யாழில் புயல் – ஒருவர் மரணம் – 10 பேர் காயம்

Spread the love

யாழ். மாவட்டத்தில் புதன்கிழமை வீசிய காற்று காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டதோடு ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த

முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார்.

யாழில் வீசிய கடும் காற்றினால் கோப்பாய், நல்லூர், காரைநகர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த குடும்பங்களே பாதிக்கப்பட்டுள்ளன.

கோப்பாய் J 286 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர், நல்லூர் J 97 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், காரைநகர் J 41 கிராம சேவையாளர் பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர்
என 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    Leave a Reply