எரிபொருள் பெற்றுக்கொள்ள காத்திருந்தவர் லொறிக்குள் மரணம்

Spread the love

எரிபொருள் பெற்றுக்கொள்ள காத்திருந்தவர் லொறிக்குள் மரணம்

பட்ட கொடை; இலங்கை பட்ட கொடை பகுதியில் உள்ள எரிபொருள் நிலையமொன்றில் எரிபொருள் கொள்வனவு செய்திட லொறியில் காத்திருந்த ஒருவர் அந்த லொறிக்குள் மரணம் அடைந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார்.

இவ்வாறு லொறிக்குள் சடலமாக மீட்க பட்ட நபர் அறுபத்து மூன்றுவயதுடைய ரப்பர் தோட்டத்தை சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவரோடு உரையாடி விட்டு இரவு 11 மணியளவில் நாம் உறங்க சென்றோம் எனவும் அதன் பின்னர் இருமல் சத்தம் ஒன்று கேட்டது ,வந்து பார்த்த பொழுது அவர் லொறிக்குள் இறந்த நிலையில் காணப்பட்டார் என அவரது சகா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பெற்றுக்கொள்ள காத்திருந்தவர் லொறிக்குள் மரணம்

இலங்கையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள நிரையில் காத்திருந்தவர்களில் பதினொரு பேர் இதுவரை இறந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர்.

நாட்டையும் நட்டு மக்களையும் பிச்சை எடுக்க வைத்து சாதனை படைத்துள்ளார் ஆளும் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே.

லொறிக்குள் இருந்து மீட்க பட்ட சடலம் மரண பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டுள்ளது .

தொடரும் இவ்வாறான மரணங்கள் நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .

    Leave a Reply