனை தொடர்ந்து துருக்கியும் தனது பங்கிற்கு தற்போது தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது
புலிகளை போல குறித்த அமைப்பையும் இல்லாது அழிக்கும் நகர்வில் ஆளும் அதிபர் எடகோன் இனவாத வெறியுடன் செயல் பட்டு வருகிறார்
இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி, குருதீஸ் மக்கள் வெளி நாடுகளில் தமது போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர்
ஆனால் அதனை அந்த நாடுகள் செவி சாய்ப்பதாக தெரியவில்லை ,
அப்பாவி மக்கள் வாழ்விடங்கள் ,மற்றும் அகதி முகாம்கள் என அணைத்து பகுதிகள் மீதும் கண்மூடித்தனமான எறிகணை ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது
துருக்கியின் இந்த இராணுவ முன்னகர்வை தடுத்த நிறுத்திடும் முகமாக ரசியாவின் அதி உயர் சண்டை விமானங்கள் வரவழைக்க பட்டு தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டு வருகின்றன
இந்த களமுனையில் துருக்கிய இராணுவத்திற்கு தகுந்த பழிவாங்கும் தாக்குதல் ஒன்றை ,ரசியா மேற்கொள்ள கூடும் எனவும்,
அதன் மூலம் துருக்கிய அதிபரின் ஆட்சியை கவிழ்க்க நடவடிக்கை ,நகர்வுகள் முன் நகரத்த படும் சாத்தியங்கள் அதிக உள்ளதாக கணிக்க பெறுகிறது
துருக்கி திட்டமிட்டு மேற்கொண்ட குண்டு தாக்குதல் ஊடாக இந்த ஆயுத கூடம்
பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது
இதற்கு பழிவாங்கும் தாக்குதல்களை சிரியா ,ரசியா , கூட்டாக இணைந்து மேற்கொண்டால், துவே பெரும் போராக வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது
வெள்ளத்தில் சிக்கி அதிகாரி மரணம்
வெள்ளத்தில் சிக்கி அதிகாரி மரணம்
அனர்த்த நிவாரணப் பணிகளை முடித்துக்கொண்டு இரத்தினபுரி குருவிட்டவில் உள்ள
தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த அதிகாரி ஒருவர் நேற்று (31) வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
குருவிட்ட, கோனாபிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கிரியெல்ல பிரதேச
செயலகத்தின் அனர்த்த நிவாரண அதிகாரி புன்சிறி கருணாரத்ன இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வெள்ளம் சூழ்ந்த வீதியில் சுமார் 200 மீற்றர் தூரம்
வெள்ளத்தில் சிக்கி அதிகாரி மரணம்
நடந்து சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அடித்து பாய்ந்த வெல்ல நீரில் சிக்கி அவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார் ,
,சடலம் அடி காயங்களுக்கு உள்ளன நிலையில் மீட்க பட்டுள்ளது ,தமக்கு உதவிய அதிகாரி இறந்த செய்தி கேட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
படுகொலை
முள்ளி வாய்க்கால் இனப் படு கொலையின் பின்னர் சிங்கள பகுதிகள் எங்கும் ஆண்டு தோறும் இவ்விதமான வெள்ளத்தில் சிக்கி பேரழிவை சிங்கள தேசம் சந்தித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
தற்கொலைகள்.. மீண்டும் ஒரு நடிகை மரணம்
தற்கொலைகள்.. மீண்டும் ஒரு நடிகை மரணம்
நடிகை பிதிஷா தற்கொலை செய்த 2 நாளில் அவரது தோழியான பிரபல மாடல் அழகியும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தொடரும் தற்கொலைகள்.. மீண்டும் ஒரு நடிகை மரணம்
மஞ்சுஷா நியோகி
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் டம்டம் என்ற இடத்தில் நாகர்பஜார் பகுதியில் உள்ள வாடகை குடியிருப்பு ஒன்றில் கடந்த 4 மாதங்களாக வசித்து வந்தவர் பிதிஷா டி மஜும்தார் (வயது 21). பிரபல மாடலான இவர் வங்காள மொழி படத்திலும்
நடித்து உள்ளார். சில தினங்களுக்கு முன்பு பிதிஷா தனது குடியிருப்பில் கடந்த 25ந்தேதி மாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மஞ்சுஷா நியோகி – பிதிஷா டி மஜும்தார்
இதுபற்றி தகவல் அறிந்து அவரது குடியிருப்புக்கு வந்த பேரக்பூர் நகர போலீசார் குடியிருப்பின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். தூக்கில் தொங்கிய பிதிஷாவின் உடலை கைப்பற்றி ஆர்.ஜி.கர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி
வைத்தனர். அந்த குடியிருப்பில் தற்கொலை குறிப்பு ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். பிதிஷாவுக்கு அனுபாப் பேஹ்ரா என்ற காதலர் உள்ளார். அவருக்கு
பிதிஷா தவிர்த்து 3 தோழிகள் இருந்துள்ளனர். பேஹ்ராவுடனான நட்புறவால் பிதிஷா மனஅழுத்தத்தில் இருந்துள்ளார் என பிதிஷாவின் தோழிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், பிதிஷாவின் தோழியான வங்காளத்தின் மாடலான மஞ்சுஷா நியோகி என்பவரும் தற்கொலை செய்துள்ளார். மஞ்சுஷா கொல்கத்தாவின் படுளி பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், தனது அறையில் உள்ள
மின் விசிறியில் தூக்கு போட்டு அவர் தற்கொலை செய்துள்ளார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இதுபற்றி மஞ்சுஷாவின் தாயார் கூறும்போது, பிதிஷாவுடன் ஒன்றாக வசிக்க வேண்டும் என
மஞ்சுஷா தொடர்ச்சியாக கூறினார். பிதிஷாவை பற்றியே எப்போதும் பேசி கொண்டே இருந்துள்ளார். பிதிஷாவை போன்று நமது வீட்டுக்கும் ஊடகக்காரர்கள் வருவார்கள் என மஞ்சுஷா என்னிடம் கூறியபோது அவளை திட்டினேன்.
ஆனால், அதேபோன்று நடந்துள்ளது என கூறியுள்ளார். கடந்த 15ந்தேதி வங்காளத்தின் பிரபல தொலைக்காட்சி நடிகையான பல்லவி டே கொல்கத்தாவில் உள்ள தனது குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தொடக்க கட்ட
விசாரணையில் அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது என்று போலீசார் கூறினர். இந்நிலையில்,
கொல்கத்தாவில் 12 நாட்களுக்குள் அடுத்தடுத்து 3 பிரபலங்கள் உயிரிழந்து உள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
யாழில் புயல் – ஒருவர் மரணம் – 10 பேர் காயம்
யாழ். மாவட்டத்தில் புதன்கிழமை வீசிய காற்று காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டதோடு ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த
முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார்.
யாழில் வீசிய கடும் காற்றினால் கோப்பாய், நல்லூர், காரைநகர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த குடும்பங்களே பாதிக்கப்பட்டுள்ளன.
கோப்பாய் J 286 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர், நல்லூர் J 97 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், காரைநகர் J 41 கிராம சேவையாளர் பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர்
என 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம்
ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம்
ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம் ,உக்கிரன் Sievierodonetsk, Luhansk பகுதிகள் மீது ரசியா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில்இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது .
ரசியா எறிகணை தாக்குதலில் சிக்கி பன்னிரண்டு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் நாற்பது பேர் படு காயமடைந்துள்ளனர்.
இந்த எறிகணை தாக்குதலில் தொடர் அடுக்கு மாடி கட்டடங்கள் எரிந்து அழிந்துள்ளன .
தொடர்ந்து உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
ரசியா இராணுவம் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து எறிகணை தாக்குதல் நாடத்திய வண்ணம் உள்ளதால் மக்கள் அச்சத்தில் அகதிகளாக இடம்பெயர்நத வண்ணம் உள்ளனர் .









