லஞ்சம் பெற்ற அரசியல்வாதிகள் சுமந்திரன் குற்றச்சாட்டு

லஞ்சம் பெற்ற அரசியல்வாதிகள் சுமந்திரன் குற்றச்சாட்டு
Spread the love

லஞ்சம் பெற்ற அரசியல்வாதிகள் சுமந்திரன் குற்றச்சாட்டு

லஞ்சம் பெற்ற அரசியல்வாதிகள் சுமந்திரன் குற்றச்சாட்டு, மதுபான சாலைகள் அமைப்பதற்காக லஞ்சம் பெற்ற இரு எம்பிக்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை என சுமந்திரன் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்

பாராளுமன்ற தேர்தல் இடம் பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் மதுபான சாலைகள் அமைப்பதற்கு ஆளும் அரசுகளினால் சில எம்பிக்களுக்கு லஞ்சமாக இந்த அனுமதி பத்திரம் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாக வைக்கப்பட்டு வந்த நிலையில்,

தற்பொழுது சுமந்திரன் அவர்கள் இந்த கருத்தை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் .

லஞ்சம் பெற்ற எம்பிக்கள் யார் என்பதை அவர்களது பெயர் விபரங்களை அவர் குறிப்பிட விரும்பவில்லை .

மதுபான சாலைகள் அமைப்பதற்காக கடந்த கால அரசாங்கத்தினால் 361 அனுமதிகள் வழங்கப்பட்டதாகவும் ஆனால் இதுவரை அது தொடர்பாக எவ்விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சாமர்த்தினார் .

ஐயா ஸ்ரீதரன் அவர்களே பார் வைத்திருப்பதாக அர்ச்சனா இராமநாதன் போன்றவர்கள் குற்றம் சுமத்தி வருகின்ற பின்புலத்தில், தற்பொழுது சுமந்திரன் ஈடுபட்டாரா என்கின்ற சந்தேகத்தை இவரது இந்த பேச்சு ஏற்படுத்தி இருக்கிறது .

சுமந்திரனுடைய கதை திரைக்கதை வசனத்திலேயே அர்ஜுனா இராமநாதன் நடித்த வருவதாக மக்கள் மத்தியில் இவ்வாறு ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

அவ்வாறான காலப்பகுதியில் சுமந்திரன் இவ்விடம் தெரிவித்திருப்பதே அந்த சந்தேகத்தை மேலும் பலப்படுத்தி இருக்கிறது.