Tag: இராணுவ சிப்பாய்
கிணற்றில் இராணுவ சிப்பாய் உடல் மீட்பு
கிணற்றில் இராணுவ சிப்பாய் உடல் மீட்பு
கிணற்றில் இராணுவ சிப்பாய் உடல் மீட்பு ,ஹோமகமவில் கிணற்றில் இராணுவ வீரரின் உடல் கண்டெடுக்கப்பட்டது
ஹோமகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிபான தெற்குப் பகுதி
ஹோமகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிபான தெற்குப் பகுதியில் உள்ள ஒரு நெல் வயலுக்கு அருகில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து பொலிஸ் ஒரு உடலை மீட்டுள்ளது.
நேற்று காலை (15) ஹோமகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் தொடங்கப்பட்ட விசாரணையின் போது இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்தது.
இறந்தவர், மொரொந்துடுவவின் மஹாலந்த பகுதியில் வசித்து வந்த 43 வயதான இலங்கை இராணுவ வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
நீதிபதி விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை
நீதிபதி விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஹோமகம பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
- ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை

- ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி

- தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி

- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது

- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது

- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்

இலங்கை இராணுவ சிப்பாய் கைது
இலங்கை இராணுவ சிப்பாய் கைது
இலங்கை இராணுவ சிப்பாய் கைது ,ஒரு பாடசாலையில் படிக்கும் 10, 12 மற்றும் 13 வயதுடைய மூன்று சிறுவர்களை கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அத்தகைய மற்றொரு குழந்தையை பாலியல் .
பாடசாலையின் நிர்வாகக் குழு
துஷ்பிரயோகம் செய்ததாக பாடசாலையின் நிர்வாகக் குழுவின் பொருளாளராக இருந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸ் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் 62 வயதுடைய மாற்றுத்திறனாளி.
பாடசாலையில் செவித்திறன் குறைபாடுள்ள மாணவனை அவருடைய தாயார் அழைத்துச் செல்ல வந்தபோது
குழந்தையை காணவில்லை, பின்னர் அவர் பாடசாலையில் கிணற்று இருக்கும் பக்கத்தில் இருந்து ஓடிவந்துள்ளார்.
அதுதொடர்பில் மகனிடம் தாயார் வினவியுள்ளார்.
அதன்பின்னர், அந்த தாயார் அளித்த புகாரில் சந்தேக நபர் பல கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள இந்தக் குழந்தைகளிடமிருந்து வாக்குமூலங்களை எடுக்கும்போது,
சைகை மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகவும், பாடசாலையின் நிர்வாகக் குழுவின் பொருளாளராகச்
செயல்படும் நபர் இந்த மைனர் சிறுவர்கள் மீது பல சந்தர்ப்பங்களில் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் அடிக்கடி பாடசாலைக்கு வருவார், இருட்டிய பிறகு திரும்புவார், கூடுதலாக, அவர் தங்குமிடங்களுக்கு வந்து,
கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டு விளக்குகளை அணைப்பார் என்று வாக்குமூலங்கள் மேலும் கூறுகின்றன.
இராணுவ சிப்பாய் நால்வருக்கும் கடும் நிபந்தனையில் பிணை
இராணுவ சிப்பாய் நால்வருக்கும் கடும் நிபந்தனையில் பிணை
இராணுவ சிப்பாய் நால்வருக்கும் கடும் நிபந்தனையில் பிணை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் விளக்கமறியலில் .
சிப்பாய் நால்வரும் கடும் நிபந்தனையில் பிணை
வைக்கப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் நால்வரும் கடும் நிபந்தனையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 07.08.2025 அன்று முத்துஐயன் கட்டுப்பகுதியில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் நால்வரை கைது செய்த
ஒட்டுசுட்டான் பொலிஸார் வழக்கு
ஒட்டுசுட்டான் பொலிஸார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த 19.08.2025 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்ட இளைஞன்
சார்பாக ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் மன்றில் பிரசன்னமாகிய நிலையில், இராணுவ சிப்பாய் நால்வரும் நேற்று வரை (26) விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
குறித்த வழக்கு நேற்று (26) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மூத்த சட்டத்தரணி கெங்காதரன், உயிரிழந்த பாதிக்கப்பட்ட இளைஞர் சார்பில் சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
இந்த வழக்கில் இராணுவ சிப்பாய்களுக்கான பிணைக் கோரிக்கை இராணுவத்தரப்பு சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட நிலையில், கடும்
நிபந்தனைகளின் பின்னர் குறித்த இராணுவ சிப்பாய்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
ஒவ்வொருவரும் தலா மூன்று இலட்சம் ரூபா பெறுமதியிலான இரண்டு சரீரப்பிணைகளில் செல்ல அனுமதித்த நீதவான், சாட்சியங்களை
அச்சறுத்தக்கூடாது என்றும் நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாட்டு பயணங்கள் செல்ல முடியாது என்றும் உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு 30.09.2025 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது
சிதைந்த நிலையில் சிப்பாய் சடலம் மீட்பு
சிதைந்த நிலையில் சிப்பாய் சடலம் மீட்பு
படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இராணுவ சிப்பாய் ஒருவரின் சிதைந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குருசிங்ககொட பிரதேசத்தில் உள்ள கால்வாயில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காலி மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சிதைந்த நிலையில் சிப்பாய் சடலம் மீட்பு
மட்டக்களப்பு வெல்லாவெளி இராணுவ முகாமில் பணிபுரியும் 35 வயதுடைய விஷான் பிரதீப் விதானச்சி என்ற இராணுவ வீரரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 6ஆம் திகதி வீட்டுக்கு வந்த குறித்த சிப்பாய், 14ஆம் திகதி வீட்டை விட்டு சென்ற நிலையில், அதன் பின்னர், அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
பத்தேகம நீதவான், சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கராபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
பத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்புby நிருபர் காவலன்
- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைதுby நிருபர் காவலன்
- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைதுby நிருபர் காவலன்
- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடுby நிருபர் காவலன்
- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்ததுby நிருபர் காவலன்
இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு
இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு
நாவுல –மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து நேற்றிரவு இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீர்த்தேக்கம் மற்றும் மின்நிலையத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிரலகொல்ல இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் எல்பிட்டிய பிரசேத்தைச் சேர்ந்த 39 வயதான ஒருவரென தெரிவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நாவுல பொலிஸார் மேலதி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இராணுவ சிப்பாய் மரணம்; விசாரணைகள் ஆரம்பம்| இலங்கை செய்திகள்
இராணுவ சிப்பாய் மரணம்; விசாரணைகள் ஆரம்பம்| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்| பனாகொட இராணுவ முகாமில் நேற்று (24) இராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எனினும் குறித்த மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறித்த இராணுவ வீரர் தனது உத்தியோகபூர்வ ரி 56 ரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட இராணுவ வீரர் 32 வயதுடையவர் எனவும், இவர் மாத்தளை – நாவுல பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் பெண்ணின் சங்கிலியை அறுத்த இராணுவ சிப்பாய் மடக்கி பிடிப்பு
யாழில் பெண்ணின் சங்கிலியை அறுத்த இராணுவ சிப்பாய் மடக்கி பிடிப்பு
யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த 15 வயது சிறுமியின் சங்கலியை அறுத்து கொண்டு தப்பித்த ,இராணுவ சிப்பாய் ஒருவரை மக்கள் மடக்கி பிடித்தனர் .
சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருகை தந்து விசாரித்த பொழுது ,இராணுவம் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியது .
மக்களின் எதிர்ப்பின் காரணமாக இராணுவம் அங்கிருந்து விலகி சென்றது .இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிங்கள இராணுவத்தின் செயல் பாடுகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
யாழ்ப்பாணத்தின் பல பாகத்தில் நடக்கும் திருட்டு ,சிங்கள இராணுவம் ,மற்றும் அதன் உளவாளிகளினால் இடம்பெற்று வருவதான , மக்கள் குற்ற சட்டு தற்போது நிரூபிக்க பட்டுள்ளது .
மடக்கி பிடிக்க பட்ட இராணுவ சிப்பாயிடம் , திருட பட்ட சங்கிலி மீட்க பட்டுள்ளது .இராணுவத்தினர் இந்த இளம் பெண்ணை பழிவாங்க கூடும் என்பதால் ,சிறுமியின் குடும்பம் பீதியில் உறைந்துள்ளனர் .
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது

- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

யாழில் ரயிலிக்குள் வீழ்ந்து காயமடைந்த இராணுவ சிப்பாய்
யாழில் ரயிலிக்குள் வீழ்ந்து காயமடைந்த இராணுவ சிப்பாய்
கொழும்பு பகுதியில் இருந்து ,யாழ்ப்பாணத்துக்கு கடமைக்கு வந்த , இராணுவ சிப்பாய் ஒருவர் ரயிலுக்குள் வீழ்ந்து காயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் இறங்க வேண்டிய இராணுவ சிப்பாய் ,ரயிலை தவறவிட்டு சுன்னாகத்தை கண்டு திகைத்து போயுள்ளளார் .
நித்திரை தூக்கத்தில் இருந்த இராணுவ சிப்பாய் தீடிரென எழுந்து இறங்க முற்பட்ட நிலையில் ,இவ்விதம் வீழ்ந்து படுக்கயமடைந்த நிலையில் ,தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்
ரயிலுக்குள் வீழ்ந்த இராணுவ சிப்பாயை , காப்பாற்றிய மக்கள், இவ்விதம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளமை குறிப்பிட தக்கது.
ரயிலுடன் மோதி இராணுவ சிப்பாய் மரணம்
ரயிலுடன் மோதி இராணுவ சிப்பாய் மரணம்
இலங்கை,கொழும்பு ,. வீரவில விமானப்படை தளத்தில் பணியாற்றும் விமான படையை சேர்ந்த இராணுவ சிப்பாய் ரயிலுடன் மோதி பலியாகியுள்ளார் .
இவர்கள் பயணித்த வான் ரயிலுடன் மோதியதில் சிப்பாய் ஒருவர் சம்பவ இடத்தில பலியானார் .மேலும் ஒருவர் படுக்கையாமடைந்துள்ளார் .
காயமடைந்தவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்.
.பாதுகாப்பற்ற ரயில்வே கடவையை கடக்கும் பொழுதே ரயிலுடன் வான் மோதி இந்த விபத்து சம்பவம் இடமேற்றுள்ளது என தெரிவிக்க படுகிறது .
பிறந்த நாளில் இறந்த இராணுவ சிப்பாய் – பதட்டத்தில் இஸ்ரேல் இராணுவம் – வீடியோ
பிறந்த நாளில் இறந்த இராணுவ சிப்பாய் – பதட்டத்தில் இஸ்ரேல் இராணுவம் – வீடியோ
இஸ்ரேல் முக்கிய நகரங்களை இலக்கு வைத்து கமாஸ் விடுதலை போராளிகள் ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட ரொக்கட் தாக்குதலை நடத்தினர்
இதில் இஸ்ரேல் இராணுவத்தினர் இறந்துள்ளனர் .தனது பிறந்த நாளிலே இறந்துள்ளார்,இராணுவ சிப்பாய் ஒருவர் ,.மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்
இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட உயிரிழப்பு மூடி மறைக்க பட்டுள்ளது ,நாட்டின் தலைவர் இராணுவ நிலைகளுக்கு சென்று இராணுவத்தினரை பாராட்டுவதில் இருந்து ,ஹிஸ்புல்லா
ஏவுகணை தாக்குதல் இஸ்ரேலை எவ்வாறு உலுப்பியுள்ளது என்பதற்கு இந்த காட்சிகள் முக்கிய சான்று
உலக சண்டியர் என வாலாட்டிய இஸ்ரேலுக்கு ,கமாஸ் தம்மை வளர்த்து, பெரும் இடியென தாக்குதலை நடத்தியுள்ளனர்
அதனால் தான் இப்பொழுது 800 க்கு மேற்பட்ட நிலைகளில் தாக்குதலை நடத்தியுள்ளது .,தாக்குதல் நடத்த பட்ட அனைத்து பகுதிகளும் கமாஸ் இலக்கு என இஸ்ரேல் கூறுகிறது
ஆனால் ,அதில பலநூறு அப்பாவி மக்கள் பொது இடங்கள் என்பதை சர்வதேச ஊடகங்கள்; அம்பல படுதியுள்ளன
இராணுவ சிப்பாய்க்கு வாள்வெட்டு
இராணுவ சிப்பாய்க்கு வாள்வெட்டு
இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவர் தான் பணி புரியும் காவலரணில் பணிபுரிந்து விட்டு திரும்பி கொண்டிருந்த பொழுது சில நபர்களினால் வாள்வெட்டுக்கு உள்ளாக்க பட்டுளளார் .
பலத்தகாயமடைந்த இராணுவ சிப்பாய் தற்போது அமருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
இராணுவ சிப்பாய் மீது தாக்குதல் மேற்கொள்ள படத்தை குரல்தரவல்ல இராணுவ அதிகாரி ஒப்புக்கொண்டுள்ளார்
























