Tag: மீனவர்கள்
இராமேஸ்வரம் மீனவர்கள் 30பேருக்கு விளக்கமறியல்
இராமேஸ்வரம் மீனவர்கள் 30பேருக்கு விளக்கமறியல்
இராமேஸ்வரம் மீனவர்கள் 30பேருக்கு விளக்கமறியல் ,இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 30 இராமேஸ்வரம்
மீனவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் இராமேஸ்வரம் பாம்பன் பகுதிகளை சேர்ந்த 30 மீனவர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் 4 படகில் மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த
நிலையில் கடற்படையினரால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர் .
வழக்கை விசாரித்த மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்
4 இந்திய மீனவர்கள் கைது
4 இந்திய மீனவர்கள் கைது
4 இந்திய மீனவர்கள் கைது நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் நேற்று (05) இரவு கைது செய்யப்பட்டனர்.
மீன்பிடி படகு
அவர்களுடன் ஒரு மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை, காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்ற கடற்படையினர், அவர்களை மேலதிக சட்ட
நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்
181இந்திய மீனவர்கள் 24படகுகள் கைது
181இந்திய மீனவர்கள் 24படகுகள் கைது
181இந்திய மீனவர்கள் 24படகுகள் கைது ,2025 ஆம் ஆண்டில் மீன்பிடித்ததற்காக 181 இந்திய மீனவர்கள், 24 படகுகள் கைது செய்யப்பட்டன
2025 ஆம் ஆண்டில் இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததற்காக மொத்தம் 181 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு இதுவரை 24 இந்திய மீன்பிடி படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நேற்று (13) யாழ்ப்பாணத்தில் உள்ள டெல்ஃப்ட் தீவுக்கு அருகில், இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்தபோது கடற்படை ஒரு மீன்பிடிக் கப்பலைக் கைப்பற்றி ஏழு இந்திய மீனவர்களைக் கைது செய்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட படகும் மீனவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்காக
யாழ்ப்பாணம் மைலாடி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுப்பதற்காக, வெளிநாட்டு மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி
நடைமுறைகளைத் தடுப்பதற்காக, இலங்கைக் கடல் எல்லையில் வழக்கமான ரோந்து மற்றும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
07 இந்திய மீனவர்கள் கைது
07 இந்திய மீனவர்கள் கைது
07 இந்திய மீனவர்கள் கைது எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
இதன்போது காங்கேசன்துறை வடமேற்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த ஏழு மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
கைதான மீனவர்கள் படகுடன் கங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் ஏழு பேரும் படகுடன் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
08 இந்திய மீனவர்கள் கைது
08 இந்திய மீனவர் கைது
08 இந்திய மீனவர்கள் கைது ,இலங்கை கடற்படையினர், இன்று (29) அதிகாலை மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி
இந்திய மீன்பிடி படகு
நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த எட்டு இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகுகொன்றறையும் (01) இலங்கை கடற்படையினர் கைது செய்யதனர்.
நாட்டின் கடற்பரப்பை மீறி வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின்
வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இலங்கை கடற்பரப்பில் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை
அதன்படி, இன்று ( 29) வடமத்திய கடற்படை கட்டளை மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில்
ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் பலவற்றை அவதானித்ததோடு, அந்த மீன்பிடி படகுகளை இலங்கையிலிருந்து அகற்றும் விசேட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
அங்கு இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்திய மீன்பிடி படகொன்று (01) இலங்கை கடற்படையினரால் முறையாக சோதனை செய்யப்பட்டுள்ளதுடன், எல்லை விதிகளை மீறி சட்டவிரோத மீன்பிடியில்
ஈடுபட்டிருந்த எட்டு (08) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகுகொன்றறையும் (01) இலங்கை கடற்படையினர் கைது செய்யதனர்.
இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகுகொன்றும் (01) அதில் இருந்த எட்டு (08) இந்திய மீனவர்கள்
மன்னாரில் உள்ள தால்பாடு படகுத்துறைக்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்..
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

- மாத்தளை விமான நிலையம் விற்பனை வாங்குவோர் வாங்கலாம்

- ரணில் மோசடி விசாணை ஆரம்பம் மனைவிக்கு வருத்தம்

எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள்கைது
எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள்கைது
எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள்கைது ,இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையைத் தடுக்க இலங்கை அரசும், மீன்பிடி அமைச்சும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடற்படையும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இலங்கை கடல் எல்லையை கடற்படை மூலம் தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அத்துமீறி வரும் இந்திய மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் கைது செய்ய நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என மீன்பிடி அமைச்சர் உறுதியளித்துள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (12) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
நேற்று (11) மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மீன்பிடி அமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினோம். இந்தச் சந்திப்பு, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தமிழக மீனவர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய வருகை மற்றும்
இதுதொடர்பாக அரசு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காகவும், வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளவுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தச் சந்திப்பில் மீன்பிடி அமைச்சின் செயலாளரும் கலந்துகொண்டார்.
தமிழக மீனவர்களின் 60 நாள் மீன்பிடித் தடைக் காலம் இம்மாதம் 15 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதற்குப் பின்னர், அவர்களின் எல்லை தாண்டிய வருகை எமது கடல் பகுதியில் நிச்சயமாக இடம்பெற வாய்ப்புள்ளது.
இதனை அரசும், மீன்பிடி அமைச்சும் எவ்வாறு தடுக்கத் திட்டமிட்டுள்ளன என்பது குறித்தும், வடபகுதி மீனவர்கள் இதனை எவ்வாறு எதிர்கொள்ளவுள்ளனர் என்பது குறித்தும் நாங்கள் ஆழமாக கலந்துரையாடினோம்.
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையையும், சட்டவிரோத மீன்பிடித்தலையும் தடுப்பதற்காக நாங்கள் நீண்ட காலமாகப் போராடி வருகிறோம். பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளோம். தமிழக மற்றும் இந்திய மட்டங்களில் இதுகுறித்து பேசியுள்ளோம்.
பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்துள்ளோம். வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் 2004 ஆம் ஆண்டு முதல் இவ்விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. நெப்சோ (NEPSO) நிறுவனமும் தன்னால் இயன்ற உதவிகளை வழங்கி வருகிறது.
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையைத் தடுப்பதற்கான திட்டம் குறித்து மீன்பிடி அமைச்சருடன் கலந்துரையாடினோம். இவ்விடயம் தொடர்பாக வடபகுதி மீனவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தோம்.
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையைத் தடுக்க இலங்கை அரசும், மீன்பிடி அமைச்சும் தீவிரமாக செயல்படுகின்றன.
கடற்படையும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. எனவே, எதிர்காலத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இலங்கை கடல்
எல்லையை கடற்படை மூலம் தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அத்துமீறி வரும் இந்திய மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வடபகுதி மீனவர்கள் அச்சப்படத் தேவையில்லை. அரசு தனது செயல்பாடுகளில் உறுதியாக உள்ளது என்று மீன்பிடி அமைச்சர் உறுதியாகத் தெரிவித்தார்.
அரசாங்கம் அத்துமீறிய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தீவிரமாக உள்ளது என்பதை நாங்கள் அறிகிறோம். இருப்பினும், கடற்படை மற்றும் அரசு இவ்விடயத்தில் கவனக்குறைவாக
இருந்தால், எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்ற அச்சம் மீனவர்களிடையே உள்ளது என்பதை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இளங்குமரன் எம்பியுடன் இந்திய மீனவர்கள் சந்திப்பு
இளங்குமரன் எம்பியுடன் இந்திய மீனவர்கள் சந்திப்பு
இளங்குமரன் எம்பியுடன் இந்திய மீனவர்கள் சந்திப்பு ,இலங்கை – இந்திய மீனவர் விவகாரம் தொடர்பில் இந்திய மீனவர் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் பின்னர் இளங்குமரன் எம்.பி. ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில்,
இலங்கைக்கு வந்துள்ள இந்திய மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மீனவர் பிரச்சினை தொடர்பில் என்னைச் சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.
இந்தச் சந்திப்பில் இழுவைமடித் தொழிலை தாங்கள் கைவிடுவதாக எம்மிடம் கூறியிருக்கின்றார்கள். இது அவர்கள் எமக்குக் காட்டிய நல்லெண்ண சமிக்ஞையாக நாங்கள் பார்க்கின்றோம்.
அதற்கான நடைமுறைச் செயற்பாடுகள் தொடர்பிலும் இங்கு ஆராய்ந்துள்ளனர். அவர்கள் இழுவைமடித் தொழிலைக் கைவிட்டால் அவர்களுக்கான மாற்றுத் தொழில் ஏற்பாடுகளை அந்த நாட்டு அரசு செய்ய வேண்டும்.
குறிப்பாக இந்த இழுவைமடித் தொழிலாளர்கள் அந்த நாட்டு அரசிடம் கடலட்டைப் பண்ணை வைப்பதற்கு அனுமதி கேட்டுள்ளனர். உண்மையில் அவர்களது இந்த மாற்று முயற்சி நியாயமானது.
அவர்கள் சொல்வது போன்று இழுவைமடித் தொழிலை அவர்களாகவே நிறுத்தத் தீர்மானித்துள்ளமை நல்ல விடயம் என்றார்
இந்திய மீனவர்கள் 14 பேர் கைது
இந்திய மீனவர்கள் 14 பேர் கைது
இந்திய மீனவர்கள் 14 பேர் கைது எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னாருக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் 14 பேரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்திய மீனவர்கள் மீண்டும் கைது
இந்திய மீனவர்கள் மீண்டும் கைது
இந்திய மீனவர்கள் மீண்டும் கைது ,எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மேலும், அவர்களிடம் இருந்து ஒரு விசை படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு மன்னார் கடற்பரப்பில் கைதான மீனவர்களை இலங்கையில் உள்ள மன்னார் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீனவர்களை படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படை தகவல் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் ,யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 13 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை மல்லாகம் நீதவான் முன்னிலையில் நேற்று (28) இரவு ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
நேற்று(28) அதிகாலை இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி இயங்கியதால் இருவர் காயமடைந்தனர்
காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டது.
இந்திய மீன்பிடிக் கப்பலை கடற்படையினர் கைது செய்யவிருந்த போது, கடற்படையினரின் சட்ட உத்தரவை மீறியதாலும், மேலும் கலவரமான நடத்தையாலும் கடற்படைக் குழுவொன்று கப்பலில் ஏறியுள்ளது.
கப்பலுக்குள் கடற்படையினர் ஏற விடாமல் தடுக்கும் வகையில் இந்திய மீனவர்கள் அதற்கு செவிசாய்க்காமல், வழக்கமான பணிகளுக்கு இடையூறு விளைவித்து, கடும் எதிர்ப்பை காட்டி, மீன்பிடி கப்பலை ஆக்ரோஷமாக
கையாண்டதால், இந்திய மீனவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதுடன், கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி கப்பலில் ஏறும்போது,
கடற்படை வீரர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மீனவர்கள் குழு ஆக்ரோஷமாக தாக்க முயன்றதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படை அதிகாரி ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க முற்பட்ட போது, அந்த துப்பாக்கியின் செயல்பாட்டினால் இரண்டு மீனவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.
காயமடைந்த இந்திய மீனவர்களை யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு ,யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்தனர்.
காயமடைந்த இருவரும் இன்று (28) அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டது.
இந்திய மீனவர்களின் படகில் ஏறி அவர்களை கைது செய்ய கடற்படை வீரர் முயற்சித்தார். இதன்போது கடற்படை வீரரை ஏற்றிக்கொண்டு மீனவர்களின் படகு தப்பிச்செல்ல முற்பட்டுள்ளது.
இதனையடுத்து ரோந்து படகில் சென்ற இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இந்திய மீனவர்கள் இருவர் காயமடைந்தனர்.
கைதான இந்திய மீனவர்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் பொறுப்பேற்க மறுத்துள்ள நிலையில் பொலிஸாரிடம் இந்திய மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
தமிழக மீனவர்கள் 17பேர் கைது
தமிழக மீனவர்கள் 17பேர் கைது
தமிழக மீனவர்கள் 17பேர் கைது , தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படை நாள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமை முகாமில் தடுத்து வைக்கப்பட்டதோடு படகு மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது அப்போது பணியில் ஈடுபட்டுக்
கொண்டிருந்த இலங்கை கடலோர காவல் படையால் இந்த தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் உள்ளடங்குவதோடு உடனடியாக விடுதலை செய்து தாயகம் அழைத்துவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
சிறைபிடிக்கப்பட்ட முதலாவது பெருந்தொகையிலான இந்தியா மீனவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர் .
உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மீனவருடைய குடும்ப உறவினர்கள் கண்ணீர் பார்க்க போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தமிழக மீனவர்களை இலக்கு வைத்து இலங்கை களிப்படையில் கைது செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாகை மீனவர்கள் 12 பேர் சிறைப்பிடிப்பு
நாகை மீனவர்கள் 12 பேர் சிறைப்பிடிப்பு
நாகை மீனவர்கள் 12 பேர் சிறைப்பிடிப்பு ,எல்லை தாண்டி வந்து பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேரை அவர்களின் விசைப்படகுகளுடன் துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சிலம்புச் செல்வன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சனிக்கிழமை (26) குனா, செஞ்சிவேல், வெங்கடேசன், சின்னஅப்பு, கார்த்தி, ரகு உள்ளிட்ட 12
மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். நள்ளிரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே 40 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்கள் 12 பேரையும், விசைப்படகையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 12 பேரும் விசாரணைக்காக மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு முதற்கட்ட
விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் படகுடன் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து மாலையில் பருத்தித்துறை நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர் படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்படி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 12 நாகை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நாகையில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
மீனவர்கள் 17பேர் கைது
மீனவர்கள் 17பேர் கைது
மீனவர்கள் 17பேர் கைது ,தமிழக மீனவர்கள் 17பேர் இலங்கை கடல் படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடல்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த மீனவர்கள் 17 பேரே தம்மால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது .
இலங்கை நெடுந்தீவு கடல்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த மீனவர்கள் இவ்விதம் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் பார படுத்தும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக குறிப்பிட பட்டுள்ளது .
புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் தமிழக மீனவர்கள் தொடராக கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

11 இந்திய மீனவர்கள் கைது
11 இந்திய மீனவர்கள் கைது
11 இந்திய மீனவர்கள் கைது ,இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு கடற்பரப்பில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிணத்தின் மருந்தை மீன்களுக்கு அடிக்கும் மீனவர்கள்
பிணத்தின் மருந்தை மீன்களுக்கு அடிக்கும் மீனவர்கள்
பிணத்தின் மருந்தை மீன்களுக்கு அடிக்கும் மீனவர்கள் ,இலங்கை யாழ்ப்பாண பகுதிகளில் பிணத்திற்கு அடிக்கப்படும் ஒருவகையான மருந்தினை மீன்களுக்கு அடித்து அவை பழுதாகாமல் இருப்பதற்காக பயன்படுத்தி வருவதாக மருத்துவர்கள் குற்றம் சுமத்தி இருக்கின்றனர்.
பிணங்கள் பழுதடையாமல் இருப்பதற்காக அடிக்கப்படும் அந்த திரவ வடிவிலான மருந்தினை மீன்களுக்கு பயன்படுத்துவதால் அந்த மீன்களுக்கு அருகில் இளையான் மொய்ப்பதில்லை எனவும்,
அதை உண்ணுகின்ற மக்களுக்கு கேன்சர் நோய் உள்ளிட்டவை ஏற்படுவதாகவும் மக்களை மிக அவதாரமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கோப்பாய் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான மீன்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் தமிழருடைய வடமகான
பகுதிகளில் இந்த இவ்வாறான மருந்துகளை பயன்படுத்தி நீங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் ,
அவற்றை இரண்டு நாட்கள் பிரிட்ஜ்கள் வைத்தாலே துர்நாற்றம் வீசுகின்ற நிலை காணப்படுவதாகவும் மீனவர்கள் செய்கின்ற இந்த லீலைகளை மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
தமது குறுகிய கால வியாபார நோக்கத்தை கருதி இவ்வாறு செய்கின்ற மீனவர்கள் இந்த செயல்பாட்டினால் அதனை வாங்கி சுவைத்து உனக்கு இந்த
மீனவர்கள் பலர் பாதிக்கப்படுவதாகவும் அவர்களுக்கு இதை உண்கின்ற பொழுது வயிற்று நோய் தாக்கம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்களை வாங்கி உண்ணும் மக்களை மிகையாக இருங்கள் உங்கள் உங்களுடைய விரும்பி உண்ணும் மீன்களுக்குள் இவ்வாறான பணத்துக்கு
அடிக்கப்படும் மருந்துகளை பயன்படுத்துவதால் உங்கள் உடல் உபாய்கள் அவயகரமான நிலைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

மீனவர்கள் 22பேர் கைது
மீனவர்கள் 22பேர் கைது
மீனவர்கள் 22பேர் கைது ,இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ,இலங்கை கடற்படையால் 22 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் தூத்துக்குடி பகுதியில் இருந்து வந்த மீனவர்களை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் .
தெற்கு கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த பொழுதே 22 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது..
இலங்கையில் மீனவ அமைச்சராக டக்கிளஸ் என்கின்ற தமிழர் அமைச்சராக அங்க வகிக்கின்ற இந்த காலப்பகுதியில் ,இலங்கை கடற்படையினால் மீனவர்கள் அதிகமாக கைது செய்யப்பட்ட வருகின்ற சம்பவம் இடம்பெற்று வருகின்றது.
இந்தியாவில் தேடப்படும் நபராக இலங்கை மீன்பிடி அமைச்சர் காணப்படுகின்ற இந்த வேளையிலேயே ,இந்தியா மீனவர்கள் இலக்கு வைத்து இவரால் கைது செய்யப்படுகின்றன சந்தேகத்தை எழுப்பி நிற்கின்றது.
அமைச்சர்களாக பதவி ஏற்கின்ற பொழுதும் மக்களுக்குரிய நீதியியினை இவர்கள் நிலை நாட்டினர்களா என்ற கேள்வியை மக்கள் மன்றம் இப்பொழுது கேள்வி எழுப்பி கொள்கிறது.
விடுதலையின் கனவை சுமந்து விடுதலைக்கப் போராடுகின்ற தமிழ் மக்கள் மத்தியில் அந்த அடக்குமுறை ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கும் ,இந்த மக்கள் துடித்துக் கொண்டிருக்கின்ற இந்த காலப்பகுதியில் ,
இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் சலசலப்பையும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

13 தமிழக மீனவர்கள் கைது
13 தமிழக மீனவர் கைது
13 தமிழக மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேர் விசைப்படகுகளில் மீன்பிடிக்க வந்த பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்று விசைப் படகுகளை இலங்கு கடற்படை செய்துள்ளனர் .
மற்றும் ஏனைய பொருட்களும் சிங்கள கடல் படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதில் பயணித்த 13 மீனவர்களும் கைது செய்யப்பட்டு தற்பொழுது போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தமிழகம் புதுக்கோட்டை பகுதியிலிருந்து மீன்பிடிக்க வந்த படகுகளை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கை கடற்பரப்புக்குள் அத்து மீறி மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற தமிழக மீனவர்கள் தொடராக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
எமது கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதால் எமது மீனவருடைய வாழ்வாதார பாதிக்கப்படுவதாக இலங்கை மீனவர்கள் இப்படி தெரிவித்து வருகின்றனர் .
இந்த கைதிகளை பின்புறத்தில் டக்ளஸ் தேவானந்தா உள்ளாரா என்கின்ற கேள்வியை எழுப்பியுள்ளது .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

மீனவர்கள் 18பேர் கைது
மீனவர்கள் 18பேர் கைது
தமிழக மீனவர்கள் 18பேர் கைது செய்ய பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர் .
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாஹ்க அதெரிவிக்க பட்டுள்ளது .
தமிழீழ விடுதலை புலிகள்
தமிழீழ விடுதலை புலிகள் அந்த தாயக மண்ணில் முற்றாக ல் அழிக்க பட்ட பின்னர் இந்த கைது இடம்பெற்றுள்ளது .
தொடர்ச்சியாக இலங்கை கடற்படையால் தமிழக மீன்வர்ட்ஜ்கள் எல்லை மீறி மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு வருகின்றனர் .
தமது மீனவர்கள் கைது செய்ய படுதல் தவிர்க்க படவேண்டும் என்பதுடன் ,சிறை பிடிக்க பட்ட தமிழக மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என ,தமிழக ஆளும் முதல்வர் மீளவும் இலங்கையிடம் கோரி விடுத்தார் ,
அவவிதமான கோரிக்கை விடுக்க பட்ட பின்னரும் இவ்விதம் தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் கைது செய்ய பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .
இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது
இலங்கையின் கடற்படையால் மீனவர்கள் கைது
இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது , இலங்கை நெடுந்தீவு பகுதியில் அத்துமறி நுழைந்து மீன்படியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர் .
அத்துமீறி தமது கடலுக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுதே அவர்களை தாங்கள் கைது செய்துள்ளதாக இப்படிச் சொல்கிறது இலங்கை கடற்படை .
விசாரணையின் பின்னர்
கைதானவர்கள் விசாரணையின் பின்னர் தற்பொழுது காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .
காவல்துறை விசாரணைகள் முடிவுற்ற நிலையில் நீதிமன்றத்தில் அவர்களை பாரப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை காவல்துறை ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களது தாய் மண்ணில் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கப்பட்டதன் பின்னர், இந்திய மீனவர்கள் குவிக்கப்பட்டு இலங்கை கடற்படையால் தொடராக கைது செய்து வருகின்றனர் .
மீனவர்களுடைய பொருட்கள் அபகரிப்பு
இலங்கை கடற்படை மேற்கொண்டு வரும் மூர்க்கத்தனமான தாக்குதலில் பலமான சேதங்களையும் சந்தித்து திருத்தினர்.
கப்பல்கள் மற்றும் மீனவர்களுடைய பொருட்களை அபகரித்தும் தாக்கியும் படுகொலை செய்து வந்தது எந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது .
இந்த நிலையில் தற்போது இலங்கை கடுப்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













































