ரோபோ சங்கர் மரணம் சர்ச்சை
Posted in இலங்கை செய்திகள்

ரோபோ சங்கர் மரணம் சர்ச்சை

ரோபோ சங்கர் மரணம் சர்ச்சை

ரோபோ சங்கர் மரணம் சர்ச்சை ,நடிகர் ரோபோ சங்கர் உடல்நல குறைவால் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். ஏற்கனவே அதிகமாக மது குடித்ததால்

மரணத்தின் விளிம்புவரை சென்று உயிர் பிழைத்த அவர்

மரணத்தின் விளிம்புவரை சென்று உயிர் பிழைத்த அவர் இப்போது மரணத்தை தழுவியிருப்பது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் நடிகரும், சங்கரின் நெருங்கிய நண்பருமான காதல் சுகுமார் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த

பேட்டியில் பேசியிருக்கும் விஷயங்கள் ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகர் ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். அதிக அளவு அவர் மதுவை தொடர்ந்து குடித்ததால் நோய் வந்து நண்பர்கள், மருத்துவர்கள், குடும்பத்தினர் உதவியோடு அதிலிருந்து

மீண்டார். அப்படி மீண்ட அவர் அறவே குடியை நிறுத்தி தனது கரியரில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தினார்.

மேலும் மது ஏற்படுத்தும் தீங்கு குறித்து தொடர்ந்து பேசிவந்த அவர்; அதுதொடர்பான விளம்பரங்களிலும் நடித்தார்.

ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அவர்

அவரது உடல்நிலை திடீரென சில நாட்களுக்கு முன்பு குன்றியது. ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அவர்; பெருங்குடியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டது. எப்படியாவது அவரை உயிர் பிழைக்க வைத்துவிட வேண்டும் என்பதில் மருத்துவர்களுக்கு போராடினார்கள்.

ஆனால் சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

சங்கரின் இந்த உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு பெருத்த இடியாகத்தான் இந்த மரணம் அமைந்திருக்கிறது.

திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் சங்கரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி; குடும்பத்தினருக்கு தங்களது ஆறுதலை தெரிவித்தார்கள்.

சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா நடனமாடி அஞ்சலி செலுத்தி சங்கரை வழியனுப்பி வைத்தார். இதனை பார்த்த ஒருதரப்பினர் வழக்கம்போல் அவரை விமர்சிக்க தொடங்கினார்கள்.

ஆனால் மரண வீட்டில் நடனமாடுவது ஒன்று பெரிய குற்றம் இல்லை; இதற்கு முன்னரும் பல மரண நிகழ்வுகளில் இது நடந்திருக்கும் சூழலில்; பிரியங்காவை

ஏன் தேவையில்லாமல் விமர்சிக்க வேண்டும் என்று சப்போர்ட் செய்து; விமர்சிப்பவர்களுக்கு மனசாட்சியே இல்லையா என்று கேள்வி எழுப்பிவருகிறார்கள்.

இந்நிலையில் ரோபோ சங்கரின் நெருங்கிய நண்பரும், நடிகருமான காதல் சுகுமார் வாவ் தமிழா என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார்.

அந்தப் பேட்டியில் அவர், “சங்கர் திறமை வாய்ந்த கலைஞன். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.

பிறகு மீண்டு வந்தார். பிரியங்காவிடம் சங்கரின் பழக்கவழக்கங்கள் குறித்து கேட்டால்; எவ்வளவுதான் சொல்வது என்று சோர்வுடன் கேட்பார்.

சங்கர் அதிலிருந்து வெளியே வர வேண்டுமென்று பிரியங்கா பேசாமல் இருந்து பார்த்தார், சாப்பிடாமல் இருந்து பார்த்தார்.

சங்கருக்கு இலங்கை எப்போதுமே சொந்த ஊர் போல்தான். நிகழ்ச்சிகளும் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அடிக்கடி செல்வார். சமீபத்தில்கூட அவர் அங்கு சென்றிருந்தார்.

அப்போது விருந்து ஒன்று நடந்ததாகவும், மீண்டும் சில பழக்கங்களை சங்கர் தொடர்ந்தார் என்றும் சொல்கிறார்கள்.

மதுவுக்கு அடிமையாகி சந்திரபாபு, என்.எஸ்.கே, கலாபவன் மணி, ரோபோ சங்கர் என பலர் 50 வயதை கடக்காமலேயே சென்றுவிட்டார்கள்” என்றார்.

பிரதமரின் சர்ச்சை கருத்து
Posted in இலங்கை செய்திகள்

பிரதமரின் சர்ச்சை கருத்து

பிரதமரின் சர்ச்சை கருத்து

இலங்கை பிரதமர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார் என கூறி செய்திகள் வெளியாகியுள்ளன.

உள்ளுராட்சி தேர்தல்கள் அமைதிக் காலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களிற்கு வேண்டுகோள் விடுத்ததன் மூலம்,

ஹரிணி அமரசூரிய தேர்தல் விதிமுறைகளை மீறினாரா என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரதமர் தெரிவித்துள்ள விடயங்களை தனது சட்டதிணைக்களத்திற்கு முதலில் அனுப்பி விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகதேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாங்கள் இந்த விவகாரம் குறித்து எந்த நடவடிக்கையையும் எடுப்போம் என தெரிவித்துள்ள ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க எனினும் முதலில் அந்த கூற்றினை சட்ட திணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் என்ன தெரிவித்தார் என்பதை அறிவது முதலில் அவசியம். இதன் காரணமாக அதனை சட்ட பிரிவிடம் சமர்ப்பிக்க வேண்டும். பிரதமரின் கூற்று எந்த வகையில் சட்டத்தை மீறியுள்ளது என்பதை ஆராயவேண்டும்.

பிரதமரின் அறிக்கையில் தேர்தல்கள் தொடர்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையிலேயே இலங்கைப் பிரதமர் அவ்வாறு கூறினாரா இல்லையா? அவர் கூறியதற்கான சான்று நிரூபிக்கக் கூடிய வகையில் இருக்கின்றதா?

அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அது தேர்தல் ஆணையகத்திற்கு சமர்ப்பிக்கப்படுமா? சமர்ப்பிக்கப்படுமாயின் சட்டத்தின் முன் பிரதமர் நிறுத்தப்படுவாரா என அரசியல் மட்டத்தில் சலசலப்பு எழுந்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெற்றும்வரும் இன்றைய நாளில் அதற்கான முடிவுகளும் வெளியாகும். இந்நிலையில் பிரதமர் மீது இவ்வாறான சர்ச்சை கருத்து தொடர்பில் முறைப்பாடு தெரிவித்துள்ளமை,

அரச தரப்பில் மேலும் அதிர்ச்சியை உண்டாகியுள்ளதோடு இதனை யார் தெரிவித்திருப்பார்கள் என்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் இரகசிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.

இந்திய இலங்கை ஒப்பந்தங்கள் குறித்து சர்ச்சை
Posted in இலங்கை செய்திகள்

இந்திய இலங்கை ஒப்பந்தங்கள் குறித்து சர்ச்சை

இந்திய இலங்கை ஒப்பந்தங்கள் குறித்து சர்ச்சை

இந்திய இலங்கை ஒப்பந்தங்கள் குறித்து சர்ச்சை ,பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது இந்தியாவுடன் அரசாங்கம் கையெழுத்திட்ட

ஒப்பந்தங்கள் குறித்து செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா இன்று தெரிவித்தார்.

“நாங்கள் இந்த ஒப்பந்தங்களுக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் பிரச்சனை என்னவென்றால், இந்த ஒப்பந்தங்கள் குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை. குறிப்பாக பாதுகாப்பு ஒப்பந்தத்தில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது

என்பது எங்களுக்குத் தெரியாது. இந்த நாட்டு மக்களுக்கு இந்த ஒப்பந்தங்களைப் பற்றி அறிய உரிமை இருப்பதால், நாங்கள் அவற்றைப் பற்றி

பாராளுமன்றத்தில் கேள்வி கேட்போம்,” என்று அவர் இன்று ஒரு ஊடக சந்திப்பில் கூறினார்.

“இந்திய விரிவாக்கம் பற்றி கூச்சலிட்டு வரும் ஒரு கட்சி, மோடியை வரவேற்று அவருக்கு மிக உயர்ந்த மரியாதை அளிப்பதைக் காண்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

பொருளாதார ரீதியாக சக்திவாய்ந்த நாடாகத் திகழும் இந்தியாவுடன் இலங்கை இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதால் இதைச் செய்ய வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

சர்ச்சையில் முடிந்த ட்ரம்ப் ஜெலன்ஸ்கி பேச்சு
Posted in உலக செய்திகள்

சர்ச்சையில் முடிந்த ட்ரம்ப் ஜெலன்ஸ்கி பேச்சு

சர்ச்சையில் முடிந்த ட்ரம்ப் ஜெலன்ஸ்கி பேச்சு

சர்ச்சையில் முடிந்த ட்ரம்ப் ஜெலன்ஸ்கி பேச்சு ,அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோர் போரை முடிவுக்கு கொண்டு வர நடத்திய பேச்சு பாரிய சர்ச்சையில் முடிவடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி இடையே வெள்ளையை மாளிகையில் நடந்த சந்திப்பு கடுமையான வார்த்தை மோதல்களில் முடிந்து உள்ளது.

அதனையடுத்து பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலும் வெள்ளை மாளிகையில் நடந்த விருந்தில் பங்கேற்காமலும் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார் என தெரிவிக்கப்படுகின்றது.

தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு,தங்கத்தின் உடைய சிறுநீரை எடுத்து குடிக்குமாறு அர்ஜுனா ராமநாதன் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுள்ள அர்ஜுனா ராமநாதன் தனது தங்கை எனப்படும் கௌசல்யா உடைய சிறுநீரை எடுத்து தலையில் தெரிவு தெளிக்கும் கருத்து மக்கள் மத்தியில் கொதிப்பதை ஏற்படுத்தியுள்ளது.

நாட்களாக அர்ஜுனா தெரிவித்து வருகின்ற கருத்துக்கள் சர்ச்சையான சர்ச்சை உள்ளவையாக மாற்றப்பட்டுள்ளது.

இதுவே தற்பொழுது அர்ச்சனாவுக்கு எதிராக மக்கள் அலையை திருப்பி உள்ளதை காட்டுகிறது, காணொளியை பாருங்கள் முழுமையான விடயம் உங்களுக்கு தெரியும்.

வீடியோ

கவுசல்யாவால் வெடித்த சர்ச்சை|திணறும் அருச்சுனா |மக்கள் இப்படி சொல்லுறாங்க
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

கவுசல்யாவால் வெடித்த சர்ச்சை|திணறும் அருச்சுனா |மக்கள் இப்படி சொல்லுறாங்க

கவுசல்யாவால் வெடித்த சர்ச்சை|திணறும் அருச்சுனா |மக்கள் இப்படி சொல்லுறாங்க

கவுசல்யாவால் வெடித்த சர்ச்சை|திணறும் அருச்சுனா |மக்கள் இப்படி சொல்லுறாங்க,காணொளியில் முழுமையான விபரம் ,

அதனை பார்க்க மக்களே

வீடியோ

கறுப்பு ஆடு இவரா வெடித்த சர்ச்சை |குவிந்த பணம் எங்கே 
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

கறுப்பு ஆடு இவரா வெடித்த சர்ச்சை |குவிந்த பணம் எங்கே 

கறுப்பு ஆடு இவரா வெடித்த சர்ச்சை |குவிந்த பணம் எங்கே 

கறுப்பு ஆடு இவரா வெடித்த சர்ச்சை |குவிந்த பணம் எங்கே , காணொளியில் முழுமையான விபரங்கள் ,

பார்க்க தவறாதீர்கள்

வீடியோ