400பேர் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது
Posted in இலங்கை செய்திகள்

400பேர் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது

400பேர் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது

400பேர் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது , இலங்கை காவல்துறையினால் 400க்கு மேற்பட்டவர்கள் கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்திருக்கின்றனர் .

இதில் இடம்பெற்ற தந்தையர் சுற்றிவழிப்பு சோதனையின் பொழுதே போதையில் வாகனங்களை ஓட்டிச் சென்ற 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்களை அடுத்து நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் திடீர் சோதனைக்காக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் ,

இந்த போதையில் வாகனங்களை ஓட்டிச் சென்ற ஆண் ,பெண் சாரதியை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைதானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றனர் .

வீடியோ

பலமான பாதுகாப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்ற வேளையில் ,இந்த கைது இடம் பெற்றுள்ளது .

வீதி விதிமுறைகளை மறந்து போதையில் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டி செல்வது மக்கள் மத்தியில் அதிபர்களை ஏற்படுத்தி இருக்கிறது.

பொலிஸாரால் ஆட்டோ திருடியவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாரால் ஆட்டோ திருடியவர்கள் கைது

பொலிஸாரால் ஆட்டோ திருடியவர்கள் கைது

பொலிஸாரால் ஆட்டோ திருடியவர்கள் கைது , கொழும்பு மத்திய குற்றத்த தடுப்பு பிரிவினால் ஆட்டோ திருடர்கள் ஈடுபாட்டை ஐந்து பேரை கைது செய்துள்ளதாக கொழும்பு குற்ற திணைக்கள பிரிவினர் தெரிவித்து இருக்கின்றது .

இவர்கள் கடந்த காலங்களில் கொழும்பின் பல பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களை திருடி சென்ற சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து .

விசேட குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர் வீதியோர கேமராக்கள் கடைகளில் பொருத்தப்பட்ட கமராக்கள் என்பனவையும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வந்தன.

அவ்விதம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட வந்த கேமராக்கள் மற்றும் சிவில் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உளவுத்துறையினர் கூட்டத்தோடு பிரிவினர்களால் இந்த திருடர்கள் தற்பொழுது மடக்கி பிடிக்கப்பட்டனர் .

இந்த ஐந்து பேரும் பல ஆட்டோக்களை திருடி விற்றுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது .

வீடியோ

ஆட்டோக்குள் திருடி அதன் உதிரி பாகங்கள் விற்பனை செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

அதனை அடுத்து தற்பொழுது தொடர்ந்து விசாரணைகள் பெற்று வருவதாகவும் ,எத்தனை ஆட்டோக்கள் இவர்கள் திருடினார்கள் என்பது தொடர்பாக முழுமையாக தெரிய வரவில்லை.

பெண் கைது சிக்கிய போதைவஸ்து
Posted in இலங்கை செய்திகள்

பெண் கைது சிக்கிய போதைவஸ்து

பெண் கைது சிக்கிய போதைவஸ்து

பெண் கைது சிக்கிய போதைவஸ்து , தென் கொரியாவிலிருந்து இலங்கை சர்வதேச விமான நிலையமான பண்டாரநாயக்கா விமான நிலையத்தின் ஊடாக பெருந்தொகையிலான போதை வைத்துகடத்த முற்பட்ட வெளிநாட்டு பெண் கைது .

போதைவஸ்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான தள சுங்கத்தினார்கள் அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர் .

142 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதை வாஸ்து கடத்தி செல்லப்பட்ட வெளிநாட்டு பெண் ஒருவரை தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார் .

வீடியோ

இவ்வாறு போதவஸ்து கடத்தலில் ஈடுபட்ட தென்கொரியா கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வந்த பின்னர் தற்பொழுது அவர் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை போலீசார் குற்றத்தடுப்பு பிரிவுகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கைக்கு தென்கொரியா பாரியளவிலான உதவித்திட்டங்களை வழங்கி வருகின்ற நிலையில் தென்கொரியா நாட்டினுடைய குடியுரிமை பெற்ற பெண் ஒருவர் இவ்வாறு போதவாஸ்து கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் வெளிநாட்டு போதைவஸ்துக்கள் அதிக விற்பனை பெறுவதாகவும் இந்த கடதலின் பின்புலத்தில் இந்த பெண்ணுக்கு பின்னால் இலங்கை அரசியல்வாதிகள் யாராவது இருக்கலாமா என்கின்ற சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன .

தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த போதை கலாச்சாரத்தை முறியடித்தால் மட்டுமே ,

இலங்கையை கட்டி அமைக்க முடியும் என கருதுகின்ற மக்கள் இந்த பெண்ணுடைய பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்னை கண்டறிய வேண்டும் என்ற விடயம் பகிரப்பட்டு வருகிறது .

150கோடி மோசடி தம்பதிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

150கோடி மோசடி தம்பதிகள் கைது

150கோடி மோசடி தம்பதிகள் கைது

150கோடி மோசடி தம்பதிகள் கைது ,நிதி மோசடி செய்து இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில் நேற்று (26) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தம்பதியினர் எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரைவெல்த் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் வர்த்தக நிறுவனங்களுக்கு ஈவுத்தொகை தருவதாக கூறி 160 கோடி ரூபாயை மோசடி

செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

அதன் பணிப்பாளர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் 2021 இல் படகில் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்தது.

பின்னர் சர்வதேச பொலிஸாரின் ஊடாக சந்தேக நபர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டதுடன், விசாரணையின் போது, ​​சந்தேகநபர்

தனது குடும்பத்தினருடன் இந்தியாவின் வேதநாயகம் பகுதியில் தரையிறங்கிய போது அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரியவந்தது.

வீடியோ

பின்னர் சுமார் மூன்று வருடங்கள் அந்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள் நேற்று (26) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

முதலில் குறித்த நிறுவனத்தின் உரிமையாளரும் அவரது 14 வயது மகனும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

எனினும், அவரது மனைவி இலங்கை வரமுடியாது என்று அங்கு அலைக்கழித்ததைத் தொடர்ந்து, அவரும் வேறு விமானம் மூலம் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

அதன்படி, அவரும் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதிக் குற்றப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விசாரணையின் போது, ​​சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் மத்திய வங்கியில் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

தொழிலில் நட்டம் ஏற்பட்டதால், ஈவுத்தொகையை செலுத்தாமல், நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.

சம்மாந்துறை, கல்முனை மற்றும் அம்பாறை பிரதேசங்களில் முஸ்லிம்களை குறிவைத்து மேற்படி மோசடி நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

பொலிசாரால் 8447 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பொலிசாரால் 8447 பேர் கைது

பொலிசாரால் 8447 பேர் கைது

பொலிசாரால் 8447 பேர் கைது , இலங்கையில் போலீசார் நடத்திய திடீர்னு தேடுதல் நடவடிக்கையின் பொழுது 8447 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் ஓடியவர்கள் மற்றும் நீதி விதிமுறைகளை பின்பற்றாமல் சென்றவர்கள் என பல்வேறுபட்ட குற்ற அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வருகின்ற தத்தார் பண்டிகை கொண்டாட்டங்களை விட்டு மக்களை பாதுகாப்பாக பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கை தொடர்பாக போலீசார் சுற்றுக்காவல் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்,

திடீர் சுற்றிவளைப்பு வீதி சோதனைகள் என்பவற்றின் பொழுது மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தியவர்கள் போதை வஸ்துடன் சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

வீடியோ

பல குற்றச்சாட்டுகளை திருடப்பட்டு வந்து வழங்கிய என பல நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கையினுடைய காவல்துறை தெரிவித்துள்ளனர்.

மற்றும் புது வருட சோதனைகள் தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது இங்கே குறிப்பிட தாக்கது.

லஞ்சம் பெற்ற போலீசார் கைது
Posted in இலங்கை செய்திகள்

லஞ்சம் பெற்ற போலீசார் கைது

லஞ்சம் பெற்ற போலீசார் கைது

லஞ்சம் பெற்ற போலீசார் கைது, லஞ்சம் பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசாரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன .

திருகோண மலையில் பல தகராறு தொடர்பில் முறைப்பாடு செய்ய வந்த இருபது தெருவில் பேசிக்கொண்டிருந்த பொழுது தனக்கு தர வேண்டிய லஞ்சத்தை தந்தால் உரிய வடிவத்தில் தான் மேற்கொண்டு தருவதாக அவர் ம் பேரம் பேசியிருக்கிறார் .

மேற்படி லஞ்சம் பெற்றுக்கொண்ட அந்த போலீஸ் அதிகாரி உரிய நபரினால் லஞ்ச ஒழிப்பு ஆடிக் குழுவுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வீடியோ

இலங்கையினுடைய காவல்துறையில் சமீப காலங்களாக இவ்வாறான லஞ்ச ஊழல்கள் மோசடிகள் இடம் பெற்று வருவதும் மக்களிடத்தில் அல்லது வருகின்ற

முறைப்பார்கள் இடத்தில் பணத்தினை வாங்கி அந்த வழக்கினை முடித்து வைப்பதாக தெரிவித்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது .

இந்த முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்ட லஞ்ச ஊழல் ஆணை குழு உறுப்பினர் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு,

தகுந்த அதிகாரியை படியிடை நீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக மீனவர்கள் 17பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்கள் 17பேர் கைது

தமிழக மீனவர்கள் 17பேர் கைது

தமிழக மீனவர்கள் 17பேர் கைது , தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படை நாள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமை முகாமில் தடுத்து வைக்கப்பட்டதோடு படகு மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது அப்போது பணியில் ஈடுபட்டுக்

கொண்டிருந்த இலங்கை கடலோர காவல் படையால் இந்த தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் உள்ளடங்குவதோடு உடனடியாக விடுதலை செய்து தாயகம் அழைத்துவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

வீடியோ

சிறைபிடிக்கப்பட்ட முதலாவது பெருந்தொகையிலான இந்தியா மீனவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர் .

உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மீனவருடைய குடும்ப உறவினர்கள் கண்ணீர் பார்க்க போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தமிழக மீனவர்களை இலக்கு வைத்து இலங்கை களிப்படையில் கைது செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

டக்ளஸ் எம்பி கைது
Posted in இலங்கை செய்திகள்

டக்ளஸ் எம்பி கைது

டக்ளஸ் எம்பி கைது

டக்ளஸ் எம்பி கைது , டக்ளஸ் தோவனந்தாவின் கட்சியில் வவுனியாவில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் காசோலை மோசடியில் குற்றச் சுமத்தப்பட்டு தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கி வந்த திலீபன் அவர்கள் அங்கு பல வர்த்தகர்கள் மக்களை மிரட்டி கப்பம் பெறும் நடவடிக்கையிலும் அவருடைய தொழில்துறைகளுக்கு தடைகளை விதித்து வந்ததான குற்றச்சாட்டு கடந்த காலங்களில் பதிவாகி இருந்தது.

அவ்வாறான நிலையில் தற்போது டக்லஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் கட்சியில் போட்டியிட்ட இந்த திலீபன் எனப்படுகின்ற முன்னாள் எம்பி தற்போது கைது செய்யப்பட்டுள்ள தகவல் பரபரப்பாக பரவி வருகின்றது .

இந்த செய்தி மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது .மக்களுக்கு உதவி செய்வது மக்களை மிரட்டி கப்பம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் .

போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்பொழுது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

காணி வழங்குவதற்காக 20 லட்சம் ரூபாய் காசடி மோசடியில் இவர் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே ,

தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு சேவை செய்ய வந்ததாக தெரிவித்துக் கொண்டிருக்கும் இவர்கள் எங்களது சேவைகளை மறந்து தமது தனிநல அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே ,

தற்போது மேற்படி விடயம் பரபரப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது .

வவுனியா மாவட்டத்தில் இந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலீபர் அவர்கள் பல்வேறுபட்ட மோசடி நடவடிக்கை மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு முன் நாட்களில் வைக்கப்பட்டிருந்தமை இங்கே கவனியுங்கள் .

இதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினுடைய தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் பதில் எதுவாக இருக்கும் என்பதை மக்களுக்கு கேள்வியாக இருக்கிறது .

துப்பாக்கிச் சூடு நான்கு பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு நான்கு பேர் கைது

துப்பாக்கிச் சூடு நான்கு பேர் கைது

துப்பாக்கிச் சூடு நான்கு பேர் கைது மீட்டியாகொட, மஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மீட்டியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி, நேற்று (16) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

நேற்றிரவு முச்சக்கர வண்டியில் வந்த சிலர், வீடொன்றில் இருந்த ஆண் ஒருவர் மீதும் அவரது மகளும் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

அதுல் சுபாஷின் மனைவி நிகிதா, அவரது தாய் மற்றும் சகோதரர் கைது
Posted in உலக செய்திகள்

அதுல் சுபாஷின் மனைவி நிகிதா, அவரது தாய் மற்றும் சகோதரர் கைது

அதுல் சுபாஷின் மனைவி நிகிதா, அவரது தாய் மற்றும் சகோதரர் கைது

தொழில்நுட்ப வல்லுனர் அதுல் சுபாஷின் மனைவி நிகிதா, அவரது தாய் மற்றும் சகோதரர் கைது.


நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர், அதுல் சுபாஷ் தற்கொலை செய்துகொண்டது மற்றும் அவர்கள் மீது 24 பக்க தற்கொலைக் குறிப்பில் அவர் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து பெரும் ஆத்திரத்தின் மையத்தில் உள்ளனர்.

34 வயதான தொழில்நுட்ப வல்லுனர் அதுல் சுபாஷின் பிரிந்த மனைவி நிகிதா சிங்கானியா, அவரது தாயார் நிஷா மற்றும் சகோதரர் அனுராக் ஆகியோர் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர், நிகிதா

மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டி அதுல் தற்கொலை செய்து கொண்ட சில நாட்களுக்குப் பிறகு.
நிகிதா குருகிராமில் கைது செய்யப்பட்டாலும், அவரது தாயும் சகோதரரும்

பிரயாக்ராஜில் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட அவரது மாமா சுஷீலும் தப்பி ஓடிவிட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட மூவரும் நேற்று கைது செய்யப்பட்டு நள்ளிரவில் பெங்களூரு அழைத்து வரப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் காவலில் வைக்கப்பட்டனர்

“மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்” என்பதால் போலீசார் எச்சரிக்கையுடன் கைது நடவடிக்கையில் ஈடுபட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, பெங்களூரு போலீசார் அவர்களை மூன்று நாட்களுக்குள் ஆஜராகுமாறு கூறியிருந்தனர்.

நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர், அதுல் சுபாஷ் தற்கொலை செய்துகொண்டது மற்றும் அவர்கள் மீது 24 பக்க தற்கொலைக் குறிப்பு மற்றும் 80 நிமிட வீடியோவில் அவர் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து பெரும்

கோபத்தின் மையத்தில் உள்ளனர். பீகாரின் சமஸ்திபூரைச் சேர்ந்த 34 வயதான தொழில்நுட்ப வல்லுநர் திங்களன்று அவரது பெங்களூரு குடியிருப்பில் இறந்து கிடந்தார்.

அவரது வீட்டில் ஒவ்வொரு பக்கமும் “நீதி கிடைக்க வேண்டும்” என்று தொடங்கும் விரிவான குறிப்பை போலீசார் கண்டுபிடித்தனர்.

சுபாஷ் தனது தற்கொலைக் குறிப்பு மற்றும் வீடியோவில், ஒரு மேட்ச்மேக்கிங் இணையதளத்தில் நிகிதாவைக் கண்டுபிடித்த பிறகு 2019 இல் திருமணம் செய்ததாகக் குற்றம் சாட்டினார். தம்பதியருக்கு அடுத்த ஆண்டு ஒரு மகன்

பிறந்தான். நிகிதாவும் அவரது குடும்பத்தினரும் தன்னிடம் தொழில் தொடங்க பெரும் தொகை கேட்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அவர் மறுத்ததால் வாக்குவாதங்கள் வெடித்தன, இறுதியில் அவர் 2021 இல் தங்கள் மகனுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

சடலத்தை மறைத்து வைத்திருந்த இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சடலத்தை மறைத்து வைத்திருந்த இருவர் கைது

சடலத்தை மறைத்து வைத்திருந்த இருவர் கைது

சடலத்தை மறைத்து வைத்திருந்த இருவர் கைது மாத்தறை – வல்யிங்குருகெட்டிய பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் சடலத்தை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்த நபரின் சடலத்தையே இவர்கள் மறைக்க முயன்றுள்ளனர்.

இதன்படி, மின்சார வேலியைப் பொருத்திய 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாம் பொருத்திய மின்சார வேலியில் சிக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 58 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

வெடிபொருட்களுடன் சந்தேகநபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வெடிபொருட்களுடன் சந்தேகநபர் கைது

வெடிபொருட்களுடன் சந்தேகநபர் கைது

வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பூனேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூனேவ சந்திக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை பொலிஸ் அதிகாரிகள் குழு நேற்று (13) இரவு சோதனையிட்டுள்ளது.

கைதான சந்தேகநபரிடமிருந்து சேவை நூல், 150 கிராம் அம்மோனியம் மற்றும் 1 ஜெலக்னைட் குச்சிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மத்துகம பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூனேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது

பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது

பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது பிரித்தானிய நாட்டில் பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்த நபர் ஒருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரால் சேகரிக்கப்பட்ட பணம் கொழும்பு மற்றும் வன்னி பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் குறித்த சந்தேகநபர், 2009 ஆம் ஆண்டு நாட்டை விட்டுச் சென்று பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் பெற்ற பயணத்தடை உத்தரவிற்கு அமைய சந்தேகநபர் நேற்று (30)

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, ​​குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவினரால் பொறுப்பேற்று விமான நிலைய பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி விமான நிலைய பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மற்றும் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உயரதிகாரி கைது நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகரை இலஞ்ச பெற்ற

குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வாடகை அடிப்படையில் வழங்கப்பட்ட மோட்டார் வாகனம் தொடர்பான பிரச்சினையை விசாரிப்பதற்கும் நீதிமன்றத்தினால் மோட்டார் வாகனத்தை

மீளப் பெற்றுக் கொள்வதற்கு உதவுவதற்கும் குறித்த பொலிஸ் அதிகாரி 270,000 ரூபா பெறுமதியான குளிரூட்டியை இலஞ்சமாக கேட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

முறைப்பாட்டாளரால் குளிரூட்டியை கொள்வனவு செய்த விற்பனை நிலையத்தின் முகாமையாளரின் கணக்கில் குறித்த தொகை வரவு

வைக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இந்த கைது செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது அம்பன்பொல-நெகுன்னேவ பிரதேசத்தில் உள்ளாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அம்பன்பொல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான நபர் 63 வயதுடைய அம்பன்பொல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர்.

6 கோடி ரூபா சொத்துக்களை கொள்ளையடித்த 9 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

6 கோடி ரூபா சொத்துக்களை கொள்ளையடித்த 9 பேர் கைது

6 கோடி ரூபா சொத்துக்களை கொள்ளையடித்த 9 பேர் கைது

6 கோடி ரூபா சொத்துக்களை கொள்ளையடித்த 9 பேர் கைது ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி, 6 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான நீல மாணிக்கக்கல், தங்கப் பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டமை தொடர்பில் 9 பேர் நேற்று (29) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த நவம்பர் 10ஆம் திகதி லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மாவத்தகம மற்றும் பொல்பித்திகம பொலிஸ் பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம், 7 பவுண் தங்கம் மற்றும் 2 பொம்மை கைத்துப்பாக்கிகள், கத்தி மற்றும் வேன் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் தேரர் ஒருவரும் அடங்குவதாக தெரியவருகிறது.

சந்தேகநபர்கள் வத்தேகம, சபுகஸ்கந்த, பொல்பித்திகம, குருநாகல், இரத்தினபுரி மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக்

கொண்ட 38 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்

தூங்கும் பெண்களை தலையில் அடிக்க, வீடுகளுக்குள் புகுந்த நபரை கைது செய்தனர்
Posted in உலக செய்திகள்

தூங்கும் பெண்களை தலையில் அடிக்க, வீடுகளுக்குள் புகுந்த நபரை கைது செய்தனர்

தூங்கும் பெண்களை தலையில் அடிக்க, வீடுகளுக்குள் புகுந்த நபரை கைது செய்தனர்

உ.பி., போலீசார், தூங்கும் பெண்களை தலையில் அடிக்க, வீடுகளுக்குள் புகுந்த நபரை கைது செய்தனர்


நான்கு மாதங்களில் நடந்த இதுபோன்ற ஐந்து சம்பவங்களில், ஒரு பெண் இறந்தார், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். குற்றம் சாட்டப்பட்ட அஜய் நிஷாத் மீது கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளன.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்களின் தலையில் அடித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நான்கு மாதங்களில் நடந்த இதுபோன்ற ஐந்து சம்பவங்களில், ஒரு பெண் இறந்தார், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். குற்றம் சாட்டப்பட்ட அஜய் நிஷாத் மீது கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளன.


அஜய் நிஷாத் 2022 ஆம் ஆண்டு சிறுவர் துஷ்பிரயோக வழக்கை எதிர்கொள்வதாகவும், ஆறு மாதங்கள் சிறையில் இருந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது. ஜாமீனில் வெளிவந்த அவர், கோரக்பூருக்குத் திரும்புவதற்கு

முன்பு சூரத்தில் சில காலம் வாழ்ந்தார். ஜூலை 30 அன்று, அவர் ஒரு வீட்டிற்குள் நுழைந்து, ஒரு பெண்ணின் தலையில் தாக்கி, சில நகைகளுடன் தப்பிச் சென்றபோது, ​​அவரது முதல் இரவு தாக்குதல் நடந்தது.

காவல்துறையின் கூற்றுப்படி, இந்த சம்பவம் தொடர்ந்து நடக்கவிருந்த செயல்பாட்டிற்கான வழிமுறையை அமைத்தது. “அவர் ஒரு கொள்ளையுடன் தொடங்கினார். அவர் ஒரு பெண்ணைத் தாக்கி அவரது தலையில் அடித்தார்.

பின்னர் அவர் இதை ஒரு நடவடிக்கையாக ஏற்றுக்கொண்டார்” என்று மூத்த காவல்துறை அதிகாரி டாக்டர் கௌரவ் குரோவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அடுத்த சம்பவம், ஆகஸ்ட் 12ம் தேதி நடந்ததாக, போலீசார் தெரிவித்தனர். இந்த முறை, அடி அதிகமாக இருந்ததால், காயமடைந்தவர் இறந்தார்.

இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 26, நவம்பர் 10 மற்றும் நவம்பர் 14 ஆகிய தேதிகளில் மேலும் மூன்று சம்பவங்கள் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

டாக்டர் க்ரோவர் கூறுகையில், அஜய் நிஷாத் தாக்கிய இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அஜய் நிஷாத் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

“விசாரணையின் போது அவர் நிகழ்வுகளின் சங்கிலியை விவரித்துள்ளார். அனைத்து வழக்குகளிலும் புகார்தாரர்களின் அறிக்கைகளை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்.

இந்தக் குற்றங்கள் அனைத்தும் அவரால் செய்யப்பட்டவை என்று முடிவு செய்யுங்கள்,” என்றார்.

பட்டாசு கொளுத்தியவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பட்டாசு கொளுத்தியவர் கைது

பட்டாசு கொளுத்தியவர் கைது

பட்டாசு கொளுத்தியவர் கைது ,பட்டாசுகளை கொளுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், ஒருவரை ஹட்டன் பொலிஸார்,சனிக்கிழமை (09)​கைது செய்தனர்.

தேர்தல் விதிமுறைகளை மீறி பட்டாசு கொளுத்தி, பெருந்திரளான மக்களுடன் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த ஜனநாயக ஆதரவு மக்கள் குரல் கட்சியின் வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் மற்றும் பலருக்கும்

பொலிஸார் எச்சரித்தனர். சனிக்கிழமை (09) இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து பட்டாசை கொளுத்தினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்தனர்.

ஒன்லைன் பணமோசடி59 பேர்கைது
Posted in இலங்கை செய்திகள்

ஒன்லைன் பணமோசடி59 பேர்கைது

ஒன்லைன் பணமோசடி59 பேர்கைது

ஒன்லைன் பணமோசடி59 பேர்கைது ,வெளிநாட்டு பிரஜைகளைக் குறிவைத்து நடாத்தப்பட்டு வந்த பெரும் ஒன்லைன் நிதி மோசடி ஒன்றை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) சைபர் கிரைம் பிரிவு

கண்டுபிடித்துள்ளதுடன் குறித்த மோசடிகளை நடாத்திய நிறுவனத்தின் இரண்டு தலைவர்கள் உட்பட 59 நபர்களையும் கைது செய்துள்ளது.

சந்தேகநபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (08) கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெளிநாட்டு பிரஜைகளிடமிருந்து குறித்த குழு சுமார்

ரூ.300 மில்லியன் வரை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உறுதியளித்து உள்ளுர் நிறுவனம் ஒன்று கொரிய பிரஜை ஒருவரிடம் ரூ.300 மில்லியன் பணமோசடி செய்துள்ளதாக தென் கொரியத் தூதரகம்

முறைப்பாடொன்றைப் பதிவு செய்ததன் பின்னர் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

ஹெவ்லொக் வீதியிலுள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இந்த மோசடி நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் அங்கு 23 பெண்கள் உட்பட 59 இலங்கையர்களை அதிகாரிகள் கைது செய்தனர்.

சந்தேக நபர்கள், அவர்களில் சிலர் பன்மொழி பேசுபவர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் என்ற போர்வையில் முதலீட்டாளர்களை குறிவைக்க பணியமர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. நிதி என்ன

செய்யப்பட்டது என்பது தெரியாமல் பணியமர்த்தப்பட்டதால், இந்த மோசடி குறித்து தங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

விசாரணையைத் தொடர்ந்து, நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் முகாமையாளர் கைது செய்யப்பட்டதில், கட்டிடம் 9 மில்லியன் ரூபாய்க்கு

வாடகைக்கு விடப்பட்டது தெரியவந்தது. முதலீடுகளை ஈர்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட போலி ஆவணங்களையும் இருந்து கணினிகளில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இயக்குனர் மற்றும் முகாமையாளரை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், பிறர் தலா 1 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

திடீர் சோதனையில் 2 பெண்கள் உட்பட 28 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

திடீர் சோதனையில் 2 பெண்கள் உட்பட 28 பேர் கைது

திடீர் சோதனையில் 2 பெண்கள் உட்பட 28 பேர் கைது

திடீர் சோதனையில் 2 பெண்கள் உட்பட 28 பேர் கைது ,கடலோர பொலிஸ் பிரிவின் மூன்று பிரதேசங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 2 பெண்கள் உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களில் 12 சந்தேக நபர்கள் இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஜம்பட்டா வீதி, புனித அந்தோணி வீதி மற்றும் ரத்னம் வீதி 44 தோட்டப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த நடவடிக்கையின் போது, ​​சந்தேகநபர்களிடம் இருந்து 12,900 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 5,900 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 10 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்ட சுமார் 40 வீடுகள் மற்றும் வீதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான நபர்களை முழுமையாக

சோதனையிட்டதில் குறித்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறக்குறைய 2 மணித்தியாலங்கள் நீடித்த இந்த நடவடிக்கைக்கு “அமாய்” என்ற மோப்ப நாயும் பயன்படுத்தப்பட்டதுடன், விசேட அதிரடிப்படை

அதிகாரிகள் உட்பட சுமார் 50 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த நடவடிக்கையில் கலந்துகொண்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.