Tag: பேரூந்து விபத்து
கிளிநொச்சியில் கோர விபத்து ஒருவர் மரணம் பலர் காயம்
கிளிநொச்சியில் கோர விபத்து ஒருவர் மரணம் பலர் காயம்
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகி 8 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து சிக்கிய பேரூந்து சேதம் ,
யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கொழும்பியிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்து, விதியில் பயணித்த மாடுகளுடன் மோதிய பின் வேனுடன் மோதியுள்ளது.
விபத்தில் வவுனியாவை சேர்ந்த 50 வயதுடைய திருமணி திருச்செல்வம் எனும் பெண் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சியில் கோர விபத்து ஒருவர் மரணம் பலர் காயம்
காயமடைந்தவர்களில் ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, குறித்த விபத்தில் 8 மாடுகளும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
யாழில் அரச பேரூந்து தனியார் பேரூந்து மோதி விபத்து
யாழில் அரச பேரூந்து தனியார் பேரூந்து மோதி விபத்து
யாழில் அரச பேரூந்து மற்றும் தனியார் பேரூந்து என்பன நேரெதிர் மோதி விபத்தில் சிக்கின ,இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் .
யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை பகுதியில் நபர் ஒருவரை ஏற்றுவதற்கு நின்ற பேரூந்து மீது வேகமாக பயணித்த அரச பேரூந்து திடீரென மோதி விபத்து சம்பவத்தை ஏற்படுத்தியது .
இதன் பொழுதே நான்கு பேர் காயமடைந்தனர் ,இந்த பேரூந்து விபத்தில் காயமடைந்த நால்வரும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
குறித்த பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் தொடர்ச்சியாக இவ்விதமான பேரூந்து விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .
பேரூந்து விபத்து ஒருவர் மரணம் 48 ஈரானியர் காயம்
பேரூந்து விபத்து ஒருவர் மரணம் 48 ஈரானியர் காயம்
ஈராக்கில் பேருந்து விபத்தில் ஈரானிய யாத்ரீகர் ஒருவர் பலியாகியும் ,
மேலும் 48 பேர் காயமடைந்துள்ளதாக ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம்
தெரிவித்துள்ளது .
காதிமெய்ன்-சமரா சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .
ஈரானிய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில்,
டிரக் ஒன்று மோதியதால் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த சாலை விபத்தில் சிக்கி ஈரானிய பெண் ஒருவர் உயிரிழந்தார்,
மேலும் 48 ஈரானியர்களும் காயமடைந்துள்ளனர் .
விபத்து தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .
காயமடைந்தவர்கள்அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு
by நிருபர் காவலன் - லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்
by நிருபர் காவலன் - பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி
by நிருபர் காவலன் - அமெரிக்கத் தூதர்களைச் சந்திக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது
by நிருபர் காவலன் - காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்
by நிருபர் காவலன்
பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையில் பேரூந்து விபத்து 21 பேர் காயம் | உலக செய்திகள்
பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையில் பேரூந்து விபத்து 21 பேர் காயம் | உலக செய்திகள்
உலக செய்திகள்| பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைக்கு பாடசாலை சிறுவர்களை ஏற்றியபடி பயணித்த
பேருந்து ஒன்று, மரங்கள் நிறைந்த சரிவில் கவிழ்ந்தது .
இதன் பொழுது அவ்வேளை அதில் பயணித்த நாற்பது பேரில்
21 பேர் பலத்த காயமடைந்தனர் .
ஓட்டுனரும் அவரது கூட்டாளியும் ஆபத்தான நிலையில் ,
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பேரூந்து விபத்து 7 பேர் பலி 50 பேர் காயம்
பேரூந்து விபத்து 7 பேர் பலி 50 பேர் காயம்
பேரூந்து விபத்தில் சிக்கி ஏழுபேர் பலியாகியும் 50 பேர் காயமடைந்துள்ளனர் .
இவ்வாறு காயமடைந்தவர்கல் அருகில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
மாணவர்களை உல்லாச பயணத்துக்கு ஏற்றி சென்ற பேரூந்து பிரேக் இயங்காமையினால் ,வாகனம் ஒன்றுடன் மோதி விபத்தில் சிக்கி ,பள்ளத்தாக்கில் வீழ்ந்து நொறுங்கியது .
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பேரூந்து விபத்து பயணிகள் காயம்
பேரூந்து விபத்து பயணிகள் காயம்
கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்து ,ஆடம்பர தனியார் பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது .
இந்த விபத்தில் சிக்கி பலர் காயமடைந்தனர் .பேரூந்து முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது .
சாரதி தூங்கிய நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .
இலங்கை தெற்கு அதிகவேக சாலையில் இடம்பெற்ற புத்தாண்டு தின முதல் பயணிகள் பேரூந்து ,விபத்தாக இது பதிவாகியுள்ளது .
பயணிகள் பேரூந்து கவிழ்ந்தது 18 பயணிகள் படுகாயம்
பயணிகள் பேரூந்து கவிழ்ந்தது 18 பயணிகள் படுகாயம்
இலங்கையில் மட்டக்களப்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த ,பயணிகள் பேரூந்து ஒன்று, வலப்பனை பகுதியில் கவிழ்ந்ததில் ,அதில் பயணித்த பயணிகள் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
பேரூந்தில் பயணித்த காயமடைந்த பயணிகள் யாவரும் , வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
சாரதியின் அலட்சிய போக்கே ,இந்த பயணிகள் பேரூந்து விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது .
இலங்கையில் பயணிகள் பேரூந்துகள் இவ்வாறன விபத்தில் ,சமீப காலங்களாக அதிகம் சிக்கி வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .
இலங்கையில் நடந்தேறிய கோர பேரூந்து விபத்திகள் யாவும் இதில் அழுத்தி பார்க்க
ஆற்றில் வீழ்ந்த பேரூந்து 30 பேர் மரணம்
ஆற்றில் வீழ்ந்த பேரூந்து 30 பேர் மரணம்
கென்யா ; கென்யா நிதி ஆற்றின் மேலாக பாலத்தில் பயணித்து கொண்டிருந்த ஆடம்பர பயணிகள் பேரூந்து ஆற்றின் பள்ளத்தாக்கில் வீழ்ந்தது சிதறியதில் சுமாரா 30 பேர் மரணமாகியுள்ளனர்.
இந்த பேருந்து நிதி ஆற்றின் மேலால் உள்ள பாலத்தில் வேகமாக பயணித்த பொழுதே இந்த விபத்து சமபவித்துள்ளது.
ஆற்றின் பள்ளதாக்கில் வீழ்ந்து நொறுங்கிய பேரூந்தில் பயணித்தஅணைத்து பயணிகளும் மரணித்த துயரம் இடம்பெற்றுள்ளது.
சாரதியின் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் சடலங்களை மீட்டு மருத்துவ மனையில் வைத்துள்ளனர் .
கென்யாவில் ஆற்றின் பள்ளதாக்கில் வீழ்ந்து சிதறிய பேரூந்து செய்திகள் உலக ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக இடம்பிடித்துள்ளன .
எரிபொருள் வாங்க காத்திருந்தவர்கள் மீது பேரூந்து மோதி விபத்து
எரிபொருள் வாங்க காத்திருந்தவர்கள் மீது பேரூந்து மோதி விபத்து
மட்டக்களப்பு ; மட்டக்களப்பு ஊரணி பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் வாங்கிட கடத்திருந்த மக்கள் மீது பேரூந்து ஒன்று மோதியுள்ளது.
பேரூந்து சாரதியின் காட்டு பாட்டை இழந்த பேரூந்து மக்கள் மீது மோதி விப்பதுக்குள்ளானது .
இந்த பேரூந்து விபத்தில் காயமடைந்த ஐந்து பேர் மருத்துவனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .,
இவ்வாறான விபத்துக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு
- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்
- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி
- வில்பட்டு தேசியப் பூங்காவில் கரை ஒதுங்கிய இறந்த டால்பின்
- தானசாலை வாக்குவாதம் ஐவர் கைது
- நெல்லை வாங்க மறுக்கும் அரசு விவசாயிகள் குமுறல்
- வேலைக்கு ஆள் இல்ல வெளிநாட்டவர்களை இறக்க தயாராகும் அரசு
- பக்தர்களுக்கு வெற்றிலை புகையிலை வழங்கியவரை தூக்கிய அனுரா அரசு
- அமெரிக்கத் தூதர்களைச் சந்திக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது
- முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடியிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தியது
பேரூந்து விபத்து 19 பேர் மரணம் – 32 பேர் காயம்
பேரூந்து விபத்து 19 பேர் மரணம் – 32 பேர் காயம்
மத்திய மெஸ்சிக்கோ பகுதியில் ஆடம்பர பேரூந்து ஒன்று விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த
பத்தொன்பது
பேர் சம்பவ இடத்தில் பலியாகினர் ,மேலும் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
மேற்படி விபத்து தொடர்பில் பூர்வாங்க விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன





























