வேட்டைக்கு ஆரம்பம் சைக்கிள் கட்சி
Posted in இலங்கை செய்திகள்

வேட்டைக்கு ஆரம்பம் சைக்கிள் கட்சி

வேட்டைக்கு ஆரம்பம் சைக்கிள் கட்சி என அந்த கடைசி பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் பத்திரத்தில் ஒப்பம் இடுதல் ஊடாக அறிவித்துள்ளது .

தெரிவு செய்ய பட்ட பகுதிகள் யாவிலும் சைக்கிள் சின்னத்தில் ,சைக்கிள் கட்சி போட்டியிடவுள்ளது என்பது இந்த தேர்தல் வேட்பு மனு பதிவின் ஊடாக அறிவிக்க பட்டுள்ளது .

மக்கள் தாயக கொள்கை கோட்பாட்டை மறந்து பெட்டிக்கு போட்டியிட்ட இந்த கட்சிகள் ,தற்போது பாராளுமன்றம் செல்ல தயாராகி வருகின்றனர் .

சாவகச்சேரி மருத்துவமனைக்கு செல்ல மறந்த கயேந்திரன் குமார் அணியினர் இந்த தேர்தலில் மக்கள் அதிக வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்வர்களாக என்பதே கேள்வியோ குறியாக உள்ளது .

எது எப்படியோ தற்போது வேட்டைக்கு சைக்கிள் கட்சி தயாராகி விட்டதை இந்த தேர்தல் வேட்பு மனு தாக்கல் கெயோப்பம் இடுதலுடன் அறிவித்துள்ளது .

சிறையில் அர்ச்சுனா உண்ணாவிரதம்
Posted in இலங்கை செய்திகள்

சிறையில் அர்ச்சுனா உண்ணாவிரதம்

சிறையில் அர்ச்சுனா உண்ணாவிரதம்


சிறையில் அர்ச்சுனா உண்ணாவிரதம், இந்த இவ்வாறான செய்தியானது வெளியாகி வரும் நிலையில் ,உலக தமிழ் மக்கள் அழுகையோடு காணப்படுகின்றனர் .

எங்கள் மகன் அர்ச்சுனா ஏன் இவ்வாறு ,உளளார் அவர் உடல் நலத்துடன் வெளியிலே வரவேண்டும் , என்கின்ற விடயம் கூறப்பட்டுள்ளது .

ஆகவே எதிர்வரும் பத்தாம் திகதி அர்ச்சுனவுக்கு என்ன நடக்கும் என்ற ஏக்கத்துடன் மக்கள் கொதிப்புடன் காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான செய்திகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது ,

பாதுகாப்பு படை பிரதானிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

பாதுகாப்பு படை பிரதானிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

பாதுகாப்பு படை பிரதானிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

பாதுகாப்பு படை பிரதானிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு ,புதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்றதன் பின்னர் நாட்டின் பாதுகாப்பு

படைகளின் பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் முப்படைத் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர்.

அதன்படி பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத்

தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்‌ஷ மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து சினேகபூர்வமாக கலந்துரையாடினர்.

இதன்போது நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

ஐ நா பிரதிநிதியுடன் ஜனாதிபதி செயலாளர் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஐ நா பிரதிநிதியுடன் ஜனாதிபதி செயலாளர் சந்திப்பு

ஐ நா பிரதிநிதியுடன் ஜனாதிபதி செயலாளர் சந்திப்பு

ஐ நா பிரதிநிதியுடன் ஜனாதிபதி செயலாளர் சந்திப்பு ,ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடா ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக இலங்கைக்குள் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை தொடர்ச்சியாக

முன்னெடுத்துச் செல்வது மற்றும் இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது தீர்க்கமாக கலந்தாலோசிக்கப்பட்டது.

இலங்கையின் புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஆர்வம் தொடர்பிலும் வதிவிடப்

பிரதிநிதி இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கு தெளிவுபடுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சு

சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சு

சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சு ,இலங்கையின் உத்தியோகப்பூர்வ கடன்வழங்குநர் குழு மற்றும் சர்வதேச நாணய

நிதியத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக நிதியமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த ஜூன் மாதம் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடனும் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியுடனும் இணக்கம் காணப்பட்ட விடயங்களும், உத்தியோகபூர்வ கடன் மறுசீரமைப்பு தொடர்பான

உடன்படிக்கையில் அடங்கியுள்ள விடயங்களும், சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளுக்கு அமைவானது என்பதனை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ள திட்டங்களுடன் தொடர்புடைய கடன் இலக்குகள், இணக்கப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள்

என்பன ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் அவற்றுக்கு அமைவாக, சர்வதேச இறையாண்மை முறிகளை மறுசீரமைப்பதற்கும் அனுமதி கிடைத்துள்ளதாக நிதியமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் ஐநா சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியுடன் ஐநா சந்திப்பு

ஜனாதிபதியுடன் ஐநா சந்திப்பு

ஜனாதிபதியுடன் ஐநா சந்திப்பு ,ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் மார்க் அண்ட்ரூ பிரான்ஸ் நேற்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டாரஸின் வாழ்த்துச் செய்தியை ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட இணைப்பாளர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைத்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பண்பான தன்மைக்கும் வாழ்த்து தெரிவித்த இணைப்பாளர் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் வரவேற்றார்.

மக்கள் எதிர்பார்ப்புக்கள் அதிகளவில் காணப்படுவதால் எதிர்வரும் காலம் சவாலானதாக அமையுமென சுட்டிக்காட்டிய ஐ.நா.இணைப்பாளர் சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் வேலைத்திட்டம் மற்றும் வறுமை ஒழிப்பு முயற்சிகளுக்கு ஐ.நா ஒத்துழைப்பு வழங்குமெனவும் உறுதியளித்தார்.

ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊழல் ஒழிப்புத் திட்டத்துக்கு பாராட்டு தெரிவித்த மார்க் அண்ட்ரூ, அந்த முயற்சிகளுக்கு ஐ.நா தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குமெனவும் உறுதியளித்தார்.

அதேபோல் சமூகத்தில் தேசிய சமாதானத்துக்கான புதிய அரசாங்கத்தின் பூர்வாங்க முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த வதிவிட இணைப்பாளர், ஒவ்வொரு தரப்பினருக்கு மத்தியிலும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்புக்கும் பாராட்டு தெரிவித்தார்.

அதேபோல் நாட்டுக்கு நிலையான சமாதானத்தை உருவாக்குவதற்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமெனவும் அவர் உறுதியளித்தார்.

துப்பாக்கிகளை கையளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிகளை கையளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு

துப்பாக்கிகளை கையளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு

துப்பாக்கிகளை கையளிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு ,பொதுமக்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை மீண்டும் கைப்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் எதிர்வரும் நவம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்கப்பட

வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

துப்பாக்கிகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு தேவை என்ன என்பதை ஆராய்ந்த பின்னர் மீண்டும் உரிமையாளர்களுக்கு கையளிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது..

அர்ச்சுனாவை விடுதலை செய்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவை விடுதலை செய்

அர்ச்சுனாவை விடுதலை செய்

அர்ச்சுனாவை விடுதலை செய் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் சிறையில் அடிக்க பட்டுள்ள இவ்வேளையில் அவரை விடுதலை செய்யவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

மக்கள் பெரும் ஆதரவுடன் அர்ச்சுனா இராமநாதன் தற்போது மக்கள் பலத்துடன் காணப்படுகின்றார் .

அவ்வாறான கால பகுதியில் தற்போது அர்ச்சுனா பொய்யான குற்ற சாட்டுக்கள் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்க பட்டுள்ளார் .

எனவே அவரை உடனடியாக அனுரா குமார திசாநாயக்க அரசு விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் மக்கள் முன் வைத்துள்ளனர் .

இது மக்கள் அதன் வெளிப்பாடாக இந்த கோரிக்கையை விடுத்து வருகின்றனர் .

குப்பை யாழில் ஆளுநர் பொறுக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

குப்பை யாழில் ஆளுநர் பொறுக்கினார்

குப்பை யாழில் ஆளுநர் பொறுக்கினார்

குப்பை யாழில் ஆளுநர் பொறுக்கினார் என்கின்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது .

ஆளும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவல் நியமிக்க பட்ட ஒருவராக வடக்கு ஆளுநர் காணப்படுகின்றார் .

அவ்வாறான இந்த புதிய ஆளுநர் தற்போது யாழ்ப்பாணம் பண்ணை கடல்பகுதியில் குப்பைகள் ,பிளாஸ்டிக் கழிவுகளை பொறுக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன .

இந்த நிகழ்வுகள் தற்போது ஏன் இவ்வாறு வேகமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன என்கின்ற விடயம் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது .

வீடுகளற்று வீதிகளில் உணவின்றி உறங்கும் ,வீடற்ற மக்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு உதவிட முனையத ஆளுநர் தற்போது சுற்று சூழல் பாதுகாப்பு தொடர்பில் படம் பிடித்து படம் காண்பித்துள்ளார் .

ஆக இந்த படம் என்பது தேசிய மக்கள் சக்தியை வெற்றி பிற செய்திடும் நோக்கில் உருவாக்க பட்ட ஒன்றாக காணப்படுகிறது .

ஆக மொத்தம் மக்கள் சேவைகளை மறந்து ,மக்கள் இந்த விதைகளை கட்டிப்பிடித்தால் வேண்டும் என்கின்ற சட்டம் காணப்படுகின்ற பொழுது அதனை சட்ட ,காண்பிப்பதை ,விட்டு தற்போது படம் பிடித்து ,தலைப்பு செய்தியாக வலம் வர துடிக்கும் ஆளுநர் சிந்தனை சிறப்பு தான் போங்க .

இப்படியே தொடரட்டுங்க ஆளுநர் ,குப்பைகள் எப்படி இங்கே வருகிறது என்பதை கண்டுபிடிக்க மறுத்து தடுப்பதை ,விடுத்து இப்படி படம் பிடித்து செய்திகளின் தலைப்புகளில் மாற முயற்சிக்காதீர்கள் ஐயா .

ஆளுநர் சிந்தனை இப்படி என்றால் பாதிக்க பட்ட மக்களுக்கு எப்படி ஐயா தீர்வு .வரும் வாழ்க அந்தணர் .

ஜனாதிபதியை சந்தித்தார் ஜெய்சங்கர்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியை சந்தித்தார் ஜெய்சங்கர்

ஜனாதிபதியை சந்தித்தார் ஜெய்சங்கர்

ஜனாதிபதியை சந்தித்தார் ஜெய்சங்கர் ,இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை

வௌ்ளிக்கிழமை (04) சந்தித்து, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல்

மற்றும் உறவை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.

இந்த சந்திப்பின் போது, ​​அண்டை நாடுகளுக்கு இடையே நிலவும் கூட்டாண்மையை ஆழப்படுத்தும் நோக்கில் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சந்திப்பைத் தொடர்ந்து, கலாநிதி ஜெய்சங்கர் தனது உணர்வுகளை சமூக ஊடக தளமான ‘X’ இல் வெளிப்படுத்தினார், ஜனாதிபதி

திஸாநாயக்கவின் கொழும்பு விஜயத்தின் போது அவரைச் சந்திப்பது ஒரு “கௌரவம்” என்று குறிப்பிட்டார்.

இலங்கைக்கு நிதியுதவி வழங்க கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு நிதியுதவி வழங்க கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

இலங்கைக்கு நிதியுதவி வழங்க கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

இலங்கைக்கு நிதியுதவி வழங்க கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம் ,இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம் இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித்

திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்த போதே இந்த உடன்பாட்டை வெளியிட்டனர்.

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில், இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு கொரிய எக்ஸிம் வங்கி வழங்கிய நிதியுதவி 2022-2024 ஆம் ஆண்டுகளில் இடைநிறுத்தப்பட்டது.

அந்த அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்கு சலுகைக் கடன் உதவி வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக கொரிய எக்ஸிம் வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளரிடம் தெரிவித்தனர்.

எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார ரீதியில் பயனுள்ள வேலைத்திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு தாங்கள் எதிர்பார்ப்பதாக கொரிய எக்ஸிம் வங்கி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

கொரிய எக்ஸிம் வங்கியின் பணிப்பாளர் வொன்சுக் ஹா, பிரதிப் பணிப்பாளர் ஹனுய் ஹன், திட்ட முகாமையாளர் நளின் ஜயதுங்க ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரொஷான் கமகேயும் இதில் இணைந்து கொண்டார்.

வடக்கு கிழக்கில் சங்கு போட்டி
Posted in இலங்கை செய்திகள்

வடக்கு கிழக்கில் சங்கு போட்டி

வடக்கு கிழக்கில் சங்கு போட்டி

வடக்கு கிழக்கில் சங்கு போட்டி ,ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு தேர்தல் திணைக்களத்தால் தற்போது சங்குச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வடக்கு, கிழக்கு முழுவதும் கூட்டணியாக சங்குச் சின்னத்தில் போட்டியிட உள்ளோம். அதேநேரத்தில் கொழும்பிலும் இம்முறை போட்டியிடுவது தொடர்பிலும் ஆராயந்து வருகிறோம்.

இவ்வாறு ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவரும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ். கட்டப்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (03) மதியம் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியானது பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியாக இருக்கிறது. இந்த கூட்டத்தில் நாங்கள் உட்பட ஜந்து கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

கடந்த உள்ளூராட்சி சபை தேர்தல் அறிவிக்கப்பட்ட போதும் நாம் அதில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவையும் தாக்கல் செய்திருந்தோம். இக் கூட்டணியின் சின்னமாக குத்துவிக்கு இருந்தது.

ஆனால் இப்போது நடைபெற்று முடிவடைந்திருக்கிற ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கை மையப்படுத்திய தமிழ்த் தேசிய கட்சிகள் மற்றும் சிவில்

சமூகங்களை ஒண்றிணைத்த தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியன இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தியிருந்தது.

அந்த பொது வேட்பாளரின் தேர்தல் சின்னமாக சங்கு சின்னமும் வழங்கப்பட்டு அதற்கான பிரச்சாரங்களும் முன்னேடுக்கப்பட்டதற்கமைய தமிழ் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி இலட்சக் கணக்கில் மக்கள் அதற்கு வாக்களித்து இருந்தனர்.

இதேபோன்று பல்வேறு கட்சிகளை உள்ளடக்கியதாக ஒற்றுமையை வலியுறுத்தி ஒரணியில் பாராளுமன்ற தேர்தலிலும் ஜனநாயக தமிழ் தேசிய

கூட்டணியாக நாங்கள் போட்டியிடுகிறதால் தமிழ் மக்களின் ஓற்றுமையின் சின்னமாக விளங்கிய சங்கு சின்னத்தை எமது கூட்டணியின் சின்னமாக்குவதற்கு தீர்மானித்திருந்தோம்.

இதற்கமைய தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஒருமித்த தீர்மானமாக சங்குச் சின்னத்தை அதில் அங்கம் வகித்த ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருந்தது.

இதன் அடிப்படையில் சங்குச் சின்னத்தை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை

விடுத்திருந்தோம். இக் கோரிக்கையின் அடிப்படையில் 02 ஆம் திகதி தேர்தல் ஆணையகத்தினால் சங்குச் சின்னம் எமக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதற்கமைய எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியாக ஒற்றுமையின் சின்னமான சங்கு சின்னத்தில் நாம் போட்டியிட இருக்கிறோம்.

அதிலும் வடக்கு கிழக்கு முழுவதும் நாம் போட்டியிடுகிற அதேநேரத்தில் கொழும்பிலும் இம்மறை போட்டியிடுவது தொடர்பில் ஆராயந்து வருகிறோம் என தெரிவித்தார்.

அமைச்சர்களின் பங்களாக்களில் தளபாடங்கள் குவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

அமைச்சர்களின் பங்களாக்களில் தளபாடங்கள் குவிப்பு

அமைச்சர்களின் பங்களாக்களில் தளபாடங்கள் குவிப்பு

அமைச்சர்களின் பங்களாக்களில் தளபாடங்கள் குவிப்பு ,பல முன்னாள் அமைச்சர்களுக்கு கொழும்பில் வழங்கப்பட்ட அரச பங்களாக்களில் பல நிறுவனங்களின் உடைமைகள் நிறைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பொருட்களை மீண்டும் வழங்கும் வரை, இந்த பங்களாக்களை அரசால் ஏற்றுக்கொள்வது தாமதமாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், பொருட்களை உடனடியாக ஏற்றுக்கொள்ளுமாறு அமைச்சு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

அமைச்சர்கள் பலர் பல அரசாங்க நிறுவனங்களை வைத்திருப்பதால், அந்த ஒவ்வொரு நிறுவனங்களிலிருந்தும் நாற்காலிகள், மேஜைகள், தொலைக்காட்சிகள் போன்ற தளபாடங்களை அவர்கள் அரச பங்களாக்களுக்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட அரச பங்களாக்களில் இதுவரை பத்து பங்களாக்கள் மட்டுமே கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

1கோடி ​கொள்ளை தரகருடன் இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

1கோடி ​கொள்ளை தரகருடன் இருவர் கைது

1கோடி ​கொள்ளை தரகருடன் இருவர் கைது

1கோடி ​கொள்ளை தரகருடன் இருவர் கைது ,காணி தரகரின் வழிநடத்தலில் தான் ஒரு கோடி ரூபாய் பணம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாணம் , சங்குவேலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

அவர் கடந்த புதன்கிழமை சேந்தான்குளம் பகுதியில் உள்ள தனது காணியை விற்ற பணத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை, மோட்டார் சைக்கிள் ஒன்றில்

பின்தொடர்ந்து வந்த இருவர் அவரை வீதியில் வழிமறித்து அவரை தாக்கி விட்டு பணம் , கடவுச்சீட்டு , இலட்ச ரூபாய்க்கள் பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்து, சென்றிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த நிலையில்,

காணியை விற்றவர் , காணியை வாங்கியவர் ஆகியோர், சட்டத்தரணி முன்பாக உறுதி எழுதிய பின்னர் பணத்தினை கைமாற்றிக்கொண்டனர். அதன் போது , அவர்களுடன் காணி விற்பனை தரகரும் இருந்துள்ளார்.

காணியை விற்றவர் , பணத்துடன் வீடு திரும்பும் போது, அவரிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்டமையால் , அவர் பணத்துடன் செல்லும் விடயம்

தெரிந்தவர்களின் தகவலின் அடிப்படையில் தான் கொள்ளை நடந்துள்ளதாக சந்தேகித்த பொலிஸார் , தரகர் மீது சந்தேகம் கொண்டு அவரை விசாரணை வலயத்திற்குள் கொண்டு வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளை தொடர்ந்து , ஊரெழு பகுதியில் உள்ள தரகரின் வீட்டினை பொலிஸார் சோதனையிட்ட போது , வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் , கையடக்க தொலைபேசி உள்ளிட்டவற்றை மீட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து தரகரிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த போது, காணி விற்ற பணத்துடன் செல்வதனை தனது மகனுக்கு கூறியதாக

தெரிவித்ததை அடுத்து, தரகரின் மகன் மற்றும் மகனின் நண்பன் ஆகியோரையும் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , அவர்கள் மூவரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

கொள்ளை லண்டன் தமிழர் கடையில்
Posted in இலங்கை செய்திகள்

கொள்ளை லண்டன் தமிழர் கடையில்

கொள்ளை லண்டன் தமிழர் கடையில்

கொள்ளை லண்டன் தமிழர் கடையில் ,லண்டன் பெஸ்சிலியத் பகுதியில் உள்ள தமிழர் சிக்கன் கடை உணவகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பணத்தினை திருடி சென்றுள்ளனர் .

அதிகாலை மூன்று மணியளவில் உணவகத்தின் கண்ணாடிகளை உடைத்து நுழைந்த திருடர்கள் ,அங்கிருந்த குறிப்பிட்ட தொகை பணம் என்பனவற்றை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

குறித்த பகுதியி இந்த உணவகமானது அதிக மக்களை உள்வாங்கி செயல்படும் ஒன்றாக காணப் படுகிறது .

அவ்விதமான இந்த சிக்கன் கடை உணவகத்திற்குள் திருடர்கள் அதிகாலை வேளை நுழைந்து திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கொள்ளை லண்டன் தமிழர் கடையில்

நாகா என்கின்ற சமூக சேவைகளை ஆற்றி வரும் தமிழரது கடையே திருடர்களின் கைவரிசைக்கு உள்ளாகியுள்ளது .

இவர் வன்னி மைந்தான் டிக் டாக் நேரலையில் அர்ச்சுனா இராமநாதனுக்கு ஆதரவாக பேசுகின்ற ஒருவராக காணப்படுகின்றார் .

அவ்வாறான அந்த நபராது கடையே தற்போது திருடர்களின் முற்றுகைக்குள் உள்ளாகியுள்ளது .

மேற்படி திருட்டு சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

ஊழல் வாதிகள் கும்மாளம் ஆளுநர் குறட்டை
Posted in இலங்கை செய்திகள்

ஊழல் வாதிகள் கும்மாளம் ஆளுநர் குறட்டை

ஊழல் வாதிகள் கும்மாளம் ஆளுநர் குறட்டை

ஊழல் வாதிகள் கும்மாளம் ஆளுநர் குறட்டை விடுவதாக தமிழ் மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் .

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக விளங்கி வரும் அனுரகுமார திசாநாயக்க, இலங்கை வாழ் மக்களிற்கு விடியலை வழங்குவார் என ஏதிர்பார்க்க பட்டு வந்த நிலையில் ,அது சற்று சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .

வடக்கு பகுதியில் வசிக்கும் தமிழர்கள் மக்கள் வாழ்வியலில் அக்கறை கொண்டு ,ஆளும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ,செயல்படுவதாக தெரியவில்லை .

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் வடக்கு பகுதி காவல் நிலையங்களில் ,தமிழ் மொழி பேசும் காவல்துறையை இதுவரை பணிக்கு அமர்த்தவில்லை .

தேர்தலின் பொழுது வழங்க பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்கும் நிலை காணப்படுவதாக சமீப நாட்கள் நகர்வுகள் காண்பிக்கின்றன .

வடக்கு பகுதியில் மருத்துவமனைகளில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பாக ,வடக்கு மாகாண ஆளுநராக பதவி ஏற்றவரும், அதனை விசாரிக்கவில்லை .

வடக்கு ஆளுநர் நாள்தோறும் இலங்கை ஆள்கின்ற ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு பேசுவார் .

வடக்கு நிலவரங்கள் தொடர்பாக ன் ஜனாதிபதிக்கு எடுத்து விளக்குவார் .

அப்படி என்றால் அர்ச்சுனா இராமநாதன் நிலை தொடர்பாகவும் ,அவரால் மேற்கொள்ள பட்ட லஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில், ஆளுநரிடம் அனுரா குமார திசாநாயக்க கேட்டு தெரிந்து கொள்ளவில்லையா என்ற கேள்வி எழுப்ப படுகிறது .

இதே சத்தியமூர்த்தி வடக்கு ஆளுநருக்கு மாலை அணிவித்து ,பொன்னாடை போர்த்தி கவுரவித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

அப்படி என்றால் கடந்த ,ரணில் ,மகிந்தா ,கூலி லஞ்ச ஊழல் வாதிகள் ஆளும் அனுரா குமரா திஸாநாயக்கவின் பினாமி முகவர்களாக செயல்படுன்றனரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .

அதனால் தான் வடக்கு மாகாணத்தில் மருத்துவமனைகளில் இடம்பெற்ற மருத்துவ தவறுகள் ,

அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு ,மற்றும் மோசடிகள் தொடர்பில் வடக்கு ஆளுநர் விசாரணைகளை மேற்கொள்ள மறுக்கின்றாரா என்ற கேள்வி எழுப்ப படுகிறது .

மக்களாகிய நீங்களே இந்த விடயத்தை காதில் போட்டு வாயில் ஆட்டி .கொள்ளுங்கள் .

சிங்கள பேரினவாதத்தை நம்பி ஏமார்ந்து போன தமிழினம், மீளவும் ஏமாற்ற பட போகின்றார்களா ,என்பதே இப்போதுள்ள கேள்வியாகியுள்ளது .

புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்
Posted in இலங்கை செய்திகள்

புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்

புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்

புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம் ,பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த பாதுகாப்பு பிரதானிகளை சந்தித்துள்ளார்.

பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் நேற்று (02) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா,

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆகியோர் பாதுகாப்புச் செயலாளரைத் தனித்தனியாகச் சந்தித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், பாதுகாப்புச் செயலாளர், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவையும் சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

பாதுகாப்புச் செயலர் பதவியேற்ற பிறகு சிரஷ்ட அதிகாரிகளை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

ஆளுநர் மாளிகை போரட்டம் அர்ச்சுனா ஆதரவாளர்களின் இரத்து
Posted in இலங்கை செய்திகள்

ஆளுநர் மாளிகை போரட்டம் அர்ச்சுனா ஆதரவாளர்களின் இரத்து

ஆளுநர் மாளிகை போரட்டம் அர்ச்சுனா ஆதரவாளர்களின் இரத்து

ஆளுநர் மாளிகை போரட்டம் அர்ச்சுனா ஆதரவாளர்களின் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் தெரிவிக்க பட்டுள்ளது .

அர்ச்சுனாவுக்கு ஆதரவான மக்கள் இணைந்து யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்பாக அமைய பெற்றுள்ள ,ஆளுநர் மாளிகைக்கு முன்பாக அறவழி போராட்டம் ஒன்றை நடத்தி ,அதன் ஊடாக மகயர் ஒன்றை கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வந்தது .

ஆனால் தற்போது அந்த போராட்டம் சில காரணிகள் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக வன்னிமைந்தன் டிக் டாக் நேரலையில் வன்னி மைந்தன் தெரிவித்துள்ளார் .

அர்ச்சுனா இராமநாதன் சிறையில் இருந்து விடுதலையாகும் வரை எவ்வித போராட்டங்களும் நடத்துவதில்லை என்ற நிலையை இவர்கள் கடைபிடிக்க முனைவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

எனவே யாழ்ப்பாணம் வடக்கு மாகாண ஆளுநர் மாளிகை முன்பக்க இடம்பெறவிருந்த மகாயார் கையளிப்பு போராட்டம் கைவிட பட்டுள்ளதக வன்னி மைந்தன் தெரிவித்துள்ளார் .

சம்பந்தன் வீடிற்கு நடந்து என்ன
Posted in இலங்கை செய்திகள்

சம்பந்தன் வீடிற்கு நடந்து என்ன

சம்பந்தன் வீடிற்கு நடந்து என்ன

சம்பந்தன் வீடிற்கு நடந்து என்ன ,முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட கொழும்பு 7, மகாகமசேகர மாவத்தையில் உள்ள இல்லம், சம்பந்தன் இறந்து சுமார் மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இல்லம் அமைச்சரவையின் ஒப்புதலுடன் அவரது பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது.

இந்த வாசஸ்தலத்தை மீண்டும் அரசாங்கம் பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை

முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் அமைச்சு அண்மையில் கையளித்த போதிலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து இந்த தீர்மானம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, புதிய அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் இதற்கான பத்திரத்தை கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றதன் பின்னர் சம்பந்தனுக்கு இந்த உத்தியோகபூர்வ இல்லம் கிடைத்தது.

பின்னர் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வந்த போதும், சம்பந்தனுக்கு அந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் தொடர வாய்ப்பளித்தார்.

இந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் நீர்க் கட்டணம், மின்சாரக் கட்டணம், தொலைபேசி கட்டணம், பராமரிப்புச் செலவுகள் என்பன அரசாங்கத்தினால்

ஏற்கப்படுவதாகவும், இந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களின் சம்பளம் அரசாங்கத்தினால் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2017 ஆம் ஆண்டு அந்த வீட்டின் பழுதுபார்க்கும் பணிக்காக மூன்று கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்து இறக்கும் வரை எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே வாழ்ந்தார்.

சீனா சந்திப்பு அனுராவுடன்
Posted in இலங்கை செய்திகள்

சீனா சந்திப்பு அனுராவுடன்

சீனா சந்திப்பு அனுராவுடன் ,இலங்கையின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு சீனா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என சீன தூதுவர் கீ.ஷென்ஹொங் தெரிவித்துள்ளார்.

சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீ.ஷென்ஹொங் நேற்று முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவின் தேர்தல் வெற்றிக்கு மனப்பூர்வமான வாழ்த்து

தெரிவித்த தூதுவர், இலங்கையின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு சீனா முழுமையான ஒத்துழைப்பை வழங்குமெனவும், சீனா அரசாங்கத்துடனான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த அர்ப்பணிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்குள் தற்போது ஒத்துழைப்பு அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முக்கியத்துவம் மற்றும் இலங்கையின்

அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பதற்காக சீன அபிவிருத்தி வங்கி மற்றும் EXIM வங்கியின் செயற்திறனான தலையீடுகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் அபிவிருத்திக்கு ஒத்துழைக்கும் வகையில் பிரதான வர்த்தக கடன் வழங்குநர் மற்றும் இரு

தரப்பு கடன் வழங்குநர் என்ற வகையில், கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் சீன தூதுவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.