பிரதமரின் சர்ச்சை கருத்து
இலங்கை பிரதமர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார் என கூறி செய்திகள் வெளியாகியுள்ளன.
உள்ளுராட்சி தேர்தல்கள் அமைதிக் காலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களிற்கு வேண்டுகோள் விடுத்ததன் மூலம்,
ஹரிணி அமரசூரிய தேர்தல் விதிமுறைகளை மீறினாரா என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிரதமர் தெரிவித்துள்ள விடயங்களை தனது சட்டதிணைக்களத்திற்கு முதலில் அனுப்பி விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகதேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாங்கள் இந்த விவகாரம் குறித்து எந்த நடவடிக்கையையும் எடுப்போம் என தெரிவித்துள்ள ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க எனினும் முதலில் அந்த கூற்றினை சட்ட திணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர் என்ன தெரிவித்தார் என்பதை அறிவது முதலில் அவசியம். இதன் காரணமாக அதனை சட்ட பிரிவிடம் சமர்ப்பிக்க வேண்டும். பிரதமரின் கூற்று எந்த வகையில் சட்டத்தை மீறியுள்ளது என்பதை ஆராயவேண்டும்.
பிரதமரின் அறிக்கையில் தேர்தல்கள் தொடர்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையிலேயே இலங்கைப் பிரதமர் அவ்வாறு கூறினாரா இல்லையா? அவர் கூறியதற்கான சான்று நிரூபிக்கக் கூடிய வகையில் இருக்கின்றதா?
அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அது தேர்தல் ஆணையகத்திற்கு சமர்ப்பிக்கப்படுமா? சமர்ப்பிக்கப்படுமாயின் சட்டத்தின் முன் பிரதமர் நிறுத்தப்படுவாரா என அரசியல் மட்டத்தில் சலசலப்பு எழுந்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெற்றும்வரும் இன்றைய நாளில் அதற்கான முடிவுகளும் வெளியாகும். இந்நிலையில் பிரதமர் மீது இவ்வாறான சர்ச்சை கருத்து தொடர்பில் முறைப்பாடு தெரிவித்துள்ளமை,
அரச தரப்பில் மேலும் அதிர்ச்சியை உண்டாகியுள்ளதோடு இதனை யார் தெரிவித்திருப்பார்கள் என்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் இரகசிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.







