வெளிநாட்டு வேலை ஒருலட்சம் பேர்பதிவு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

வெளிநாட்டு வேலை ஒருலட்சம் பேர்பதிவு

வெளிநாட்டு வேலை ஒருலட்சம் பேர்பதிவு

வெளிநாட்டு வேலை ஒருலட்சம் பேர்பதிவு என வெளிநாட்டு வேலை வாய்ப்பு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் விழுந்து போய் இருக்கிற இவ்வாறான பகுதியில் ,வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்ய பலர் விருப்பப்பட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் இந்த வருடம் மட்டும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மையத்தில் ஒரு லட்சம் பேர் விண்ணப்ப படிவங்கள் செய்துள்ளதாகவும் ,வேலை பெற்ற பல

ஆயிரக்கணவர்கள் நாட்டை விட்டு வெளியேறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகமாக அரபிய நாடுகள், சீனா, கொரியா , போன்ற நாடுகளுக்கு பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சென்று வேலை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்விதமான நிலையில் இவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்ற பலர் இறந்தும் காணாமல் போய் உள்ள நிலை காணப்படுகிறது.

அரபிய நாடுகளுக்குச் சென்ற பல ஆண் பெண்கள் இவ்வாறான நிகழ்ச்சிக்கு காணாமல் போய் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேலை கிடைச்சாலும் இவர்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்து மிகப்பெரும் அவமானங்களை சந்தித்து தற்கொலையா மற்றும் கொலைகள் முடிந்துள்ள சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

வெளிநாடு செல்பவர்கள் மரணம் முதல் காணாமல் போன விபரங்களை மறைத்து ,வெளிநாட்டுக்கு மக்கள் சேர்ந்து வேலை செய்ய அதிகம் காத்துள்ளர்கள் .

என்ற செய்தியை மட்டும் இவ்விதமான நிறுவனங்கள் வெளிப்படுத்தி வருகின்றதான குற்றச்சாட்டு வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கை சர்வதேச விசாரணைக்கு அஞ்சுவது ஏன்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை சர்வதேச விசாரணைக்கு அஞ்சுவது ஏன்

இலங்கை சர்வதேச விசாரணைக்கு அஞ்சுவது ஏன்

இனப்படுகொலை இடம்பெறவில்லையெனில் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் அஞ்சுவது ஏன் என கஜேந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

“தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசால் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதாகக் கண்டறியப்படவில்லை என நீங்கள் உண்மையிலேயே நம்புவீர்களாக இருந்தால்,

சர்வதேச சுயாதீன குற்றவியல் விசாரணையை எதிர்கொள்வதற்கும், இலங்கை அரசு எவ்வித குற்றத்திலும் ஈடுபடவில்லை என்பதை நிரூபிப்பதற்கும் எதற்காக அஞ்சுகிறீர்கள்?”

இவ்வாறு எவெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கனடாவின் பிரம்டன் நிகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம், கடந்த 10 ஆம் திகதி அந்நகர மேயர் பற்ரிக் பிரவுனால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,

எவ்வித ஆதாரமும் அற்ற இனப்படுகொலைக் குற்றச்சாட்டு மற்றும் அதனை அடிப்படையாகக்கொண்ட நினைவுச் சின்னத்தை நிர்மாணிப்பதற்கு வழங்கப்பட்ட ஒப்புதல் என்பன தொடர்பில் கடும் ஆட்சேபனையை வெளிப்படுத்தினார்.

அதுமாத்திரமன்றி இவ்வாறான நடவடிக்கைகள் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான அரசின் முயற்சிகளைப் பெரிதும் பலவீனப்படுத்தி சிக்கலாக்குவதாகவும் அவர் விசனம் வெளியிட்டார்.

தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசால் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதாகக் கண்டறியப்படவில்லை என நீங்கள் உண்மையிலேயே நம்புவீர்களாக இருந்தால், சர்வதேச சுயாதீன குற்றவியல் விசாரணையை எதிர்கொள்வதற்கும்,

இலங்கை அரசு எவ்வித குற்றத்திலும் ஈடுபடவில்லை என்பதை நிரூபிப்பதற்கும் எதற்காக அஞ்சுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமாத்திரமன்றி ரோம் பிரகடனத்தில் கைச்சாத்திட்டு, அதனூடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏன் இடமளிக்கவில்லை என்றும் அவர் வினவியுள்ளார்.

“உண்மைக்கு அரசு அஞ்சுகின்றது என்பதே யதார்த்தமாகும். உண்மையின் ஊடாக மாத்திரமே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும்.

இருப்பினும் முன்னைய அரசுகளைப் போன்று உங்களது அரசும் அதனைத் தொடர்ந்து நிராகரித்து வருகின்றது.” – என்றும் கஜேந்திரகுமார் எம்.பி. விசனம் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேசத்துக்கு எடுத்துச் செல்வது இராஜதந்திரிகளின் முக்கிய பொறுப்பு என அனுர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியைச் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வதும், சர்வதேச சமூகத்தின் முன்

இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதும் தூதுவர்களின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பல்வேறு நாடுகளுக்கான இலங்கையின் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுச் செல்லும் புதிய தூதுக்குழுத் தலைவர்களுடன் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற

கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு சேவைகளை வழங்குவதில் முன்னணியில் இருந்து சிறப்புக் கவனத்துடன் பணியாற்றுமாறும், எந்தவித பாகுபாடும் இல்லாமல் நியாயமாக செயல்படுமாறும்

புதிய இராஜதந்திரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

இலங்கைத் தூதரகத்தை, இலங்கையர்கள் தமது இடமாக உணரும் வகையில் செயற்படுமாறு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டிற்கான தமது சேவையை செயற்திறன்மிக்க வகையில் மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.

வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கும், இலங்கையில் உள்ள தொழில்முனைவோர் வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளைக் கண்டறிய

உதவுவதற்கும் தேவையான ஒருங்கிணைப்பு இராஜதந்திர சேவையின் ஒரு பகுதியாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்தார்.

அதன்படி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது தூதுவரின்

முக்கிய பொறுப்பாகும் என்றும், அதற்குத் தேவையான ஆதரவை வழங்க அரசு தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் நடந்த சில சம்பவங்களால் தூதுவர்கள் கடந்த காலங்களில் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், தற்போதைய

அரசாங்கம் தூதுவர்களின் கௌரவத்தை பாதிக்கும் எவற்றையும் செய்யாது என்றும் எந்த நேரத்திலும் தூதுவர்களுக்கு அரசு துணை நிற்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

புதிய தூதுக் குழுத் தலைவர்களாக, இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக ஜீ. எம். கொலொன்னெ, பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்

ஸ்தானிகராக ரியர் அட்மிரல் பிரெட் செனவிரத்ன, ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக எஸ். டீ. என்.யூ.சேனாதீர,

அமெரிக்காவின் நியூயோர்க் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர பிரதிநிதியாக ஜயந்த ஜயசூரிய, கியூபாவுக்கான இலங்கைத் தூதுவராக ஆர்.எம்.மஹிந்த ரத்நாயக்க, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவராக

பேராசிரியர் பி. ஜனக் குமாரசிங்க, ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவராக பேராசிரியர் அருஷா கூரே ஆகியோர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கை வாகன இறக்குமதி ஜப்பான் கவலை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வாகனஇறக்குமதி ஜப்பான் கவலை

இலங்கை வாகனஇறக்குமதி ஜப்பான் கவலை

இலங்கை வாகனஇறக்குமதி ஜப்பான் கவலை இலங்கைக்கான வாகன இறக்குமதி தொடர்பில் ஜப்பான் கவலை தெரிவித்துள்ளது.

ஜப்பானிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்காக அறவிடப்படும் உயர் வட்டி வீதம் தொடர்பில்

இலங்கைக்கு ஜப்பான் தூதுவர்

இலங்கைக்கு ஜப்பான் தூதுவர் அகியோ இசெமாடா அண்மையில் இடம்பெற்ற வட்ட மேசை பேச்சுவார்த்தையின்போது தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவுக்கு ஜப்பானிலிருந்து கொண்டுவரப்படும் மின்சார வாகனங்களுக்காக விதிக்கப்படும் வட்டி வீதத்தையும் ஏனைய வாகன இறக்குமதிக்கான தடை கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதியுடன் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து

இதுவரையில் 5,000 வரையான வாகனங்கள் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினூடாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இறக்குமதித் தடை

அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டிருந்த போதும் இறக்குமதித் தடை நீக்கப்பட்டதன் பின்னர் வாகனங்களின் விலை பெரிதும் அதிகரித்துள்ளதால் வாகனம் கொள்வனவு செய்வதற்கான

மத்திய வர்க்க மக்களின் கனவு நிராசையாகியுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கச் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுசுகி வேகன் ஆர் கார் 80 இலட்சம் ரூபாவிலிருந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும்

கார் 100 இலட்சம் ரூபாவிலிருந்து அதிக விலைக்கு

டொயோடா யாரிஸ் கார் 100 இலட்சம் ரூபாவிலிருந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

மக்கள் அதிக விருப்பம் தெரிவிக்கும் சுசுகி படி வேன் தற்போதைய நிலைவரப்படி 70 இலட்சம் ரூபாவிலிருந்து 80 இலட்சம் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும்,

வெளிநாட்டு ஜப்பான் அல்ட்டோ வாகனமொன்று 60 இலட்சம் ரூபாவிலிருந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உற்பத்தி வருடத்திலிருந்து 03 வருடங்களுக்கு பழைமையான வாகனங்களை மாத்திரமே நாட்டுக்கு இறக்குமதிசெய்ய முடியுமென்றாலும் வாகன இறக்குமதியின்போது

அதிகளான வரி

விதிக்கப்படும் அதிகளான வரி வீதத்தின் காரணமாக மோட்டார் வாகனங்களின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாகவும் தற்போது வரையில் வாகன இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டபோது

மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்த சில வாகன மாதிரிகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

டொயோடா எக்வா மோட்டார் வாகனத்தை நாட்டுக்கு இறக்குமதி செய்யும் அநேகமான இறக்குமதியாளர்களை இடைநிறுத் தியுள்ளதாகவும் டொயோடா பிரியஸ் மோட்டார் வாகனத்தைத் தொடர்ந்து இறக்குமதிசெய்ய முடியாமல் போயுள்ளது.

மத்தியதர மக்களின் வாகனக் கனவு தற்போதுவரை நிராசையாகியிருந்தாலும் இலங்கைச் சந்தைக்கு வருகைதந்துள்ள வாகனங்களை ஒரு சமூகத்தார் மாத்திரம் கொள்வனவு செய்துகொண்டிருப்பதால் வாகன விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நாட்டுக்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதால் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் வாகன மாதிரிகள் மற்றும்

குறைந்த விலைக்கு விற்பனையாகும் வாகன மாதிரிகளைக் குறிப்பிட்டு அடையாளப்படுத்த முடியாதென்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் புதிய வாகனங்களை விலைப் பட்டியலுக்கு உட்படுத்துவதற்கிருக்கும் பிரதான இணையதளத்துக்கமைய நேற்று முன்தினமாகும்போது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும்

அல்ட்டோ வாகனத்தின் விலை 48 இலட்சம் ரூபா என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன், சுசுகி வேகன் ஆர் ரக வாகனத்தின் விலை 66 இலட்சம் ரூபா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, டொயோடா எக்வா ஹைப்ரிட் வாகனத்தின் விலை ஒரு கோடியே 38 இலட்சம் ரூபாவாகக் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், டொயோடா வெசல் ரக வாகனமொன்றின் விலை ஒரு கோடியே 65 இலட்சம் ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் விலை 05 கோடி ரூபா

அந்த இணையதளத் தகவல்களுக்கமைய, டெஸ்லா வை ரக மாதிரி மோட்டார் வாகனத்தின் விலை 05 கோடி ரூபா என்பதுடன் பீ.வை.டீ. எடோ 3 மோட்டார் வாகனத்தின் விலை ஒரு கோடியே 56 இலட்சம் ரூபாவென அறிவிக்கப்பட்டுள்ளது.

மர்சிடீஸ் பென்ஸ் சீ கிலாஸ் மாதிரி மோட்டார் கார் 4 கோடீயே 75 இலட்சம் ரூபா என்றும், மெஸ்டா சீ எக்ஸ் 5 மோட்டார் கார் 3 கோடி ரூபா என்றும் அந்த இணையதளம் அறிவித்துள்ளது.

இறக்குமதித் தடை நீக்கப்பட்டதன் பின்னர் வாகன விற்பனை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள வாகன இறக்குமதியாளர்கள்,

தற்போதைய காலப்பகுதியில் மத்தியதர மக்கள் கொள்வனவு செய்ய விரும்பும் வாகன மாதிரிகளின் விற்பனையில் வீழ்ச்சியை அவதானிக்கக்கூடியதாக இருப்பதாகவும்,

அதன் காரணமாக அதிகம் விற்பனையாகும் வாகனங்களின் மாதிரிகளை அதிக எண்ணிக்கையில் இறக்குமதி செய்வதற்கு வாகன இறக்குமதியாளர்கள் ஆர்வம் செலுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் நுழைந்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவிலிருந்து இலங்கைள் வந்தவர்கள் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைள் வந்தவர்கள் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைள் வந்தவர்கள் கைது ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் சட்ட விரோதமான முறையில் நுளைத்த நாலு இலங்கையர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் கடல் வழியாக நுழைய முற்பட்ட பொழுது இந்த கைது இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மற்றும் மன்னர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆண் பெண் மற்றும் இரு சிறு சிறுமிகள் என ,நால்வர் இலங்கையில் சட்ட விரோதமான முறையில் இந்தியாவிற்கு சென்ற நிலையில் ,இந்திய கடலோர காவல்துறையால் கைது செய்யப்பட்டு மண்டப முகாமில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.

இலங்கையில் குறித்த நால்வரும் இந்தியாவுக்கு சட்ட விவரமுறையில் யில்கடல்வழியாக வழியாக திரும்பி வந்துள்ளனர்.

அவ்வாறு வந்த பொழுது இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல் படைகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வல்வெட்டித்துறையை நோக்கி வந்தவர்களே இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட வருகின்றனர்.

நீதிமன்ற விசாரணையின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படலாம் அல்லது சிறையில் வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடல் வழியாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு .இலங்கை இருந்து இந்தியாவுக்கும் செல்கின்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடலில் மூழ்கி இறந்த இளைஞர்கள்
Posted in இலங்கை செய்திகள்

கடலில் மூழ்கி இறந்த இளைஞர்கள்

கடலில் மூழ்கி இறந்த இளைஞர்கள்

கடலில் மூழ்கி இறந்த இளைஞர்கள் நீர்கொழும்பு- வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (13) இடம் பெற்றதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு இளைஞர்களும் ஒன்றாக இணைந்து கடலில் நீராடிக் கொண்டிருந்த போது கடலலையில் அள்ளுண்டு சென்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து வென்னப்புவ பொலிஸார், கடற்படையினரின் உதவியோடு நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்களாக மீட்கப்பட்ட மூவர் பொகவந்தலாவ சென் விஜயன்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் மற்றுமொரு நபர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர்.

உதயகுமார் ஸ்ரீதரன் (வயது 17), ஸ்ரீகாந்த் சரண் ராஜ் (வயது 19), ஸ்ரீகாந்த் அஜித் குமார் (வயது 18) மற்றும் யூசுப் (வயது 27) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன.

சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் ஸ்ரீகாந்த் சரண் ராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் அஜித் குமார் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் எனவும் உதயகுமார் ஸ்ரீதரன் உறவினர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த நால்வரில் இருவரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. ஏனைய இருவரின் சடலங்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உப்புக்கு மீண்டும் விலை ஏற்றம்
Posted in இலங்கை செய்திகள்

உப்புக்கு மீண்டும் விலை ஏற்றம்

உப்புக்கு மீண்டும் விலை ஏற்றம்

உப்புக்கு மீண்டும் விலை ஏற்றம் சந்தையில் உப்புக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கையிருப்பு நாட்டிற்குள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில இடங்களில், ஒரு கிலோகிராம் உப்பு பாக்கெட் சுமார் 450-500 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இருப்பு சந்தையை அடைந்தவுடன் இந்த நிலைமை சரியாகிவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இறக்குமதி செய்யப்பட்ட உப்பு வருவதில் தாமதம் ஏற்பட்ட எதிர்காலத்தில் ஒரு பாக்கெட் உப்பு விலை மேலும் அதிகரிக்கும் என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

இதனிடையே, தற்போதைய உப்பு தட்டுப்பாடு காரணமாக உப்பு இருப்புக்களை மறைத்து வைப்பவர்கள் கைது செய்யப்பட்டு, உப்பு இருப்புக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

உப்புக்கு செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடி நடப்பதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உப்பு இருப்புக்களை மறைத்து வைத்திருப்பவர்களையும், அதிக விலைக்கு உப்பை விற்பனை செய்பவர்களையும் கண்டுபிடிக்க நாடு முழுவதும் சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை கூறுகிறது.

இதற்கிடையில், வர்த்தகர்கள் தங்கள் கடைசி உப்பு இருப்பை தற்போது விற்பனை செய்து வருவதாகவும், மேலும் உப்பு இருப்பு எப்போது கிடைக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும் கூறுகின்றனர்.

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல் இலங்கைத் தேர்தல் ஆணைக்குழு விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது,

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள்

மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் வென்ற இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய விதம் குறித்து

தேர்தல் ஆணைக்குழு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதற்கமைய, உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களின் விபரங்களை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு கட்சிகளுக்கு அறிவித்துள்ளது.

மேலும், பெரும்பான்மை அதிகாரம் கொண்ட உள்ளூராட்சி சபைகளுக்கான மேயர்கள், நகரசபை தலைவர்களின் பெயர்களையும் சமர்ப்பிக்குமாறும்

கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பிறகு, பெரும்பான்மை அதிகாரங்களைப் பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான மேயர்கள்,

நகரசபை தலைவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானை இரண்டாக உடைக்கும் இந்தியா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் அதிகரித்த டெங்கு நோய்

இலங்கையில் அதிகரித்த டெங்கு நோய்

இலங்கையில் அதிகரித்த டெங்கு நோய் அவதிப்படும் மக்கள் தடுக்க தடுமாறும் சுகாதார அமைச்சு .

இலங்கையில் தற்பொழுது டெங்கு நோயானது இந்த வருடத்தின் இதுவரை யான காலப்பகுதியில் அதிகரித்துள்ளதாக, இலங்கையினுடைய சுகாதார அமைச்சு இப்படி அறிவித்திருக்கிறது.

இந்த டெங்கு நோயினால் இந்த வருடத்தின் இதுவரை யான காலப்பகுதியில். ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக .இலங்கை சுகாதார அமைச்சர் மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி இருக்கிறது.

சுற்றுப்புற சூழல் மாசடைதல் .நீர்நிலைகள் ,என்பனவற்றில் நுளம்புகள் தொல்லை அதிகரித்தல் புற சூழல் காரணமாக, இந்த டெங்கு நோய் அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுறது .

அதனால் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருந்தால், இவ்வாறான டெங்கு நோய் அபாயம் தொற்றாது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நீர் நிலைகளில் தேங்கி நிற்கும் நுழம்புகள் ,அந்த விஷக்கிருமிகளை மனிதர்கள் மீது குத்தி பரப்பி ,அதன் ஊடாக இந்த நோயைப் பரப்புவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

மக்களுக்கு பல விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பொழுதும் ,இந்த டெங்கு நோய் பரவலை தடுக்க முடியாது, தற்பொழுது இலங்கை சுகாதார அமைச்சு திணறி வருகிறது .

ஆண்டுதோறும் இந்த டெங்கு காய்ச்சல் மலேரியாவாக மாற்றம் பெற்று பலர் பலியாகி வருகின்ற சம்பவங்கள் ,இடம்பெற்றுள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.

கனடா நினைவுத்தூபி இலங்கை அதிருப்தி
Posted in இலங்கை செய்திகள்

கனடா நினைவுத்தூபி இலங்கை அதிருப்தி

கனடா நினைவுத்தூபி இலங்கை அதிருப்தி

கனடா நினைவுத்தூபி இலங்கை அதிருப்தி கனடாவில் அமைக்கப்பட்ட இனப்படுகொலை நினைவுச் சின்னம் தொடர்பில், இலங்கை கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

நேற்று கொழும்பிலுள்ள கனடா தூதுவரை அழைத்து இது தொடர்பில் அதிருப்தியும் வெளியிடப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சு இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது,

தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படாததுடன், அவை தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகள் என இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்துகிறது.

இந்தப்பொய்யான கதையை இலங்கை முற்றிலும் நிராகரிப்பதுடன், கனடாவிற்குள் தத்தமது தேர்தல் ஆதாயங்களுக்காக இவ்வாறு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளதாக நம்புகிறது.

2021, ஏப்ரலில், கனடாவின் வெளிநாட்டு அலுவல்கள், வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக,

எந்தவொரு கண்டுபிடிப்பையும் கனடா அரசு மேற்கொள்ளவில்லை என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலதிகமாக, 2006 இல் கனடாவானது, தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) பயங்கரவாத அமைப்பொன்றாக அறிவித்ததுடன், 2024 ஜூனில் இவ்வகைப்படுத்தலை மீண்டும் உறுதிப்படுத்தியது.

கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள சிங்க்வகௌசி பூங்காவில், தமிழ் இனப்படுகொலையைக் குறிக்குமுகமாக நினைவுச்சின்னமொன்றை நிர்மாணிப்பது குறித்து,

இலங்கை அரசு பலமுறை தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

பிராம்ப்டன் நகர சபையின் இவ்வருந்தத்தக்க முயற்சியைத் தலையிட்டுத் தடுக்குமாறு, கனடாவின் மத்திய அரசை இலங்கை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இச்செயற்பாடு குறித்த முன்னெடுப்புக்களை, பரந்தளவிலான இலங்கை மற்றும் கனேடிய சமூகங்களுக்கு எதிரானதான ஒன்றாகவே இலங்கை அரசு கருதுகிறது.

இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதும், கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்ட நினைவுச்சின்னங்களை நிர்மாணிப்பதும் பொதுமக்களை தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல்,

அனைத்து சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை மற்றும் நீடித்த அமைதிக்கான இலங்கையின் அயராத முயற்சிகளைச் சீர்குலைப்பவையாக அமையுமென, இலங்கை அரசு உறுதியாக நம்புகிறது.

இது தொடர்பில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் இன்று கனேடிய உயர் ஸ்தானிகரைச் சந்தித்து,

ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் அதனை அடிப்படையாகக்கொண்ட நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்புதல் தொடர்பில்,

இலங்கை அரசாங்கத்தின் கடுமையான ஆட்சேபனைகளை மீண்டும் வலியுறுத்தியதுடன், இம்முன்னெடுப்புக்கள் நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கத்தின் முயற்சிகளை சிக்கலாக்குவதுடன்,

அவற்றை பெரிதும் பலவீனப்படுத்துகிறதெனவும், குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை

இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை

இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார் இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு,

இனப்படுகொலை கல்விவாரம் அனுசரிப்பு போன்றவற்றை கடுமையாக விமர்சித்துள்ளார்

சமூக ஊடக பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது.

இலங்கையின் ஒற்றுமை மற்றும் கௌரவம் நல்லிணக்கத்திற்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு குடிமகன் என்ற அடிப்படையில்

கனடாவின் ஒன்டாரியோவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் திறப்பு இனப்படுகொலை கல்வி வாரம் அனுசரிப்பு போன்ற விடயங்களால் நான் திகைப்பும்; கவலையுமடைந்துள்ளேன்.

ஒரு விடயத்தை நான் தெளிவாக தெரிவிக்க விரும்புகின்றேன், இலங்கை இனப்படுகொலையில் ஈடுபடவில்லை.அந்த கூற்று ஆதாரமற்றது மாத்திரமல்ல மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

எந்தவொருசர்வதேச நீதிமன்றமும் இலங்கையை இதுவரை இனப்படுகொலை குற்றவாளியாக கண்டறியவில்லை.

இலங்கையில் நடந்தது துன்பகரமான ஆனால் கனடா உட்பட 30 க்கும் அதிகமான நாடுகளில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பினருடனான மோதலை முடிவிற்கு கொண்டுவருவதற்கான இராணுவநடவடிக்கை.

அது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எந்த சமூகத்திற்கும் எதிரானது இல்லை.

போரின் போது அப்பாவிகள் ஒவ்வொருவரினதும் உயிரிழப்பு மனவேதனையை ஏற்படுத்தினாலும், மோதலை இனப்படுகொலை என சித்தரிப்பது உண்மையை சிதைப்பது மாத்திரமல்லாமல்,அவமதிப்பை ஏற்படுத்துகின்ற ஒரு விடயம்.

கனடாவில் இடம்பெறும் இந்த செயற்பாடுகள், நமது கள யதார்த்தங்களில் இருந்து வெகு தொலைவில் உள்ளன.

மேலும் வாக்குவங்கியை நோக்கமாக கொண்ட இவ்வாறான நடவடிக்கைகளினால் பழைய காயங்கள் மீண்டும் கிளறப்படலாம்.மேலும் ஒரு தேசமாக காயங்களை ஆற்றுவதில் அடைந்துள்ள முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம்.

கனடா பிரம்டனில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை திறந்துவைக்கும் நிகழ்வு

சிங்காவுசி பூங்காவில் இடம்பெற்ற வேளை கனடா அரசியல்வாதிகள் உட்பட பெருமளவானவர் திரண்டிருந்தனர்.

அங்கு பிரம்டன் மேயர் தெரிவிக்கையில், இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு கனடாவில் இடமில்லை! கொழும்பிற்கு திரும்பி செல்லுங்கள் என்றார்.

மேயரின் இச் செய்தி இலங்கை அரசுக்கு பெரும் தலையிடியாக மாறியுள்ளது.

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதாக நாமல் ராஜபக்ச தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து இதற்கான எதிர்ப்பை அரசாங்கம் வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இனப்படுகொலை என்பது தொடர் நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

இனப்படுகொலை என்பது தொடர் நடவடிக்கை

இனப் படுகொலை என்பது தொடர் நடவடிக்கை

இனப்படுகொலை என்பது தொடர் நடவடிக்கை இனப்படுகொலை என்பது ஒரு தொடர் நடவடிக்கை என கனடாவில் இருந்து விஜய் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் இனப்படுகொலை கல்விவாரம் தொடரும் தமிழ் இனப்படுகொலை குறித்து சிந்திப்பதற்கும், அது பற்றி பொதுமக்களிற்கு போதிப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது என

ஒன்ராறியோவின் சுகாதார அமைச்சின் உளநலத்துறை இணை அமைச்சரும், ஸ்காபரோ றூஜ் பார்க் தொகுதிக்கான மாநில சட்டமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் இனப்படுகொலை வாரம் குறித்த தனது சமூக ஊடகபதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இந்த வாரம் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் , நான்கு வருடங்களிற்கு முன்னர் ஒன்டாறியோவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த வாரம் முழுவதும் தமிழ்சமூகத்தினரும் இளைஞர்களும் தமிழ் இனப்படுகொலையில் உயிர்பிழைத்தவர்களின் கதைகளை பகிர்ந்துகொள்வார்கள்.

மேலும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அனுபவிக்கும் தலைமுறைகளிற்கு இடையிலான மனஉளைச்சல் குறித்து அறிந்துகொள்வார்கள்.

இனப்படுகொலை என்பது ஒரு நிகழ்வால் குறிக்கப்படவில்லை. அது ஒரு செயல்முறை, ஒரு குழுவினரான மக்களை , ஒழித்து அழிக்க அரசு தொடர்ந்து செய்யும், தொடர்ச்சியான நடவடிக்கைகளின் வடிவம்.

மே2009ம் ஆண்டு தமிழர் இனப்படுகொலையின் உச்சமாக குறிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களிற்கு உணவும் மருந்தும் மறுக்கப்பட்டமை, பாலியல் வன்முறைகள் கொலைகள், கடத்தல்கள் கொத்துக் குண்டுகள் குறித்த தெளிவான நினைவுகளுடன் நாங்கள் விடப்பட்டுள்ளோம்.

தமிழ் மக்களிற்கு எதிரான இனப்படுகொலை இன்னமும் தொடர்க்கின்றது,167,796 பேருக்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலை தொடர்கின்றது.

தமிழ் இனப்படுகொலை கல்விவாரத்தை அங்கீகரிப்பது ,நீடிக்கும் தமிழ் இனப்படுகொலை குறித்து சிந்திப்பதற்கும், அது பற்றி பொதுமக்களிற்கு போதிப்பதற்குமான சந்தர்ப்பத்தை வழங்கும்.

இலங்கையில் முட்டை விலை வீழ்ச்சி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் முட்டை விலை வீழ்ச்சி

இலங்கையில் முட்டை விலை வீழ்ச்சி

இலங்கையில் முட்டை விலை வீழ்ச்சி , அடைந்துள்ளதாக இலங்கை வாழ்வாக்கள் பலர் தெரிவிக்கிடர்.

50 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை என்று தற்பொழுது 20 முதல் 24 ரூபாய் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை நினைத்து சில பொருட்களின் விலைகளும் இந்த குறைந்து காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாடுகளிலிருந்து முட்டை இறக்குமதி அதிகரித்த நிலையில் .இலங்கையில் ஒரு முட்டை விலை ,24 ரூபாவாக கிடைக்கப்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து பல டன் கணக்கான முட்டைகள், கப்பல்கள் ஊடாக எடுத்துவரப்பட்டு ,மக்களுக்கு விநியோகிக்கப்பட்டதை அடுத்து இந்த விலை குறைக்க பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை காரணமாக ,அதனை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பது தொடர்பாக ,மக்கள் தற்பொழுது கவனம் செலுத்தி வருகின்றனர்.

அதனை அடுத்து புதிய புதிய வழிகளில் புதிய புதிய விடயங்களை தெரிவு செய்து மக்கள் ஆதரவு கொடுக்க மறுத்து வருவதன் காரணமாகவே ,இலங்கையில்

நாள்தோறும் முட்டை விலைகள் உள்ளிட்டவைகள் வீழ்ச்சி உற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முட்டை விலை அடுத்து தற்போது மூட்டையினால் தயாரிக்கப்படும் .அனைத்து உணவு பொருட்களும் விலை குறைக்கப்பட்ட நிலையில் .விற்பனை செய்யப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மூட்டை விலை குறைப்பை அடுத்து ,தற்போது முட்டை வாங்கி உண்ணும் முட்டை பிரியர்கள் ,முட்டையை அதிகமாக உண்டு, முட்டை போல வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் விழுந்து நொருங்கிய உறங்குவானூர்தி
Posted in இலங்கை செய்திகள்

விழுந்து நொருங்கிய உலங்குவானூர்தி

விழுந்து நொருங்கிய உலங்குவானூர்தி

விழுந்து நொருங்கிய உலங்குவானூர்தி இலங்கையில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பில் ரக 212 ஹெலிகாப்டர் ஒன்று மாதரு ஓயா பகுதியில் வழக்கமான பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபொழுது விழுந்திருகின்றது.

சிம்ரன் கூட விமானத்தளத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் சில நேரத்தில் அங்குள்ள மாதுரு ஓயா நீர் அணையில் விழுந்து மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறங்குவான் விபத்து தொடர்புள்ளான விசாரணைகளை தற்பொழுது விமானப்படை ஆரம்பித்துள்ளனர்.

இந்த விமானம் விழுந்த விடயம் இலங்கை ராணுவத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளதுடன் விசாரணை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுரா ஆட்சி அரியணையில் குந்திய பின்னர் இடம்பெற்ற இரண்டாவது வானூர்தி விபத்தாக இது பார்க்கப்படுகிறது.

ஒரு மாத இடைவெளியில் வீழ்ந்து நொறுங்கிய இரண்டாவது விமானமாக இது காணப்படுகிறது.

இது திட்டமிடப்பட்ட சதியா அல்லது வான் விபத்தா என்பது தான் மக்களுக்கு கல்வியாக உள்ளது.

ஒரு மாதத்தில் இடம்பெற்ற இரண்டாவது வான் விபத்து சம்பவமாக இது காணப்படுகிறது.

தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க அழைப்பு
Posted in இலங்கை செய்திகள்

தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க அழைப்பு

தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க அழைப்பு

தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க அழைப்பு. இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க அழைப்பை விடுத்து இருக்கின்றனர் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு.

தமிழரசுக் கட்சி பல்வேறு விட்டுக் கொடுப்பிற்கு மத்தியில் தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்வதற்கு

தமிழரசுக் கட்சிக்கு கிழக்கு தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிழக்கு தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு விடுப்பதாக,

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் வியாழக்கிழமை (08) மாலை மட்டக்களப்பில் உள்ள

அவரது கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் படகு சின்னத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வழங்கிய ஆணைக்காக அந்த மக்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

உள்ளூராட்சி சபைகளில் மக்கள் வழங்கிய ஆணை

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் 37 ஆசனங்கள் எமக்கு கிடைத்துள்ளன.

இதனை மக்கள் எமக்கு வழங்கிய பெரும் ஆணையாகவே நாம் பார்க்கின்றோம்.

அதனடிப்படையில் கிழக்கு மக்களுக்கு தனித்துவமான ஒரு அரசியல் குரல் தேவை என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

எமது கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது வாகரையில் ஏழு ஆசனங்களை பெற்றிருக்கின்றோம் அதே போன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலும் இரண்டு வட்டாரங்களை தம்வசப்படுத்தியதுடன்

மண்முனை தென் மேற்கு பிரதேசத்தில் ஆறு ஆசனங்களைப் பெற்று கிழக்கு தமிழர் கூட்டமைப்பு முன்னிலையில் நிற்கின்றது.

அந்த அடிப்படையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பிற்கு மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் தமிழர்களின் ஆட்சியினை உறுதிப்படுத்துவதற்காக

இணைந்து செயற்படுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர சபையில் இருக்கின்ற எல்லைப் புற கிராமங்கள் இரண்டில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கின்றது.

அதனடிப்படையில் மக்களின் ஆணைக்கு கட்டுப்பட்டு தனிப்பட்ட அல்லது கட்சி விருப்பு வெறுப்பிற்கு அப்பால் கிழக்கு மாகாணத்தில்

தமிழர்கள் அனைவரும் ஒருமித்து பயணிக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்த்தியிருக்கின்றார்கள்.

அதன் அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்வதற்காக அழைப்பு விடுக்கின்றோம்.

அவ்வாறு ஒன்றாக பயணிக்கின்ற போது கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று, ஏறாவூர்ப்பற்று, மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனை தென் எருவில் பற்று, மண்முனை தென் மேற்கு மற்றும் போரதீவுப்பற்று ஆகிய

உள்ளூராட்சி மன்றங்களிலும் நாங்கள் ஆட்சியமைக்க முடியும். அதாவது தமிழர்களின் ஆட்சியை உறுதிப்படுத்தும் வாய்ப்பு இருக்கின்றது.

பல்வேறு விட்டுக் கொடுப்பிற்கு மத்தியில் பயணிக்கின்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் இந்த கோரிக்கையினை ஏற்று இலங்கை தமிழரசுக் கட்சியினர் ஒன்றாக பயணிப்பதற்கு முன் வருவார்கள் என நம்புகின்றோம்.

ஏன் என்றால் 2015 ஆண்டு மாகாண சபை தேர்தலின் பின்னர் எமது கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் அவர்களினால் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தோம்.

மாகாண சபை ஆட்சியினை நடாத்துவதற்கு நாங்கள் உங்களுடன் சேர்ந்து பயணிப்பதற்கு உறுதியாக இருக்கின்றோம். ஆனால் அந்த கருத்தை நிராகரித்திருந்தார்கள்.

மீண்டும் 2018 வருடமும் சேர்ந்து பயணிக்க அழைப்பு விடுத்திருந்தோம் அதனையும் நிராகரித்திருந்தார்கள். அதன் அடிப்படையில் கிழக்கு மக்கள் நில, நிருவாக, பொருளாதார இருப்புக்களில்

கிழக்கு மக்கள் பாதிக்கப்பட்டிருந்ததை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என நாங்கள் நம்புகின்றோம் என்றார்.

சிறை வைக்கப்பட்ட இலங்கையர்கள் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

சிறை வைக்கப்பட்ட இலங்கையர்கள் விடுதலை

சிறை வைக்கப்பட்ட இலங்கையர்கள் விடுதலை

சிறை வைக்கப்பட்ட இலங்கையர்கள் விடுதலை ,சிறை வைக்கப்பட்ட இலங்கையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது

மியான்மர் நாட்டுக்குள் நுழைந்த இலங்கையில் பதினைந்து பேர் பல மாதங்களாக மியன்மார் நாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் .

அவ்வாறு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, 15 கைதிகளும் தற்பொழுது விடுதலை செய்யப்பட்டு தாயகம் அழைத்துவரப்பட்டனர் .

இலங்கை விமானத்தின் ஊடாக இந்த 15 பேரும் தற்பொழுது நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மியன்மார் நாட்டிலிருந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த, 41 பேர் இலங்கை அரசாங்கம் மேற்கண்ட பேச்சுவார்த்தை அடுத்து இந்த 41 பேரில் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறனர் .

தற்பொழுது 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்விதம் கைதிகள் விடுதலை செய்யப்பட்டத்தை அடுத்து அவர்களது குஉடம்பம் பெரும் மகிழ்வில் உறைந்துள்ளது .

பல சொல்லென்ன சித்தரைவதைகளின் பின்னர் இலங்கையர்கள் பத்திரமாக தாய்நாடு திரும்பிய மகிழ்வில் அவர் தம் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர் .

இலங்கை பாகிஸ்தான் விமானசேவை இரத்து
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை பாகிஸ்தான் விமானசேவை இரத்து

இலங்கை பாகிஸ்தான் விமானசேவை இரத்து

இலங்கை பாகிஸ்தான் விமானசேவை இரத்து ,இலங்கையிலிருந்து பாகிஸ்தான் லாகூர் செல்லும் விமான பயணங்கள் திடீரென தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானத்துறை அறிவித்துள்ளது.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் திடீர் யுத்தம் ஒன்று தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறான நிலையில் எவ்வேளையும் விமானங்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படலாம் என்கின்ற வகையில் ,தற்போது இந்த விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையில் மூண்டுள்ள இந்த திடீர் யுத்தம் காரணமாக ,அங்கு செல்லும் மக்களுக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக இவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் மிக முக்கியமான பகுதிகளை இலக்கு வைத்து, இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் மசூதி உள்ளிட்ட வீடுகள் கட்டடங்கள் இடிந்து அழிந்தன. மேலும் 26க்கு மேற்பட்டவர்கள் பலியாகியம் 46க்கு மேற்பட்டவர்கள் காயாமடைந்தனர் .

இதனை அடுத்து குறித்த விமான நிலையத்தை சர்வதேச விமானங்கள் பயன்படுத்துவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ள காரணத்தினால், இந்த தற்காலிக இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் இலங்கையில் இருந்து லாகூர் செல்ல விருந்த பயணிகள் தத்தளித்து வருகின்றனர்.

மறு அறிவித்தல் வரை இந்த விமான சேவைகள் நிறுத்தி செய்யப்பட்டிருக்கும் வரை தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை

தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை

தேர்தல் முடிவுகள், அதாவது நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு
முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு

ஊடகக் கண்காட்சியை’ நடாத்துவதன் ஊடாக எப்போதும் நாட்டை ஆழமுடியும் என கருதியிருந்தால், அது முற்றிலும் தவறானதாகும்.

இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் அடுத்தடுத்து தோல்வி கண்டிருக்கும் நிலையில், மீண்டுமொரு தோல்வியடைந்த அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு இலங்கைக்குத் திராணியில்லை.

எனவே தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்படவேண்டுமாயின், அவர்கள் பேசுவதைக் குறைத்து, அதனை செயலில் காண்பிக்கவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தி தெற்கில் வெற்றி பெற்றிருந்தாலும், பல சபைகளில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மையைப் பெறத்தவறியிருக்கிறது.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அலி சப்ரி, அப்பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

‘ஊடகக் கண்காட்சியை’ நடாத்துவதன் ஊடாக எப்போதும் நாட்டை ஆழமுடியும் என நீங்கள் கருதியிருந்தால், அது முற்றிலும் தவறானதாகும்.

நீங்கள் கூறும் விடயங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதன் ஊடாக வீதிகளில் இருக்கும் மக்களால் உணரக்கூடிய மாற்றத்தை உருவாக்குங்கள்.

சாதாரண மக்கள் மெச்சக்கூடியவகையில் சட்டம் மற்றும் ஒழுங்கு, செயற்திறன்மிக்க பொதுநிர்வாகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பவற்றை நிலைநிறுத்துங்கள்.

காலவோட்டத்தில் மக்கள் கடந்தகாலத்தைப் பற்றிய பேச்சுக்களில் ஆர்வம் இழப்பார்கள்.

அவர்கள் கடந்தகால அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மகிழ்ச்சியடையவில்லை என்பதனாலேயே தற்போதைய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

அன்றேல் இதுவும் வெறுமனே ‘நல்லாட்சி அரசாங்கம் – 2’ ஆக மாறிவிடும்.

இந்த உள்ளுராட்சிமன்றத்தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கையாகும்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ 18 மாதங்களில் பதவியை இராஜினாமா செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் அடுத்தடுத்து தோல்வி கண்டிருக்கும் நிலையில், மீண்டுமொரு தோல்வியடைந்த அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு இலங்கைக்குத் திராணியில்லை.

எனவே தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்படவேண்டுமாயின், அவர்கள் பேசுவதைக் குறைத்து, அதனை செயலில் காண்பிக்கவேண்டும்.

நாமனைவரும் தேர்தல்களில் அரசியல் செய்வோம். இருப்பினும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சகலரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையிலேயே இத் தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை தான். ஏனெனில் வடக்கு கிழக்கு பகுதிகளில் கூட NPP அதிக வாக்குகளைப் பெற்று அனைத்து இடங்களிலும் தமது ஆட்சி தான் நிலைநிறுத்தப்படும் என,

கொக்கரித்துக் கொண்டு இருந்தனர். ஆனால் அநேகமான தேர்தல் பிரதேசங்களில் தமிழரசுக் கட்சி வென்றமை, அரசுக்கு ஒரு அபாய எச்சரிக்கை என தெரிகின்றது.

பொறுத்திருந்து பார்க்கலாம், எதிர்கால அரசியல் மாற்றம் பெறுமா, இத் தேர்தல் முடிவினால் அரசுக்கு மக்கள் கூறியது என்ன என அரசு புரிந்துகொள்வார்களா..

ஆட்சியிலும், அரசின் நடவடிக்கையிலும் ஏதாவது மாற்றம் வருமா இல்லையேல் அடுத்த ஐந்தாண்டு காலத்தின் பின் மக்கள் இன்னுமொரு மாற்றத்தை எதிர்பார்த்து தேர்தலுக்காக காத்திருக்க வேண்டும்.

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முல்லைத் தீவில் நான்கு பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.

இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை ஆகிய 4 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

மாந்தை கிழக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,364 வாக்குகளைப் பெற்று 4 உறுப்பினர்களையும் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 6,306 வாக்குகளைப் பெற்று 7 உறுப்பினர்களையும்,

புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 10,816 வாக்குகளைப் பெற்று 11 உறுப்பினர்களையும் துணுக்காய் பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,594 வாக்குகளைப் பெற்று 4 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.

மிக பெரும் வரலாற்று சாதனையாக எந்த வெற்றி அங்கு இடம் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள்.

வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.

தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள்.

கடந்த காலங்களில் எமது விடுதலையை நசுக்கி தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆர்ப்பரித்த ,சிங்கள பேரினவாதம் தற்பொழுது இலங்கை தமிழர் கட்சியிடம் அடி வாங்கி நொந்து சுருண்டு இருக்கிறது.

இது மக்கள் வழங்கிய மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியுடன் தமிழர்கள் மீளவும் சோர்ந்து விடாமல் பயணிக்கிறார்கள் என்பதை இதற்கான காட்டுகிறது.

எதிர்வரும் காலங்களில் வெற்றி சூடிய அத்தனை வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு உரிய வேலைகளில் பணிகளில் ஈடுபட்டு அவர்கள் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இதுவரையில் தேர்தல் நிலவரம்

இதுவரையில் தேர்தல் நிலவரம்

இதுவரையிலான தேர்தல் நிலவரங்கள் தற்போது தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில்,

உள்ளூராட்சித் தேர்தலில் இன்று காலை10 மணிவரையிலான இடம்பெற்ற வாக்களிப்பு வீதம்,

நுவரெலியா 22 %, பதுளை 22 %, மொனராகலை 15 %, அனுராதபுரம் – 20 %, யாழ்ப்பாணம் 18 %, மன்னார் 23 %, வவுனியா 31.5 %, திகாமடுல்ல 24%

கம்பஹா 20 %, மாத்தறை 20 %, களுத்துறை 20 %, பொலனறுவை 21 %, கொழும்பு 18 %, புத்தளம் 20 %, காலி 19 %, இரத்தினபுரி 20 %

அம்பாந்தோட்டை 19 %, கிளிநொச்சி 22 %, மாத்தளை 25 %, கேகாலை 20 %, கண்டி 21 %

அனைத்து பிரதேசங்களிலும் சுமூகமாக வாக்களிப்புக்கள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.

யாழ்ப்பாண மாவட்டத்திலேயே 17 மாநகர சபைகளுக்கு மூவாயிரத்து 519 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1 மாநகர சபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என்ற கட்டமைப்பில் உள்ளூர் அதிகார சபைகள் இருக்கின்றன.

மலையகத்தில் மக்கள் ஆர்வமாக சென்று தத்தம் வாக்குப்பதிவினை மேற்கொண்டுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நீர்கொழும்பு மாநகரசபைக்கான தேர்தல் தொகுதியில் மக்கள் மந்தகதியில் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்ற போதிலும், அதிக எண்ணைக்கையானோர் வாக்களித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மன்னாரில் 114 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுவருகின்றன.

இத் தேர்தல் இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறும் அதேநேரம் ஒவ்வோர் நிலையத்திலும் அதிகூடிய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்களித்ததன் பின்னர் அமைதியாக வீடுகளுக்குச் செல்லுங்கள் என்றும்,

நாட்டின் சட்டம் மற்றும் பொது ஒழுங்கை முறையாகக் கடைப்பிடியுங்கள் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழு தனக்கான பொறுப்பை நிறைவேற்றியுள்ளது. இனி உங்களின் பொறுப்பை நிறைவேற்றுங்கள்.

சுதந்திரமானதும் நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த சட்டத்தின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும்.

வாக்களிப்பு நிலையத்தினுள் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தல், படம் எடுத்தல், காணொளிகளைப் பதிவு செய்தல், ஆயுதங்களை வைத்திருத்தல், புகைப் பிடித்தல், மதுபானம் அருந்துதல் அல்லது போதைப்பொருட்கள் உபயோகித்தல்,

மதுபானம் அருந்திவிட்டு அல்லது போதைப்பொருள்கள் பாவனையுடன் வாக்கெடுப்பு நிலையத்துக்குச் செல்லுதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் சட்டம் மற்றும் பொது ஒழுங்கை நாட்டு மக்கள் அனைவரும் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். வாக்கெடுப்பு நிலையத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் முழு வாக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.

ஆகவே, அவதானத்துடன் செயற்பட வேண்டும்.” – என்றார்.

இந்நிலையில், கண்டி – பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னொருவ பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையம் ஒன்றில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர்

திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.