அமெரிக்கா வெள்ளத்தில் 25 பேர் மரணம்
அமெரிக்கா கென்டிக்கி பகுதியி ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை இருபத்தி ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.
வெள்ள நீர் தொடர்ந்து வடியா நிலையில் காணப்படுவதால் மக்கள் வீடுகளில் இருந்து அகற்ற பட்டுள்ளனர்.
நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.மின்சாரம் முற்றாக துண்டிக்க பட்டுள்ளது .
வெள்ளத்தில் சிக்கிய பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
குறித்த பகுதி எங்கும் அவசரகால பிரகடன படுத்த பட்டு உதவி சேவைகள் வழங்க பட்ட வண்ணம் உள்ளது.
மின்சாரம் தொலைத் தொடர்புகள் என்பன துண்டிக்க பட்டுள்ளன .
அமெரிக்காவில் இடம்பெற்ற இந்த வெள்ள பெருக்கில் உயிர் இழப்புக்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
அமெரிக்கா அதிபர் பாதிக்க பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குபடி பணித்துள்ளார்.