Tag: இலங்கை
பிரதமரின் சர்ச்சை கருத்து
பிரதமரின் சர்ச்சை கருத்து
இலங்கை பிரதமர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார் என கூறி செய்திகள் வெளியாகியுள்ளன.
உள்ளுராட்சி தேர்தல்கள் அமைதிக் காலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களிற்கு வேண்டுகோள் விடுத்ததன் மூலம்,
ஹரிணி அமரசூரிய தேர்தல் விதிமுறைகளை மீறினாரா என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிரதமர் தெரிவித்துள்ள விடயங்களை தனது சட்டதிணைக்களத்திற்கு முதலில் அனுப்பி விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகதேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாங்கள் இந்த விவகாரம் குறித்து எந்த நடவடிக்கையையும் எடுப்போம் என தெரிவித்துள்ள ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க எனினும் முதலில் அந்த கூற்றினை சட்ட திணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர் என்ன தெரிவித்தார் என்பதை அறிவது முதலில் அவசியம். இதன் காரணமாக அதனை சட்ட பிரிவிடம் சமர்ப்பிக்க வேண்டும். பிரதமரின் கூற்று எந்த வகையில் சட்டத்தை மீறியுள்ளது என்பதை ஆராயவேண்டும்.
பிரதமரின் அறிக்கையில் தேர்தல்கள் தொடர்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையிலேயே இலங்கைப் பிரதமர் அவ்வாறு கூறினாரா இல்லையா? அவர் கூறியதற்கான சான்று நிரூபிக்கக் கூடிய வகையில் இருக்கின்றதா?
அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அது தேர்தல் ஆணையகத்திற்கு சமர்ப்பிக்கப்படுமா? சமர்ப்பிக்கப்படுமாயின் சட்டத்தின் முன் பிரதமர் நிறுத்தப்படுவாரா என அரசியல் மட்டத்தில் சலசலப்பு எழுந்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெற்றும்வரும் இன்றைய நாளில் அதற்கான முடிவுகளும் வெளியாகும். இந்நிலையில் பிரதமர் மீது இவ்வாறான சர்ச்சை கருத்து தொடர்பில் முறைப்பாடு தெரிவித்துள்ளமை,
அரச தரப்பில் மேலும் அதிர்ச்சியை உண்டாகியுள்ளதோடு இதனை யார் தெரிவித்திருப்பார்கள் என்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் இரகசிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.
வாக்குச் சீட்டில் இப்படி செய்யாதீர்கள்
வாக்குச் சீட்டில் இப்படி செய்யாதீர்கள்
வாக்குச் சீட்டில் இப்படி செய்யாதீர்கள் நாளை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது வாக்களிக்கையில் மக்களே இப்படி செய்யாதீர்கள் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க,
வாக்காளப் பெருமக்களே வாக்களிக்க வரும்போது, தேசிய அடையாள அட்டை, வாகன அனுமதி பத்திரம் மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை எடுத்து வரவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
வாக்களிப்புக்கான தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக, அலுவலக அடையாள அட்டை,
தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக விண்ணப்பம் செய்தமைக்கான பிரதி ஆகியவற்றை எடுத்து வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், வாக்குச்சீட்டில் கட்சிகளின் பெயர்களுக்கு எதிரே கட்சிகளின் சின்னங்களும் சுயேச்சைக்குழுக்களின் பெயர்களுக்கு எதிரே சுயேச்சைக் குழுக்களின் சின்னங்களும் இருக்கும்,
அதற்கு எதிராக வெற்றுக்கட்டம் இருக்கும், அதில் புள்ளடி (X) இடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தால், ஞாயிற்றுக்கிழமை (04) மாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒலிப்பதிவில், உரையாற்றி உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க,
வாக்குச்சீட்டில் எழுதவோ, சித்திரம் கீறவோ, கிறுக்கவோ, எண்ணங்களை எழுதவோ, பெயர்களை எழுதவோ வேண்டாம். புள்ளடி (X) இடப்படாத எந்தவொரு வாக்குச்சீட்டும் நிராகரிக்கப்படும் என்றார்.
நாளை நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான பரப்புரைகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தபோதிலும்,
தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளும் அனைத்து மாவட்டங்களிலும் மும்மரமாக நடைபெற்று முடிந்திருக்கின்றது.
தேர்தல் முறைகேடுகளை தவிர்க்கும்பொருட்டு அநேகமான பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளமையும் அறியக்கூடியதாக இருக்கின்ற, அதேநேரம்
ஒரு வாக்குகூட செல்லுபடியற்றதாகி விடக்கூடாது என்பதில் தேர்தல் ஆணைக்குழு முழுக் கவனத்தை செலுத்தி , வாக்காளப் பெருமக்களுக்கு வாக்குச் சீட்டில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் குவியும் உல்லாச பயணிகள்
இலங்கையில் குவியும் உல்லாச பயணிகள்
இலங்கையில் குவியும் உல்லாச பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையின் உல்லாசத்துறை பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
விழுந்து போய் கிடக்கின்ற இலங்கையின் பொருளாதாரத்தை ,நிமிர்த்துவதற்கு இலங்கை வருகின்ற உல்லாச பயணிகள் வருகையும் ,அவர்களால் செலவு செய்யப்படுகின்ற அந்நிய செலாவணியுமே இலங்கையை தூக்கி நிறுத்தி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், ஒன்பது லட்சம் உல்லாச பயணிகள் ,பல் நாடுகளிலிருந்து இலங்கை நோக்கி வந்துள்ளதாக இலங்கை உல்லாச துறை இப்படி சொல்கிறது.
நாள்தோறும் உல்லாச பயணிகள் இலங்கை வருவதற்கு ,அதிக விருப்பம் கொண்டு வருவதாக தெரிவிக்க படுகிறது .
அதனால் எதிர்வரும் நாட்களில் உல்லாச பயணிகள் சிரமமில்லாமல் நாட்டுக்கு வந்து செல்வதற்கான, அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை உல்லாசத்துறை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு அபிவிருத்தி செய்யப்பட்டு ,அழகான நகரமாக உல்லாச பயணிகளுக்கு காண்பிப்பதற்காகவே ,புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அதன் அடிப்படையில் தற்போது ,இலங்கை வரும் உல்லாச பயணிகளை கவருவதற்கான பல்வேறு திட்டங்களை இலங்கை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்த ஒன்பது லட்சம் உல்லாச பயணிகள் வருகை .இந்த வருடத்தில் 90 இலட்சமாக மாற்றுவதற்கு. இலங்கை பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது

- ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம்

- துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கல்வித் திட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இலக்கு

- யோஷித ராஜபக்ச மீதான உயர் நீதிமன்ற விசாரணையை இடைநிறுத்துவதற்கான கோரிக்கை

- தேவுந்தர தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு

- நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்படும்

- செம்மணியில் 13 எலும்பு கூடுகள் மீட்பு

- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு

- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடை

- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குவைத்துக்கான விமான சேவை நிறுத்தம்

- கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு தொடர்பான மூன்று மரணங்கள்

இலங்கையில் பாடசாலைகள் அனைத்தும் விடுமுறை
இலங்கையில் பாடசாலைகள் அனைத்தும் விடுமுறை
இலங்கையில் பாடசாலைகள் அனைத்தும் விடுமுறை செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் கல்வித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
தற்பொழுது இடம்பெற இருக்கின்ற உள்ளூராட்சி தேர்தலை அடுத்து. வாக்கு அளிக்கும் மன்றங்களாக பாடசாலைகள் அமைய பெற்றுள்ளதால். அந்தக் காரணத்தினால் தற்பொழுது நாடு தழுவிய ரீதியில் .அனைத்து பாடசாலைகளும் இரண்டு நாட்களுக்கு விடுமுறை விடுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது .
தேர்தல் முடியும் வரை இந்த இரண்டு நாட்களும். முக்கியமான பாடசாலைகளில் வாக்களிப்பு கூடார இடம்பெற இருப்பதினால் .இந்த விடுமுறை நடத்தப்படுகிறது.
இரண்டு நாட்களும் மாணவர்கள் குசியில் உறைந்திருக்கின்றனர்.
விடுமுறை எப்பொழுது வரும் என எதிர்பார்த்து ,விடுமுறைக்காக காத்திருந்த மாணவர்களுக்கு, இந்த இரண்டு நாட்கள் விடுமுறை பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
இந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் பல கட்சிகள் தனித்தும், கட்சிகளாகும் போட்டியிடுகின்ற நிலையிலே ,இந்த தேர்தல் தற்பொழுது பரபரப்பாக மக்களினால் நல் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .
- அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது

- ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம்

- துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கல்வித் திட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இலக்கு

- யோஷித ராஜபக்ச மீதான உயர் நீதிமன்ற விசாரணையை இடைநிறுத்துவதற்கான கோரிக்கை

- தேவுந்தர தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு

- நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்படும்

- செம்மணியில் 13 எலும்பு கூடுகள் மீட்பு

- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு

- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடை

- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குவைத்துக்கான விமான சேவை நிறுத்தம்

- கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு தொடர்பான மூன்று மரணங்கள்

சுவிஸ் தூதர் வீட்டில் திருட்டு
சுவிஸ் தூதர் வீட்டில் திருட்டு
சுவிஸ் தூதர் வீட்டில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொள்ளு பட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இலங்கையில் இருக்கக்கூடிய சுவிஸ் தூதரகத்தின் தூதர் கொள்ளுப்பிட்டி பகுதியில் வசித்து வந்ததாகவும் ,அவரது தங்குமிட வீட்டில் 4:30 மில்லியன் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருட்டில் ஈடுபட்டதாக அங்கு பணிபுரிந்த இருவர் மீது போலீசார் சந்தேகம் கொண்டுள்ளதாகவும், அவர்கள் மீது விசாரணைகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்க நகைகள் வைரம் உள்ளிட்டவையே அங்கு அதிகளவில் திருட்டு போயுள்ளது .
இவ்வாறு காணாமல் போன அல்லது திருட்டு போன நகைகள் வைரங்கள் மணிக்கூடுகள் என்பனவற்றை மீட்கும் நடவடிக்கை காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர்.
நன்கு திட்டமிட்ட முறையில் சுவிஸ் தூதரது இல்லத்தில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், ஆதனால் சுவிஸ் தூதர் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது வீட்டில் இத்தனை மில்லியன் பெறுமதியான நகைகள் வைரங்கள் எப்படி வந்தன என்கின்ற கேள்வியும் தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்கள் முதல் உலக நாடுகள் வரை பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.
நாள்தோறும் இலங்கையில் நாடளாவிய ரீதியில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றமையும்,
இவ்வாறன திருட்டு சம்பவங்கள் தொடராக பெருகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது

- ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம்

- துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கல்வித் திட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இலக்கு

- யோஷித ராஜபக்ச மீதான உயர் நீதிமன்ற விசாரணையை இடைநிறுத்துவதற்கான கோரிக்கை

- தேவுந்தர தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு

- நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்படும்

- செம்மணியில் 13 எலும்பு கூடுகள் மீட்பு

- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு

- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடை

- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை

பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம்
பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம்
பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய செயற்பட வேண்டியது தற்போது அத்தியாவசியமானதாகும்.
2027இல் மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகைக்காக விண்ணப்பிப்பதில் இது நேரடியாக தாக்கம் செலுத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினருடன் புதன்கிழமை (30) சந்தித்த பின்னரே கலாநிதி ஹஷ்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
‘இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவுடன் சிறந்த சந்திப்பொன்று இடம்பெற்றது.
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல வரி சலுகை 2027 ஆம் ஆண்டுக்குள் முடிவடையும். நாம் அதற்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
நான் இருமுறை சரிபார்த்தேன். அதிகரிப்பு கோர எந்த ஒதுக்கீடும் இல்லை.
எனவே நாம் செய்ய வேண்டியது பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகும்.’ என ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை இது தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர்,
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வியெழுப்புவதை வரையறுக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகின்றார்.
நிகழ்நிலை காப்பு சட்டத்தின் ஊடாக ஊடக சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகின்ற நிலையில்,
அமைச்சரவை பேச்சாளரின் இந்த கூற்று எதனை வெளிப்படுத்துகிறது நாம் இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேசுவோம் என்றார்.
ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகிறது
ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகிறது
ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகிறது ,ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
GSP+ சலுகை தொடர்பான நிபந்தனைகள் குறித்த முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக இந்த குழு வருகிறது.
இந்தக் குழு எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவொன்று எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் மே மாதம் 7 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரிக்கும் மலேரியா காய்ச்சல்
இலங்கையில் அதிகரிக்கும் மலேரியா காய்ச்சல்
இலங்கையில் அதிகரிக்கும் மலேரியா காய்ச்சல் ,இலங்கையில் மலேரியா மீண்டும் அதிகரித்து வருவதாகவும், சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய நபர்களிடம் இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார
அதிகாரிகள் எச்சரிக்கின்றனர் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
மலேரியா எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஆலோசகர் சமூக மருத்துவர் டாக்டர் புபுது சூலசிறி கூறினார்.
மலேரியா மீண்டும் வருவதைத் தடுக்க இலங்கை ஒரு வலுவான திட்டத்தை பராமரித்து வருகிறது, பயணிகள் இந்த நோயுடன் திரும்புவதற்கான தொடர்ச்சியான ஆபத்தை அங்கீகரித்துள்ளது.
இலங்கையில், 2023 இல் 62 மலேரியா நோயாளிகள் இருந்தனர், ஒரு மரணம் ஏற்பட்டது, அதே நேரத்தில் 2024 இல் 38 வழக்குகள் மற்றும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது. 2025 இல் இதுவரை 14 வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
உலக சுகாதார அமைப்பு (WHO) செப்டெம்பர் 2016 இல் இலங்கையை மலேரியா இல்லாததாக சான்றளித்தது, உள்நாட்டு பரவலை நீக்குவதில் அதன் வெற்றியை ஒப்புக்கொண்டது,” என்று டாக்டர் சூலசிறி மேலும் கூறினார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ,இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும்
மற்றும் மாபெரும் பொதுக் கூட்டமும் நேற்றய தினம் (19) மாலை 5.30 மணியளவில் சாகாம வீதி, அக்கரைப்பற்று – 08 அர்ச்சனா திரையரங்கு முன்பாக இடம்பெற்றது….
அதன் காட்சி படங்கள் கீழே இணைக்க படுகிறது .வாரீர் வீட்டுக்கு ஒட்டு தாரீர்






.


இலங்கையில் மூடப்படும் 100 பாடசாலைகள்
இலங்கையில் மூடப்படும் 100 பாடசாலைகள்
இலங்கையில் மூடப்படும் 100 பாடசாலைகள் ,மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை இப்போது 500ஐ தாண்டிவிட்டது.
அவற்றில், அதிக எண்ணிக்கையிலான பாடசாலைகளில் இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.
இவ்வாறான பாடசாலைகளை மூடி, அந்த மாணவர்களை வசதிகள் உள்ள பாடசாலைகளில் சேர்ப்பதற்கான முறையான திட்டத்தைத் தொடங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள பல சிறிய பாடசாலைகள் மூடப்பட்டு, அவற்றின் மாணவர்கள் தற்போது வேறு பாடசாலைகளை அனுப்பப்படுகிறார்கள். மூன்று கிலோமீட்டருக்குள் ஒரு பாடசாலை என்ற கருத்தை மனதில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது
இலங்கை மீதான வரியை நிறுத்தி வைத்தார் டிரம்ப்
இலங்கை மீதான வரியை நிறுத்தி வைத்தார் டிரம்ப்
இலங்கை மீதான வரியை நிறுத்தி வைத்தார் டிரம்ப் ,இலங்கை உட்பட பல நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரிகள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், சீனாவிற்கு எதிரான வரிகள் 125% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா இன்று (9) முதல் 104% வரி விதித்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, சீன நிதி அமைச்சகம் இன்று பிற்பகல் அமெரிக்க இறக்குமதிகளுக்கு 84% வரி விதிக்கப்போவதாக அறிவித்தது.
அதன்படி, சீனாவின் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்கா மீண்டும் ஒருமுறை வரி விகிதத்தை அதிகரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
இலங்கையின் மக்கள் தொகை 2 763 170
இலங்கையின் மக்கள் தொகை 2 763 170
இலங்கையின் மக்கள் தொகை 2 763 170 என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கூறுகிறது.
2012 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை விட இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில்
1,403,731 பேர் அதிகரிப்பைக் காட்டுவதாகவும், 2012 மற்றும் 2014 க்கு இடையில் சராசரி ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி 0.5 சதவீதமாக இருந்ததாகவும் திணைக்களம் கூறுகிறது.
இலங்கையின் மக்கள்தொகையில் அதிகபட்சமாக 28.1 சதவீதம் பேர் மேல் மாகாணத்தில் வசிப்பதாகவும், மிகக் குறைந்த அளவில் 5.3 சதவீதம் பேர் வடக்கு மாகாணத்தில் வசிப்பதாகவும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கம்பஹா மாவட்டத்தில் 2,433,685 பேர் வசிக்கின்றனர், அதே நேரத்தில் கொழும்பு மாவட்டத்தின் மக்கள் தொகை 2,374,461 ஆகும்.
இலங்கையின் மக்கள் தொகை இவ்வாறு வெளிப்படுத்தப்பட்டதாகவும், திணைக்களத்தால் நடத்தப்பட்ட மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி
கணக்கெடுப்பின் (2024) முதற்கட்ட அறிக்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் திணைக்களம் மேலும் கூறுகிறது.
இலங்கையை விட்டு ஓட்டம் பிடித்தார் மோடி
இலங்கையை விட்டு ஓட்டம் பிடித்தார் மோடி
இலங்கையை விட்டு ஓட்டம் பிடித்தார் மோடி ,இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கான தனது மூன்று நாள், அரசு முறைப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குப் புறப்பட்டார்.
அவர் அனுராதபுரத்திலிருந்து ஹெலிகாப்டரில் தென்னிந்தியாவில் உள்ள ராமேஸ்வரத்திற்குப் புறப்பட்டார், அதே நேரத்தில் அவருடன் வருகைதந்திருந்த தூதுக்குழு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
இதற்கிடையில், அவர் X இல் பதிவிட்டதாவது, “எனது வருகையின் போது வழங்கப்பட்ட அரவணைப்புக்கு ஜனாதிபதி திசாநாயக்க, மக்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“கொழும்பாக இருந்தாலும் சரி, அனுராதபுரமாக இருந்தாலும் சரி, இந்தப் பயணம் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான
கலாச்சார, ஆன்மீக மற்றும் நாகரிக உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இது நமது இருதரப்பு உறவுகளுக்கு நிச்சயமாக உத்வேகம் அளிக்கும்.” என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய இலங்கை ஒப்பந்தங்கள் குறித்து சர்ச்சை
இந்திய இலங்கை ஒப்பந்தங்கள் குறித்து சர்ச்சை
இந்திய இலங்கை ஒப்பந்தங்கள் குறித்து சர்ச்சை ,பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது இந்தியாவுடன் அரசாங்கம் கையெழுத்திட்ட
ஒப்பந்தங்கள் குறித்து செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா இன்று தெரிவித்தார்.
“நாங்கள் இந்த ஒப்பந்தங்களுக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் பிரச்சனை என்னவென்றால், இந்த ஒப்பந்தங்கள் குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை. குறிப்பாக பாதுகாப்பு ஒப்பந்தத்தில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது
என்பது எங்களுக்குத் தெரியாது. இந்த நாட்டு மக்களுக்கு இந்த ஒப்பந்தங்களைப் பற்றி அறிய உரிமை இருப்பதால், நாங்கள் அவற்றைப் பற்றி
பாராளுமன்றத்தில் கேள்வி கேட்போம்,” என்று அவர் இன்று ஒரு ஊடக சந்திப்பில் கூறினார்.
“இந்திய விரிவாக்கம் பற்றி கூச்சலிட்டு வரும் ஒரு கட்சி, மோடியை வரவேற்று அவருக்கு மிக உயர்ந்த மரியாதை அளிப்பதைக் காண்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
பொருளாதார ரீதியாக சக்திவாய்ந்த நாடாகத் திகழும் இந்தியாவுடன் இலங்கை இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதால் இதைச் செய்ய வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
இலங்கை அரசுக்கு மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் விஜய்
இலங்கை அரசுக்கு மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் விஜய்
இலங்கை அரசுக்கு மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் விஜய் ,3 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இலங்கை செல்லவுள்ள நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் இடைக்காலத் தீர்வு பெற பிரதமர் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வு. ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும்.
மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமை. மீனவர்கள் நலன் மற்றும் கச்சத்தீவு சார்ந்த தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுத் தீர்மானம் தந்த அழுத்தம்,
தமிழ்நாடு அரசைத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடான கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவர் பாதுகாப்பு நிலைப்பாடு நோக்கி நகர வைத்துள்ளது.
1974-ல் கச்சத்தீவு கைவிட்டுப் போகக் காரணம், ஆட்சி அதிகாரப் பசி கொண்ட அன்றைய ஆளும்கட்சியான தி.மு.க.தான். 1999 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசுகள் இயங்கியதே தி.மு.க.வின் தயவினால்தான்.
அத்தகைய நிலையில், அப்போதெல்லாம் கச்சத்தீவு விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது மட்டும் தனித் தீர்மானம் என்ற கண்துடைப்பு நாடகம் ஏன்? இந்தக் கேள்வியே தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது.
அன்று முதல் இன்றுவரை ஒன்றிய அரசுக்கு, வாஞ்சையோடு வருடிக் கொடுத்து, மறைமுக அன்பை வெளிப்படுத்தும் கடிதம் எழுதும் கபட நாடகம் மட்டுமே இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மாயாஜால வித்தை.
அதிகார மையமாக இருக்கும்போதெல்லாம் கை விட்டுவிட்டு, 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், இப்போது தனித் தீர்மானம் இயற்றும் கபட நாடகத் தி.மு.க. அரசின் அந்தர் பல்டி அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் கடுமையாகக் கண்டிக்கிறது.
இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் இதுவரை 800-க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். அவர்களின் உடைமைகளும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுவிட்டன.
குஜராத் போன்ற மற்ற மாநில மீனவர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் ஒன்றிய அரசு எங்கள் தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்?
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சத்துடன் பாராமுகமாகவே இருக்கிறது.
எப்போதும் மீனவ நண்பனாகவே, உண்மையான உறுதியுடனும் உணர்வுடனும் நிற்கும் தமிழக வெற்றிக் கழகம், ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்தப் போக்கைத் தீர்க்கமாகக் கண்டிக்கிறது.
கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுக்குச் சொந்தமாவது மட்டுமே தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் மற்றும் தீர்வு.
நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும்.
மாண்புமிகு ஒன்றிய பிரதமர் திரு.மோடி அவர்கள், கட்டாயமாக இலங்கை அரசிடம் இதை வலியுறுத்திப் பெற வேண்டும்.
இலங்கைத் தமிழர்களின் வாழ்வும் பாதுகாப்பும் அமைதியும் நிம்மதியும் நிரந்தரமானதாக இருக்க பொது வாக்கெடுப்பு மட்டுமே ஒரே தீர்வு.
நம் கழகத்தின் பொதுக்குழுத் தீர்மானமும். தீர்க்கமான நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பே. இந்நிலையை நோக்கி நகர, சர்வதேசச் சமூகத்தை ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும்.
போர்க் குற்றங்களுக்காகக் கண்டிப்பதோடு, நடுநிலையான பொது வாக்கெடுப்பு நடத்த, இலங்கை அரசுக்கு ஒன்றிய பிரதமர் அவர்கள், நேரடியான அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இலங்கை செல்லும் நம் மாண்புமிகு ஒன்றிய பிரதமர் அவர்கள், ‘கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம்’ என்ற பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும்.
நமது மீனவர்களின் துயர் நீங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற விதத்தில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஒன்றிய பிரதமரின் இந்த இலங்கைப் பயணம் தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் வலியுறுத்துகிறேன். சார்பாக, சமரசமின்றி இவை அனைத்தையும் வலியுறுத்துகிறேன்” என தவெக தலைவர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவு
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவு
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவு ,இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவுகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இரு நாடுகளும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் கூட்டு இராணுவ மற்றும் கடற்படை பயிற்சிகள் ஆகியவற்றால் இருதரப்பு உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, இலங்கை முப்படைகளின் சுமார் 750 அதிகாரிகளுக்கு இந்தியா ஆண்டுதோறும் விடயதானம் சார்ந்த பயிற்சியை வழங்குவதாக பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரு நாடுகளும் பல தசாப்தங்களாக நல்லுறவுப் பாதுகாப்பு உறவுகளைப் பேணி வருவதாக அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்
இன்று இலங்கைக்கு வருகின்றார் மோடி
இன்று இலங்கைக்கு வருகின்றார் மோடி
இன்று இலங்கைக்கு வருகின்றார் மோடி ,இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை மாலை இலங்கைக்கு வருகின்றார்.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அவர் இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ‘நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்துக்கான உறுதிப்பாடு’ என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த விஜயத்தில் இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவும் இணையவுள்ளது.
இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு நாளை சனிக்கிழமை காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதோடு இரு தரப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பிலும் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
இதன்போது எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை பரிமாறிக்கொள்ளப்படும்.
நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தை நிறைவு செய்துகொண்டு இந்தியப் பிரதமர் நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்வார்
இலங்கை வரும் மோடி
இலங்கை வரும் மோடி
இலங்கை வரும் மோடி ,இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் மோடி தனது பயணம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில், “இலங்கைக்கு எனது பயணம் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நடைபெறும்.
இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வெற்றிகரமான இந்திய வருகைக்குப் பிறகு இந்தப் பயணம் இடம்பெறுகின்றது.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியா-இலங்கை நட்பை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம், மேலும் ஒத்துழைப்பின் புதிய வழிகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவோம்.
அங்கு நடைபெறும் பல்வேறு சந்திப்புகளிலும் நான் கலந்துகொள்ளவுள்ளேன்”. என தெரிவித்துள்ளார்.
இலங்கை பொருட்களுக்கு அமெரிக்கா 44 வீத வரி விதிப்பு
இலங்கை பொருட்களுக்கு அமெரிக்கா 44 வீத வரி விதிப்பு
இலங்கை பொருட்களுக்கு அமெரிக்கா 44 வீத வரி விதிப்பு உலக நாடுகள் மீது வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதற்கமைய இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44 வீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவால் ஆசிய நாடுகளில் அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.
2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
இலங்கையில் எச் ஐ வி தொற்றாளர்கள் அதிகரிப்பு
இலங்கையில் எச் ஐ வி தொற்றாளர்கள் அதிகரிப்பு
இலங்கையில் எச் ஐ வி தொற்றாளர்கள் அதிகரிப்பு ,இலங்கையில் எச்.ஐ.வி. பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய பாலியல் பரவும் நோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.
சமீப காலங்களில் நாட்டில் எச்.ஐ.வியுடன் வாழும் புதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக குறித்த திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, 2024ஆம் ஆண்டில் மட்டும், புதிய எச்.ஐ.வியுடன் வாழும் 824 பேர் பதிவாகியுள்ளனர். அவர்களில் 718 பேர் ஆண்கள் என கூறியுள்ளது.
சமீபத்திய காலங்களில் 15-24 வயதுக்குட்பட்டவர்களில் புதிய எச்.ஐ.வியுடன் வாழும் மக்களின் எண்ணிக்கையிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, 2024ஆம் ஆண்டில் மட்டும், 15-24 வயதுக்குட்பட்டவர்களில் 115 பேர் புதிய எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், 2024ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட எய்ட்ஸ் இறப்புகளின் எண்ணிக்கை 47 ஆகும். 2023 ஆம் ஆண்டில், எய்ட்ஸ் இறப்புகள் 20% குறைக்கப்பட்டுள்ளன.
இது குறித்த கூடுதல் தகவல்களை www.aidscontrol.gov.lk இல் காணலாம்.







































