Posted in இலங்கை செய்திகள்

துரத்தும் மர்ம கொலையாளிகள் – -சுடலைக்குள் வீச பட்ட சடலம்

துரத்தும் மர்ம கொலையாளிகள் – -சுடலைக்குள் வீச பட்ட சடலம்

இலங்கையில் காணாமல் போன வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர்
சுடலை க்கு அருகில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இதுவரை கடத்தி சென்ற கும்பல் கோரமான் தாக்குதலுக்கு உள்ளான பின்னர் இவ்வாறு பாடுகொலை புரிந்து மயானத்திற்கு அருகி சடலத்தை வீசி விட்டு சென்றுள்ளனர்

    தனி நபர் பழிவாங்கலின் உச்சத்தின் கோரமாக இது பார்க்க படுகிறது ,கூலிக்கு நபர்களை கொலை செய்யும் குழு ஒன்று

    தற்போது இலங்கை தழுவிய ரீதியில் செயல் படுகிறது ,அவ்வாறான குழுக்களே இந்த படு கொலைகளை தொடராக புரிந்து

    வருகின்றனர் .கடத்தல் ,கப்பம்,லஞ்சம்,பாலியல் ,உறவுகள் என வகை

    படுத்த பட்ட பிரிவுக்குள் நபர்களை உள்ளடக்கி அதன் பின்னர் இவ்விதம் கொலை செய்து வீச படுகின்றனர்

    இவ்வாறு நிழல் போல தொடரும் இந்த மர்ம கொலைகள் ,கொலையாளிகள் தொடர்பில் மக்கள் பெரிதும் அச்சம் கொண்டுள்ளனர்

    ஆளும் கோட்டபாய ,மகிந்தா ஆட்சியில் இவ்வாறன மர்ம கொலைகள் ,அதிகரித்த்து செல்வது குறிப்பிட தக்கது

    துரத்தும் மர்ம கொலையாளிகள்
    துரத்தும் மர்ம கொலையாளிகள்
    Posted in இலங்கை செய்திகள்

    கழிவறையில் தொற்றிய கொரனோ – 1000 சிங்கள கடற்படை பாதிப்பு

    கழிவறையில் தொற்றிய கொரனோ – 1000 சிங்கள கடற்படை பாதிப்பு

    இலங்கை காவல்துறையினர் ,மற்றும் விசேட படையினர் நாட்டில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்த தீவிரமாக போராடி வருகின்றனர் .

    இவர்களது மக்கள் நலனுடைய இந்த சேவை ஒரு பக்கம் முழு வீச்சாக நடந்த வண்ணம் இருக்க ,

      மறு பக்கம் ,மக்களை காப்பாற்றுவதாக ஓடிய படையினர் தமது படையினரை காப்பாற்ற முடியாத அவல நிலையில் சிக்கி தவிக்கின்றனர் .

      இராணுவத்தினர் பயன் படுத்திய பொது கழிவறைகள் ஊடக இந்த கொரனோ நோயானது இராணுவத்திற்கு பரவியுள்ளது .இதுவரை

      சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் பாதிக்க பட்டுள்ளததாக உள்வீட்டு கசிவுகள் தெரிவிக்கின்றன .

      எனினும் இதனை இலங்கை இராணுவம் மறைத்து வருகிறது

        இதுவரை 240 கடல் படையினர் இந்த நோயின் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் ர் ,அங்கு அவர்கள் பயன் படுத்திய கழிவறை, மற்றும் உணவாக கூடங்களில் இருந்து இவை பரவியுள்ளது .

        இராணுவ வைத்தியர்கள் தீவிர சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர் ,மேலும் சில டசின் பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

          மக்களை காப்பாற்ற ஓடிய படையினர் இப்பொழுது ,தமது படையினரை காப்பாற்ற முடியாத அவலத்தில் சிக்கி தவிக்கின்றனர்

          போர்க் காலத்தில் நிகழ்ந்ததை போல இப்பொழுது செய்திகள் யாவும் முழுமையாக மூடி மறைக்க படுகின்றன .

          இலங்கையில் உள்ள ,அது சார்ந்த ஊடகங்கள் யாவற்றுக்கும் வாய்ப்பூட்டு போட பட்டுள்ளன ,அதனால் செய்தி தணிக்கை இடம்பெறுகிறது

          நண்பர்களே இந்த செய்திகளை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் ,இந்த இராணுவத்தால் உங்களுக்கும் பரவிட வாய்ப்பு இருக்கும் .

          கழிவறையில் தொற்றிய
          கழிவறையில் தொற்றிய
            Posted in முக்கிய செய்திகள்

            யாழில் இளம் பெண்களை விற்கும் மாபியா கும்பல்

            யாழில் இளம் பெண்களை விற்கும் மாபியா கும்பல்

            இலங்கையில் சிவப்பு சால்வை குடும்பத்தினர் ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் இன்றுவரை பல்வேறு பட்ட விடயங்கள் மிக இரகசியமாக நடந்து வருகின்றன .

            ஆளும் அரசியல் அதிகாரத்தை பாதுகாப்பு அரணாக மேற்கொண்டு , இவ்வாறான இளம் பெண்களை விபச்சாரத்திற்கு விற்கும் மாபியா குழுக்கள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

              இந்த பெண்களை விற்பனை செய்வதில் ,அரசியல் பிரமுகர்கள்,மருத்துவர்கள் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள்

              ஒன்றிணைந்து செயல் படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

              கடவுளாக வணங்க படும் மருத்துவர்கள் இந்த இழி செயலில் ஈடுபட்டு வருவதே மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

              வவுனியா,முருகண்டி,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம் என தமிழர் பகுதிகளில் இவ்வாறன மாபியா கும்பலினால் பெண்கள் விற்க

              படுகின்றன ,இதில் வவுனியாவே தாய் தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது

              பண ஆசை காட்டி இந்த கள்ள சந்தை விபச்சாரம் இடம்பெறுகிறது ,இதற்கு காவல்துறையினர்,அரசியல் புள்ளிகளின் மறைமுக ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது ,

              நடமாடும் விபச்சாரமும் இடம்பெறுகிறது ,சொகுசு வாகனங்களில் அழைத்து வர படும் பெண்கள் செலவுகள் இன்றி அந்த வானுக்குள்

              வைத்தே விடையத்தை முடித்து அனுப்ப படும் நடமாடும் விபச்சாரமும் இடம்பெறுகிறது

                வாடிக்கையாளர்கள் ,பாதுகாப்பு ,மாற்றும் இலகுவான முறையில் செயல் படுவதற்கு இவ்விதமான நாவீன முறைகள் கையாள பட்டு வருகின்றன

                தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் ,புலிகளின் போரியல் ,நிர்வாக கட்டமைப்பு தெரியாத ,இரண்டாயிரம் ஆண்டு

                அளவில் பிறந்த இளசுகளே இதன் முகவர்களாக செயல் பட்டு வருகின்றனர் .

                இவர்களே முன் அரணில் பணி புரியும் நபர்களாக மாற்றம் பெற்றுள்ளன .இவ்வாறான பெண்களில் 15 முதல் 45 வரையான பெண்கள் ஈடுபடுகின்றனராம்

                  கொட்டல்களில் இந்த பெண்களின் புகைப்படம் அங்கு தங்கியுள்ளவர்களுக்கு காண்பிக்க படுகிறதாம்
                  என அந்த தகவல் கசிவுகள் தெரிவிக்கின்றன

                  இந்த மருத்துவர்கள் யார் என்பதும் ,அவர்கள் லீலைகள் விரைவில் வெளியிட படும் .

                  யாழில் இளம் பெண்களை விற்கும் மாபியா கும்பல்
                  யாழில் இளம் பெண்களை விற்கும் மாபியா கும்பல்
                      Posted in இலங்கை செய்திகள்

                      இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த 101 மாணவர்கள் தனிமை படுத்தல்

                      இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த 101 மாணவர்கள் தனிமை படுத்தல்

                      இந்தியாவில் தவித்து கொண்டிருந்த 101 இலங்கை மாணவர்களை ,சிறப்பு

                      விமான மூலம் இலங்கை அரசு அழைத்து வந்தது .அவ்வாறு வந்தடைந்தவர்கள்

                      21 நாட்களுக்கு தனிமை படுத்த பட்டுள்ளனர் .சிறப்பு தனிமை படுத்தல்

                        முகாமில் இவர்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
                        என இராணுவம் அறிவித்துள்ளது

                        இந்தியாவில் இருந்து
                        இந்தியாவில் இருந்து

                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கை கடல் படையினர் 30 பேருக்கு கொரனோ

                          இலங்கை கடல் படையினர் 30 பேருக்கு கொரனோ

                          இலங்கையின் மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த முப்பது

                          காதல் படையினருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                          இவ்வாறு பாதிகக் பட்டவர்கள் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

                          மேலும் வெளிசறை கடற்படை முகாம் முற்றாக முடக்க பட்டுள்ளதுடன் ,

                          அங்கிருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட கடற்படையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் , அவசரமாக தனிமை படுத்த பட்டுள்ளனர்

                          முதன் முதலாக இலங்கை இராணுவம் இதனை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

                          இலங்கை கடல் படையினர்
                          Posted in இலங்கை செய்திகள்

                          ஊரடங்கை மீறிய 34,956 பேர் இலங்கையில் கைது

                          ஊரடங்கை மீறிய 34,956 பேர் இலங்கையில் கைது

                          இலங்கையில் ஊரடங்கு வேளையில் அந்த விதிகளை மீறி வெளியில் உலவிய சுமார் 34,956 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                          இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன் ,

                          அவர்கள் வாகனங்களும் பறிமுதல் செய்ய பட்டுள்ளன

                          இந்த தண்ட பணத்தினை பதின் நாட்களுக்குள் செலுத்த வேண்டும் தவறின்

                          குற்ற பணம் மேலும் அதிகரிக்க பட்டு நீதிமன்றில் நிறுத்த படுவார்கள் என காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்

                          ஊரடங்கு விரைவில் அகற்ற படும் எனவும் ,சில பகுதியில் விலக்க பட்டுள்ளமைக்கு குறிப்பிட தக்கது

                          ஊரடங்களி மீறிய
                          ஊரடங்களி மீறிய
                          Posted in இலங்கை செய்திகள்

                          கால்களினால் கைகளை கழுவும் இயந்திரம் கண்டு பிடிப்பு

                          கால்களினால் கைகளை கழுவும் இயந்திரம் கண்டு பிடிப்பு

                          இலங்கையில் பிராவை வரும் கொரனோ நோயில் இருந்து தப்பிக்க எவ்வாறு கைகளை கழுவ வேண்டும் என விதிகள் கூறப்பட்டது .

                          அதனை அடுத்து இதனை நிவர்த்தி செய்திட எண்ணிய வாலிபர் ஒருவர்

                          கால்களினால் கைகளை புதிய இயந்திரம் மூலம் கழிவிடும் வழியொன்றை கண்டு பிடித்தார் .

                          மலிந்த விலையில் தயாரிக்க பட்டுள்ள இந்த இயந்திரம் மக்களுக்கு

                          பெரிதும் பலன் தரும் ஒன்றாக அமைந்துள்ளது

                          வெறும் மூவாயிரம் ரூபா செலவில் இது தயாரிக்க பட்டுள்ளது

                          கால்களினால் கைகளை கழுவும்
                          கால்களினால் கைகளை கழுவும்
                          Posted in இலங்கை செய்திகள்

                          சுகாதார முறைகளை பின்பற்றாத வர்த்தகர்களின் வர்த்தக லைசன்ஸ் இரத்து

                          சுகாதார முறைகளை பின்பற்றாத வர்த்தகர்களின் வர்த்தக லைசன்ஸ் இரத்து

                          ஒன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும்போது சரியான சுகாதார முறைகளை பின்பற்றாத வர்த்தகர்களின் வர்த்தக உரிமங்கள்

                          இரத்து செய்யப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

                          உணவுப் பொருட்கள் மற்றும் பொருட்களை விற்பனை செய்யும் மொபைல் விற்பனையாளர்கள் பாதுகாப்பான முறையில்

                          வியாபாரம் செய்யாமையால் கொவிட் 19 வைரஸ் பொது மக்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                          இதன் விளைவாக, வீடு வீடாகச் சென்று மீன், காய்கறிகள், பழங்கள் மற்றும் பேக்கரி தயாரிப்புகளை ஒன்லைன் முறையின் கீழ்

                          விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் நிறுவனங்களின் மொபைல் வணிகத்தை முன்னெடுப்பதில்

                          பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

                          அதற்கமைய சுத்தமான சீருடை அணிவது, பொருத்தமான காலணிகளை அணிவது, வியாபாரம் செய்யும் போது முக

                          கவசங்களை அணிவது, மற்றும் கையுறைகளை பயன்படுத்துதல், கைக்கழுவும் திரவங்களை உபயோகித்தல் ஆகியனவும் கைக்கொள்ள வேண்டும்.

                          மேலும் பேக்கரி உற்பத்தி பொருட்கள், சமைத்த உணவு போன்றவற்றை வழங்கும் போது அவற்றை கைளில் தொட்டு வழங்குவதை தவிர்க்குமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.

                          உணவு பொருட்களை காகிதத்திலோ அல்லது பிற அட்டைகளிலோ விற்பது, பணத்தைத் தொட்ட பின்னர் உணவுப் பொருட்கள் அல்லது வேறு பொருட்களைத் தொடக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

                          அதேபோல் உணவுகளை வழங்கும் போது ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பேணுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

                          சுகாதார முறைகளை
                          சுகாதார முறைகளை
                          Posted in இலங்கை செய்திகள்

                          உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் – உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

                          உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் – உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

                          இலங்கையில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம

                          சாந்திக்காக இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் மௌன அஞ்சலி மற்றும் மத வழிபாடுகள் நடைபெற்றன.

                          திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் ஆளுனர் அனுராதா யஹம்பத் தலைமையில் உயிர்

                          இழந்தவர்களின் ஈத்ம சாந்திக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

                          இன்று காலை 8.45 மணியளவில் இடம் பெற்று இந்த நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

                          மலையகத்திலும் இன்று (21.04.2020) வழிபாடுகள் நடைபெற்றன.

                          மலையகத்திலுள்ள தேவாலயங்களில் இன்று விசேட ஆராதனைகள் நடைபெற்றன.

                          கோவில்கள்இ விகாரைகள்இ பள்ளிவாசல்கள் ஆகியவற்றிலும் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி வழிபாடுகள் இடம்பெற்றன.

                          உயிர்த்த ஞாயிறு குண்டுத்
                          உயிர்த்த ஞாயிறு குண்டுத்
                          Posted in இலங்கை செய்திகள்

                          கொரனோவேளை கோட்டபாயா திமிர் பேச்சு

                          கொரனோவேளை கோட்டபாயா திமிர் பேச்சு

                          உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு ஒரு வருடம் நிறைவடைவதை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களின் செய்தி

                          கொடூர தீவிரவாத கருத்தினைக் கொண்ட ஒரு குழுவினர் 2019 ஏப்ரல் 21 ஞாயிறன்று முக்கிய கத்தோலிக்க தேவாலயங்களையும்

                          சுற்றுலா ஹோட்டல்கள் சிலதையும் இலக்குவைத்து மேற்கொண்ட பாரிய மனிதப் படுகொலைகள் இடம்பெற்று இன்று ஒரு வருடம் நிறைவடைகின்றது.

                          இந்த காட்டுமிராண்டித்தனமான குற்றத்தின் மூலம் உயிரிழந்தவர்களினதும் கடுமையாக காயப்பட்டவர்களினதும்

                          குடும்ப உறுப்பினர்களுக்கும், அதனால் பெரிதும் கவலைக்குள்ளான கத்தோலிக்க மக்களுக்கும் அனைத்து

                          இலங்கையர்களுக்கும் நான் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

                          உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதலினால் சுமார் 270பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமுற்றனர்.

                          காயமடைந்தவர்களில் சிலர் பின்னர் உயிரிழந்தனர். இன்னும் சிலர் அங்கவீனமுற்றுள்ளனர்.

                          தாக்குதலில் உயிரிழந்த பெரும்பாலானவர்கள் கத்தோலிக்க சமயத்தவர்கள் என்ற போதும் அது அவர்களை மட்டுமன்றி முழு

                          இலங்கை மக்களையும் இலக்கு வைத்த பயங்கரவாத நடவடிக்கையாகும். எந்த சிந்தனையின் பெயரில் இந்த மனிதப்

                          படுகொலை இடம்பெற்றாலும் இது மனித இனத்திற்கே இழுக்கான ஒன்றாகும்.

                          தேசிய பாதுகாப்பை மறந்து பாதுகாப்பு திட்டங்களும் ஏற்பாடுகளும் கைவிடப்பட்டிருந்த காரணத்தினாலேயே உயிர்த்த

                          ஞாயிறு மனிதப் படுகொலைக்கு வசதியான பின்னணி உருவானது. அத்தகையதொரு கட்டற்ற சூழலில் தீவிரவாதமும் பயங்கரவாதமும் தலைதூக்குவது ஆச்சரியமான ஒன்றல்ல.

                          ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற எனது கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு எனது ஆட்சிக் காலத்தில் அனைத்து

                          இனங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், எந்தவகையிலும் தீவிரவாதத்திற்கும், தீவிரவாத வன்முறைக்கும்

                          இடமளிக்கப்போவதில்லை என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு வகைகூறவேண்டியவர்களை சரியாக இனம்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் நான் எனது மக்களுக்கு உறுதியளிக்கின்றேன்.

                          உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியான, பாதிப்புக்கு உள்ளான கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட இலங்கை மக்களுக்கு நான் மீண்டும் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          வெளிநாடுகளில் தவிக்கும் மக்களை அழைத்து வர பறந்தன இலங்கை விமானங்கள்

                          வெளிநாடுகளில் தவிக்கும் மக்களை அழைத்து வர பறந்தன இலங்கை விமானங்கள்

                          கொரனோ வைரசால் வெளி நாடுகளில் சிக்கி தவித்து வரும் இலங்கையர்களை

                          அழைத்து வரும் நடவடிக்கையில் இலங்கை விமானங்கள் ஈடுபட்டுள்ளன

                          இவ்வாறு இந்த விசேட விமானங்கள் Amritsar, Coimbatore, Pakistan’s Karachi,

                          Lahore and Nepal’s Kathmandu
                          போன்ற விமான தளங்களுக்கு பறப்பில் ஈடுபட்டுள்ளன

                          நாடு திரும்ப முடியாது தவிக்கும் மக்களை நாம் இலங்கை அழைத்து வருவோம்

                          என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்த நிலையில் இந்த விமான சேவைகள் இடம் பெறுகின்றன

                          வெளிநாடுகளில் தவிக்கும்
                          வெளிநாடுகளில் தவிக்கும்
                          Posted in இலங்கை செய்திகள்

                          ஆட்டோ ,மோட்டார் சைக்கிள் மோதல் -ஒருவர் பலி

                          ஆட்டோ ,மோட்டார் சைக்கிள் மோதல் -ஒருவர் பலி

                          இலங்கை நாவல பிட்டிய பகுதியில் ஆட்டோ ,மோட்டார் சைக்கிள் நேரெதிர்

                          மோதி விபத்தில் சிக்கியதில் ஆட்டோ சாரதி சம்பவ இடத்தில பலியானார் ,

                          அவரது மகன் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

                          குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,


                          இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான வீதி விபத்துக்கள்

                          அதிகரித்து செல்வது குறிப்பிட தக்கது

                          ஆட்டோ மோட்டார் சைக்கிள் மோதல்
                          ஆட்டோ மோட்டார் சைக்கிள் மோதல்
                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கையில் கொரனோவால் 309 பேர் பாதிப்பு

                          இலங்கையில் கொரனோவால் 309பேர் பாதிப்பு

                          இலங்கையில் பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி 309 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இதுவரை ஏழுபேர் உயிரிழந்துள்ளனர் .

                          மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்க கூடும் என தனிமை

                          படுத்தல் முகாம்களில் தடுத்து வைக்க பட்டுள்ளது பன்னி ரெண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இதுவரை விடுதலை செய்ய படவில்லை


                          அது தவிர சில கிகிராமங்கள் தொடர்ந்து இராணுவ கண்காணிப்பில் மக்கள் நடமாட தடை விதிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

                          இலங்கையில் கொரனோவால்
                          இலங்கையில் கொரனோவால்
                          Posted in இலங்கை செய்திகள்

                          சாராய கடைகளை மூடுமாறு உத்தரவு- கொதிக்கும் குடி மகன்கள்

                          சாராய கடைகளை மூடுமாறு உத்தரவு- கொதிக்கும் குடி மகன்கள்

                          இலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு இலங்கை அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது


                          ஊரடங்கு தளர்த்த பட்ட நிலையில் குடிமகன்கள் முண்டியடித்து சாராய கடைகளில் நிரம்பி வழிந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து

                          இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

                          சாராய கடைகளை மூடுமாறு
                          சாராய கடைகளை மூடுமாறு
                          Posted in இலங்கை செய்திகள்

                          ரஞ்சன் ராமநாயக்க பணியில் விடுதலை

                          ரஞ்சன் ராமநாயக்க பணியில் விடுதலை

                          முன்னாள் எம்பி ரஞ்சன் ராமநாயக்க குற்ற தடுப்பு பிரிவினரால் கைது

                          செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டார் ,அவர் தற்பொழுது விடுதலை பிணையில் செய்யப் பட்டுளளார்

                          ஆளும் அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் தீவிரம் பெற்றுள்ளன


                          அதன் தொடர்ச்சியே இவ்வாறான மிரட்டி ,அடிபணிய வைக்கும் கைதுகள் என தெரிவிக்க படுகிறது

                          ரஞ்சன் ராமநாயக்க
                          ரஞ்சன் ராமநாயக்க
                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கையில் வெடிக்க இருந்த குண்டு – தப்பிய மக்கள்

                          இலங்கையில் வெடிக்க இருந்த குண்டு – தப்பிய மக்கள்

                          கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்குப் பின்னரும் மற்றுமொரு

                          பயங்கரவாத தாக்குதலை நடக்க திட்டமிடப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தனர்.

                          அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதுதொடரபாக மேலும்

                          தெரிவிக்கையில் ,கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து மேற்கொள்ள

                          திட்டமிடப்பட்ட இரண்டாவது தாக்குதல் குறித்து தகவல்கள் புலனாய்வுப்பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகள் மூலம்

                          கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
                          இதன் அடிப்படையில் இந்த தாக்குதலைத் திட்டமிட்டமை தொடர்பில் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

                          சம்பவம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி தொடர்பாக ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு

                          பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அவரது தொழில் ரீதியான தொடரின் அடிப்படையில் இடம்பெற்ற தொடர்பு மற்றும்

                          தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படவில்லை. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சமிபத்தில்

                          மேற்கொண்ட விரிவான விசாரணையின் அடிப்படையிலேயே சட்டத்தரணி கைது இடம்பெற்றதாகவும் கூறினார்.

                          ஒரு சில அமைப்புகளை ஆரம்பித்து அதற்கு தலைமைத்துவம் வழங்கி, அதற்கு நிதியுதவி வழங்கிய நபர்கள் குறித்த விடயங்களும்

                          தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அவ்வாறானோரும் தற்போது

                          மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர் . உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர்

                          பயங்கரவாத தலைவர் ஸஹ்ரான் ஹாசிமின் குழு இரண்டாக பிளவுபட்டதாகவும், அதில் ஒரு குழு பிரிந்து சென்றதோடு, மற்றைய

                          குழுவே இவ்வாறான தாக்குதலை மேற்கொண்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டிய பொலிஸ் ஊடகப்

                          பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன புலனாய்வுப் பிரிவினரை திசைதிருப்புவதற்காக பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சி இது என்றும் கூறினார்.

                          இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் முஸ்லிம் தீவிரவாதத்தை ஏற்படுத்துவதற்காக சில அமைப்புகளுடன்

                          இணைந்து பணியாற்றியுள்ளமை மற்றும் இஸ்லாத்தை தவறான விளக்கங்கள் மூலம் வெளிப்படுத்தி ஒரு சில இளைஞர்களை

                          பிழையாக வழி நடாத்திச் சென்றுள்ளனர். இதில் இக்குண்டுதாரிகள் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர்.

                          இவ்வாறான திட்டத்திற்கு உதவி ஒத்தாசை, அதனைத் தூண்டியமை உள்ளிட்ட விடயங்களை மேற்கொண்டவர்கள் தொடர்பிலும்

                          தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுகிறது. தெற்காசிய வலயத்திலுள்ள நாடொன்றில்

                          மேற்கொள்ளப்படும் தாக்குதலொன்றை அடுத்து, அதனை மேற்கொள்ளும் சில வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை, இரகசியமாக இலங்கைக்கு அழைத்து வந்து பாதுகாப்பாக வைத்திருக்க

                          உதவுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தமை தொடர்பில் தகல்வகள் வெளிவந்துள்ளன என்று தெரிவித்த அவர் உயிர்த்த ஞாயிறு

                          தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் ஓரிரு மாதங்களில் இடம்பெற்ற விசாரணைகளின்போதும், குறித்த சட்டத்தரணி விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவித்த அவர்

                          சமிபத்திய விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


                          பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் உயிர்த்த ஞாயிறு தொடர்பானவை அல்ல.

                          அவர் தனது கடமையில் தவறியமை தொடர்பில் வேறு குற்றத்தின் அடிப்படையிலானது எனவும் அவ்விசாரணை வேறாக

                          இடம்பெறுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன மேலும் தெரிவித்தனர்.

                          இலங்கையில் வெடிக்க இருந்த குண்டு
                          இலங்கையில் வெடிக்க இருந்த குண்டு

                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கையில் 22, அரச நிறுவனங்களை திறக்க உத்தரவு – தடை நீக்கம்

                          இலங்கையில் 22, அரச நிறுவனங்களை திறக்க உத்தரவு – தடை நீக்கம்

                          ஏப்ரல், 22 புதன் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் அரச நிறுவனங்களின்

                          செயற்பாடுகள் குறித்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.

                          அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் தலைவர்கள் 22 புதன் முதல் ஒன்றுகூடி

                          தமது நிறுவனங்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து திட்டமிட வேண்டும்.

                          ஏப்ரல் 22,23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் தமது பிரதித் தலைவர்கள்

                          உட்பட ஏனைய முக்கிய அதிகாரிகளை ஒன்றுகூட்டி அந்தந்த நிறுவனங்களின் சேவைக்கு அழைக்கப்படவுள்ள ஊழியர்களின்

                          எண்ணிக்கை, அழைக்கப்பட வேண்டிய அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் பணிகள் ஆகியவற்றை

                          தீர்மானிக்குமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

                          இக்கூட்டங்களில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் செயற்திட்டமொன்றை தயாரித்து 27 திங்கள் முதல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

                          திட்டம் பற்றி ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவிக்குமாறும் நிறுவனத் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

                          22 புதன் அரச நிறுவனங்களை
                          22 புதன் அரச நிறுவனங்களை
                          Posted in இலங்கை செய்திகள்

                          40,000 கொரொனா நோயாளிகள் உள்ளதாக நானா கூறவில்லை – மனோ மறுப்பு

                          40,000 கொரொனா நோயாளிகள் உள்ளதாக நானா கூறவில்லை – மனோ மறுப்பு

                          கொரொனா சோதனை பற்றிய என் கருத்தை எஸ்.பி. திசாநாயக்க திரிக்கிறார். இவரது தலையையும் சோதனை செய்ய வேண்டும்.

                          மனோ கணேசன்
                          கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்பில், நேற்று முதல் நாள் தெரிவித்த கருத்தை அமைச்சர் எஸ்.பி.

                          திசாநாயக்க திரித்து பேசுகிறார். அதை பிடித்துக்கொண்டு ஒரு தேரர் என்னை கைது செய்ய வேண்டும் சீஐடியில் சென்றுமுறையீடு செய்கிறார்.

                          இவர்களை பொறுத்தவரையில் தேசிய பிரச்சினைகள் தொடர்பாக் “நாங்கள்” எதுவும் பேசக்கூடாது என நினைக்கிறார்கள்.

                          இந்நாட்டில் 40,000 கொரொனா நோயாளிகள் (Corona Positive) இருப்பதாக நான் கூறவேயில்லை. 40,000 “முதல் தொடர்பாளர்கள்” (First Contact Persons) இருக்கின்றார்கள் என்ற நான் கூறினேன்.

                          “முதல் தொடர்பாளர்கள்” என அறியப்பட்டவர்கள், கொரொனா நோயாளிகளுடன், தம் நாளாந்த வாழ்வில் நேரடியாக

                          சம்பந்தப்பட்டு ஒன்றாக, வாழ்ந்து, இருந்து, உண்டு வாழ்ந்தவர்களாகும். “முதல் தொடர்பாளர்கள்” என்றுதான் இவர்களை மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

                          இந்த, “முதல் தொடர்பாளர்கள்” பற்றி எங்களுக்கு யார் சொன்னது? மார்ச் 24ம் திகதியன்று அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில்

                          நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில், இராணுவ தளபதி சவேந்திர சில்வாதான் தனது உரையில், இதை கூறினார். இராணுவ,

                          பொலிஸ் புலனாய்வாளர்கள் வீடு வீடாக போய், தெருத்தெருவாக போய், கொரொனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாரென அடையாளம் கண்டுள்ளார்கள் என அவர் மேலும் கூறினார்.

                          இது முக்கியமான ஒரு பணி. இதையிட்டு நான் பாதுகாப்பு துறையை பாராட்டுகிறேன்.

                          சில அரசாங்க அரசியல்வாதிகள், மனோ கணேசனுக்கு எப்படி இந்த அரசாங்க இரகசிய தகவல்கள் கிடைக்கின்றன என கேட்கிறார்கள்.

                          கடவுளே, இவை இரகசிய தகவல்கள் இல்லை. கட்சி தலைவர் கூட்டத்தில் பகிரங்கமாக இராணுவ தளபதி கூறியதாகும்.

                          நான் கூட்டங்களுக்கு போனால், அங்கு தூங்குவதில்லை. கூட்டங்களில் பேசப்படுவது அனைத்தையும் காது கொடுத்து கேட்கிறேன்.

                          என்னிடம் கேள்வி கேட்கும், இந்த அரசாங்க அரசியல்வாதிகள், கட்சி தலைவர்கள் அல்ல. இதனால், இவர்கள் இந்த கூட்டங்களுக்கு வருவதில்லை. இதற்கு நான் என்ன செய்ய முடியும்?

                          சீன அரசு, 40,000 பரிசோதனை கருவிகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக அறிந்துள்ளேன். இந்த முதல்

                          தொடர்பாளர்களை, இந்த பரிசோதனை கருவிகளை பயன்படுத்தி பரிசோதிக்கும்படி நான் அரசாங்கத்தை கோருகிறேன்.

                          கொரொனா நோயாளர்கள் இருந்தால், அவர்கள் இந்த பிரிவிற்குள்தான் அதிகமாக இருக்க முடியும். ஆகவே அவர்களை

                          முதலில் சோதியுங்கள் என கூறுகிறேன். சோதனை வேகத்தை அதிகரியுங்கள் எனவும் கூறுகிறேன்.

                          இதை நான் மட்டும் கோரவில்லை. GMOA உட்பட முழு வைத்திய சமூகமே இதைதான் சொல்கிறது.

                          தொடர்ந்து இப்படி முகத்தை மூடிக்கொண்டு வீடுகளுக்குள் இருக்க முடியாது. நாட்டை திறந்து விட வேண்டும். ஆனால், அதற்கு முன்

                          மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். ஆகவே சோதனைகளை அதிகரியுங்கள்.

                          நான் சொல்வதை சரியாக புரிந்துக்கொள்ள முடியாத அமைச்சர் திசாநாயக்க, நான் சொல்லாததை சொன்னதாக கூறுகிறார். பொய்

                          சொல்கிறார். கொரொனா நோயாளர்கள் பரிசோதிக்கப்படுவதை போன்று, அமைச்சர் திசாநாயக்கவின் தலையையும் சோதனை செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன்.

                          40 000 கொரொனா நோயாளிகள்
                          40 000 கொரொனா நோயாளிகள்
                          Posted in இலங்கை செய்திகள்

                          மரத்தி ஏறிய புலி சுட்டு பிடித்த வன விலங்கு அதிகாரிகள்

                          மரத்தி ஏறிய புலி சுட்டு பிடித்த வன விலங்கு அதிகாரிகள்

                          இலங்கை மஸ்கொலியா சேமநல காட்டு பகுதியில் புலி ஒன்று மரத்தின்

                          மீது ஏறிய நிலையில் கண்டு பிடிக்க பட்டது .மேற்படி தகவல் வனவிலங்கு

                          அதிகாரிகளுக்கு தெரிவிக்க பட்டதை அடுத்து அந்த புலி மயக்க மருந்து அடித்து சுட்டு பிடிக்க பட்டது

                          இவ்வாறு பிடிக்க பட்ட புலி மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளது

                          மரத்தி ஏறிய புலி சுட்டு பிடித்த
                          மரத்தி ஏறிய புலி சுட்டு பிடித்த
                          Posted in இலங்கை செய்திகள்

                          நாளை முதல் 18 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வு

                          கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் கொழும்பு, கம்பஹா,

                          களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை, மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 20 ஆம்

                          திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்று இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

                          ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

                          இதனையடுத்து மறு அறிவித்தல் வரை இந்த மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரையில் தினமும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

                          கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அலவத்துகொட, அக்குரணை, வரகாபொல மற்றும் அக்கரைப்பற்று

                          பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

                          இந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் மாதம் 20 ஆம் முதல் தினமும் காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

                          கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பொலிஸ் பிரிவுகளில்

                          எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் தினமும் காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.

                          அதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், பம்பலப்பிட்டி, வாழைத்தோட்டம், மருதானை

                          கொத்தடுவ, முல்லேரியா, வெல்லம்பிட்டிய, கல்கிஸ்ஸ, தெஹிவளை மற்றும் கொஹுவல ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும்

                          கம்பஹா மாவட்டத்தில் ஜா-எல, கொச்சிக்கடை மற்றும் சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

                          நாளை முதல் 18 மாவட்டங்களுக்கு
                          நாளை முதல் 18 மாவட்டங்களுக்கு