Tag: இலங்கை
இலங்கையில் கொவிட் மரணங்கள்
இலங்கையில் கொவிட் மரணங்கள்
இலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளான இருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நாடளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட் -19 திரிபினால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட
மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட, வயம்ப மருத்துவ பீடத்தின் முதன்மை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர மேலும் கூறுகையில்,
“இலங்கை தொற்று நோயியல் பிரிவு தகவலின்படி, சுவாச நோயாளிகளில் 9% முதல் 13% வரை தற்போது புதிய கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொவிட் தொற்று மிகக் குறைந்த தீவிரத்தன்மை கொண்டது. இதனால் ஏற்படும் தாக்கம் மிகக் குறைவு. ஆனால் 65 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கும் இது தீவிரமாக இருக்கலாம்.
இவ்வாறானவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். நாட்டில், இதுவரை இரு மரணங்கள் பதிவாகியுள்ளன. இருவருக்கும் நோய்கள் இருந்தன.
அதைத் தவிர, தற்போது எங்களுக்கு எந்த ஆபத்தான நிலைமைகளும் இல்லை, எனவே தேவையற்ற அச்சம் தேவையில்லை. ஆனால் குறிப்பிட்ட தரப்பினர் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்” எனத் தெரிவித்தார்.
கீதா கோபிநாத் இலங்கை விஜயம்
கீதா கோபிநாத் இலங்கை விஜயம்
கீதா கோபிநாத் இலங்கை விஜயம் ,சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இலங்கையின் பொருளாதார நிலைமைகள், IMF இன் நிதி உதவி திட்டங்கள், மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான
சீர்திருத்தங்கள் குறித்து உயர்மட்ட கலந்துரையாடல்களை மேற்கொள்ள இந்த விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது, கீதா கோபிநாத் இலங்கை அரசாங்க அதிகாரிகள், மத்திய வங்கி ஆளுநர், மற்றும் பிற பங்குதாரர்களுடன் சந்திப்பு நடத்தி, IMF
இன் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி (Extended Credit Facility) மற்றும் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கலாநிதி கீதா கோபிநாத், 2022 ஜனவரி 21 முதல் IMF இன் முதல் துணை நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
இதற்கு முன்னர், 2019 முதல் 2022 வரை IMF இன் தலைமை பொருளியலாளராக பணியாற்றினார்.
5 இலங்கையர்கள் இந்தியாவில் கைது
5 இலங்கையர்கள் இந்தியாவில் கைது
5 இலங்கையர்கள் இந்தியாவில் கைது ,இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஐந்து இலங்கையர்கள் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படகு மூலம் இந்தியாவின் ராமேஸ்வரம் கடற்கரையை அடைந்த இந்தக் குழுவினர், இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவில் இரண்டு சிறு குழந்தைகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி காரணமாக தாங்கள் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக விசாரணை அதிகாரிகளிடம் அவர்கள் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட ஐந்து இலங்கையர்களையும் இலங்கை தமிழ் அகதிகளுக்காக நிறுவப்பட்ட மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
100சொகுசு பேருந்துகள் இலங்கையில் அறிமுகம்
100சொகுசு பேருந்துகள் இலங்கையில் அறிமுகம்
100சொகுசு பேருந்துகள் இலங்கையில் அறிமுகம் , செய்யப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளதால் நீண்டதூர பயணிகள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர் .
தொலைதூரங்களுக்கு பயணிக்கும் பேருந்துகள் பயணிகள் பலன் கருதி சொவுசு ஆடம்பர பேருந்துகளை இயக்குவதற்கு அரசாங்கம் இப்பொழுது நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் பேருந்து விபத்துக்கள்
நாடளாவிய ரீதியில் பேருந்து விபத்துக்கள் அதிக இடம் பெற்று வருகின்ற இக்காலப் பகுதியில் சொகுசு பேருந்துகளை இயக்குவதன் ஊடாக பயணிகள் அச்சமின்றி சென்று வருவதற்கான வழிவகை இது ஏற்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்டுளளார் .
மக்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்திட , இந்த சொகுசு பேருந்துகள் உடந்தையாக இருக்கும் எனவும் அவர்கள் கருதுகிறார்கள்.
இதன் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த விடயம் முன் வழியப்பட்டுள்ளது.
அதன் கீழ் மேல் மாகாணத்தில் கொழும்பு உள்ளிட்ட ,மாகும்பர ,அழுத்துகம , மற்றும் ,மொரட்டுவ , போன்ற பிரதான வழிகளில் இடை வழிகளில் சிலவற்றின் மூலம் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்த படவுள்ளது .
சொகுசான தாழ்வான மிதிவலைகள் கொண்ட நூறு பேருந்துகளை சேவையில் அமர்த்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கான கட்டணங்கள் அதிகரிப்பு
இதற்கான கட்டணங்கள் சற்று அதிகமாக இருப்பினும் ,மக்கள் இலகுவான முறையில் பயணம் செய்யக் கூடிய வகையில் ,இந்த பேருந்து பயணங்கள் இருக்கும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- வணக்கத்துக்குரிய ஹேமரத்ன தேரர் வழக்கில் நீதிமன்றத்தில் தடயவியல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

- பெட்டா பேருந்து நிலையத்தில் பை திருடனை விரைவாகக் கைது செய்ய சிசிடிவி உதவியது

இலங்கையில் பரவும் கொரோனா
இலங்கையில் பரவும் கொரோனா
இலங்கையில் பரவும் கொரோனா அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இலங்கை ஆளும் அரசு,கொரோனா பரவுதல் பீதியில் உறைந்துள்ள இலங்கை வாழ் தமிழ் சிங்கள மக்கள் .
கொரோனா நோயானது வேகமாக பரவ ஆரம்பிப்பு
திடீரென இலங்கையில் இப்பொழுது கொரோனா நோயானது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக ,இலங்கை சுகாதார அமைச்சர் மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இவ்வாறு இந்த நோயானது மீளவும் நாட்டுக்குள் வேகமாக பரவினால் அவற்றை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது தொடர்பில் ,அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை அடுத்து தற்பொழுது அனைவரையும் மாஸ்க் அணிந்து செல்லுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
முக கவசம் அணிவது மூலமும் அவசியமென இலங்கை அரசின் சுகாதார அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.
180க்கும் மேற்பட்ட மருந்துகள் தட்டுப்பாடு
நாட்டில் 180க்கும் மேற்பட்ட மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறன நிலையில் தற்போது சிக்கன் குனியா ,டெங்கு ,மலேரியா ,கொரோனா நோய்கள் ,வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
உண்மையில் இந்த நோய்கள் பரவி வருகிறதா அல்லது அரசு அதனை பரவுவதாக சொல்லி வேறு அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது .
இது தமிழர்களையும் இலங்கை வாழ் மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
எது எப்படி இருந்தாலும் விரைவில் இலங்கையில் தலை கீழ் மாற்றம் நிகழப்போவதை, இந்த விடயங்கள் வெளிப்படையாக அறிவித்து நிற்கின்றன.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் இலங்கைவந்தார்
ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் இலங்கைவந்தார்
ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் இலங்கைவந்தார் ,ஆஸ்திரேலியா துணை பிரதமர் குழு ஒன்று இலங்கை வந்தடைந்துள்ளது ,இந்த குழு தமிழர்களுக்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .
இது நாடுகளுக்கு இடையிலான அரசியல் பொருளாதார வர்த்தக நடவடிக்கை தொடர்பாக பேசுவதற்கு, அவர் இலங்கை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் உட்பட்ட 15 பேர் கொண்ட குழு, கடந்த காலத்திலும் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சருக்கு ,சொந்தமான சிறப்பு விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்களை வரவேற்று பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டாரை உள்ளிட்ட அதிகாரிகள் குழு வரவேற்று அழைத்துச் சென்றது.
ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் அகதிகளை தடுத்து நிறுத்துதல்
விசேடமாக இலங்கை வந்துள்ள இந்த குழுவினரால் இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் அகதிகளை தடுத்து நிறுத்துதல் ,
அவுஸ்ரேலியாவில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழ் அகதிகளை மீளவும் நாடு கடத்தல் தொடர்பாக எல்லாம் பேச்சுவார்த்தை நடைபெற ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழர்கள் மீளவும் இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கையை ஆஸ்திரேலியா தீவிர படுத்தும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்காக கடல் வழியாக தப்பிச் செல்லும் இலங்கை அகதிகளை தடுக்கவும் மீளவும் நாட்டுக் குழுவை அழைத்துவரும் நடவடிக்கையிலும், சிறப்பு ஏற்பாடுகளை
செய்யவும் இந்த பேச்சுவார்த்தை ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் யுத்தம் இல்லை
நாட்டில் யுத்தம் இல்லை அனைத்தும் முடிந்து விட்டதாக காண்பித்து அகதிகளை மீளவு நாட்டுக்கு திருப்பி எழுப்பு நடவடிக்கையில் பல ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை எடுக்க கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது .
இவ்வாறன நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவின் துணை பிரதமர் இலங்கை வருகை பல சந்தேகங்களையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

இந்தியாவலியுறுத்து இலங்கை அகதிகளின் பாதுகாப்பு
இந்தியாவலியுறுத்து இலங்கை அகதிகளின் பாதுகாப்பு
இந்தியாவலியுறுத்து இலங்கை அகதிகளின் பாதுகாப்பு ,இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்லும் அகதிகள் குறித்து இந்தியா தனது கருத்தை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகள் பாதுகாப்பாக அவர்களது இல்லத்துக்கு போய்ச்சேர உரிய நடவடிக்கைகளை
இந்திய அரசும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பியின் சகோதரர் நடேசன் (வயது 92) புதுச்சேரி லாஸ்பேட்டை அவ்வைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.
அவரது உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் திருமாவளவன் எம்பி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
இந்திய அரசை நம்பி, தாயகம் திரும்பியவர்களை இலங்கை அரசு கைது செய்வது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது. இந்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும்.
தமிழகத்தில் இருந்து அல்லது இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருந்தும் இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகளை பாதுகாப்பாக
அவர்களது இல்லத்துக்கு போய்ச்சேர உரிய நடவடிக்கைகளை இந்திய அரசும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இலங்கையில் கொரோனா தீவிரம்
இலங்கையில் கொரோனா தீவிரம்
இலங்கையில் கொரோனா தீவிரம் அண்மை நாட்களாக வேகமாக பரவிவரும் கொரொனா தொற்று இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளில் இந்நாட்களில் தீவிரமாக பரவி வரும் கொவிட் -19 திரிபு இலங்கையிலும் கண்டறிந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோயியல் நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹ தெரிவித்ததாவது,
ஓமிக்ரோன் வைரஸின் புதிய திரிபு
ஓமிக்ரோன் வைரஸின் புதிய திரிபுகளான LF.7 மற்றும் XFG எனும் புதிய வைரஸ் வகைகள் நாட்டில் உள்ள சில நோயாளிகளிடையே கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் பொதுமக்கள் இவ்வாறான கொவிட் -19 திரிபுகள் தொடர்பாக வீண அச்சத்தை ஏற்படுத்தி கொள்ளத் தேவையில்லை.
அதிக ஆபத்துள்ள பிரிவினர் என சுட்டிக்காட்டப்படும் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார், வயதானவர்கள் மற்றும் நாட்பட்ட நோயாளர்கள் நோய்குறித்து அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
மீண்டும் முகக்கவசம்
அத்தோடு பொதுமக்கள் மீண்டும் முகக்கவசம் அணிவதுடன் கொவிட்-19 பரவலின் போது பின்பற்றிய சுகாதார நடைமுறைகளை மீள பின்பற்றுவதன் மூலம் இவ்வாறான நோய்களில் இருந்து பாதுகாப்பு பெறலாம்.
இந்நாட்களில் சனநெரிசலான பகுதிகளில் அதிக நேரம் செலவழிக்க வேண்டாம் எனவும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கொவிட்-19 வைரஸின் புதிய திரிபுகள் காலத்துக்கு ஏற்ற அவ்வப்போது பரவுகின்றன. இருப்பினும், இதனை சுகாதார அதிகாரிகள் தொடர்ச்சியாக கவனித்து வருவதால் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், காலி தேசிய வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த ஒரு மாத பச்சிளம் குழந்தைக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காலி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிடுகையில், உயிரிழந்த குழந்தையின் உயிரியல் மாதிரி கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர்
மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த வைரஸ் தற்போது ஆசியாவில் பரவி வரும் கொவிட்-19 திரிபு இல்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
மனிதஉரிமை ஆணையாளர் இலங்கை வருகை
மனிதஉரிமை ஆணையாளர் இலங்கை வருகை
மனிதஉரிமை ஆணையாளர் இலங்கை வருகை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வொல்க்கெர் டேர்க் இந்த மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் இதனை உறுதி செய்துள்ளன எனினும் மனித உரிமை ஆணையாளரின் விஜயத்திற்கான திகதி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என அவை தெரிவித்துள்ளன.
அரசாங்கம் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஒருவர் ஒன்பது வருடங்களின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக 2016 பெப்ரவரியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்தவேளை செய்த் ராத் அல்ஹுசைன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை கரிசனைகளை எவ்வாறு கையாள்வது என தெரியாமல் அரசாங்கம் தடுமாறிக்கொண்டிருக்கின்ற ஒரு நிலையில்
அவுஸ்திரேலிய பிரஜையான வோல்க்கெர் டேர்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக கடந்த வருடம் ஆகஸ்ட்மாதம் வெளியிட்ட அறிக்கையில் புதிதாக தெரிவு செய்யப்படும் அரசாங்கம்
இனமோதலிற்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காணவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
பொறுப்புக்கூறலில் காணப்படும் இடைவெளியை நிரப்புவதற்கும் நல்லிணக்கத்தை நோக்கி முன்னேறுவதற்கும் அரசாங்கம் அடிப்படை அரசமைப்பு நிறுவன ரீதியான மாற்றங்களை முன்வைக்கவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவேண்டும்,என்ற பரிந்துரையையும் அவர் முன்வைத்திருந்தார்.
வோர்க்கெர்டேர்க்கிற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக பணியாற்றிய மிச்செலே பச்செலெட் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விருப்பத்தை வெளியிட்டிருந்தார் எனினும் அது சாத்தியமாகவில்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் போர்கால உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை சேகரிப்பதற்காக இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை உருவாக்கியுள்ளது,
இலங்கை இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.
இருள்மூழ்கிய இலங்கை 50.000பேர் தவிப்பு
இருள்மூழ்கிய இலங்கை 50.000பேர் தவிப்பு
இருள்மூழ்கிய இலங்கை 50.000பேர் தவிப்பு ,இருள் மூழ்கிய இலங்கை ஐம்பதாயிரம் பேர் தவிப்பு என உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்து சில நாட்களாக இலங்கையில் இடம்பெற்று வரும் புயல், மழை,வெள்ளம், காரணமாக மின்சாரம் பாதிக்கப்பட்டு, 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக பாதிப்பு புயல் காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும் ,இதனால் மின்சார கம்பங்கள் முறிந்து விழுந்து ,வீடுகளுக்கான மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், பல வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இந்த மின்சாரம் இன்றி மக்கள் தவித்து வருகின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மின்சாரத்தை வழங்கும் நடவடிக்கையில் மின்சார வாரியம் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு மேல் மரங்கள் முறிந்து விழுந்ததாலும், மின்சார கம்பிகள் முறிந்து விழுந்ததால் இந்த மின்சார துண்டிப்பு இடம்பெற்றது.
பாதிக்க பட்ட பகுதிகளில் மின்சார வாரியம் மீட்பு படைகள் செயலாற்றி பெறுவதால், விரைவில் பாதிக்கப்பட்ட பகுதிகள் மின்சாரம் மீள் எடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் மக்கள் இயல்பு வாழ்க்கை என்பன இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில், மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

இலங்கையில் கொரோனா புதிய சட்டம்
இலங்கையில் கொரோனா புதிய சட்டம்
இலங்கையில் கொரோனா புதிய சட்டம் அமல்படுத்தும் சுகாதார அமைச்சர்
உலக நாடுகளின் சில நாடுகளில் கொரோனா தொற்று பரவி வருவதாகவும் அதனை அடுத்து இலங்கையிலும் மக்கள் மாஸ்க் போடும்படி தற்பொழுது இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
கொரோனோ பரவல்
தொடரும் இந்த கொரானோ பரவல் காரணமாக மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதனை அடுத்து
அவர்கள் உயிர்பலிகளை தடுக்கும் முகமாக மாஸ்க் அணிய வேண்டுமென இலங்கை சுகாதார அமைச்சர் கட்டுரை.
மக்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படாத பொழுதும் எதிர்வரும் காலங்களில் இந்த பாதிப்புகளை தடுக்க உடனடியாக மாஸ் கனிந்து பயணிக்குமாறு வேண்டி உள்ளது.
இலங்கையினுடைய பொருளாதாரம் விழுந்து நொறுக்கும் காலப்பகுதியில் இவ்வாறான அறிவுறுத்தலை விடுத்து
மக்களை வீடுகளுக்கு முடக்கி அரசுக்கு எதிரான கிளர்ச்சியை தடுக்க அரசுகள் இந்த விளையாட்டை கையாண்டனர்.
அதேபோல ஒரு நிலை தற்பொழுது அனுரா ஆட்சிக்கு மேற்பட்டதால் இந்த விடயம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இலங்கையர் வெளிநாட்டில் கைது
இலங்கையர் வெளிநாட்டில் கைது
இலங்கையர் வெளிநாட்டில் கைது ,மூன்று இளைஞர்கள் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இத்தாலி குடியுரிமை பெற்றதாக தெரிவித்து அல்பேனியாவை கடக்க முற்பட்ட பொழுது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள.
அந்த நாட்டின் குடிவரவு குடியகல்வு அமைச்சு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் பொழுது போலி ஆவணங்களை காண்பித்து ஐரோப்பா நாட்டுக்கு நுழைய முயன்ற இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
கைதாண்டவர்கள் இலங்கையைச் சேர்ந்த 36 58 மற்றும் 57 வயது உடைய உள்ளன் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்
பிசா மோசடி குற்றச்சாட்டில் சட்டவிரோத செயல்பாட்டில் ஈடுபட்டார்கள் என்பதன் அடிப்படையில் இவர்கள் அல்பேனியாவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்கள்
சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் இவர்கள் நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பா மற்றும் கனடா அமெரிக்காவுக்குள் நுழையும் முகமாக இவ்வாறு ஏனைய நாடுகள் ஊடாக சட்ட விரோதமாக போலிய ஆவணங்கள் தயாரித்து இளைஞர்கள் நுழைந்து வருவதான குற்றச்சாட்டு இந்த செய்தியில் பகிரப்பட்டு உள்ளது
ஆனால் இவர்கள் தமிழர்களா அல்லது சிங்களவர்கள் என்பது தொடர்பாக முழுமையான தகவல் தெரிய வரவில்லை.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- வணக்கத்துக்குரிய ஹேமரத்ன தேரர் வழக்கில் நீதிமன்றத்தில் தடயவியல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

- பெட்டா பேருந்து நிலையத்தில் பை திருடனை விரைவாகக் கைது செய்ய சிசிடிவி உதவியது

16 ஆண்டுகளின் பின் மீண்டும் சிக்கன்குனியா
16 ஆண்டுகளின் பின் மீண்டும் சிக்கன்குனியா
இலங்கையில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்குன்குனியா வைரஸ் நோய் பெரிய அளவில் பரவி வருகிறது.
ஒக்ஸ்போர்ட் நானோபோர் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட மரபணு ஆராய்ச்சியில் இவ்விடயம் வெளிப்பட்டுள்ளதாக பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :
தற்போது பரவி வரும் சிக்குன்குனியா வைரஸ் இந்து சமுத்திரத்தில் பரவக் கூடிய வைரஸ் பரம்பரையைச் சேர்ந்தது. இது பல தனித்துவமான பிறழ்வுகளுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கை தற்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து ஒரு பெரிய சிக்குன்குனியா பரவலை எதிர்கொண்டு வருகிறது.
தற்போது பரவி வரும் சிக்குன்குனியா வைரஸ் பிரழ்வின் முழு மரபணு ஆய்வினை நாம் மேற்கொண்டோம்.
மேலும் அது தெற்காசியாவில் தற்போது பரவி வரும் ஊர்ஐமுஏ பிரழ்வைப் போலவே இந்து சமுத்திர பரம்பரையைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிந்துள்ளோம்.
இந்த புதிய பிறழ்வுகளில் சில முன்னர் வகைப்படுத்தப்படாததால், அவை கொசுக்களுக்குள் உடற்தகுதி, வைரஸ் பிரதிபலிப்பு மற்றும் நோயெதிர்ப்புத் தவிர்ப்பை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் கண்டறிவது முக்கியமானதாகும்.
நாடு முழுவதும் விஷேட சுற்றிவளைப்பு
நாடு முழுவதும் விஷேட சுற்றிவளைப்பு
இலங்கை நாடுமுழுவதும் விஷேட சுற்றிவளைப்பு மேற்கொண்டு பொலிஸார் சோதனை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (23) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது
போதைப்பொருட்களுடன் 475 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 178 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 131 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 158 பேரும்,
மதனமோதக போதைப்பொருளுடன் 03 பேரும், கஞ்சா செடிகளுடன் 05 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 208 கிராம் 870 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 289 கிராம் 962 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும்,
01 கிலோ 118 கிராம் 761 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 26 கிராம் 400 மில்லிகிராம் மதனமோதக போதைப்பொருளும், 9072 கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
சுற்றிவளைப்பின்போது கைதானோர் எந்தெந்த மாவட்டத்தின் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பொலிஸார் இதுவரையில் வெளியிடவில்லை.
ஆனாலும் குறைவானவர்களையே கைது செய்திருக்கின்றார்களோ என எண்ணத்தோன்றுகின்றது,. ஏனெனில் நாடு முழுவதும் கஞ்சா பாவனையில் இருக்கும்போது,
கைதானவர்களின் எண்ணிக்கையும் கைதான போதைப்பொருட்களின் அளவுகளும் குறைவாகவே காணப்படுகின்றது.
மீண்டும், தொடர்ந்தும் இவ்வாறான சுற்றிவளைப்புக்களின் மூலமும் திடீர் சோதனைகளின் மூலமும் போதையை ஓரளவேனும் கட்டுக்குள் கொண்டு வரலாமோ என எண்ணத் தோன்றுகின்றது.
பொறுத்திருந்து பார்க்கலாம் அனுர அரசு இந்த போதையை இல்லாதொழிக்க என்ன என்ன எல்லாம் செய்யப்போகின்றார்கள் என
அமெரிக்க பறக்கும் இலங்கை அதிகாரிகள்
அமெரிக்க பறக்கும் இலங்கை அதிகாரிகள்
அமெரிக்க பறக்கும் இலங்கை அதிகாரிகள் ட்ரம் கொடுத்த திடீர் அதிர்ச்சி வைத்தியம் சிக்க போகிறதா இலங்கை.
இலங்கையில் ஆளுகின்ற அறுவ ஆட்சிக்கு ஆப்பு வைக்க நடவடிக்கையில் அமெரிக்கா சில விடயங்களை காய் நகர்த்தி வருகிறது.
அதன் அடிப்படையில் அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கையின் பிரதிநிதிகள் குழுவொன்று வாஷிங்டனுக்கு பயணம் மேற்கொள்ளதாக தெரிய வருகிறது.
டிரம்ப் விடுத்த விசேட அழைப்பின் அடிப்படையில் இவர்கள் அங்கு சென்று இரு நாட்களுக்கு இடையிலான வர்த்தக உறவுகள் தொடர்பாக உரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வரி அதிகமாக அறவிடுவதாக அமெரிக்க அறிவித்ததை அடுத்து இலங்கை பறந்தடித்து ஓடுகிறது.
இதன் பொழுது இரு தரப்பிலும் சில இனக்கபாடுகளுக்கு உடன்பட்டால் மட்டும், அந்த வரி விதிப்பு தற்காலிகம் நிறுத்தப்படும் என டிரம்ப் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
அதனால் இலங்கையில் இப்பொழுது புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமெரிக்க முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிய வருகிறது.
இதனை அடுத்து ஆளும் இலங்கையினுடைய தேர்தல் குழுக்கள் தற்பொழுது அமெரிக்காவுக்கு திடீரென பறந்து செல்கிறார்கள்.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இலங்கை அரசைதண்டி லண்டனில் போராட்டம்
இலங்கை அரசைதண்டி லண்டனில் போராட்டம்
இலங்கை அரசைதண்டி லண்டனில் போராட்டம் ,இலங்கை அரசை தாண்டி லண்டனில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது .
இறுதி யுத்தம் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு .இதுவரை தீர்ப்பு கிடைக்கவில்லை.
எனவே உடனடியாக இலங்கை அரசு தண்டிக்க பட வேண்டும் என கூறி, லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
லண்டன் பாராளுமன்ற சுற்றுவட்டாரத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது .
இந்த ஆர்ப்பாட்டம் என்பது சிங்களப் பேரணவாத அரசுகளை மிகவும் பதட்டத்தில் உறைய வைத்துள்ளது .
புலம்பெயர்ந்து இருக்கக்கூடிய டயஸ் போராக்கள் ,இலங்கை அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் ,தமிழர்களை நசுக்க வேண்டும் என்கின்ற நிலையில், சிங்கள இனவாதம் மீளவும் தனது ஆடுகளத்தை ஆரம்பித்திருக்கிறது.
புதிய சிந்தனை கோட்பாட்டுக்கு உள்ளதாக .தம்மை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் பேரனவாத அரசு ஈடுபட்டு வருகிறதாம் .
அதனால் புலம்பெயர்ந்து வாழக்கூடிய தமிழர்கள் சிந்தனைகளை நசுக்கி அதனூடாக தமிழர் விடுதலையை நசுக்கலாம் என கற்பனை கட்டி வருகிறது.
புலம்பெயர் தேசத்தில் வளர்ந்து வருகிற ,எமது சமுதாயம் புதிய விடயங்களை ஆளுகின்ற அரசுக்கு எடுத்த கடத்தி, தனது உரிமை நிலை நாட்டு முற்பட்டு வருகிறது.
தமது போராட்டத்தை நிறுத்தி இருக்கின்றனர்.
ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியம் , பல லட்சக்கணக்கான மக்கள் காயம் அடைந்தும் சொத்துக்கள் இழந்து தவித்து வருகிறார்கள்.
லண்டன் பாராளுமன்றத்தை சுற்றி வளைத்து, தமிழர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளது இலங்கை அனுரா அரசை நெருக்கடியில் உறைய வைத்துள்ளது .
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- வணக்கத்துக்குரிய ஹேமரத்ன தேரர் வழக்கில் நீதிமன்றத்தில் தடயவியல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

- பெட்டா பேருந்து நிலையத்தில் பை திருடனை விரைவாகக் கைது செய்ய சிசிடிவி உதவியது

வெளிநாட்டு வேலை ஒருலட்சம் பேர்பதிவு
வெளிநாட்டு வேலை ஒருலட்சம் பேர்பதிவு
வெளிநாட்டு வேலை ஒருலட்சம் பேர்பதிவு என வெளிநாட்டு வேலை வாய்ப்பு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் விழுந்து போய் இருக்கிற இவ்வாறான பகுதியில் ,வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்ய பலர் விருப்பப்பட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் இந்த வருடம் மட்டும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மையத்தில் ஒரு லட்சம் பேர் விண்ணப்ப படிவங்கள் செய்துள்ளதாகவும் ,வேலை பெற்ற பல
ஆயிரக்கணவர்கள் நாட்டை விட்டு வெளியேறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமாக அரபிய நாடுகள், சீனா, கொரியா , போன்ற நாடுகளுக்கு பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சென்று வேலை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்விதமான நிலையில் இவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்ற பலர் இறந்தும் காணாமல் போய் உள்ள நிலை காணப்படுகிறது.
அரபிய நாடுகளுக்குச் சென்ற பல ஆண் பெண்கள் இவ்வாறான நிகழ்ச்சிக்கு காணாமல் போய் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வேலை கிடைச்சாலும் இவர்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்து மிகப்பெரும் அவமானங்களை சந்தித்து தற்கொலையா மற்றும் கொலைகள் முடிந்துள்ள சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
வெளிநாடு செல்பவர்கள் மரணம் முதல் காணாமல் போன விபரங்களை மறைத்து ,வெளிநாட்டுக்கு மக்கள் சேர்ந்து வேலை செய்ய அதிகம் காத்துள்ளர்கள் .
என்ற செய்தியை மட்டும் இவ்விதமான நிறுவனங்கள் வெளிப்படுத்தி வருகின்றதான குற்றச்சாட்டு வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இலங்கை சர்வதேச விசாரணைக்கு அஞ்சுவது ஏன்
இலங்கை சர்வதேச விசாரணைக்கு அஞ்சுவது ஏன்
இனப்படுகொலை இடம்பெறவில்லையெனில் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் அஞ்சுவது ஏன் என கஜேந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
“தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசால் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதாகக் கண்டறியப்படவில்லை என நீங்கள் உண்மையிலேயே நம்புவீர்களாக இருந்தால்,
சர்வதேச சுயாதீன குற்றவியல் விசாரணையை எதிர்கொள்வதற்கும், இலங்கை அரசு எவ்வித குற்றத்திலும் ஈடுபடவில்லை என்பதை நிரூபிப்பதற்கும் எதற்காக அஞ்சுகிறீர்கள்?”
இவ்வாறு எவெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கனடாவின் பிரம்டன் நிகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம், கடந்த 10 ஆம் திகதி அந்நகர மேயர் பற்ரிக் பிரவுனால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,
எவ்வித ஆதாரமும் அற்ற இனப்படுகொலைக் குற்றச்சாட்டு மற்றும் அதனை அடிப்படையாகக்கொண்ட நினைவுச் சின்னத்தை நிர்மாணிப்பதற்கு வழங்கப்பட்ட ஒப்புதல் என்பன தொடர்பில் கடும் ஆட்சேபனையை வெளிப்படுத்தினார்.
அதுமாத்திரமன்றி இவ்வாறான நடவடிக்கைகள் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான அரசின் முயற்சிகளைப் பெரிதும் பலவீனப்படுத்தி சிக்கலாக்குவதாகவும் அவர் விசனம் வெளியிட்டார்.
தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசால் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதாகக் கண்டறியப்படவில்லை என நீங்கள் உண்மையிலேயே நம்புவீர்களாக இருந்தால், சர்வதேச சுயாதீன குற்றவியல் விசாரணையை எதிர்கொள்வதற்கும்,
இலங்கை அரசு எவ்வித குற்றத்திலும் ஈடுபடவில்லை என்பதை நிரூபிப்பதற்கும் எதற்காக அஞ்சுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதுமாத்திரமன்றி ரோம் பிரகடனத்தில் கைச்சாத்திட்டு, அதனூடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏன் இடமளிக்கவில்லை என்றும் அவர் வினவியுள்ளார்.
“உண்மைக்கு அரசு அஞ்சுகின்றது என்பதே யதார்த்தமாகும். உண்மையின் ஊடாக மாத்திரமே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும்.
இருப்பினும் முன்னைய அரசுகளைப் போன்று உங்களது அரசும் அதனைத் தொடர்ந்து நிராகரித்து வருகின்றது.” – என்றும் கஜேந்திரகுமார் எம்.பி. விசனம் வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேசத்துக்கு எடுத்துச் செல்வது இராஜதந்திரிகளின் முக்கிய பொறுப்பு என அனுர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியைச் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வதும், சர்வதேச சமூகத்தின் முன்
இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதும் தூதுவர்களின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பல்வேறு நாடுகளுக்கான இலங்கையின் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுச் செல்லும் புதிய தூதுக்குழுத் தலைவர்களுடன் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற
கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு சேவைகளை வழங்குவதில் முன்னணியில் இருந்து சிறப்புக் கவனத்துடன் பணியாற்றுமாறும், எந்தவித பாகுபாடும் இல்லாமல் நியாயமாக செயல்படுமாறும்
புதிய இராஜதந்திரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
இலங்கைத் தூதரகத்தை, இலங்கையர்கள் தமது இடமாக உணரும் வகையில் செயற்படுமாறு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டிற்கான தமது சேவையை செயற்திறன்மிக்க வகையில் மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.
வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கும், இலங்கையில் உள்ள தொழில்முனைவோர் வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளைக் கண்டறிய
உதவுவதற்கும் தேவையான ஒருங்கிணைப்பு இராஜதந்திர சேவையின் ஒரு பகுதியாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்தார்.
அதன்படி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது தூதுவரின்
முக்கிய பொறுப்பாகும் என்றும், அதற்குத் தேவையான ஆதரவை வழங்க அரசு தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் நடந்த சில சம்பவங்களால் தூதுவர்கள் கடந்த காலங்களில் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், தற்போதைய
அரசாங்கம் தூதுவர்களின் கௌரவத்தை பாதிக்கும் எவற்றையும் செய்யாது என்றும் எந்த நேரத்திலும் தூதுவர்களுக்கு அரசு துணை நிற்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
புதிய தூதுக் குழுத் தலைவர்களாக, இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக ஜீ. எம். கொலொன்னெ, பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்
ஸ்தானிகராக ரியர் அட்மிரல் பிரெட் செனவிரத்ன, ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக எஸ். டீ. என்.யூ.சேனாதீர,
அமெரிக்காவின் நியூயோர்க் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர பிரதிநிதியாக ஜயந்த ஜயசூரிய, கியூபாவுக்கான இலங்கைத் தூதுவராக ஆர்.எம்.மஹிந்த ரத்நாயக்க, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவராக
பேராசிரியர் பி. ஜனக் குமாரசிங்க, ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவராக பேராசிரியர் அருஷா கூரே ஆகியோர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இலங்கை வாகனஇறக்குமதி ஜப்பான் கவலை
இலங்கை வாகனஇறக்குமதி ஜப்பான் கவலை
இலங்கை வாகனஇறக்குமதி ஜப்பான் கவலை இலங்கைக்கான வாகன இறக்குமதி தொடர்பில் ஜப்பான் கவலை தெரிவித்துள்ளது.
ஜப்பானிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்காக அறவிடப்படும் உயர் வட்டி வீதம் தொடர்பில்
இலங்கைக்கு ஜப்பான் தூதுவர்
இலங்கைக்கு ஜப்பான் தூதுவர் அகியோ இசெமாடா அண்மையில் இடம்பெற்ற வட்ட மேசை பேச்சுவார்த்தையின்போது தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவுக்கு ஜப்பானிலிருந்து கொண்டுவரப்படும் மின்சார வாகனங்களுக்காக விதிக்கப்படும் வட்டி வீதத்தையும் ஏனைய வாகன இறக்குமதிக்கான தடை கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதியுடன் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து
இதுவரையில் 5,000 வரையான வாகனங்கள் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினூடாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இறக்குமதித் தடை
அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டிருந்த போதும் இறக்குமதித் தடை நீக்கப்பட்டதன் பின்னர் வாகனங்களின் விலை பெரிதும் அதிகரித்துள்ளதால் வாகனம் கொள்வனவு செய்வதற்கான
மத்திய வர்க்க மக்களின் கனவு நிராசையாகியுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கச் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுசுகி வேகன் ஆர் கார் 80 இலட்சம் ரூபாவிலிருந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும்
கார் 100 இலட்சம் ரூபாவிலிருந்து அதிக விலைக்கு
டொயோடா யாரிஸ் கார் 100 இலட்சம் ரூபாவிலிருந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
மக்கள் அதிக விருப்பம் தெரிவிக்கும் சுசுகி படி வேன் தற்போதைய நிலைவரப்படி 70 இலட்சம் ரூபாவிலிருந்து 80 இலட்சம் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும்,
வெளிநாட்டு ஜப்பான் அல்ட்டோ வாகனமொன்று 60 இலட்சம் ரூபாவிலிருந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உற்பத்தி வருடத்திலிருந்து 03 வருடங்களுக்கு பழைமையான வாகனங்களை மாத்திரமே நாட்டுக்கு இறக்குமதிசெய்ய முடியுமென்றாலும் வாகன இறக்குமதியின்போது
அதிகளான வரி
விதிக்கப்படும் அதிகளான வரி வீதத்தின் காரணமாக மோட்டார் வாகனங்களின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாகவும் தற்போது வரையில் வாகன இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டபோது
மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்த சில வாகன மாதிரிகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
டொயோடா எக்வா மோட்டார் வாகனத்தை நாட்டுக்கு இறக்குமதி செய்யும் அநேகமான இறக்குமதியாளர்களை இடைநிறுத் தியுள்ளதாகவும் டொயோடா பிரியஸ் மோட்டார் வாகனத்தைத் தொடர்ந்து இறக்குமதிசெய்ய முடியாமல் போயுள்ளது.
மத்தியதர மக்களின் வாகனக் கனவு தற்போதுவரை நிராசையாகியிருந்தாலும் இலங்கைச் சந்தைக்கு வருகைதந்துள்ள வாகனங்களை ஒரு சமூகத்தார் மாத்திரம் கொள்வனவு செய்துகொண்டிருப்பதால் வாகன விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.
பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நாட்டுக்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதால் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் வாகன மாதிரிகள் மற்றும்
குறைந்த விலைக்கு விற்பனையாகும் வாகன மாதிரிகளைக் குறிப்பிட்டு அடையாளப்படுத்த முடியாதென்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் புதிய வாகனங்களை விலைப் பட்டியலுக்கு உட்படுத்துவதற்கிருக்கும் பிரதான இணையதளத்துக்கமைய நேற்று முன்தினமாகும்போது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும்
அல்ட்டோ வாகனத்தின் விலை 48 இலட்சம் ரூபா என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன், சுசுகி வேகன் ஆர் ரக வாகனத்தின் விலை 66 இலட்சம் ரூபா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று, டொயோடா எக்வா ஹைப்ரிட் வாகனத்தின் விலை ஒரு கோடியே 38 இலட்சம் ரூபாவாகக் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், டொயோடா வெசல் ரக வாகனமொன்றின் விலை ஒரு கோடியே 65 இலட்சம் ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் விலை 05 கோடி ரூபா
அந்த இணையதளத் தகவல்களுக்கமைய, டெஸ்லா வை ரக மாதிரி மோட்டார் வாகனத்தின் விலை 05 கோடி ரூபா என்பதுடன் பீ.வை.டீ. எடோ 3 மோட்டார் வாகனத்தின் விலை ஒரு கோடியே 56 இலட்சம் ரூபாவென அறிவிக்கப்பட்டுள்ளது.
மர்சிடீஸ் பென்ஸ் சீ கிலாஸ் மாதிரி மோட்டார் கார் 4 கோடீயே 75 இலட்சம் ரூபா என்றும், மெஸ்டா சீ எக்ஸ் 5 மோட்டார் கார் 3 கோடி ரூபா என்றும் அந்த இணையதளம் அறிவித்துள்ளது.
இறக்குமதித் தடை நீக்கப்பட்டதன் பின்னர் வாகன விற்பனை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள வாகன இறக்குமதியாளர்கள்,
தற்போதைய காலப்பகுதியில் மத்தியதர மக்கள் கொள்வனவு செய்ய விரும்பும் வாகன மாதிரிகளின் விற்பனையில் வீழ்ச்சியை அவதானிக்கக்கூடியதாக இருப்பதாகவும்,
அதன் காரணமாக அதிகம் விற்பனையாகும் வாகனங்களின் மாதிரிகளை அதிக எண்ணிக்கையில் இறக்குமதி செய்வதற்கு வாகன இறக்குமதியாளர்கள் ஆர்வம் செலுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.



























































