Tag: பாடசாலைகள்
அரசுக்கு எதிராக பாடசாலைகள் வெடிக்கும் போராட்டம்
அரசுக்கு எதிராக பாடசாலைகள் வெடிக்கும் போராட்டம்
அரசுக்கு எதிராக பாடசாலைகள் வெடிக்கும் போராட்டம் ,பள்ளி மேம்பாட்டு அதிகாரிகள் அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.
பள்ளி மேம்பாட்டு அதிகாரிகள் சங்கம்
பள்ளி மேம்பாட்டு அதிகாரிகள் சங்கம், அரசாங்கம் தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளை அளித்து, தங்கள் வாக்குகளைப் பெறுவதற்காக அவர்களை
ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதை புறக்கணித்ததாக குற்றம் சாட்டியுள்ளது.
சங்கச் செயலாளர் விராஜ் மனரங்கா ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், அதிகாரிகள் வீடு திரும்பவும், தெருக்களில் போராட்டம் அல்லது மறியல்
செய்வதற்குப் பதிலாக படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாகக் கூறினார்.
“எந்தவொரு தீர்வுகளையும் வழங்காமல் வீட்டிற்குச் செல்லச் சொன்னால் மட்டும் போதாது. நாங்கள் ஆசிரியர்களின் கடமைகளைச் செய்தோம்,
ஆசிரியர் தரத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை
ஆனால் ஆசிரியர் தரத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை. ஆறு ஆண்டுகளாக, எங்கள் சேவை அங்கீகரிக்கப்படாது என்பதை அறிந்திருந்தும், சரியான
இழப்பீடு இல்லாமல் குழந்தைகளுக்குக் கற்பித்தோம்,” என்று மனரங்கா கூறினார்.
அவர் மேலும் கூறினார், “COVID-19 காலகட்டத்தில் நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்தோம். அந்த நேரத்தில், அரசாங்கம் எங்கள் முயற்சிகளைப் பாராட்டியது, ஆனால் இப்போது பள்ளி மேம்பாட்டு அதிகாரிகள்
தேவையில்லை என்று கூறுகிறது. ஆசிரியர்களின் போராட்டங்களின் போது, செயல்பாடுகளைப் பராமரிக்க பள்ளிகளுக்கு அழைக்கப்பட்டோம். நாங்கள்
இணங்கவில்லை என்றால், எங்கள் சேவைகளை நிரந்தரமாக்க முடியாது என்றும் அரசாங்கம் எச்சரித்தது.”
அரசாங்கம் முன்னர் பள்ளி ஆசிரியர்களாக அவர்களின் பதவிகளை நிரந்தரமாக்குவதாக உறுதியளித்திருந்ததாக மனரங்க மேலும் கூறினார்.
விளக்கக் கூட்டத்தின் போது, அவர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்கான அரசாங்கத்தின் முந்தைய உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டும் ஒரு காணொளியை அவர் வாசித்தார்.
கல்வி அமைச்சர், தொழிலாளர் துணை அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி ஆகியோருக்கு இந்த
விவகாரம் குறித்து பொது விவாதத்தில் பங்கேற்குமாறு சங்கம் ஒரு வெளிப்படையான சவாலை விடுத்தது.
இதற்கிடையில், தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி,
பள்ளி மேம்பாட்டு அதிகாரிகள் குழு ஒன்று ஜனாதிபதி செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
இலங்கையில் பாடசாலைகள் அனைத்தும் விடுமுறை
இலங்கையில் பாடசாலைகள் அனைத்தும் விடுமுறை
இலங்கையில் பாடசாலைகள் அனைத்தும் விடுமுறை செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் கல்வித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
தற்பொழுது இடம்பெற இருக்கின்ற உள்ளூராட்சி தேர்தலை அடுத்து. வாக்கு அளிக்கும் மன்றங்களாக பாடசாலைகள் அமைய பெற்றுள்ளதால். அந்தக் காரணத்தினால் தற்பொழுது நாடு தழுவிய ரீதியில் .அனைத்து பாடசாலைகளும் இரண்டு நாட்களுக்கு விடுமுறை விடுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது .
தேர்தல் முடியும் வரை இந்த இரண்டு நாட்களும். முக்கியமான பாடசாலைகளில் வாக்களிப்பு கூடார இடம்பெற இருப்பதினால் .இந்த விடுமுறை நடத்தப்படுகிறது.
இரண்டு நாட்களும் மாணவர்கள் குசியில் உறைந்திருக்கின்றனர்.
விடுமுறை எப்பொழுது வரும் என எதிர்பார்த்து ,விடுமுறைக்காக காத்திருந்த மாணவர்களுக்கு, இந்த இரண்டு நாட்கள் விடுமுறை பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
இந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் பல கட்சிகள் தனித்தும், கட்சிகளாகும் போட்டியிடுகின்ற நிலையிலே ,இந்த தேர்தல் தற்பொழுது பரபரப்பாக மக்களினால் நல் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா தேனிசை செல்லப்பா |706| Thenisai Chellappa

- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

இலங்கையில் மூடப்படும் 100 பாடசாலைகள்
இலங்கையில் மூடப்படும் 100 பாடசாலைகள்
இலங்கையில் மூடப்படும் 100 பாடசாலைகள் ,மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை இப்போது 500ஐ தாண்டிவிட்டது.
அவற்றில், அதிக எண்ணிக்கையிலான பாடசாலைகளில் இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.
இவ்வாறான பாடசாலைகளை மூடி, அந்த மாணவர்களை வசதிகள் உள்ள பாடசாலைகளில் சேர்ப்பதற்கான முறையான திட்டத்தைத் தொடங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள பல சிறிய பாடசாலைகள் மூடப்பட்டு, அவற்றின் மாணவர்கள் தற்போது வேறு பாடசாலைகளை அனுப்பப்படுகிறார்கள். மூன்று கிலோமீட்டருக்குள் ஒரு பாடசாலை என்ற கருத்தை மனதில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது
எபோலா நோய்க்கு 8 பேர் மரணம் – பாடசாலைகள் அடித்து பூட்டு
எபோலா நோய்க்கு 8 பேர் மரணம் – பாடசாலைகள் அடித்து பூட்டு
உகாண்டாவில் எபோலா நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி எட்டு பேர் பலியாகியுள்ளனர் .இதனால் அந்த நாட்டில் பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன .
தொடர்ந்து இந்த நோயானது வேகமாக பரவும் என்பதால், இந்த அடித்து பூட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது .
தொடர்ந்து நோயின் தாக்குதலை தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ள படுவதாக ,அந்த நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .
வெளிநாடுகளுக்கும் இந்த நோயானது பரவலாம் என்பதால ,நாடுக்ளின் ,எல்லைகளில் சோதனைகள் அராம்பிகை படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம்
அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம்
இலங்கை ; அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை (24) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக கல்வி அமைச்சு 19.07.2022 அன்று வெளியிட்ட அறிக்கைக்கு அமைவாக மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்கள், வலய
பொறுப்பாளர்,உதவி கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து அதிபர்களுக்கும் பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம் குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் மறுஅறிவித்தல் வரை பாடசாலைகள் திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளிலேயே இடம்பெறும்.
புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இணையத்தளத்தின் ஊடாக கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
இதுபற்றிய ஆலோசனை கல்வித்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகள் மீண்டும் 25 ஆம் திகதி ஆரம்பம் – வாரத்தில் 3 நாட்கள் மட்டும் நடத்த திட்டம்
பாடசாலைகள் மீண்டும் 25 ஆம் திகதி ஆரம்பம் – வாரத்தில் 3 நாட்கள் மட்டும் நடத்த திட்டம்
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய அறிக்கைக்கு அமைவாக வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25ஆம் திகதி முதல் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீடுகளிலிருந்து அல்லது இணையவழி கற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை, செப்டெம்பர் 7 ஆம் திகதி வரையில் நீடிக்கப்படவுள்ளது. இரண்டாம் மற்றும் 3 ஆம் தவணையை நடத்துவதற்கான கால எல்லை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.
முதலாம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரையில், திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி முதல் அது தொடர்பான கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. அத்துடன், முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது.
அதேநேரம், திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை வாராந்தம் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய 3 தினங்களில் மாத்திரம் பாடசாலைகளை நடத்துவதற்கு தீ ர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை நடத்தப்படாத புதன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் இணையவழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பததில்
கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பாடசாலைகளிற்கு 20 தம திகதிவரை விடுமுறை
இலங்கையில் பாடசாலைகளிற்கு 20 தம திகதிவரை விடுமுறை
இலங்கை கொழும்பு ; இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்ட பாடு காரணமாக பாடசலைகள் யாவும் எதிர்வரும் 20தம திகதி வரை விடுமுறை விடுக்க பட்டுள்ளது .
அதன் பின்னர் வழமை போன்று அணைத்து பாடசாலைகளும் இயங்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கையில் பாடசாலைகளிற்கு செல்லும் மாணவர்கள் போக்குவரத்து பாதிக்க பட்டமையினாலும் ஆசிரியர்களுக்கு
ஊதியம் வழங்கப்படுவதில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இந்த விடுமுறை விக்க பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மன்னார் ,கிளிநொச்சி,யாழ் பாடசாலைகள் அடித்து பூட்டு
மன்னார் ,கிளிநொச்சி,யாழ் பாடசாலைகள் அடித்து பூட்டு
இலங்கையில் பரவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் இடம்பெயர்வு மற்றும்
,அனர்த்தங்களில் சிக்கி வருவதால் மன்னார் ,கிளிநொச்சி,யாழ்ப்பாண பாடசாலைகளுக்கு மறு
அறிவித்தல் வரை விடுப்பு விட பட்டுள்ளது
பாதிக்க பட்ட மக்களை பாடசாலைகளில் தங்க வைக்கும் ஏற்பாடுகளும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
42 பாடசாலைகள் திங்கள் முதல் மீண்டும் திறப்பு
42 பாடசாலைகள் திங்கள் முதல் மீண்டும் திறப்பு
கண்டி நகரில் மூடப்பட்டுள்ள 45 பாடசாலைகளில் 42 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும்
திறக்கப்பட உள்ளதாக மத்திய மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.
இன்று (11) கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் டிரினிட்டி கல்லூரி, கலைமகள் கல்லூரி மற்றும் தக்ஷிலா
கல்லூரி ஆகியன தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்-மாணவர் வரவு அதிகரிப்பு
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்-மாணவர் வரவு அதிகரிப்பு
கொவிட் 19 தொற்றின் காரணமாக 3 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த அரசாங்க பாடசாலைகள் இன்று (06) ஆரம்பிக்கப்பட்டன.
இதற்கு அமைவாக நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள்
சமூகமளித்திருந்தனர். இவர்கள் சுகாதார பாதுகாப்பு நடமுறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கியிருந்தனர்.
பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இன்று இடம்பெற்றன. இதன் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினர்.

























