வாக்குச் சீட்டில் இப்படி செய்யாதீர்கள்

வாக்குச் சீட்டில் இப்படி செய்யாதீர்கள்
Spread the love

வாக்குச் சீட்டில் இப்படி செய்யாதீர்கள்

வாக்குச் சீட்டில் இப்படி செய்யாதீர்கள் நாளை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது வாக்களிக்கையில் மக்களே இப்படி செய்யாதீர்கள் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க,

வாக்காளப் பெருமக்களே வாக்களிக்க வரும்போது, தேசிய அடையாள அட்டை, வாகன அனுமதி பத்திரம் மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை எடுத்து வரவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

வாக்களிப்புக்கான தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக, அலுவலக அடையாள அட்டை,

தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக விண்ணப்பம் செய்தமைக்கான பிரதி ஆகியவற்றை எடுத்து வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், வாக்குச்சீட்டில் கட்சிகளின் பெயர்களுக்கு எதிரே கட்சிகளின் சின்னங்களும் சுயேச்சைக்குழுக்களின் பெயர்களுக்கு எதிரே சுயேச்சைக் குழுக்களின் சின்னங்களும் இருக்கும்,

அதற்கு எதிராக வெற்றுக்கட்டம் இருக்கும், அதில் புள்ளடி (X) இடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தால், ஞாயிற்றுக்கிழமை (04) மாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒலிப்பதிவில், உரையாற்றி உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க,

வாக்குச்சீட்டில் எழுதவோ, சித்திரம் கீறவோ, கிறுக்கவோ, எண்ணங்களை எழுதவோ, பெயர்களை எழுதவோ வேண்டாம். புள்ளடி (X) இடப்படாத எந்தவொரு வாக்குச்சீட்டும் நிராகரிக்கப்படும் என்றார்.

நாளை நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான பரப்புரைகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தபோதிலும்,

தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளும் அனைத்து மாவட்டங்களிலும் மும்மரமாக நடைபெற்று முடிந்திருக்கின்றது.

தேர்தல் முறைகேடுகளை தவிர்க்கும்பொருட்டு அநேகமான பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளமையும் அறியக்கூடியதாக இருக்கின்ற, அதேநேரம்

ஒரு வாக்குகூட செல்லுபடியற்றதாகி விடக்கூடாது என்பதில் தேர்தல் ஆணைக்குழு முழுக் கவனத்தை செலுத்தி , வாக்காளப் பெருமக்களுக்கு வாக்குச் சீட்டில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.